Friday, September 11, 2015

தமிழ் எம்.பி.களுக்கு இலங்கையில் பேச தைரியம் இருக்குமா?

தமிழ் எம்.பி.களுக்கு  இலங்கையில் பேச தைரியம் இருக்குமா?
----------------------------------------------------------------------------------------------
       இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு  எம்.பி.க்களில்,குறிப்பாக தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் தைரியமாக அல்லது நேர்மையாக அல்லது வாக்குகள் பெறுவதற்கு கொடுத்த வாக்குகளின்படி, தமிழர்கள் மீது நடத்தப்பட்ட "இன அழிப்பு போரில், நடந்த போரகுற்றங்களை விசாரிக்க, ஐ.நா. மனித உரிமை கவுன்சில் உரூவாக்கிய "மூவர் விசாரணைக் குழு" அறிக்கையின் அடுத்த கட்டமாக  அதை அமுலாக்க " பன்னாட்டு பங்கேற்புடனான தொடர் செயல்பாட்டு       பொறியமர்வை" ஏற்படுத்த நாடாளுமன்றத்தில் பேசுவதும், இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்பதும், சிங்கள சாதியான "உள்நாட்டு விசாரணை மட்டுமே" என்பதை எதிர்க்கவும் செய்வார்களா?

              இந்தப் பணியை செய்ய எதிர்க்கட்சி தலைவராக் பொறுப்பேற்றுள்ள இரா.சம்பந்தனோ, சுமந்திரனோ, துணை எதிர்க் கட்சி தலைவராகியுள்ள மாவே   சேனாதிராஜாவோ, செய்ய மாட்டார்கள் என்பதாக ஒரு பொதுக் கருதது இருக்கிறது. வெளியே பேசிவரும், டெலோ உறுப்பினர்களோ, பிளாட் உறுப்பினரோ, நாடாளுமன்றத்திலும் பேசுவார்கள் என்பதும் சந்தேகமில்லை. ஆனால், கிளிநொச்சி சிரிதரனோ, மற்ற தமிழரசுக் கட்சி உறுப்பினர்களோ பேசுவார்களா? மலையகத்தை சேர்ந்த இன்றைய அமைச்சர்களான மனோ கணேசனோ, ராதாகிரிஷ்நனோ  பேசுவார்களா? அழுத்தம் கொடுப்பார்களா? என்ற கேள்வி கேட்கப்பட்டே ஆகவேண்டும்.மனோ கணேசன் ஏற்கனவே நடந்த போரில் " காணமல் போனவர்கள் பற்றியும், வெள்ளை வாகன கடத்தல் பற்றியும் ஐ.நா.விற்கும் பன்னாட்டு சமூகத்திற்கும் விடாப்பிடியாக எடுத்து சென்றவர்" என்பதால் இப்போது "பன்னாட்டு பொறியமைவு"வேண்டும் என்று அவர் கேட்டால் மட்டுமே அது சரியான தொடர்ச்சியாக இருக்கும்.

     எப்படி அரசாங்கத்தில் உட்கார்ந்துகொண்டு அரசாங்கத்தின் ஆட்களுக்கு எதிரான முடிவை பேசமுடியுமா? என்று கேட்பீர்களானால்,அங்கெ சிங்கலதிற்குள் இப்போது என்ன நடக்கிறது? இன்று ரணில்விக்ரமசிங்கே என்ற பிரதம அமைச்சரின் இந்திய பயணத்தை ஒட்டி, பிரதமர் அங்கே சென்று, இந்தியாவுடன் வர்தக உறவுக்காக "சீபா" என்ற ஒப்பந்தந்தில் கையெழுத்து போட்டாரென்றால் அதை நாங்கள் எதிர்ப்போம் என்று, இலங்கை அமைச்சர் சம்பிக்க ரணவக்க பேசியுள்ளார். சிங்கள எம்.பி.களுக்கு உள்ள அந்த "தைரியம்" தமிழர்களுக்கு வருமா?

விக்னேஸ்வரனின்பதிலில் ,நீதி நெருப்பாகிறது

விக்னேஸ்வரனின்பதிலில்,மாவே,சம்பந்தன்,சுமந்திரன் தோற்க,நீதி நெருப்பாகிறது
----------------------------------------------------------------------------------------------------------------------------------
    இன்று செப்டம்பர் 11 ஆம் நாள். இலங்கை அரசிடம்  ஐ.நா.மனித உரிமை கவுன்சில், தங்களது 2014 ஆம் ஆண்டின் தீர்மானப்படி[ இந்தியா புறக்கணிதத தீர்மானம்]  இலங்கையில் நடந்த "போர்குற்ற விசாரணை"க்கு "பன்னாட்டு விசாரணை" ஒன்றை  செயல்படுத்த," மூன்று பேர் கொண்ட குழு" வை நியமித்ததை ஒட்டி, மூவர் குழு கொடுத்துள்ள "அறிக்கையை"  கையளிக்கிறது. இந்த நேரத்தில் இலங்கை வெளிவிவ்கார அமைச்சரான மங்கள சமவீரா, தன்னை சந்தித்த "மனித உரிமை அமைப்பின்" ஆர்வலர்களிடம்," ஐ.நா.போர்குற்ற விசாரணை அறிக்கையின் அடிப்படையில், இன்றைய இலங்கை அரசு, "ஒரு உள்நாட்டு பொறியமைவை ஏற்படுத்தி, அதன் மூலம் உள்நாட்டு நீதியரசர்களைக் கொண்ட நீதிமன்றத்தை அணுகி, போர்குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை வாங்கி தரத் தயாராக இருக்கிறது" என்று கூரியுள்ளார்..

      அதாவது, தெளிவாக, "பன்னாட்டு நீதியரசர்களையோ, பன்னாட்டு  நீதிமன்றதையோ, அணுக விடமாட்டோம். பன்னாட்டு சக்திகளை உள்நாட்டு விசாரணையில் தலையிட அனுமதியோம். ஐ.நா. வின் விசாரணை செய்த மூன்று பேர் கொண்ட குழுவை, உள்நாட்டு விசாரணையில் தலையிட விடமாட்டோம்" என்றும் தெளிவாக கூறியுள்ளார். அதாவது மஹிந்த ராஜ பக்செவின் அதே முடிவில்தான் மைத்திரிபால சிறிசேன அரசும் உள்ளது. அல்லது ரணில் விக்ரமசிங்கேயும் இருக்கிறார் எனபது தெளிவாக் புரிகிறது.இந்த செய்தியை  வடக்கு மாகான சபையின் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் "தினக்குரல்" இதழுக்கு கொடுத்த நேர்காணலில் கூறியுள்ளார். அதுபற்றி கூறும் முன்னாள் இலங்கை உயர்நீதிமன்றத்தின் நீதியரசர் விக்னேஸ்வரன், " இலங்கையின் உள்நாட்டு விசாரணையை நடத்தும் இலங்கையர்கள்,நிச்சயமாக தங்கள் நாட்டு ராணுவத்தினர் மீது போர் குற்றங்களை  நிரூபிக்க போவதில்லை." என்று கூறுகிறார்.

                     மேலும் விக்னேஸ்வரன், "ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள சில ஏக்கர்  நிலங்களை விடுவிப்பார்கள். சில கைதிகளை விடுவிப்பார்கள். காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதாக கூறுவார்கள்.சிறிய அளவில் ராணுவத்தை குறைப்பார்கள்.இவையெல்லாம் அவர்கள் செய்யவேண்டிய கடமைகள. ஆனால் ஆபத்தான போர்குற்றங்கள் என்னவாயிற்று? என்றுமே எந்த இலங்கை நீதியரசரும், ராணுவத்திடம் குற்றம் காண மாட்டார்." என்றும் விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

     இப்படியாக அங்குள்ள சூழல் இருக்கும்போது, ஊடகவியலார கேட்ட  கேள்வி,"உங்கள் மீது  தமிழரசுக் கட்சி தலைமை நடவடிக்கை  எடுக்கபோகிறார்களே?" என்று கேட்டதற்கு, " தான் பன்னாட்டு விசாரணையை நடத்தி பாதிக்கபட்டோருக்கு உண்மையையும், நீதியையும் வாங்கி தருவேன்  என்ற வாக்குறுதியின் மூலம் வடக்கு மாகாண சபைக்கு மக்களால தேர்வு    செய்யப்பட்டவன்.நான் கடந்த 23 மாதங்களாக  இந்த மக்களுடன் வாழ்ந்து, அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவற்ற குறைந்த பட்ச வாய்ப்புகளுடன் போராடி வருகிறேன். இந்த நேரத்தில் தமிழரசுக் கட்சியினர் எடுக்கும் நடவடிக்கை பற்றி நான் கூற என்ன இருக்கிறது? அவர்கள் தாங்கள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முயல் வேண்டும் " என்றார்.

         தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவே சேனாதிராஜா, இலங்கை எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன், சுமந்திரன் உடன் சேர்ந்து, இலங்கை அரசின் இந்த "தமிழர் விரோத போக்கை" ஆதரித்து, செயல்படுகிறார்கள். அவர்கள் மீதும் தமிழ் மக்கள் கடும் கோபத்துடன் இருக்கிறார்கள். மக்கள் போராட்டம் வெடிக்கும் சாத்தியங்களே உள்ளன. அமெரிக்காவும், இலங்கை அரசின் நிலைகளுக்கு துணை போய வருவது தெரிகிறது. பன்னாட்டு விசாரணை இன்னமும் முடிவடையவில்லை என்பதையும், முதல் கட்ட விசாரணையை பன்னாட்டு குழு இலங்கை நாட்டிற்குள் சென்று நடத்த மகிந்தா அரசாங்கம் அனுமதிக்கவில்லை . ஆகவே அது இரண்டாம் தரப்பு சக்திகளிடம் செய்திகளைத்  திரட்டித்தான் அறிக்கை தயார் செய்துள்ளனர்..ஆகவே மீண்டும் இப்போது, புதிய ஆட்சியாளர்கள் புதிய சிந்தனையுடன் வந்திருக்கிறார்கள் என்பது உண்மையானால், பன்னாட்டு விசாரணை குழுவை இப்போதாவது இல்ங்கை தீவிற்குள் அனுமதித்து, விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும். விசாரணையில், பன்னாட்டு நீதியரசர்களை அனுமதிக்க வேண்டும். விசாரணையில், பன்னாட்டு வழக்கறிஞர்கள் இலங்கை வந்துகூட, நீதிமன்றத்தில் வாதம் செய்ய அனுமதிக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போதுதான் "உண்மையான போர்குற்றம் ஒரு இன அழிப்பே என்பதும், அதை செய்த சிங்களம் ஆளும் கட்சியாகவும், எதிர்கட்சியாகவும் அமர்ந்திருப்பதும்" உலகுக்கு தெரியவரும்.

    இபபோது இன்று { 11-09-2015]காலை முதல் மலை வரை இலங்கையில் "தமிழரசுக் கட்சியின்" தலைமைக் குழு கூடி விக்னேஸ்வரன் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றி விவாதித்து வருகிறார்கள். விக்னேஸ்வரன் தேர்தல் நேரத்தில், "யாருக்கும் பரப்புரை செய்யமாட்டேன்" என்று கூறினார். சொல்லில் மட்டுமின்றி, செயலிலும் காட்டுபவர்களை தேர்வு செய்யுங்கள் என்றார் அதை கஜேந்திரகுமார் தனக்கு சாதகம் என்று பரப்புரை செய்தார். "வாக்குகளை சிதறாமல் போடுங்கள்" என்று விக்னேஸ்வரன் கூறியதை இதே தமிழரசுக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மூலம், அது தங்களைத் தான் குறிக்கிறது என்று கூறி பரப்புரை செய்தனர்.இரு தமிழர் கட்சிகளுமே விக்னேஸ்வரனின் நேர்காணலை "இணையம்" மூலம் தங்களது பரப்புரைக்கு பயன்படுத்தினார்கள்.  ஆனால் இப்போது தங்களுக்கு எதிராக சென்றார் என்று கூறி நடவடிக்கை எடுக்கிறோம் என்கிறார்கள்.

      வருகிற செப்டம்பர் 30 ஆம் நாள் கூடும் ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் இந்த போர்குற்ற அறிக்கை வைக்கப்பட இருக்கிறது. அப்போது  இலங்கையும், அமெரிக்காவும், இந்திய அரசும், ஒரே நிலை எடுக்கலாம். அது "தமிழர்களுக்கு எதிரானது" என்பதை எப்படி கொண்டு செல்ல போகிறோம்?. நமக்கு இருக்கும் வலுவான ஆதாரம் இந்த முறை ஈழம் ம்வுனம் காகக வில்லை. எழுந்து விட்டது. வடக்கு மாகாண சபையின் இந்த ஆண்டு பிபிரவரி 10 ஆம் நாள் தீர்மாணப்படி, 'நடந்துமுடிந்த போர் ஒரு இன  அழிப்பு போரே' என்ற தீர்மானம் இருக்கிறது.  பத்து நாட்கள் முன்னால் விக்னேஸ்வரன் வடக்கு மாகான சபையில் போட்ட தீர்மானம் மூலம், "பன்னாட்டு பொறியமைவு மூலம் ம்ட்டுமே விசாரணையை தொடரமுடியும்" என்பது நிரூபணமாகிறது. உலகின் மனித உரிமை சக்திகள் அல்லது நாடுகள் நேர்மையாக சிந்திக்குமானால், "தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரதிநிதிகளான் வடக்கு மாகான சபையின் தீர்மானங்களை மட்டுமே சார்ந்து இருக்க வேண்டும். அரசியல் போராட்டத்திற்கு வடக்கும், கிழக்கும் இலங்கையில் தயாராகி விட்டன. நாம் அவர்களுக்கு ஆதரவு தரவேண்டும். 

Thursday, September 10, 2015

"ஜெ", நிர்மலா சிதாரமானுக்கு பதில்

உலகமுதலீட்டாளர் சந்திப்பில்,"ஜெ",  நிர்மலா சிதாரமானுக்கு பதில் சொன்னாரா?
--------------------------------------------------------------------------------------------------------------------------
   முதல் நாள் சந்திப்பில், முதல்வர் ஜெயலலிதா தனது தொடக்க உரையில்,நடுவண் அமைச்சர்  நிர்மலா கூறிய செய்தியான " மகாராஷ்டிரா, டில்லிக்கு பிறகு மூன்றாவதாக அந்நிய நேரடி மூலதனம் பெற்றதில், தமிழ்நாடு இருக்கிறது" என்ற பேச்சிற்கு, பதிலுரையாக," உண்மையில் அந்நிய மூலதனம் தமிழ்நாட்டிற்கு இதைவிட அதிகம் வருகிறது. இந்தியாவில் உள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் பலவற்றின் தலைமையகங்கள்,இருக்கும் மாநிலங்களை,தமிழ்நாட்டின் ஒரு குறிப்பிட்ட அளவிலான அந்நிய மூலதனத்துடன் ஒப்பிடுகிறார்கள்." என்று தனது உரையின் இரண்டாவது பாராவிலேயே கூறியுள்ளார்கள். அதாவது  நாம் குறிப்பிட்டு காட்டுவது போல,"வைப்ரன்ட் குஜராத்தை" தமிழ்நாட்டின் மூலதன இறக்குமதியுடன் ஒப்பிடாமல், இந்தியாவிலேயே "யார் அதிக வெளிநாட்டு மூலதனத்தை" ஈர்ததுள்ளார்கள் என்பதை சுட்டிக் காட்டுகிறார்.

     அதாவது மூன்றாவது இடத்தில தமிழ்நாடு என்ற மதிப்பீடே தவறு என்பதையும், மகாராஷ்டிராவின் தலைநகர் மும்பையும், டில்லியின் தலைநகர் டில்லியும், வெளிநாட்டு நிறுவனங்களின் தலைமையகங்களை கொண்டுள்ளது என்பதே அவர்களின் இடங்களில், பல்வேறு வகைகளில் வெளிநாட்டு மூலதனங்கள் வருவது அதிசயமல்ல. ஆனால் தமிழ்நாடு அதையே "தன்னிச்சையாக " சாதித்துள்ளது என்பதை முன்வைக்கிறார். அதன்மூலம் "இந்தியாவை  வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுசெல்ல" யாரால் முடியும் என்பதை, நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய சூழலில் கூறிய, "குஜராத்தின் மோடியா? தமிழ்நாட்டின் லேடியா?' என்ற சொல்லாடலை கூறாமல் கூறுகிறார்.,

               அதன்மூலம் நமக்கு புரியவேண்டிய செய்தியே, " அ.இ.அ.தி.மு.க விற்கும் பா.ஜ.க.விற்கும், இடையே வருகிற 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலில், நேரடி போட்டி இருக்கும் என்பதுதான்..இதில் பா.ஜ.க.விற்கு வேண்டுமானால் "தான் தி.மு.க.வை விட " அதிகமான இடங்களை வெல்லவேண்டும் என்றும், வெல்ல முடியும் எனவும் எண்ணம் இருக்கலாம். அதாவது "தான்தான் அ.இ.அ.தி.மு.க.விற்கு போட்டியாளராக இருக்கவேண்டும்" என்று பா.ஜ.க. எண்ணுகிறது. அதற்கான பெரிய கூட்டணிக்கு முயற்சித்து வருகிறது. ஆனால் அவர்கள் அதிகம் சார்ந்து இருப்பது, "சங்க பரிவாரத்தின்" ஊரகப் பணிகளைத்தான். அதாவது தமிழ்நாட்டில் உள்ள சாதிகளை ஒவ்வொன்றாக  தங்கள் பக்கம் இழுப்பதற்கான பணிகளை" பா.ஜ.க.கணக்கு போட்டு செய்து வருவது அனைவருக்கும் தெரியும்.ஆனால் அ.இ.அ.தி.மு.க.வோ, தனக்கு எதிரியாக தி.மு.க.தான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறது. அதற்கான காரணம் அனைவரும் அறிந்ததே.

     ஆகையால் நடுவண் அரசுக்கும், மாநில ஆட்சியாளர்களுக்கும் உள்ள உறவை, "ஒற்றையாட்சிக்கும், கூட்டமைப்புக்கும்" இடையே உள்ள முரண்பாடான உறவுதான் என்பதை பலரும் புரிந்துகொள்ளவில்லை. தவிரவும், இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து, நடுவண் அரசுக்கு எதிராக,"கூட்டமைப்பு அரசியலை" இன்றைய அ.இ.அ.தி.மு.க. தலைமையான செல்வி.ஜெயலலிதா எடுத்துக் கூறிய அளவுக்கு யாரும் செய்யவில்லை.2014 நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கு முன்பே, "கூட்டுறவுடன் கூடிய கூட்டமைப்பு" என்ற சொல்லாடலை அறிமுகப்படுத்தி, உச்சரித்து வருவது, செல்வி.ஜெயலலிதா மட்டும்தான் என்பதையும் காணத் தவறுகிறார்கள். இந்தியத் துணைக் கண்டத்தில், தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா மட்டும்தான், ஒவ்வொரு நடுவண் அரசின் செயல்களுக்கும், பதில் கொடுத்து,மாநில உரிமைகளை முன் நிறுத்தி வருகிறார்.

        ஆகவே அ.இ.அ.தி.மு.கவுடன், பா.ஜ.க.வை முடிச்சு போட்டு பேசி வருவது, "தற்காலிகமாக முஸ்லிம், கிருத்துவ வாக்குகளை"  அ.இ.அ.தி.மு.க.விற்கு எதிராக மாற்றவும், தி.மு.க.விற்கு சாதகமாக திருப்பவும்  உதவலாமே தவிர , தேர்தல் நேரத்தில் அதுவும் தோற்றுப்போகும். அத்தகைய "பரப்புதல்" அறிவாலயத்திற்கு வேண்டுமானால் இனிப்பாக இருக்கும். உண்மையில் அதற்கான நியாயங்களே இல்லை.

Tuesday, September 8, 2015

உலக முதலீட்டாளர் சந்திப்பு- எதிர்க்கட்சிகளுக்கு விளங்கவில்லையா?


       திமுக வின் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் இந்த உலக முதலீட்டாளர் சந்திப்பு பற்றி ஒரு குண்டை எடுத்து போட்டுள்ளார். அதிமுக ஆட்சியாளர்கள் "சிறிய தொழிலதிபர்களை மிரட்டி, 100 கோடி முதலீடு செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளனர். எனக்கு தகவல் உள்ளது" என்று கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டு உண்மையா? பொய்யா? என்பது அடுத்த விஷயம். ஆனால் இதில் ஒரு உண்மை வெளிவந்துள்ளது. அதாவது "உலக அளவிலான பெரிய முதலீட்டாளர்கள் கலந்துகொண்டு தமிழ்நாட்டிற்கு மூலதனமிட வருகிறார்கள்"என்றும் பல்லாயிரக்கணக்கான கோடிகள் "அந்நிய மூலதனம்" வந்திறங்கினால் ஏன்னாகும்? என்றும் சில சர்ச்சைகள் உள்ளன. வருகின்ற வெளிநாட்டு முதலீட்டாளர்கள் என்பது " ஊடகச் செய்தியாக " ஆகிவிட்டது.  அதுவும் எந்த எந்த நாடுகளிலிருந்து வருகிறார்கள் என்பதும் செய்தியாகி விட்டது. அதனால் அதை " விவாதிப்பது" நமது நோக்கமல்ல. 


        ஆனால், வருகின்ற மூலதனம், இங்கும் "கார்போறேட்களின்" செல்வாக்கை கூட்ட வருகிறதா? இங்குள்ள "உள்கட்டுமானங்களையும் பயன்படுத்தி,தேங்கி கிடக்கும் தொழில்களை எழுப்பி நிறுத்த வருகிறதா?" அதற்கான "பதில்" தளபதி ஸ்டாலினுக்கு  தெரிந்திருக்கிறது. அதனால் தான் அவர் யாரும் பேசாத " சிறிய தொழிலதிபர்களை" பற்றி பேசியிருக்கிறார். அந்த சிறிய தொழிலதிபர்களின் "நிலை" என்ன? தமிழ்நாட்டிலுள்ள "சிறு,குறு, தொழிலதிபர்கள்" தங்களது தொழில்கள் சமீபகாலமாக "தேங்கி" இருப்பதாக உணர்கிறார்கள் அல்லவா? அவர்களையும் இந்த "உலக முதலீட்டாள்ர்கள் சந்திப்பில்" இறக்கி விடுகிறது தமிழக அரசு என்ற ஒரு செய்தியை தளபதி ஸ்டாலின் கூறுகிறார் என்பதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.அப்படிச் செய்தால் அது மிகவும் நல்ல செய்திதானே? என்று அதுபற்றி ஆய்வு செய்தோம். ஸ்டாலின் ஏன் திடீரென அந்த "சிறிய தொழிலதிபர்கள்" பற்றி பேசுகிறார்? அவர் திடீரென பேசவில்லை. கடந்த மே மாதம் தளபதி ஸ்டாலின் கோவை சென்று, அத்தகைய "சிறு,குறு தொழிலதிபர்களின் சந்திப்பு" ஒன்றை கூட்டினார். அதில் அரசியல் எதுவும் பேசாமல், அவர்களது "கடினங்களையும், பிரச்சனைகளையும்" பற்றி கேட்டறிந்தார். அவர் ஏற்கனவே " ஊரக வளர்ச்சிக்கான உள்ளாட்சித் துறையில்" அமைச்சராக இருந்தவர். அந்த தொடர்புகள் மூலம் அவருக்கு சில செய்திகள் கிடைத்துள்ளன. அவை என்ன என்ற ஆர்வத்தில் நாமும் விசாரித்தோம்.

       "எம்.எஸ்.எம்.ஈ".என்ற " மத்தியதர,சிறிய, மிகச்சிறிய,தொழில் முனைவோர்"[ Medium,Small,Micro Enterpneors} இந்தியப் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய பங்களிப்பை செலுத்துகிறார்கள் என்ற உண்மை இப்போதெல்லாம் அரசியல்வாதிகளுக்கு தெரிந்துள்ளது. சுதந்திரம் கிடைத்து 50 ஆண்டுகள் கழித்து, அடல்பிகாரி வாஜ்பாய் தலைமை அமைச்சராக இருக்கும்போதுதான் முதல் முறையாக "சிறிய தொழில்களுக்கான ஒரு தனி அமைச்சரவை"எஸ்.எஸ்.ஐ என்ற பெயரில் ஏற்படுத்தப்பட்டது. அதற்கு அப்போது, வசுந்தரராவ் சிந்தியா அமைச்சராக இருந்தார். அதுபோல மாநிலங்களின் அரசுகளும் "பெரிய தொழில்களுக்கு ஒரு அமைச்சகம், சிறிய தொழில்களுக்கு ஒரு தனி அமைச்சகம்" என்று ஏற்படுத்திக் கொண்டார்கள். சிறிய தொழிலகங்களை நடத்துவோர்கள் "இரண்டு ரகங்களாக" பிரிகின்றனர். ஒரு வகையினர்  "பெரிய தொழிலகங்களுக்கு தேவையான சிறிய உறுப்புகளை உற்பத்தி செய்து கொடுப்பது" என்ற "சார்பு தன்மை" கொண்டவர்கள். இன்னொரு வகையினர், "தாங்களாகவே, ஒரு பொருளை முழுமையாக உற்பத்தி செய்வதும், அதை சந்தையாக்கும்போது, பெருமுதலாளிகளின் சரக்குகளை சந்தைப் போட்டியில் சந்திப்பதும்" என்ற நடைமுறையை கொண்டவர்கள். இவர்கள் அதாவது இந்த இரண்டாவது வகையினர் இன்று "பெரு முதலாளிகளையே சந்தையில் சவாலுக்கு இழுக்கும் நிலையில்" உள்ளனர். இப்படிப்பட்ட சிறு,குறு முதலாளிகள் இப்போது என்ன நிலையில் உள்ளனர்? 

       ஊரக மற்றும் சிறு தொழில்கள் என்ற ஒரு அமைச்சகம் தமிழ்நாட்டிலும் உள்ளது.இப்போது மோகன் அதன் அமைச்சர். முன்பு பொங்கலூர் பழனிசாமி அதன் அமைச்சர்.எஸ்.எஸ்.ஐ. என்ற அந்த நாடு தழுவிய  நிலையில் அழைக்கப்படும் இத்தகைய தொழிற்சாலைகள், குறிப்பாக, ராஜ்காட், லூதியானா, கோயம்பத்தூர் ஆகிய இடங்களில் அதிகமாக் இருக்கின்றன. இன்னமும் கூறப்போனால், பல லட்சம் சிறு தொழிலகங்கள் இந்த இடங்களில் இருககின்றன.தமிழ்நாட்டில் இருக்கும் இத்தகைய சிறிய ஆலைகள்,தற்காலிகமாக "மூலதனக் குறைவினாலும், ஊக்குவிக்க வாய்ப்புகள் இல்லாமையாலும்" உணர்வு இழந்து வருகின்றனர். அவர்களின் " மன ஊக்கம் தளர்ந்துள்ளது" இந்த நிலையை கவனித்த தமிழ்நாடு அரசும், இத்தகைய சிறிய தொழிலகங்கள் நாட்டின் பொருளாதாரத்தின் "முதுகெலும்புகள்" என்பதை உணர்ந்து, அவர்களை ஊக்குவிக்க இந்த சந்திப்பில் ஒரு ஏற்பாடு செய்துள்ளனர். 

     அது என்ன? தமிழ்நாட்டில் சிறிய தொழில்களை ஊக்குவிக்க ஏற்கனவே, இயங்கும் "டி.ஐ.சி." என்ற "மாவட்ட தொழிலக மையம்" மூலம் சில பணிகளை செய்துள்ளனர். குறிப்பாக,7 பிராந்தியங்களாக தமிழ்நாட்டை பிரித்து, திருநெல்வேலி, மதுரை, திருச்சி,சேலம், சென்னை, கோவை,திருப்பூர் ஆகிய இடங்களில் உள்ள "டி.ஐ.சி." மூலமும், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலமும், " மத்தியதர,சிறு,மிகச்சிறு,தொழில் முனைவோர்" அனைவரையும் கூட்டி, அவர்களது, " ஆலோசனைகளை, குறிப்பாக அவர்களது சொந்த முன்வைப்புகளை" கேட்டு வாங்கி இருக்கிறார்கள். அத்தகைய சிறு தொழில் முனைவோரது,"தேக்கங்களை" உடைக்க உதவுமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இதில் தமிழக அரசின் பங்கு என்பது வெறும்," சந்திப்புகளையும்,ஏற்பாடுகளையும், ஆலோசனைகளையும் பரிமாறிக் கொள்ள, அந்த மூலதன்மிடுவோரையும், அனுபவத்தையும், திறமையையும், கொண்டுள்ள சிறு தொழில் முனைவோரையும் சேர்த்து வைப்பது மட்டுமே". தங்கள் கைகளில் மூலதனம் இல்லாத நிலையில், இந்த சிறு தொழில் அதிபர்கள், வெளியிலிருந்து வரும் பெரும் மூலதனமிடுவோருடன் இணைந்து அத்தகைய ஆலைகளை உருவாக்க " வேண்டும். வெளியிலிருந்து வருகின்ற முதலீட்டாளர்கள், உள்நாட்டு பங்காளிகளை இணைத்துக் கொள்ளாமல், அத்தகைய ஆலைகளை உருவாக்க முடியாது என்பதால் அத்தகைய ஏற்பாட்டை தமிழ்நாடு ஆரசு செய்துள்ளது. உதாரணமாக , கோவையில் கூடிய  அத்தகைய கலந்தாலோசனை கூட்டத்தில், ரூ.3000 கோடிக்கு "முன்வைப்புகளை" சிறு தொழிலதிபர்கள்,கொடுத்தள்ளனர். அவற்றுக்கு உடனடியாக " புரிந்துணர்வு ஒப்பந்தங்களும்" போடப்பட்டுள்ளன. இத்தகைய செய்திகளைத்தான் தளபதி ஸ்டாலின் "வற்புறுத்தி சிறு தொழிலதிபர்களிடம் ரூ 100 கோடியை போட வைத்துள்ளனர்" என்பதாக ஒரு "தவறான செய்தியை" தெரிவித்துள்ளார். 

        பெரும் தொழிலதிபர்களின் பெரும் மூலதனங்களையும், அதேசமயம் குறைந்த மூலதனமிட வரும் வெளிநாட்டு மூலதனத்துடன், மூலதனம் இல்லாத அல்லது மூலதனத்தை போட விரும்பாத சிறு தொழிலதிபர்களுடன் இணைந்த ஏற்பாடுகளை செய்துகொள்ள தமிழக அரசு இத்தகைய ஏற்பாடுகளை செய்துள்ளது என்பது, மாவட்டங்களிலிருந்து வருகின்ற இனிய செய்தியாக இருக்கின்றது.