Thursday, July 18, 2013

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் இன்று வெற்றியடையாமல் நிற்கும் நிலைக்கு "காரணம்" தேட வேண்டும் என்பது சரிதான்.

ராகவராஜ்  தங்கராஜ் அவர்கள் எழுதியிருக்கும் கூடங்குளம்  அணு உலை எதிர்ப்பு போராட்டம்  இன்று  வெற்றியடையாமல் நிற்கும் நிலைக்கு "காரணம்" தேட வேண்டும் என்பது சரிதான். 25 ஆண்டுகளாக நடந்த போராட்டம் அது. 1987,88,89,90 ஆண்டுகளில் தமிழ்நாடெங்கும் எல்லா மாவட்டங்களிலும்  தனித்தனியே ஆரம்பிக்கப்பட்ட அணு உலை எதிர்ப்பு அமைப்புகள், "கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பு" என்ற பெயரில் இயங்கியது. பாண்டிச்சேரி,கேரளா மாநிலங்களையும் அனிச கூட்டமைப்பு உள்ளடக்கியது.வீரமணி தலைமையில் திராவிட கழகம்  தூத்துக்குடி மாவட்ட பா .ஜ ,க., தி.மு.க, மற்றும் எம்.எல்.இயக்கங்கங்கள் அவை தவிர "கட்சி சார்பற்ற மக்கள் இயக்கங்கள்" எல்லாமே இணைந்து அந்த கூட்டமைப்பு உருவானது. ஐகப்  அமைப்பின் பங்களிப்பும் சிறப்பாக இருந்தது அந்த பரப்புரை மக்களிடையே "விழிப்புணர்வை" ஏற்படுத்தியது என்பதை யாரும் மறக்க முடியாது.மறுக்கவும் முடியாது.. குமாரதாஸ் தலைமையில் 101 பொது கூட்டங்கள் நாகர்கோவில் வட்டாரத்தில் விவாசாயிகள் மத்தியில் நடந்தது. அப்போதுதான் அதில் "அசுரன்" மாணவர் கால இளைஞாக அறிமுகம் ஆனார். கன்யாகுமரியில்  ஒரு லட்சம் மீனவர்கள் ஊர்வலத்தில், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பில் காவல்துறை அத்துமீறல். ஜூனியர் விகடன் மாணவ ஊடகவியலாளர் அருள் செழியனுக்கு காவலர் தடியடியில் காயம். நெல்லையிலும், தூத்துகுடியிலும் மாபெரும் ஊர்வலம்.. பல பத்தாயிரம் மக்கள் கலந்துகொண்டனர். டேவிட் தலைமையிலான "சமத்துவ சமுதாய இயக்கம்" பனைத் தொழிலாளர்களை அந்த ஊர்வாங்களுக்கு திரட்டி வந்தது. அய்யா வழி பால பிரஜாதிபதி அடிகளார் தலைமையில் லட்சம் மக்கள்  அணு உலை எதிர்ப்பில் கலந்து கொண்டனர். வைகோ நாடாளுமன்றத்தில் பேசியதை தினகரன் ஏடு முதல் பக்க செய்தியாக வெளியிட்டது. அந்த வராலற்று அனுபவங்கள் "படிப்பினைகளாக" ஏற்கப்பட்டதா? அடுத்த கட்ட போராட்டத்திற்கு அத்தகைய ஆய்வு அவசியம்தான். 

கூடங்குளம் அணுமின்னுற்பத்தி தொடங்கிவிட்டதாமே !



கூடங்குளம் அணுமின்னுற்பத்தி தொடங்கிவிட்டதாமே ! என்னதான் நேர்ந்தது கூடங்குளம் பகுதி மக்களின் அணுவுலை எதிர்ப்புப் போராட்டத்திற்கு ? இப்போது கூடங்குளம் அணுவுலை எதிர்ப்புப் போராட்டம் சுமார் 2 ஆண்டு காலம் நடந்தது. அது தோல்வியடைந்து விட்டதா....எப்படி ? இந்திய அரசின் ஜனநாயக விரோத,மக்கள் விரோத தன்மை மட்டும் தான் உண்மையில் காரணமா ? துல்லியமாகப் பார்த்தால் கூடங்குளம் அணுவுலை எதிர்ப்புப் போராட்டம் சுமார் 25 ஆண்டு காலமாக நடந்துவருகிறது ! அதுவும் தமிழகம் முழுக்கவும் நடந்தது.எனக்குத் தெரிந்து காஞ்சிபுரத்தில் கூட ”இந்திய மக்கள் முன்னணி” யும் வேறு சில அமைப்புகளும் இணைந்து கூடங்குளம் அணுவுலைக்கு எதிராக சைக்கிள் பரப்புரைப் பயணம் நடத்தினர். இத்தகைய போராட்டம் தோல்வியடைந்து விட்டது போராடிய மக்களுக்கும் அமைப்புகளுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் ஒருவகையில் தோல்வி தான். இவ்வாறு தோல்வி என்று கூறலாமா ? வேறு வழியில்லை,அதுதான் யதார்த்தம் ! ஆனால் போராடியவர்கள் அத்துடன் சோர்ந்து போய்விட வேண்டியதில்லை.இந்தத் தோல்விக்கான காரணங்களைத் தேட வேண்டும். இப்போதைய 2 ஆண்டுக்கால போராட்டம் ஒரு சிற்றூருக்குள்ளேயே சுருங்கி விட்டது ஒரு காரணமா ? 25 ஆண்டுகளுக்கு முன்னால் போராடியவர்கள் எங்கே போனார்கள் ? அவர்கள் யாருமே இப்போது கூடங்குளத்தில் களத்தில் இல்லையே....ஏன் ? 25 ஆண்டு காலப் போராட்டத்தை வெறும் 2 ஆண்டு கால போராட்டம் தான் என்று மக்கள் நினைப்பதற்கும் எதிரிகள் குறைகூறுவதற்கும் என்ன காரணம் ? இது 25 ஆண்டு கால போராட்டம் என்பது எந்த ஊடகத்திற்கும் எப்படி தெரியாமல் போனது ?....... மர்மம் தான் ! தொடக்கத்தில் போராடிய சக்திகளும் இணைந்திருந்து, தமிழகம் முழுக்கவும் இன்னும் வீச்சுடன் முன்னெடுக்கப்பட்டு நடத்தப்பட்டிருக்குமானால் வெற்றி பெற்றிருக்கலாமோ ?