Monday, October 17, 2016

தயாராகி விட்டது இலங்கையின் கடுமையான பயபகரவாத எதிர்ப்பு சட்டம். -- இலங்கை அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துவிட்டது.

தயாராகி விட்டது இலங்கையின் கடுமையான பயபகரவாத எதிர்ப்பு சட்டம்.
---------------------------------------------------------------------------------------------------------------------
   இலங்கை அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துவிட்டது.
   ---------------------------------------------------------------------------------
     ஒரு சட்ட முன்வரைவை உருவாக்கி இலங்கை அரசு அதை அவர்களுக்குள் "ரகசிய விவாதத்திற்கு" என்று சுற்றுக்கு விட்டுள்ளது. அந்த சட்ட முன்வரைவை, இந்தியாவிற்கு சமீபத்தில் வந்த இலங்கை  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயும் , இலங்கை ஜனாதிபதி மைத்திரி பாலா சிறிசேனவும் கொண்டுவந்து காட்டி தங்களது இந்திய அரசு ஆளும் நண்பர்களிடம் ஒப்புதல் வாங்கியுள்ளனர். அந்த விரைவு நகல் மிகவும் கொடூரமான பிரிவுகளைக் கொண்டதாக இருக்கிறது. இந்திய அரசு கொண்டுவந்த "தேசிய பாதுகாப்பு சட்டம், உள்நாட்டு பாதுகாப்பு சட்டம் என்ற மிசா, பயங்கரவாதம்  மற்றும் கைதுக்கான சட்டம் என்ற தடா,,அராஜகங்களை தடுக்கும் சட்டம் என்ற பொடா", ஆகியவற்றின் "ஒட்டுமொத்த " வடிவமாக இருக்கிறது. 

"இலங்கையின் முன்வைக்கப்படும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் சட்ட 
----------------------------------------------------------------------------------------------------------------வடிவமும், கொள்கையும்", என்று தலைப்பிடப்பட்டு,, அது எழுதப்பட்டுளள்து.
--------------------------------------------
      1] பயங்கரவாததிலிருந்து  தேசிய பாதுகாப்பிற்கும், மக்கள் பாதுகாப்பிற்குமான சட்டம்.
      2] பயங்கரவாதத்தை தடுப்பதும்,, அது சம்பந்தப்பட்ட நடவடிக்களை தடுப்பதற்கான சட்டம்.
       3] பயங்கரவாதத் தாக்குதல்களிலிருந்தும், அது சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளிலிருந்து தடுப்பதற்கான சட்டம்.
        4] இலங்கையின் நிலத்திலிருந்து,பயங்கரவாத  தாக்குதகளை  மற்ற நாடுகளின் பகுதிகள் மீது நடத்த திட்டமிடலை தடுப்பது,
         6] பயங்கரவாத செயல்களில் மற்றும் சம்பந்தப்பட்ட செயல்களில்  ஈடுபடுவோரை, அடையாளம் காணவும்,கைது செய்யவும்,காவலில் வைக்கவம்,புலனாய்வு செய்யவும்,விசாரணை நடத்தவும், தணடனை வழங்கவும்,இந்த சட்டம் வழி வகை செய்கிறது. 
        7] சம்பந்தப்பட்ட செயல்களை செய்ப்பவர்கள் , 
            முழுமையாகவோ, பகுதியாகவோ ஈடுபட்டாலும்,
             இலங்கைக்கு உள்ளேயோ, கடல்நீரிலோ,ஈடுபட்டாலும்,
             இலங்கையின் வான்வெளியில் ஈடுபட்டாலும்,
              இலங்கையில் பதிவு செய்யப்பட அல்லது இலங்கைக்கு சொந்தமான     அல்லது இலங்கை பயன்படுத்தும்   விமானத்திற்குள்ளோ, கப்பலுக்குள்ளோ, 
              நடந்தாலும் இந்த சட்டம் பயன்படும்.
         இலங்கையின் தூதரகத்திலோ, தூதர்களின் இல்லத்திலோ, தூதரகத் தலைவரின் இருப்பிடத்திலோ,நடந்தாலும் இந்தச் சட்டம் பாயும்.

       இப்படி ஒரு சட்ட வரைவு  நகலை தயார் செய்திருப்பது, எழுகின்ற தமிழீழ கோரிக்கைகளின் "அரசியல் போராட்டங்களை" ஒடுக்கவே என்பதை மனித  உரிமை அமைப்புகளும், ஆர்வலர்களும், அரசியல் செயல்பாட்டாளர்களும்,ஊடகவியலாளர்களும்  கணிக்கிறார்கள். இத்தகைய ஏற்பாட்டிற்கு இந்திய நடுவண் அரசு முழு ஒத்துழைப்பாக இருக்கிறது எனபதுதான் வேதனையான செய்தி.




இலங்கையில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்!


இலங்கையில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்!

செவ்வாய், 18 அக் 2016

ஒரு சட்ட முன்வரைவை உருவாக்கி இலங்கை அரசு அதை அவர்களுக்குள் ரகசிய விவாதத்துக்கு என்று சுற்றுக்கு விட்டுள்ளது. அந்த சட்ட முன்வரைவை, இந்தியாவுக்கு சமீபத்தில் வந்த இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயும், இலங்கை ஜனாதிபதி மைத்திரி பாலா சிறிசேனாவும் கொண்டு வந்து காட்டி, தங்களது இந்திய அரசு ஆளும் நண்பர்களிடம் ஒப்புதல் வாங்கியுள்ளனர். அந்த வரைவு நகல் மிகவும் கொடூரமான பிரிவுகளைக் கொண்டதாக இருக்கிறது. இந்திய அரசு கொண்டு வந்த, தேசிய பாதுகாப்பு சட்டம், உள்நாட்டு பாதுகாப்பு சட்டம் என்ற மிசா, பயங்கரவாதம் மற்றும் கைதுக்கான சட்டம் என்ற தடா, அராஜகங்களை தடுக்கும் சட்டம் என்ற பொடா ஆகியவற்றின் ‘ஒட்டுமொத்த’ வடிவமாக இருக்கிறது.
‘இலங்கையின் முன்வைக்கப்படும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் சட்ட வடிவமும், கொள்கையும்’ என்று தலைப்பிடப்பட்டு அது எழுதப்பட்டுள்ளது.
1. பயங்கரவாதத்திலிருந்து தேசிய பாதுகாப்புக்கும் மக்கள் பாதுகாப்புக்குமான சட்டம்.
2. பயங்கரவாதத்தை தடுப்பதும் அது சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை தடுப்பதற்கான சட்டம்.
3. பயங்கரவாதத் தாக்குதல்களிலிருந்தும், அது சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளிலிருந்தும் தடுப்பதற்கான சட்டம்.
4. இலங்கையின் நிலத்திலிருந்து, பயங்கரவாதத் தாக்குதல்களை மற்ற நாடுகளின் பகுதிகள் மீது நடத்த திட்டமிடலை தடுப்பது...
பயங்கரவாத செயல்களில் மற்றும் சம்பந்தப்பட்ட செயல்களில் ஈடுபடுவோரை அடையாளம் காணவும், கைது செய்யவும், காவலில் வைக்கவும், புலனாய்வு செய்யவும், விசாரணை நடத்தவும், தண்டனை வழங்கவும் இந்த சட்டம் வழி வகை செய்கிறது.
சம்பந்தப்பட்ட செயல்களை செய்பவர்கள், முழுமையாகவோ, பகுதியாகவோ ஈடுபட்டாலும், இலங்கைக்கு உள்ளேயோ, கடல்நீரிலோ ஈடுபட்டாலும், இலங்கையின் வான்வெளியில் ஈடுபட்டாலும், இலங்கையில் பதிவு செய்யப்பட அல்லது இலங்கைக்குச் சொந்தமான அல்லது இலங்கை பயன்படுத்தும் விமானத்துக்குள்ளோ, கப்பலுக்குள்ளோ நடந்தாலும் இந்த சட்டம் பயன்படும்.
இலங்கையின் தூதரகத்திலோ, தூதர்களின் இல்லத்திலோ, தூதரகத் தலைவரின் இருப்பிடத்திலோ நடந்தாலும் இந்தச் சட்டம் பாயும்.
இப்படி ஒரு சட்ட வரைவு நகலை தயார் செய்திருப்பது, எழுகின்ற தமிழீழ கோரிக்கைகளின் ‘அரசியல் போராட்டங்களை’ ஒடுக்கவே என்பதை மனித உரிமை அமைப்புகளும், ஆர்வலர்களும், அரசியல் செயல்பாட்டாளர்களும், ஊடகவியலாளர்களும் கணிக்கிறார்கள். இத்தகைய ஏற்பாட்டுக்கு இந்திய நடுவண் அரசு முழு ஒத்துழைப்பாக இருக்கிறது என்பதுதான் வேதனையான செய்தி.