Thursday, September 10, 2015

"ஜெ", நிர்மலா சிதாரமானுக்கு பதில்

உலகமுதலீட்டாளர் சந்திப்பில்,"ஜெ",  நிர்மலா சிதாரமானுக்கு பதில் சொன்னாரா?
--------------------------------------------------------------------------------------------------------------------------
   முதல் நாள் சந்திப்பில், முதல்வர் ஜெயலலிதா தனது தொடக்க உரையில்,நடுவண் அமைச்சர்  நிர்மலா கூறிய செய்தியான " மகாராஷ்டிரா, டில்லிக்கு பிறகு மூன்றாவதாக அந்நிய நேரடி மூலதனம் பெற்றதில், தமிழ்நாடு இருக்கிறது" என்ற பேச்சிற்கு, பதிலுரையாக," உண்மையில் அந்நிய மூலதனம் தமிழ்நாட்டிற்கு இதைவிட அதிகம் வருகிறது. இந்தியாவில் உள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் பலவற்றின் தலைமையகங்கள்,இருக்கும் மாநிலங்களை,தமிழ்நாட்டின் ஒரு குறிப்பிட்ட அளவிலான அந்நிய மூலதனத்துடன் ஒப்பிடுகிறார்கள்." என்று தனது உரையின் இரண்டாவது பாராவிலேயே கூறியுள்ளார்கள். அதாவது  நாம் குறிப்பிட்டு காட்டுவது போல,"வைப்ரன்ட் குஜராத்தை" தமிழ்நாட்டின் மூலதன இறக்குமதியுடன் ஒப்பிடாமல், இந்தியாவிலேயே "யார் அதிக வெளிநாட்டு மூலதனத்தை" ஈர்ததுள்ளார்கள் என்பதை சுட்டிக் காட்டுகிறார்.

     அதாவது மூன்றாவது இடத்தில தமிழ்நாடு என்ற மதிப்பீடே தவறு என்பதையும், மகாராஷ்டிராவின் தலைநகர் மும்பையும், டில்லியின் தலைநகர் டில்லியும், வெளிநாட்டு நிறுவனங்களின் தலைமையகங்களை கொண்டுள்ளது என்பதே அவர்களின் இடங்களில், பல்வேறு வகைகளில் வெளிநாட்டு மூலதனங்கள் வருவது அதிசயமல்ல. ஆனால் தமிழ்நாடு அதையே "தன்னிச்சையாக " சாதித்துள்ளது என்பதை முன்வைக்கிறார். அதன்மூலம் "இந்தியாவை  வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுசெல்ல" யாரால் முடியும் என்பதை, நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய சூழலில் கூறிய, "குஜராத்தின் மோடியா? தமிழ்நாட்டின் லேடியா?' என்ற சொல்லாடலை கூறாமல் கூறுகிறார்.,

               அதன்மூலம் நமக்கு புரியவேண்டிய செய்தியே, " அ.இ.அ.தி.மு.க விற்கும் பா.ஜ.க.விற்கும், இடையே வருகிற 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலில், நேரடி போட்டி இருக்கும் என்பதுதான்..இதில் பா.ஜ.க.விற்கு வேண்டுமானால் "தான் தி.மு.க.வை விட " அதிகமான இடங்களை வெல்லவேண்டும் என்றும், வெல்ல முடியும் எனவும் எண்ணம் இருக்கலாம். அதாவது "தான்தான் அ.இ.அ.தி.மு.க.விற்கு போட்டியாளராக இருக்கவேண்டும்" என்று பா.ஜ.க. எண்ணுகிறது. அதற்கான பெரிய கூட்டணிக்கு முயற்சித்து வருகிறது. ஆனால் அவர்கள் அதிகம் சார்ந்து இருப்பது, "சங்க பரிவாரத்தின்" ஊரகப் பணிகளைத்தான். அதாவது தமிழ்நாட்டில் உள்ள சாதிகளை ஒவ்வொன்றாக  தங்கள் பக்கம் இழுப்பதற்கான பணிகளை" பா.ஜ.க.கணக்கு போட்டு செய்து வருவது அனைவருக்கும் தெரியும்.ஆனால் அ.இ.அ.தி.மு.க.வோ, தனக்கு எதிரியாக தி.மு.க.தான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறது. அதற்கான காரணம் அனைவரும் அறிந்ததே.

     ஆகையால் நடுவண் அரசுக்கும், மாநில ஆட்சியாளர்களுக்கும் உள்ள உறவை, "ஒற்றையாட்சிக்கும், கூட்டமைப்புக்கும்" இடையே உள்ள முரண்பாடான உறவுதான் என்பதை பலரும் புரிந்துகொள்ளவில்லை. தவிரவும், இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து, நடுவண் அரசுக்கு எதிராக,"கூட்டமைப்பு அரசியலை" இன்றைய அ.இ.அ.தி.மு.க. தலைமையான செல்வி.ஜெயலலிதா எடுத்துக் கூறிய அளவுக்கு யாரும் செய்யவில்லை.2014 நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கு முன்பே, "கூட்டுறவுடன் கூடிய கூட்டமைப்பு" என்ற சொல்லாடலை அறிமுகப்படுத்தி, உச்சரித்து வருவது, செல்வி.ஜெயலலிதா மட்டும்தான் என்பதையும் காணத் தவறுகிறார்கள். இந்தியத் துணைக் கண்டத்தில், தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா மட்டும்தான், ஒவ்வொரு நடுவண் அரசின் செயல்களுக்கும், பதில் கொடுத்து,மாநில உரிமைகளை முன் நிறுத்தி வருகிறார்.

        ஆகவே அ.இ.அ.தி.மு.கவுடன், பா.ஜ.க.வை முடிச்சு போட்டு பேசி வருவது, "தற்காலிகமாக முஸ்லிம், கிருத்துவ வாக்குகளை"  அ.இ.அ.தி.மு.க.விற்கு எதிராக மாற்றவும், தி.மு.க.விற்கு சாதகமாக திருப்பவும்  உதவலாமே தவிர , தேர்தல் நேரத்தில் அதுவும் தோற்றுப்போகும். அத்தகைய "பரப்புதல்" அறிவாலயத்திற்கு வேண்டுமானால் இனிப்பாக இருக்கும். உண்மையில் அதற்கான நியாயங்களே இல்லை.