Thursday, April 16, 2015

ஹைதராபாத் நீதிமன்றத்தில் இரண்டாவது வெற்றி உத்தரவு.

ஹைதராபாத் நீதிமன்றத்தில் இரண்டாவது வெற்றி உத்தரவு.
-------------------------------------------------------------------------------------------------
      திருப்பதி படுகொலைகளை நடத்திய ஆந்திர மாநில காவல்துறை,குறிப்பாக "செம்மரக்கடதடத்தல் தடுப்பு அதிரடிப்படை" திட்டமிட்டு, முன்கூட்டியே கைது செய்த தமிழ் தொழிலாளர்களை,பிடித்து சித்திரவதை செய்து பிறகு, சேஷாசலம் ரிசர்வ் காடுகளுக்கு கொண்டுவந்து, படுகொலைகளை செய்துள்ளனர் என்ற "உண்மையறியும் குழு"வின் கண்டுபிடிப்பை நிருபிக்கும் முயற்சியில், ஏற்கனவே 20 உடல்களையும் "உடற்கூறு ஆய்வு"செய்த ஆந்திர அரசின் செயல்பாட்டில், அதன் கீழ் பணியாற்றும் மருத்துவர்களின் செயல்பாட்டில் "முழு நம்பிக்கை" இல்லாத "சொந்தங்களை பறிகொடுத்தோர்" போட்ட "மறு உடற்கூறு ஆய்வு" வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் கடந்த திங்கள் கிழமை அன்று "ஹைதேராபாத் உயர்நீதிமன்றம்" சென்று நீதி கேளுங்கள் என்று கூறியதால், பா.ம.க.வழக்கறிஞர் பாலு,தான் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் பெற்ற உத்தரவான "ஏப்ரல் 17 ஆம் தேதிவரை" எரிக்கப்படாத உடல்களான திருவண்ணாமலை போளூர் வட்டம் 6 உடல்களுக்கும் "மறு உடற்கூறு ஆய்வு" கேட்டு, செவ்வாய்கிழமை ஆந்திராவின் ஒன்றுபட்ட உயர்நீதிமன்றமான ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்தார்.

 அது இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வாதங்களை கேட்ட நீதியரசர், ஒரு உத்தரவை வழங்கினார்."ஆந்திராவோ,தமிழ்நாடோ, இந்த பிரச்சனையில் சம்பந்தப்பட்டிருப்பதால்" அவை இரண்டும் இல்லாத "மூன்றாவது மாநிலம் ஒன்றில் வேறு சிறப்பு தன்மை உள்ள மருதுவமனையின் சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு பிரேத பரிசோதனை வேண்டும்" என்ற கோரிக்கையை வழக்கறிஞர் பாலு வாதாட அதை ஏற்று, "ஆந்திராவும் வேண்டாம்.தமிழ்நாடும் வேண்டாம். மூன்றாவது மாநிலமான தெலுங்கானாவில்  சிறப்பு தன்மை உள்ள நிஜாம் மருதுவமனியின் சிறப்பு மருத்துவர்களை கொண்டு மறு உடற்கூறு ஆய்வு" செய்ய உத்தரவிட்டார். அதேநேரம் 6 உடல்களுக்கு என்று ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்ற வாரம் வழக்கறிஞர் பாலு கேட்டிருந்த வேண்டுகோளின் அடிப்படையில், இந்த வழக்கு தொடர்வதால், அந்த ஆறு பேருக்கும் மறு உடற்கூறு ஆய்வு வேண்டும்" என்று பாலு வாதிட்டார். ஆனால் என்ன காரணத்தாலோ, நீதியரசர் "நேரில் வந்த மனு செய்த சசிகுமார் என்பவரது உடலுக்காக போராடிய அவரது மனைவி முனியம்மாளின் மனு மீது மட்டும் தனது உத்தரவு" என்று தீர்ப்பு கொடுத்தார்.

                           எப்படியும் ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில், நேற்று சந்திரகிரி காவல் நிலையத்தின் "முதல் தகவல் அறிக்கையில் காவல்துறை அதிகாரிகள் மீது 302, 364 ஆகிய கொலை,கடத்தல் பிரிவுகளில் இந்திய தண்டனைஉ சட்டம் 34 இன் கீழ் வழக்கு பதிவு செய்த" முதல் வெற்றியை கண்டோம்.இன்று "இறந்தவர்களின் உடலில் மறு உடற்கூறு ஆய்வு" என்பதும் முதலில் ஒரு உடலுக்கு கிடைத்த வெற்றியை காண்கிறோம்.நமக்கு கிடைத்த தகவ்லகளின்படி, "காவல்துறையினர், மருத்துவர்களின் உதவியோடு, உடற்கூறு ஆய்வில் சில தில்லுமுல்லுகளை செய்வது பழக்கமாம்".அதாவது "எந்த கோணத்தில் காணொளிக் கருவியை[ கேமராவை] வைப்பது, எந்த அளவுக்கு விளக்கின் வெளிச்சத்தை உடல் மீது எந்த இடத்தில செலுத்துவது" என்பதில் கூட சில தில்லு முல்லுகளை செய்யமுடியுமாம். அப்படி செய்வது சில "கருப்பு ஆடுகளுக்கு கை வந்த கலையாம்". இதை கேள்விப்பட்டதனால்தான் நமக்கு, "மூன்றாவது மாநிலத்தில், சிறப்பு மருத்துவமனையில், சிறப்பு மறுத்தவர்களை வைத்து சோதனை" என்ற கருத்தே உருவானது.

ஆந்திரக்கதை-புகார் கொடுத்ததால், குற்றம் பதிவு செய்யப்பட்டது.

 ஆந்திரக்கதை-புகார் கொடுத்ததால், குற்றம் பதிவு செய்யப்பட்டது.
----------------------------------------------------------------------------------------------------
      தமிழ்நாடு பி.யு.சி.எல்.காரர்களான  நான்,பிரான்சிஸ், சரவணன் மூவரும், டில்லி பி.யு.டி.ஆர்.தோழர்கள் சண்டனு,அஜிதா இருவருடனும் திருப்பதி சென்று "ஆல் இந்தியா ரேடியோ பை பாஸ்" சாலையில் உள்ள வழக்கறிஞர் கிராந்தி சைதன்யாவின் அலுவலகத்திற்குள் நுழைந்தோம். அன்று வெள்ளிக்கிழமை.ஏப்ரல் 10 ஆம் நாள்.இரவு 7 மணி இருக்கும். மறுநாள் சனிக்கிழமை "காட்டிற்குள் சென்று கொலைகள் நடந்த இடத்தை"காண்பதுதான்,ஆந்திரபிரதேச சிவில் உரிமைக் குழு சார்பாக அவர்  எங்களிடம் கொடுத்திருந்த திட்டம். ஆனால் நாங்கள் சென்ற உடன் அவர் முக்கியமான ஒரு கோரிக்கையை முன்வைத்தார்.கொலை செய்யப்பட்டவர்கள் 20 பேரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பதால்,  "தமிழ்நாட்டில் உள்ள தோழர்களிடமும், தொடர்புகளிடமும் தான் பேசி வருவதாகவும்", யாராவது இறந்தவர் ஒருவரின் உறவினர் ஒருவரை கொண்டுவந்த சம்பவம் நடந்த காவல் நிலையமான  "சந்திரகிரி" காவல் நிலையத்தில்  "ஒரு புகாரை பதிவு"செய்யவைததால் அதுவே ஆந்திர உயர்நீதிமன்றம் ஏற்கனவே அன்று வெள்ளிக்கிழமை கூறியிருந்தபடி,"உச்சநீதிமன்ற வழிகாட்டலின் படி" நடந்த துப்பாக்கி சூட்டிற்கு "கொலை வழக்கு" பதிவு செய்ய ஏதுவாக இருக்கும் என்பது அவரது முன்வைப்பு. அவருக்கு எங்களுடன் "உண்மை அறியும் குழு"வை கூட்டிச்செல்லும் பணியுடன், இந்த புகார் பதிவு செய்யும் கூடுதல் பணியும் சேர்ந்து கொண்டது என உணர்ந்தோம்.

         அங்கிருந்தே தொலைபேசியில், "தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு தலைவி ஷீலுவை" தொடர்பு கொண்டு  அவர்களது அமைப்பினர் "திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டத்தில்" தொடர்ந்து பணியாற்றுவதால் அவர்களால் "ஒரு இறந்தவரின் உறவினரை "அழைத்துவர முடியுமா? என வினவினோம். அவரும் அவர்களது பணியாளர் ராஜா அதற்கு "தயார்"என்று கூறியதாக தெரிவித்தார்.பிறகு மீண்டும் ராஜா கூறிய செய்தியை கூறினார். அதாவது திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டத்தில் உள்ள "கண்ணமங்கலம்" பகுதியில் இருந்து ஆந்திரா சென்ற 7 பேர்தான் கொலை செய்யப்பட்டவர்கள் என்றும், அவர்களில் 6 பேர் வன்னியர் சமூகம் என்றும், ஒருவர் போயர் சமூகம் என்றும், "பா.ம.க.அவர்களுடன் தொடர்பில் உள்ளது" என்பதுமே அந்த செய்தி. சரி.பா.ம.க.வால் இந்த பணியை கண்டிப்பாக செய்யமுடியும் என்பதே எனது கணிப்பாகவும் இருந்தது. உடனேயே நான் "பா.ம.க.வழக்கறிஞர் பாலு", மற்றும் "பசுமை தாயகம் அருள்" ஆகிய இருவரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். அருள் உடனடியாக கிடைத்துவிட்டார். விவரத்தை எடுத்து கூறியவுடன் "கண்டிப்பாக உடனடியாக செய்துவிடலாம்" என்றும் கூறினார். வழக்கறிஞர் பாலுவும் உடனடியாக தொடர்புக்கு வந்து மறுநாள் "காலையிலேயே" உறுதியாக நிற்கக்கூடிய ஒருவரை கண்டுபிடித்து அழைதது வருகிறோம் என்று கூறினார். மறுநாள் சனிக்கிழமை.பாலு இதே சம்பவத்திற்காக ஒரு"சிறப்பு வழக்கு" போட  சென்னை உயர்நீதிமன்றம் செல்ல வேண்டும். ஆகவே அந்த குறிப்பிட்ட வட்டாரத்தை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் "எதிரொலி மணியனை" இந்தப்பணியை செய்ய ஏற்பாடு செய்திருந்தனர்.

               நாங்களும் இந்த செய்தியை ஆந்திரபிரதேச சிவில் உரிமை குழு வின் வழக்கறிஞர்கள் கிராந்தி சைதன்யாவிற்கும் , ஹைதராபாத்தில் உள்ள இந்த வழக்கை உயர்நீதிமன்றத்தில் வாதாடி வரும் வழக்கறிஞர் ரகுனாததிற்கும் தெரிவித்து விட்டோம்.எங்கள் எதிர்பார்ப்பு மறுநாள் சனிக்கிழமை மதியததிற்குள் "புகார் கொடுப்பதர்கான் உறவினர்கள்" வந்துவிடுவார்கள்  எனபதே.ஆனால் உடனடியாக சம்பந்தப்பட்ட மக்களை திரட்ட முடியவில்லை என்ற சூழலில், வழக்கறிஞர் பாலு தொடர்பு கொண்டு "ஞாயிற்றுக் கிழமை" காலை எப்படியும் தானே இருந்து அழைத்துவந்து விடுகிறேன் என்றார். அன்று சனிக்கிழமை அந்த திருவண்ணாமலை பகுதிக்கு பா.ம.க.வின் மருத்துவர் அன்புமணி எம்.பி.வருகை புரிந்து இந்த பணியில் "மனித உரிமை ஆர்வலர்களுக்கு" முழுமையாக ஒத்துழைக்கும்படி கோரினார் என்பதையும் பிறகு அறிந்தோம். 

அன்று சனிக்கிழமை நாங்கள் "காட்டிற்குள் சென்றதும்" அதுவே காட்சி ஊடகங்களில் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டதும், மாலையில் 4 மணிக்கு "ஊடகவியலாளர் கூட்டத்தில்" நாங்கள் காவல்துறையின் "பொயகூற்றை"அம்பலப்படுத்தியதும், நாடெங்கிலும் உள்ள குறிப்பாக "ஆந்திரா,தமிழ்நாடு" ஆகிய மாநிலங்களில் உள்ள அனைத்து மக்களுக்கும் "தொலைக்காட்சிகள்"மூலம் சென்றுவிட்டது என்பதும்  தெரியமுடிந்தது.அதுவே ஆந்திர காவல்துறைக்கு குறிப்பாக திருப்பதி காவல்துறைக்கு அதிலும் குறிப்பாக "செம்மரக்கடத்தல் எதிர்ப்பு அதிரடிப்படை உயர் அதிகாரிகளுக்கும்,வன இலாககாவின் அதிகாரிகளுக்கும்"பெரும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்க வேண்டும்.அதனால்தான் அவர்கள் குறிப்பிட்ட வன இலாக்கா அதிகாரியை சந்தித்து நியாயம் கேட்க சென்ற எங்கள் மீது "அனுமதி இன்றி காட்டிற்குள் நுழைந்தவர்கள் என்று வழக்கு பதிவு" செய்துள்ளார்கள் என்பதை அறிந்தோம்.

         மறுநாள் எங்கள் மீது "வழக்கு பதிவு" செய்திருப்பது, தெலுங்கு, மற்றும் தமிழ், ஆங்கில ஏடுகளுக்கு" ஒரு செய்தியாக ஆகிவிட்டது. அதுவே நேரில் நின்று "பா.ம.க.கொண்டுவரும் புகார்களை" உடன் இருந்து பதிவு செய்வது என்பதில் சிறிது குழப்பத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் ஆந்திர சிவில் உரிமைக் குழு செயலளார் வழக்கறிஞர் சந்திரசேகரும், கிராந்தி சைதன்யாவும், பா.ம.க.வழக்கறிஞர் பாலு,அருள்,எதிரொலி மணியன் ஆகியோருடன் இணைந்து  "புகார்களை தயார் செய்வதும்,அதை படி எடுப்பதும்" என்ற பணிகளில்  ஈடுபட்டார்கள். அதில் சம்பந்தப்பட்ட "சந்திரகிரி காவல் நிலையத்திலேயே நேரில் சென்று சந்திரசேகரும், மும்பையிலிருந்து வந்திருந்த சி.பி.டி.ஆர்.[ ஜனநாயக உரிமைக்கான பாதுகாப்பு குழு} அஜ்மல் என்ற இளைஞரும் உடன் இருந்து, அந்த புகார்களை பதிவு செய்ய உதவினர். பா.ம.க. அருளும்,பாலுவும் முக்கிய பங்கு வகித்தார்கள். அவர்கள் காவல் நிலையம் வருவதற்குள் "35 தெலுங்கு தொலைக் காட்சிகளும்,10 தமிழ் தொலைக் காட்சிகளும்,15 அச்சு ஊடகங்களும்" சந்திரகிரி காவல்நிலையம் முன்பு நின்று கொண்டு பொறுமை இழந்து எனக்கு தொலை பேசிக் கொண்டே இருந்தார்கள்.அந்த கூட்டமே காவல்துறையை "மிரட்டி" இருக்கவேண்டும். அங்கு வந்த டி.எஸ்.பி.அருளிடம் "இந்த காவல்நிலயமே இப்போது உங்கள் கட்டுப்பாட்டில்தான்" என்று கூறினாராம்.

        நம்மவர்களும், கொலை செய்யப்பட "சசிகுமார் என்பவரின் மனைவி முனியம்மாள்" கொடுக்கும் "புகாரை" முதலில் விரிவாக எழுதி, மரணம் அடைந்த "20 பேரின் சார்பாக" என்று எழுதி, அதில் "பிடித்து சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டுள்ளார்கள்" என்பதையும், "கொலை செய்த காவலர்கள் மீது கொலை வழக்கை பதிவு செய்" என்றும் எழுதி புகாரை கொடுத்துள்ளார்கள். பா.ம.க.வினர் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டத்தின் கண்ணமங்கலம் பகுதியின் கொல்லப்பட்ட 6 பேரின் உறவினர்களையும்,திருவண்ணாமலை மாவட்ட ஜவ்வாது மலையின் கொலை செய்யப்பட 5 பழங்குடி மக்களின் உறவினர்களையும், தருமபுரி மாவட்டம் அரூர்  வட்டம் கொலை செய்யப்பட 7 பேரின் உறவினர்களையும் அழைத்து வந்திருந்தனர். அதனால் அதுவே கொலை செய்யப்பட 20 தமிழர்களில்,18 பேரின் உறவினர்களை அங்கே கொண்டுவந்து நிறுத்திவிட்டார்கள்.இதுவே ஆந்திரத்து ஊடகங்களுக்கும், காவல்துறைக்கும் பெரும் அதிர்ச்சியாக போய் விட்டது. அதனால் அவர்கள் "ஆடிப்போய் விட்டார்கள்".

      நேற்று ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் "புகார் கொடுத்த முனியம்மாளை   " நேரில் அழைத்து சென்று "சித்திரவதை செய்து தனது கணவர் கொலை செய்யப்பட்டுள்ளார்" என்றும், அதனால் மீண்டும் "பிணக்கூறு ஆய்வு" செய்யவேண்டும் என்றும் மனு கொடுத்தனர்.திங்கள் கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் பாலு தொடுத்திருந்த "மறு பிரேத பரிசோதனை" வழக்கில், ஆந்திர உயர்நீதிமன்றத்தை அணுகவும் என்று நீதியரசர் கொடுத்த தீர்ப்பினால் அவர் அங்கே செவ்வாய்கிழமை அணுக வேண்டி வந்தது.அதேசமயம் ஏற்கனவே ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் "ஆந்திர சிவில் உரிமைக் குழு" போட்ட வழக்கு இருப்பதால் அதில் "முனியம்மாளின் புகாரை" அடிப்படையாக வைத்து " 302 வது பிரிவின் கீழ்" வழக்கு பதிவு செய் என நீதிமன்றம் காவல்துறைக்கு "கட்டளை" இட்டிருந்தது. அதையொட்டி இன்று நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

                     இன்று[15-04-2015] சந்திரகிரி காவல் நிலையம் சார்பாக ஆந்திர உயர்நீதிமன்றம் முன்பு முன்வைக்கப்பட்ட "முதல் தகவல் அறிக்கையில்" "கொலைகளும், கடத்தல்களும்" நடைபெற்றதற்கான "குற்றப் பிரிவுகளை" பதிவு செய்து முன்வைத்தனர். அதாவது "பிரிவு எண் 302, பிரிவு எண் 364-இந்திய தண்டனை சட்டம்-341 இன்கீழ் " என்று  "குற்ற வழக்கு" பதிவு செய்யப்பட்டதை  அறிவித்துள்ளனர். இது "ஆந்திர காவல்துறையினர் மீது அதாவது செமம்ரக்கடத்தல் தடுப்பு பிரிவு அதிரடிப்படையினர் மீது" என்பதாக வழக்காக பதிவு ஆகியுள்ளது.இதுவரை ஆந்திரா "எத்தனையோ போலி மோதல் சாவு வழக்குகளை கண்டுள்ளது" என்றும் ஆனால் இதுவரை "இப்படி காவல்துறையின் மீதே கொலை,மற்றும்கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டதில்லை" என்றும் ஆந்திர சிவில் உரிமைக் குழு செயலாளர் தோழர் வழக்கறிஞர் சந்திரசேகர் நம்மிடம் தொலைபேசியில் கூறினார்.

     இது மனித உரிமை போராளிகளுக்கு கிடைத்த முதல் "வெற்றி" என்றால், பா.ம.க.வினர் முனியமமாள்  மூலம் தொடுத்துள்ள வழக்கு நாளை வருகிறது.. அது "இரண்டாவது உடற்கூறு ஆய்வு" கோரிக்கையைக் கொண்டது. அதுவும் தர்மபுரியை சேர்ந்த கொலை செய்யப்பட 7 பழங்குடிமக்களின் உடல்கள் ஏற்கனவே"எரிக்கப்பட்ட நிலையில்" மற்றும் சேலத்தை ஒருவரின் உடலும் எரிக்கப்பட்ட நிலையில்,மீதமுள்ள திருவண்ணாமலையை சேர்ந்த 12 பேரின் உடல்களாவது அந்த "மறு உடற்கூறு ஆய்வுக்கு" உட்பட வேண்டும் என எதிர்பார்ப்போம்.

திருப்பதி கொலைகள்-நியாயம் கேட்டோம். வழக்கு போட்டார்கள்.

திருப்பதி கொலைகள்-நியாயம் கேட்டோம். வழக்கு போட்டார்கள்.
---------------------------------------------------------------------------------------------------
     தமிழ் தொழிலாளர்களை "காக்கை,குருவி" போல சுட்டுக் கொன்ற  ஆந்திர காவல்துறையினரையும், வனத்துரையையும்  நேரில் சந்தித்து "கேள்விகள்" கேட்க "உண்மை அறியும் குழு" முடிவு செய்தது. ஏப்ரல் 11 ஆம் நாள் சனிக்கிழமை திருப்பதியில் உள்ள "சேஷாசலம் ரிசர்வ் காடுகளில்" ஏப்ரல் 7ஆம் நாள் அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்ட 20 தமிழ்தொழிலாளர்கள் கிடந்த இடத்தை "பார்வையிட்டு" குறிப்புகளுடன் அன்று மதியம் திரும்பிய "உண்மையறியும் குழு"வினர் மாலை நாலு மணிக்கு "ஊடகவியலாளர் சந்திப்பு" இருக்கிறது என்று ஏற்பாட்டாளர்கள் கூறியவுடனேயே, வன்முறையை செலுத்திய தரப்பினரான "காவல்துறை,மற்றும் வனத்துறை"அதிகாரிகளை சந்தித்து அவர்களது தரப்பு செய்திகளை எடுப்பது முக்கியமாயிற்றே? என்ற வினா அந்த குழுவின் "திட்டமிடல் கூட்டத்தில்"எழுந்தது. அதை ஒட்டி "ஒவ்வொரு மனித உரிமை அமைப்பிலிருந்தும்,அல்லது மாநிலங்களிலிருந்தும்" ஒரு பிரதிநிதி கொண்ட ஒரு குழு "அரசாங்க அதிகாரிகளை" சந்தித்து பேசிவிட்டு, கருத்து எடுத்துக் கொண்டு வருவது என்று முடிவு செய்தோம்.அதுநேரம் தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த "மக்கள் சிவில் உரிமைக்கழகம்", " மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்" தவிர, " சி.பி.சி.எல். என்ற சிவில் உரிமை பாதுகாப்பு குழு" தோழர்கள் வழக்கறிஞர் கேசவனும்,முருகனும் வந்துவிட்டார்கள்.

             எல்லோரும் திருப்பதி தேவஸ்தானம் நடத்தும் "வைஷ்ணவ நிவாசம்" என்ற பக்தர்கள் பெரும் அளவில் வந்து தங்கும்,விடுதியில்,ஒரு "டார்மன்றி என்ற பலர் ஓய்வெடுக்கும் பொது அறை" யில் கூடினோம். அங்குதான் திட்டமிடலுக்காக விவாதித்தோம்.   குழுவை வழிநடத்திய வழக்கறிஞர் கிராந்தி சைதன்யா, தங்களது "ஆந்திரபிரதேச சிவில் லிபர்டி குழு"சார்பாக அதன் செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகர், டில்லி பி.யு.டி.ஆர். சார்பாக அஜிதா, ஆந்திர மாநில எச்.ஆர்.எப். என்ற மனித உரிமை மன்றம் சார்பாக கிருஷ்ணா, தமிழ்நாடு பி.யு.சி.எல்.சார்பாக டி.எஸ்.எஸ்.மணி [நான்] மற்றும் மும்பை டாடா இன்ஸ்டிடுட் சட்டக் கல்லூரி மாணவிகள் இருவர், மற்றும் தெலுங்கானா,ஆந்திரா சிவில் லிபர்டி கம்மிடீ தோழர்கள் என சிலரை அரசாங்க அதிகாரிகளை சந்திக்க தனி வாகனத்தில் அனுப்பி வைத்தார்.நாங்கள் வனத்துறை அலுவலகம் தேடிச் சென்றோம்.அங்கே அந்த வளாகத்திற்குள்ளேயே "செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை" டி.ஐ.ஜி.அலுவலகமும் இருந்தது. அந்த டி.ஐ.ஜி. பெயர் காந்தா ராவ். அவர்தான் "20 தமிழ் தொழிலாளர்களை"சுட்டுக் கொன்றதை நியாயப்படுத்தி, ஊடகங்களுக்கு அறிக்கையும், நேர்காணலும் கொடுத்தவர்.

            அந்த டி.ஐ.ஜி.காந்தாராவை சந்திக்க அவரது அலுவலகம் சென்றோம்.அதன் வாசலிலேயே நின்றுகொண்டிருந்த "காக்கி உடுப்பு போடாத காவலர்கள்" டி.ஐ.ஜி. அங்கே இல்லை எனவும், நீங்கள் யார் என்றும் கேட்டு முறையாக உளவு கூற குறித்துக் கொண்டனர். அந்த வளாகத்திற்குள் இருந்த அல்லது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை ஆராய்ந்ததில், அனைத்தும் "தமிழ்நாட்டு எண்களை " கொண்டவையாக இருந்தன. அதாவது "செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்களை பறிமுதல் செய்ததில்,எஞ்சி நிற்பது தமிழ்நாட்டு வாகனங்கள மட்டுமே" என்று எண்ணத் தோன்றியது. .அதற்குள் எங்களுக்கு "வன இலாக்கா அதிகாரி"இருக்கும் அலுவலகத்தை டி.ஐ.ஜி.அலுவலக காவலர்கள் காட்டினார்கள்.அந்த அலுவலகம் " ஆராய்ச்சி நிலையம்" என்ற பெயருடன் நின்றது.அதற்குள் செல்வதற்கு முன்பே பலகையில் "வன இலாக்கா அதிகாரிகளின் பெயர்களை பொறித்திருந்தார்கள்.அதில் "ரவிக் குமார் ஐ.எப்.எஸ். என்றும் பொது தகவல் அதிகாரி- ஸ்ரீனிவாசலு எஸ்.எப்.எஸ். என்றும்" எழுதியிருந்தது. அதில் உள்ள ஸ்ரீனிவாசலு மட்டுமே எண்கள் குழு தலைவர் சந்திரசேகருக்கு  தொலைபேசியில் கிடைத்தார். அவரிடம் கேட்டுக் கொண்டு, இரண்டு நிமிடத்தில் வாருங்கள் என்றதால் அலுவலகம் உள்ளே சென்றோம்.

       அங்கே வன இலாக்கா அதிகாரி ஸ்ரீனிவாசலு வந்தார்.நாங்கள் அனைவரும் அமர " நீண்ட வடிவில் பெரிய மேசை" இருந்தது. இருக்கைகளும் இருந்தன.அனைவரும் அமர்ந்தோம். எடுத்த உடனேயே ஸ்ரீனிவாசலு  தெலுங்கிலேயே பேசினார்.நீங்கள் எல்லோருமே "வன இலாக்காவின் விதிகளை மீறி அனுமதி இன்றி காட்டிற்குள் சென்றுள்ளீர்கள் " என்று எங்கள் மீதே "பழியை" சுமத்தினார். "ரிசர்வ் காடுகளில் அனுமதி இன்றி சென்றால் பிணையுடன் கூடிய வழக்கு, சரணாலயத்தில் அனுமதி இன்றி நுழைந்தால் பிணை கொடுக்காத வழக்கு,தேசிய பூங்காவில் அதைவிட கடுமையான வழக்கு" என்று பட்டியல் போட்டு "மிரட்ட" பார்த்தார்."தமிழ்நாட்டிலிருந்து நேற்று வந்த சிவகாமி ஐ.எ.எஸ். அனுமதி கேட்டார்.கிடைக்கவில்லை. அதனால் அவர் வனத்திற்குள் செல்லவில்லை" என்று கூறினார். அவருக்கு தோழர்கள் சந்திரசேகரும், கிருஷ்ணாவும்" தெலுங்கிலேயே பதில் கூறிக் கொண்டிருந்தனர். டில்லி அஜிதாவும் தெலுங்கில் பதில் கூறினார். தெலுங்கு தெரியாத நாங்கள் முழித்துக் கொண்டிருந்தோம்.

             அடுத்து அவர் "நீங்கள் வந்த விவகாரத்திற்கு வாருங்கள்" என்றார்.அதாவது இதுவரை பேசியது "உங்களை சும்மா மிரட்ட" என்று அர்த்தமா? நம்மவர்கள் 20 தமிழ் தொழிலாளர்களை சுட்டுக் கொன்றது பற்றி கேள்விகளை தொடுத்தனர். அவர் அது "அதிரடிப் படையின் பணி" என்றார். வன இலாக்காவிற்கு இணைந்து செயல்படும் தன்மை உண்டு அல்லவா?" என்றனர். அதை அவர் மறுக்க முடியவில்லை. உடனேயே தான் 2011 ஆகஸ்ட் மாதம்தான் இங்கு பணிக்கு வந்ததாக கூறினார். அடுத்து "2013 ஆம் ஆண்டு  டிசம்பர் மாதம் சிறீதரன் உட்பட இரண்டு வன அதிகாரிகள் கல்லால் அடித்து கொல்லப்பட்டபோது" மனித உரிமை ஆர்வலர்களான நீங்கள் ஏன் வரவில்லை? என்று வினா எழுப்பினார். அதற்கு சந்திரசேகரும், கிருஷ்ணாவும் நல்ல பதிலடி கொடுத்தனர்." 2013 டிசம்பரில் வன அதிகாரிகள் கொலை செய்யப்பட்ட இரண்டு நாட்களிலேயே 430 பேரை காவல்துறை கைது செய்தது. தொடர்ந்து சிறையில் இருந்த 340 பேரில் தமிழக தொழிலலார்கலான 310 பேர் இன்னமும் "பிணை கிடைக்காமல்" சிறையிலேயே உள்ளனர்.தெலுங்கு தொழிலாளர்கள் 30 பேருக்கு மட்டும் பிணை கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த 20 தமிழ் தொழிலாளர்கள் கொலை செய்யப்பட்டதற்கு யாராவது இதுவரை காது செய்யப்பட்டுல்லார்களா? இதுபோன்ற அந்நியாயம் நடப்பதால் இப்போது மனித உரிமை ஆர்வலர்கள் வரவேண்டிய தேவை உள்ளது".என்றனர். அதற்குள் ஒரு தொலைபேசி வர ஸ்ரீனிவாசலு அதில் எதிர்ப்புறம் உள்ளவரிடம் "சார்....சார்,....சார்," என்றே பேசினார். அதாவது எதிர்புறமிருந்து, யாரோ உயர் அதிகாரி சில கட்டளைகளை இடுகிறார்  என்று புரிய முடிந்தது. எல்லோரிடமும் தாள்களை கொடுத்து உங்கள் பெயர் மற்றும் முகவரிகளை கொடுங்கள் என்று அவர் கேட்டார். நாங்களும் எழுதிக் கொடுத்தோம்.அதில் 9 நகரங்களில் இருந்து வந்துள்ள ஆண்களும், பெண்களும் இருக்கிறோம் என்றும்,"இப்படி படித்தவர்கள் அனுமதி பெறாமல் வனத்திற்குள் செல்வது குற்றமில்லையா?" என்றும் அவர் பொடி வைத்து பேசினார்.

         இப்படி பதில்களை கூறி வரும்போதே சந்திரசேகரையும், கிருஷ்ணாவையும் "ஊடகவியலாளர் கூட்டத்திற்கு" உடனடியாக வரச் சொல்லி, தொலைபேசி அழைப்புகள் வந்தன.அவர்களும் தெலுங்கில் விளக்கம் கூறிக் கொண்டே எழுந்திருக்க, நாங்கள் எல்லோரும் கிளம்ப எழுந்தோம். அப்போது ஸ்ரீனிவாசலு "அமருங்கள். உங்களுக்கெல்லாம் தேநீர் வருகிறது" என்று கூறி எங்களது பயணத்திற்கு தடை போட்டார். நாங்கள் எல்லோரும்  புறப்பட்டு எங்கள் வாகனத்திற்கு வந்துவிட்டோம். வெளியே வரும்போது, நாங்கள் வரும்போது "ஒ" வென திறந்திருந்த வளாக நுழைவில் உள்ள  பெரிய இரும்பு கதவு, இப்போது "மூடப்பட்டு மூன்று காவலர்கள்" நின்று கொண்டிருந்தார்கள். எங்கள் வாகனம் வெளியே செல்ல "திறவுங்கள்" என்று நாங்கள் குரல் கொடுத்த பின்னால் "யோசித்துக் கொண்டே திறந்தார்கள்".நாங்களும் "ஊடகவியலாளர்கள் கூட்டம்" நடக்கும் ஊடகவியலாளர் சங்க அரங்கத்திற்கு வந்தடைந்தோம். வந்த உடனேயே ஊடகக்காரர்கள் எங்களிடம்"உங்கள் மீது அத்துமீறி நுழைந்த வழக்கு போட்டிருக்கிறார்களாமே ?" என வினவினர். அதாவது அத்தகைய செய்தியை அதற்குள் பரப்பி,"ஊடகவியலாளர் கூட்டத்தின் பொருளையே மாற்றிவிடலாம்" என அவர்கள் எண்ணியிருக்கலாம்.

              ஊடககாரர்களும் நாங்கள் கொடுத்த செய்திகளைத் தாண்டி சில கேள்விகளை கேட்டார்கள். அதில் 2013 ஆம் ஆண்டு வன அதிகாரிகள் கொலை செய்யப்பட்டதும் அடங்கும். அதற்கு வன அதிகாரியிடம் கூறிய பதிலையே கடும் கோபத்தில் சந்திரசேகர் கூறினார். .அதன்பிறகு "இது இரண்டு மாநிலத்திற்கும் உள்ள பிரச்சனையா? எதற்காக தமிழ்நாட்டில் ஆந்திர பவனையும், ஆந்திர பேருந்துகளையும் தாக்குகிறார்கள்?" என்று கோபமாக சிலர் கேட்டனர்.அவர்களுக்கு வேறு சக்திகளின் செல்வாக்கு கூட இருந்திருக்கலாம். ஆனாலும் பொறுமையாக நம்மவர்கள் பதில் கூறினர்." சந்திரசேகர், கிருஷ்ணா,டி.எஸ்.எஸ்.மணி,அஜிதா,ராஜு,முருகன்".ஆகியோர் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளாக அமர்ந்து அந்த கூட்டத்தை நடத்தினோம்.நாங்கள் விடுதிக்கு திரும்பி "டார்மன்ரியில்"அமரும்போது, விடுதியின் "கண்காணிப்பு துறை" மேலிருந்து உத்தரவு வந்துள்ளதாகவும், நாங்கள் உடனடியாக அறையை காலி செய்யவேண்டும் என்றும் கேட்டுள்ளனர் என கிராந்தி சைதன்யா கூறினார். அதுவே "அரசுத்துறை உண்மையறியும் குழு" மீது நெருக்கடியை கொடுக்கத் தொடங்கி விட்டது என்று புரிந்துகொள்ள எதுவாக இருந்தது  அன்று இரவே எங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என்பதை அறிந்தோம்.

     இத்தனையும் ஏன் நடந்தது? என்று உணரும்போது, "காட்டிற்குள் சனிக் கிழமை சென்று ஆய்வு செய்ததை, பலப்பல ஊடகங்கள் குறிப்பாக பல தெலுங்கு, தமிழ் தொலைக் காட்சிகள்" பிரபலப்படுத்தி விட்டனர். அதில் எங்களது நேர்காணல்களும் இருந்தன.20 அப்பாவி தொழிலாளர்களை கொன்றதில் கிளம்பிய அனுதாபம், உண்மையறியும் குழு மூலம், மனித உரிமை ஆர்வலர்கள், அதுவும் பிரபலமாக  அறிந்தவர்கள்  சென்று ஆய்வு செய்து, சம்பவ இடத்தில நின்று கொண்டே பேசி, அம்பலப்படுதுகிரார்களே? என்ற ஆதங்கமும், ஹைதராபாத் உயர்நீதிமன்ற வழக்கில்,காவல்துறைக்கு நீதியரசர் கொடுத்த உத்தரவும், அவர்களை எரிச்சலடைய செய்திருக்கும்.  அதன்விளைவே இந்த "அறையை காலி செய்ய சொல்வதும், வழக்கு போடுவதும்" என்பதை அறிய முடிந்தது.

           அதுமட்டுமின்றி, மீண்டும் மாலை 4 மணிக்கு ஊடகவியலாளர் கூட்டத்திற்கு, 30 க்கு மேற்பட்ட காட்சி ஊடகங்களும், பல அச்சு ஊடகங்களும் திரண்டு வந்து நிற்பதை கேள்விப்பட்ட டி.ஐ.ஜி. யின் உத்தரவே  எங்களுடன் பேசிக் கொண்டிருந்த வன அதிகாரி ஸ்ரீனிவாசலுவிற்கு தொலைபேசி மூலம் வந்தது என்பதையும், அதை ஒட்டியே எங்களை ஊடகவியலாளர் கூட்டத்திற்கு செல்லவிடாமல் தடுக்க "தேநீர் கொடுத்தல், வெளிக் கதவை மூடுதல்" ஆகிய தந்திரங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன என்பதையும் நாங்கள் உணர முடிந்தது. அதை நிருபிக்கும் வகையில் மறுநாள் எங்கள் 12 பேர் மீது மட்டும், அதாவது வன அதிகாரியை சந்தித்து பெயர் கொடுதோர் மீது மட்டமே போடப்பட்ட வழக்கு பற்றி ஊடகங்களுக்கு செய்தி கொடுத்த அதிகாரிகள்,ஸ்ரீனிவாசலு,ரவிகுமார்,ஆகியோர் டி.ஐ.ஜி.காந்தாராவ் பெயரை கூறியிருந்தார்கள்.

      வழக்குகள் நமது "திருப்பதி பயணத்தை அரசு ஆவணமாக்க  உதவும்" என்ற புரிதலை நாங்கள் பரிமாறிக் கொண்டோம். வாகன ஓட்டுனர் கூட தங்களது வாகனம் மாறி,மாறி,படம் எடுக்கப்பட்டது பற்றி சிறிது கலக்கமடைந்தார். ஆனாலும் மறுநாள் காலை ஞாயிறு அன்று 18 இறந்தோரின் உறவினர்களை அழைத்து வந்த பா.ம.கவினருக்கும், அங்கே காவல்நிலையம் முன்பு கூடி இருந்த ஊடகவியலாளர்களுக்கும் இணைப்பை ஏற்படுத்துவதிலும், அவர்களுக்கு உதவுவதிலும், ஆந்திர சிவில் லிபர்டி குழ தலைவர்களையும், பா.ம.க.தோழர்களையும் அறிமுகம் செய்விப்பதிலும் எங்களது பணியை செவ்வனே முடித்து விட்டு திரும்பினோம்.