Monday, November 16, 2015

அந்த சாலை ஒப்பந்தக்காரரை விடாதீங்க?

அந்த சாலை ஒப்பந்தக்காரரை  விடாதீங்க?
------------------------------------------------------------------
        நாங்கள் 13-11-2015 வெள்ளிக்கிழமை சென்னையிலிருந்து கோவை கிளம்பி, சாலை வழி "வாகனத்தில்" பயணமானோம். கோவை சென்று "மக்கள் சிவில் உரிமைக் கழக" மாநிலக் குழு கூட்டம் முடித்துவிட்டு, நடத்தப்பட்ட பொதுக் கூட்டத்திலும் பேசிவிட்டு, மேட்டுப்பாளையம் பயணித்தோம். மேட்டுப்பாளையத்தில், நண்பர் ரவிச்சந்திரன் மகன் திருமண வரவேற்பில் கலந்து கொண்டு, அவினாசி வழியே சேலம் புறவழிச் சாலை வழியாக வாணியம்பாடிக்கு முன்பே உள்ள வேலூர் மாவட்டத்தை சேர்ந்த "நாற்றாம்பல்லிக்கு" வந்தடைந்தோம். இரவு தங்களுக்கு பிறகு, காலையில், இளம் ஊடகவியலாளர் ஜெகதீஷின் சகோதரி திருமணத்தில் கலந்து கொண்டு  பிறகு 15-11-2015 ஞாயிறு அன்று,காலை சென்னையை நோக்கி பயணித்தோம். ஒட்டுமொத்தமாக நாங்கள் இந்த பயணத்தில், 1200 கிலோமீட்டர் கடந்து வந்துல்ல்ளோம். அதில் எங்களுக்கு "சாலை பற்றிய சர்ச்சை" ஒரே இடத்தில்தான் வந்தது.

       அதுதான் "ராணிப்பேட்டை முதல் ஸ்ரீபெரும்புதூர்" வரையுள்ள சாலை. அந்த சாலை "பகுதி,பக்தியைக் உடைந்து" கிடக்கிறது.ஏன் அப்படி? நாங்கள் செல்லும்போது வழியெல்லாம் "கனமழை" பெய்யத்தான் செய்தது.மற்ற இடங்களில் உள்ள சாலைகள் இப்படி உடையாமல் இருக்கும்போது, இங்கே மட்டும் ஏன் சாலை இப்படி "துண்டு,துண்டாக" உடைந்து கிடக்க வேண்டும்? அப்படியானால் இங்கே ஒப்பந்தம் எடுத்த, "ஒப்பந்தக்காரர்" சரியான அளவில், "கல்லையோ, மண்ணையோ, சிமெண்டையோ",கலந்து சாலையை போடவிழலி என்றுதானே பொருள்? அதற்கு யார் காரணம்? அங்குள்ள நெடுஞ்சாலை அதிகாரிகளா? அங்குள்ள வட்டார அமைச்சர்களா? இந்த கேள்வி எழுகிறது.

        ஏற்கனவே இந்த குறிப்பிட்ட "பகுதி சாலை" பற்றி பல முறை, பலரும், புகார் கொடுத்ததும், எழுதிய புகாரை அனுப்பியும்,எந்த பலனும் இல்லை என்கிறார்கள். ஒருமுறை ஒரு நீதியரசர், இந்த சாலையின் "பழுது" பற்றி நீதிமன்றத்தில் கடுமையாக கூறியும் கூட, எந்த நடவடிக்கையும் இல்லை. இது நடுவணரசுக்கு வேலையா? மாநில அரசின் வேலையா? என்று சர்ச்சை வந்ததாகவும் கூறுகிறார்கள். இந்த சாலையை போட்ட "ஒப்பந்தக்காரரை" பகிரங்கமாக அறிவித்து, அவரை" கருப்பு பட்டியலில்" இட்டு, வீலமபரப்படுதி, அதன்மூலம் பொதுமக்கள் முஇன்னிலையில் "பகிரங்க தண்டனை" வழங்கினால் மட்டுமே சாலை உருப்படும். இரு சக்கரவாகனங்கள் ஐந்தே உடைந்த சாலையில் "விபத்துகளில்" மரணத்தை தழுவுவர் என்பது நிச்சயம்., ,

உலக சகிப்புத்தன்மை நாள்--ஐ.நா.அறிவித்துள்ளது சரிதானா?.

உலக சகிப்புத்தன்மை நாள்--ஐ.நா.அறிவித்துள்ளது சரிதானா?.
--------------------------------------------------------------------------------------------------
        ஐ.நா.சபை, நவம்பர் 16 ஆம் நாளை, "உலக சகிப்புத்தன்மை நாள்" என அறிவித்துள்ளது. "சகிப்புத்தன்மையின்மை " இப்போது நமது நாட்டில் அதிகரித்து விட்டது என்றும், அதனால்தான் "தாத்திரி என்ற இடத்தில உத்திரப்பிரதேசத்தில், மாட்டிறைச்சி வைத்திருந்ததாக வந்த செய்தியை ஒட்டி, ஒரு முசுலிம் பெரியவர்  அடித்து கொல்லப்பட்டார்" என்பதும், கர்நாடகாவில், முற்போக்கு எழுத்தாளர் குல்பர்கி கொலை செய்யப்பட்டார் என்றும், மகாராஷ்ட்ராவில் நடந்த பகுத்தறிவாளர் கொலையும் அதேபோல்தான் என்றும், இவையெல்லாமே "சகிப்புத்தன்மை குறைந்து வருவதால் தான்" என்றும், இத்தகைய "சகிப்புதன்மையின்மைக்கு"  சங்க பரிவாரமும், பா.ஜ.க. அரசுமே காரணம் என்றும் கூறி, பல எழுத்தாளர்களும், கலைஞர்களும் நாடு முழுக்க தாங்கள் அரசிடம் பெற்ற " பல்வேறு விருதுகளை" திரும்பக் கொடுத்து வருகின்றனர். இந்த சூழலில், உலக சகிப்புத்தன்மை நாள் என்று வருவது "சாலப்பொருத்தமே"  என்றாலும், அது என்ன என்று அலச வேண்டும்.

        அதாவது உங்களுக்கு ஒருவரை அல்லது ஒரு பொருளை அல்லது ஒரு செயலை  "பிடிக்கவில்லை" என்றால், அந்த மனிதரை அல்லது அந்த பொருளை அல்லது அந்த செயலை எதிர்த்து நீங்கள் "வெறுப்பு அரசியலை" கட்டவிழ்த்துவிடுவது என்பதுதான் இங்கே "சகிப்புத்தன்மையின்மை" என்று கூறப்படுகிறது. உங்களுக்கு ஒன்றை பிடிக்காவிட்டால் அது இந்த உலகத்திலேயே இருக்கக் கூடாதா? இது என்ன அய்யா "அநியாயம்?" பல்முனை பண்பாடுகளையும், பல்முனை குணங்களையும், பல்வேறு வகை உணவுகளையும், பல்வேறு வகை பழக்க,வழக்கங்களையும், பலவேறு மொழிகளையும், பல்வேறு வரலாறுகளையும், பல்வேறு பிரிவுகளையும், இன்னமும் சொல்லப்போனால், பல்வேறு சாதிகளையும், பல்வேறு மதங்களையும், பல்வேறு நம்பிக்கைகளையும், பல்வேறு பாலினங்களையும், பல்வேறு தலைமுறைகளையும் கொண்ட ஒரு "சூழலில் தானே" நாமெல்லாம் வாழ்ந்து வ்ருகிறோம்?. இந்த உலகம் உழன்று வருகிறது? அப்புறம் என்ன வெங்காயம்? நான் நினைப்பது மட்டுமே, நான் விரும்புவது மாத்திரமே, எனக்கு பிடித்தது மட்டுமே, இருக்க வேண்டும் என்று எப்படி நினைக்க முடியும்?

      இதுதான் அடிப்படையிலேயே இங்கு "கேள்வி கேட்கப்படுகிறது".  சகிப்புத்தன்மை வேண்டும் என்ற குரல் எழுகிறது  சகிப்புத்தன்மை என்று இதை கூறலாமா? சமூக அவலங்களைக் கண்டு,அநீதிகளை கேள்விப்பட்டு, அக்கிரமங்களை பார்த்து, அநியாயங்களை தட்டிக் கேட்காமல், "சகிப்புத்தன்மையுடன்" இருங்கள் என்று நாம் சொல்ல வருகிறோமா?  நிச்சயமாக இல்லை. அப்[படியானால், "சகிப்புத்தன்மை" என்பது,"தவறுதான்" என்றாலும், "வெறுப்பு வருகிறது" என்றாலும், "பிடிக்கவில்லை" என்றாலும் நீ அதை "சகித்துக் கொள்" என்று கூறுவதாகும். ஆனால் "ரவுத்திரம் பழகு" என்று பாரதியார் கற்றுக் கொடுத்ததை நாம் ஏற்றுக் கொள்கிறோம். தவறுகளைக் கண்டு சகித்துக் கொண்டு இருக்காதே எனபதுதான் நமது உண்மையான் நியாயமாகும்.

       இங்கே கூறவருவது யாதெனில், "மாறுபட்ட, வேறுபட்ட, உனக்கு பழக்கமில்லாத, உனக்கு ஒத்துவராத, நீ விரும்பாத" எதையும் உலகில் யாருமே கைக்கொள்ளக் கூடாது எனபது தவறு என்பதுதான்.அதாவது உன்னிடமிருந்து "வேறுபட்ட" எதுவும், இந்த உலகில் இருக்குமானால் அதை "அங்கீகரித்துக் கொள்ள" கற்றுக் கொள் என்பதுதான். அதாவது, உன்னிடமிருந்து வேறுபட்ட, "நம்பிக்கை, உணவு பழக்கம், பண்பாடு, மொழி, இனம்,பாலினம், தலைமுறை, சாதி, மதம்" எதுவாக இருந்தாலும்,  அதுவும் இந்த உலகில் "இருக்க, வாழ, உயிர்பிழைக்க, நடமாட, செயல்பட, வளர, செழிக்க," உரிமை கொண்டது என்பதே. உண்மை. அதுவே, "ஜனநாயகம்". அதவே, "சமத்துவம்".அதுவே "உரிமை". அதுவே "உலகம்".அதுவே "மனித உரிமை". அத்தகைய உலகத்தை நீ ஏற்காவிட்டால், நீ இந்த பூவுலகில் வாழ "தகுதியற்றவன்".நீ தகுதியற்றவனாக் இருந்துகொண்டு, அடுத்தவனைப் பார்த்து, அவனது "தகுதி" பற்றி பேச உரிமையில்லை".  இப்படி கூறவேண்டுமானால், நாம் "சகிப்புத்தன்மை" என்ற சொல்லை நீக்கிவிட்டு, "வெறுப்பு அரசியலை" எதிர்ப்போம் என்று கூறலாம்.

      இந்த விளக்கம், கடந்த சனிக்கிழமை, கோவையில் நடந்த "பி.யு.சி.எல்." என்ற " மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின்" மாநிலக் குழு கூட்டத்தில் வந்தது. காஞ்சி மாவட்ட பி.யு.சி.எல். தலைவர் தோழர் தமிழினியன் இது பற்றிய சர்ச்சையை கிளப்பியதால் இப்படிப்பட்ட விளக்கத்தை விவாதத்தில் பெற முடிந்தது.   . 

ஒதுக்கப்பட்ட தொகையிலேயே "ஆட்டையப்போடும்" அதிகாரிகள்?

ஒதுக்கப்பட்ட தொகையிலேயே "ஆட்டையப்போடும்" அதிகாரிகள்?
--------------------------------------------------------------------------------------------------
    ஊழல் என்பது ஊறிப்போயிருக்கும் நமது இன்றைய உலகில், "ஊழல் முகமே தேசத்தின் முகம்" என்று பெயர் பெற்ற நமது நாட்டில், வரிசையாக ஊழல் குற்றச்சாட்டுக்களில் மாட்டுகின்ற அரசியல்வாதிகளைக் கொண்ட தமிழ்நாட்டில், இப்போது நமக்கு "புதிய கணக்கு" கிடைத்துள்ளது. அதாவது அரசுத் துறைகளுக்குள்ளேயே இப்படி நடக்குமா? ஒரு துறைக்கு ஒதுக்கப்பட்ட "தொகையை" அடுத்த துறை " ஆட்டையப் போட" முடியுமா? அதுவும் முடியும், அதைத் தாண்டியும் முடியும் என்று நமது அதிகாரிகள் நிரூபிக்கிறார்கள்.அது எப்படி என்றா கேட்கிறீர்கள்?

      இருபது ஆண்டுகளுக்கு முன்பு, "எம்.ஜி.ஆர். திரைப்பட நகர்" என்ற தமிழ்நாடு அரசின் "திரைப்பட நகரம்" தரமணியில், சென்னையில், தொடங்கப்பட்டு முதலில் சிறப்பாக செயல்பட்டது. அதன் பின் அதன் நிலங்களில் ஒரு பெரும் பகுதியை, அடுத்து, அடுத்து, "தனியார்  நிறுவனங்களுக்கு"  விற்று விட்டார்கள். இதைக் கேட்பார் கிடையாது என்ற நிலையில், "சென்னை நகருக்குள், "திரைப்பட படப்பிடிப்புக்கு" ஏற்ற இடங்களே இல்லை என்ற நிலை. இந்த அரசு திரைப்பட நகரிலாவது அவ்வாறு வாய்ப்பு இருக்கிறதா? என்றால் கேள்விக்குறியே. திரைப்பட தயாரிப்பார்களின், இயக்குனர்களின், கலைஞர்களின், தொழிலாளர்களின், இந்த நீண்ட கால கோரிக்கையை நிறைவு செய்யும் பாணியில், முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா, இந்த திரைப்பட நகருக்காக, அதன் வளர்ச்சிக்காக, புதிய படப்பிடிப்புகளை நடத்த ஏதுவாக, " ஒரு தியேட்டர்", "ஒரு எலக்ட்ரானிக் கருவிகள் கொண்ட அரங்கம்" என்பதாக பல புதிய ஏற்பாடுகளை, "திரைப்பட நகர நிர்வாகம்" கொடுத்த கோரிக்கையை ஏற்று, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கிட்டத்தட்ட, ரூ.100 கோடியை ஒதுக்கினார்.அந்த அறிவிப்பை, "திரைப்படத் துறையே" வரவேற்றது,பாராட்டியது.  அந்த தொகையை, "செய்தி,விளம்பரத் துறை" ஒதுக்கி கொடுத்து விட்டது.

    அந்த தொகைக்கு "எலக்ட்ரானிக் கருவிகளும், மற்ற சாதனங்களும்"  வாங்கப்பட்டன. "தியேட்டரும் " கட்டப்பட்டது. அதற்கான "கட்டிடங்களும், சுவர்களும், பாதைகளும்" கட்ட, அதற்கான "பணிகள்" "பொதுப்பணித் துறை" வசம் ஒப்படைக்கப்பட்டது. ஒப்படைக்கப்பட்ட பணிகளை செய்ய "பொதுப்பணித் துறைக்கு" கை வலித்துவிட்டது. அதனால் அவர்கள் "திரைப்பட நகரின்" நிர்வாகத்திடம், "ஒதுக்கப்பட்ட அத்தகைய பங்களுக்கான பணத்தில், 40 விழுக்காட்டை"  தங்கள் துறைக்கு, "தனியாக " ஒதுக்கினால்தான், வேலைகளை செய்யமுடியும் என்று நிபந்தனை விதிக்க, "திரைப்பட நகர நிர்வாகம்" திணறி விட்டது.அப்படி,"லஞ்சம்" கொடுத்தால், செல்வி.ஜெயலலிதாவின் "கனவான" வளர்ச்சி பெற்ற "திரைப்பட நகரம்" எழ முடியாதே என்ற கவலை அவர்களுக்கு. ஆனால் "பொதுப்பணித் துறை" தனது கோரிக்கையில் "கறாராக" இருந்தார்கள். தங்களுக்கான் லஞ்சத் தொகையை "கணிசமாக" கொடுக்காவிட்டால், "திரைப்பட நகரில் மண் சரியில்லை, இடம் சரியில்லை" என்று ஏதாவது "காரணம்" கண்டுபிடித்து அதைக் கூறி, திரைப்பட நகருக்கு ஒதுக்கப்பட்ட நிதியையே "திரும்ப எடுத்துக் கொள்ள செய்துவிடுவோம்" என்ற மிரட்டல் அளவுக்கு சென்ற பின், வேறு வழி இல்லாமல், அவர்களுக்கு "25%" ஒதுக்கப்பட்டது. அதை மாத்திரம் பெற்றுக் கொண்டு விட்டுவிடுவார்களா நமது அதிகாரிகள்? இதே கணக்கை "ஒப்பந்தக்காரர்களிடமும்" வைத்து வெற்றி கண்டுள்ளார்கள்.

          அதன் விளைவு, ஒப்பந்தக்காரர்கள், "ஒப்பேததக்காரர்களாக" மாறி விட்டார்கள். அவர்கள் கட்டிய "சுவர்களும், கட்டிடங்களும், கான்கிரீட்களும்"தான் அந்த கதையை கூறவேண்டும். தேவையான சிமண்டை பயன்படுத்தாமலும் , கற்களை பயன்படுத்தாமலும், கட்டப்பட்ட கட்டிடங்களும், சுவர்களும், இப்போது பெய்துவரும், "கன மழையால்" உடனடியாக "பல்லைக் காட்டத்" தொடக்கி விட்டன.இப்போது பல லட்சம் ரூபாய்க்கு வாங்கிய "எலக்ட்ரானிக் பொருள்களை " வைத்துள்ள "கட்டிட ம்" கீறல் விழுந்து, "கசியத்" தொடக்கி விட்டது. ஏனய்யா, அதிகாரிகளே, சம்பந்தப்பட்ட அமைச்சர்களே, நீங்கள்,"ஒப்பந்தக்காரர்களிடம்"  லஞ்சம் பெறுவீர்கள் என்பது நாடறிந்த செய்தி. அது எப்படி அய்யா, ஒரு அரசுத் துறையே, அடுத்த அரசுத் துறையிடம் "லஞ்சம்" கேட்டு, மிரட்டி, வாங்கி, கொடுமை செய்கிறீர்கள்?  அப்படியானால் முதல்வரின் "கனவுத் திட்டம் " என்னாகும்? நாசமாகக்ப்போகட்டும், எங்களுக்கு "பை நிறிய வேண்டும்" என்கிறீர்களா?  ஓகோ, உங்கள் வீட்டுக்கு, நிலங்களும், கட்டிடங்களும், நல;ல முறையில் கட்டிக் கொள்ள "நிதி" தேவையோ? இப்போ புரியுது.

Tuesday, November 3, 2015

ராமேஸ்வரம் கரையில்,சாலையில் எண்ணை வழிந்தோடி, அய்யய்யோ.....03-11-2015.

ராமேஸ்வரம் கரையில்,சாலையில்  எண்ணை வழிந்தோடி, அய்யய்யோ.....03-11-2015.
---------------------------------------------------------------------------------------------------------------------
      இன்று காலை 10 மணியிலிருந்து ஒரே அக்கப்போர். ராமேஸ்வரத்தில, பக்தர்கள் முதலில் குளிக்க வரும் இடம்" அக்கினி தீர்த்தம்". அங்க குளிக்க முடியல்ல. ஏன்? ஒரே எண்ணையா வழியுது. எங்கிருந்து வந்தது இவ்வளவு எண்ணை? எல்லாம் கடலுக்கு சென்று திரும்பிய படகுகள் பக்கதிலிருந்துன்னு சொன்னாங்க. அது என்ன? படகுகள் பக்கத்தில போயி பார்த்தா, அப்படி ஒரு எண்ணை குளம். ஏன்? இன்னிக்கு கரைக்கு வந்த படகுகள் எண்ணிக்கையில் குறிப்பிட்ட படகுகளிலிருந்து எண்ணை வடியுது. ஏன் அப்படி? அவை எல்லாமே "பிடிச்சிட்டு வந்த மீன்கள்ட்ட" இருந்து வடியுது.ஏன் அப்படி மீன்கள்ட்ட இருந்து எண்ணை வடியணும்?  அது என்ன மீன்? எண்ணை வடியற மீன்? அதுக்கு பேரு "பேச்சாள" மீன். ஒரு படகுல 10 டன்,20 டன் எடையுள்ள பேச்சாள மீனு வந்து இறங்கி இருக்கு.,பேச்சாள மீனுக்கு பேரே "பேச்சாள ஆயில் மீனு". அதாவது "எண்ணை மீன்". அது வழக்கமா ஜனவரி மாதம் முதல்தான் கிடைக்குமாமே? இப்பவே எப்படி இவ்வளவு வந்தது?.

       அதுதான் கதை. இப்பமே கடலுக்குள் சென்று, சிலரால இந்த பேச்சாள ஆயில் மீன "அள்ளிக்கிட்டு" வர முடிஞ்சிருக்கு. அது எப்படி முடியும்? அவங்க "ரெட்டை மடிக்காரங்க". அப்படினா "தடை செய்யப்பட வலையான ரெட்டை மடிய" பயன்படுத்தறவங்க. அந்த வலையத்தானே இலங்கையில் உள்ள தமிழ் மீனவர்களும் எதிர்க்கறாங்க? ஆமாம்.ஆமாம். அப்படிப்பட்ட "ரெட்டைமடி வலைய "  பயன்படுத்தக் கூடாதுன்னு எல்லா அரசாங்கங்களும், ஊடகங்களும், மீன் வளத் துறையும், சொல்லி வர்றாங்களே? ஆனாலும் கூட, இவர்கள் பயன்படுதறாங்களே ? அது எப்படி?  அரசாங்கத்தையும் ஏமாத்தி, இரண்டு நாட்டிலையும் உள்ள பொதுவான மீனவர்களையும் ஏமாத்தி, சட்ட விரோதமாக, இருக்கும் மீன்களை எல்லாம் ஒரேயடியாக "அள்ளிக்கிட்டு" வரக்கூடிய இந்த ரெட்டை மடி வலையை பயன்படுத்தறவங்க யாரு? அவங்களுக்கு "துணை" நிற்பது யாரு?

     சரி. இந்த முறை எத்தனை படகுகள் இப்படி ரெட்டை மடி வலையோட கடலுக்கு போய் வந்தது? 150 படகுகள் இன்று இந்த வலைய பயன்படுத்தி, "பேச்சாள ஆயில் மீனை" பிடிச்சிட்டு வந்திருக்கு. அதனால தான் இந்த மீனால கரை முழுக்க ஒரே "எண்ணையா" வடியுது. அப்படியானா ஒரு படகுல 20 டன் மீன் பிடிச்சாங்க. 150 படகுல 300 டன் மீன் வந்து இறங்கிருசசு. அதனாலதான், ராமேஸ்வரம் கரை முழுக்க ஒரே "எண்ணையா" ஊததுது.இதை மறைமுகமா "ஆதரிப்பது" அங்க உள்ள "மீன் வளத் துறைதான்". அதன் அதிகாரிகள்தான். அவங்களுக்கு "நல்ல கமிசன்" போயிரும்.அக்கினி தீர்த்தம் குளிக்க முடியாம எண்ணை வடிவதுனால அங்க உள்ள "இந்து மக்கள் கட்சி" புகார் கொடுத்தாங்க. அதனால அதை ஒப்பேத்த, காவல்துறை துணை ஆணையர்,முத்துராமலிங்கம் சமரச பேச்சு மாலைல நடத்தறாரு. அவருக்கும் நல்ல பலன் கிடைக்குமே? 

    இது மட்டுமா? அங்க உள்ள சாலைகளில் இந்த எண்ணை வடிந்து, வாகனங்கள் போக முடியல்ல. இரு சக்கர வாகனங்கள் "சறுக்குதே"?. இந்த அளவு மோசமான நிலைக்கு யாரு பொறுப்பு? மீன்வளத் துறை அமைச்சர்தான். அவருதான் அவரு ஊர்ல, நகாப்பட்டினததுல,"ஹை ஸ்பீடு எஞ்சின" இறக்கி விட்டிருக்காரே? அதுக்கு போட்டி போட ராமேஸ்வரம் மீனவர்கள் இதை செய்ய மாட்டாங்களா? அடப்பாவிகளா ஒட்டுமொத்தமா கடலையே  "காலி" பண்றீங்களே?

Monday, October 26, 2015

இசைப்பிரியா குடும்பத்தின் வேண்டுகோள்"

அதிர்ச்சி தரும் செய்தி. இசைப்பிரியாவின் கதை என்ற பெயரில் "பொய்களை" படமாக்கி பணம் பண்ணும் ஆளா? இசைப்பிரியாவின் சொந்த சகோதரியின் கதறல் கேட்கிறது.

போர்க்களத்தில் ஒரு பூ- "இயக்குனருக்கும் எம்தமிழ் உறவுகளுக்கும் இசைப்பிரியா குடும்பத்தின் வேண்டுகோள்"

Bookmark and Share
திருமதி வாகீசன் தர்மினி - இங்கிலாந்து:-
போர்க்களத்தில் ஒரு பூ- "இயக்குனருக்கும் எம்தமிழ் உறவுகளுக்கும் இசைப்பிரியா குடும்பத்தின் வேண்டுகோள்"

போர்க்களத்தில் ஒரு பூ என்னும் பெயரில்  இசைப்பிரியாவின் வாழ்க்கை வரலாறைப் படமாக்கியுள்ளதாக்க் கூறி இசைப்பிரியாவின் வாழ்க்கையில் நடக்காத சம்பவங்களை மட்டுமே படமாக்கி வெளியிடத் துடிக்கும் இயக்குனர் கணேசன் அவர்களுக்கும் எம் தமிழ் உறவுகளுக்கும் இசைப்பிரியா குடும்பத்தின் வேண்டுகோள்:
 
இசைப்பிரியா அல்லது இசையருவி எனும் புனைபெயரைக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினராக இருந்து இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரிடம் சரண்டைந்த பொழுது இரக்கமற்ற முறையில் படுகொலை செய்யப்பட்ட திருமதி சோபனா அவர்களது புகைப்படங்களும் கானொளிகளும் ஊடகங்களினால் நாகரிகமற்ற முறையில் புனை கதைகளுடன் வெளிவருவது குறித்து எமது மனவருத்தத்தினையும் கண்டனத்தினையும் ஏற்கனவே தமிழ் ஊடகங்களில் இசைப்பிரியா குடும்பத்தினர் சார்பாக நாம் தெரியப்படுத்தியிருந்ததை நான் திரும்பவும் இங்கு நினைவுபடுத்திக் கொள்கிறேன்.
 
எனது தங்கையான இசைப்பிரியாவை நாம் எல்லோரும் அறிவோம்.அவர் தமிழர் மீதான இறுதியுத்தத்தில் இலங்கை இராணுவத்தினரால் அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்டார்.அவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் முழுநேர உறுப்பினராக இணைந்து ஊடகத்துறையில் பணியாற்றியிருந்தார்.அவராக விரும்பி போராட்டத்தில் இணைந்தவர்.அவர் இதயபலவீனமானவர் என்பதனால் குடும்பத்தினரான நாம் அவரை எம்முடன் வாழ்வதையே விரும்பியிருந்தோம். விடுதலைப் புலிகள் அமைப்பினரும் அவரை வீடு செல்லவே பணித்திருந்தனர்.ஆனால் இசைப்பிரியாவோ தான் ஏதாயினும் தமிழருக்கு செய்யவேண்டுமென அமைப்பிலேயே இருந்து பத்தாண்டு காலம் கடும் பணியாற்றியிருந்தார். திருமணம் செய்து ஒரு குழந்தையின் தாயாரும் ஆவார்.எமது குடும்பம் எக் கால கட்டத்திலும் பொருளாதார ரீதியில் பின் தங்கியிருந்ததில்லை.கடைசி யுத்த காலத்தில் கூட நாம் போதியளவு பணத்தினை எம் வசம் வைத்திருந்தோம். நாம் குழந்தைப் பிள்ளகளுடன் இருந்த படியால் பிள்ளைகளுக்கு தேவையான உணவுகளையே பெரிய பொதிகளில் சேகரித்து இடத்திற்கு இடம் காவிச் சென்றோம். இசைப்பிரியாவிற்கும் எனக்கும் மே 2009 மாத த்தில் தொடர்பு இல்லாமல் போய்விட்டிருந்தது. நான் அவரைப் பிரியும் போது எனது கையில் 36நாட்களான எனது மகள் இருந்திருந்தாள்.இறுதியான அந்த 03 வாரங்களும் இசைப்பிரியாவிற்கு என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது.ஆனால் எமது கடைசித் தங்கை மே மாதம் 16ம் திகதி வரை இசைப்பிரியாவுடன் இருந்திருந்தார். அவர் சொன்ன தகவல் "இசைப்பிரியா தனது பையில் எனது மகளுக்கு ஆக ஒரு SMA tin ஐ வைத்தே இருந்தாராம்.என்னைச் சந்திக்கும் பொழுது தருவதற்காக"
 
போர்க்களத்தில் ஒரு பூ படத்தினைப் பற்றிய செய்தியை கேட்டால் ஏதோ குடும்பக் கதையை எழுதுகிறாரே என நினைக்கிறீர்களா!!!!
 
ஆம் மேலுள்ளது இசைப்பிரியாவின் வாழ்க்கையின் உண்மைக்கதை. போர்க்களத்தில் ஒரு பூ இயக்குனர் எழுதிய புனைகதையோ வேறு.உண்மைக் கதை கொஞ்சமாவது உங்களுக்குத் தெரியவேண்டுமென்பதற்காகவே இப்படி ஆரம்பித்துள்ளேன்.
 
எனது தங்கையின் கதை தமிழகத்தில் திரையாக்கப்படுகிறதென தமிழகத்திலுள்ள நண்பர் ஒருவர் மூலமாக 2014ம் ஆண்டு ஜனவரி மாதமளவில் அறிந்தேன்.அந்த நிமிடமே அந்த இயக்குனருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். எமது குடும்பக் கதையைப் படமாக்க எமக்கு விருப்பமில்லை.எம்மிடம் அனுமதி பெறாமல் இதனை நீங்கள் ஆரம்பித்தது தவறெனச் சுட்டிக்காட்டினேன்.எமது குடும்பத்தின் கதை தங்களுக்கு தெரியச் சந்தர்ப்பமில்லை.திரைப்படத்தில் வருவது இலகுவாக மனங்களில் பதிந்துவிடும்.ஏனெனில் எனக்கு வீரபாண்டியகட்டப்பொம்மனைத் தெரியாது,அவரது வேடம் பூண்ட சிவாஜி கணேசனையும் அப்படத்தில் சொல்லப்பட்ட கதையையுமே நான் இன்று வரை அவரின் வரலாறாக நினைக்கிறேன்.எனது தங்கை இறுதி வரை அவராகவே வாழ வேண்டும் என்பது குடும்பத்தாரின் விருப்பம்.எமது அழகோவியத்தை வேறொருவர் உருவில் காண எமக்கு விருப்பமில்லை.அதைவிட அவருக்கு இறுதியாக என்ன நடந்தது என்பதற்கான எந்த ஆதாரமுமே இல்லை.ஆனால் அவரது மரணம் இறுதி யுத்தக் குற்றத்திற்கான ஶ்ரீலங்காவிற்கெதிரான ஆதாரமாகவுள்ளது.பிழையான கருத்துக்களால் அவ் ஆதாரம் சிதைக்கப்படக்கூடாது.இவற்றை இயக்குனர் கணேசன் அவர்களிடம் விளங்கப்படுத்தினேன்.
 
அதற்கு அவர், கனடாவில் உள்ள எமது சித்தி ரஞ்சினி என்பவர் இப் படம் எடுப்பதற்கு தனக்கு அனுமதி தந்தாகவும், எம்மை எல்லா இடத்திலும் தேடியதாகவும், தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் , அதனாலேயே சித்தியிடம் தான் பேசியதாகவும், சனல் 4ல் வந்த செய்திகளை வைத்தே தான் கதை அமைத்துள்ளதாகவும், இசைப்பிரியாவிற்கு நடந்த கொடுமை வெளியுலகிற்கு கொண்டு வரப்படவேண்டுமென்றே தான் இப் படத்தினை எடுப்பதாகவும் தெரிவித்தார்.சனல் 4ல் நாம் லண்டனிலிருக்கும் செய்தி எமது செவ்வியுடன் வெளியானதே அப்படியிருக்க நீங்கள் ஏன் கனடாவிலிருக்கும் சித்தியிடம் அனுமதி பெறவேண்டுமெனக் கேட்ட பொழுது அவர் எவ்வித பதிலுமளிக்கவில்லை.அந்தச் சித்தி சிறு வயதிலேயே வெளிநாடு சென்றவர்.இசைப்பிரியாவின் வரலாறு அவருக்கு தெரியாது என்பதையும் தெளிவுபடுத்தினேன்.தான் இலாப நோக்கில் படம் எடுக்கவில்லை தேசப்பற்றில் எடுப்பதாகச் சொன்னார்.
நாம் முள்ளிவாய்க்காலில் தவித்துக் கொண்டிருக்கும் பொழுது நீங்கள் எல்லாம் எங்கே இருந்தீர்கள் எனக் கேட்ட பொழுது ,தான் தேசப்பற்றாளன் எனவும் ,தலைவர் பிரபாகரனை தான் 1984ம் ஆண்டே சந்தித்துள்ளதாகவும், தானும் பாதிக்கப்பட்ட தமிழன் எனவும் தன்னைத் தடுக்க வேண்டாமெனவும் தான் எத்தனை எதிர்ப்பு வந்தாலும் இந்தப் படத்தை எடுத்தே தீருவேனெனவும் கூறினார்.என்னால் தொடர்ந்து அவருடன் வாக்குவாதம் செய்யமுடியவில்லை, அவரது பேச்சு என்னை மிகவும் கலங்கவைத்தது.தொலைபேசியினைத் துண்டித்து விட்டேன்.எனது நண்பரை என் சார்பாக அவருடன் பேச சொல்லியிருந்தேன்.அவரும் எமது நிலமையை அவரிடம் தெளிவுபடுத்தியிருந்தார்.இசைப்பிரியாவை அந்த இயக்குனர் மதித்திருந்தால் நிச்சயமாக அவ் இலக்கத்தில் எம்முடன் தொடர்புகொண்டிருப்பார்.இன்று வரை அந்த இலக்கம் இணைப்பிலேயே உள்ளது.அவருக்கு எமது உணர்வுகளின் வலி பெரிதாகத் தெரியவில்லை.அல்லது புரியவில்லை.
 
கடந்த ஆண்டு பங்குனி மாத இறுதியில் கனடாவில் ட்ரெய்லர் வெளியிடமுற்பட்ட பொழுது நலன்விரும்பிகள் உதவியுடன் தடுத்தோம்.அப்பொழுதும் எமது அம்மா அங்கிருந்த எமது உறவினரின் தொலைபேசி மூலம் கணேசன் அவர்களுடன் கதைத்திருந்தார்.இப்படத்தினை இயக்கவோ வெளியிடவோ நாம் அனுமதிக்கமாட்டோமெனத் தெளிவாக கூறியிருந்தார்.
 
அடுத்து பிரான்ஸ் வந்த பொழுது ஒன்றரைக் கோடி கொடுத்தால் படம் எடுப்பதை நிறுத்திவிடுவதாக கூறியிருந்தார்.ஒரு தேசப்பற்றாளன் தனது தேசப்பற்றை அங்கு விலை பேசியிருந்தார்.லண்டனில் இசை வெளியிட முற்பட்டார்.வெளியீட்டாளர்கள் எமது வேண்டுகோளை ஏற்று அதனைத் தடுத்துவிட்டனர்.
 
இதிலிருந்தே நாம் ஒன்றைத் தெளிவாக உணரமுடிகிறது.பல வழிகளிலும் நாம் தடுக்கிறோம் இதனை கணேசன் பல சந்தர்ப்பங்களில் நன்கு அறிந்திருந்தார்.எமது நிலையைத் தயவாக கூறியிருந்தோம்.இசைப்பிரியாவின் உண்மைக் கதை என்று படம் எடுக்க வேண்டாமெனத் தெளிவாக கூறியிருந்தோம்.இவர்கள் என்ன செய்யமுடியுமென தொடர்ந்தும் அலட்சியத்தையே கடைப்பிடிக்கிறார்.
 
ஏப்ரல் 2014ல் குமுதம் இணைய தளத்தில் நானும் அம்மாவும் எமது ஆதங்கத்தினை வெளிப்படுத்தியிருந்தோம்.தடுக்குமாறு தமிழகத்தைக் கேட்டிருந்தோம்.
 
ஆனாலும் கணேசன் இசைவெளியீட்டைச் செய்திருந்தார்.ஒரு உண்மைக் கதை படமாக்கப் படும் பொழுது அதற்கு முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதையோ அல்லது இது இசைப்பிரியாவின் உண்மைக் கதை தானோ என்று அறியாமல் இசைஞானியும் பாட்டெழுதி இசையும் அமைத்துக் கொடுத்துள்ளார்.அது அவர் இசைப்பிரியா என்னும் பெண்ணுக்கு செலுத்திய அஞ்சலி அல்லது இசைவணக்கம்.மிகவும் அருமையான பாடல்கள்.அதைக் கூட இந்த கணேசன் என்னும் கன்னட இயக்குனர் துஸ்பிரயோகம் செய்துள்ளார். வசூலுக்காகவும் கழிவிரக்கத்தைத் தூண்டுவதற்காகவும் அவர் அமைத்த புனைகதையை புனிதமாக்க உண்மையாக்க அம்மேதையின் இசையை வீண டித்துள்ளார்.
 
ஒட்டுமொத்த தமிழினமும் இப் படத்தினைத் தடுத்து நிறுத்த எமக்கு உதவ்வேண்டுமெனக் கேட்டு எமது அம்மா பேசியிருந்த ஒலிப்பதிவு ஆனது குளோபல் தமிழ் செய்திகள் எனும் இணையதளத்தில் எமது உறவினர் ஒருவரின் உதவியுடன் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
 
இனி இப்படம் இயக்கி முடிக்கப்படாது எனும் நம்பிக்கையோடு நாம் இருக்கும் பொழுது,இப்படம் தணிக்கை குழுவால் நிராகரிக்கப்பட்ட செய்தியை அறிந்தோம்.இவ்வளவு முயன்றும் இப்படம் எடுக்கப்பட்டுள்ளதே என மிகவும் அதிர்ச்சியாகவிருந்தது.மிகுந்த மனவுளைச்சலுக்கள்ளானோம்.
 
அண்மையில் ஐநா மன்றுக்கு இப் படத்துடன் கணேசன் கிளம்பியிருந்தார்.படத்தினை வெளியீடு செய்யவிளைந்தார். மீண்டும் எமது போராட்டம் ஆரம்பித்துவிட்டது.அங்கு சிலருக்கு இப்படத்தினை 20நிமிடமாகச் சுருக்கிப் போட்டுக்காட்டியுள்ளார்.அதைப் பார்த்து விட்டு வந்த சில பெண்கள் எம்முடன் மறுநாளே தொடர்பு கொண்டு பேசினர்.இவ் இயக்குனருக்கு எதிராக மானநட்ட வழக்குப் போடுங்கள்.இப்படத்தினை வெளிவரவிடாதீர்கள்.உங்கள் குடும்பக் கதை, போராளிகளின் தியாகம்,ஒழுக்கம் எல்லாமே இதில் உண்மைக்குப் புறம்பாக க் காட்டப்பட்டுள்ளது என்றார்கள்.
 
போர்க் களத்தில் ஒரு பூ என்னும் திரைப்படத்தில் காட்டப்பட்டுள்ள இசைப்பிரியாவின் குடும்ப உறுப்பினர்களான பெற்றோர்,மூத்த சகோதரியான என் குடும்பம், இளைய சகோதரி ஆகியோர் ஐக்கிய இராச்சியத்தில் அரசியல் புகலிடம் கோரி அகதி அந்தஸ்தில் வாழ்கிறோம்.சொந்தநாட்டில் எமது உயிருக்கு பாதுகாப்பில்லை.அப் படியிருக்க போராட்டத்தில் இணைந்திராத இசைப்பிரியாவின் மூத்த சகோதரியான என்னை இப்படத்தில் போராளியாக க் காட்டப்பட்டு ஏற்கனவே தந்தை இல்லாத என் குழந்தைகளின் தாயின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளார்.ந ந்திக் கடல் வரை உடுப்புப் பொதியில் குழந்தைக்கான பால்மாவுடன் திரிந்த இசைப்பிரியாவை பால்மாவுக்கு கடைகடையாக பிச்சை எடுப்பதாக க்காட்டியுள்ளார்
இறுதி வரை வெளிநாட்டில் வாழ்ந்த எம் தமிழ் உறவுகள் எமக்காக நிதியுதவி செய்துகொண்டேயிருந்தார்கள்.கடைசிவரை கஞ்சியாவது மக்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தார்கள்.இந்த விநியோகத்திலும் ஒழுங்கமைப்பிலும் உணவுப் பொருட்களை இடத்துக்கிடம் மாற்றுவதிலும் ஈடுபட்டு எத்தனையோ உயிர்கள் மாண்டுள்ளன.அவர்கள் தியாகங்களை இப் படம் கொச்சைப்படுத்துகிறது.நானோ இசைப்பிரியாவோ போராளியாக இணையும் போது எம் தாயார் மிகுந்த மகிழ்வோடு அதை வரவேற்பதாக க் காட்டப்படுகிறதாம்.எம் தாயின் தாய்மையும் மென்மையும் எமக்கான அர்ப்பணிப்பும் இவ் இயக்குனரின் புனைகதையில் நசுக்கப்பட்டுள்ளது.மறுவீடு செல்லும் மகளுக்காக கண்ணீர் சிந்திப் பிரிவு வலியில் தவிப்பவள் தமிழ் அன்னை.தன் பெண்,  போராளியான செய்தி கேட்டு தோள்களைக் குலுக்கிக் கொள்ள எம் அம்மா ஜான்சி ராணி அல்ல.கடந்த 17 ஆண்டுகளாக இசைப்பிரியாவிற்காக ஏக்கங்களையும் கனவுகளையும் நினைவில் மட்டுமே சுமந்து கொண்டிருப்பவள்.தான் ஆரத்தழுவ என் மகள் வேண்டும்.நான் சோறு ஊட்ட என் மகள் வேண்டும்.என தேடும் ஒரு சாதாரண தாய்.அந்தத் தாயின் உண்மைத் தன்மையும் அங்கு போலியாக்கப்பட்டுள்ளது.
 
பிறகெப்படி இப்படம் இசைப்பிரியாவின் உண்மை வரலாறு ஆகும்?
 
இசைப்பிரியா இராணுவத்தால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக இப் படத்தில் காட்டப்படுகிறதே அதற்கு கணேசனிடம் ஆதாரம் இருக்கிறதா?இதை நாம் கணேசனிடம் மட்டுமல்ல சனல் 4 உள்ளிட அனைவரையுமே கேட்டுள்ளோம்.எவராலும் எமக்கு பதிலளிக்க முடியவில்லை.அதனால் தான் நாம் கேட்கிறோம் இசைப்பிரியாவிற்காக சோடிக்கப்பட்டுள்ள வரலாறு என்றுமே உண்மை வரலாறு ஆக முடியாது.ஆகையால் இசைப்பிரியாவின் உண்மை வரலாறை எவருமே படமாக்க முடியாது.
 
இந்த விடுதலைப் போராட்டத்தில் எத்தனை ஆயிரம் போராளிகள்,பொதுமக்கள் மரணமடைந்துள்ளார்கள்.தியாகம் என்பது எல்லாராலும் இணைந்து செய்யப்பட்டது.இசைப்பிரியா,இசைப்பிரியா என எதற்கெடுத்தாலும் கோசமிட்டு எம் மன ரணத்தை திருப்பி திருப்பிக் கொத்திக் கிழிப்பதுடன் ஏனைய மாவீர ர்கள் பொதுமக்களின் தியாக கங்களைச் சிறுமைப் படுத்தாதீர்கள்.
 
இறுதியாகத் தயவாகத் தெரியப்படுத்துகிறோம் இத் திரைப் படம் வெளிவர என்றுமே அனுமதிக்க மாட்டோம்.கனடா வாழ் எம் உறவுகளே ஐரோப்பாவில் கணேசன் சந்தித்த எதிர்ப்பை விட பலமடங்கு எதிர்ப்பைக் கொடுத்து , கணேசன் அவரது தவறை உணர்ந்து திரைப்படத்தினை முற்று முழுதாக அழித்துவிடுவதற்கான ஒழுங்கை மேற்கொள்வீர்களென நம்புகிறேன். என் தங்கையின் மானம் பறிபோவதை திரைக்கதையாக்கி இயக்கி ஒருவன் கொண்டு வருவான்,அதனை நாம் பார்த்து விட்டு அனமதி வழங்க வேண்டுமா? எந்த ஊர் நியாயம் ஐயா இது? அங்கு காட்சிகளில் வருவது இசைப்பிரியா அல்ல, வேறு ஒரு பெண் அவரைப் போல் நடித்துள்ளாள்.ஆதலால் பார்க்கலாம் என்கிறாயே?! உன் மனக் குரோதம் தான் என்ன மனிதா? நீ யாரென உன் வாயாலேயே வந்துவிட்டதே.....இது வெறும் நடிப்பு என்றால் ஏன் அதை இந்தியா தடை செய்தது? வெறும் நடிப்பால் எப்படியப்பா இந்திய இலங்கை நட்புறவு பாதிக்கப்படும்? இதனை நீ இந்திய அரசிடம் கேட்டிருக்கலாமே இயக்குனர் கணேசன் அவர்களே!? நாம் சாதாரண குடும்பப் பெண்கள், எம்மால் என்ன செய்ய முடியுமென்று தானே எம்மிடம் இத்தகைய கேள்விகளை கனேடிய CMR வானொலி மூலம் கேட்டீர்கள். ஆம் நாம் சாதாரண குடும்பப் பெண்கள் தான். எம் வாழ்க்கையை நீங்கள் படமாக்க முனையாதீர்கள்.இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்.எங்களை விட்டு விடுங்கள்.
 
தமிழீழப் பெண்களின் மானம் சிங்கள இனவெறிக் காடைகளால் அழிக்கப்பட்டது இனவழிப்பு.நான் தமிழன்,பாதிக்கப்பட்ட தமிழன் என்று கூறும் இயக்குனர் கணேசன்,அவருக்கு பலமாக இருக்கும் பிற தமிழர்களால் அதே தமிழீழப் பெண்களின் மானப் பறிப்பு படமாக்கப்பட்டு திரையேற்ற அரங்கும் ஆதரவும் தேடப்படுவது என்ன அழிப்பு? பதில் தேடுங்கள் எம் தமிழ் உறவுகளே....
 
ஏனெனில் நாளை இது உங்கள் வீட்டுக் கதவையும் தட்டப் போகும் பிரச்சனை.
 
- திருமதி வாகீசன் தர்மினி.
இங்கிலாந்து.


-- 
DHARMINI.VAHISAN
அனுப்புக HomeSrilankan NewsArticles

Friday, September 11, 2015

தமிழ் எம்.பி.களுக்கு இலங்கையில் பேச தைரியம் இருக்குமா?

தமிழ் எம்.பி.களுக்கு  இலங்கையில் பேச தைரியம் இருக்குமா?
----------------------------------------------------------------------------------------------
       இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு  எம்.பி.க்களில்,குறிப்பாக தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் தைரியமாக அல்லது நேர்மையாக அல்லது வாக்குகள் பெறுவதற்கு கொடுத்த வாக்குகளின்படி, தமிழர்கள் மீது நடத்தப்பட்ட "இன அழிப்பு போரில், நடந்த போரகுற்றங்களை விசாரிக்க, ஐ.நா. மனித உரிமை கவுன்சில் உரூவாக்கிய "மூவர் விசாரணைக் குழு" அறிக்கையின் அடுத்த கட்டமாக  அதை அமுலாக்க " பன்னாட்டு பங்கேற்புடனான தொடர் செயல்பாட்டு       பொறியமர்வை" ஏற்படுத்த நாடாளுமன்றத்தில் பேசுவதும், இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்பதும், சிங்கள சாதியான "உள்நாட்டு விசாரணை மட்டுமே" என்பதை எதிர்க்கவும் செய்வார்களா?

              இந்தப் பணியை செய்ய எதிர்க்கட்சி தலைவராக் பொறுப்பேற்றுள்ள இரா.சம்பந்தனோ, சுமந்திரனோ, துணை எதிர்க் கட்சி தலைவராகியுள்ள மாவே   சேனாதிராஜாவோ, செய்ய மாட்டார்கள் என்பதாக ஒரு பொதுக் கருதது இருக்கிறது. வெளியே பேசிவரும், டெலோ உறுப்பினர்களோ, பிளாட் உறுப்பினரோ, நாடாளுமன்றத்திலும் பேசுவார்கள் என்பதும் சந்தேகமில்லை. ஆனால், கிளிநொச்சி சிரிதரனோ, மற்ற தமிழரசுக் கட்சி உறுப்பினர்களோ பேசுவார்களா? மலையகத்தை சேர்ந்த இன்றைய அமைச்சர்களான மனோ கணேசனோ, ராதாகிரிஷ்நனோ  பேசுவார்களா? அழுத்தம் கொடுப்பார்களா? என்ற கேள்வி கேட்கப்பட்டே ஆகவேண்டும்.மனோ கணேசன் ஏற்கனவே நடந்த போரில் " காணமல் போனவர்கள் பற்றியும், வெள்ளை வாகன கடத்தல் பற்றியும் ஐ.நா.விற்கும் பன்னாட்டு சமூகத்திற்கும் விடாப்பிடியாக எடுத்து சென்றவர்" என்பதால் இப்போது "பன்னாட்டு பொறியமைவு"வேண்டும் என்று அவர் கேட்டால் மட்டுமே அது சரியான தொடர்ச்சியாக இருக்கும்.

     எப்படி அரசாங்கத்தில் உட்கார்ந்துகொண்டு அரசாங்கத்தின் ஆட்களுக்கு எதிரான முடிவை பேசமுடியுமா? என்று கேட்பீர்களானால்,அங்கெ சிங்கலதிற்குள் இப்போது என்ன நடக்கிறது? இன்று ரணில்விக்ரமசிங்கே என்ற பிரதம அமைச்சரின் இந்திய பயணத்தை ஒட்டி, பிரதமர் அங்கே சென்று, இந்தியாவுடன் வர்தக உறவுக்காக "சீபா" என்ற ஒப்பந்தந்தில் கையெழுத்து போட்டாரென்றால் அதை நாங்கள் எதிர்ப்போம் என்று, இலங்கை அமைச்சர் சம்பிக்க ரணவக்க பேசியுள்ளார். சிங்கள எம்.பி.களுக்கு உள்ள அந்த "தைரியம்" தமிழர்களுக்கு வருமா?

விக்னேஸ்வரனின்பதிலில் ,நீதி நெருப்பாகிறது

விக்னேஸ்வரனின்பதிலில்,மாவே,சம்பந்தன்,சுமந்திரன் தோற்க,நீதி நெருப்பாகிறது
----------------------------------------------------------------------------------------------------------------------------------
    இன்று செப்டம்பர் 11 ஆம் நாள். இலங்கை அரசிடம்  ஐ.நா.மனித உரிமை கவுன்சில், தங்களது 2014 ஆம் ஆண்டின் தீர்மானப்படி[ இந்தியா புறக்கணிதத தீர்மானம்]  இலங்கையில் நடந்த "போர்குற்ற விசாரணை"க்கு "பன்னாட்டு விசாரணை" ஒன்றை  செயல்படுத்த," மூன்று பேர் கொண்ட குழு" வை நியமித்ததை ஒட்டி, மூவர் குழு கொடுத்துள்ள "அறிக்கையை"  கையளிக்கிறது. இந்த நேரத்தில் இலங்கை வெளிவிவ்கார அமைச்சரான மங்கள சமவீரா, தன்னை சந்தித்த "மனித உரிமை அமைப்பின்" ஆர்வலர்களிடம்," ஐ.நா.போர்குற்ற விசாரணை அறிக்கையின் அடிப்படையில், இன்றைய இலங்கை அரசு, "ஒரு உள்நாட்டு பொறியமைவை ஏற்படுத்தி, அதன் மூலம் உள்நாட்டு நீதியரசர்களைக் கொண்ட நீதிமன்றத்தை அணுகி, போர்குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை வாங்கி தரத் தயாராக இருக்கிறது" என்று கூரியுள்ளார்..

      அதாவது, தெளிவாக, "பன்னாட்டு நீதியரசர்களையோ, பன்னாட்டு  நீதிமன்றதையோ, அணுக விடமாட்டோம். பன்னாட்டு சக்திகளை உள்நாட்டு விசாரணையில் தலையிட அனுமதியோம். ஐ.நா. வின் விசாரணை செய்த மூன்று பேர் கொண்ட குழுவை, உள்நாட்டு விசாரணையில் தலையிட விடமாட்டோம்" என்றும் தெளிவாக கூறியுள்ளார். அதாவது மஹிந்த ராஜ பக்செவின் அதே முடிவில்தான் மைத்திரிபால சிறிசேன அரசும் உள்ளது. அல்லது ரணில் விக்ரமசிங்கேயும் இருக்கிறார் எனபது தெளிவாக் புரிகிறது.இந்த செய்தியை  வடக்கு மாகான சபையின் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் "தினக்குரல்" இதழுக்கு கொடுத்த நேர்காணலில் கூறியுள்ளார். அதுபற்றி கூறும் முன்னாள் இலங்கை உயர்நீதிமன்றத்தின் நீதியரசர் விக்னேஸ்வரன், " இலங்கையின் உள்நாட்டு விசாரணையை நடத்தும் இலங்கையர்கள்,நிச்சயமாக தங்கள் நாட்டு ராணுவத்தினர் மீது போர் குற்றங்களை  நிரூபிக்க போவதில்லை." என்று கூறுகிறார்.

                     மேலும் விக்னேஸ்வரன், "ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள சில ஏக்கர்  நிலங்களை விடுவிப்பார்கள். சில கைதிகளை விடுவிப்பார்கள். காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதாக கூறுவார்கள்.சிறிய அளவில் ராணுவத்தை குறைப்பார்கள்.இவையெல்லாம் அவர்கள் செய்யவேண்டிய கடமைகள. ஆனால் ஆபத்தான போர்குற்றங்கள் என்னவாயிற்று? என்றுமே எந்த இலங்கை நீதியரசரும், ராணுவத்திடம் குற்றம் காண மாட்டார்." என்றும் விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

     இப்படியாக அங்குள்ள சூழல் இருக்கும்போது, ஊடகவியலார கேட்ட  கேள்வி,"உங்கள் மீது  தமிழரசுக் கட்சி தலைமை நடவடிக்கை  எடுக்கபோகிறார்களே?" என்று கேட்டதற்கு, " தான் பன்னாட்டு விசாரணையை நடத்தி பாதிக்கபட்டோருக்கு உண்மையையும், நீதியையும் வாங்கி தருவேன்  என்ற வாக்குறுதியின் மூலம் வடக்கு மாகாண சபைக்கு மக்களால தேர்வு    செய்யப்பட்டவன்.நான் கடந்த 23 மாதங்களாக  இந்த மக்களுடன் வாழ்ந்து, அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவற்ற குறைந்த பட்ச வாய்ப்புகளுடன் போராடி வருகிறேன். இந்த நேரத்தில் தமிழரசுக் கட்சியினர் எடுக்கும் நடவடிக்கை பற்றி நான் கூற என்ன இருக்கிறது? அவர்கள் தாங்கள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முயல் வேண்டும் " என்றார்.

         தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவே சேனாதிராஜா, இலங்கை எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன், சுமந்திரன் உடன் சேர்ந்து, இலங்கை அரசின் இந்த "தமிழர் விரோத போக்கை" ஆதரித்து, செயல்படுகிறார்கள். அவர்கள் மீதும் தமிழ் மக்கள் கடும் கோபத்துடன் இருக்கிறார்கள். மக்கள் போராட்டம் வெடிக்கும் சாத்தியங்களே உள்ளன. அமெரிக்காவும், இலங்கை அரசின் நிலைகளுக்கு துணை போய வருவது தெரிகிறது. பன்னாட்டு விசாரணை இன்னமும் முடிவடையவில்லை என்பதையும், முதல் கட்ட விசாரணையை பன்னாட்டு குழு இலங்கை நாட்டிற்குள் சென்று நடத்த மகிந்தா அரசாங்கம் அனுமதிக்கவில்லை . ஆகவே அது இரண்டாம் தரப்பு சக்திகளிடம் செய்திகளைத்  திரட்டித்தான் அறிக்கை தயார் செய்துள்ளனர்..ஆகவே மீண்டும் இப்போது, புதிய ஆட்சியாளர்கள் புதிய சிந்தனையுடன் வந்திருக்கிறார்கள் என்பது உண்மையானால், பன்னாட்டு விசாரணை குழுவை இப்போதாவது இல்ங்கை தீவிற்குள் அனுமதித்து, விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும். விசாரணையில், பன்னாட்டு நீதியரசர்களை அனுமதிக்க வேண்டும். விசாரணையில், பன்னாட்டு வழக்கறிஞர்கள் இலங்கை வந்துகூட, நீதிமன்றத்தில் வாதம் செய்ய அனுமதிக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போதுதான் "உண்மையான போர்குற்றம் ஒரு இன அழிப்பே என்பதும், அதை செய்த சிங்களம் ஆளும் கட்சியாகவும், எதிர்கட்சியாகவும் அமர்ந்திருப்பதும்" உலகுக்கு தெரியவரும்.

    இபபோது இன்று { 11-09-2015]காலை முதல் மலை வரை இலங்கையில் "தமிழரசுக் கட்சியின்" தலைமைக் குழு கூடி விக்னேஸ்வரன் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றி விவாதித்து வருகிறார்கள். விக்னேஸ்வரன் தேர்தல் நேரத்தில், "யாருக்கும் பரப்புரை செய்யமாட்டேன்" என்று கூறினார். சொல்லில் மட்டுமின்றி, செயலிலும் காட்டுபவர்களை தேர்வு செய்யுங்கள் என்றார் அதை கஜேந்திரகுமார் தனக்கு சாதகம் என்று பரப்புரை செய்தார். "வாக்குகளை சிதறாமல் போடுங்கள்" என்று விக்னேஸ்வரன் கூறியதை இதே தமிழரசுக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மூலம், அது தங்களைத் தான் குறிக்கிறது என்று கூறி பரப்புரை செய்தனர்.இரு தமிழர் கட்சிகளுமே விக்னேஸ்வரனின் நேர்காணலை "இணையம்" மூலம் தங்களது பரப்புரைக்கு பயன்படுத்தினார்கள்.  ஆனால் இப்போது தங்களுக்கு எதிராக சென்றார் என்று கூறி நடவடிக்கை எடுக்கிறோம் என்கிறார்கள்.

      வருகிற செப்டம்பர் 30 ஆம் நாள் கூடும் ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் இந்த போர்குற்ற அறிக்கை வைக்கப்பட இருக்கிறது. அப்போது  இலங்கையும், அமெரிக்காவும், இந்திய அரசும், ஒரே நிலை எடுக்கலாம். அது "தமிழர்களுக்கு எதிரானது" என்பதை எப்படி கொண்டு செல்ல போகிறோம்?. நமக்கு இருக்கும் வலுவான ஆதாரம் இந்த முறை ஈழம் ம்வுனம் காகக வில்லை. எழுந்து விட்டது. வடக்கு மாகாண சபையின் இந்த ஆண்டு பிபிரவரி 10 ஆம் நாள் தீர்மாணப்படி, 'நடந்துமுடிந்த போர் ஒரு இன  அழிப்பு போரே' என்ற தீர்மானம் இருக்கிறது.  பத்து நாட்கள் முன்னால் விக்னேஸ்வரன் வடக்கு மாகான சபையில் போட்ட தீர்மானம் மூலம், "பன்னாட்டு பொறியமைவு மூலம் ம்ட்டுமே விசாரணையை தொடரமுடியும்" என்பது நிரூபணமாகிறது. உலகின் மனித உரிமை சக்திகள் அல்லது நாடுகள் நேர்மையாக சிந்திக்குமானால், "தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரதிநிதிகளான் வடக்கு மாகான சபையின் தீர்மானங்களை மட்டுமே சார்ந்து இருக்க வேண்டும். அரசியல் போராட்டத்திற்கு வடக்கும், கிழக்கும் இலங்கையில் தயாராகி விட்டன. நாம் அவர்களுக்கு ஆதரவு தரவேண்டும். 

Thursday, September 10, 2015

"ஜெ", நிர்மலா சிதாரமானுக்கு பதில்

உலகமுதலீட்டாளர் சந்திப்பில்,"ஜெ",  நிர்மலா சிதாரமானுக்கு பதில் சொன்னாரா?
--------------------------------------------------------------------------------------------------------------------------
   முதல் நாள் சந்திப்பில், முதல்வர் ஜெயலலிதா தனது தொடக்க உரையில்,நடுவண் அமைச்சர்  நிர்மலா கூறிய செய்தியான " மகாராஷ்டிரா, டில்லிக்கு பிறகு மூன்றாவதாக அந்நிய நேரடி மூலதனம் பெற்றதில், தமிழ்நாடு இருக்கிறது" என்ற பேச்சிற்கு, பதிலுரையாக," உண்மையில் அந்நிய மூலதனம் தமிழ்நாட்டிற்கு இதைவிட அதிகம் வருகிறது. இந்தியாவில் உள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் பலவற்றின் தலைமையகங்கள்,இருக்கும் மாநிலங்களை,தமிழ்நாட்டின் ஒரு குறிப்பிட்ட அளவிலான அந்நிய மூலதனத்துடன் ஒப்பிடுகிறார்கள்." என்று தனது உரையின் இரண்டாவது பாராவிலேயே கூறியுள்ளார்கள். அதாவது  நாம் குறிப்பிட்டு காட்டுவது போல,"வைப்ரன்ட் குஜராத்தை" தமிழ்நாட்டின் மூலதன இறக்குமதியுடன் ஒப்பிடாமல், இந்தியாவிலேயே "யார் அதிக வெளிநாட்டு மூலதனத்தை" ஈர்ததுள்ளார்கள் என்பதை சுட்டிக் காட்டுகிறார்.

     அதாவது மூன்றாவது இடத்தில தமிழ்நாடு என்ற மதிப்பீடே தவறு என்பதையும், மகாராஷ்டிராவின் தலைநகர் மும்பையும், டில்லியின் தலைநகர் டில்லியும், வெளிநாட்டு நிறுவனங்களின் தலைமையகங்களை கொண்டுள்ளது என்பதே அவர்களின் இடங்களில், பல்வேறு வகைகளில் வெளிநாட்டு மூலதனங்கள் வருவது அதிசயமல்ல. ஆனால் தமிழ்நாடு அதையே "தன்னிச்சையாக " சாதித்துள்ளது என்பதை முன்வைக்கிறார். அதன்மூலம் "இந்தியாவை  வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுசெல்ல" யாரால் முடியும் என்பதை, நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய சூழலில் கூறிய, "குஜராத்தின் மோடியா? தமிழ்நாட்டின் லேடியா?' என்ற சொல்லாடலை கூறாமல் கூறுகிறார்.,

               அதன்மூலம் நமக்கு புரியவேண்டிய செய்தியே, " அ.இ.அ.தி.மு.க விற்கும் பா.ஜ.க.விற்கும், இடையே வருகிற 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலில், நேரடி போட்டி இருக்கும் என்பதுதான்..இதில் பா.ஜ.க.விற்கு வேண்டுமானால் "தான் தி.மு.க.வை விட " அதிகமான இடங்களை வெல்லவேண்டும் என்றும், வெல்ல முடியும் எனவும் எண்ணம் இருக்கலாம். அதாவது "தான்தான் அ.இ.அ.தி.மு.க.விற்கு போட்டியாளராக இருக்கவேண்டும்" என்று பா.ஜ.க. எண்ணுகிறது. அதற்கான பெரிய கூட்டணிக்கு முயற்சித்து வருகிறது. ஆனால் அவர்கள் அதிகம் சார்ந்து இருப்பது, "சங்க பரிவாரத்தின்" ஊரகப் பணிகளைத்தான். அதாவது தமிழ்நாட்டில் உள்ள சாதிகளை ஒவ்வொன்றாக  தங்கள் பக்கம் இழுப்பதற்கான பணிகளை" பா.ஜ.க.கணக்கு போட்டு செய்து வருவது அனைவருக்கும் தெரியும்.ஆனால் அ.இ.அ.தி.மு.க.வோ, தனக்கு எதிரியாக தி.மு.க.தான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறது. அதற்கான காரணம் அனைவரும் அறிந்ததே.

     ஆகையால் நடுவண் அரசுக்கும், மாநில ஆட்சியாளர்களுக்கும் உள்ள உறவை, "ஒற்றையாட்சிக்கும், கூட்டமைப்புக்கும்" இடையே உள்ள முரண்பாடான உறவுதான் என்பதை பலரும் புரிந்துகொள்ளவில்லை. தவிரவும், இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து, நடுவண் அரசுக்கு எதிராக,"கூட்டமைப்பு அரசியலை" இன்றைய அ.இ.அ.தி.மு.க. தலைமையான செல்வி.ஜெயலலிதா எடுத்துக் கூறிய அளவுக்கு யாரும் செய்யவில்லை.2014 நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கு முன்பே, "கூட்டுறவுடன் கூடிய கூட்டமைப்பு" என்ற சொல்லாடலை அறிமுகப்படுத்தி, உச்சரித்து வருவது, செல்வி.ஜெயலலிதா மட்டும்தான் என்பதையும் காணத் தவறுகிறார்கள். இந்தியத் துணைக் கண்டத்தில், தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா மட்டும்தான், ஒவ்வொரு நடுவண் அரசின் செயல்களுக்கும், பதில் கொடுத்து,மாநில உரிமைகளை முன் நிறுத்தி வருகிறார்.

        ஆகவே அ.இ.அ.தி.மு.கவுடன், பா.ஜ.க.வை முடிச்சு போட்டு பேசி வருவது, "தற்காலிகமாக முஸ்லிம், கிருத்துவ வாக்குகளை"  அ.இ.அ.தி.மு.க.விற்கு எதிராக மாற்றவும், தி.மு.க.விற்கு சாதகமாக திருப்பவும்  உதவலாமே தவிர , தேர்தல் நேரத்தில் அதுவும் தோற்றுப்போகும். அத்தகைய "பரப்புதல்" அறிவாலயத்திற்கு வேண்டுமானால் இனிப்பாக இருக்கும். உண்மையில் அதற்கான நியாயங்களே இல்லை.

Tuesday, September 8, 2015

உலக முதலீட்டாளர் சந்திப்பு- எதிர்க்கட்சிகளுக்கு விளங்கவில்லையா?


       திமுக வின் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் இந்த உலக முதலீட்டாளர் சந்திப்பு பற்றி ஒரு குண்டை எடுத்து போட்டுள்ளார். அதிமுக ஆட்சியாளர்கள் "சிறிய தொழிலதிபர்களை மிரட்டி, 100 கோடி முதலீடு செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளனர். எனக்கு தகவல் உள்ளது" என்று கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டு உண்மையா? பொய்யா? என்பது அடுத்த விஷயம். ஆனால் இதில் ஒரு உண்மை வெளிவந்துள்ளது. அதாவது "உலக அளவிலான பெரிய முதலீட்டாளர்கள் கலந்துகொண்டு தமிழ்நாட்டிற்கு மூலதனமிட வருகிறார்கள்"என்றும் பல்லாயிரக்கணக்கான கோடிகள் "அந்நிய மூலதனம்" வந்திறங்கினால் ஏன்னாகும்? என்றும் சில சர்ச்சைகள் உள்ளன. வருகின்ற வெளிநாட்டு முதலீட்டாளர்கள் என்பது " ஊடகச் செய்தியாக " ஆகிவிட்டது.  அதுவும் எந்த எந்த நாடுகளிலிருந்து வருகிறார்கள் என்பதும் செய்தியாகி விட்டது. அதனால் அதை " விவாதிப்பது" நமது நோக்கமல்ல. 


        ஆனால், வருகின்ற மூலதனம், இங்கும் "கார்போறேட்களின்" செல்வாக்கை கூட்ட வருகிறதா? இங்குள்ள "உள்கட்டுமானங்களையும் பயன்படுத்தி,தேங்கி கிடக்கும் தொழில்களை எழுப்பி நிறுத்த வருகிறதா?" அதற்கான "பதில்" தளபதி ஸ்டாலினுக்கு  தெரிந்திருக்கிறது. அதனால் தான் அவர் யாரும் பேசாத " சிறிய தொழிலதிபர்களை" பற்றி பேசியிருக்கிறார். அந்த சிறிய தொழிலதிபர்களின் "நிலை" என்ன? தமிழ்நாட்டிலுள்ள "சிறு,குறு, தொழிலதிபர்கள்" தங்களது தொழில்கள் சமீபகாலமாக "தேங்கி" இருப்பதாக உணர்கிறார்கள் அல்லவா? அவர்களையும் இந்த "உலக முதலீட்டாள்ர்கள் சந்திப்பில்" இறக்கி விடுகிறது தமிழக அரசு என்ற ஒரு செய்தியை தளபதி ஸ்டாலின் கூறுகிறார் என்பதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.அப்படிச் செய்தால் அது மிகவும் நல்ல செய்திதானே? என்று அதுபற்றி ஆய்வு செய்தோம். ஸ்டாலின் ஏன் திடீரென அந்த "சிறிய தொழிலதிபர்கள்" பற்றி பேசுகிறார்? அவர் திடீரென பேசவில்லை. கடந்த மே மாதம் தளபதி ஸ்டாலின் கோவை சென்று, அத்தகைய "சிறு,குறு தொழிலதிபர்களின் சந்திப்பு" ஒன்றை கூட்டினார். அதில் அரசியல் எதுவும் பேசாமல், அவர்களது "கடினங்களையும், பிரச்சனைகளையும்" பற்றி கேட்டறிந்தார். அவர் ஏற்கனவே " ஊரக வளர்ச்சிக்கான உள்ளாட்சித் துறையில்" அமைச்சராக இருந்தவர். அந்த தொடர்புகள் மூலம் அவருக்கு சில செய்திகள் கிடைத்துள்ளன. அவை என்ன என்ற ஆர்வத்தில் நாமும் விசாரித்தோம்.

       "எம்.எஸ்.எம்.ஈ".என்ற " மத்தியதர,சிறிய, மிகச்சிறிய,தொழில் முனைவோர்"[ Medium,Small,Micro Enterpneors} இந்தியப் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய பங்களிப்பை செலுத்துகிறார்கள் என்ற உண்மை இப்போதெல்லாம் அரசியல்வாதிகளுக்கு தெரிந்துள்ளது. சுதந்திரம் கிடைத்து 50 ஆண்டுகள் கழித்து, அடல்பிகாரி வாஜ்பாய் தலைமை அமைச்சராக இருக்கும்போதுதான் முதல் முறையாக "சிறிய தொழில்களுக்கான ஒரு தனி அமைச்சரவை"எஸ்.எஸ்.ஐ என்ற பெயரில் ஏற்படுத்தப்பட்டது. அதற்கு அப்போது, வசுந்தரராவ் சிந்தியா அமைச்சராக இருந்தார். அதுபோல மாநிலங்களின் அரசுகளும் "பெரிய தொழில்களுக்கு ஒரு அமைச்சகம், சிறிய தொழில்களுக்கு ஒரு தனி அமைச்சகம்" என்று ஏற்படுத்திக் கொண்டார்கள். சிறிய தொழிலகங்களை நடத்துவோர்கள் "இரண்டு ரகங்களாக" பிரிகின்றனர். ஒரு வகையினர்  "பெரிய தொழிலகங்களுக்கு தேவையான சிறிய உறுப்புகளை உற்பத்தி செய்து கொடுப்பது" என்ற "சார்பு தன்மை" கொண்டவர்கள். இன்னொரு வகையினர், "தாங்களாகவே, ஒரு பொருளை முழுமையாக உற்பத்தி செய்வதும், அதை சந்தையாக்கும்போது, பெருமுதலாளிகளின் சரக்குகளை சந்தைப் போட்டியில் சந்திப்பதும்" என்ற நடைமுறையை கொண்டவர்கள். இவர்கள் அதாவது இந்த இரண்டாவது வகையினர் இன்று "பெரு முதலாளிகளையே சந்தையில் சவாலுக்கு இழுக்கும் நிலையில்" உள்ளனர். இப்படிப்பட்ட சிறு,குறு முதலாளிகள் இப்போது என்ன நிலையில் உள்ளனர்? 

       ஊரக மற்றும் சிறு தொழில்கள் என்ற ஒரு அமைச்சகம் தமிழ்நாட்டிலும் உள்ளது.இப்போது மோகன் அதன் அமைச்சர். முன்பு பொங்கலூர் பழனிசாமி அதன் அமைச்சர்.எஸ்.எஸ்.ஐ. என்ற அந்த நாடு தழுவிய  நிலையில் அழைக்கப்படும் இத்தகைய தொழிற்சாலைகள், குறிப்பாக, ராஜ்காட், லூதியானா, கோயம்பத்தூர் ஆகிய இடங்களில் அதிகமாக் இருக்கின்றன. இன்னமும் கூறப்போனால், பல லட்சம் சிறு தொழிலகங்கள் இந்த இடங்களில் இருககின்றன.தமிழ்நாட்டில் இருக்கும் இத்தகைய சிறிய ஆலைகள்,தற்காலிகமாக "மூலதனக் குறைவினாலும், ஊக்குவிக்க வாய்ப்புகள் இல்லாமையாலும்" உணர்வு இழந்து வருகின்றனர். அவர்களின் " மன ஊக்கம் தளர்ந்துள்ளது" இந்த நிலையை கவனித்த தமிழ்நாடு அரசும், இத்தகைய சிறிய தொழிலகங்கள் நாட்டின் பொருளாதாரத்தின் "முதுகெலும்புகள்" என்பதை உணர்ந்து, அவர்களை ஊக்குவிக்க இந்த சந்திப்பில் ஒரு ஏற்பாடு செய்துள்ளனர். 

     அது என்ன? தமிழ்நாட்டில் சிறிய தொழில்களை ஊக்குவிக்க ஏற்கனவே, இயங்கும் "டி.ஐ.சி." என்ற "மாவட்ட தொழிலக மையம்" மூலம் சில பணிகளை செய்துள்ளனர். குறிப்பாக,7 பிராந்தியங்களாக தமிழ்நாட்டை பிரித்து, திருநெல்வேலி, மதுரை, திருச்சி,சேலம், சென்னை, கோவை,திருப்பூர் ஆகிய இடங்களில் உள்ள "டி.ஐ.சி." மூலமும், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலமும், " மத்தியதர,சிறு,மிகச்சிறு,தொழில் முனைவோர்" அனைவரையும் கூட்டி, அவர்களது, " ஆலோசனைகளை, குறிப்பாக அவர்களது சொந்த முன்வைப்புகளை" கேட்டு வாங்கி இருக்கிறார்கள். அத்தகைய சிறு தொழில் முனைவோரது,"தேக்கங்களை" உடைக்க உதவுமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இதில் தமிழக அரசின் பங்கு என்பது வெறும்," சந்திப்புகளையும்,ஏற்பாடுகளையும், ஆலோசனைகளையும் பரிமாறிக் கொள்ள, அந்த மூலதன்மிடுவோரையும், அனுபவத்தையும், திறமையையும், கொண்டுள்ள சிறு தொழில் முனைவோரையும் சேர்த்து வைப்பது மட்டுமே". தங்கள் கைகளில் மூலதனம் இல்லாத நிலையில், இந்த சிறு தொழில் அதிபர்கள், வெளியிலிருந்து வரும் பெரும் மூலதனமிடுவோருடன் இணைந்து அத்தகைய ஆலைகளை உருவாக்க " வேண்டும். வெளியிலிருந்து வருகின்ற முதலீட்டாளர்கள், உள்நாட்டு பங்காளிகளை இணைத்துக் கொள்ளாமல், அத்தகைய ஆலைகளை உருவாக்க முடியாது என்பதால் அத்தகைய ஏற்பாட்டை தமிழ்நாடு ஆரசு செய்துள்ளது. உதாரணமாக , கோவையில் கூடிய  அத்தகைய கலந்தாலோசனை கூட்டத்தில், ரூ.3000 கோடிக்கு "முன்வைப்புகளை" சிறு தொழிலதிபர்கள்,கொடுத்தள்ளனர். அவற்றுக்கு உடனடியாக " புரிந்துணர்வு ஒப்பந்தங்களும்" போடப்பட்டுள்ளன. இத்தகைய செய்திகளைத்தான் தளபதி ஸ்டாலின் "வற்புறுத்தி சிறு தொழிலதிபர்களிடம் ரூ 100 கோடியை போட வைத்துள்ளனர்" என்பதாக ஒரு "தவறான செய்தியை" தெரிவித்துள்ளார். 

        பெரும் தொழிலதிபர்களின் பெரும் மூலதனங்களையும், அதேசமயம் குறைந்த மூலதனமிட வரும் வெளிநாட்டு மூலதனத்துடன், மூலதனம் இல்லாத அல்லது மூலதனத்தை போட விரும்பாத சிறு தொழிலதிபர்களுடன் இணைந்த ஏற்பாடுகளை செய்துகொள்ள தமிழக அரசு இத்தகைய ஏற்பாடுகளை செய்துள்ளது என்பது, மாவட்டங்களிலிருந்து வருகின்ற இனிய செய்தியாக இருக்கின்றது.

Tuesday, August 18, 2015

புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு பார்வை?

எது எப்படியோ.புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு பார்வை?
---------------------------------------------------------------------------------------
      புலம் பெயர்ந்த தமிழர்கள், தாங்கள் சிறந்த "விமர்சகர்கள்" என்று எண்ணிக்கொண்டு,ஈழத்திற்குள் நுழையாமல், ஈழத்தில் உள்ள மக்களது உணர்வுகளையும் புரிந்து கொள்ளாமல், அரசியல் நிலைமை எப்படி இருக்கிறது என்பதையும் அறியாமல், "இணையம் மூலம்" அரசியல் "அறிவு" பெரும் பெரிய "ஆப்பாட்டக்காரர்களாக" இருப்பதால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீது மக்களுக்கு "விமர்சனம்" இருக்கிறது என்பதை மட்டுமே தெரிந்துகொண்டு, இலங்கையில் வாழும் மக்கள் தங்களது "வாழ்க்கைக்கு தகுந்தாற்போல" எதை தேர்வு செய்வார்கள் என்றும் அறியாமல், அங்குள்ள அரசியலைப் புரியும் "திறன்" இல்லாமல், "மேட்டுக் குடி வாழ்நிலையில்" வெளிநாடுகளில் இருந்துகொண்டு, "கடும் விமர்சனங்களை" தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீது எடுத்து "எறிந்தார்கள்">

       அவர்களது "இணையம்" மூலமான கருத்துகளை தமிழ் மக்கள் "கண்டு கொள்ளவில்லை". த.தே.கூ.பை "செமையாக" திட்டித் தீர்த்த "கஜேந்திரகுமார்" குழுவை, புலம் பெயர்ந்து ஐரோப்பாவில் வாழ்பவர்களும், இந்தியாவில் வாழ்பவர்களும், எத்தனை "கானோளிகளில்" பாடல்களையும், இசையையும், இணைத்து "பாடுபட்டு" உழைத்தார்கள். ஆனால் ஈழ மக்கள் அவர்களது அனைத்து முய்ரசிகளையும், கண்டுகொள்ளவில்லை. கஜேந்திரகுமார் குழுவை, ஒரு "கட்சியாக" அங்கீகரிக்கவில்லை. இப்போதாவது "அறிவுஜீவிகள்" திருத்திக் கொள்வார்களா? யதார்த்தத்தை புரிந்துகொண்டு "தமிழ் மக்களுக்கு" பாடுபடுங்கள். இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டு தமிழர்களது நிலைமையையும், "இணையம் புகழ்" ஆப்பாட்டக்காரர் களிடமிருந்து கற்றுக் கொள்ளாதீர்கள்.  

இலங்கை தேர்தல்முடிவுகளும்,அதற்கு பின்னாலிருக்கும் தந்திரங்களும்

இலங்கை தேர்தல்முடிவுகளும்,அதற்கு பின்னாலிருக்கும் தந்திரங்களும்
--------------------------------------------------------------------------------------------------------------
இலங்கையில் தென்னிலங்கையில் உள்ள சிங்களப் பகுதியின் வாக்குகளில், "ஐக்கிய தேசியக் கட்சி" இன் தலைவர் ரணில் விக்ரமசிங்கேவிற்கு  ஆதரவாக  அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெறுவது உறுதி என்றபோதும், "ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி" இன் பெருவாரியான எம்.பி.க்கள் ராஜபக்சே ஆதரவாளர்கள் என்பது உண்மைதான். ஆகவே ரணில் தனக்கு அதிகமான் எம்.பி.க்கள் ஆதரவு வேண்டும் என்பதற்காக, தவிர்க்கமுடியாமல், வடக்கு,கிழக்கு மாகாணங்களின்,எம்.பி.க்களான "தமிழ் தேசியக் கூட்டமைப்பு" ஆதரவை பெறுவார் என்றும், தமிழ் எம்.பி.க்களை சார்ந்து நிற்பார் எனவும், அதனால் தமிழ் எம்.பி.க்கள் "பேரம்" பேசலாம் என்றும்,அதன்மூலம், "சமஷ்டி அரசு","சர்வ தேச விசாரணை" ஆகியவற்றை "வற்புறுத்த" முடியும் என்றும், "வற்புறுத்த வேண்டும்" எனவும் பலரும் கருதது தெரிவித்து வருகிறார்கள். ஆனால் "சிங்களத்தின் தந்திரம்" என்பது "சீரிய சிந்தனையுடன்" செயல்படுகிறது.அதாவது ராஜபக்சே ஆதரவுடன் வெற்றிபெற்ற "ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி" இன் எம்.பி.க்கள் ஒவ்வொருவராக, ரணில் தலைமையிலான "ஐக்கிய தேசியக் கட்சி" க்கு "தாவ" தயாராகி வருகிறார்கள். அதற்கு அந்த " ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சி" இன் தலைவரும், "ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி"இன் அமைப்பாளருமான இன்றைய "அதிபர் மைத்திரிபால சிரிசேனா"வும், சந்திரிகா குமாரதுங்கா"வும் ஏற்பாடுகள் செய்வார்கள் என்பது நாடறிந்த செய்தி. இததகைய முயற்சி, "ராஜபக்சே"விற்கு எதிரான செயல் என்று "பலரும்" ஏமாறலாம். ஆனால்,உண்மை அப்படி இல்லை.

 ராஜபக்சே அணியினர் "சர்வதேச விசாரணையை" எதிரகொள்ளும் நேரத்தில், "அவர்களை" காப்பாற்ற "சிங்களம்" அதாவது, மைதிரிபாலா சிரிசேனா, ரணில், ராஜபக்சே ஆகியோர் ஒரே கருத்தின் அடிப்படையில், அதாவது," சர்வதேச விசாரணையிலிருந்து" அனைத்து சிங்கள தலைவர்களையும்" காப்பாற்றும் முயற்சியில், "ரணிலுக்கு ஆதரவாக அனைத்து சிங்கள எம்.பி.க்களையும்" சேர்த்து, அதன்மூலம், "தமிழ் தேசிய கூட்டமைபினர்" ஆதரவின்றியே, அதாவது "பேரம் பேசக் கூட" தமிழர்களுக்கு, "வாய்ப்பு" கொடுக்காத நிலையில், ஒரு "தேசிய அரசை" [ தமிழர் கட்சிகள் இல்லாத} நிறுவி, அதன்மூலம், ரணில் மூலம் அமெரிக்காவை செல்வாக்கு செலுத்தி , உலக சமூகத்தை "சரிக்கட்டி" வருகிற செப்டம்பர் வெளியீடான,"ஐ.நா. மனித உரிமை கவுன்சில்" அறிக்கையில், புதிய ஆட்சி என்பது, "போர்குற்ற விசாரணைக்கு" தயார் என்பதால், அவர்கள் கையிலேயே கொடுத்துவிடுகிறோம் என்று,"உள் நாட்டு விசாரணைக்கு" கொடுப்பது என்ற "நாடகத்தை"முடிவுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளார்கள்., அத்தகைய திட்டத்திற்கு, "சிங்களத்துடன்" சேர்ந்து, இந்திய வெளிவிவகார அமைச்சகமும், அமெரிக்க அரசும் இணைந்தே திட்டமிட்டுள்ளார்கள் என்று தெரிகிறது.

Friday, July 31, 2015

சசிபெருமாளின் மரணமும், மதுவிலக்கும்??


     என்ன இது?  அதிர்ச்சியான செய்தியாக இருக்கிறதே? மதுவிலக்கு பற்றி தொடர்ந்து "செய்திகள்" வருவதற்கு உதவியாக இருந்த ஒரு சசிபெருமாள் குமரி மாவட்டத்தில் "செல்போன் டவரின்" மேலிருந்து விழுந்து இறந்துவிட்டாரே? இதை எப்படி எடுத்துக் கொள்ள?  மதுவிலக்கு மட்டுமே பேசிவந்த ஒருவர் இப்படி சாகவேண்டுமா? தாங்க முடியவில்லையே? அந்த வயதான சசிபெருமாள்,தொடர்ந்து "சாகும்வரை பட்டினிப்போர்  மறியல், சத்தியாக்கிரகம், முக்கிய இடங்களில் அமர்வது, சேலத்திலிருந்து சென்னை வந்து செய்தியாக ஆவது, பல தலைவர்களைப் பார்த்து மதுவிலக்கை எடுத்துரைப்பது, அரசியல் தலைவர்கள் மதுவிலக்கு அறிவித்தால்,அவர்களை சென்று பார்த்து நன்றி கூறுவது, இப்படி தொடர்ந்து விடாப்பிடியாக செயல்பட்டவர் திடீரென மரணம் அடைந்துவிட்டாரே? என்று நமக்கும் அதிர்ச்சிதான். ஊடகங்கள் உடனடியாக  அவரது மரணத்தின் மீது , தலைவர்களிடம்  கருத்துக் கேட்டு, அவற்றை வெளியிடுகின்றன. அவை வேண்டுமானால் ஊடகங்களின் வேலை அல்லது கடமை அல்லது ஊடகங்கள் மீதான "தாக்கம்" என்று சொல்லலாம். ஆனால் சசிபெருமாள், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக  ஊடகங்களில் கூறுவது உண்மைதானா? மக்கள் மத்தியில் அப்படி ஒரு "தாக்கத்தை" அவரால் ஏற்படுத்த முடிந்ததா?என்ற கேள்வி எழுகிறது. 

           பொதுமக்கள் மத்தியில் எல்லோருக்கும் சசிபெருமாளை தெரிகிறதா? நமக்கு அப்படி புலப்படவில்லை. ஒரு சட்டக் கல்லூரி மாணவி நந்தினி தனது தந்தையுடன் சேர்ந்து இதேபோல அவ்வப்போது மதுரையிலிருந்து புறப்பட்டு, சென்னை வரை பல ஊர்களிலும் மதுவிலக்குக்காக பட்டினிப்போர் நடத்திவருகிறார். அதேபோல நெல்லையிலிருந்து ஒரு விவேகானந்தன் சென்னை வந்து ஒரு பெரும் பட்டினிப்போராட்டம் நடத்தி, மதுவிலக்கை பரப்பினார். நெல்லையிலேயே 1000 குழந்தைகளுக்கு "மகாத்மா காந்தி" வேடம் போட்டு மதுவிலக்கை வலியுறுத்தி  நிகழ்ச்சி நடத்தினார். அடுத்து சமீபத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து, மதுவிலக்கு அறிவித்ததற்காக "நன்றி" கூறினார். இப்படியாக ஊடக செய்திகளில் வந்துகொண்டிருக்கிறார். இவர்கள் "தனிநபர்களாக" இருக்கலாம். ஆனாலும் அவர்கள் பரப்பும் கொள்கைதான் அவர்களை "அடையாளம்" காட்டுகிறது. அதேபோல சசிபெருமாள் இன்று நம்முடன் இல்லை. அது நமக்கு வருத்தமே. ஆனால் அவர் ஏன் "செல்போன்" டவர் மீது ஏற வேண்டும்?".  "முழுமையான மதுவிலக்கு" மட்டுமல்ல , கன்யாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை என்ற ஊரில்,ஒரு குறிப்பிட்ட "டாச்க்மாக் கடையை" அகற்றவேண்டும் என்ற கோரிக்கையையும்  சசிபெருமாள் வைத்ததாக தெரிகிறது.   ஐந்து மணிநேரம் சசிபெருமாள் அந்த "செல்போன் டவர்" மீது ஏறி நின்று  போராட்டம் நடத்தியுள்ளார். அத்தகைய போராட்டத்தை அவரது "நண்பர்கள்" ஏன் தடுக்கவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.

                   சசிபெருமாளின் மரணத்தை ஒட்டி அரசியல்வாதிகள் என்ன வேண்டுமானாலும் கூறலாம். அவர்கள் அரசாங்கத்தை மட்டுமே குற்றம் சாட்டலாம்.அதை பொதுமக்கள் "பெரிதாக"  எடுதுக் கொள்ள மாட்டார்கள். ஆனால் மதுவிலக்கு கொள்கையை தொடர்ந்து பரப்பி வரும் "தமிழருவி மணியன்" சசிபெருமாளின் மரணம் பற்றி கூறும் போது "தனது கோரிக்கை  தொடர்ந்து அரசின் கவனத்தை ஈர்க்கவில்லையே" ,என்ற "ஆதங்கத்தில்" செல்போன் டவர்" ஏறியிருக்கிறார் என்று கூறுகிறார். அவரும் "செல்போன் டவர்" ஏறியதை ஆதரிக்கவில்லை. இப்படி விரக்தியில் போராட்டங்களை செய்யலாமா? சிறைக்குள் இருக்கும் சிறைவாசிகள் "வேறு வழியே" இல்லாமல், "செல்போன் டவரின் மீது ஏறுதல்" போன்ற போராட்டங்களை நடத்தும்போது,"புரிந்தகொள்ள" முடியும். அதை அண்ணன் சசிபெருமாள் செய்யலாமா? அவரது உயிர் அவருக்கு பெரிதாக தோன்றாமல் இருக்கலாம். நமக்கு அது "ஒரு உயிர்" என்பதும், அனாவசியமாக ஒரு உயிர் சாககூடாது என்பதும் தெரியுமே? நாம் "பயங்கரவாதி" ஆனாலும் ஒரு உயிரை எடுக்க "அரசுக்கு" உரிமை இல்லை என்றுதானே "மரண தனடனையையே" எதிர்த்து வருகிறோம். தனது உயிரை போக்கிக்கொள்ளவும் யாருக்கும் உரிமை கிடையாது என்பதுதான் நமது வாதமும். எந்தவகையிலும் சசிபெருமாளின் இத்தகைய "போராட்ட வடிவத்தை" நாம் ஏற்க முடியாதல்லவா?

                      நம்மவர்கள் "தனிநபர்கள்" ஒரு சமூக பிரச்சனைக்காக, மக்களின் கவனத்தையும், அரசின் கவனத்தையும் ஈர்க்க, சில நேரங்களில் சிலவகை போராட்டங்களை நடத்துகிறார்கள்.யாரும் நல்ல கோரிக்கைகளை "கவனிக்கவில்லையே" என்ற ஆதங்கத்தில்தான், சில நேரங்களில் "விரக்தியில்தான்" சில "தனிநபர்" போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. அதனால் அவை எலலாவற்றையும் "காந்திய முறை போராட்டங்கள்" என்று கூறி விடலாமா?  காந்திய வழி என்றால் "தொடர்ந்து மக்கள் மத்தியில் அறவழியில்" ஒரு கோரிக்கையை கொண்டு  செல்வதும், அதன்மூலம் பொதுமக்களின் ஆதரவை பெருவாரியாக பெறுவதும் என்பதுதானே? மறைந்த அப்துல் கலாம் அவர்கள் தொடர்ந்து "மாணவர்களிடையே" தனது கொள்கைகளை கூறி,ஒரு "தொலைநோக்கிய" பார்வையில் அத்தகைய கொள்கைகளில் வெற்றி பெற முயன்றதால்தானே மதிக்கப் பட்டார்? நாம் என்று கோரிக்கையை வைத்துக் கொண்டு தெருவில்,இறங்கினோமோ அதை "மூன்றே ஆண்டுகளில்" வெற்றி பெற துடித்து, அதற்காக விரக்தி மனம் கொண்டு "விபரீதங்களில்" ஈடுபடலாமா? 

                       செல்போன் டவரில் ஏறி நின்றுகொண்டு, மதுக் கடையை மூடசொல்வது என்பது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை,மிரட்டி, பணியவைப்பது" என்றுதானே பொருள்? அது எப்படி "காந்திய நடைமுறை" ஆகும்? ஆனாலும் சசிபெருமாள் தனது "நலனுக்காக" போராடவில்லை என்பதால், நாம் வேதனைப்படுகிறோம். சமூகத்தில் பொதுவாகவே "போராட்ட உணர்வு " குறைந்துவரும் காலத்தில், சசிபெருமாள் போன்றவர்களின் மரணம்,போராட்டமாகவே எடுத்துக் கொள்ளப்படுகிறது. பல பத்து ஆண்டுகளாக பேசப்படும்" மதுவிலக்கு" என்ற முழக்கம்,மூன்று ஆண்டுகளாக சசிபெருமாள் அவர்களால் மட்டுமே முன்னெடுக்கப்பட்டது என்று நாம் கூறவில்லை. ஆனால், ஊடகங்களின் தொடர்ந்த உதவியால், அவரது போராட்டம் "வெளியே" தெரிகிறது.இது "ஊடகங்களின் காலம்".

                     குமரி மாவட்டத்தில், உன்னாமலைக் கடை என்ற இடத்தில, பள்ளிக்கூடங்கள், தேவாலயம், ஆகியவற்றின் அருகே "டாச்க்மாக்" கடை அகற்றப்படவேண்டும் என்று, 1000 நாட்களாக மக்கள் போராடுகிறார்கள். அங்கே குறிப்பாக கன்யாகுமரி மாவட்டத்தில் உள்ள மக்கள் "தீவிரமான" போராட்டங்களை நடத்த உணர்வு கொண்டவர்கள். அவர்களிடம் "மக்கள் திரள் போராட்டங்களை" நடத்த தொடர்ந்து முயலவேண்டியது அவசியம். அங்கேபோய், இவ்வாறு, "தனிநபர்" போராட்டமோ, "வீரசாகச மிரட்டல்" போராட்டமோ, அவசியமில்லை. அது சரியான வழியும் அல்ல, என்ற கருத்தும் இருக்கிறது.  ஆனால் நமது வட்டாரங்களில், "இலங்கை போரை நிறுத்த முத்துகுமாரின் உயிர் தியாகம்" என்ற "போராட்ட வடிவமோ", " ராஜீவ் கொலை வழக்கில் சிக்கியுள்ள "மூன்று தமிழர்களின் உயிர் காக்க, மக்கள் மன்றத்தின் செங்கொடியின் நெருப்பிட்டு எரிந்த மரணமோ" நம்மால் ஏற்கககூடியவை அல்ல. நாம் அவர்களது "கோரிக்கை நியாயத்தை" ஏற்றுக் கொண்டாலும், அவர்களது "போராட்ட வடிவத்தை" ஏற்றக் கொள்ள முடியாது.

                     இந்த நாட்டில் எந்த ஒரு "அறவழியோ","அமைதிவழியோ",அரசையும், நிர்வாகத்தையும்,  அசைத்துவிடும் என்று நாம் "மூட நம்பிக்கை" கொண்டிருக்க வில்லை. மக்களை திரட்டி போராடுவது என்பது ஒரு "கடினமாக,விடாப்பிடியாக" செய்யவேண்டிய ஒன்று. அதற்கு நமக்கு "பொறுமை" வேண்டும். ஆனால் பொறுமையாக, ஆழமாகக் கடுமையாக மக்கள் மத்தியில் உழைத்து, மக்களை திரட்டுவது என்பது ஒரு வழிமுறை. உணர்ச்சிவசப்பட்டு, அவசரமாக, வீரசாகசத்தோடு, "போராட்ட முறைகளை" திட்டமிடுவது எப்படி சரி?  நாம் சசிபெருமாளுடைய மரணத்திலிருந்து, நிறைய "கற்றுக்கொள்ள"வேண்டும். அவரது உறுதி, தொடர் முயற்சிகள், விடாப்பிடியாக, மதுவிலக்கு கொள்கையை வெற்றிபெற வைக்க முயல்வது ஆகியவற்றை நாம் போற்றவேண்டும். அதேநேரம், "ஊடகங்கள்" கொடுக்கும் உற்சாகத்தை மட்டுமே நம்பி, மக்களை திரட்டும் "கடின முயற்சியை" எடுக்காமல், முன்செல்ல முயல்வது தவிர்க்கப்பட 
வேண்டும்.

                உதாரணமாக, சென்னை மயிலாப்பூர் பகுதி, நிறைய "குடிகாரர்களை" கொண்ட பகுதிதான். அங்கு வாழும் அடிப்படை மக்கள் மத்தியில், "நொச்சிக்  குப்பம்"  பகுதியில், சாந்தோம் சாலையான "காமராஜர் சாலையில்" இருந்த  மதுக் கடை, அந்த வழி செல்லும், "உயர்நீதிமன்ற நீதியரசர்களால்" ஒரு நாள் கோபத்தோடு தடுக்கப்பட்டது. உடனே அந்த கடை, "அம்பேத்கர் பாலம்" என்ற அடிப்படை மக்கள் வாழும் அருகாமை பகுதிக்கு, மாற்றப்பட்டது. அங்கும்,வசிக்கும் மக்களால்,"கடையை அடை" என்ற போராட்டம் நடந்தது. அங்கிருந்தும் அந்த கடை அகற்றப்பட்டு, அருகே உள்ள,"தண்ணீர்தொட்டி மார்கெட்" என்ற இடத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கும் சில காலம் கழித்து, மக்கள் கடையை அகற்ற கோரி, போராடினார்கள். அதற்குப்பிறகு அங்கிருந்தும் அந்த கடை  அகற்றப்பட்டது. ஆகவே, சென்னை மயிலாப்பூரில் மக்கள் போராட்டம் மூலம் மதுக் கடை மூடப்பட முடியும் என்றால், ஏன் கன்யாகுமரி மாவட்டத்தில் "விடாபிடியான மக்கள் போராட்டத்தினால்" மதுக் கடை மூடப்பட முடியாது? அதற்கு பொறுமையுடன் கூடிய மக்கள் திரள் போராட்ட அணுகுமுறை தேவை..

Thursday, July 30, 2015

டைகர் ஆதரவாளர்கள், யாகுப் மேமனை தூக்கிலிட்டார்கள்?.

டைகர் மேமனின் ஆதரவாளர்கள், யாகுப் மேமனை தூக்கிலிட்டார்கள்?.
-------------------------------------------------------------------------------------------------------------
     யார் அந்த டைகர் மேமனின் ஆதரவாளர்கள்?
     யாகுப் மேமனை தூக்கிளிட்டவர்கள்?
     ஜூலை 30.யாகுப் மேமனின் பிறந்த நாள்.
     அன்று காலை அவரை கொலை செய்தால்,
      மன்னிக்கணும்.சட்டப்படி, தூக்கிலிட்டால்,
     அவரது குடும்பமே ஆடிப்போகும். அதுதான்
     டைகர் மேமன் எனும் யாகுபின் அண்ணனை
     அதிரவைக்க நல்ல திட்டமா? இது என்ன அரசியலாக
      இருக்கிறதே? சரி.யாகுப் மேனனை தூக்கிலிட்டது யார்?


      பிரதமரும், உள்துறையும், நீதிபதிக்களும்தானே
      யாகுப் மேமனை தூக்கிலிட்டனர்?,
       பிரதமர் மோடி எப்படி குண்டு வைத்த டைகரின்
       ஆதரவாளராக ஆக முடியும்? அடுத்து உள்துறை
        அமைச்சர் ராஜ்நாத்சிங் எப்படி 1993 இன் குண்டுவெடிப்பில்
        குற்றம் சாட்டப்பட்ட டைகரின் ஆதரவாளராகுவார்?
        யாகுபை தூக்கிலிட செய்த நீதிபதிகள் எப்படி குற்றவாளி
        டைகருக்கு ஆதரவாளர்களாக இருக்க முடியும்?
         டைகரிடம் இதில் யாருமே "காசு" வாங்க வில்லை.
         சார்பாக இல்லை.பிறகு எப்படி ஆதரவாளர்கள்?

          டைகரின் "சொற்களை" உண்மையாக்கியவர்கள்,
          டைகரின் "ஆதரவாளர்கள்" தானே?
          இந்தியாவிடம் சரணடைய வந்த யாகுபிடம்,
          " நீ காந்தி போல செல்கிறாய். உன்னை கோட்சேயை போல
          இந்தியா "தூக்கிலிட்டுவிடும்" என்றாராம்.
           டைகரின் "வார்த்தைகளை" உண்மையாக்கியவர்கள் யார்?
          அவர்கள் டைகரின் ஆதரவாளர்கள்தானே?
       

Wednesday, July 29, 2015

கலாம் உங்கள் சொல்லின் பொருளை புரிந்துகொண்டார்களா?

கலாம் உங்கள் சொல்லின் பொருளை புரிந்துகொண்டார்களா?
-------------------------------------------------------------------------------------- மணி.
         " மரண தண்டனை"யை சுட்டெரிக்கும் உனது
           "கதிர்வீச்சு" சொற்கள், உனது உடலைப்
           " புதைப்பதற்கு" நான்கு மணிநேரம் முன்பே,
           " நாகபுரியில்" அரசால் திட்டமிட்டு,மரணிக்கப்பட்டது.
           ' நாகபுரியின்" உருவாக்கம் அதிகாரத்தில் அமர்ந்தால்,
           ஓரங்கட்டப்பட்டவர்கள்தான்  மீண்டும், மீண்டும்,
           தூக்கில் ஏறுவார்கள் என்ற உனது " சுடு சொற்கள்"
           மக்களை வந்து "தொடுவதற்கு" முன்பே,
           "பொய்களை" சுட்டெரிததுவிடுமோ என
            அவர்கள் எண்ணினார்களோ? அதனால்தான்
            இந்த அவசரமோ? டைகர் கிடைக்காவிட்டால் என்ன?
            " தம்பி" கிடைத்தானே, என்ற உள்ளூர் காவல்துறையின்
             "தறுதலை" உணர்வின் "தவறுதலையா",காண்கிறோம்?
              உச்சகட்ட நீதி தரும் நிலையம் என்றார்களே?
              பி.ராமன் எழுதிய தரவுகள் எல்லாம்கூட, அவர்களை
              அசைக்க வில்லையே? ஏன்? ஏன் இந்த அவசரம்?

              ஓகோ, இவர்கள் "பயங்கரவாதத்தை" இல்லாமல்
               ஆக்க  இறங்கவில்லை. அப்படி இறங்கினால்
                இவர்களும் சேர்ந்து மூழ்கவேண்டுமே?
                "பயங்கரவாதத்துடன்" பேரம் பேசவே முயல்கின்றனர்.
                 ஆப்கானிஸ்தானுக்கு கடத்தப்பட்ட  விமானம் கதை
                 நினைவுக்கு வரவில்லையா?
                ஒருபுறம் "தேர்தல் வெற்றியுடன்" எல்லைக்கு அப்பாலுள்ள
                " தேர்தல் வெற்றி" பேசிப் பார்த்தும், "முடிவு" வரவில்லை.
                "எங்களை விட்டுவிட்டு" நவாசுடனா?" என்று "ஆக்கிரமிப்பு"
                 கொரில்லாக்கள் "தலைப்பாகை" நிலத்திலேயே நுழைந்தார்கள்.
                 "இனி மிரட்டித்தான்" பேரம் என்று இவர்கள் முடிவுக்கு வந்தார்களோ?
                  நம்மூர் சிறையில் " அறிவிக்கப்பட்ட பயங்கரவாதிகள்"
                  அதிகாரிகளால் நேரடியான தாக்குதலுக்கு இலக்காகமாட்டார்கள்.
                  " ஒரு லுனாடிக்" சிறைவாசி அப்போது கிடைப்பான்.
                   சம்பந்தப்பட்டவர்களின் "கண்களுக்கு"  முன்னாலேயே,
                  அவரை "அடித்து,உதைப்பார்கள்". அதுவே "தொடமுடியாதவர்களுக்கு"
                  அனுப்பப்படும் "மிரட்டல்". இங்கே அந்த மிரட்டல்
                  "டைகருக்கும், தாவூதுக்கும்" போய் சேர, யாகூப்தான் "லுனாடிக்கா?"
                  உண்மைதான். சிறை மருத்துவரின் "சான்றிதழும்" அதுதான்.
                  "பலியாடுகளை" பலி போட, எந்த ஒரு சட்ட விதியும் தடுக்காதே?
                  அதுதானே இங்கேயும்................... ஆனால்

                  இந்த நிகழ்வுகள், சட்டத்தின் மீதும், ஆட்சிகள் மீதும்,
                  "நேர்மை" கோருவோரின் நம்பிக்கையை வலுப்படுதாதே?
                  "பயங்கரவாதத்தை" வலுப்படுத்த, இப்படி ஒரு முயற்சியை
                  கட்டவிழ்த்து விடுபவர்கள், மக்கள் பிரச்னைகளை
                  தீர்க்க முடியாததால், "தப்பிக்க" வழி, பயங்கரவாதத்தை
                  "நீரூற்றி வளர்ப்பதுதானோ?"  அதனால்தான் கலாம் அவர்களே,
                  உங்களை மண்ணில் புதைக்கும் முன்பே  உங்கள் சொற்களை
                  அவர்கள் "புதைத்து" விட்டார்கள்"           

Tuesday, July 28, 2015

தோழர் சாருமசும்தார் மறைந்த நாள்.;

நக்சல்பாரி இயக்கத்தின்தந்தை,தலைவர்,வழிகாட்டி,கருத்தியல்பெட்டகம்,
----------------------------------------------------------------------------------------------------------------------தோழர் சாருமசும்தார் மறைந்த நாள்.;
------------------------------------------------------------

        இன்று ஜூலை 28 ஆம் நாள்தான் மேற்குவங்கத்தின், தலைநகர் கொல்கத்தாவில், சி.பி.எம்.கட்சியின் ஆட்சியில், 1972 ஆம் ஆண்டு, சிறையில்  இருந்த தோழர் சாருமசும்தார்  ஆளும் வர்க்கத்தின் சதிவலையில் சிக்கி, அவருடைய "உயிர் காக்கும் மருந்துகளை" ஆள்வோர் வழங்காமல் இருந்ததால், ஜூலை 12 ஆம் நாளிலிருந்து, சிறைக்குள்ளேயே அடைக்கப்பட்ட நிலையில்,தனது மரணத்தை தழுவினார். இந்தியப் புரட்சியின் "பிதாமகன்" தோழர் சாருமசும்தார் ,1967 ஆம் ஆண்டு, மேற்கு வங்கத்தில், " ஐக்கிய முன்னணி " ஆட்சியை பங்களா காங்கிரசுடன் சேர்ந்து, மார்க்சிஸ்ட் கட்சி" ஏற்படுத்திய நேரத்தில்,,டார்ஜிலிங் மாவட்டத்தில், சிலிகுரி வட்டத்தில், நக்சல்பாரி கிராமத்தில், விவசாயிகளை திரட்டி, ஆயுதம் தாங்கிய புரட்சியை அங்குள்ள நிலச்சுவான்தார்கள் மீது நடத்திய காலத்தில், "கிழத்திய எல்கை  துப்பாக்கி படை" என்ற துணை ராணுவத்தை இறக்கிவிட்டு, விவசாயிகளின் போர்குணத்தை எதிர்த்து, "சுற்றி வளைத்து" தாக்குதல் என்ற தந்திரத்தின் மூலம் நக்சல்பாரி கிராமத்தை சுற்றி வளைத்து,சுட்டனர். அதில் தோழர் பாபுலால் பிச்வகர்மா என்ற தோழர் தியாகியானார்.

      இந்த படுகொலையை செய்த சி.பி.எம்.ஆட்சி  தொடர்ந்து தலைமறைவு இயக்கத்தை கட்டி "இந்தியப் புரட்சியை" நடத்த தயாரான தோழர் சாருமசும்தாரை தேடியது. அந்த நக்சல்பாரி எழுச்சியை அன்று, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி,தோழர் மா-சே- துங் தலைமையில், "இந்தியாவில் வசந்தத்தின் இடி முழக்கம்" என வர்ணித்து பாராட்டியது. அத்தகைய கட்டுரை, சீனக் கம்யுனிஸ்ட் கட்சியின் ஏடான, "பீப்பில்ஸ் டெமாக்ரசி" இதழில் வெளிவந்தது. மாவோ வின் "விவசாயப் புரட்சி" தத்துவத்தை இந்தியச் சூழலுக்கு பொறுததியதுதான் தோழர் சாருமசும்தாரின், பங்களிப்பு.இந்திய சமூக, அரசியல் சூழலை, "அரைக் காலனி, அரை நிலப்ப்ரபுதுவம்" என்று விவரித்ததுதான் தோழர் சாருமசும்தாரின் சிந்தனை தந்த படப்பிடிப்பு. "தரகு, அதிகாரவர்க்க ஏகபோக முதலாளித்துவமும், பெரு நிலப்பிரபுத்துவமும்" இந்திய ஆளும்வர்க்கங்கள் என்ற தெளிவான வரையருப்புதான் தோழர் சாருமசும்தாரின் கண்டுபிடிப்பு. அத்தகைய ஆளும்வர்க்கதை எதிர்த்து, "மக்கள் ஜனநாயக புரட்சியை" முன்னெடுப்பதுதான் இந்த நாட்டின் விடுதலைக்கான வழி என்பதுதான் தோழர் சாருமசும்தார் முன்வைத்தார். அதற்கான "விவசாயப் புரட்சியை" தோழர் முன்னெடுத்தார்.

              1968 ஆம் ஆண்டு, நாடெங்கும் உள்ள புரட்சியாளர்களைக் கூட்டி, " அகில இந்திய கம்யுனிஸ்ட் புரட்சியாளர்களின் ஒருங்கிணைப்பு குழு" என்ற { All india coordination committee of the communist Revolutionries } என அமைத்தார். அதற்கு வந்த்ஜிருந்த "ஆந்திராவின் தரிமள நாகிரெட்டி"   தேர்தலும், புரட்சியும்  என்ற பாதையை முன்வைத்து விட்டு பிரிந்தார்."கேரளாவின் அஜிதாவின் தந்தை,குன்னிகல் நாராயணனும், தாய் மந்தாகினியும்" ஏகாதிபத்தியமே பிரதான முரண்பாடு என்றும், ஆயுதம் தாங்கிய தாக்குதல்களை நேரடியாக அரசு மீது நடத்தவேண்டும் எனவும், ஒரு தந்திரத்தை முன்வைத்து பிரிந்தனர். அப்போதுதான் "அடுத்த அறுவடை நமக்கே" என்ற தோழர் சாருவின் முழக்கத்தை ஏந்திய இந்திய விவசாயிகள், அதற்கு தடையாக இருந்த பண்ணைப் பிரபுக்களை ஆயுதம் தாங்கி  அழித்து, அறுவடையை கைப்பற்றினர்.

                        அத்தகைய நடைமுறையிலிருந்து கற்று, 1969 இல் ஏப்ரல் 22 ஆம் நாள் லெனினது பிறந்த நாளில்,"இந்தியக் கம்யுனிஸ்ட் கட்சி[ மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்] என்ற புரட்சிகர தலைமறைவு கட்சியை தோழர் சாருமசும்தார் தொடங்கினார். அதன் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அந்த கட்சியின் செயல் தந்திரமாக " வர்க்க எதிரிகளை அழித்தொழிக்கும்" கொரில்லா போர்முறையை, மேற்குறிப்பிட்ட விவசாயிகளின் போராட்ட நடைமுறையிலிருந்து கற்று, கட்சிக்கு வழிவகுத்தார். தொடர் எதிர்களின் "சுற்றிவளைத்த " தாக்குதல்களால், படுகொலை செய்யப்பட தோழர்களது பட்டியலில், 1972 இல் தோழர் சாருமசும்தாரும் சேர்க்கப்பட்டார். அதனால் இந்த நாள் "தியாகிகள் தினமாக" கடைப்பிடிக்கப்படுகிறது. 

Wednesday, July 22, 2015

ஜூலை-23.1999.படிப்பினைகள்...[ தொடர்ச்சி..]

ஜூலை-23.1999.படிப்பினைகள்...[ தொடர்ச்சி..]
--------------------------------------------------------------------
                     பேரணியையும், கூட்ட நெரிசலையும் கண்ட தமிழ் மாநிலக் காங்கிரசின் வில்லிவாக்கம் ச.ம.உ. ஜே.எம்.ஹாரூன் ஏற்கனவே ஜீப்பிலிருந்து இறங்கியிருந்ததால், ஜீப்பிற்கு முன்னே சென்று காவல்துறை அதிகாரிகளிடம் பேசி, மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ,பேரணித் தலைவர்களை அழைத்துச் செல்வதற்கான முயற்சியில் இருந்தார். ஊர்வலத்தின் பின்புறம் எதோ தகராறு நடக்கிறது. முன்புறம் காளர்கள் மரிப்பது போல பேரணியை முன் செல்ல விடாமல் இருக்கின்றனர்.திடீரென வலதுபுறம், ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு உள்ளே இருந்து, "கற்கள்" ஜீப்பை நோக்கியும், தலைவர்களை குறி வைத்தும், தொடர்ந்து எறியப்படுகிறது. தொண்டர்கள் கிருஷ்ணசாமியை காப்பாற்றவும், மற்றும் தலைவர்களை காப்பாற்றவும், ஜீப்பில் ஏறி, தங்கள் உடல்களால் மூடி மறைத்துக் கொள்கிறார்கள்.திடீரென ஆட்சித் தலைவர் அலுவலகத்தின் உள்ளிருந்து, ஒரு காவலரின் "துப்பாக்கி" குண்டு ஜீப்பை நோக்கி பறந்து வந்து முட்டி கீழே விழுகிறது. இந்த நேரத்தில்,"ஆல்பா,பாட்டா" என்று ஒரு "கட்டளை" அதிரடி காவல்துறைக்கு வாய் மூலம் குரலாக கொடுக்கப்படுகிறது. இதை கீழே நின்ற ஹாரூன் பாய் மட்டுமே கேட்டு பிறகு பதிவு செய்கிறார்.அந்த கட்டளை சொற்களுக்கு கட்டுண்ட காவல் அதிரடிப் படை பேரணி மீது கண்டபடி தாக்கத் தொடங்குகின்றனர்.

     சிதறி மக்கள் எல்லாம் ஓட, தாமிரபரணி ஆற்றை நோக்கி ஓடுகின்றனர். அப்போது ஒரு "கல்" ஜீப்பின் ஓட்டுனர் மீது வந்து விழுகிறது.அடி தாங்க மாட்டாமல் பயந்துபோன ஓட்டுனர்,ஜீப்பை கண்டபடி ஒட்டி,தலைவர்களும் அவர்களை காப்பாடர வந்த தொண்டர்களுடனும், கொக்கிரகுளம் ஊருக்குள் நேரே சென்று, இடதுபுறம் திருப்பி, ஆட்சித் தலைவர் அலுவலகம் பின்னால் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சென்று நிறுத்துகிறார்...பிறகு நடப்பதும்..மய்ர்கூசெரியும் செய்திகள்தான்...[ நான் இப்போது பணிக்கு செல்கிறேன்...வந்து எழுதுகிறேன்...மன்னிக்கவும்]