Friday, September 11, 2015

தமிழ் எம்.பி.களுக்கு இலங்கையில் பேச தைரியம் இருக்குமா?

தமிழ் எம்.பி.களுக்கு  இலங்கையில் பேச தைரியம் இருக்குமா?
----------------------------------------------------------------------------------------------
       இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு  எம்.பி.க்களில்,குறிப்பாக தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் தைரியமாக அல்லது நேர்மையாக அல்லது வாக்குகள் பெறுவதற்கு கொடுத்த வாக்குகளின்படி, தமிழர்கள் மீது நடத்தப்பட்ட "இன அழிப்பு போரில், நடந்த போரகுற்றங்களை விசாரிக்க, ஐ.நா. மனித உரிமை கவுன்சில் உரூவாக்கிய "மூவர் விசாரணைக் குழு" அறிக்கையின் அடுத்த கட்டமாக  அதை அமுலாக்க " பன்னாட்டு பங்கேற்புடனான தொடர் செயல்பாட்டு       பொறியமர்வை" ஏற்படுத்த நாடாளுமன்றத்தில் பேசுவதும், இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்பதும், சிங்கள சாதியான "உள்நாட்டு விசாரணை மட்டுமே" என்பதை எதிர்க்கவும் செய்வார்களா?

              இந்தப் பணியை செய்ய எதிர்க்கட்சி தலைவராக் பொறுப்பேற்றுள்ள இரா.சம்பந்தனோ, சுமந்திரனோ, துணை எதிர்க் கட்சி தலைவராகியுள்ள மாவே   சேனாதிராஜாவோ, செய்ய மாட்டார்கள் என்பதாக ஒரு பொதுக் கருதது இருக்கிறது. வெளியே பேசிவரும், டெலோ உறுப்பினர்களோ, பிளாட் உறுப்பினரோ, நாடாளுமன்றத்திலும் பேசுவார்கள் என்பதும் சந்தேகமில்லை. ஆனால், கிளிநொச்சி சிரிதரனோ, மற்ற தமிழரசுக் கட்சி உறுப்பினர்களோ பேசுவார்களா? மலையகத்தை சேர்ந்த இன்றைய அமைச்சர்களான மனோ கணேசனோ, ராதாகிரிஷ்நனோ  பேசுவார்களா? அழுத்தம் கொடுப்பார்களா? என்ற கேள்வி கேட்கப்பட்டே ஆகவேண்டும்.மனோ கணேசன் ஏற்கனவே நடந்த போரில் " காணமல் போனவர்கள் பற்றியும், வெள்ளை வாகன கடத்தல் பற்றியும் ஐ.நா.விற்கும் பன்னாட்டு சமூகத்திற்கும் விடாப்பிடியாக எடுத்து சென்றவர்" என்பதால் இப்போது "பன்னாட்டு பொறியமைவு"வேண்டும் என்று அவர் கேட்டால் மட்டுமே அது சரியான தொடர்ச்சியாக இருக்கும்.

     எப்படி அரசாங்கத்தில் உட்கார்ந்துகொண்டு அரசாங்கத்தின் ஆட்களுக்கு எதிரான முடிவை பேசமுடியுமா? என்று கேட்பீர்களானால்,அங்கெ சிங்கலதிற்குள் இப்போது என்ன நடக்கிறது? இன்று ரணில்விக்ரமசிங்கே என்ற பிரதம அமைச்சரின் இந்திய பயணத்தை ஒட்டி, பிரதமர் அங்கே சென்று, இந்தியாவுடன் வர்தக உறவுக்காக "சீபா" என்ற ஒப்பந்தந்தில் கையெழுத்து போட்டாரென்றால் அதை நாங்கள் எதிர்ப்போம் என்று, இலங்கை அமைச்சர் சம்பிக்க ரணவக்க பேசியுள்ளார். சிங்கள எம்.பி.களுக்கு உள்ள அந்த "தைரியம்" தமிழர்களுக்கு வருமா?

No comments:

Post a Comment