Thursday, October 16, 2014

பீ யு சி எல் சென்னையில் மாநகர மாவட்டமாக உதித்துள்ளது.



----------------------------------------------------------------------------------------------
    2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்றாம் நாள் நீண்ட இடைவெளிக்கு பிறகு, நீண்ட போராட்டங்களுக்கு பிறகு, பீ.யு.சி.எல் தனது மாவட்ட குழுவை கட்டியது. அதுவும் காஞ்சி-திருவள்ளூர் மாவட்டங்களுடன் சேர்ந்துதான் உருவாக்கியது. காஞ்சிபுரம் மாவட்ட தோழர்களது உழைப்பு அந்த மாவட்ட குழுவின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது. சென்னை- காஞ்சி-திருவள்ளூர் மாவட்ட குழு என்றே அது அழைக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளாக அதன் செயல்பாடு தமிழ்நாட்டில் ஒரு புதிய, முன்மாதிரியை ஏற்படுத்தியது. ஒவ்வொரு மாதமும் இரண்டு முக்கிய விசயங்கள் மீது, இரண்டு சனிக்கிழமைகளில் விவாதம் என்பதாக, நாற்பதுக்கு மேற்பட்ட  கலந்துரையாடல் விவாதங்கள்  நடந்தன. இருபதுக்கு மேற்பட்ட நிகழ்வுகள் கட்டமைக்கப்பட்டன. ஆர்ப்பாட்டங்கள், அறைக்கூட்டங்கள், உண்மையறியும் குழுக்கள், ஊடக நிகழ்வுகள், துண்டறிக்கைகள், சுவரொட்டிகள், என பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டன. மாநில மாநாடு தூத்துக்குடியில் நடந்த பிறகு காஞ்சிபுரம் மாவட்டம் தனித்து செயல்பட முயற்சிகள் ஈடேறின. பல்வேறு மக்கள் இயக்கங்களின் நீரோட்டங்களை உள்ளடக்கிய காஞ்சி மாவட்டம், திருவள்ளூர் உடன் சேர்ந்து, காஞ்சி-திருவள்ளூர் மாவட்ட குழுவாக உருவானது.

              இப்போது சென்னை மாநகர் மாவட்டம் தனித்து ஒரு மாவட்ட மைப்பை உருவாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. அதற்கான உறுப்பினர் கூட்டம் அக்டோபர் 11 இல் கூடியது. அதில் 13 பேர் கொண்ட மாநகர் மாவட்ட குழு ஏற்படுத்தப்பட்டது.தலைவராக பேராசிரியர்.சங்கரலிங்கம், செயலாளராக டி.எஸ்.எஸ்.மணி, பொருளாளராக பேரா.பிரான்சிஸ், துணை தலைவர்களாக பேரா.சுதிர், வழக்கறிஞர் கிருஷ்ணசாமி, இணை செயலாளர்களாக முகேஷ், ஆவின்பாபு, ஆகியோரும், மாவட்ட குழு உறுப்பினர்களாக ஓவியா, எஸ்.நடராசன், கெத்சி,மேரி லில்லி பாய், பானு,பிருத்வி  ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இதில் பேராசிரியர்கள், ஊடகதார்கள், தவிர வழகக்றிஞர் கிருஷ்ணசாமி நகசல்பாரி இயக்கத்தில் "தூக்கு தண்டனை" பெற்றவர் என்பதும்,. ஒவ்வியா-பெண்ணுரிமை எழுத்தாளர் என்பதும், எஸ்.நடராசன்- பீ.&சி ஆலை தொழிற்சங்க தலைவர் என்பதும், பானு-திருநங்கைகளின் தலைவர் என்பதும், கெத்சி-அமைப்பு சாரா தொழிலாளர் சங்க தலைவர் என்பதும், மேரி லில்லி பாய் -பீ.எஸ்.என்.எல்.தொழிற்சங்க தலைவர் என்பதும்,ஆவின்பாபு-மீனவர்சங்க தலைவர் என்பதும், பிருத்வி-சட்டக் கல்லூரி மாணவர் தலைவர் எனபதும் சிறப்பு அம்சங்கள்.

           மேற்கண்ட சிறுப்பு அம்சங்களைக் கொண்ட சென்னை மாநகர் மாவட்ட குழு சிறப்பாக இயங்க வாழ்த்துக்கள்.