Friday, April 13, 2018

ஒரே கல்லில் ஐந்து மாங்காய்கள் அடித்தாரா எடப்பாடி?

ஒரே கல்லில் ஐந்து மாங்காய்கள் அடித்தாரா எடப்பாடி?
--------------------------------------------------------------------------------------------
       காவேரி ஆணையம் அமைக்க என்னதான் நடுவண் அரசு , மழுப்பி வந்தாலும், தள்ளிப் போட்டாலும், எடப்பாடி அரசுக்கு அது ஒரு பெரிய நெருக்கடிதான். நடுவண் அரசை  " பகைக்காமலே, எதிர்க்கும்" புதிய அரசியலை "திட்டமிட்டோ, திட்டமிடாமலோ" நடத்தி  வருகிறது  எடப்பாடி அரசு.  அவ்வப்போது, துணை சபா மட்டும், நடுவனை எதிர்த்து பேசுவார்.
 எல்லாவற்றிக்கும் மேலாக, தமிழக அரசு, நடுவண் அரசை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் போட்ட " நீதிமன்ற அவமதிப்பு வழக்கில்" சேர்க்கப்பட்ட வார்த்தைகளை, "பொருள் புரிந்து சேர்ந்தார்களா?" என்ற கேள்வி வேறு இருக்கிறது. { Willfully Disobeyed } "திட்டமிட்டு நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவில்லை", என்பதாக எழுதியிருந்தார்கள். அதை யாரும் பெரிதாக விவாதிக்க வில்லை. ஆனால், இப்போது, உச்சநீதிமன்ற "கெடுவை" ஏற்றுக் கொண்டார்கள். 

                தமிழ்நாட்டு அரசியலில், ரஜினி காந்தின் பிரபல அரசியல் எதிர்ப்பு, கமலின் விமர்சனம், தி.மு.க.வின் தோழமைக்கு கட்சிகளுடன் நடைப் பயணம் செய்யும்  எதிர்ப்பு அரசியல், தினகரனின் ஊர், ஊராக செல்லும் ஆர்ப்பாட்டம், இந்த நான்கு வகைகளையும் எடப்பாடி அரசு எதிர்த்து வெல்ல வேண்டும். என்ன செய்ய? ஐ.பி.எல். மட்டைப் பந்து ஆட்டம் இந்த நேரத்தில் எதற்காக, என்ற கேள்வி தமிழ்நாட்டு மக்களிடையே, பிரபலமானது. இந்த நேரத்தில், திமுக தலைமையிலான, "மீட்பு பயணம்" தினசரி ஊடகங்களில் வரும் அளவுக்கு, தோழமைக் கட்சித் தலைவர்களுடன், திமுக செயல் தலைவர் நடக்கிறார். இந்த நேரத்தில், " தென்னிந்திய நடிகர் சங்கம்" ஏற்பாடு செய்த " மௌன ஆர்ப்பாட்டம்"  ஊடகங்களில், "முதலிடத்தை" பிடித்தது. அதிலும், ரஜினியும், கமலும் அமர்ந்து கொண்டு "விளம்பரம்" கிடைக்கப் பெற்றார்கள். யார்,யார்  காவேரி ஆணையத்திற்காக, "உரத்து" கத்துகிறோம் என்ற "போட்டியில்" ஒவ்வொருவரும், ஒவ்வொரு வகையான வடிவத்தை எடுக்கிறார்கள். 

                   ரஜினியையோ, கமலையோ, தென்னிநிதிய  நடிகர் சங்கத்தையோ, " ஏற்றுக் கொள்ளாத"  இயக்குனர் திலகம் பாரதிராஜா,, வி.சேகர், தங்கர் பச்சன், அமீர், வெற்றி மாறன், கௌதமன், ஆகியோர், தங்கள் பங்குக்கு, " தமிழர் காலை, இலக்கிய, பண்பாட்டு பேரவை" எனது தொடக்கி  இறங்கி விட்டனர்.  அதே  கருத்துக்கள் கொண்ட சீமானும்  இணைந்து கொண்டார். மேற்கணட யாருமே, திமுக தலைமையையோ, தினகரன் தலைமையையோ, ஏற்றுக் கொள்ளாதவர்கள். இதே  "நிலைப்பாட்டில் " தான் எடப்பாடி அரசும் இருக்கிறது. இந்த நேரத்தில்தான், முதல்வர் எடப்பாடியை, "பாரதிராஜா, சேகர், தங்கர் பச்சன், அமீர்" ஆகியோர் சந்தித்து, பொன்னாடை போர்த்திய படம் வெளிவந்தது. ஐ.பி.எல்.மட்டைப் பந்து ஆட்டத்தை, நிறுத்துங்கள் என்பதே அவர்கள், முதல்வரிடம் வைத்த கோரிக்கை. 

                    அதன்படியே, பாரதிராஜா தலைமையிலான, ஊடகவியலாளர் கூட்டம், பிரபலமானதால், ஊடக முதன்மை பெற்று விட்டது. அதுவே, " திமுகவின் நடைப் பயணம், தினகரனின் ஆர்ப்பாட்டம், ரஜினி, கமல் ஆகியோரின் அறிவிப்புகள்" ஆகியவற்றை விட, "ஊடக முதன்மை" பெற்று விட்டது. அதேபோல, ஏப்ரல் 10  இன்  "சேப்பாக்கம் ஐ.பி.எல். ஆட்டத்திற்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திலும், பாரதிராஜா தலைமையிலான செயல்பாடுகளே" ஊடக முதன்மை பெற்றது. ஏற்கனவே, நடுவண் அரசுக்கும், பி.சி.சி.ஐ. க்கும், எடப்பாடி அரசின் , அமைச்சர் ஜெயக்குமார் மூலம், ஊடக நேர்காணல்களில், " ஐ.பி.எல். போட்டியை சென்னையில் நடத்தாமல்  இருங்கள். நடத்தினால், நாங்கள் பாதுகாப்பு கொடுப்போம்" என்றே கூறிவந்தனர். அவ்வாறு கூறிக் கொண்டே,, பாரதிராஜா தலைமையிலான எதிர்ப்பிற்கு, "காவல் அனுமதியும்" கொடுத்தனர். அதை ஊடகங்களிடம், பாரதிராஜாவே கூறினார். " நாங்கள் அனுமதி பெற்றுத் தான் அறவழியில் போராடுகிறோம்" என்கிறார். அதேபோல, "ஐந்து மணிக்கு தொடக்கி,  ஆறரை மணிவரை ஆர்ப்பாட்டத்தை அனுமதித்து, ஊடக விளம்பரத்திற்கு " உதவுவதாகவே, அரசின் செயல்பாடும் இருந்தது. ஆறரை மணிக்கு ஆர்ப்பாட்டம் செய்தவர்களைக் கைது செய்து விட்டு, " ரசிகர்களை உள்ளே விட்டு ஆட்டத்தை நடத்திக் காட்டியது" காவல்துறை. அத்பவது. எடப்பாடி அரசு, " தொட்டிலையும் ஆட்டிவிட்டு, பிள்ளையையும் கிள்ளி விட்டதா" எனக் கேட்காதீர்கள். இப்போது, ஆர்ப்பாட்டத்தைக் கரணம் காட்டி, தமிழக அரசு, " இனி பாதுகாப்பு கொடுக்க முடியாது" என்று கூறிவிட்டதால், "ஐ.பி.எல். ஆட்டம்" மாற்றப்பட்டது என்ற செய்தி வருகிறது. இது, ஒருபுறம், "தமிழர்களின் எதிர்ப்புக்கு கிடைத்த வெற்றி" என்பது உண்மைதான். ஆனால், இதில், இதனை "அரசியல் விளையாட்டு" மறைந்து கிடக்கிறது எனபதும் உண்மைதானே.  

              எது எப்படியோ, " ஒரே கல்லில், ஐந்து மாங்காய்களை, எடப்பாடி பறித்து விட்டாரோ".                

No comments:

Post a Comment