Monday, January 21, 2013

ஆ ச்சரியம்தான்

ஆ ச்சரியம்தான்  கமலஹாசன் இன்று கலைஞரை பாராட்டுபவர், அன்று 17 ஆண்டுகளுக்கு முன்பு இப்படி எழுதியிருக்கிறாரா? ஆரியத்தை ஏற்றுக்கொள்ளும் திராவிடம் என்று எழுதுபவர் அதை பகிரங்கமாக "பார்ப்பனீயம்" "நவீன பார்ப்பனீயம்" என்ற சொற்களுடன் எழுதினால் இன்னமும் பொருத்தமாக இருக்காது? இன்று தாழ்த்தப்பட்டோர் அம்ற்றும் பழங்குடிகள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தை எதிர்ப்பவர்களுக்கும் பொருந்தும்தானே? எப்படியோ. கீழே உள்ள கவிதையை எடுத்து போட்டுள்ள தளபதி ராஜ் அவர்களை பாராட்டத்தான் வேண்டும்.

(1996-ல் சேலம் மாவட்டத்தை சேர்ந்த தலித் சிறுமி தனம், ஆசிரியர் அடித்ததில் ஒரு கண் இழந்தார்.

அந்த சிறுமியின் கண் சிகிச்சைக்கு 1996-ல் ரூ 10000/- நிதி உதவி அளித்து, அந்த சிறுமி யின் அவலநிலையை உணர்த்தும், கமல்ஹாசன் எழுதிய கவிதை இது.)

கேடிகள் ஆயிரம் கூட்டணி சேர்ந்து
கேட்டில் வந்து முடிந்தது காண் !

காவியும் நாமமும் குடுமியும் கோசமும்
கண்டு மயங்கும் மந்தைகளாய்

ஆகிப் போனதில் வந்த விளைவுகள்
சொல்லி புரியும் வேளையிலே

ஆரிய வேடத்தை திராவிடன் பூண்டதில்
காரியம் கெட்டு போனது காண் !

ஓசையும் பூசையும் பார்ப்பனன் சொல்படி
ஆயிரம் ஆண்டுகள் செய்ததனால்
ஆகமம் பழகிப் போனது காண் !

அன்றொரு பெரியவர் சாடிய சாடலில்
காவியின் வண்ணம் சற்றே மாறி
கருப்பாய் சிவப்பாய் திரியுது காண் !

சாதியும் சாமியும் சாராயம் போல்
சந்தை கடையில் விற்குது காண் !

சர்கார் எத்தனை மாறி வந்தாலும்
மாறா வர்ணம் நாலும் காண் !

புத்தன் சொன்ன தம்மிம பதத்தில்
பாதி மட்டுமே பிரபலம் காண!