Sunday, July 14, 2013

நாடாளுமன்ற தாக்குதல், 26/11 மும்பை தாக்குதல் இரண்டையும் செய்தது இந்திய அரசு?

நாடாளுமன்ற தாக்குதல், 26/11 மும்பை தாக்குதல் இரண்டையும் செய்தது இந்திய அரசு?
    இன்று காலை "டைம்ஸ் ஆப் இந்தியா " முதல் பக்க செய்தி. முன்னாள் உள்துறை அண்டர் செகரட்ரி ஆர்.வி.எஸ்.மணி இந்த தகவலை கூறினார். அவரிடம் சமீபகாலம் வரை சோ.பி.ஐ.யின் "சிறப்பு புலனாய்வு குழு"வில் இருந்த சதீஸ் வர்மா இத்தகைய செய்தியை கூறியதாக தெரிவித்துள்ளார். 13-12-2001 இல் நாடாளுமன்ற கட்டிடம் மீது நடத்தப்பட்ட தாக்குதலை நடத்தியது நடுவண் அரசுதான் என்று அதில் தெரிவித்துள்ளார். வாஜ்பாயி ஆட்சியில் அந்த தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்கியவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர் சில ராணுவத்தினரும் பலி கொடுக்கப்பட்டனர். உள்ளே "தாக்குதல்காரர்கள்" வரும்போதே, ராணுவ ஜீப்பில் எப்படி வந்தனர்? எப்படி அவர்களை உள்ளே பாதுகாவலர்கள் விட்டனர்? ஜீப்பில் "இந்திய எதிர்ப்பு வாசகங்கள்" எப்படி பகிரங்கமாக எழுதப்பட்டிருந்தன? சாட்சிகள் இல்லாமல் அனைவரும் ஏன்  கொல்லப்பட்டனர்? அவர்கள் "திட்டமிட்ட பயங்கரவாதிகள்" என்றால் எப்படி "கைபேசியை" விட்டு சென்றனர்? அதை வைத்து பிடித்தாக அறிவித்த பேராசிரியர் கிலானியை நீதிமன்றம் விடுதலை செய்ததே? அதே பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்ட "அப்சல் குருவை" மட்டும் ஏன்  விடவில்லை? அப்சல் குரூ "ஜம்மு-காஷ்மீர் விடதலை முன்னாணியை" விட்டு வெளியே வந்து, சி.ஆர்.பி.எப். முகாமின் பொறுப்பில்தானே இருந்தார்? அந்த ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணியும் இப்போது, ஆயுதப் போராட்டம் செய்யவில்லையே? அரசியல் போராட்டத்திற்கு "யாசின் மாலிக்" தலைமையில் வந்துவிட்டார்களே?  அப்சல்குரு தனது நேர்காணலில், "தன்னை சி.ஆர்.பி.எப்.முகாமின் தலைவர் டில்லி போகப் பணித்தார் என்று கூறியுள்ளாரே?  அவருக்கு சம்பந்தப் படாத  ஆட்களை பார்க்க கூறினார் என்றும் கூறினாரே? அவரை அந்நியாயமாக  "மரண தண்டனை" கொடுத்து கொன்று விட்டீர்களே?  அந்நியாயமாக தேசப்பற்றுடன் ராணுவத்தில் சேர்ந்த வீரர்களையும் உங்கள் அரசியல் விளையாட்டிற்காக கொன்று விட்டீர்களே? இப்பது அதிகாரிகளுக்குள் வந்துள்ள முரண்பாட்டில், உண்மையை கூறுகிறீர்களே? அதுவும், "போடா " என்ற கொடும் சட்டம் கொண்டுவர "பயங்கரவாத சூழலை" ஏற்படுத்த இப்படி செய்தார்கள் என்று அரசின் உண்மை தோற்றத்தை கூறுகிறீர்களே?  நான்கள் இதைத்தானே ஊடகம் மூலம் "பத்து ஆண்டுகளாக" கூறிவருகிறோம்? எங்களை " இறையாண்மைக்கு"எதிரா பேசுவதாக சிலர் முனு, முனுத்தீர்களே? இப்போது "பொடா" சட்டம் கொடுவருவதர்காக செய்த "சதி" என்பது அம்பலம் ஆகிறதே?

           அடுத்து, 26/11 மும்பை தாக்குதல். 2008இல் அது நடந்தது. ஐந்து ஆண்டுகளாக அந்த தாக்குதல்  "நாடவன் அரசும், அமெரிக்க உளவு துறையும்" சேர்ந்து திட்டமிட்டு செய்தது என்று கூறிவந்தோமே? ஊடகங்களில் இப்படி கூறலாமா? என்று சிலர் கூச்சலிட்டார்களே? முழுமை பார்வை விளங்காதவர்கள் எல்லாம் எங்களை விமர்சனம் செய்தார்களே?  "கசாப்" நேபாளத்தில் காத்மாண்டில் பிடிபட்டு, இந்திய உளவு துறை பொறுப்பில் பயிற்சி கொடுக்கப்பட்டப்வன் என்ற செய்தியை கூறிவந்தோ மே ? சி.ஐ.ஏ .கூட அந்த தாக்குதலை திட்டமிட்டதிளுண்டு என்பதை, ஹெட்லீ அமெரிக்க உளவு துறையால் அனுப்பப்பட்டவர் என்று தெரியும் போதே  கூறினோமே?  அமெரிக்காவுடன் "பாதுகாப்பு ஒப்பந்தம்" செய்துகொள்ள  இந்த "தாக்குதல்" திட்டமிடப்பட்டதாகா நாங்கள் கூறிணோமே? அப்போது செவி மடுக்காததுபோல இருந்தீர்களே? ஹெட்லியை பிடிக்கவோ,விசாரிக்கவோ, கைதி பரிமாற்றம் செய்யவோ, அமெர்க்காவுடன் உங்களால் முடியவில்லையே? உங்கள் வேண்டுகோள்படி, அமெரிக்க உங்களுக்கு உதவி செய்து, மும்பை தாக்குதலை நடத்தி இருக்கும்போது, எந்த முகத்தோடு நீங்கள் அமெரிக்காவிடம் கேட்க முடியும்? அமெரிக்க ஆலோசனையை ஏற்று, "யு.ஏ பி.ஏ " என்ற "சட்ட விரோத கூட்ட தடுப்பு சட்டம்" என்பதை கொண்டுவரத்தான் அந்த மும்பை தாக்குதல் நடத்தப்பட்டது என்று இப்போது, சதீஸ் வர்மா கூறியதை, ஆர்.வி.எஸ்.மணி போட்டு உஅடித்து விட்டாரே? மும்பையில் கொலை செய்யப்பட்டவர்கள் எல்லாம்  "உங்கள் திருவிளையாடலுக்கு" பலியானவர்கள்தானே? அதில் மீதம் இருந்த சாட்சி என்பதால்தானே அவசர,அவசரமாக  "கசாப்" கொலை செய்யபட்டான்? நாங்கள் இதுபற்றிய உண்மைகளை கூறும்போது, எதோ "தேச துரோகம்" என்பது போல பார்த்தீர்களே? இப்போது தெரிகிறதா? யார் தேசத் துரோகிகள் என்பது?

                  2005 ஜூன் மாதம் இஷ்ரத் அந்நியாயமாக "போலி துப்பாக்கி சண்டையில்" கொல்லப்பட்டதை அம்பலப்படுத்திய சி.பி.ஐ., உள்துறை கொடுத்த செய்தியான "லஷ்கர் தொடர்பில் இஷ்ராத்" இருந்தார் என்ற தவறான செய்தியை கொடுத்து என்று, "சி.பி.ஐ.யை கையில் வைத்துள்ள சோனியா அணியினர், அமெரிக்க ஆதரவுடன் உள்துறையை செல்வாக்கு செலுத்திய மன்மோகன் சிங்  குழு மீது, பாய்வதற்கு போட்ட "திட்டத்தால்", அந்த நேரத்தில் உள்துறையில்  அப்படிப்பட்ட ஆவணத்தில், கையெழுத்திட்ட ஆர்.வி.எஸ்.மணி  கோப்பப்பட்டு, இந்த உண்மையை போட்டு உடைத்து விட்டார். இப்போது  நடுவன் அரசின் "நகர்ப்புற வளர்ச்சி அமைச்சக" உதவி நில வளர்ச்சி அதிகாரியாக ஆர்.வி.எஸ்.மணி பணியாற்றி வருகிறார். குஜராத் வழி அதிகாரியாக வந்த சதீஸ் வர்மா,இப்போது, சுன்னாகத் காவல் பயிற்சி கல்லூரியின் முதல்வராக பணியாற்றி வருகிறார். ஆர்.வி.எஸ்.மணி தனது அமைச்சக "அண்டர் செக்ரட்டரிக்கு" எழுதிய கடிதத்தில், இஷ்ராத் சம்பந்தமாக இரண்டு ஆசி.பி. அதிகாரிகள்தான் எழுதினார்கள் என்று "எழுத்துபூர்வமாக" கொடுக்க சொன்னார் என்றும்,தான் மறுத்து விட்டதாகவும், குற்றம் சாட்டியுள்ளார்  இந்த அரசியல்வாதிகளின்,"சதிகள்" எத்தனை மக்களை கொல்கிறது பார்த்தீர்களா?  ஆர்களுக்குள் வரும் "மோதல்" எத்தனை உண்மைகளை போட்டு உடைக்கிறது பார்த்தீர்களா? 

குட்ரோச்சி மரணம் சோனியா தலை தப்பியது?


     அப்பாடா. அன்னை சோனியாவை இனி யாரும் "போபார்ஸ் பீரங்கி ஊழலை" காட்டி மிரட்ட முடியாது. ஒரே சாட்சியான இத்தாலி மாபியா ஆயுத வணிகர் "கொற்றோச்சியும்" காலி. இனி எந்தப் பய  "சாட்சி" சொல்ல வருவான்? 20014 தேர்தலில் இனி எதிர்கட்சிகள் போபார்ஸ் பற்றி பேச முடியாது. 2ஜி, விண்வெளி ஆராய்ச்சி, நிலக்கரி, காமன்வெல்த் ஆகிய ஊழல்களை சோனியாவின் சி.பி.ஐ. தானே பிடித்தது?. அவை எல்லாவற்றிலும் மன்மோகனுக்குதானே தொடர்பு? இப்படி "தோசையை" புரட்டி  போட சோனியா அணி  தயாராகிறது.

சூரியனும் வேண்டும், அது மேற்கே உதிக்க வேண்டும் ???


     சூரியனை தேர்தல் சின்னமாக கொண்ட தலைவர்தான் இப்படி கூறியுள்ளார் இன்று. இப்படியா கூறுவார்?  அந்த அளவுக்கா அவர் ? இப்படி நீங்கள் கேட்கலாம்  அவர் கூறியது இதுதான் "கூடங்குளம் அணு உலையும் வேண்டும். அது மக்களுக்கு ஆபத்து தராமல் பார்த்துக் கொள்ளவேண்டும்."  இதற்கு பொருள் அதுதானே? என்ன உடன்பிறப்பே?

வன்னியர் பெண்களும் தருமபுரி போராட்டத்தில்....

வன்னியர் பெண்களும் தருமபுரி போராட்டத்தில்....
    நேற்றைய  "நியு இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் " ஏடு  ஐந்தாவது பக்க செய்தி இது. நாம் மீண்டும், மீண்டும் கூறி வருகிறோம். இளவரசன்-திவ்யா "காதலும்", அதில் திவ்யா தந்தை, திவ்யாவின் கணவர் இளவரசன் ஆகியொரீன் "சாதலும்" "சாதி" பிரச்சனை மட்டுமல்ல. அடியாழத்தில், அது "இளைய தலைமுறையினருக்கு எதிரான போர்" என்பது புரியும். அதுவும் இளம் பெண்களுக்கு எதிரான குறிப்பான போர். அதிலும் "வன்னிய பெண்களுக்கு" எதிரான போர். "நாடக காதல்", "ஜீன்ஸ் காதல்", "கூலிங்க்ளாஸ் காதல்" ஆகியவை ஒரு குறிப்பிட்ட கட்சியை எதிர்த்து என்று கூறப்பட்டாலும், தலித் சமூகத்தை எதிர்த்து என்று புரியப்பட்டாலும், அது " வன்னியப் பெண்களை" இழிவு படுத்தும் "சொல் அம்புகள்" இல்லையா? அதை தொடுத்தவர்களை எதிர்த்து போரில், நிர்கவேண்டியவர்கள் வன்னியப் பெண்கள் இல்லையா?  அதுதான் தொடக்கி உள்ளது. அந்த செய்தியில் சில வன்னியப் பெண்களை நேர்காணல் செய்து எழுதி உள்ளார்கள்