Friday, January 25, 2013

குடியரசு தலைவர் அவர்களே,

குடியரசு தலைவர் அவர்களே,
     தங்களது நாளைய உரை பல உண்மைகளையும் பல பொய்களையும் கொண்டுள்ளதாக இருக்கிறதே? நேநேகள் இந்த 64 ஆவது குடியரசு தின உரையில், கூறியுள்ளதுபோல, இந்தியா சுதந்திரம் பெற்றது, தனது குடிமக்களுக்கு சுதந்திரத்தை மறுப்பதற்காக அல்ல எனபது உணமைதான். அதை நீங்கள் நீண்ட காலம் நிதி அமைச்சராகவும், பல துறை அமைச்சரகாவும் இருந்தபோது உணர்ந்தீர்களா என்படஹ்ர்கு எங்களிடம் ஆதாரம் இல்லைதான். ஆனால இன்று குடியரசு தலைவராக ஆனா பிறகு, அதை உணர்ந்துள்ளீர்கள் என்று நம்புகிறோம். பல நூற்றாண்டுகளில் சாதிக்காததை இந்த அறுபது ஆண்டுகளில் சாதித்துள்ளதாக நீஙகள் கூறுவதில் எதோ இடிக்கிறதே? அது கற்பனை இல்லையா? நீங்கள் பெண்களுக்கான சமத்துவம் பற்றி டில்லி பெண் மாணவி மரணத்தை ஒட்டி, உலகமே ஐ.நா. சபை உட்பட எதிர்லித்த பிறகு, வருத்தபட்டிருப்பதை  நம்புகிறோம். ஆனால் உங்கள் முன்னாள் தோழர்களான மன்மொஹனும், சோனியாவும் அந்த பெண்ணின் உடலை வைத்துக் கொண்டு சிங்கபூர், டில்லி விமான அணிலயம் அதிகாலை எரிப்பு என்று "அரசியல் விளையாட்டு" விளையாடிதை இந்திய மக்கள் உட்பட இந்த உலக மக்கள் யாருமே ஏற்றுக் கொள்ள வில்லையே? அது உங்களுக்கு தெரியுமா? 

                         அடுத்து நீங்கள் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பற்றி கவலை கொண்டுள்ளதாக கூறப்போகிறீர்கள்.   உற்பத்திக்கான ஆலைகளை உர்வாக்காமல், அமெரிக்க, ஐரோப்பா சார்பான கார்போறேட்களின் பின்புல ஆலைகளை இந்திய நாட்டில் ஏற்படுத்தி, இங்குள்ள இளைஞர்களை "சார்பிலேயே" நிறுத்த முயலும் தங்களது சகாக்களான மன்மோகன், மாண்டக் அலுவாலியா, சிதம்பரம் ஆகியோரின் சதிகள் எங்களுக்கு தெரிந்தது போலவே உங்களுக்கும் தெரியும் . தாங்கள்  நிதி அமைச்சராக இருந்து  எதிர்த்த   வோடாபோன் வரி விவகாரத்தை, தந்திரமாக் உங்களை நிதி அமைச்சர் நாற்காலியை விட்டு கழட்டிவிட்டு, தான் அங்கே  உட்கார்ந்து, அதே வோடாபோனுக்கு வரி விலக்கு கொடுத்துள்ள சிதம்பரம் பற்றி எங்களுக்கு மட்டுமா தெரியும்? உயங்களுக்கும் தானே தெரியும், தாத்தா? என் தாத்தா இப்படி? 

                   சரிபோகட்டும். நீங்கள் குடியரசு தலைவர் என்பதால் இப்படியும், அப்படியும் ஆடித்தான் ஆகவேண்டும். அடுத்து இந்தியாவில் சாதி,மதம்  வேறுபாடுகள் இல்லாமல் வளர்ந்துள்ளதாக எப்படி முழு பூசணிக்காயை  சோற்றில் மறைக்க முயல்கிறீர்கள்? எங்கள்   உள்ள ஒரு அரசியல்வாதி, உங்களுடன் சென்ற அமைச்சரவையில் இருந்த குடும்பம்  கூறினால் கோபப்படபோகிறார்கள். அவர்கள் பகிரங்கமாகவே, எந்த அரசியல் கட்சி சாதிப்பார்வை இல்லாமல்  இருக்கிறது?  என்று  ஊடகங்களில் சவால்  விடும் அளவுக்கு ஒரு முன்னாள் மத்திய அமைச்சரை  செய்து வைத்துள்ளார்கள்.  உங்கள் பழைய சகாதான்  அவர்களுக்கு நாடாளுமன்றத்தில் ஈ, காக்கை   கூட இல்லாததால் அவர்களால் உங்கள்   முடியவில்லை  இல்லாவிட்டால் திராவிடக்  இல்லாத, காங்கிரஸ் கட்சி அமைச்சரவையில் இல்லாமல் இருப்பார்களா? ஆகவே தாத்தா கொஞ்சம் அக்கம்  பார்த்து பேசுங்கள் எல்லோரும் சிரித்துவிடப் போகிறார்கள்.