Thursday, March 7, 2013

தமிழன் பிணத்தின் மீது "தந்திர அரசியலா?"


    யோவ், யோவ். என்னைய்யா பண்றீங்க?  ஒருத்தரு "போர் நின்றுவிட்டது என்று பொய் சொன்னதும் போர் குற்றமே " என்று எழுதுகிறார். சரி. போர் நின்றதுன்னு பொஇசொல்வதும் போர் குற்றம் தான். அதை யார் சொன்னது அய்யா? மகிந்தா சொன்னார். பிரணாப் முகர்ஜி நம்பினார் சிதம்பரம் நம்பி விட்டார் அமேரிக்கா கூட நம்பி விட்டது. நானும் நம்பி விட்டேன். இது அவரது விளக்கம். "பாவ மனிப்பு"கேட்கிறாரா? தம்பிங்க "பாவ மன்னிப்பு" கேட்க சொல்லி சுவரொட்டி ஒட்டினார்களே? அது அய்யா உங்கள் கூட்டணி கட்சியின் தலைவர்களுக்கு தானே? நீங்க  திடீர்னு பாவ மன்னிப்பு கேட்கறீங்க ளே? சரி. மனச்சாட்சி உறுத்துது என்கிறீர்களா? சரி போகட்டும். ஆனா, வன்னி போர் நடக்கும் போது, வாரத்திற்கு ஒருமுறை, எம்.கே.நாராயணன், சிவசங்கரமேனன், பிரணாப் முகர்ஜி, நிருபமா ராவ், என்று உங்கள் கூட்டணி ஆட்சியின் முக்கிய பிரமுகர்கள் எல்லாம், கொழும்புக்கு போய்  வந்தார்களே? அது எதற்கு அய்யா?
 ஒவ்வொரு முறை கொழும்பு செல்வடஹ்ர்கு முன்பு சென்னை வந்து இரங்கி உங்களை, அதாவது அன்றைய முதல் அமைச்சரை, சந்தித்து விட்டு போவார்களே? அது எதற்கு அய்யா? 

        அப்படி சந்தித்த காலங்களில் தானே, "போர் நிறுத்தப்பட்டதா? இல்லையா?" என்ற விவாதம் வந்துள்ளது. நீங்க சொல்வது போல, போர் நிறுத்தப்பட்டதாக ராஜபக்சே அரசாங்கம் பொய்  சொல்லிவிட்டது என்று, இப்போது "நாலு" ஆண்டுகள் கழித்து கூறுகிறீர்களே? அய்யா, இது உங்களுக்கே நல்லா இருக்கா? அது மட்டுமின்றி, அப்படி பொய்  சொன்னதும், "போர் குற்றமே" என்று இப்போது கூறுகிறீர்களே? எல்லோருக்கும் நீங்கள் உட்பட  தெரியும்படிதானே, நமது தலைமை அமைச்சர் "நாங்கள் ரேடாரும், செயற்கை கோள் உளவு செய்திகளும் தான் இலங்கைக்கு கொடுத்தோம்" என்று நடந்த போர்  பற்றி கூறிநார்? அதாவது "போரில் பங்காளி" என்று திருவாய் மலர்ந்தாரே? அப்படியானால்  "போர் நின்றுவிட்டது" என்று அவரும் அவரது சகாக்களும் நம்பியிருக்க முடியாது அல்லவா? அப்படியானால் அங்கெ கொழும்புக்கு அடிக்கடி சென்றுவந்த உங்கள்  கூட்டணி ஆட்சியின் அதிகாரிகளான எம்.கே.நரயான்னும், சிவசங்கர் மேனனும் உங்கள் கூட்டணி அட்சியின் அமைச்சரான பிரணாப் முகர்ஜியும், "நடந்துவந்த போர் பற்றி "முழுமையாக அறிந்து வைத்திருப்பார்கள் என்றுதானே பொருள்? அதனால்தானே போர்  முடிந்த பிறகு, ராஜபக்சே,"இந்தியாவின் போரை நாங்கள் நடத்தினோம்" என்று கூறினாரே? அப்படியானால் "போரை நிறுத்தியதாக யார் பொய் சொன்னார்கள்?" அய்யா?

         ஒரு உண்மையை சொல்லிவிட்டீர்கள். "போர் நின்றதாக் பொய் சொன்னதும் போர் குற்றமே"   நல்லதொரு "முரசொலியின்" இன்றைய தலைப்பு இது. அதனால் இப்போது, போர்  நின்றதாக பொய் சொன்னவர்கள் பட்டியலில், "பிரணாப் முகர்ஜியும், சிதம்பரமும், நீங்களும்" கூட வருகிறீர்கள் தலைவரே? அதனால் நீங்கள்  சொன்னதுபோல "நீங்கள்  எல்லோரும்  போர் குற்றம் செய்தவர்கள்தானே?" இது எப்படி இருக்கு? நேநேகளே வழிய வந்து, பாவ மன்னிப்பு கேட்பது? இப்போது உங்கள் உத்தரவின் பேரில், டி.ஆர்..பாலு, மக்களவையில், "நாங்கள் தமிழீழம் கோரினோம் ஆனால் இப்போது நாங்கள் "மனித உரிமை மீறல்கள் மீது நடவடிக்கை மட்டுமே கோருகிறோம்" என்று  அந்தர் பல்டி அடித்துள்ளாரே?  இது எப்படி "தமிழீழ ஆதரவாளர் அமைப்பு" என்ற உங்கள் புதிய டெசோ விற்கு "பொருந்தும்?" அதாவது உங்கள் புதிய டெசோ உங்களது பழைய டெசோ வை அழித்துவிட்டதோ? அதாவது இப்போது உருவானது "ரா" உருவாக்க சொன்ன டெசோ என்று ஒப்புக் கொள்ள போகிறீர்களா? 

               "ரா" திட்டத்தின் படி, "தென்னாப்பிரிக்க அரசாங்கம் ஜெர்மனியில் கூட்டம் போட்டு, அதில் லண்டனில் உள்ள "உலக தம்ழிர்  பேரவை"யை கலந்து கொள்ள வைத்து அவர்கள் மூலம்,"தமிழீழம் வேண்டாம்" என்று கூற வைத்தார்களே? அதேபாணியில் தானே "இன்று  மக்களவையில் டி ஆர்.பாலு பேசியதும்?" அப்புறம் என்ன அய்யா? இன்று அமெரிக்காவிடம்  "சுப்பிரமணிய சாமி"யை அனுப்பி, ஐ.நா.மனித உரிமை கழக தீர்மானத்தை  நீர்த்து போக செய்வதும் அதே "ரா"தான் என்பது உங்களுக்கு தெரியுமே?அய்யா? அப்புறம் எதற்கு "பல்டி" அடிக்கிறீங்க? உங்கள் இந்தியாதான் "பன்னாட்டு விசாரணையை" கோரும் தீர்மனாதை "தடுக்கிறது" என்ற அமெரிக்க குரல் நமக்கு கேட்குதே?அய்யா? நீங்க  எப்படி இதை எதிர்கொள்ள போகிறீர்கள்?அய்யா? நால்லா இருப்பீங்க அய்யா, தமிழன் பிணத்தின் மீது "தந்திர அரசியல்" நடத்தாதீங்க அய்யா.