Sunday, June 28, 2015

பிரபுல் பிட்வாய் அஞ்சலி கூட்டம்

ஊடகவியலாளர்-பத்தி எழுத்தாளர்- அணு சக்தி எதிர்ப்பாளர்
                   பிரபுல் பிட்வாய் அஞ்சலி  கூட்டம்
                 ---------------------------------------------------
 இன்று "மக்கள் சிவில் உரிமக் கழகம்" {பி.யு.சி.எல்], சென்னை பெருநகரக் குழு, எழும்பூர் "இக்சா" மையத்தில், 23 ஆம் நாள் ஆம்ஸ்டர்டாம் நகரில் மரணமடைந்த "பிரபுல் பிட்வாய்" இந்திய ஊடக உலகிலும், அணு உலை, அணு ஆயுத ஒழிப்பு இயக்கங்களிலும், ஆற்றிய சீறிய பங்களிப்பையும்,அவருடன் களப்பணியாற்றிய தங்களது அனுபவங்களையும், மூத்த ஊடகவியலாளர்களும், மனித உரிமையாளர்களும் பகிர்ந்துகொண்டனர்.
       
      முன்னாள் யு,என்.ஐ.செய்தி நிறுவனம்,லண்டன் பி.பி.சி,ஆம்னஸ்டி இன்டர்நேசனல்  ஆகியவற்றின் செயல்பாட்டாளர், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பை மீனவர் தலைவர் ஆண்டன் கோமேஸ் தலைமையில் நிறுவியவருமான கோ.ரமேஷ், நியு இந்தியன் எக்ஸ்ப்ரஸ் தலைமை செய்தி ஆசிரியர் பாபு ஜெயகுமார், ஊடகவியலாளரும்,30 ஆண்டு கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பின் செயல்பட்டாலருமான டி.எஸ்.எஸ்.மணி ஆகியோர் , பிரபுல் பிட்வாய் பயணித்த எழுத்துக்கள், கருத்துக்கள், செயல்பாடுகள் பற்றி விரிவாக உரையாற்றினர்.பேரா.சங்கரலிங்கம் நன்றி கூறினார்..