Friday, July 31, 2015

சசிபெருமாளின் மரணமும், மதுவிலக்கும்??


     என்ன இது?  அதிர்ச்சியான செய்தியாக இருக்கிறதே? மதுவிலக்கு பற்றி தொடர்ந்து "செய்திகள்" வருவதற்கு உதவியாக இருந்த ஒரு சசிபெருமாள் குமரி மாவட்டத்தில் "செல்போன் டவரின்" மேலிருந்து விழுந்து இறந்துவிட்டாரே? இதை எப்படி எடுத்துக் கொள்ள?  மதுவிலக்கு மட்டுமே பேசிவந்த ஒருவர் இப்படி சாகவேண்டுமா? தாங்க முடியவில்லையே? அந்த வயதான சசிபெருமாள்,தொடர்ந்து "சாகும்வரை பட்டினிப்போர்  மறியல், சத்தியாக்கிரகம், முக்கிய இடங்களில் அமர்வது, சேலத்திலிருந்து சென்னை வந்து செய்தியாக ஆவது, பல தலைவர்களைப் பார்த்து மதுவிலக்கை எடுத்துரைப்பது, அரசியல் தலைவர்கள் மதுவிலக்கு அறிவித்தால்,அவர்களை சென்று பார்த்து நன்றி கூறுவது, இப்படி தொடர்ந்து விடாப்பிடியாக செயல்பட்டவர் திடீரென மரணம் அடைந்துவிட்டாரே? என்று நமக்கும் அதிர்ச்சிதான். ஊடகங்கள் உடனடியாக  அவரது மரணத்தின் மீது , தலைவர்களிடம்  கருத்துக் கேட்டு, அவற்றை வெளியிடுகின்றன. அவை வேண்டுமானால் ஊடகங்களின் வேலை அல்லது கடமை அல்லது ஊடகங்கள் மீதான "தாக்கம்" என்று சொல்லலாம். ஆனால் சசிபெருமாள், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக  ஊடகங்களில் கூறுவது உண்மைதானா? மக்கள் மத்தியில் அப்படி ஒரு "தாக்கத்தை" அவரால் ஏற்படுத்த முடிந்ததா?என்ற கேள்வி எழுகிறது. 

           பொதுமக்கள் மத்தியில் எல்லோருக்கும் சசிபெருமாளை தெரிகிறதா? நமக்கு அப்படி புலப்படவில்லை. ஒரு சட்டக் கல்லூரி மாணவி நந்தினி தனது தந்தையுடன் சேர்ந்து இதேபோல அவ்வப்போது மதுரையிலிருந்து புறப்பட்டு, சென்னை வரை பல ஊர்களிலும் மதுவிலக்குக்காக பட்டினிப்போர் நடத்திவருகிறார். அதேபோல நெல்லையிலிருந்து ஒரு விவேகானந்தன் சென்னை வந்து ஒரு பெரும் பட்டினிப்போராட்டம் நடத்தி, மதுவிலக்கை பரப்பினார். நெல்லையிலேயே 1000 குழந்தைகளுக்கு "மகாத்மா காந்தி" வேடம் போட்டு மதுவிலக்கை வலியுறுத்தி  நிகழ்ச்சி நடத்தினார். அடுத்து சமீபத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து, மதுவிலக்கு அறிவித்ததற்காக "நன்றி" கூறினார். இப்படியாக ஊடக செய்திகளில் வந்துகொண்டிருக்கிறார். இவர்கள் "தனிநபர்களாக" இருக்கலாம். ஆனாலும் அவர்கள் பரப்பும் கொள்கைதான் அவர்களை "அடையாளம்" காட்டுகிறது. அதேபோல சசிபெருமாள் இன்று நம்முடன் இல்லை. அது நமக்கு வருத்தமே. ஆனால் அவர் ஏன் "செல்போன்" டவர் மீது ஏற வேண்டும்?".  "முழுமையான மதுவிலக்கு" மட்டுமல்ல , கன்யாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை என்ற ஊரில்,ஒரு குறிப்பிட்ட "டாச்க்மாக் கடையை" அகற்றவேண்டும் என்ற கோரிக்கையையும்  சசிபெருமாள் வைத்ததாக தெரிகிறது.   ஐந்து மணிநேரம் சசிபெருமாள் அந்த "செல்போன் டவர்" மீது ஏறி நின்று  போராட்டம் நடத்தியுள்ளார். அத்தகைய போராட்டத்தை அவரது "நண்பர்கள்" ஏன் தடுக்கவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.

                   சசிபெருமாளின் மரணத்தை ஒட்டி அரசியல்வாதிகள் என்ன வேண்டுமானாலும் கூறலாம். அவர்கள் அரசாங்கத்தை மட்டுமே குற்றம் சாட்டலாம்.அதை பொதுமக்கள் "பெரிதாக"  எடுதுக் கொள்ள மாட்டார்கள். ஆனால் மதுவிலக்கு கொள்கையை தொடர்ந்து பரப்பி வரும் "தமிழருவி மணியன்" சசிபெருமாளின் மரணம் பற்றி கூறும் போது "தனது கோரிக்கை  தொடர்ந்து அரசின் கவனத்தை ஈர்க்கவில்லையே" ,என்ற "ஆதங்கத்தில்" செல்போன் டவர்" ஏறியிருக்கிறார் என்று கூறுகிறார். அவரும் "செல்போன் டவர்" ஏறியதை ஆதரிக்கவில்லை. இப்படி விரக்தியில் போராட்டங்களை செய்யலாமா? சிறைக்குள் இருக்கும் சிறைவாசிகள் "வேறு வழியே" இல்லாமல், "செல்போன் டவரின் மீது ஏறுதல்" போன்ற போராட்டங்களை நடத்தும்போது,"புரிந்தகொள்ள" முடியும். அதை அண்ணன் சசிபெருமாள் செய்யலாமா? அவரது உயிர் அவருக்கு பெரிதாக தோன்றாமல் இருக்கலாம். நமக்கு அது "ஒரு உயிர்" என்பதும், அனாவசியமாக ஒரு உயிர் சாககூடாது என்பதும் தெரியுமே? நாம் "பயங்கரவாதி" ஆனாலும் ஒரு உயிரை எடுக்க "அரசுக்கு" உரிமை இல்லை என்றுதானே "மரண தனடனையையே" எதிர்த்து வருகிறோம். தனது உயிரை போக்கிக்கொள்ளவும் யாருக்கும் உரிமை கிடையாது என்பதுதான் நமது வாதமும். எந்தவகையிலும் சசிபெருமாளின் இத்தகைய "போராட்ட வடிவத்தை" நாம் ஏற்க முடியாதல்லவா?

                      நம்மவர்கள் "தனிநபர்கள்" ஒரு சமூக பிரச்சனைக்காக, மக்களின் கவனத்தையும், அரசின் கவனத்தையும் ஈர்க்க, சில நேரங்களில் சிலவகை போராட்டங்களை நடத்துகிறார்கள்.யாரும் நல்ல கோரிக்கைகளை "கவனிக்கவில்லையே" என்ற ஆதங்கத்தில்தான், சில நேரங்களில் "விரக்தியில்தான்" சில "தனிநபர்" போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. அதனால் அவை எலலாவற்றையும் "காந்திய முறை போராட்டங்கள்" என்று கூறி விடலாமா?  காந்திய வழி என்றால் "தொடர்ந்து மக்கள் மத்தியில் அறவழியில்" ஒரு கோரிக்கையை கொண்டு  செல்வதும், அதன்மூலம் பொதுமக்களின் ஆதரவை பெருவாரியாக பெறுவதும் என்பதுதானே? மறைந்த அப்துல் கலாம் அவர்கள் தொடர்ந்து "மாணவர்களிடையே" தனது கொள்கைகளை கூறி,ஒரு "தொலைநோக்கிய" பார்வையில் அத்தகைய கொள்கைகளில் வெற்றி பெற முயன்றதால்தானே மதிக்கப் பட்டார்? நாம் என்று கோரிக்கையை வைத்துக் கொண்டு தெருவில்,இறங்கினோமோ அதை "மூன்றே ஆண்டுகளில்" வெற்றி பெற துடித்து, அதற்காக விரக்தி மனம் கொண்டு "விபரீதங்களில்" ஈடுபடலாமா? 

                       செல்போன் டவரில் ஏறி நின்றுகொண்டு, மதுக் கடையை மூடசொல்வது என்பது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை,மிரட்டி, பணியவைப்பது" என்றுதானே பொருள்? அது எப்படி "காந்திய நடைமுறை" ஆகும்? ஆனாலும் சசிபெருமாள் தனது "நலனுக்காக" போராடவில்லை என்பதால், நாம் வேதனைப்படுகிறோம். சமூகத்தில் பொதுவாகவே "போராட்ட உணர்வு " குறைந்துவரும் காலத்தில், சசிபெருமாள் போன்றவர்களின் மரணம்,போராட்டமாகவே எடுத்துக் கொள்ளப்படுகிறது. பல பத்து ஆண்டுகளாக பேசப்படும்" மதுவிலக்கு" என்ற முழக்கம்,மூன்று ஆண்டுகளாக சசிபெருமாள் அவர்களால் மட்டுமே முன்னெடுக்கப்பட்டது என்று நாம் கூறவில்லை. ஆனால், ஊடகங்களின் தொடர்ந்த உதவியால், அவரது போராட்டம் "வெளியே" தெரிகிறது.இது "ஊடகங்களின் காலம்".

                     குமரி மாவட்டத்தில், உன்னாமலைக் கடை என்ற இடத்தில, பள்ளிக்கூடங்கள், தேவாலயம், ஆகியவற்றின் அருகே "டாச்க்மாக்" கடை அகற்றப்படவேண்டும் என்று, 1000 நாட்களாக மக்கள் போராடுகிறார்கள். அங்கே குறிப்பாக கன்யாகுமரி மாவட்டத்தில் உள்ள மக்கள் "தீவிரமான" போராட்டங்களை நடத்த உணர்வு கொண்டவர்கள். அவர்களிடம் "மக்கள் திரள் போராட்டங்களை" நடத்த தொடர்ந்து முயலவேண்டியது அவசியம். அங்கேபோய், இவ்வாறு, "தனிநபர்" போராட்டமோ, "வீரசாகச மிரட்டல்" போராட்டமோ, அவசியமில்லை. அது சரியான வழியும் அல்ல, என்ற கருத்தும் இருக்கிறது.  ஆனால் நமது வட்டாரங்களில், "இலங்கை போரை நிறுத்த முத்துகுமாரின் உயிர் தியாகம்" என்ற "போராட்ட வடிவமோ", " ராஜீவ் கொலை வழக்கில் சிக்கியுள்ள "மூன்று தமிழர்களின் உயிர் காக்க, மக்கள் மன்றத்தின் செங்கொடியின் நெருப்பிட்டு எரிந்த மரணமோ" நம்மால் ஏற்கககூடியவை அல்ல. நாம் அவர்களது "கோரிக்கை நியாயத்தை" ஏற்றுக் கொண்டாலும், அவர்களது "போராட்ட வடிவத்தை" ஏற்றக் கொள்ள முடியாது.

                     இந்த நாட்டில் எந்த ஒரு "அறவழியோ","அமைதிவழியோ",அரசையும், நிர்வாகத்தையும்,  அசைத்துவிடும் என்று நாம் "மூட நம்பிக்கை" கொண்டிருக்க வில்லை. மக்களை திரட்டி போராடுவது என்பது ஒரு "கடினமாக,விடாப்பிடியாக" செய்யவேண்டிய ஒன்று. அதற்கு நமக்கு "பொறுமை" வேண்டும். ஆனால் பொறுமையாக, ஆழமாகக் கடுமையாக மக்கள் மத்தியில் உழைத்து, மக்களை திரட்டுவது என்பது ஒரு வழிமுறை. உணர்ச்சிவசப்பட்டு, அவசரமாக, வீரசாகசத்தோடு, "போராட்ட முறைகளை" திட்டமிடுவது எப்படி சரி?  நாம் சசிபெருமாளுடைய மரணத்திலிருந்து, நிறைய "கற்றுக்கொள்ள"வேண்டும். அவரது உறுதி, தொடர் முயற்சிகள், விடாப்பிடியாக, மதுவிலக்கு கொள்கையை வெற்றிபெற வைக்க முயல்வது ஆகியவற்றை நாம் போற்றவேண்டும். அதேநேரம், "ஊடகங்கள்" கொடுக்கும் உற்சாகத்தை மட்டுமே நம்பி, மக்களை திரட்டும் "கடின முயற்சியை" எடுக்காமல், முன்செல்ல முயல்வது தவிர்க்கப்பட 
வேண்டும்.

                உதாரணமாக, சென்னை மயிலாப்பூர் பகுதி, நிறைய "குடிகாரர்களை" கொண்ட பகுதிதான். அங்கு வாழும் அடிப்படை மக்கள் மத்தியில், "நொச்சிக்  குப்பம்"  பகுதியில், சாந்தோம் சாலையான "காமராஜர் சாலையில்" இருந்த  மதுக் கடை, அந்த வழி செல்லும், "உயர்நீதிமன்ற நீதியரசர்களால்" ஒரு நாள் கோபத்தோடு தடுக்கப்பட்டது. உடனே அந்த கடை, "அம்பேத்கர் பாலம்" என்ற அடிப்படை மக்கள் வாழும் அருகாமை பகுதிக்கு, மாற்றப்பட்டது. அங்கும்,வசிக்கும் மக்களால்,"கடையை அடை" என்ற போராட்டம் நடந்தது. அங்கிருந்தும் அந்த கடை அகற்றப்பட்டு, அருகே உள்ள,"தண்ணீர்தொட்டி மார்கெட்" என்ற இடத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கும் சில காலம் கழித்து, மக்கள் கடையை அகற்ற கோரி, போராடினார்கள். அதற்குப்பிறகு அங்கிருந்தும் அந்த கடை  அகற்றப்பட்டது. ஆகவே, சென்னை மயிலாப்பூரில் மக்கள் போராட்டம் மூலம் மதுக் கடை மூடப்பட முடியும் என்றால், ஏன் கன்யாகுமரி மாவட்டத்தில் "விடாபிடியான மக்கள் போராட்டத்தினால்" மதுக் கடை மூடப்பட முடியாது? அதற்கு பொறுமையுடன் கூடிய மக்கள் திரள் போராட்ட அணுகுமுறை தேவை..

Thursday, July 30, 2015

டைகர் ஆதரவாளர்கள், யாகுப் மேமனை தூக்கிலிட்டார்கள்?.

டைகர் மேமனின் ஆதரவாளர்கள், யாகுப் மேமனை தூக்கிலிட்டார்கள்?.
-------------------------------------------------------------------------------------------------------------
     யார் அந்த டைகர் மேமனின் ஆதரவாளர்கள்?
     யாகுப் மேமனை தூக்கிளிட்டவர்கள்?
     ஜூலை 30.யாகுப் மேமனின் பிறந்த நாள்.
     அன்று காலை அவரை கொலை செய்தால்,
      மன்னிக்கணும்.சட்டப்படி, தூக்கிலிட்டால்,
     அவரது குடும்பமே ஆடிப்போகும். அதுதான்
     டைகர் மேமன் எனும் யாகுபின் அண்ணனை
     அதிரவைக்க நல்ல திட்டமா? இது என்ன அரசியலாக
      இருக்கிறதே? சரி.யாகுப் மேனனை தூக்கிலிட்டது யார்?


      பிரதமரும், உள்துறையும், நீதிபதிக்களும்தானே
      யாகுப் மேமனை தூக்கிலிட்டனர்?,
       பிரதமர் மோடி எப்படி குண்டு வைத்த டைகரின்
       ஆதரவாளராக ஆக முடியும்? அடுத்து உள்துறை
        அமைச்சர் ராஜ்நாத்சிங் எப்படி 1993 இன் குண்டுவெடிப்பில்
        குற்றம் சாட்டப்பட்ட டைகரின் ஆதரவாளராகுவார்?
        யாகுபை தூக்கிலிட செய்த நீதிபதிகள் எப்படி குற்றவாளி
        டைகருக்கு ஆதரவாளர்களாக இருக்க முடியும்?
         டைகரிடம் இதில் யாருமே "காசு" வாங்க வில்லை.
         சார்பாக இல்லை.பிறகு எப்படி ஆதரவாளர்கள்?

          டைகரின் "சொற்களை" உண்மையாக்கியவர்கள்,
          டைகரின் "ஆதரவாளர்கள்" தானே?
          இந்தியாவிடம் சரணடைய வந்த யாகுபிடம்,
          " நீ காந்தி போல செல்கிறாய். உன்னை கோட்சேயை போல
          இந்தியா "தூக்கிலிட்டுவிடும்" என்றாராம்.
           டைகரின் "வார்த்தைகளை" உண்மையாக்கியவர்கள் யார்?
          அவர்கள் டைகரின் ஆதரவாளர்கள்தானே?
       

Wednesday, July 29, 2015

கலாம் உங்கள் சொல்லின் பொருளை புரிந்துகொண்டார்களா?

கலாம் உங்கள் சொல்லின் பொருளை புரிந்துகொண்டார்களா?
-------------------------------------------------------------------------------------- மணி.
         " மரண தண்டனை"யை சுட்டெரிக்கும் உனது
           "கதிர்வீச்சு" சொற்கள், உனது உடலைப்
           " புதைப்பதற்கு" நான்கு மணிநேரம் முன்பே,
           " நாகபுரியில்" அரசால் திட்டமிட்டு,மரணிக்கப்பட்டது.
           ' நாகபுரியின்" உருவாக்கம் அதிகாரத்தில் அமர்ந்தால்,
           ஓரங்கட்டப்பட்டவர்கள்தான்  மீண்டும், மீண்டும்,
           தூக்கில் ஏறுவார்கள் என்ற உனது " சுடு சொற்கள்"
           மக்களை வந்து "தொடுவதற்கு" முன்பே,
           "பொய்களை" சுட்டெரிததுவிடுமோ என
            அவர்கள் எண்ணினார்களோ? அதனால்தான்
            இந்த அவசரமோ? டைகர் கிடைக்காவிட்டால் என்ன?
            " தம்பி" கிடைத்தானே, என்ற உள்ளூர் காவல்துறையின்
             "தறுதலை" உணர்வின் "தவறுதலையா",காண்கிறோம்?
              உச்சகட்ட நீதி தரும் நிலையம் என்றார்களே?
              பி.ராமன் எழுதிய தரவுகள் எல்லாம்கூட, அவர்களை
              அசைக்க வில்லையே? ஏன்? ஏன் இந்த அவசரம்?

              ஓகோ, இவர்கள் "பயங்கரவாதத்தை" இல்லாமல்
               ஆக்க  இறங்கவில்லை. அப்படி இறங்கினால்
                இவர்களும் சேர்ந்து மூழ்கவேண்டுமே?
                "பயங்கரவாதத்துடன்" பேரம் பேசவே முயல்கின்றனர்.
                 ஆப்கானிஸ்தானுக்கு கடத்தப்பட்ட  விமானம் கதை
                 நினைவுக்கு வரவில்லையா?
                ஒருபுறம் "தேர்தல் வெற்றியுடன்" எல்லைக்கு அப்பாலுள்ள
                " தேர்தல் வெற்றி" பேசிப் பார்த்தும், "முடிவு" வரவில்லை.
                "எங்களை விட்டுவிட்டு" நவாசுடனா?" என்று "ஆக்கிரமிப்பு"
                 கொரில்லாக்கள் "தலைப்பாகை" நிலத்திலேயே நுழைந்தார்கள்.
                 "இனி மிரட்டித்தான்" பேரம் என்று இவர்கள் முடிவுக்கு வந்தார்களோ?
                  நம்மூர் சிறையில் " அறிவிக்கப்பட்ட பயங்கரவாதிகள்"
                  அதிகாரிகளால் நேரடியான தாக்குதலுக்கு இலக்காகமாட்டார்கள்.
                  " ஒரு லுனாடிக்" சிறைவாசி அப்போது கிடைப்பான்.
                   சம்பந்தப்பட்டவர்களின் "கண்களுக்கு"  முன்னாலேயே,
                  அவரை "அடித்து,உதைப்பார்கள்". அதுவே "தொடமுடியாதவர்களுக்கு"
                  அனுப்பப்படும் "மிரட்டல்". இங்கே அந்த மிரட்டல்
                  "டைகருக்கும், தாவூதுக்கும்" போய் சேர, யாகூப்தான் "லுனாடிக்கா?"
                  உண்மைதான். சிறை மருத்துவரின் "சான்றிதழும்" அதுதான்.
                  "பலியாடுகளை" பலி போட, எந்த ஒரு சட்ட விதியும் தடுக்காதே?
                  அதுதானே இங்கேயும்................... ஆனால்

                  இந்த நிகழ்வுகள், சட்டத்தின் மீதும், ஆட்சிகள் மீதும்,
                  "நேர்மை" கோருவோரின் நம்பிக்கையை வலுப்படுதாதே?
                  "பயங்கரவாதத்தை" வலுப்படுத்த, இப்படி ஒரு முயற்சியை
                  கட்டவிழ்த்து விடுபவர்கள், மக்கள் பிரச்னைகளை
                  தீர்க்க முடியாததால், "தப்பிக்க" வழி, பயங்கரவாதத்தை
                  "நீரூற்றி வளர்ப்பதுதானோ?"  அதனால்தான் கலாம் அவர்களே,
                  உங்களை மண்ணில் புதைக்கும் முன்பே  உங்கள் சொற்களை
                  அவர்கள் "புதைத்து" விட்டார்கள்"           

Tuesday, July 28, 2015

தோழர் சாருமசும்தார் மறைந்த நாள்.;

நக்சல்பாரி இயக்கத்தின்தந்தை,தலைவர்,வழிகாட்டி,கருத்தியல்பெட்டகம்,
----------------------------------------------------------------------------------------------------------------------தோழர் சாருமசும்தார் மறைந்த நாள்.;
------------------------------------------------------------

        இன்று ஜூலை 28 ஆம் நாள்தான் மேற்குவங்கத்தின், தலைநகர் கொல்கத்தாவில், சி.பி.எம்.கட்சியின் ஆட்சியில், 1972 ஆம் ஆண்டு, சிறையில்  இருந்த தோழர் சாருமசும்தார்  ஆளும் வர்க்கத்தின் சதிவலையில் சிக்கி, அவருடைய "உயிர் காக்கும் மருந்துகளை" ஆள்வோர் வழங்காமல் இருந்ததால், ஜூலை 12 ஆம் நாளிலிருந்து, சிறைக்குள்ளேயே அடைக்கப்பட்ட நிலையில்,தனது மரணத்தை தழுவினார். இந்தியப் புரட்சியின் "பிதாமகன்" தோழர் சாருமசும்தார் ,1967 ஆம் ஆண்டு, மேற்கு வங்கத்தில், " ஐக்கிய முன்னணி " ஆட்சியை பங்களா காங்கிரசுடன் சேர்ந்து, மார்க்சிஸ்ட் கட்சி" ஏற்படுத்திய நேரத்தில்,,டார்ஜிலிங் மாவட்டத்தில், சிலிகுரி வட்டத்தில், நக்சல்பாரி கிராமத்தில், விவசாயிகளை திரட்டி, ஆயுதம் தாங்கிய புரட்சியை அங்குள்ள நிலச்சுவான்தார்கள் மீது நடத்திய காலத்தில், "கிழத்திய எல்கை  துப்பாக்கி படை" என்ற துணை ராணுவத்தை இறக்கிவிட்டு, விவசாயிகளின் போர்குணத்தை எதிர்த்து, "சுற்றி வளைத்து" தாக்குதல் என்ற தந்திரத்தின் மூலம் நக்சல்பாரி கிராமத்தை சுற்றி வளைத்து,சுட்டனர். அதில் தோழர் பாபுலால் பிச்வகர்மா என்ற தோழர் தியாகியானார்.

      இந்த படுகொலையை செய்த சி.பி.எம்.ஆட்சி  தொடர்ந்து தலைமறைவு இயக்கத்தை கட்டி "இந்தியப் புரட்சியை" நடத்த தயாரான தோழர் சாருமசும்தாரை தேடியது. அந்த நக்சல்பாரி எழுச்சியை அன்று, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி,தோழர் மா-சே- துங் தலைமையில், "இந்தியாவில் வசந்தத்தின் இடி முழக்கம்" என வர்ணித்து பாராட்டியது. அத்தகைய கட்டுரை, சீனக் கம்யுனிஸ்ட் கட்சியின் ஏடான, "பீப்பில்ஸ் டெமாக்ரசி" இதழில் வெளிவந்தது. மாவோ வின் "விவசாயப் புரட்சி" தத்துவத்தை இந்தியச் சூழலுக்கு பொறுததியதுதான் தோழர் சாருமசும்தாரின், பங்களிப்பு.இந்திய சமூக, அரசியல் சூழலை, "அரைக் காலனி, அரை நிலப்ப்ரபுதுவம்" என்று விவரித்ததுதான் தோழர் சாருமசும்தாரின் சிந்தனை தந்த படப்பிடிப்பு. "தரகு, அதிகாரவர்க்க ஏகபோக முதலாளித்துவமும், பெரு நிலப்பிரபுத்துவமும்" இந்திய ஆளும்வர்க்கங்கள் என்ற தெளிவான வரையருப்புதான் தோழர் சாருமசும்தாரின் கண்டுபிடிப்பு. அத்தகைய ஆளும்வர்க்கதை எதிர்த்து, "மக்கள் ஜனநாயக புரட்சியை" முன்னெடுப்பதுதான் இந்த நாட்டின் விடுதலைக்கான வழி என்பதுதான் தோழர் சாருமசும்தார் முன்வைத்தார். அதற்கான "விவசாயப் புரட்சியை" தோழர் முன்னெடுத்தார்.

              1968 ஆம் ஆண்டு, நாடெங்கும் உள்ள புரட்சியாளர்களைக் கூட்டி, " அகில இந்திய கம்யுனிஸ்ட் புரட்சியாளர்களின் ஒருங்கிணைப்பு குழு" என்ற { All india coordination committee of the communist Revolutionries } என அமைத்தார். அதற்கு வந்த்ஜிருந்த "ஆந்திராவின் தரிமள நாகிரெட்டி"   தேர்தலும், புரட்சியும்  என்ற பாதையை முன்வைத்து விட்டு பிரிந்தார்."கேரளாவின் அஜிதாவின் தந்தை,குன்னிகல் நாராயணனும், தாய் மந்தாகினியும்" ஏகாதிபத்தியமே பிரதான முரண்பாடு என்றும், ஆயுதம் தாங்கிய தாக்குதல்களை நேரடியாக அரசு மீது நடத்தவேண்டும் எனவும், ஒரு தந்திரத்தை முன்வைத்து பிரிந்தனர். அப்போதுதான் "அடுத்த அறுவடை நமக்கே" என்ற தோழர் சாருவின் முழக்கத்தை ஏந்திய இந்திய விவசாயிகள், அதற்கு தடையாக இருந்த பண்ணைப் பிரபுக்களை ஆயுதம் தாங்கி  அழித்து, அறுவடையை கைப்பற்றினர்.

                        அத்தகைய நடைமுறையிலிருந்து கற்று, 1969 இல் ஏப்ரல் 22 ஆம் நாள் லெனினது பிறந்த நாளில்,"இந்தியக் கம்யுனிஸ்ட் கட்சி[ மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்] என்ற புரட்சிகர தலைமறைவு கட்சியை தோழர் சாருமசும்தார் தொடங்கினார். அதன் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அந்த கட்சியின் செயல் தந்திரமாக " வர்க்க எதிரிகளை அழித்தொழிக்கும்" கொரில்லா போர்முறையை, மேற்குறிப்பிட்ட விவசாயிகளின் போராட்ட நடைமுறையிலிருந்து கற்று, கட்சிக்கு வழிவகுத்தார். தொடர் எதிர்களின் "சுற்றிவளைத்த " தாக்குதல்களால், படுகொலை செய்யப்பட தோழர்களது பட்டியலில், 1972 இல் தோழர் சாருமசும்தாரும் சேர்க்கப்பட்டார். அதனால் இந்த நாள் "தியாகிகள் தினமாக" கடைப்பிடிக்கப்படுகிறது. 

Wednesday, July 22, 2015

ஜூலை-23.1999.படிப்பினைகள்...[ தொடர்ச்சி..]

ஜூலை-23.1999.படிப்பினைகள்...[ தொடர்ச்சி..]
--------------------------------------------------------------------
                     பேரணியையும், கூட்ட நெரிசலையும் கண்ட தமிழ் மாநிலக் காங்கிரசின் வில்லிவாக்கம் ச.ம.உ. ஜே.எம்.ஹாரூன் ஏற்கனவே ஜீப்பிலிருந்து இறங்கியிருந்ததால், ஜீப்பிற்கு முன்னே சென்று காவல்துறை அதிகாரிகளிடம் பேசி, மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ,பேரணித் தலைவர்களை அழைத்துச் செல்வதற்கான முயற்சியில் இருந்தார். ஊர்வலத்தின் பின்புறம் எதோ தகராறு நடக்கிறது. முன்புறம் காளர்கள் மரிப்பது போல பேரணியை முன் செல்ல விடாமல் இருக்கின்றனர்.திடீரென வலதுபுறம், ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு உள்ளே இருந்து, "கற்கள்" ஜீப்பை நோக்கியும், தலைவர்களை குறி வைத்தும், தொடர்ந்து எறியப்படுகிறது. தொண்டர்கள் கிருஷ்ணசாமியை காப்பாற்றவும், மற்றும் தலைவர்களை காப்பாற்றவும், ஜீப்பில் ஏறி, தங்கள் உடல்களால் மூடி மறைத்துக் கொள்கிறார்கள்.திடீரென ஆட்சித் தலைவர் அலுவலகத்தின் உள்ளிருந்து, ஒரு காவலரின் "துப்பாக்கி" குண்டு ஜீப்பை நோக்கி பறந்து வந்து முட்டி கீழே விழுகிறது. இந்த நேரத்தில்,"ஆல்பா,பாட்டா" என்று ஒரு "கட்டளை" அதிரடி காவல்துறைக்கு வாய் மூலம் குரலாக கொடுக்கப்படுகிறது. இதை கீழே நின்ற ஹாரூன் பாய் மட்டுமே கேட்டு பிறகு பதிவு செய்கிறார்.அந்த கட்டளை சொற்களுக்கு கட்டுண்ட காவல் அதிரடிப் படை பேரணி மீது கண்டபடி தாக்கத் தொடங்குகின்றனர்.

     சிதறி மக்கள் எல்லாம் ஓட, தாமிரபரணி ஆற்றை நோக்கி ஓடுகின்றனர். அப்போது ஒரு "கல்" ஜீப்பின் ஓட்டுனர் மீது வந்து விழுகிறது.அடி தாங்க மாட்டாமல் பயந்துபோன ஓட்டுனர்,ஜீப்பை கண்டபடி ஒட்டி,தலைவர்களும் அவர்களை காப்பாடர வந்த தொண்டர்களுடனும், கொக்கிரகுளம் ஊருக்குள் நேரே சென்று, இடதுபுறம் திருப்பி, ஆட்சித் தலைவர் அலுவலகம் பின்னால் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சென்று நிறுத்துகிறார்...பிறகு நடப்பதும்..மய்ர்கூசெரியும் செய்திகள்தான்...[ நான் இப்போது பணிக்கு செல்கிறேன்...வந்து எழுதுகிறேன்...மன்னிக்கவும்]
     

ஜூலை -23, 1999 தந்த படிப்பினைகள்.

ஜூலை -23, 1999 தந்த படிப்பினைகள்.
-------------------------------------------------------------
        அன்று  நெல்லை சந்திப்பிலிருந்து கிளம்பிய "மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கை "பேரணி அமைதியாகத்தான் சென்று கொண்டிருந்தது. முந்தியநாள் வரை அனுமதி மறுத்த காவல்துறை கடைசியாக அனுமதி தந்தது. சந்திப்பு புகைவண்டி நிலையத்திலிருந்து புறப்பட்டு, அம்பேத்கர் சிலை, அன்றைய பேருந்து நிலையத்தை சுற்றி, எட்டப்பனாயகர் சாலை வழியாக, சுலோச்சனமுதலியார் பாலம் வழியாக கொககிரகுளம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை அடைவது என்பதுதான் பேரணியின் பாதை. அதிக தூரம் இல்லை. தொடர்ந்து நடந்துவந்த மாஞ்சோலை தோட்டத் தொழிலாளரது போராட்டங்கள், "தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு" தலைவரும், ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. யுமான டாக்டர் க.கிருஷ்ணசாமியால் தலைமை தாங்கப்பட்டது. அப்போது சட்டமன்றத்தில் "தேவேந்திர சங்கம்" என்ற பெயரில்தான் அவர் சட்டமன்ற உறுப்பினராக பதிவாகி இருந்தார்..

           1995 ஆம் ஆண்டு கொடியங்குளம் கிராமத்தில் காவல்துறை புகுந்து நடத்திய அட்டூழியத்தால், கிளர்ந்து எழுந்த தேவேந்திர மக்கள்,மருத்துவர் கிருஷ்ணசாமி தலைமையில், மாநிலமெங்கும் ஒரு பெரும் எழுச்சியாக மாறி, அதுவே ஒரு பெரும் இயக்கமாக ஆனது. 1996 இல் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் நின்ற கிருஷ்ணசாமி வெற்றி பெற்று, சட்டமன்றம் சென்றார்.நாடாளுமன்றத் தேர்தலில் தென்காசி தொகுதியில், அருணாச்சலத்தை எதிர்த்து நிற்கும்போது, அம்பாசமுத்திரம் தொகுதியில் உள்ள மாஞ்சோலைக்கு வாக்கு கேட்டு சென்றார். அப்போது அங்கிருந்த தேவேந்திர மக்கள் தங்கள் சமுதாயத் தலைவரிடம் வைக்கும் கோரிக்கையாக, தாங்கள் எப்படி "கொத்தடிமைகளாக" தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்கிறோம் என்பதை
விளக்கினார்கள்.அவர்களிடம் அப்போது கொடுத்த வாக்குறுதிப்படி அவர்களது "கூலி உயர்வு, வேலை நேரம்,பிரசவ விடுப்பு, சுதந்திரமான நடமாட்டம்" போன்ற கோரிக்கைகளை அடிப்படையாககே கொண்டு, முதலில் ஒரு "நடைப்பயணம்" மலையிலிருந்து, கீழே வந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வரை நடததப்பட்டது. இவ்வாறு அறவழியில், தொடர்ந்து நடத்தப்பட்ட போராட்டங்களை, "பாம்பே-பர்மா ட்ரேடிங் கார்பரேசன்" என்ற ஆளை நிர்வாகம் எந்த கோரிக்கைக்கும் இறங்குவதாக இல்லை.

               அன்று நடந்த தி.மு.க. ஆட்சியில், உள்ளபடியே கிருஷ்ணசாமிக்கு நல்ல மரியாதை இருந்தது. காரணம் அ.இ.அ.தி.மு.க. ஆட்சியை தூக்கி எரித்ததில், தி.மு.க. ஆட்சியை கொண்டு வந்ததில், இந்த இயக்கத்திற்கு நல்லதொரு பங்கு இருந்தபோதும், முதல்வர் கருணாநிதி "தோட்ட நிர்வாகத்துடன்" மிக நெருக்கமாக இருந்ததால், மருத்துவருக்கு எதிரான "தவறான கருத்துகளை" அன்றைய எதிர்க்கட்சி தலைவரான, மூப்பனார் கட்சியை சேர்ந்த சோ.பாலகிருஷ்ணனிடம் முதல்வர் கலைஞர் கூறியுள்ளார். இதை சோ.பாலகிருஷ்ணனே பிறகு கூறியதால் தெரிய வந்தது. அதனால் மாஞ்சோலை தோட்டத் தொழிலலர்களது க்நியாயமான கோரிக்கைகள் நிறைவேற வில்லை. கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையில் இருந்த மாஞ்சோலை தொழிலாளர்களை விடுதலை செய்யவும் சேர்த்தே அந்த பேரணி நடத்தப்பட்டது.

       சென்னையில், மாரிஸ் விடுதியில், கூட்டப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில், ஜி.கே.மூப்பனார், நல்லகண்ணு,சி.பி.ஐ., சி.பி.எம்.தலைவர்கள், என பல கட்சிகளும் சேர்ந்து எடுத்த முடிவுப்படியே அன்றைய நெல்லை பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது. பேரணிக்கு முந்திய நாளே, முதல்வரது உத்தரவுப் படி,"பேரணியில் அணைத்து தலைவர்களையும்" கைது செய்யக் கூறி, வந்த வழிகாட்டலை, மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் திட்டமிட்டது என்பது பிறகு தெரிய வந்தது. அதன்படியே பேரணியில் வருவோரை, கற்கள் கொண்டும், துப்பாக்கி கொண்டும் "தாக்குவது என்ற திட்டம் போடப்பட்டது தெரியவருகிறது. பேரணி புறப்படும்போது அப்படி எதுவுமே நமக்கு தெரியவில்லை. பேரணியில் முன் வந்த "ஜீப்"இல் 7 எம்.எல்.ஏ.க்கள் கிருஷ்ணசாமி,சோ.பாலகிருஷ்ணன், அப்பாவு, சேர்மாதேவி எம்.எல்.ஏ., ஜே.எம்.ஹாரூன், ஈஸ்வரன்,உட்பட சி.பி.எம்.கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் பழனி, ஆகியோருடன், நானும்,நடிகர் மன்சூர் அலி கான் போன்றோரும் இணைந்து சென்றோம். ஜீப்பில் இருந்து இரங்கி சென்ற என்னை,"முழக்கம்" போடா  தொண்டர்கள் வாகனம் மீது ஏற்றிவிட, மன்சுரையும் கீழே இறக்கி கூட்டத்தை வாகனத்திலிருந்து குறைக்க, ஜே.எம்.ஹாரூன் கீழே இறங்கி கூட்டத்தை ஒழுங்கு படுத்த சென்று விட்டார்.  முழக்கங்களை "ராகத்துடன்" நான் போட, தோழர்கள் அனைவரும் முறையாக ஆடி,பாடிக் கொண்டு, முழக்கங்களை எழுப்பினார்கள்.இப்படித்தான் அமைதியாக ஆனால் உற்சாகமாக பேரணி சென்று கொண்டு இருந்தது.

     "  மாஞ்சோலை தொழிலாளி, காரு,பங்களா கேட்டானா? உங்கப்பன் சொத்தை கேட்டானா? கூலி உயர்வு கேட்டதற்காக கைது செய்வது நியாயமா?--"என்பதுபோன்ற முழக்கங்களை எழுப்பி வந்தோம். அப்பாவு உற்சாகத்தில், "தனியார் ஊடகத்தில் பங்கு கேட்டானா?" என்ற பொருளில் முழக்கம் போட கூறினார். அதையும் போட்டோம்.இவாறு மெல்ல ஊர்ந்து சென்று கொண்டிருந்த பேரணி, மேம்பாலத்தை தாண்டி, சென்றது. கொக்கிரகுளம் முக்கில்,எம்.ஜி.ஆர். சிலை அருகே சிறிது நின்று விட்டு, ஆற்றுக்கு அருகே செல்லும் சாலையில், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் நோக்கி சென்றது. அப்போது பேரணிக்கு இருபுறமும்,"காவலர் படை" வரிசையாக நிறுத்தப்பட்டது. அதன் சூட்சுமத்தை நாங்கள் அப்போது எண்ணிப் பார்க்க வில்லை.அந்த சிறிய சாலைக்குள்,ஒருபுறம் "ஆறு " ஓடுகிறது. இன்னொரு புறம், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்னே உள்ள சுவர். இடையில் வருகின்ற பேரணிக்கு, இருபுறமும் குறிப்பாக சுவர் பக்கத்தில், {தமிழ்நாடு ஓட்டல் அங்கே இருக்கிறது} எதற்காக காவலர்கள் நிறுத்தப்பட வேண்டும்? பேரணி மக்களை "நதியை நோக்கி" தள்ளிவிட அப்போதே அவர்களிடம் ஒரு "சதித் திட்டம்" இருண்டஹ்து என்பது பிறகு புரிய முடிந்தது.

    [ தொடர்ந்து நடந்ததை நாளை எழுதுகிறேன்.மன்னிக்கவும். நேரமில்லை.]

          

5 ஆவது வன்னிப்போருகாக தயாராகிறோமா?

புலி கிலி உண்மையா? 5 ஆவது வன்னிப்போருகாக தயாராகிறோமா?
------------------------------------------------------------------------------------------------------------
    40 சயனைடு குப்பிகளுடன் ஒருவர் ராமேஸ்வரம் தீவில், உச்சிபுளியில் கைது என்கிறது காவல்துறை. யார் அவர்? அவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு உதவியாளர் என்றும் சில ஏடுகள் அச்சிட்டுள்ளன. இவையெல்லாம் உண்மையா? ஆயுதப் போராட்டம் மீண்டும் வராதா? ஈழம் அப்போதுதான் விடுதலை பெறும் என்று எண்ணும் சிலர் இந்த செய்தியை கேள்விப்பட்டு பெருமகிழ்ச்சி அடைகிறார்கள். நமக்கு மட்டும் என்ன? அப்படி ஒன்று நடந்தால் மகிழ்ச்சிதானே? ஆனால் உண்மை நிலை என்ன? இப்போது இலங்கை தீவு நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொண்டு வருகிறது. வருகிற ஆகஸ்ட்  மாதம் 17 ஆம் நாள் தேர்தல். அதில்  தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்றஉறுப்பினர்கள், ஒரு "தலைமை அமைச்சரை" தேர்வு செய்வார்கள்.அந்த தலைமை அமைச்சராக இன்று தலைமை அமைச்சராக இருக்கும்  "ஐக்கய தேசிய கட்சியின்" தலைவர் ரணில் விக்கிரமசிங்கே  வருவதற்காக பிரும்ம பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளார். அவரை கொண்டு வர அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் உறுதி பூண்டுள்ளன. ஆனால் மஹிந்த ராஜபக்சே தான் பிரதமராக வந்தால் மட்டும்தான் தன மீதான அனைத்து வழக்குகளையும், காலி செய்யமுடியும். அப்போதுதான் உலக சமூகத்தை தனக்கு எதிராக் திருப்பி உள்ள சக்திகளிடமிருந்து,தப்பிக்க முடியும். இப்படி எண்ணிப் பார்த்து "தான்தான் தலைமை அமைச்சராக" வரவேண்டும் என்பதற்கான வேலைகளை செய்துவருகிறார் ராஜபக்சே..

       இந்த நேரத்தில் மூன்று நாட்கள் முன்னாள், ராஜபக்சே ஒரு "புரளியை" கிளப்பி விட்டுள்ளார். "புலிகள் மீண்டும் உருவாக்கி வருகிறார்கள்" ஆபத்து அதிகம் இருக்கிறது. இதுதான் இன்று ராஜபக்சே "சிங்கள" மக்கள் மத்தியில் கிளப்பிவிடும் பீதி. அதன்மூலம் அவர்களது வாக்குகள் தனக்கு மட்டுமே விழுவதற்கு அவர் தயார்படுத்த தொடக்கி விட்டார்.அதற்காக அவர் சில நம்பகமான ஆதாரங்களை மக்கள் மத்தியில் குறிப்பாக சிங்கள மக்களான வாக்காளர்கள் மத்தியில் நிரூபிக்க வேண்டுமே? ராஜபக்சேக்கு உதவி செய்ய இப்போது யார் இருக்கிறார்கள்? பாகிஸ்தான் இருக்கிறது. சீனா இருக்கிறது. அது போதுமா? அமெரிக்கா முழுமையாக் இறங்கி,ரணிலுக்கு வேலை செய்யும்போது தனக்கு யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று சுற்று முட்டும் பார்ககிறார்.அப்போது தென்பட்டதுதான் இந்திய வெளிவிவகார அமைச்சகத்தின் உளவு துறையான "ரா" அமைப்பு.

      ஏற்கனவே நடந்து முடிந்த "அதி[பர"தேர்தலில் இந்திய உளவு துறையான "ரா" தனக்கு எதிராக வேலை செய்ததாக குற்றம் சாட்டியவர்தான் மகிந்தா.. அப்போது "ரா" அதற்கு மறுப்பு கொடுத்தது.ஆனாலும் அதிபராக வெற்றிபெற்ற மைத்திரிபால சிரிசேனா,தனது விசுவாசத்தை காட்ட, முதல் பயணமே "இந்தியாவிற்கு" என்பதாக நிகழ்த்தி காண்பித்தார். இப்போது மகிந்தா, மைதிரிபாலா, சந்திரிகா ஆகியோர் இருக்கின்ற "இலங்கை சுதந்திர கட்சியும், ஐக்கிய இலங்கை மக்கள் கூட்டணியும்" மகிந்தாவின் செல்வாக்கில் உள்ளன. அதில் உள்ள பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகிந்தா விசுவாசத்தை காட்டி வருகின்றனர். அதனால்தான் மைதிரிபாலாவும், ராஜபக்சேவின் "வேட்புமனுவை" எதிர்க்காமல், ஆதரிக்க வேண்டிய நிலைமை உருவாக்கி உள்ளது. அவர்களது "கள்ள, அல்லது நேரடிஉறவு", வெற்றிக்கு," புலி என்ற கிலியை" சிங்கள மக்கள் மத்தியில் கிளப்ப வேண்டியிருக்கிரது. ஏற்கனவே "புலிகளை வெற்றி பெற்றவர் மஹிந்தாதான்" என்ற உணர்வே சிங்கள மக்கள் மத்தியில் அதிகமாக காணப்படுகிறது.அதனால் மீண்டும் புலி வருகிறது என்று மக்களை நம்ப வைத்து விட்டால் தென்னிலங்கை  சிங்கள மக்கள் மீண்டும் ராஜபக்சேவையே தேர்வு செய்வார்கள்.என்பதே ராஜபக்சே கும்பலது எண்ணம்.

       இந்த நேரம் "சிவாஜிலிங்கம்" ஒரு தந்திரம் எடுத்துள்ளார். ராஜபக்சேவிற்கு எதிராக அவரது தொகுதியிலேயே நிற்கிறார். அது சிங்கள தொகுதி. ஆனாலும் இந்த தேர்தலை பயன்படுத்திக் கொண்டு,"சிங்கள மக்கள் மத்தியில் இறங்கி பரப்புரை செய்யமுடியாது என்றாலும், தான் வானொலி மூலம் ராஜபக்சே எந்த அளவு இன அழிப்பு, போர்குற்றங்கள் புரிந்துள்ளார்" என்பதை வெளிப்படுத்துவேன் என்று அவர் கூறியுள்ளார். இது கண்டிப்பாக ராஜபக்சேவிற்கு ஒரு சவால்தான்.அதனை எதிர்கொள்ள ராஜபக்சே ஒரு தந்திரம் செய்துவிட்டார். அதாவது ஊடகங்கள் மூலம்,"ராஜபக்சேவை எதிர்த்து, பிரபாகரனின் உறவினர் சிவாஜிலிங்கம் நிற்கிறார்" என்று பரப்ப தொடக்கி உள்ளார். சிவாஜிலிங்கம் "டெலோ" அமைப்பை சேர்ந்தவர். அவர் வல்வெட்டிதுறைகாரர்  என்பதும், பிரபாகரனுக்கு உறவினர் எனபதும் வேறு விஷயம்.ஆனாலும் சிவாஜிலிங்கம் டெலோவின் எம்.பி.யாக இருக்கும்போது, பிரபாகரனின் உறவினர் என்று இவர்கள் உட்பட இதே ஊடகங்கள் கூறினார்களா? இல்லையே? சிவாஜிலிங்கம் வடக்கு மாகாணசபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டபோது பிரபாகரனின் உறவினர் என்று இவர்கள் கூறினார்களா? இல்லையே? பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை, அவரது உடல் நிலை மோசமான போது சிவாஜிலிங்கம்  கவனித்து வந்தாரே அப்போது இவர்கள் எல்லாம், சிவாஜிலிங்கத்தை பிரபாகரனின் உறவினர் என்று கூறினார்களா? இல்லையே? இப்போது ராஜபக்சேவின் கூற்றான " புலிகள் மீண்டும் வந்துள்ளனர்" என்ற பீதியை சிங்கள மக்கள் மத்தியில் உறுதிப்படுத்த சிவாஜிலிங்கம் பற்றி "புதிய கோணத்தில்" பரப்புரை செய்கிறார்கள்.
 அதற்கு ஊடகங்களும் "பலி" ஆகிறார்கள்.


     இந்த நேரத்தில்தான் திடீரென ஒருவர் 40 சயனைட் குப்பிகளுடன் இலங்கை செல்ல முயற்சிக்கும்போது பிடிபடுகிறார். அதாவது இலங்கை சென்று "புலிப்படையை திரட்டி தாக்குதல் நடத்த புலிகளின் வழமையான பாணியான சயனைடு குப்பிகளை" ஏந்திவரும் சாகத் தயாரான புலிப் படைப் பொடியன்கள் இருப்பதாக காட்டுவதற்கு இந்த "நாடகம்" உதவும் அல்லவா? அப்படியானால் இந்த நாடகத்திற்கு ஆள்களை "தயார்" செய்தது ராஜபக்சேவின் உளவாளிகள் மட்டுமா? இந்திய அரசின் உளவு துறையின் துணையுடனா? ராஜபக்சேவிற்கு எதிராக் மைதிரிபாலாவிற்கு அதிபர் தேர்தலில் உதவியதாக "குற்றம்" சாட்டப்பட்ட  "ரா"பிரிவு, பிராயச்சித்தமாக இப்போது அதே "மைதிரிபாலா, ராஜபக்சேவுடன்" இணைந்து கொண்டதால், தாராளமாக அவர்களுக்கு உதவ, இந்த "நாடகத்தை" வசனம், எழுதி, தயாரித்து நடத்தி காட்டியுள்ளனரா? அதுவும், இலங்கையில், தென்னிலங்கை சிங்கள மக்களின் வாக்குகள்தான் "நாடாளுமன்ற தேர்தலில் தீர்மானிக்கும்" என்று கணித்து, அதனால் ராஜபக்சேதான் வருவார் என புரிந்துகொண்ட, "ரா" அதிகாரிகள் அதற்கேற்ற வகையில், இதை செய்துள்ளனரா? 

Dinamalar Founder Mr.Ramasubbaiyar Birthday Tribue

தினமலர் ஆசிரியரும், நிறுவனருமான  திரு.ராமசுப்பைய்யருடன் பழகிய நாட்களை எண்ணிப் பார்க்கிறேன்.திருநெல்வேலி, சந்திப்பில், ஸ்ரீபுரம் தெருவில், நான் எனது தாத்தா வழக்கறிஞர் கே.வி.நாராயணன் அவர்களது வீட்டில் பிறந்து வளர்ந்த போது பள்ளி வகுப்பு முடித்தபோது,கல்லூரி வாழ்க்கையை தொடங்கிய காலம், எங்கள் வீட்டு எண் 24 என்றால், தினமலர் ராமசுப்பய்யர் அவர்கள் அப்போது வாடகைக்கு இருந்த வீட்டு எண் 23. அப்போது தினமலர் நெல்லையிலும் ஆழமாக கால் பாதிக்கும் காலம். எளிமையாகவும், எளிதாக பேசுபவராகவும் அய்யா இருப்பார்.

        46 ஆண்டுகளுக்கு முன்பு...1971 ஆம் ஆண்டு. தேர்தல் நாடெங்கும் வரும் நேரம்.நான் புரட்சிகர இடதுசாரி கருத்துக்களை தாங்கி வளர்ந்தேன். அவர் முழுமையாக நேர் எதிரான கருத்துகளை குறிப்பாக "ஜனசங்கத்தின்" கருத்துக்களை கொண்டிருந்தவர் என்பதுதான் எனது புரிதல்.ஆனாலும், "இண்டிகேட்,சிண்டிகேட்" என்று இந்திரா காங்கிரசும், நிஜலிங்கப்பா, காமராஜ் தலைமையில் சிண்டிகேட்  காங்கிரசும் தேர்தல் களத்தில் இறங்கியிருந்தன. தேர்தலை புறக்கணிக்கும் கருதது கொண்ட நான் மக்கள் மத்தியில் , தேர்தல் முக்கிய அரசியல் விவாதமாக இருந்ததால், அதிலும் "நமது கருத்தை"கூறவேண்டுமே என்பதற்காக, ஆளும் "இந்திரா காங்கிரசை" எதிர்த்து பரப்புரையில் இறங்கினேன்.

        இந்திரா காந்தி தலைமையில், இந்த நாடு எப்படி "அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு" அடகு வைக்கப்படுகிறது என்பதை பல்வேறு "ஆதரங்களுடன்" 10 க்கு மேற்பட்ட ""தட்டிகளை" தயார் செய்து, அவற்றில்,ஒவ்வொன்றிலும், "புள்ளிவிவரத்துடன்" நாட்டை ஆள்வோரது கட்சி, ஏகாதிபத்திய தரகு முதலாளிகளுடைய நலன்களுக்காக் இருக்கிறது என்று அம்பலப்படுத்தினேன். அந்த "நீளமும், சிவப்பும்" கலந்த எழுத்துக்களால் உள்ள "தட்டிகளை" ஸ்ரீபுரம் தெரு துவங்கும் இடத்தில, "நெல்லையப்பர் நெடுஞ்சாலை" முக்கில்,"தட்டிகளை" கட்டி வைத்தேன்.அங்கெ ஒரு மேலப்பாளையம் பாயுடைய கடை உண்டு. அதன் அருகே அந்த காலத்தில்,அந்த தட்டிகள் பெரிய அளவில் "இந்திரா காங்கிரசை" எதிர்த்து, டேஹ்ர்தல் நேர பரப்புரகளாக அமைந்தன.

       அந்த தட்டிகளை படித்துப் பார்த்த திரு.ராமசுப்பய்யர் அவர்கள் என்னைப் பாராட்டினார். என்னிடம் பல நாட்டு விசயங்களை பற்றி நிறைய பேசுவார். எல்லையில், இந்திய ராணுவம் சீனாவுடன் நடந்த சண்டையில், எப்படி பலவீனமாக இருந்தது என்று "நேரு காலத்தை" பற்றி பல குறைகளை எடுத்து சொல்லுவார். அந்த நேரம் ஒருநாள்,சிந்துபூந்துறையில், "சிண்டிகேட் காங்கிரஸ்" கட்சியின் பொதுக கூட்டம் சென்றேன், அதில் பேசிய,வழக்கறிஞர் மங்கள்ராஜ்,"ஸ்ரீபுரம் தெரு முக்கில்" போய் பாருங்கள்,அங்கே வைக்கப்பட்டுள்ள தட்டிகள் எந்த அளவுக்கு அரசியல் புள்ளி விவரங்களை  கூறுகின்றன" என்று பாருங்கள் என பேசினார். எனக்கு மகீழ்சசியாக இருந்தது.

Sunday, July 19, 2015

கடற்கரையையே விததுப்போட்டானுகளா?


 "மெரினா கரையிலே, நடந்தா காத்துல, கலந்தா மூச்சுல, கவுந்துட்ட மாப்பிள"..என்ற பாடலை "சிறைக்குள்" ஆர்யாவும், விஜய் சேதுபதியும்,மற்ற சிறைவாசிகளுடன் பாடினாங்கன்னா,  அது "புறம்போக்கு எனும் பொதுவுடைமை" எனும் திரைப்படம் என்று கூறுவீர்கள். அந்த பாட்டை ரசித்து சிறைவாசிகள் பாடிக்கொண்டிருந்தாலும், அவர்களை உற்றுப் பார்த்துக்கொண்டே, "கண்காணித்து" வருபவர் நடிகர் "ஷாம்" என்று கூறிவிடுவீர்கள். ஆனால் அந்தப் படம் எடுக்கும்போது இருந்த "மெரினா கடற்கரை" இனி கிடையாது, அல்லது கிடைக்காது அல்லது இருக்காது என்று கூறுகிறார்களே? ஏன் இந்த வில்லங்கம்?

          சென்ற வாரம் நாமெல்லாம் கவனிக்காத ஒரு செய்தி நாளேடுகளில் வந்தது. அதாவது நமது "சென்னை மாநகராட்சி" கூடியபோது, "மெரினா நீச்சல் குளத்தை" தனியார் நிறுவனத்துக்கு, "ஏலத்தில் அல்லது குத்தகைக்கு" கொடுத்துவிட்டோம் என்ற முடிவு. அடுத்து, மெரினா கடற்கரையை "பராமரிக்க" "ரிலையன்ஸ்" நிறுவனத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் கொடுத்து விட்டார்கள். இதுபோல தனியார் நிறுவனங்களுக்கு "மூன்று பூங்காகளை" கொடுத்துள்ளனர். யார் இந்த மாநகராட்சிகாரர்கள்? இவர்கள் எப்படி சென்னையின் "பாரம்பரியமான" கடற்கரையை யாரோ தனியாருக்கு "தாரை" வார்க்க? இப்படி கேள்விகள் எழுகின்றன. சென்னையிலுள்ள "மெரினா கடற்கரை" நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக மக்களின் பொது சொத்தாகத் தான் இருந்துவருகிறது. சமீப காலம்   வரை, கடற்கரை "பொதுப்பணித்துறையின்" கட்டுப்பாட்டில்தான் இருந்தது. இன்னமும் சொல்லப்போனால், "சீரணி அரங்கம்" இருந்த காலத்தில், அதில் கூட்டம்போட  காவல்துறை அனுமதி பெறுவதுபோல, "கலங்கரை விளக்கம்" அருகே கூட்டம் போடவும், ஒருவர் "பொதுபணிதுறை" அனுமதியை வாங்கவேண்டும் என்ற பழக்கம் இருந்தது. அந்த பொறுப்பை "பொதுப் பணித்துறை" சரியாக கவனிக்கவில்லை என்று கூறி, அந்த கடற்கரை பராமரிப்பை, "மாநகராட்சிக்கு" கைமாற்றி கொடுத்தார்கள்.

    சமீபத்தில் "சீனா" சென்று வந்த சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி அவர்கள், அங்கே சீனாவில் "என்னவெல்லாம் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்" போட்டுவிட்டு வந்தார் என்பது இதுவரை தெரியவில்லை.இப்போது சென்றவாரம் மாநகராட்சி கூட்டத்தில் இதுபோன்ற ஒரு தீர்மானத்தை கொண்டுவந்து அனுமதி அளித்துள்ளார்கள். அதன்மூலம் "மெரினா"வை "ரிலையன்சுக்கு" ஒப்பந்தம் செய்து  "பராமரிப்புக்கு" என்ற பெயரில் கொடுத்துள்ளார்கள். ரிலையன்ஸ் நிறுவனம் இந்த நாட்டிற்கு "நல்லது" செய்வதற்காக உருவானதா? அல்லது தனியார் "லாபம்" ஈட்டுவதற்காக உருவானதா? அவர்களுக்கு சென்னை மக்கள் சுதந்திரமாக மெரினா கடற்கரையை பயன்படுத்த வேண்டும் என்று எண்ணுவதற்கு எனன "தலைவிதியா?" அதை வைத்து எந்தளவுக்கு "காசு" பார்க்கலாம் என்று எண்ணுவார்களா?

       இப்போது மெரினா கடற்கரையில், மணலில், காந்தி சிலை அருகே உள்ள,"சஹார ரெஸ்டாரன்ட்"இன் அருகே உள்ள மணலில் "நீளமான குழி" தோண்டி  "குழாய்களை" பதித்து விட்டார்கள். அந்த குழாய்கள் "தண்ணீர்" கொண்டுவரும் என்றும், அதை வைத்து "கடற்கரையை பராமரிப்போம்" என்று அதன் மேலாளர் நம்மிடம் இன்று கூறினார். உங்கள் " திட்டம்" வரைபடம் கொடுங்கள் என்று கேட்டோம். அதற்கு "இன்னமும் எங்கள் திட்டத்திற்கு அனுமதி" பெறவில்லை.நாங்கள் அனுமதிக்காக எங்கள் திட்டத்தை மாநகராட்சியிடம் கொடுத்துள்ளோம் என்று கூறினார். அதாவது திட்ட ஒப்புதல் பெறாமலேயே   ரிலையன்ஸ் நிறுவனம் "கடற்கரையை" தோண்ட தொடங்கிவிட்டனர். எந்த தைரியத்தில், யாருடைய பின்னணி பக்க பலத்தில், அவர்கள் கடற்கரையை "தோண்ட" துவங்கினர்?

             ஏற்கனவே  இதே "ரிலையன்ஸ் நிறுவனம்" மயிலாப்பூர் லஸ் தொடக்கி, கச்சேரி சாலை வழியாக,சாலையின் நடுவில் "இரவு" நேரத்தில் நீண்ட குழிகளை தோண்டி அதை மெரினா நோக்கி கொண்டுவந்ததும், அதை எதிர்கொண்டு கேள்வி கேட்டவர்கள், அதற்கு தற்காலிக "முற்றுப்புள்ளி" வைத்ததும் நமக்கு தெரியும். இந்த "பகிரங்க" ஏலம் விடுதலை தஹ்டுது நிறுத்த யார் "பூனைக்கு மணி" கட்டப் போகிறார்கள்?.
------------------------------------------------------------------
  மெரினா கரையிலே, நடந்தா காத்துல, கலந்தா மூச்சுல, கவுந்துட்ட மாப்பிள..என்ற பாடலை "சிறைக்குள்" ஆர்யாவும், விஜய் சேதுபதியும்,மற்ற சிறைவாசிகளுடன் பாடினாங்கன்னா,  அது "புறம்போக்கு எனும் பொதுவுடைமை" எனும் திரைப்படம் என்று கூறுவீர்கள். அந்த பாட்டை ரசித்து சிறைவாசிகள் பாடிக்கொண்டிருந்தாலும், அவர்களை உற்றுப் பார்த்துக்கொண்டே, "கண்காணித்து" வருபவர் நடிகர் "ஷாம்" என்று கூறிவிடுவீர்கள். ஆனால் அந்தப் படம் எடுக்கும்போது இருந்த "மெரினா கடற்கரை" இனி கிடையாது, அல்லது கிடைக்காது அல்லது இருக்காது என்று கூறுகிறார்களே? ஏன் இந்த வில்லங்கம்?

          சென்ற வாரம் நாமெல்லாம் கவனிக்காத ஒரு செய்தி நாளேடுகளில் வந்தது. அதாவது நமது "சென்னை மாநகராட்சி" கூடியபோது, "மெரினா நீச்சல் குளத்தை" தனியார் நிறுவனத்துக்கு, "ஏலத்தில் அல்லது குத்தகைக்கு" கொடுத்துவிட்டோம் என்ற முடிவு. அடுத்து, மெரினா கடற்கரையை "பராமரிக்க" "ரிலையன்ஸ்" நிறுவனத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் கொடுத்து விட்டார்கள். இதுபோல தனியார் நிறுவனங்களுக்கு "மூன்று பூங்காகளை" கொடுத்துள்ளனர். யார் இந்த மாநகராட்சிகாரர்கள்? இவர்கள் எப்படி சென்னையின் "பாரம்பரியமான" கடற்கரையை யாரோ தனியாருக்கு "தாரை" வார்க்க? இப்படி கேள்விகள் எழுகின்றன. சென்னையிலுள்ள "மெரினா கடற்கரை" நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக மக்களின் பொது சொத்தாகத் தான் இருந்துவருகிறது. சமீப காலம்   வரை, கடற்கரை "பொதுப்பணித்துறையின்" கட்டுப்பாட்டில்தான் இருந்தது. இன்னமும் சொல்லப்போனால், "சீரணி அரங்கம்" இருந்த காலத்தில், அதில் கூட்டம்போட  காவல்துறை அனுமதி பெறுவதுபோல, "கலங்கரை விளக்கம்" அருகே கூட்டம் போடவும், ஒருவர் "பொதுபணிதுறை" அனுமதியை வாங்கவேண்டும் என்ற பழக்கம் இருந்தது. அந்த பொறுப்பை "பொதுப் பணித்துறை" சரியாக கவனிக்கவில்லை என்று கூறி, அந்த கடற்கரை பராமரிப்பை, "மாநகராட்சிக்கு" கைமாற்றி கொடுத்தார்கள்.

    சமீபத்தில் "சீனா" சென்று வந்த சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி அவர்கள், அங்கே சீனாவில் "என்னவெல்லாம் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்" போட்டுவிட்டு வந்தார் என்பது இதுவரை தெரியவில்லை.இப்போது சென்றவாரம் மாநகராட்சி கூட்டத்தில் இதுபோன்ற ஒரு தீர்மானத்தை கொண்டுவந்து அனுமதி அளித்துள்ளார்கள். அதன்மூலம் "மெரினா"வை "ரிலையன்சுக்கு" ஒப்பந்தம் செய்து  "பராமரிப்புக்கு" என்ற பெயரில் கொடுத்துள்ளார்கள். ரிலையன்ஸ் நிறுவனம் இந்த நாட்டிற்கு "நல்லது" செய்வதற்காக உருவானதா? அல்லது தனியார் "லாபம்" ஈட்டுவதற்காக உருவானதா? அவர்களுக்கு சென்னை மக்கள் சுதந்திரமாக மெரினா கடற்கரையை பயன்படுத்த வேண்டும் என்று எண்ணுவதற்கு எனன "தலைவிதியா?" அதை வைத்து எந்தளவுக்கு "காசு" பார்க்கலாம் என்று எண்ணுவார்களா?

       இப்போது மெரினா கடற்கரையில், மணலில், காந்தி சிலை அருகே உள்ள,"சஹார ரெஸ்டாரன்ட்"இன் அருகே உள்ள மணலில் "நீளமான குழி" தோண்டி  "குழாய்களை" பதித்து விட்டார்கள். அந்த குழாய்கள் "தண்ணீர்" கொண்டுவரும் என்றும், அதை வைத்து "கடற்கரையை பராமரிப்போம்" என்று அதன் மேலாளர் நம்மிடம் இன்று கூறினார். உங்கள் " திட்டம்" வரைபடம் கொடுங்கள் என்று கேட்டோம். அதற்கு "இன்னமும் எங்கள் திட்டத்திற்கு அனுமதி" பெறவில்லை.நாங்கள் அனுமதிக்காக எங்கள் திட்டத்தை மாநகராட்சியிடம் கொடுத்துள்ளோம் என்று கூறினார். அதாவது திட்ட ஒப்புதல் பெறாமலேயே   ரிலையன்ஸ் நிறுவனம் "கடற்கரையை" தோண்ட தொடங்கிவிட்டனர். எந்த தைரியத்தில், யாருடைய பின்னணி பக்க பலத்தில், அவர்கள் கடற்கரையை "தோண்ட" துவங்கினர்?

             ஏற்கனவே  இதே "ரிலையன்ஸ் நிறுவனம்" மயிலாப்பூர் லஸ் தொடக்கி, கச்சேரி சாலை வழியாக,சாலையின் நடுவில் "இரவு" நேரத்தில் நீண்ட குழிகளை தோண்டி அதை மெரினா நோக்கி கொண்டுவந்ததும், அதை எதிர்கொண்டு கேள்வி கேட்டவர்கள், அதற்கு தற்காலிக "முற்றுப்புள்ளி" வைத்ததும் நமக்கு தெரியும். இந்த "பகிரங்க" ஏலம் விடுதலை  தடுதது  நிறுத்த யார் "பூனைக்கு மணி" கட்டப் போகிறார்கள்?.இப்ப சொல்லுங்க. கண்காணிக்கும் "ஷாம்" பாத்திரத்தில் இருப்பவர் யார்? சைதையாரா?

Tuesday, July 7, 2015

தென்சென்னை நொச்சிக்குப்பத்தில் மீனவர் வீடுகள் இடிப்பு.அராஜகம்???


      இன்று [ 07-07-2015] காலை 10 மணிக்கு திடீரென 100 ஆயுதங்களுடன் காவல்துறையினர், மயிலாப்பூர் நொச்சிக் குப்பம் வந்திறங்கினர்.அவர்களை,மயிலாப்பூர் உதவி ஆணையர் ரவிசேகரும்,ஆய்வாளர் சிபுகுமாரும் தலைமை தாங்கினர்.அவர்களுக்கு "சம்பளம்" கொடுப்பவர்களாக "குடிசை மாற்றுவாரியம்" நிர்வாக இயக்குனர் நாகேஷ், உதவி பொறியியலாளர் காளியப்பன் அங்கெ வந்திருந்தனர். காவல்துறை அதிகாரிகளுக்குதான் தமிழக அரசாங்கம் "சம்பளம்" கொடுக்குமே? எதற்காக "குடிசை மாற்ற்ய்வாரிய" அதிகாரிகள் "சம்பளமோ,கிம்பலமோ" கொடுக்கவேண்டும்? என்று நீங்கள் வினவலாம். அதுதானே நாங்களும் கேட்கிறோம் என்று நொச்சிக்குப்பம் மக்களும் கூறுகின்றனர்.இவையெல்லாம் ஏன் நடக்கிறது? அந்தக் கதையைத்தான் நாம் கண்டுபிடிக்கவேண்டும்.

        நொச்சிக்குப்பம் மீனவர்களது வீடுகளை கட்டிக்கொடுக்க,1969 ஆம் ஆண்டு அங்குள்ள கடலோர நிலம் "குடிசைமாற்றுவாரியதுக்கு" கடலோர பாரம்பரிய மீனவ மக்களால் "இலவசமாக" கொடுக்கப்பட்டது.மீனவர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கிறோம் என்ற அன்றைய தி.மு.க. அரசால் கொடுக்கப்பட்ட வாக்குறுதியை நம்பி மீனவ மக்கள் அங்குள்ள நிலத்தை ஒப்படைத்தார்கள்."கடலோரமும்,கடலும்" மீனவனுக்கே "சொந்தம்" என்ற முழக்கத்தை மட்டுமே புரிந்திருந்த "கடல்சார் பழங்குடி மக்களான" மீனவர்கள்,"நிலம் சார்ந்த"மக்களைப்போல,தங்கள் நிலங்களுக்கு "தாங்கள் பட்டா"வாங்கி வைக்கவேண்டும் என்ற புரிதல் இன்றியே வாழ்ந்து வருகிறார்கள். அதுவே அவர்கள்,"பழங்குடி ஆதிவாசி" மனோபாவம் கொண்டவர்கள் என்பதற்கு சான்று.

அதனால்தான் 1984 ஆம் ஆண்டு, எம்.ஜி.ஆர். ஆட்சியில், மெரினா கடற்கரை ஓரத்தை "அழகுபடுதப்போகிறோம்" என்ற பெயரில், அதிகாரிகளின் ஆலோசனைப்படி, அரசு மீனவ மக்களின் "கட்டுமரங்களையும்,வலைகளையும்"
அகற்ற்யபோது, "பெருங்கலவரம்" ஏற்பட்டது. நடுக்குப்பம் மீனவர்களை தேவாரம் ஐ.பி.எஸ்.தலைமையில் தாக்கியபோது, இதே நொச்சிக்குப்பம் மீனவர்கள் தேவாரம் தலைமையிலான காவலர்களை "விரட்டி,விரட்டி" அடித்தனர்.மாட்டிக்கொண்ட தேவாரத்தின் உயிரை அன்று காப்பாற்றியது அங்குள்ள மீனவப்பெண்களே ஆனாலும் "சூடு"பட்ட தேவாரம் மீண்டும் ஒரு ஆயுதப்படையை திரட்டி வந்து "துப்பாக்கி சூடு" நடத்தியதும், அதில் "ஆறு மீனவர்கள்" கொலை செய்யப்பட்டதும், நாடறிந்த வரலாறு. அவர்களுக்கான "நினைவுச் சின்னம்" இன்னமும் "அயோத்தியாகுப்பத்தில்" இருக்கிறது.இவாறாக எம்.ஜி.ஆர்.காலத்திலேயே "போராடி தங்களது கடற்கரை மீதான உரிமையை"நிலை நாட்டியவர்கள் அங்குள்ள மீனவர்கள்.இன்னமும் கூறப்போனால், அன்று காவல்துறையை எதிர்த்து போராடியதற்கு தலைமை ஏற்றவர் "கட்டுமர மீனவர் சங்க" செயலாளரான அ.இ.தி.மு.க.வைச் சேர்ந்த ஆர்.விஸ்வநாதன். இவ்வாறு  ஆளும் கட்சிக்காரர்களே "அநியாயமான காவல்துறை அராஜகத்தை" எதிர்த்து, போராடி வென்ற வரலாற்றை  கொண்டவர்களாக இருக்கின்றனர்.

      1969 இல் மீனவர்களால் இலவசமாக கொடுக்கப்பட்ட நிலத்தில் அவர்களுக்கு "அடுக்குமாடி வீடுகளை" கட்டிக்கொடுக்க தி.மு.க. அரசு திட்டமிட்டது. அதுவரை அந்த மக்கள் குடிசை போட்டு வாழ்வதற்கு,"வீட்டிற்கு நாற்பது ரூபாயை" குடிசை மாற்று வாரியம் வழங்கியது.அவாறு "தற்காலிக குடிசைகளை" போட்டுக்கொண்ட மீனவ மக்கள்,1973 இல் கட்டிமுடிக்கப்பட்ட வீடுகளில் 1974 வரை குடியேறினர். 2006 ஆம் ஆண்டு, ஆட்சிக்கு வந்த தி.மு.க.தலைவர் கருணாநிதி, " நான் 1974 இல் கட்டிக்கொடுத்த வீடுகள் நொச்சிக்குப்பத்தில் இப்போது "சிதிலமடைந்த நிலையில்" உள்ளது.சிதிலமடைந்த நிலை என்றால் உடைந்துவிழும்  நிலை என்று அர்த்தம்" என்பதாகவும் கூறி, அதனால் நான் முதலில் அவர்களுக்கு வீடுகள் காட்டிக்கொடுப்பேன்" என்றார். 2006 முதல் 2011 வரை ஆண்ட தி.மு.க  புதிய வீடுகளை கட்டவும் இல்லை.கொடுக்கவும் இல்லை.மாறாக அருகே உள்ள "நொச்சி நகரில்" 600 வீடுகளை ஒரு வீடு 250 சதுர அடி என்பதாக கட்டி முடித்துஉள்ளது. நொச்சிக்குப்பதிற்கு தி.மு.க. ஆட்சி 1200 வீடுகள் கட்டிக் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்திருந்தது.

   ஆனால் அ.தி.மு.க. அரசு வந்த பிறகு, நான்கு ஆண்டுகள் இழுத்தடித்து,சமீபத்தில், 540 வீடுகளை கட்டிக் கொடுப்பதாக கூறியுள்ளது. அவற்றை ஒரு வீடு 400 சதுர அடி என்று கட்டிக் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்தது.இதுவரை நொச்சிக்குப்பம் வீடுகள் கட்டத் தொடங்க வில்லை..நொச்சிநகர் வீடுகளை திறக்க இதனை காலம் கழித்து அரசு சமீபத்தில்தான் திறந்துள்ளது.அதிலும் "மீனவர் அல்லாத சமூகங்களுக்கு பெரும்பான்மையும், மீனவர்களுக்கு 150 வீடுகளும்" இப்போது கொடுக்கப்பட்டுள்ளது. அங்கு இன்னமும் 30 வீடுகள் யாருக்குமே ஒதுக்காமல் "காலியாக" இருக்கிறது. அந்த 30 வீடுகளை இங்கே "இடிக்கப்படும் மீனவர்களது" வீடுகளுக்கு பதிலாக "ஒதுக்கி கொடுங்கள்" என்ற மீனவர் சங்கங்களின் கோரிக்கையை குடிசை மாற்று வாரியம் செவி மடுக்கத தயாராக இல்லை.

      இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், இன்று காவல்துறையும், குடிசை மாற்று வாரியமும் இணைந்து வந்து "காசு செலவழித்து" மீனவ மக்களின் 10 வீடுகளை அராஜகமாக இடித்து தள்ளியுள்ளனர்.அதில் அ.இ.அ.தி.மு.க. மாநகராட்சி உறுப்பினர்  ராஜலட்சுமி வீடும் உள்ளடக்கம்."சிறிது காலம் கொடுங்கள் காலி செய்துவிடுவார்கள்" என்று மீனவர் சங்க தலைவர் கபடி.மாறன் கேட்டதற்கு, "உனக்கு ஒரு வாரம் நேரம் கொடுத்தோமே?" என்று அதிகாரிகள் பதில் கூறியுள்ளனர்.அதற்கு மாறன்," குடிசை மாற்று வாரியத்ம்தளைவரும், அமைச்சரும் ஊரிலில்லை" என்று கூறியும், தென்னிந்திய மீனவர் நலச் சங்க தலைவர் கு.பாரதி, தமிழ்நாடு மீனவர் முன்னேற்ற சங்க தலைவர் கபடி.மாறன் ஆகியோரை மிரட்டிவிட்டு, காவல்திரை வீடுகளை இடித்து தள்ளியிருக்கிறார்கள்.அப்போது, குடிசை மாற்று வாரிய நிர்வாக பொறியியலாளர் நாகேஷ், உதவி பொறியியலாளர் காளியன்னனிடம் "காசைகொடு" என்று கூற,ஆய்வாளர் சிபு.குமாருக்கு ஒரு "ஆயிரம் ரூபாய் நோட்டுக்க்கட்டை"  காளியண்ணன் மக்கள் முன்னாலேயே கொடுக்கிறார்.உதவி ஆணையருக்கும் அதேபோல பணக்கட்டு கொடுக்கப்பட்டுள்ளது என்பதே மக்களது கூற்று. தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கையாக இது இருந்தால்  எதற்காக  குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் ஏதோ "கூலிப்படைக்கு" கொடுப்பதுபோல, "காசு கொடுத்து வீடுகளை இடிக்க சொல்லவேண்டும்?".அதற்கும் அங்கு வந்த குடிசை மாற்று வாரிய நிர்வாக பொறியியலாளரான நாகேஷ் தெளிவாகவே," பலகோடி ரூபாய்க்கான திட்டம் இது". "இதை செயல்படுத்த இந்த அதிகாரப்பதவியைப்பெற தான் 50 லட்சம் செலவழித்து இந்த பதவிக்கு " வந்துள்ளதாக கூறியுள்ளார். இது என்ன வெளிப்படையான அறிவிப்பு?

          குடிசை மாற்று வாரிய தலைவரான ஒரத்தநாடு தங்கமுத்துவும், வீட்டுவசதி அமைச்சரான ஒரத்தநாடு வைத்தியலிங்கமும் ,இணைந்து, அதே உறவு கொண்ட ஒரு மயிலாப்பூர் உதவி ஆணையர் ரவிசேகர் மூலம் இந்த "அராஜக இடிப்பு வேலையை" செய்யவைக்கிரார்களா? ஏற்கனவே "நொச்சிநகரில் மீதம் உள்ள 30 வீடுகளை" 6 லட்சம், 8 லட்சம் என்ற விலைக்கு விற்பது உண்மைதானா?அதனால்தான் ஆளும்கட்சியின் மாநகராட்சி உறுப்பினர் வீடடியும்கூட இப்படி இடித்து தள்ளுகிறார்கள்.அந்த பெண் கவுன்சிலரின் மருமகன் அங்கேயே ஆளும்கட்சியின் பகுதி செயலாளாராக இருக்கிறார் என்றாலும்கூட, இந்த அதிகாரிகளும், அமைச்சரும் செய்யும் வேலை, "ஜெயலலிதா ஆட்சி மீனவர்களுக்கு ஆதரவானது" என்ற கருத்தை உடைக்க வேறு யாராவது இவர்களை இயக்குகிறார்களா? அல்லது உண்மையில் இந்த ஆட்சி மீனவர்களுக்கு எதிரானது என்பதை, தலைநகர் சென்னையிலிருந்தே "ஆதாரம்" காட்டுவதன்மூலம் தமிழகத்தின் 13 மாவட்டங்களில் உள்ள கரையோர மக்களை "புறக்கணிக்கிறோம்" என்பதை இந்த அரசு "வெளிச்சம்" போட்டு காட்டுகிறதா?