Thursday, July 7, 2016

சுவாதி படுகொலையும், படிப்பினைகளும்.

சுவாதி  படுகொலையும், படிப்பினைகளும்.
------------------------------------------------------------------
சுவாதி படுகொலையில், இரண்டு மையங்களைச் சுற்றி, விவாதங்கள் சூடேறி வருகின்றன. முதலில் கொலை நடந்த அதிர்ச்சியை ஒட்டுமொத்த சமூகமும் வெளிப்படுத்தியது. தமிழ்சமூகமே ஒரே குரலில், நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில், படுகொலையைப்பார்த்துக்கொண்டு இருந்த பொதுசனத்தை திட்டித்தீர்த்தது. குற்றம் செய்தவனை ஒரு படமாவது மொபைலில் யாராவது எடுத்திருக்கக்கூடாதா? இரண்டு மணி நேரம் கொலையான பெண்ணை இப்படியா பிளாட்பாரத்தில் போட்டுவிடுவது? யாருமே காவல்துறைக்கோ, ஆம்புலன்சுக்கோ சொல்லுயிருக க்க்கூடாதா? என்றெல்லாம் எல்லோரும் கோப்ப்பட்டார்கள்.

அதன்பின் ஒரு நடிகர் தனது " சமூக வலைத்தளம்" மூலம் இதை " பார்ப்பனப்பெண் கொலை" என்பதாகவும், முஸ்லீம் இளைஞர் ஒருவரின் பெயரைச்சொல்லி பிரச்னையை " மதச்சாயம" கொடுத்து திசை திருப்பி விட்டார்.உடனே எல்லோரும் அதன் மீது விவாத்த்தை கட்டமைத்தார்கள். அப்படி திசை திருப்பியது தவறு எனக்காணும்போது, அதன் மீது விவாதம் செய்து கொண்டே போனால், அதுவும்கூட, " திசை திருப்பலுக்கு" உரமிடுவதாக் ஆகாதா?  அந்த தேரத்தில் யாரும் அதை நினைத்துப்பார்க்கவில்லை என இருக்கலாம்.அடுத்து அந்த " திசை திருப்பப்பட்ட விவாத்த்தை" வலுப்படுத்த, அடுத்த நடிகர், அதை அடுத்து ஒரு அரசியல்வாதி எனபபுறப்பட்டனர்.

   அந்த நேரத்தில் காவல்துறை, " குற்றம் சாட்டப்படட்டவர"  என ராம்குமாரை அவரது சொந்த ஊரில் கைது செய்தது. உடனே மீண்டும் அவரது " சாதி" என்ற ஒன்று விவாதமானது. பலியானவரோ, குற்றம் சாட்டப்பட்டவரோ " தனி நபர்கள்". அவர்களது சாதி எப்படி விவாதிக்கப்படலாம்? இப்படிக் கேள்வி கேட்பவர்கள் " குரல்" அழுத்தப்பட்டு, சாதி விவாதம் அதிகமாக " சமூக வலைத்தளங்களும்" அதற்கு சோறு போட்டது. எல்லா சாதியிலும், எல்லா மத்த்திலும் " நல்லது" செய்யறவனும் இருப்பான், "கெட்டது" செய்ப்வனும் இருப்பான்."தவறு செய்துவிட்டு, அதை வருந்தி திருந்துபவனும்" இருப்பான். இது வழக்குக்கு, வழக்கு வேறுபடும். அப்படி இருக்கையில் ஒரு ஆண்-பெண் விவகாரத்தில் நடந்த வன்முறையை, கொலையை, "சாதி" என்ற  சம்பந்தமில்லாத "வட்டத்திற்குள்" ஏன் இழுத்துச் செல்கிறீர்கள்? "மதம்" என்ற "வட்டத்திற்குள்" ஏன் கொண்டுசெல்ல முயல்கிறீர்கள்? இந்த கேள்வியை  ஒட்டுமொத்த சமூகமும் எழுந்து "சப்தம்போட்டு" கேட்க வேண்டும். 

       நுங்கம்பாக்கம் ரயில் நிலைய படுகொலையைப் போல ஒரு இரண்டாண்டுகளுக்கு முன்பு,சென்னையிலேயே  "பிராடவே பேருந்து நிறுத்தத்தில் " நடந்தது நினைவிருக்கும். அங்கும் இதேபோல இளம் ஆண், இளம் பெண் பிரச்னை ஆண் அந்தப் பெண்ணிடம் சண்டை போட்டுவிட்டு, அந்தப் பெண்ணின் "கழுத்தை" அறுத்திருக்கிறான். அதை அடுத்து தன்னைத்தானே  வெளியே வந்து "கத்தியால்" குத்திக்கொண்டு சாகிறான். இவையெல்லாம் எதைக் காட்டுகிறது?  குறிப்பிட்ட ஆண்கள், தாங்கள் விரும்பியதை, அதாவது விரும்பிய பெண்ணை அடையமுடியாவிட்டால், அந்தப் பெண்ணின் உயிரை எடுப்பது என்ற எண்ணத்தைத் தானே காட்டுகிறது ? அதற்கு என்ன பொருள்? குறிப்பிட்ட பெண் தனது "உடைமை" என்ற எண்ணம் தானே?  இந்த உடைமைச் சிந்தனை எங்கிருந்து வந்தது? இந்த சமூகம் "தனிச் சொத்துரிமைச் சமூகம்" என்பதால் மட்டும்தானா? ஆணுக்கு, பெண் அடிமை என்ற சிந்தனையும் சேர்ந்துதான் இந்த  உடைமை சிந்தனை, "ஆணுக்கு, பெண் உடைமை" என்று வந்திருக்கிறது? இன்றைய "உலகமயமாக்கல்" சூழலில், ஒவ்வொரு இளைஞனும் "உயர் தொழில் நுட்பத்தில்" மூழ்கி விடுகிறான். சமூகத்துடன் அவனது "தொடர்புகள்" அந்நியமாகிக் கொண்டே போகிறது. சொந்தமக்களுடன், சொந்த கிராமத்துடன், சுற்றுச் சூழலுடன் அவனது நெருக்கங்கள் விலகி, "லாபம்" "பணம்" என்ற பேராசை வளர்ந்து, முழுக்க, முழுக்க, "உயர் தொழில் நுட்பம்" சார்ந்து வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறான். அதில் அவனது "ஆணாதிக்க, பெண்களை உடைமையாக" நினைக்கின்ற எண்ணம் மேலோங்கி நிற்கிறது. இது ஒரு "பாலினப் பிரச்னை" 

     "பாலினப் பிரச்னை", எப்போதுமே "பாலியல் பிரச்னையை" தனக்கு கீழே வைத்துக் கொள்ளும். நாம் பல நேரங்களில், "பாலியல் பிரச்னை" [பற்றி அதிகம் விவாதிக்கிறோம். பாலியல் வன்முறைகள், பெண்கள் மீதான வன்முறைகள் போன்றவை தொடர்ந்து "விவாதப் பொருளாக" ஆகின்றது. ஆனால் அதற்கு அடிப்படையாக, அல்லது தலைமை தங்குவதாக இந்தப் "பாலினப் பிரச்சனை" இருக்கிறது.பெண்களை இரண்டாம் தரக்குடிகளாக பார்க்கும் பார்வை அது. பெண் பாலினத்தை அடிமையாக, அல்லது, பொருளாக, அல்லது பண்டமாக, மொத்தத்தில்,"உடைமையாகப்" பார்க்கும் "பார்வை" இருக்கிறது.  இதுதான் இத்தகைய "வன்முறைகளுக்கு" வித்திடுகிறது. 

      அடுத்து வருவது, அமைதியாக, அல்லது "மவுனமாக" பார்வையாளர்களாக ஆகிவிட்ட நமது சமூகம். அத்தகைய வன்முறை நடக்கும் போது, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மட்டுமல்ல, "பிராடவே" பேருந்து நிலையத்திலும், சனம் "மவுனமாக" பார்வையாளர்ர்களாக, "சவமாக" இருந்துள்ளனர். இந்த சனத்தை  
  என்ன சொல்ல?    "பாதகம் செய்வோரைக் கண்டால், பயம் கொள்ளல் ஆகாது" என்று பாரதியாரின் வரிகளை, கடற்கரையில், எதிர்ப்பு கொடுத்தவர்கள்," பதாகை யில்" எழுதியிருந்தனர். 

      இதையேதான் பி.யு.சி.எல். தனது சென்னை மாவட்ட குழுவின் கூட்டத்திலும், விவாதித்தது. எல்லா விதமான விவாதங்களும், "இப்படி நடந்திருக்குமா?", "அப்படி நடந்திருக்குமா?" என்ற விவாதங்கள் எல்லாமே, "சாதி, மதம்" என்ற விவாதங்கள் எல்லாமே, கடைசியில் "பாலினப்