Monday, January 28, 2013

கமலஹாசன் வென்றாரா? தோற்றாரா?

கமலஹாசன் வென்றாரா? தோற்றாரா?
   பலருக்கும்  உண்மை நிலை தெரிவதில்லை நடந்து கொண்டிருக்கும் சர்ச்ச்ஹை வெறுமனே முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கலாமா? கூடாதா? என்று மட்டுமே புரிந்து கொண்டிருக்கிறார்கள் இன்று நேற்றா கமல் முஸ்லிம்களை தாக்கி படம் எடுக்கிறார்? உன்னைப்போல் ஒருவனும் அதுதானே? சரி.கமல் மட்டுமா? விஜயகாந்த் பத்து ஆண்டுகளுக்கு முன்பே ஒவ்வொரு படத்திலும் பாகிஸ்தான் காரர்கள் என்று முஸ்லிம்களை வர்ணித்து, இவர் வீரமாக அப்போர் புரிந்து வெல்வாரே? அது என்ன ரகம்? இப்படி எல்லோருமே ஏன்  இப்படி எடுக்கிறார்கள்?அதிலும் இந்த படத்தில், "ரா" ஆளாக கமல் வருவது எதனால்? அவர் அமெரிக்க சி.ஐ.ஏ . விற்கு உதவுவது எதனால்? அதாவது முஸ்லிம் எதிர்ப்பு என்பதை தாண்டி, ஆபாகநிச்தான், பின்லேடன், ரா, அமெரிக்க வருவதிலிருந்து என்ன தெரிகிறது? இது திட்டமிட்ட அரசியல் படம். அதிலும் "ரா" மீதுதமிழர்கள் மத்தியில் "இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு உதவியவர்கள்"  என்ற அவப்பெயர் இருக்கும்போது, தான் எ"ரா" அதிகாரியாக வந்து அந்த உளவு நிறுவனத்தை நியாயப்படுத்த எடுத்த படம். அதற்கு  பொது புத்தியில் உலா வரும், தலிபான், பின்லேடன், ஆகியோரை பயன்படுத்தி, இந்திய நாட்டை காப்பாற்ற  வந்த தியாகி போலவும், தீவிரவாதிக்கு எதிர்ப்பு போலவும் "பாவலா" காட்டும் ஒரு திட்டம் இதில் இருக்கிறது. அதாவது அமெரிக்காதான்  பின்லேடனை வால்ர்த்து என்ற உணமையோ, ஆப்கானில் அமெரிக்கா  படை எடுத்து எண்ணை  வளங்களை கொள்ளை அடிக்க என்பதையோ, அழுத்தமாக கூறாத படம். "ரா'வின் முழு  ஆதரவு பெற்ற படம்.

                   சரி.கமலுக்கு நட்டமா? பிவி.பி. என்ற பரபுளி வெங்கடேஸ்வர பிரசாத் என்ற ஆந்திர ரெட்டியார் இந்த படத்திற்கு  60 கோடி குடுத்துள்ளார். தயாரிப்பாளராக இருந்தார். கமல் வழக்கம் போல படம் எடுபடும் எனத் தெரிந்த பிறகு, அவரை நிதி வழங்குபவராகவும், தானே தயாரிப்பலராகவும் புது வேடம் புனைந்தார். அப்போது தனது 60கோடியை திருப்பி தந்து விட்டு தான் தமிழக திரையரங்குகளில் திரையிடவேண்டும் என்று பி.வி.ஒய். எழுதி வாங்கி விட்டார். அதனால்தான் டி.டி..எச்.என்று கமல் இழுத்தடித்தும், இப்போது தமிழகத்திற்கு வெளியே திரையிடவதும் நடக்கிறது. இப்போது புரிகிறதா? கமலின் சூட்சுமம்? அதையும் தாண்டி படத்தை கமல் "காப்பீடு" என்ற இன்சுரன்ஸ் செய்துவிட்டார். ஆகவே "நட்டம்" வராது. இது எப்படி இருக்கு? அவருக்கு போய்  நட்டம்னு பேசறீங்களே அய்யா?   

பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது......

பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது......
      மதுரை அஞ்சாநெஞ்சன் என்று  திமுகவினரால் புகழப்படும், மு.க.அழகிரியின்  பிறந்த நாள் 39 ஆம் தேதி வருகிறது. அதற்குள் சென்னையிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இன்று காலை நியு இந்தியன் எக்ஸ்ப்ரெஸ்  எட்டில் முதல் பக்கத்திலேயே ஒரு சுவரொட்டியை போட்டு விளக்கம் தந்துள்ளனர். அதில்" இங்கே பரமசிவனும் இல்லை. நாங்கள் கருடரும் இல்லை. நடப்பது ராம நாடகம்." என்று அழகிரி படத்தை பெரிதாக போட்டு ஒட்டியுள்ளனர். அதற்கு என்ன அர்த்தம்?  "பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது. கருடா சவுக்கியமா? யாரும் இருக்கும் இடத்தில் இருந்துவிட்டால் எல்லாம் சவுக்கியமே. கருடன் சொன்னது. அதில் அர்த்தம் உள்ளது." இந்த கண்ணதாசன்  பாடல் வரிகள்தான் அதன் பொருள். அப்படியானால் பரமசிவன் கருணாநிதி என்றும், கருடன் அழகிரி என்றும், பாம்பு தளபதி என்றும், ராம நாடகம் என்பது ராமாயணத்திலே அண்ணனை காட்டுக்கு அனுப்பி விட்டு தம்பி பரதனுக்கு முடிச்சொட்ட நினைப்பது என்றும் நீங்கள் புரிந்து கொண்டால் நாம் என்ன செய்ய?

                            அடுத்த சுவரொட்டி. "கண்ணகி சிலம்பும், மனோகரனின் விலங்கும், வீழ்ந்ததா? வீழ்த்தியதா?" இந்த சுவரொட்டியும், நேரடியாலவே. கண்ணகி கால் சிலம்பால்,வீழ்த்தப்பட்டான் சேர மன்னன்   என்ற பொருளை நேரடியாக தருகிறது.இதில் அழகிரி படம் பெரிதாக போடப்பட்டுள்ளது. அடுத்து வழமை போல," தொடர்களின் தாமே. தொண்டர்களின் ஏற்றமே" என்ற சுவரொட்டி. அடுத்து, அழகிரி படத்தை பெரிதாக போட்டு," அதுக்கும் மேலே. அதுக்கும் மேலே. அதுக்கும் மேலே. அண்ணன் எங்க உசுருலே" என்பதாக ஒரு சுவரொட்டி. மேற்கண்ட அசுவரோட்டிகள் ஒரு செய்தியை அழகிரி பிறந்த நாள் நேரம் சொல்லத்தான் செய்கிறது.  
               
 அதற்க்கு பதில் சொலவதுபோல நேற்று திருவண்ணாமலை திருமணத்தில் கலைஞர் பேசும்போது, "கட்டுப்பாடு கழகத்திற்கு முக்கியம். அதை யார் மீறினாலும், அவர்கள் எவ்வளவு நெருக்கமாக் ஏனக்கு இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியுள்ளார். இது எதற்காக?