Tuesday, August 18, 2015

புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு பார்வை?

எது எப்படியோ.புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு பார்வை?
---------------------------------------------------------------------------------------
      புலம் பெயர்ந்த தமிழர்கள், தாங்கள் சிறந்த "விமர்சகர்கள்" என்று எண்ணிக்கொண்டு,ஈழத்திற்குள் நுழையாமல், ஈழத்தில் உள்ள மக்களது உணர்வுகளையும் புரிந்து கொள்ளாமல், அரசியல் நிலைமை எப்படி இருக்கிறது என்பதையும் அறியாமல், "இணையம் மூலம்" அரசியல் "அறிவு" பெரும் பெரிய "ஆப்பாட்டக்காரர்களாக" இருப்பதால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீது மக்களுக்கு "விமர்சனம்" இருக்கிறது என்பதை மட்டுமே தெரிந்துகொண்டு, இலங்கையில் வாழும் மக்கள் தங்களது "வாழ்க்கைக்கு தகுந்தாற்போல" எதை தேர்வு செய்வார்கள் என்றும் அறியாமல், அங்குள்ள அரசியலைப் புரியும் "திறன்" இல்லாமல், "மேட்டுக் குடி வாழ்நிலையில்" வெளிநாடுகளில் இருந்துகொண்டு, "கடும் விமர்சனங்களை" தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீது எடுத்து "எறிந்தார்கள்">

       அவர்களது "இணையம்" மூலமான கருத்துகளை தமிழ் மக்கள் "கண்டு கொள்ளவில்லை". த.தே.கூ.பை "செமையாக" திட்டித் தீர்த்த "கஜேந்திரகுமார்" குழுவை, புலம் பெயர்ந்து ஐரோப்பாவில் வாழ்பவர்களும், இந்தியாவில் வாழ்பவர்களும், எத்தனை "கானோளிகளில்" பாடல்களையும், இசையையும், இணைத்து "பாடுபட்டு" உழைத்தார்கள். ஆனால் ஈழ மக்கள் அவர்களது அனைத்து முய்ரசிகளையும், கண்டுகொள்ளவில்லை. கஜேந்திரகுமார் குழுவை, ஒரு "கட்சியாக" அங்கீகரிக்கவில்லை. இப்போதாவது "அறிவுஜீவிகள்" திருத்திக் கொள்வார்களா? யதார்த்தத்தை புரிந்துகொண்டு "தமிழ் மக்களுக்கு" பாடுபடுங்கள். இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டு தமிழர்களது நிலைமையையும், "இணையம் புகழ்" ஆப்பாட்டக்காரர் களிடமிருந்து கற்றுக் கொள்ளாதீர்கள்.  

இலங்கை தேர்தல்முடிவுகளும்,அதற்கு பின்னாலிருக்கும் தந்திரங்களும்

இலங்கை தேர்தல்முடிவுகளும்,அதற்கு பின்னாலிருக்கும் தந்திரங்களும்
--------------------------------------------------------------------------------------------------------------
இலங்கையில் தென்னிலங்கையில் உள்ள சிங்களப் பகுதியின் வாக்குகளில், "ஐக்கிய தேசியக் கட்சி" இன் தலைவர் ரணில் விக்ரமசிங்கேவிற்கு  ஆதரவாக  அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெறுவது உறுதி என்றபோதும், "ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி" இன் பெருவாரியான எம்.பி.க்கள் ராஜபக்சே ஆதரவாளர்கள் என்பது உண்மைதான். ஆகவே ரணில் தனக்கு அதிகமான் எம்.பி.க்கள் ஆதரவு வேண்டும் என்பதற்காக, தவிர்க்கமுடியாமல், வடக்கு,கிழக்கு மாகாணங்களின்,எம்.பி.க்களான "தமிழ் தேசியக் கூட்டமைப்பு" ஆதரவை பெறுவார் என்றும், தமிழ் எம்.பி.க்களை சார்ந்து நிற்பார் எனவும், அதனால் தமிழ் எம்.பி.க்கள் "பேரம்" பேசலாம் என்றும்,அதன்மூலம், "சமஷ்டி அரசு","சர்வ தேச விசாரணை" ஆகியவற்றை "வற்புறுத்த" முடியும் என்றும், "வற்புறுத்த வேண்டும்" எனவும் பலரும் கருதது தெரிவித்து வருகிறார்கள். ஆனால் "சிங்களத்தின் தந்திரம்" என்பது "சீரிய சிந்தனையுடன்" செயல்படுகிறது.அதாவது ராஜபக்சே ஆதரவுடன் வெற்றிபெற்ற "ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி" இன் எம்.பி.க்கள் ஒவ்வொருவராக, ரணில் தலைமையிலான "ஐக்கிய தேசியக் கட்சி" க்கு "தாவ" தயாராகி வருகிறார்கள். அதற்கு அந்த " ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சி" இன் தலைவரும், "ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி"இன் அமைப்பாளருமான இன்றைய "அதிபர் மைத்திரிபால சிரிசேனா"வும், சந்திரிகா குமாரதுங்கா"வும் ஏற்பாடுகள் செய்வார்கள் என்பது நாடறிந்த செய்தி. இததகைய முயற்சி, "ராஜபக்சே"விற்கு எதிரான செயல் என்று "பலரும்" ஏமாறலாம். ஆனால்,உண்மை அப்படி இல்லை.

 ராஜபக்சே அணியினர் "சர்வதேச விசாரணையை" எதிரகொள்ளும் நேரத்தில், "அவர்களை" காப்பாற்ற "சிங்களம்" அதாவது, மைதிரிபாலா சிரிசேனா, ரணில், ராஜபக்சே ஆகியோர் ஒரே கருத்தின் அடிப்படையில், அதாவது," சர்வதேச விசாரணையிலிருந்து" அனைத்து சிங்கள தலைவர்களையும்" காப்பாற்றும் முயற்சியில், "ரணிலுக்கு ஆதரவாக அனைத்து சிங்கள எம்.பி.க்களையும்" சேர்த்து, அதன்மூலம், "தமிழ் தேசிய கூட்டமைபினர்" ஆதரவின்றியே, அதாவது "பேரம் பேசக் கூட" தமிழர்களுக்கு, "வாய்ப்பு" கொடுக்காத நிலையில், ஒரு "தேசிய அரசை" [ தமிழர் கட்சிகள் இல்லாத} நிறுவி, அதன்மூலம், ரணில் மூலம் அமெரிக்காவை செல்வாக்கு செலுத்தி , உலக சமூகத்தை "சரிக்கட்டி" வருகிற செப்டம்பர் வெளியீடான,"ஐ.நா. மனித உரிமை கவுன்சில்" அறிக்கையில், புதிய ஆட்சி என்பது, "போர்குற்ற விசாரணைக்கு" தயார் என்பதால், அவர்கள் கையிலேயே கொடுத்துவிடுகிறோம் என்று,"உள் நாட்டு விசாரணைக்கு" கொடுப்பது என்ற "நாடகத்தை"முடிவுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளார்கள்., அத்தகைய திட்டத்திற்கு, "சிங்களத்துடன்" சேர்ந்து, இந்திய வெளிவிவகார அமைச்சகமும், அமெரிக்க அரசும் இணைந்தே திட்டமிட்டுள்ளார்கள் என்று தெரிகிறது.