Tuesday, August 18, 2015

புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு பார்வை?

எது எப்படியோ.புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு பார்வை?
---------------------------------------------------------------------------------------
      புலம் பெயர்ந்த தமிழர்கள், தாங்கள் சிறந்த "விமர்சகர்கள்" என்று எண்ணிக்கொண்டு,ஈழத்திற்குள் நுழையாமல், ஈழத்தில் உள்ள மக்களது உணர்வுகளையும் புரிந்து கொள்ளாமல், அரசியல் நிலைமை எப்படி இருக்கிறது என்பதையும் அறியாமல், "இணையம் மூலம்" அரசியல் "அறிவு" பெரும் பெரிய "ஆப்பாட்டக்காரர்களாக" இருப்பதால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீது மக்களுக்கு "விமர்சனம்" இருக்கிறது என்பதை மட்டுமே தெரிந்துகொண்டு, இலங்கையில் வாழும் மக்கள் தங்களது "வாழ்க்கைக்கு தகுந்தாற்போல" எதை தேர்வு செய்வார்கள் என்றும் அறியாமல், அங்குள்ள அரசியலைப் புரியும் "திறன்" இல்லாமல், "மேட்டுக் குடி வாழ்நிலையில்" வெளிநாடுகளில் இருந்துகொண்டு, "கடும் விமர்சனங்களை" தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீது எடுத்து "எறிந்தார்கள்">

       அவர்களது "இணையம்" மூலமான கருத்துகளை தமிழ் மக்கள் "கண்டு கொள்ளவில்லை". த.தே.கூ.பை "செமையாக" திட்டித் தீர்த்த "கஜேந்திரகுமார்" குழுவை, புலம் பெயர்ந்து ஐரோப்பாவில் வாழ்பவர்களும், இந்தியாவில் வாழ்பவர்களும், எத்தனை "கானோளிகளில்" பாடல்களையும், இசையையும், இணைத்து "பாடுபட்டு" உழைத்தார்கள். ஆனால் ஈழ மக்கள் அவர்களது அனைத்து முய்ரசிகளையும், கண்டுகொள்ளவில்லை. கஜேந்திரகுமார் குழுவை, ஒரு "கட்சியாக" அங்கீகரிக்கவில்லை. இப்போதாவது "அறிவுஜீவிகள்" திருத்திக் கொள்வார்களா? யதார்த்தத்தை புரிந்துகொண்டு "தமிழ் மக்களுக்கு" பாடுபடுங்கள். இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டு தமிழர்களது நிலைமையையும், "இணையம் புகழ்" ஆப்பாட்டக்காரர் களிடமிருந்து கற்றுக் கொள்ளாதீர்கள்.  

No comments:

Post a Comment