Wednesday, December 7, 2016

Wednesday, November 30, 2016

Theepachelvan face book

மாவீரர்களுக்காய் ஒளிர்ந்த நிலம்
மாவீரர் தினத்தை வடகிழக்கில் கொண்டாட அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது இது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன? என்று இலங்கை அரசின் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் கேள்வி எழுப்பினார் ஒரு செய்தியாளர். அதற்குப் பதில் அளித்த ராஜித எத்தனை பேர் விளக்கேற்ற வருகிறார்கள் என்று பார்க்கதானே போகிறோம் என்று நக்கலாகப் பதில் அளித்தார். அதற்குத்தான் நவம்பர் 27 அன்று அலையாக திரண்டு பதில் அளித்துள்ளனர் தமிழ் மக்கள். இதற்கான முதல் எழுச்சியை ஏற்படுத்தியது கிளிநொச்சி துயிலும் இல்லம். கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லத்தை புனரமைத்து அங்கு மாவீரர்களுக்கு விளக்கேற்றத் தீர்மானித்து மாவீரர் குடும்பங்களுக்கு அழைப்பு விடுத்தார்.
போரில் சிதைக்கப்பட்ட துயிலும் இல்லம்
நானும் ஒரு மாவீரர் குடும்பத்தை சேர்ந்தவன் என்ற வகையில் 25ஆம் திகதி காலை ஏழு மணிக்கு கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லத்திற்குச் சென்றேன். ஒரு காலத்தில் அமைதியுடன் செழித்த ஒரு பூந்தோட்டம் போலக் காட்சி அளித்த மாவீரர் துயிலும் இல்லத்தை 2009இல் கிளிநொச்சியை கைப்பற்றியபோது இலங்கை படைகள் புல்டோசர் கொண்டு அழித்து தரைமட்டமாக அழித்தது. ஈழத் தமிழ் மக்களால் இருதயக் கோவிலாக வணங்கப்பட்ட துயிலும் இல்லங்களை சிங்களப் படைகள் கொடூரமாகச் சிதைத்தன. தமிழ் இனத்தின் உரிமைக்காகவும் அவர்களின் நிலத்திற்காகவும் போராடியவர்களை உறங்க இடமற்றவர்களாக அழித்து அவர்களை நினைவுகூரும் உரிமையையும் அழித்து தமிழ் நினைவழிப்பை மேற்கொண்டது இலங்கை அரசு.
2009இல் ஈழப் போர் முடிவுற்றதன் பின்னர் ஏழு ஆண்டுகளாக மாவீரர் தினங்களை மறைவிடங்களிலேயே மக்கள் கொண்டாடி வந்தனர்.
போரின் பின்னர் இந்த வருடம் எட்டாவது மாவீரர் தினம். கடந்த மாவீரர் தினங்களின்போது இலங்கை அரச படைகள் வடகிழக்கை சுற்றி வளைத்து, ஒரு விளக்கை ஏற்றக் கூட அனுமதி மறுத்தது. ஆலயங்களில் விளக்கேற்றவும் மணி எழுப்பவும்கூட அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் இதையெல்லாம் கடந்து ஈழத் மக்கள் மாவீரர்களுக்கு தங்கள் வீடுகளில் விளக்குகளை ஏற்றினார்கள். யாழ் பல்கலைக்கழகத்தில் தொடந்து ஒவ்வொரு ஆண்டும் மாவீரர்களுக்காய் விளக்காய் எரிந்தது. எங்கள் விடுதலைக்காக போரிட்டு மாண்டவர்களை நினைவுகூறும் எங்கள் தாகம் என்பது எங்கள் விடுதலைக்கான தாகம்.
ஆட்சி மாற்றத்தின் பின்னரான மாவீரர் நாள்
2015இல் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. 2015 மாவீரர் தினத்தின்போது விடுதலைப் புலிகளை நினைவுகூரத் தடை என்று அறிவித்த இலங்கை அரசாங்கம் அவர்களின் பெற்றார்கள் வீட்டில் அஞ்சலி செலுத்தலாம் என்றும் அறிவித்தது. இந்த ஆண்டு மாவீரர் நாள் நெருங்கும் தருவாயில் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் தடைசெய்யப்பட்ட புலிகள் இயக்கத்தை நினைவுகூர அனுமதியில்லை என்று அறிவித்தார். எனினும் மாவீரர்களுக்காய் விளக்குகள் ஏற்றப்பட்டன.
மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு மக்களால் செல்ல இயலவில்லை. தங்கள் பிள்ளைகளை நினைந்து கண்ணீர்விட இயலவில்லை. இவை தமிழர் நெஞ்சுக்குள் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியிருந்தது.
கடந்த சில நாட்களின் முன்னர் கிளிநொச்சி மற்றும் முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தை விட்டு இராணுவம் வெளியேறியிருந்தது. நவம்பர் 25 ஆம் திகதி காலை மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்த பத்துப் பேர் மாவீரர் துயிலும் இல்லத்தின் வாசலில் நுழைந்தோம். சில நிமிடங்களிலேயே பத்து இருபதாகி ஐம்பதாகி நூற்றுக்கணக்கானவர்களாக மக்கள் வரத் தொடங்கினார்கள். அந்த வழியில் பேருந்தில் சென்றவர்கள் பேருந்தை விட்டிறங்கி வந்தார்கள். செய்தியை அறிந்தவர்கள் பலரும் துயிலும் இல்லம் நோக்கி விரைந்தார்கள். எருக்கலை மரங்களும் உண்ணியுமாய் அடர்ந்த காட்டை சுத்தப்படுத்தி எங்கள் முகவரியை தேடிச் சென்றவர்களின் கல்லறைகளை தேடினோம். ஒரு சில கல்லறைகள் அடையாளம் காணும் நிலையில் இருந்தன. மற்றைய அனைத்துக் கல்லறைகளைளும் இலங்கை அரச படைகளால் சிதைக்கப்பட்டன.
அலை அலையாக வந்த மக்கள்
ஆங்காங்கே சில கல்லறைகள் எஞ்சியிருந்தன. பெயர் விபரங்கள் அடங்கிய கல்லறைகளின் பகுதித் துண்டுகள் சிலவும் மீட்கப்பட்டன. அடர்ந்த காடுகளை அழிக்க மூன்று நாட்கள் ஆகியது. சிதைந்த கல்லறைத் துண்டுகள் யாவும் பத்திரமாக மீட்கப்பட்டு சேகரிக்கப்பட்டன. அவற்றை உரிய வகையில் பாதுகாப்பதற்கவும் மக்கள் தீர்மானித்தார்கள். அப் பெரும் துயிலும் இல்லத்தை, சுமார் மூவாயிரம் கல்லறைகளை, பொதுச் சுடர் ஏற்றும் மேடையை, கல்லறைகளுக்குச் செல்லும் வழியை எல்லாவவற்றையும் மண்ணோடு மண்ணாக இலங்கை அரச படைகள் ஆக்கிரமித்தன. அத்துடன் அழிக்கப்பட்ட துயிலும் இல்லத்தின்மீது முகாமிட்டு தங்கியிருந்தனர்.
அத்துடன் மாவீரர் துயிலும் இல்லத்தை அலங்கரிக்கவும் விளக்கேற்றுவதற்கான சில பொருட்கள் கிளிநொச்சியில் உள்ள வர்த்தக நிலையங்களில் சேகரிக்கப்பட்டன.
வர்த்தக நிலையங்களுக்குச் சென்று மாவீரர் தின நிகழ்வுக்காக இயன்ற பங்களிப்பு கோரப்பட்டபோது எந்த பங்களிப்பு வேண்டுமானாலும் கேளுங்கள் என்று மனமுவந்து பங்களித்தனர் வர்த்தகர்கள். பல நூற்றுக் கணக்கானவர்களின் பங்களிப்புடன் துயிலும் இல்லம் தன் பழைய முகத்தை மெல்ல மெல்ல உருவேற்றியது. மாவீரர்களுக்கான சிவப்பு மஞ்சள் கொடிகள் பறக்க நவம்பர் 27ஆம் திகதி துயிலும் இல்லம் வீரர்களுக்கு விளக்கேற்றத் தயாரானது. மக்கள் அலை அலையாக மக்கள் வரத் தொடங்கினார்கள். ஆயிரம் பேர் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பல ஆயிரம் மக்கள் கிளிநொச்சி துயிலும் இல்லத்தில் நிறைந்தனர்.
ஒளிபெற்ற துயில் நிலம்
மாவீரர்கள் துயிலும் இல்லம். நெகிழ்ச்சியான நிலம். அக் கல்லறைகள் நெஞ்சை உருக்குபவை. சனங்கள் கண்ணீருடன் வந்தனர். எல்லோருடைய முகங்களும் வீரர்களின் ஒளிமுகங்களைத் தேடின. மாவீரர்கள் குறித்த பாடல்கள் ஒலிக்க அந்த வீரர்களின் நினைவில் உருகியது துயிலும் இல்லம். போரில் மாண்டுபோன தம் உறவுகளுக்கு பல்லாயிரம் மக்கள் விளக்கேற்ற, பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. துயிலும் இல்லம் வீரர்களுக்கான வெளிச்சத்தால் ஒளிர்ந்தது. எங்கள் தேசம் எங்கும், வீடுகள் தோறும் மாவீரர்களுக்கு விளக்கெரிந்தது. முழங்காவில், உடுத்துறை, வவுனிக்குளம், ஆண்டான்குளம் முதலிய துயிலும் இல்லங்களிலும் மாண்ட வீரர்களுக்கான விளக்குள் ஏற்றப்பட்டன.
உணர்வுபூர்வமாக திரண்ட இணைஞர்களை ஒருங்கிணைத்து புனரமைப்புப் பணியை வேழமாலிகிதன் முன்னெடுத்தார். பத்துப்பேருடன் தொடங்கிய இந்த முயற்சி பல ஆயிரம் பேரை திரள செய்தது மாத்திரமின்றி பல துயிலும் இல்லங்களில் மக்கள் நுழைந்து விளக்கேற்ற வைத்தது. மக்கள் தன்னிச்சையாகவே பங்களித்தனர். கல்லறைகளை தேடி அழுத தாய்மார்கள் பலர். முற்றுமுழுதாக அழிந்த மண்ணிலும் தம் பிள்ளைகள் விதைக்கப்பட்ட இடங்களைக் கண்டுபிடித்து அங்கு விளக்கேற்றினர். அப் பெரு நிலத்தில் வீரர்கள் புதைக்கப்பட்ட இடங்களில் தீபங்கள் பரவி எரிந்தன. உழவு இயந்திரத்துடன் வந்து துயிலும் இல்லத்தை துப்புரவு செய்த ஒரு சகோதரன் தன் தங்கையின் கல்லறையை கண்டு பிடித்தார். இரு நாட்களாக காடுகள் அழிக்கப்பட்ட பின்னர் மண் மூடியிருந் தன் தங்கையின் கல்லறையை கண்டு பிடித்து நெகழ்ந்த அந்தக் கணத்தை எளிதில் விபரிக்க இயலாது.
தவிப்பை தடை செய்ய முடியாது
துயில் நிலத்தின் கீழ் என் உறவு எங்கே புதைக்கப்பட்டிருக்கிறார் என்று அலைந்த அந்த தவிப்பை இலங்கை அரசால் எப்படி தடை செய்ய முடியும்? தடைசெய்யப்பட்ட இயக்கத்தை நினைவுகூர அனுமதிக்க முடியாது என்று இலங்கை அரசு தெரிவித்திருந்தது. அன்று திரண்டு வந்த மக்களின் உணர்வை அரசால் தடை செய்ய இயலுமா? அவர்கள் தமிழ் மக்களின் பிள்ளைகள். அவர்களை வரலாறு முழுதும் தமிழர்கள் தொழ விரும்புகிறார்கள். ஏனென்றால் அவர்கள் தமிழ் மக்களின் உரிமைக்காக, விடிவுக்காக, விடுதலைக்காக தமது உயிரை தியாகம் செய்தவர்கள். இந்த மண்ணில் எங்கள் மக்கள் இன்னும் இருக்கிறார்கள் என்றார்கள், எங்கள் தாயகம் இப்போதும் எஞ்சியிருக்கிறது என்றால் அது அவர்களால்தான். துயிலும் இல்லங்கள், இன ஒடுக்குமுறையின், அதற்கு எதிரான எழுச்சியின் சரித்திரத் தடங்கள். மாவீரர்கள், ஈழத் தமிழ் இனத்தின் பெருமுகமாய், விடுதலையின் பெருங்குரலாய் விதைகுழியிலிருந்தும் இன்றும் போராடும் தொன்மங்கள்.
எங்கள் வீரர்கள் எம் தாயக நிலம் மீட்கச் சென்றனர். நாம் அவர்களின் விதை நிலம் மீட்கச் சென்றோம். இனி வரும் நாட்களில் மாவீரர் துயிலும் இல்லங்களிலும் சிங்கள சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். இனி எங்கள் மாவீரர்களின் கல்லறையுடன் அவர்கள் பேசட்டும். எங்கள் மாவீரர்களின் கல்லறையும் அவர்களுடன் பேசும். நாங்கள் சந்தித்த இன ஓடுக்குமுறைகள் குறித்தும், எங்கள் தாகம் குறித்தும் கல்லறைகள் பேசும். எங்கள் முகங்களின் காயங்களை அவர்கள் பார்க்கட்டும். எங்கள் கல்லறைகளுடன் புரிந்த மனித நாகரிகத்திற்கு விரோதமான போரை அவர்கள் பார்க்கப்பட்டும். தாய் நிலத்திற்காக போராடி மாண்டுபோனவர்களுக்கு உறங்க நிலம் மறுக்கப்பட்ட பண்பாடற்ற செயலை சிங்களவர்கள் இனி உணரட்டும்.
மாவீரர்களை நினைவுகூர்வதைக் கூட தடுத்த இலங்கை அரசு இம்முறை நினைவுகூரவே உத்தியோகபூர்வமற்ற முறையில் அனுமதி அளித்திருக்கிறது. மாவீரர்களை நினைவுகூறும் தமிழ் மக்களின் உரிமையை அங்கீகரிப்பதும் அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதும்தான் தமிழ் மக்களை இலங்கை அரசாங்கம் புரிந்து கொள்ளும் வழி. அதனை மறுக்கிற வரை இலங்கை அரசை உரிமை மறுப்பு அரசாக, ஆக்கிரமிப்பு அரசாகவே ஈழ மக்கள் கருதுவார்கள். இந்த நாட்டில் மிக நீண்ட காலமாக புரையோடிப் போயிருக்கும் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமாக இருந்தால் இந்த இனப்பிரச்சினையால் – இந்த இன ஒடுக்குமுறையால் போராடி மாண்டவர்களை, அவர்களின் தாகத்தை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக தீபச்செல்வன்
விரும்பு
கருத்து

Wednesday, November 9, 2016

Erode meeting

a 26-11-2016.jpg ஐக் காண்பிக்கிறது

Paper money vs Digital money

கறுப்புப் பணம் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்!

புதன், 9 நவ 2016

நாடு முழுவதும் ஒரே விவாதம். கறுப்புப் பணத்தை எதிர்த்து ஒரு ‘மாபெரும் நடவடிக்கை’. அன்றாட வாழ்க்கையில் உழலும் மக்களுக்கு உடனடியான பணப் பரிமாற்றங்களுக்கு ‘சில சங்கடங்கள்’ உருவாக்கலாம். ‘சிரமங்களுக்கு மன்னிக்கவும்’ எனும், பிரதமரின் வார்த்தைகள் அர்த்தம் பொதிந்தவை. நாட்டின் தேவைக்காக, நாட்டின் நலனுக்காக, சிறிது சிரமங்களைத் தாங்கிக்கொள்ளுங்கள் என்று பரப்புரை வருகிறது. உண்மையில், இது நாட்டின் நலனுக்காக ‘கறுப்புப் பண’ எதிர்ப்பு வேட்டையா? ரூபாய் நோட்டுகளை கையில் வைத்துக்கொண்டு மொத்தமாக வீட்டுக்குள்ளேயோ, குடோனிலோ, கன்டெய்னர்களிலோ ஒளித்துவைத்துள்ள ‘புதிய பணக்காரர்கள், இடைத்தரகர்கள், கந்துவட்டிக்காரர்கள், சட்டவிரோத வணிகர்கள், அரசியல்வாதிகள்’ ஆகியோரின் ‘ரூபாய் நோட்டுகள்சார்ந்த கறுப்புப் பணத்தை அழிக்க’ இந்த நடவடிக்கை பயன்படும் என்பது உண்மையே.
ஆனால் இதுவே ‘ஒட்டுமொத்த கறுப்புப் பணத்தை’ வெளியே கொண்டுவரவோ அல்லது அழிக்கவோ உதவுமா? ஸ்விஸ் வங்கி மற்றும் பல வெளிநாட்டு வங்கிகளில் சட்டவிரோதமாக கறுப்புப் பணத்தை குவித்துவைத்துள்ள பெரும் ‘மலைமுழுங்கி மஹாதேவன்களை’ இந்த நடவடிக்கை பாதிக்குமா? அவர்கள், ‘புக்வொர்க்’ மூலம், ‘இணையம்’ மூலம் தங்கள் பரிவர்த்தனைகளை செய்துவருகிறார்கள். அப்படிப்பட்ட ‘கடோத்கஜன்கள்’ தங்களது ‘கறுப்புப் பணத்துக்கு’ ஒரு உலக அங்கீகாரம் பெற்றுவைத்துள்ளனர். உலகமயமாக்குதலின் இன்றைய காலகட்டத்தில், ஏகபோக பெருமுதலாளிகளை ஆட்சியாளர்கள் சார்ந்து நிற்கிறார்களே தவிர நெருங்கித் தொடுவதில்லை. அவர்களது கறுப்புப் பணத்தை நாம் ‘இணைய கறுப்புப் பணம்’ என்று அழைக்கலாம். இடைத்தரகர்கள், உதிரிகள், சமூக விரோதிகள், அரசியல்வாதிகள் ஆகியோர் வைத்திருக்கும் சட்டவிரோத ‘பணக்குவித்தலை’ நாம், ‘ரூபாய் நாட்டுக்கு கறுப்புப் பணம்’ என்று அழைக்கலாம்.
அப்படியானால், இங்கே ஆட்சியில் அமர்ந்திருபோர் ஏற்கனவே, கார்பொரேட் நலனுக்காக செயல்படுபவர்கள் என்ற பெயர் இருக்கும்போது, அவர்கள், ‘இணைய கறுப்புப் பணத்தின் நலனுக்காக’ இடையிலே இடையூறாக இருக்கும் இடைத்தரகர்களான ‘ரூபாய் நாட்டுக்கு கறுப்புப் பணத்தின்’மீது எடுக்கும் நடவடிக்கையா இது? அதாவது, ‘டிஜிட்டல் கறுப்புப் பணம், கரன்சி கறுப்புப் பணம்’மீது நடவடிக்கை எடுத்துள்ளதா? எப்படியோ இது, நிச்சயம் இளைய தலைமுறையினருக்கும் நியாயம் வேண்டுவோருக்கும் கவர்ச்சியாக இருக்கும். அதனால் அவர்கள் வாக்குகள் உத்திரப்பிரதேசத்தில், இவர்களை ஆட்சிக்குக் கொண்டுவர வாய்ப்புள்ளது. அதுவே, மாநிலங்களவையில் இவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும். அதன்மூலம் தாங்கள் நினைத்ததையெல்லாம் நடத்த, ராமர் கோவில், 370 சட்டப்பிரிவு நீக்கல், பொது சிவில் சட்டம் என விருப்பப்படி நிறைவேற்றலாம். அப்படித்தானா?
டி.எஸ்.எஸ்.மணி

Monday, November 7, 2016

Ravindran article with Laxmanasamy photo

துணைவேந்தர் கைது சொல்லும் உண்மைகள்! - கோபாலன் இரவீந்திரன்

திங்கள், 7 நவ 2016

05.11.2016 அன்று மத்திய மனித வளத்துறை அமைச்சர் மாண்புமிகு ஜவடேகர் அவர்கள் கோயம்புத்துர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி நிகழ்ச்சியில் இரண்டு முக்கியமான கருத்துகளை தனது உரையில் முன்வைத்தார் என்பது பத்திரிகை செய்தி. “அதிகளவில் தன்னாட்சி உயர்கல்வி நிறுவனங்கள் தேவை. அரசு அதற்கான நடவடிக்கைளை எடுக்கும். இந்தியப் பல்கலைக்கழகங்கள் உலகத்தர பல்கலைக்கழகங்களாக மாற உயர்கல்வி அமைச்சகத்தின் வழி காட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்”.
மாண்புமிகு ஜவடேகர் இந்தியப் பல்கலைக்கழகங்கள் உலகத்தர பல்கலைக்கழகங்களாக மாற வேண்டும் என்று சொல்லும் முதல் நபர் அல்ல. கடந்த 10 வருடங்களாக நமது நாட்டின் ஜனாதிபதிகளாலும், பிரதம மந்திரிகளாலும், மத்திய/மாநில கல்வி அமைச்சர்களாலும், பெரு வணிக உயர்கல்வி நிறுவனங்களின் விளம்பரங்களை அண்டி இயங்கும் இந்திய ஊடகங்களாலும் சொல்லப்பட்டு வரும் விஷயம், ‘இந்தியப் பல்கலைக்கழகங்கள் உலகத்தர வரிசை பட்டியலில் இல்லை. இந்தியப் பல்கலைக்கழகங்கள் உலகத்தர பல்கலைக்கழகங்களாக மாற வேண்டும்’.
இவர்கள் இதை சொல்ல நம்பியிருக்கும் உலக உயர்கல்வி தர வரிசை பட்டியல்கள், உலகத்தின் முன்னணி கல்வியாளர்கள் உருவாக்கிய பட்டியல்கள் அல்ல. பெரு வணிக ஊடகங்களும், உயர்கல்வி ஆய்விதழ்களையும், நூல்கள் மற்றும் பட்டியல்களைப் பதிப்புக்கும் வணிக நிறுவனங்களும் இணைந்து, உயர்கல்வி தளத்தை சந்தைப்படுத்த எடுத்த / எடுக்கும் முன்னெடுப்புகளின் ஊடே விளைந்தவைதான் இவை.
இன்று இந்திய ஊடகங்களும், அமைச்சர்களும் சிலாகித்து சுட்டிக்காட்டும் உலக உயர்கல்வி தர வரிசை பட்டியல்கள் Times Higher Education Rankings மற்றும் QS World University Rankings. உலக மயமாக்கல் உயர்கல்வியை எவ்வாறு சந்தைப்படுத்துகிறது என்பதற்கான உதாரணங்கள் இவை. Elsevier எனும் முன்னணி ஆய்வு பதிப்பகமும் Times Higher Education Surveyயும் அண்மையில் கைகோர்த்து கொண்டபோது சொல்லப்பட்ட விஷயம், ‘இந்தியா மற்றும் சீனாவின் வளர்ச்சி அவற்றின் உயர்கல்வி தளங்களையும் பெரும் சந்தைகளாக மாற்றும். நாம் இணைவது இவற்றை கைப்பற்றத்தான்’.
Times Higher Education Survey மற்றும் QS World University Rankings போல, 28 உலக உயர்கல்வி தர வரிசை பட்டியல்கள் உலா வரும் காலத்தில் நமது உயர்கல்வி கொள்கைளை செதுக்குபவர்களும், உயர்கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்று பேசும் அமைச்சர்களும், அதிகாரிகளும் பேச மறுப்பது, இந்தியப் பல்கலைக்கழகங்கள் எவ்வாறு / எந்த காலகட்டத்தில் யாரால் செயல் இழக்க செய்யப்பட்டன என்பதாகும்.
உயர்கல்வித்துறை அமைச்சர்களும், அதிகாரிகளும் பேச மறுப்பது தரமான, வெளிப்படையான, ஊழலற்ற பேராசிரியர் மற்றும் துணைவேந்தர்கள் நியமனங்கள் பற்றி. தன்னாட்சி பல்கலைக்கழகங்களிடம் இருந்து எவ்வாறு பறிக்கப்பட்டது என்பது பற்றி இவர்கள் என்றும் பேசியது இல்லை. மத்திய மற்றும் மாநில பல்கலைக்கழகங்களிடம் இடையே ஏன் அளவில்லா நிதிசார் ஏற்றதாழ்வுகள் என்ற கேள்விகளை இவர்கள் எழுப்பியது கிடையாது.
இந்தியாவில் 1930இல் நோபல் பரிசு பெற்ற முதல் அறிவியாலாளர் சர் சி.வி.இராமன். இவர் படித்தது, பட்டம் பெற்றது, உலகத்தர ஆய்வு செய்தது Times Higher Education Survey மற்றும் QS World University Rankings இல்லாத காலகட்டத்தில் இயங்கிய உலகத்தர நிலையில் இருந்த சென்னை மாநிலக் கல்லூரியிலும், கொல்கத்தா பல்கலைக்கழகத்திலும். காரணம், அன்று உயர்கல்வித்துறை அமைச்சர்களும், அதிகாரிகளும், பேராசிரியர்கள் மற்றும் துணைவேந்தர்கள் நியமனங்களை சந்தைப்படுத்தவில்லை. மோசமான / போலி முன்னெடுப்புகளை அமலாக்கவில்லை. அரசியல்வாதிகளுக்கும், உயர் கல்வியாளர்களுக்கும் இடையே அவரவர் தளங்களின் எல்லைகள் பற்றிய அறிவார்ந்த, கண்ணியமான உறவுகள் இருந்தன.
(சர்.லட்சுமண சுவாமி)
இதற்கு உதாரணமாக, அன்றைய தமிழக முதல்வர் காமராஜர் அவர்களுக்கும் சென்னை பல்கலைக்கழகத்தில் 27 ஆண்டுகள் துணைவேந்தராக இருந்து உலகத்தர உயர்கல்வி முறைமைகளை தமிழ்நாட்டில் சாத்தியப்படுத்திய சர் லட்சுமண சுவாமிக்கும் இருந்த அறிவார்ந்த, கண்ணியமான உறவை கூறலாம். சென்னை பல்கலைக்கழகத்தில் அவர் காலத்தில் பணியாற்றிய எனது மூத்த பேராசிரியர்கள் சொல்லக் கேட்டது, இன்று நாம் கனவிலும் நினைக்க இயலாத சம்பவங்கள். முதல்வர் காமராஜர் அவர்களின் நெருங்கிய நண்பர் தனது மகனுக்கு சென்னை மாநிலக் கல்லூரியில் அரசியல்துறை பேராசிரியர் வேலைக் கேட்டு சிபாரிசுக்கு வருகிறார். முதல்வர் காமராஜர் அவரிடம் சொல்லியது: “சென்னை மாநிலக்கல்லூரி பேராசிரியர் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் கட்டுப்பாட்டில் வருவது. முதல்வராகிய நான் அதில் தலையிட முடியாது. எனது நெருங்கிய நண்பர் சர் லட்சுமண சுவாமி சென்னை பல்கலையில் துணைவேந்தராக இருக்கிறார். அவரது பல்கலையில் அந்தத் துறை பதவி காலியாக இருந்தால் நீங்கள் விண்ணப்பிக்கலாம்”.
1962 இந்திய - சீன போர் நிவாரண நிதி சேகரிக்க சென்னை பல்கலை விடுதி மாணவர்கள், முதல்வர் காமராஜர் அவர்களை விடுதிக்கு அழைத்தார்கள். சர் லட்சுமண சுவாமி, சென்னை பல்கலையில் துணைவேந்தராக இருந்த காலத்தின் எழுதப்படாத விதி: எந்த அரசியல்வாதியும் துணைவேந்தரின் அனுமதி இல்லாமல் பல்கலைக்கழகத்துக்கு உள்ளே வரக்கூடாது. துணைவேந்தரின் செயலர் இதை மாணவர்களிடம் சுட்டிக்காட்டி, ‘துணைவேந்தரின் கோபத்துக்கு நீங்கள் ஆளாக நேரும். உடனே முதல்வர் காமராஜர் அவர்களின் செயலரிடம் சொல்லி அழைப்பை ரத்து செய்ய சொல்லுங்கள்’ என்றார். மாணவர்கள், முதல்வர் அலுவலகம் சென்றவுடன் முதல்வர் காமராஜர் அவர்களை பேச அழைத்தார்கள். தகவலைக் கேட்டவுடன், மாணவர்களிடம் முதல்வர் காமராஜர் சொல்லியதாவது, ‘உங்களது துணைவேந்தர் சொல்வது சரியே. அவர் சொல்லை நீங்கள் மதிக்க வேண்டும். நானும் மதிக்க வேண்டும். நாளை உங்கள் விடுதிக்கு வெளியே நிற்கிறேன். நீங்கள் இந்திய - சீன போர் நிவாரண நிதியை வழங்கலாம்’ என்றார். அவர் அவ்வாறே செய்தார்.
அதே தமிழ்நாட்டில், இன்றைய பத்திரிகை செய்தி கோயம்புத்தூர் அண்ணா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு ஜந்து ஆண்டு கடுங்காவல் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது என்பதாகும். இச்செய்தி தமிழகத்தில் துணைவேந்தர் நியமனங்கள், கடந்த 25 வருடங்களாக எத்தகைய சீரழிவை எட்டியுள்ளன என்பதை சுட்டிக்காட்டுவதாகும்.
இந்த செய்தியில் மறைந்திருக்கும் வினா: லட்சுமண சுவாமியும், மு.வா-வும், மால்கம் ஆதிசேஷய்யாவும் உலகத்தர துணைவேந்தர்களாக மட்டும் இன்றி, தாங்கள் தலைமை வகித்த பல்கலைக்கழகங்களையும் உலகத்தரத்துக்கு உயர்த்திய தமிழ்நாட்டில், இந்த பத்திரிகை செய்தியை சாத்தியப்படுத்தியது ராதாகிருஷ்ணன்கள் மட்டும்தானா? கடந்த 20 வருடங்களாக உயர்கல்வித்துறையை நிர்வாகம் செய்த அரசியல்வாதிகளுக்கு இந்த சீரழிவில் சம்பந்தம் இல்லையா? இவர் மட்டும்தான் குற்றவாளியா? மற்ற குற்றவாளிகள் இவர் போல் பத்திரிகை செய்தி ஆவார்களா?
தமிழகத்தில் எப்போது இந்தச் சீரழிவு ஆரம்பித்தது? 27 வருடங்கள் சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த சர் லட்சுமண சுவாமி அவர்களைத் தேர்ந்தெடுத்தது / நியமனம் செய்தது அன்றைய அரசு அல்ல; அமைச்சர்கள் / அரசியல் இடைத்தரகர்கள் அல்ல; அன்று ‘தேடல் குழு’ கிடையாது. சென்னை பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினர்கள்தான் அவரை மறுபடியும், மறுபடியும் தேர்ந்தெடுத்தார்கள். அவரது தகுதி மற்றும் அவர் சென்னை பல்கலைக்கழகத்தை எவ்வாறு கட்டற்ற அறிவாற்றல் தளமாக மாற்றினார் என்பதுதான் அவர்களது மதிப்பீட்டு காரணியாக இருந்தது. அவரது கடைசி நியமனக் காலத்தில், தமிழக அரசு விதிகளை மாற்றி சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனத்தில் குறுக்கீடு செய்யும்போது, மேற்குறிப்பிட்ட சீரழிவு ஆரம்பித்தது.
ஆனால், 1980களின் இறுதிவரை துணைவேந்தர் நியமனங்களில் பெரிய அளவில் அரசியல் மற்றும் பணம் சார் குறுக்கீடுகள் இல்லை என்று அக்கால பேராசிரியர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவர்கள் கருத்தில் 1990கள் அரசியல் குறுக்கீடுகள் வேர் கொண்ட காலம். 2000கள் அரசியல் மற்றும் பணம் சார் குறுக்கீடுகள் மட்டற்ற அளவில் துணைவேந்தர் நியமனங்களில் விளையாடி தமிழகப் பல்கலைக்கழகங்களை கீழ்நிலைப் பாதையில் தள்ளிய காலம்.
தமிழகப் பல்கலைக்கழகங்களின் ஆசிரியர் சங்கங்களும், முன்னாள் துணைவேந்தர்களும், பல்கலைக்கழக மாணவர்களும் இச்சீர்கேடுகளை எதிர்த்து நீதிமன்றங்களை நாடுவதும், பொது வெளியில் செயல்படுவதும் பாராட்டுக்குரியது. ஆனால், இதுவரை எந்த பலனையும் அவர்களின் எதிர்வினைகள் கொடுக்கவில்லை என்பது வேதனையளிக்கும் விஷயம்.
மேற்குறிப்பிட்ட விஷயங்களுடன், நாம் இணைத்து பார்க்க வேண்டியது கடந்த 30 வருடங்களாக தமிழகத்தில் வேர் கொண்ட உயர்கல்வி தனியார் மயமாக்கல், அரசு பல்கலைக்கழகங்களை, அரசு மருத்துவமனைகள் எதிர் கொண்ட பாதையில் பயணிக்க வைக்கும் செயல். நம்மில் பலர் மனங்களில் விதைக்கப்பட்ட / விதைக்கப்படும் கருத்தியல், “தனியார் மருத்துவமனைகள் தரமானவை, சிறந்தவை. அரசு மருத்துவமனைகள் ஏழைகளுக்கானவை, தரமற்றவை” என்பதாகும். உயர்கல்வி தனியார் மயமாக்கல் அரசின் கொள்கைகளாலும், ஊடகங்களின் விளம்பர பங்களிப்பினாலும் வளர்த்தெடுக்கப்பட்டதால், இன்று பொதுமக்கள் கருத்து வளர்ச்சியில் இத்தகைய தவறான கருத்துகள் வேரூன்றியுள்ளன. அரசு பல்கலைக்கழகங்களும் இத்தகைய தவறான கருத்தியலுக்குப் பலியாகும் காலம் ஆரம்பித்து விட்டது எனலாம். “தனியார் பல்கலைக்கழகங்கள் சிறந்தவை. அரசு பல்கலைக்கழகங்கள் ஏழைகளுக்கானவை, தரமற்றவை” என்ற கருத்தியல் ஊடகங்களாலும், தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் விளம்பரப்படுத்தும் தர வரிசை பட்டியல் ‘சாதனைகளாலும்’ ஒவ்வொரு கல்வியாண்டின் ஆரம்பத்திலும் மாணவர்கள் / பெற்றோர்கள் மனங்களில் விதைக்கப்படுவது நாம் அறிந்தது.
தவறான துணைவேந்தர்களின் நியமனங்கள் பல்கலைக்கழகங்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பவை. பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் அல்ல. பள்ளிகள் அல்ல. பல்கலைக்கழகம் என்பது இரண்டாயிரம் வருட பாரம்பரியம் கொண்ட அருமையான கருத்தியல். இந்த கருத்தியல் பண்டைய நாளந்தா பல்கலைக்கழகத்திலும், காஞ்சிப் பல்கலையிலும், தக்ஸிலா பல்கலையிலும் கட்டற்ற அறிவாற்றல் தளங்களை உருவாக்கியது. கட்டற்ற அறிவாற்றல் தளங்கள்தான் ஒரு குறிப்பிட்ட புவியியல் பகுதியில் வசிக்கும் சமூக கூட்டத்தினை அறிவார்ந்த சமூகமாக மாற்றும். அந்த நாட்டை, மற்ற நாடுகளின் பார்வையில் வல்லமை மிக்க, வளர்ச்சி பாதையில் செல்லும் நாடாக மாற்றும். பல்கலைக்கழகங்கள் கட்டற்ற அறிவாற்றல் தளங்களாக செயல்படும்போது அவை அச்சமூகங்களின் மனசாட்சியாகவும், அவற்றை நெறிப்படுத்தும் காரணிகளாகவும் மாறுகின்றன. உலகம் போற்றிய சிறந்த தத்துவ அறிஞர்கள், விஞ்ஞானிகள், சமூகவியல் அறிஞர்கள் 1960-70கள் வரை பல இந்தியப் பல்கலைக்கழகங்களில், அவை கட்டற்ற அறிவாற்றல் தளங்களாக இருந்தபோது இருந்தார்கள் என்பது வியப்பான விஷயம் அல்ல; நாம் மறந்த வரலாறு. புது டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் இந்த மரபின் எச்சமாக பல சிக்கல்களுக்கு இடையே இயங்குவது வியப்புதான்.
தவறான / தகுதியில்லாத பல்கலைக்கழகத்தின் கருத்தியல் பற்றிய புரிதல் அற்ற நபர்கள் துணைவேந்தர்களை தேர்ந்தேடுக்கும் தேடல் குழுக்களில் இடம் பெறும்போதும் அல்லது அத்தகைய நபர்கள் துணைவேந்தர்களாக பல்கலைக்கழகங்களில் நுழையும்போதும், மேற்குறிப்பிட்ட கருத்தியல் புதைக்குழிக்குள் தள்ளப்படுகிறது. உயர்கல்வி சார் துறைகளில் பணியாற்றும் அரசு அதிகாரிகளும், அமைச்சர்களும் இந்த கருத்தியலை வளர்த்தெடுக்காமல், பல்கலைக்கழகங்களைப் பட்டங்களை உற்பத்திச் செய்யும் தொழிற்சாலைகளாக கடந்த 50 வருடங்களாக வளர்த்தெடுத்து வந்திருப்பது கண்கூடு. இன்றைய காலகட்டத்தில் பல்கலைக்கழகங்களில் கட்டற்ற அறிவாற்றல் தளங்களை உருவாக்கும் பணி முடக்கப்பட்டு, அவை உயர்நிலை கல்லூரிகளாகவும் / கல்லூரிகளை கட்டுப்படுத்தும் அமைப்புகளாகவும் மாற்றப்பட்டுள்ளன. இத்தகைய மாற்றத்தை துரிதப்படுத்த நியமிக்கப்படுபவர்கள்தான் தரமற்ற துணைவேந்தர்கள்.
இன்றைய தேவை: மேற்குறிப்பிட்ட கருத்தியல் சார்ந்து நமது பல்கலைக்கழகங்களை, தரமான இந்தியப் பல்கலைக்கழகங்களாக மாற்றுவதுதான். அவற்றை உலகத்தர பல்கலைக்கழகங்களாக மாற்ற விழைவது நகைப்புக்குரியது. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்.
கட்டுரையாளர் குறிப்பு: கோபாலன் இரவீந்திரன், MA.,MPhil.,PhD.,
டிஜிட்டல் கலாச்சாரங்கள், திரைப்படம் கலாச்சாரங்கள் மற்றும் டையாஸ்போரிக் கலாச்சாரங்கள் துறை தலைவர் மற்றும்
சென்னை பல்கலைக்கழக ஆசிரியப் பேரவையின் பொது செயலாளர்.

துணைவேந்தர் கைது சொல்லும் உண்மைகள்! - கோபாலன் இரவீந்திரன்

துணைவேந்தர் கைது சொல்லும் உண்மைகள்! - கோபாலன் இரவீந்திரன்

திங்கள், 7 நவ 2016

05.11.2016 அன்று மத்திய மனித வளத்துறை அமைச்சர் மாண்புமிகு ஜவடேகர் அவர்கள் கோயம்புத்துர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி நிகழ்ச்சியில் இரண்டு முக்கியமான கருத்துகளை தனது உரையில் முன்வைத்தார் என்பது பத்திரிகை செய்தி. “அதிகளவில் தன்னாட்சி உயர்கல்வி நிறுவனங்கள் தேவை. அரசு அதற்கான நடவடிக்கைளை எடுக்கும். இந்தியப் பல்கலைக்கழகங்கள் உலகத்தர பல்கலைக்கழகங்களாக மாற உயர்கல்வி அமைச்சகத்தின் வழி காட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்”.
மாண்புமிகு ஜவடேகர் இந்தியப் பல்கலைக்கழகங்கள் உலகத்தர பல்கலைக்கழகங்களாக மாற வேண்டும் என்று சொல்லும் முதல் நபர் அல்ல. கடந்த 10 வருடங்களாக நமது நாட்டின் ஜனாதிபதிகளாலும், பிரதம மந்திரிகளாலும், மத்திய/மாநில கல்வி அமைச்சர்களாலும், பெரு வணிக உயர்கல்வி நிறுவனங்களின் விளம்பரங்களை அண்டி இயங்கும் இந்திய ஊடகங்களாலும் சொல்லப்பட்டு வரும் விஷயம், ‘இந்தியப் பல்கலைக்கழகங்கள் உலகத்தர வரிசை பட்டியலில் இல்லை. இந்தியப் பல்கலைக்கழகங்கள் உலகத்தர பல்கலைக்கழகங்களாக மாற வேண்டும்’.
இவர்கள் இதை சொல்ல நம்பியிருக்கும் உலக உயர்கல்வி தர வரிசை பட்டியல்கள், உலகத்தின் முன்னணி கல்வியாளர்கள் உருவாக்கிய பட்டியல்கள் அல்ல. பெரு வணிக ஊடகங்களும், உயர்கல்வி ஆய்விதழ்களையும், நூல்கள் மற்றும் பட்டியல்களைப் பதிப்புக்கும் வணிக நிறுவனங்களும் இணைந்து, உயர்கல்வி தளத்தை சந்தைப்படுத்த எடுத்த / எடுக்கும் முன்னெடுப்புகளின் ஊடே விளைந்தவைதான் இவை.
இன்று இந்திய ஊடகங்களும், அமைச்சர்களும் சிலாகித்து சுட்டிக்காட்டும் உலக உயர்கல்வி தர வரிசை பட்டியல்கள் Times Higher Education Rankings மற்றும் QS World University Rankings. உலக மயமாக்கல் உயர்கல்வியை எவ்வாறு சந்தைப்படுத்துகிறது என்பதற்கான உதாரணங்கள் இவை. Elsevier எனும் முன்னணி ஆய்வு பதிப்பகமும் Times Higher Education Surveyயும் அண்மையில் கைகோர்த்து கொண்டபோது சொல்லப்பட்ட விஷயம், ‘இந்தியா மற்றும் சீனாவின் வளர்ச்சி அவற்றின் உயர்கல்வி தளங்களையும் பெரும் சந்தைகளாக மாற்றும். நாம் இணைவது இவற்றை கைப்பற்றத்தான்’.
Times Higher Education Survey மற்றும் QS World University Rankings போல, 28 உலக உயர்கல்வி தர வரிசை பட்டியல்கள் உலா வரும் காலத்தில் நமது உயர்கல்வி கொள்கைளை செதுக்குபவர்களும், உயர்கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்று பேசும் அமைச்சர்களும், அதிகாரிகளும் பேச மறுப்பது, இந்தியப் பல்கலைக்கழகங்கள் எவ்வாறு / எந்த காலகட்டத்தில் யாரால் செயல் இழக்க செய்யப்பட்டன என்பதாகும்.
உயர்கல்வித்துறை அமைச்சர்களும், அதிகாரிகளும் பேச மறுப்பது தரமான, வெளிப்படையான, ஊழலற்ற பேராசிரியர் மற்றும் துணைவேந்தர்கள் நியமனங்கள் பற்றி. தன்னாட்சி பல்கலைக்கழகங்களிடம் இருந்து எவ்வாறு பறிக்கப்பட்டது என்பது பற்றி இவர்கள் என்றும் பேசியது இல்லை. மத்திய மற்றும் மாநில பல்கலைக்கழகங்களிடம் இடையே ஏன் அளவில்லா நிதிசார் ஏற்றதாழ்வுகள் என்ற கேள்விகளை இவர்கள் எழுப்பியது கிடையாது.
இந்தியாவில் 1930இல் நோபல் பரிசு பெற்ற முதல் அறிவியாலாளர் சர் சி.வி.இராமன். இவர் படித்தது, பட்டம் பெற்றது, உலகத்தர ஆய்வு செய்தது Times Higher Education Survey மற்றும் QS World University Rankings இல்லாத காலகட்டத்தில் இயங்கிய உலகத்தர நிலையில் இருந்த சென்னை மாநிலக் கல்லூரியிலும், கொல்கத்தா பல்கலைக்கழகத்திலும். காரணம், அன்று உயர்கல்வித்துறை அமைச்சர்களும், அதிகாரிகளும், பேராசிரியர்கள் மற்றும் துணைவேந்தர்கள் நியமனங்களை சந்தைப்படுத்தவில்லை. மோசமான / போலி முன்னெடுப்புகளை அமலாக்கவில்லை. அரசியல்வாதிகளுக்கும், உயர் கல்வியாளர்களுக்கும் இடையே அவரவர் தளங்களின் எல்லைகள் பற்றிய அறிவார்ந்த, கண்ணியமான உறவுகள் இருந்தன.
இதற்கு உதாரணமாக, அன்றைய தமிழக முதல்வர் காமராஜர் அவர்களுக்கும் சென்னை பல்கலைக்கழகத்தில் 27 ஆண்டுகள் துணைவேந்தராக இருந்து உலகத்தர உயர்கல்வி முறைமைகளை தமிழ்நாட்டில் சாத்தியப்படுத்திய சர் லட்சுமண சுவாமிக்கும் இருந்த அறிவார்ந்த, கண்ணியமான உறவை கூறலாம். சென்னை பல்கலைக்கழகத்தில் அவர் காலத்தில் பணியாற்றிய எனது மூத்த பேராசிரியர்கள் சொல்லக் கேட்டது, இன்று நாம் கனவிலும் நினைக்க இயலாத சம்பவங்கள். முதல்வர் காமராஜர் அவர்களின் நெருங்கிய நண்பர் தனது மகனுக்கு சென்னை மாநிலக் கல்லூரியில் அரசியல்துறை பேராசிரியர் வேலைக் கேட்டு சிபாரிசுக்கு வருகிறார். முதல்வர் காமராஜர் அவரிடம் சொல்லியது: “சென்னை மாநிலக்கல்லூரி பேராசிரியர் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் கட்டுப்பாட்டில் வருவது. முதல்வராகிய நான் அதில் தலையிட முடியாது. எனது நெருங்கிய நண்பர் சர் லட்சுமண சுவாமி சென்னை பல்கலையில் துணைவேந்தராக இருக்கிறார். அவரது பல்கலையில் அந்தத் துறை பதவி காலியாக இருந்தால் நீங்கள் விண்ணப்பிக்கலாம்”.
1962 இந்திய - சீன போர் நிவாரண நிதி சேகரிக்க சென்னை பல்கலை விடுதி மாணவர்கள், முதல்வர் காமராஜர் அவர்களை விடுதிக்கு அழைத்தார்கள். சர் லட்சுமண சுவாமி, சென்னை பல்கலையில் துணைவேந்தராக இருந்த காலத்தின் எழுதப்படாத விதி: எந்த அரசியல்வாதியும் துணைவேந்தரின் அனுமதி இல்லாமல் பல்கலைக்கழகத்துக்கு உள்ளே வரக்கூடாது. துணைவேந்தரின் செயலர் இதை மாணவர்களிடம் சுட்டிக்காட்டி, ‘துணைவேந்தரின் கோபத்துக்கு நீங்கள் ஆளாக நேரும். உடனே முதல்வர் காமராஜர் அவர்களின் செயலரிடம் சொல்லி அழைப்பை ரத்து செய்ய சொல்லுங்கள்’ என்றார். மாணவர்கள், முதல்வர் அலுவலகம் சென்றவுடன் முதல்வர் காமராஜர் அவர்களை பேச அழைத்தார்கள். தகவலைக் கேட்டவுடன், மாணவர்களிடம் முதல்வர் காமராஜர் சொல்லியதாவது, ‘உங்களது துணைவேந்தர் சொல்வது சரியே. அவர் சொல்லை நீங்கள் மதிக்க வேண்டும். நானும் மதிக்க வேண்டும். நாளை உங்கள் விடுதிக்கு வெளியே நிற்கிறேன். நீங்கள் இந்திய - சீன போர் நிவாரண நிதியை வழங்கலாம்’ என்றார். அவர் அவ்வாறே செய்தார்.
அதே தமிழ்நாட்டில், இன்றைய பத்திரிகை செய்தி கோயம்புத்தூர் அண்ணா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு ஜந்து ஆண்டு கடுங்காவல் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது என்பதாகும். இச்செய்தி தமிழகத்தில் துணைவேந்தர் நியமனங்கள், கடந்த 25 வருடங்களாக எத்தகைய சீரழிவை எட்டியுள்ளன என்பதை சுட்டிக்காட்டுவதாகும்.
இந்த செய்தியில் மறைந்திருக்கும் வினா: லட்சுமண சுவாமியும், மு.வா-வும், மால்கம் ஆதிசேஷய்யாவும் உலகத்தர துணைவேந்தர்களாக மட்டும் இன்றி, தாங்கள் தலைமை வகித்த பல்கலைக்கழகங்களையும் உலகத்தரத்துக்கு உயர்த்திய தமிழ்நாட்டில், இந்த பத்திரிகை செய்தியை சாத்தியப்படுத்தியது ராதாகிருஷ்ணன்கள் மட்டும்தானா? கடந்த 20 வருடங்களாக உயர்கல்வித்துறையை நிர்வாகம் செய்த அரசியல்வாதிகளுக்கு இந்த சீரழிவில் சம்பந்தம் இல்லையா? இவர் மட்டும்தான் குற்றவாளியா? மற்ற குற்றவாளிகள் இவர் போல் பத்திரிகை செய்தி ஆவார்களா?
தமிழகத்தில் எப்போது இந்தச் சீரழிவு ஆரம்பித்தது? 27 வருடங்கள் சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த சர் லட்சுமண சுவாமி அவர்களைத் தேர்ந்தெடுத்தது / நியமனம் செய்தது அன்றைய அரசு அல்ல; அமைச்சர்கள் / அரசியல் இடைத்தரகர்கள் அல்ல; அன்று ‘தேடல் குழு’ கிடையாது. சென்னை பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினர்கள்தான் அவரை மறுபடியும், மறுபடியும் தேர்ந்தெடுத்தார்கள். அவரது தகுதி மற்றும் அவர் சென்னை பல்கலைக்கழகத்தை எவ்வாறு கட்டற்ற அறிவாற்றல் தளமாக மாற்றினார் என்பதுதான் அவர்களது மதிப்பீட்டு காரணியாக இருந்தது. அவரது கடைசி நியமனக் காலத்தில், தமிழக அரசு விதிகளை மாற்றி சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனத்தில் குறுக்கீடு செய்யும்போது, மேற்குறிப்பிட்ட சீரழிவு ஆரம்பித்தது.
ஆனால், 1980களின் இறுதிவரை துணைவேந்தர் நியமனங்களில் பெரிய அளவில் அரசியல் மற்றும் பணம் சார் குறுக்கீடுகள் இல்லை என்று அக்கால பேராசிரியர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவர்கள் கருத்தில் 1990கள் அரசியல் குறுக்கீடுகள் வேர் கொண்ட காலம். 2000கள் அரசியல் மற்றும் பணம் சார் குறுக்கீடுகள் மட்டற்ற அளவில் துணைவேந்தர் நியமனங்களில் விளையாடி தமிழகப் பல்கலைக்கழகங்களை கீழ்நிலைப் பாதையில் தள்ளிய காலம்.
தமிழகப் பல்கலைக்கழகங்களின் ஆசிரியர் சங்கங்களும், முன்னாள் துணைவேந்தர்களும், பல்கலைக்கழக மாணவர்களும் இச்சீர்கேடுகளை எதிர்த்து நீதிமன்றங்களை நாடுவதும், பொது வெளியில் செயல்படுவதும் பாராட்டுக்குரியது. ஆனால், இதுவரை எந்த பலனையும் அவர்களின் எதிர்வினைகள் கொடுக்கவில்லை என்பது வேதனையளிக்கும் விஷயம்.
மேற்குறிப்பிட்ட விஷயங்களுடன், நாம் இணைத்து பார்க்க வேண்டியது கடந்த 30 வருடங்களாக தமிழகத்தில் வேர் கொண்ட உயர்கல்வி தனியார் மயமாக்கல், அரசு பல்கலைக்கழகங்களை, அரசு மருத்துவமனைகள் எதிர் கொண்ட பாதையில் பயணிக்க வைக்கும் செயல். நம்மில் பலர் மனங்களில் விதைக்கப்பட்ட / விதைக்கப்படும் கருத்தியல், “தனியார் மருத்துவமனைகள் தரமானவை, சிறந்தவை. அரசு மருத்துவமனைகள் ஏழைகளுக்கானவை, தரமற்றவை” என்பதாகும். உயர்கல்வி தனியார் மயமாக்கல் அரசின் கொள்கைகளாலும், ஊடகங்களின் விளம்பர பங்களிப்பினாலும் வளர்த்தெடுக்கப்பட்டதால், இன்று பொதுமக்கள் கருத்து வளர்ச்சியில் இத்தகைய தவறான கருத்துகள் வேரூன்றியுள்ளன. அரசு பல்கலைக்கழகங்களும் இத்தகைய தவறான கருத்தியலுக்குப் பலியாகும் காலம் ஆரம்பித்து விட்டது எனலாம். “தனியார் பல்கலைக்கழகங்கள் சிறந்தவை. அரசு பல்கலைக்கழகங்கள் ஏழைகளுக்கானவை, தரமற்றவை” என்ற கருத்தியல் ஊடகங்களாலும், தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் விளம்பரப்படுத்தும் தர வரிசை பட்டியல் ‘சாதனைகளாலும்’ ஒவ்வொரு கல்வியாண்டின் ஆரம்பத்திலும் மாணவர்கள் / பெற்றோர்கள் மனங்களில் விதைக்கப்படுவது நாம் அறிந்தது.
தவறான துணைவேந்தர்களின் நியமனங்கள் பல்கலைக்கழகங்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பவை. பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் அல்ல. பள்ளிகள் அல்ல. பல்கலைக்கழகம் என்பது இரண்டாயிரம் வருட பாரம்பரியம் கொண்ட அருமையான கருத்தியல். இந்த கருத்தியல் பண்டைய நாளந்தா பல்கலைக்கழகத்திலும், காஞ்சிப் பல்கலையிலும், தக்ஸிலா பல்கலையிலும் கட்டற்ற அறிவாற்றல் தளங்களை உருவாக்கியது. கட்டற்ற அறிவாற்றல் தளங்கள்தான் ஒரு குறிப்பிட்ட புவியியல் பகுதியில் வசிக்கும் சமூக கூட்டத்தினை அறிவார்ந்த சமூகமாக மாற்றும். அந்த நாட்டை, மற்ற நாடுகளின் பார்வையில் வல்லமை மிக்க, வளர்ச்சி பாதையில் செல்லும் நாடாக மாற்றும். பல்கலைக்கழகங்கள் கட்டற்ற அறிவாற்றல் தளங்களாக செயல்படும்போது அவை அச்சமூகங்களின் மனசாட்சியாகவும், அவற்றை நெறிப்படுத்தும் காரணிகளாகவும் மாறுகின்றன. உலகம் போற்றிய சிறந்த தத்துவ அறிஞர்கள், விஞ்ஞானிகள், சமூகவியல் அறிஞர்கள் 1960-70கள் வரை பல இந்தியப் பல்கலைக்கழகங்களில், அவை கட்டற்ற அறிவாற்றல் தளங்களாக இருந்தபோது இருந்தார்கள் என்பது வியப்பான விஷயம் அல்ல; நாம் மறந்த வரலாறு. புது டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் இந்த மரபின் எச்சமாக பல சிக்கல்களுக்கு இடையே இயங்குவது வியப்புதான்.
தவறான / தகுதியில்லாத பல்கலைக்கழகத்தின் கருத்தியல் பற்றிய புரிதல் அற்ற நபர்கள் துணைவேந்தர்களை தேர்ந்தேடுக்கும் தேடல் குழுக்களில் இடம் பெறும்போதும் அல்லது அத்தகைய நபர்கள் துணைவேந்தர்களாக பல்கலைக்கழகங்களில் நுழையும்போதும், மேற்குறிப்பிட்ட கருத்தியல் புதைக்குழிக்குள் தள்ளப்படுகிறது. உயர்கல்வி சார் துறைகளில் பணியாற்றும் அரசு அதிகாரிகளும், அமைச்சர்களும் இந்த கருத்தியலை வளர்த்தெடுக்காமல், பல்கலைக்கழகங்களைப் பட்டங்களை உற்பத்திச் செய்யும் தொழிற்சாலைகளாக கடந்த 50 வருடங்களாக வளர்த்தெடுத்து வந்திருப்பது கண்கூடு. இன்றைய காலகட்டத்தில் பல்கலைக்கழகங்களில் கட்டற்ற அறிவாற்றல் தளங்களை உருவாக்கும் பணி முடக்கப்பட்டு, அவை உயர்நிலை கல்லூரிகளாகவும் / கல்லூரிகளை கட்டுப்படுத்தும் அமைப்புகளாகவும் மாற்றப்பட்டுள்ளன. இத்தகைய மாற்றத்தை துரிதப்படுத்த நியமிக்கப்படுபவர்கள்தான் தரமற்ற துணைவேந்தர்கள்.
இன்றைய தேவை: மேற்குறிப்பிட்ட கருத்தியல் சார்ந்து நமது பல்கலைக்கழகங்களை, தரமான இந்தியப் பல்கலைக்கழகங்களாக மாற்றுவதுதான். அவற்றை உலகத்தர பல்கலைக்கழகங்களாக மாற்ற விழைவது நகைப்புக்குரியது. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்.
கட்டுரையாளர் குறிப்பு: கோபாலன் இரவீந்திரன், MA.,MPhil.,PhD.,
டிஜிட்டல் கலாச்சாரங்கள், திரைப்படம் கலாச்சாரங்கள் மற்றும் டையாஸ்போரிக் கலாச்சாரங்கள் துறை தலைவர் மற்றும்
சென்னை பல்கலைக்கழக ஆசிரியப் பேரவையின் பொது செயலாளர்.

மேலும்:

Friday, November 4, 2016

ஆமைகளா? மீனவனா?

ஆமைகளா? மீனவனா?

வெள்ளி, 4 நவ 2016

பொதுவாக கடலிலே வாழும் உயிரினங்களை பற்றி, நிலத்திலே வாழும் மனிதர்களுக்கு நேரடி அனுபவமும் கிடையாது. அதனால் அது பற்றிய அறிவு பற்றாக்குறையுடனேயே இருக்கும். மலைகளில் வாழும் உயிரினங்களை பற்றிக் கூட சமவெளியில் வாழும் மனிதர்களுக்கு போதுமான அறிவு இருப்பதில்லை. இது இயல்பானதே. அப்படி இருக்கையில், நிலம் சார்ந்த உலகம் என்பது வேறு, கடல் சார்ந்த உலகம் என்பது வேறு. இதுவே உண்மையில் நிலவும் நிலைமை.
இதில் பல்வேறு காரணங்களால் நிலம் சார்ந்த உலகத்திலிருந்துதான், அரசாங்கமோ, அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ, ஊடகத்தாரோ, வருகிறார்கள். அவர்களுக்கு கடல் சார்ந்த உலகம் பற்றி, யாராவது ஆராய்ச்சியாளர்கள் கூறுவதையே கேட்கின்றனர். அதிலும் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அல்லது எழுதப்படும் ஆராய்ச்சிக் கட்டுரைகளையே தங்களுக்கான ஆதாரமாக எடுத்துக் கொண்டு முடிவுகளை செய்கின்றனர். எழுதப் படிக்கத் தெரியாவிட்டாலும், கடலைப் பற்றியும், கடலிலே வாழும் உயிரினங்களைப் பற்றியும், கடலிலே நிலவும் நீரோட்டங்களைப் பற்றியும், வருகின்ற புயல், காற்று, மின்னல், மழை ஆகியவற்றைப் பற்றியும், நேரடியாகவும், அனுபவித்த காரணத்தினாலும், மீனவர்களுக்கு அதிகமாகத் தெரியும் எனபதை நிலம் சார்ந்த அறிவு ஜீவிகள் ஏற்றுக் கொள்வதேயில்லை. இப்படி ஒரு சிக்கலை தமிழ்நாட்டின் உயர்நீதிமன்றம் எதிர்கொள்ள, அதுவே இன்று 26 மீனவக் கிராமங்களின் போராட்டமாக உருவெடுத்துள்ளது.
செப்டம்பர் 27 நாள், தமிழக அரசு ஒரு உத்தரவு போட்டுள்ளது. அதன்படி, வருகிற ஜனவரி 1 தேதி முதல் ஏப்ரல் மாதம் வரை, சென்னை நேப்பியர் பலம் முதல் திருவான்மியூர் ஆர்.டி.ஓ. அலுவலகம் வரையிலும், கொட்டிவாக்கம் முதல் கோவளம் வரையிலும் கடலிலே மீன்பிடிக்கும் மீனவர்கள், விசைப்படகையோ, எந்திரம் பொருத்தப்பட்ட எந்த படகையோ, 5 கடல் மைல்கள் (நாட்டிங்கல் மைல்) வரை மீன் பிடிக்கத் தடை செய்யப்படுகிறது. இது உள்ளபடியே, விசைப்படகுகளையம், கண்ணாடி இழைப்படகுகளான பைபர் படகுகளையும் தடை செய்துவிடும். அநேகமாக இப்போது அனைத்து மீனவர்களும் சென்னை மற்றும் சுற்று வட்டாரங்களில் கட்டுமரங்களுக்குப் பதில் கண்ணாடி இழைப் படகுகளைத்தான் பயன்படுத்துகின்றனர். ஆமைகளுக்கு முட்டையிடும் காலம் என்பதிலோ, இனப் பெருக்க காலம் என்பதிலோ, அதற்கு இடையூறாக இருக்கக்கூடாது என்பதிலோ, ஆமைகள் மீன்களின் இனப்பெருக்கத்துக்கு உதவக் கூடியவை என்பதிலோ, மீனவர்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆகவே ஆமைகளைப் பாதுகாப்பதில் மீனவர்களும் அக்கறையோடு இருக்கிறார்கள்.
இத்தகைய நிலையில், சுப்ரஜா என்பவர் நடத்தும் ட்ரீ பவுண்டஷன் ‘ஆமைகளைக் காப்பதில்’ அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. அவர்களது முயற்சியில் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வந்த வழக்கில், தலைமை நீதியரசர், தானாகவே அக்கறையுடன், ஒரு வழக்கறிஞரை நியமித்து, அரசிடம் ஆமைகளைப் பாதுகாக்க என்ன செய்யப் போகிறீர்கள் என வினவ, காத்திருந்ததுபோல, அரசும் மேற்கண்ட ‘தடையை’ அறிவித்துள்ளது. அதற்காக ஒடிசா அரசாங்கம் தங்களது கடலோரத்தில் ஆமையாக்களைப் பாதுகாக்க மீன்பிடித் தடையை அறிவித்துள்ளது என்று சுட்டிக் காட்டுகிறார்கள். ஒடிசா கடற்கரை வேறு, சென்னை கடற்கரை வேறு என்பது இந்த நிலம் சார்ந்த அறிவாளிகளுக்குத் தெரியுமா என கடல் சார்ந்த பழங்குடிகளான மீனவர்கள் கேட்கிறார்கள். ஒடிசா கடற்கரையில் ஆமைகளின் நடமாட்டம் மிக அதிகம். இங்கே சென்னை கடற்கரையில் வந்து பாருங்கள், ஆமைகள் அதிகமாக இயல்பிலேயே இல்லை என்கின்றனர் அந்த மீனவர்கள். அதுமட்டுமின்றி, நேப்பியர் பாலம் முதல் திருவான்மியூர் வரையும், கொட்டிவாக்கம் முதல் கோவளம் வரையும் மீனவர்கள் வாழும் பகுதிகளில் மட்டுமே ‘தடை’ அறிவித்த தமிழக அரசு, ஏன் செம்மஞ்சேரி முதல் கடப்பாக்கம் வரை எந்த தடையும் யாருக்கும் விதிக்கவில்லை என்று கேட்கின்றனர். ஏன் என்றால் அந்தப் பகுதிகளில் மீனவர் குப்பங்கள் இல்லை. மாறாக பெரும் பணக்காரர்களுடைய வீடுகள், பொழுதுபோக்கு நிறுவனகளும் உள்ளன என்றும் அவற்றில் அரசு அதிகாரிகள் உள்ளே நுழைந்து தடங்கல் செய்ய விரும்பவிலை என்றும் ஊழல் குற்றச்சாட்டுகளும் கூறுகின்றனர்.
மீனவர்கள் தரப்பில், தாங்கள் இயற்கையோடு இயைந்து வாழும் பழங்குடிகள் என்றும், அன்றாடம் கடலுக்குச் சென்று இயற்கையை எதிர்த்து போராடி, இயற்கையுடனேயே உறவாடி, மீன்களை வேட்டையாடி, உலகுக்கே உணவு தருகின்ற கடல்சார்ந்த உலகை சேர்ந்தவர்கள் என்றும், ஆகவே ஆமைகளை பாதுகாக்கும் மனோபாவம், இயற்கையாகவே தங்களுக்கு நிலம் சார்ந்த உலகத்தவர்களை விட அதிகமாகவே உண்டு என்றும், விலங்குகளா? மனிதர்களா? என்ற கேள்வியில், மனிதர்களைக் காப்பதில், அவர்களது வாழ்வாதராத்தை பாதுகாப்பதில், நிலம் சார்ந்த உலகத்தார் அதிக அக்கறை காட்ட வேண்டும் என்றும் மீனவர்கள் கோருகின்றனர். நிலம் சார்ந்த உலகத்து ஆர்வலர்களோ, அறிவு ஜீவிகளோ, அரசாங்க அதிகாரிகளோ, நீதிமன்றத்தாரோ தங்களது “ஆமைகளை பாதுகாக்கும் ஆர்வத்தை, கடலிலே சென்னைக்கு கடற்கரையோரம் எப்படிச் சூழல் இருக்கிறது என்று ஆராய்ந்து, கடல் சார் பழங்குடி மீனவர்களிடம் கருத்துக்கேட்டு, பிறகு முடிவுகளை எடுப்பதுதான் சரியானது?” மாறாக யாரோ ஒடிசா மாநிலத்தில் போட்டுள்ள ஒரு தடையை எடுத்துக் கொண்டுவந்து, இங்கே அதை அப்படியே எந்திர ரீதியாகப் பொறுத்த முயல்கிறார்கள் என்று மீனவர் பிரதிநிதிகள் கூறுகிறார்கள். விசைப்படகுகள் உள்ள பிராப்பளர்களில் அடிபட்டு ஆமைகள் இறந்து விடுவதாகவும், அதற்காக விசைப்படகுகளில் உள்ள பிராப்பளர்களில் பாதுகாப்பு கவசங்கள் இருக்க வேண்டும் என்றும் தான் தாங்கள் கேட்டதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகிறார்கள். ஆனால், அரசு ஏன் இதைப் பயன்படுத்தி மீன்பிடித் தடை போடுகிறது? அந்த தடை காலத்தில் தாங்கள் ஏற்கனவே மாநகராட்சி மூலம், சட்ட விரோதமாக கொண்டுவர விரும்பும், பிற மாநில மீன்களின் விற்பனைக்கு கூடங்களை அடையாறு ஆற்றுப்பகுதியில் நிறுவ, மறைமுகத் திட்டமா? என்று மீனவர்கள் சந்தேகிக்கிறார்கள்.
யார் உங்களுக்கு ஆராய்ச்சி செய்து கூறினார்கள் என்று கேட்டால், சி.எம்.எஃப்.ஆர்.ஐ. என்ற ‘கடலோர மீன்வள ஆராய்ச்சி நிறுவனம்’ கூறியுள்ளது என்கிறார்கள். இதே நிறுவனம் கடலுக்கு அடியில் தேங்கிக் கிடக்கும், பிளாஸ்டிக் கழிவுகள் பற்றிக் கூறவில்லையா? என்று மீனவர்கள் கேட்கிறார்கள். பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாக கடலிலே சேர்ந்ததால்தான், ஆமைகள் அவ்வப்போது மேலே வந்து மூச்சு விட்டுச் செல்பவை, கடலுக்கு கீழே வாழ் முடியாமல், மேலே மிதக்கத் தொடக்கி விட்டன என்றும் மீனவர்கள் கூறுகிறார்கள். அதையெல்லாம் விடுத்து, மீனவர்களின் வாழ்வாதாரம் மீது கை வைக்கிறீர்கள்? என்பதே அவர்களது கேள்வி. இதே கடலோர மீன்வள ஆராய்ச்சி நிறுவனம [சி.எம்.எஃப்.ஆர்.ஐ.] தமிழக அரசு கொண்டுவந்த கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை எதிர்த்தபோது, அரசும் அதிகாரிகளும் செவி மடுத்தார்களா? என்றும் மீனவர்கள் கேட்கிறார்கள். அப்போது, கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தால் உப்புத் தண்ணீரை, நல்ல தண்ணீராக்க, உப்புக்கழிவுகளை அடர்த்தியாக மீண்டும் கடலுக்குள் கொட்டுவது அதிகமான அளவுக்கு, கடலின் சுற்றுச்சூழலைக் கெடுத்து, கடல் வாழ் உயிரினங்களின் அழிவை ஏற்படுத்தாதா? என்று ஏன் இதே நிலம் சார்ந்த ஆர்வலர்களும், அறிவு ஜீவிகளும், நீதிமன்றத்தாரும் கேட்கவில்லை எனபதே மீனவர்களின் ஆதங்கம்.
ஆகவே, நவம்பர் 1ஆம் தேதி, மயிலாப்பூர் நொச்சிக்குப்பம் கடற்கரையிலே கூடிய 25 கிராமத்து மீனவர்கள், 300 பேர், இன்று (நவம்பர் 4ஆம் தேதி), திருவல்லிக்கேணி மாட்டங்குப்பம் தொடக்கி கோவளம் வரை உள்ள மீனவக் கிராமங்களில், கறுப்புக்கொடி ஏற்றி பட்டினிப் போராட்டம் நடத்தி, தமிழக அரசின் மீன் பிடி தடைக்கு எதிர்ப்பு காட்ட இருக்கிறார்கள். வருகிற நவம்பர் 7ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் வர இருக்கின்ற இந்த வழக்கின் அடுத்த விசாரணையில் தமிழக அரசு, தடையை நீக்கிக் கொள்ளாவிட்டால் போராட்டம் தொடரும் எனவும் எச்சரித்துள்ளார்.

Friday, October 21, 2016

இராணுவக் குற்றங்களுக்கு விசாரணை உண்டு! தண்டனை இல்லை –


கோத்தா, மஹிந்த தரப்பு இராணுவப் புரட்சி வரை செல்லலாம்! இராணுவக் குற்றங்களுக்கு விசாரணை உண்டு! தண்டனை இல்லை – ராஜித



rajithaநல்லாட்சியை பலப்படுத்த அரசு தடுக்கும் முயற்சிகளில் கோபமடையும் கோத்தாபய மற்றும் மஹிந்த தரப்பினர் சந்தர்ப்பத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்த இராணுவப்புரட்சி வரையில் செல்லலாம் என அமைச்சரவை ஊடகப்பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
முன்னாள் இராணுவ அதிகாரிகள் மற்றும் அவருக்கு விசுவாசமான இராணுவத்தினர் இன்றும் மஹிந்த ராஜபக் ஷவை ஆதரித்து பாதயாதிரைகளையும் பிரச்சாரங்களை செய்துகொண்டு உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இராணுவத்தினருக்கு எதிராக நாம் செயற்படுகின்றோம், இராணுவத்தை நாம் தண்டிக்க முயற்சித்து வருகின்றோம். இராணுவத்தினரை சிறைகளில் அடைக்கப்போகின்றோம், சர்வதேச நீதிமன்றில் நிறுத்தப்போகின்றோம் என்ற தவறான கருத்துகளை மஹிந்த ராஜபக் ஷவும் கோத்தபாய ராஜபக் ஷவும் நாட்டில் பரப்பி வருவதாகவும் குறிப்பிட்டார்.
அதேபோல் குற்றம் செய்த பௌத்த பிக்குவை சிறையில் அடைத்தால் நாம் பௌத்த மதத்தையும் சிங்கள இனத்தையும் அழிக்க முயற்சிப்பதாக மஹிந்த தரப்பு பொய்யான கதைகளை பரப்பி வருவதாகவும் தெரிவித்தார்.
தமது அரசியல் நலனுக்காக இவ்வாறான கருத்துக்களை முன்வைப்பதாகவும் எனினும் இராணுவம் செய்த குற்றங்களுக்கு விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். ஆனால் அவர்களை தண்டிக்க இடமளிக்க கூடாது என்ற நிலைப்பாட்டில் அரசு உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Monday, October 17, 2016

தயாராகி விட்டது இலங்கையின் கடுமையான பயபகரவாத எதிர்ப்பு சட்டம். -- இலங்கை அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துவிட்டது.

தயாராகி விட்டது இலங்கையின் கடுமையான பயபகரவாத எதிர்ப்பு சட்டம்.
---------------------------------------------------------------------------------------------------------------------
   இலங்கை அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துவிட்டது.
   ---------------------------------------------------------------------------------
     ஒரு சட்ட முன்வரைவை உருவாக்கி இலங்கை அரசு அதை அவர்களுக்குள் "ரகசிய விவாதத்திற்கு" என்று சுற்றுக்கு விட்டுள்ளது. அந்த சட்ட முன்வரைவை, இந்தியாவிற்கு சமீபத்தில் வந்த இலங்கை  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயும் , இலங்கை ஜனாதிபதி மைத்திரி பாலா சிறிசேனவும் கொண்டுவந்து காட்டி தங்களது இந்திய அரசு ஆளும் நண்பர்களிடம் ஒப்புதல் வாங்கியுள்ளனர். அந்த விரைவு நகல் மிகவும் கொடூரமான பிரிவுகளைக் கொண்டதாக இருக்கிறது. இந்திய அரசு கொண்டுவந்த "தேசிய பாதுகாப்பு சட்டம், உள்நாட்டு பாதுகாப்பு சட்டம் என்ற மிசா, பயங்கரவாதம்  மற்றும் கைதுக்கான சட்டம் என்ற தடா,,அராஜகங்களை தடுக்கும் சட்டம் என்ற பொடா", ஆகியவற்றின் "ஒட்டுமொத்த " வடிவமாக இருக்கிறது. 

"இலங்கையின் முன்வைக்கப்படும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் சட்ட 
----------------------------------------------------------------------------------------------------------------வடிவமும், கொள்கையும்", என்று தலைப்பிடப்பட்டு,, அது எழுதப்பட்டுளள்து.
--------------------------------------------
      1] பயங்கரவாததிலிருந்து  தேசிய பாதுகாப்பிற்கும், மக்கள் பாதுகாப்பிற்குமான சட்டம்.
      2] பயங்கரவாதத்தை தடுப்பதும்,, அது சம்பந்தப்பட்ட நடவடிக்களை தடுப்பதற்கான சட்டம்.
       3] பயங்கரவாதத் தாக்குதல்களிலிருந்தும், அது சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளிலிருந்து தடுப்பதற்கான சட்டம்.
        4] இலங்கையின் நிலத்திலிருந்து,பயங்கரவாத  தாக்குதகளை  மற்ற நாடுகளின் பகுதிகள் மீது நடத்த திட்டமிடலை தடுப்பது,
         6] பயங்கரவாத செயல்களில் மற்றும் சம்பந்தப்பட்ட செயல்களில்  ஈடுபடுவோரை, அடையாளம் காணவும்,கைது செய்யவும்,காவலில் வைக்கவம்,புலனாய்வு செய்யவும்,விசாரணை நடத்தவும், தணடனை வழங்கவும்,இந்த சட்டம் வழி வகை செய்கிறது. 
        7] சம்பந்தப்பட்ட செயல்களை செய்ப்பவர்கள் , 
            முழுமையாகவோ, பகுதியாகவோ ஈடுபட்டாலும்,
             இலங்கைக்கு உள்ளேயோ, கடல்நீரிலோ,ஈடுபட்டாலும்,
             இலங்கையின் வான்வெளியில் ஈடுபட்டாலும்,
              இலங்கையில் பதிவு செய்யப்பட அல்லது இலங்கைக்கு சொந்தமான     அல்லது இலங்கை பயன்படுத்தும்   விமானத்திற்குள்ளோ, கப்பலுக்குள்ளோ, 
              நடந்தாலும் இந்த சட்டம் பயன்படும்.
         இலங்கையின் தூதரகத்திலோ, தூதர்களின் இல்லத்திலோ, தூதரகத் தலைவரின் இருப்பிடத்திலோ,நடந்தாலும் இந்தச் சட்டம் பாயும்.

       இப்படி ஒரு சட்ட வரைவு  நகலை தயார் செய்திருப்பது, எழுகின்ற தமிழீழ கோரிக்கைகளின் "அரசியல் போராட்டங்களை" ஒடுக்கவே என்பதை மனித  உரிமை அமைப்புகளும், ஆர்வலர்களும், அரசியல் செயல்பாட்டாளர்களும்,ஊடகவியலாளர்களும்  கணிக்கிறார்கள். இத்தகைய ஏற்பாட்டிற்கு இந்திய நடுவண் அரசு முழு ஒத்துழைப்பாக இருக்கிறது எனபதுதான் வேதனையான செய்தி.




இலங்கையில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்!


இலங்கையில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்!

செவ்வாய், 18 அக் 2016

ஒரு சட்ட முன்வரைவை உருவாக்கி இலங்கை அரசு அதை அவர்களுக்குள் ரகசிய விவாதத்துக்கு என்று சுற்றுக்கு விட்டுள்ளது. அந்த சட்ட முன்வரைவை, இந்தியாவுக்கு சமீபத்தில் வந்த இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயும், இலங்கை ஜனாதிபதி மைத்திரி பாலா சிறிசேனாவும் கொண்டு வந்து காட்டி, தங்களது இந்திய அரசு ஆளும் நண்பர்களிடம் ஒப்புதல் வாங்கியுள்ளனர். அந்த வரைவு நகல் மிகவும் கொடூரமான பிரிவுகளைக் கொண்டதாக இருக்கிறது. இந்திய அரசு கொண்டு வந்த, தேசிய பாதுகாப்பு சட்டம், உள்நாட்டு பாதுகாப்பு சட்டம் என்ற மிசா, பயங்கரவாதம் மற்றும் கைதுக்கான சட்டம் என்ற தடா, அராஜகங்களை தடுக்கும் சட்டம் என்ற பொடா ஆகியவற்றின் ‘ஒட்டுமொத்த’ வடிவமாக இருக்கிறது.
‘இலங்கையின் முன்வைக்கப்படும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் சட்ட வடிவமும், கொள்கையும்’ என்று தலைப்பிடப்பட்டு அது எழுதப்பட்டுள்ளது.
1. பயங்கரவாதத்திலிருந்து தேசிய பாதுகாப்புக்கும் மக்கள் பாதுகாப்புக்குமான சட்டம்.
2. பயங்கரவாதத்தை தடுப்பதும் அது சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை தடுப்பதற்கான சட்டம்.
3. பயங்கரவாதத் தாக்குதல்களிலிருந்தும், அது சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளிலிருந்தும் தடுப்பதற்கான சட்டம்.
4. இலங்கையின் நிலத்திலிருந்து, பயங்கரவாதத் தாக்குதல்களை மற்ற நாடுகளின் பகுதிகள் மீது நடத்த திட்டமிடலை தடுப்பது...
பயங்கரவாத செயல்களில் மற்றும் சம்பந்தப்பட்ட செயல்களில் ஈடுபடுவோரை அடையாளம் காணவும், கைது செய்யவும், காவலில் வைக்கவும், புலனாய்வு செய்யவும், விசாரணை நடத்தவும், தண்டனை வழங்கவும் இந்த சட்டம் வழி வகை செய்கிறது.
சம்பந்தப்பட்ட செயல்களை செய்பவர்கள், முழுமையாகவோ, பகுதியாகவோ ஈடுபட்டாலும், இலங்கைக்கு உள்ளேயோ, கடல்நீரிலோ ஈடுபட்டாலும், இலங்கையின் வான்வெளியில் ஈடுபட்டாலும், இலங்கையில் பதிவு செய்யப்பட அல்லது இலங்கைக்குச் சொந்தமான அல்லது இலங்கை பயன்படுத்தும் விமானத்துக்குள்ளோ, கப்பலுக்குள்ளோ நடந்தாலும் இந்த சட்டம் பயன்படும்.
இலங்கையின் தூதரகத்திலோ, தூதர்களின் இல்லத்திலோ, தூதரகத் தலைவரின் இருப்பிடத்திலோ நடந்தாலும் இந்தச் சட்டம் பாயும்.
இப்படி ஒரு சட்ட வரைவு நகலை தயார் செய்திருப்பது, எழுகின்ற தமிழீழ கோரிக்கைகளின் ‘அரசியல் போராட்டங்களை’ ஒடுக்கவே என்பதை மனித உரிமை அமைப்புகளும், ஆர்வலர்களும், அரசியல் செயல்பாட்டாளர்களும், ஊடகவியலாளர்களும் கணிக்கிறார்கள். இத்தகைய ஏற்பாட்டுக்கு இந்திய நடுவண் அரசு முழு ஒத்துழைப்பாக இருக்கிறது என்பதுதான் வேதனையான செய்தி.