Saturday, June 22, 2013

மனிதாபிமானம் மரண தண்டனையை நீக்கிவிடும்


     இன்று  ஒரு புதிய செய்தி. பழைய செய்திதான் என்றாலும் அது "இரண்டு உயிர்களை "காப்பாற்றியுள்ளது என்பதால் புதிய செய்தி. இந்திய தவுஹித் ஜமாஅத் நடத்திய "ஊடகவியலாளர் கூட்டதில் " அறிவிக்கப்பட்ட செய்தி. குவைத் நாட்டில் நம்மூர் பசங்க இரண்டு பேரை, முத்துபேட்டை சுரேஷ் மற்றும் காளிதாசுக்கு, ஒரு கொலை வழக்கில் மரண தணடனை கொடுக்கப்பட்டிருந்தது. இலங்கையை சேர்ந்த முஸ்லிம் தமிழ் பெண் "சித்திக் மூசா " கொலையை செய்ததாக இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் "பிரமிளா தேவி" க்கு ஆயுள் தனடனையும், இந்தியாவை சேர்ந்த சுரேஷ் மற்றும் காளிதாசுக்கு மரண தனடனையும் அறிவிக்கப்பட்டது. இதுஇ இஸ்லாமிய சட்டப்படி "கொலைக்கு பதில் கொலை" என்பதாக வர்ணிக்கப்பட்டது. ஆனால் அதே இஸ்லாமிய சட்டத்தில், "பாதிக்கப்பட்ட குடும்பம்" மன்னித்துவிட்டால் "மரண தண்டனை ரத்து" என்பதாகவும் இருக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு, "இரத்த பணம்" என்ற "தஹ்ண்ட பணத்தை" குற்றம் இழைத்தவர்கள் சார்பாக கொடுத்துவிட்டால், அதை பாதிக்கப்பட்ட்ட குடும்பம் ஏற்றுக் கொண்டால்  மன்னிப்பு வழங்கலாம்  என்றும் அதில் இருக்கிறது. இதை இந்திய தவுஹித்  ஜாமாத தலைவர் எஸ்.எம்பாக்கர், இன்று குர்ஆனில் இருந்து படித்து காட்டினார் 

           அதன்படி இந்த மேற்குறிப்பிட்ட கொலையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள், "பன்னிரண்டு லட்சம்" ரூபாயை, "பாதிக்கப்பட்ட குட்ம்பய்த்திர்க்கு" 2011 ஆம் ஆண்டிலேயே  கட்டியிருக்கிறார்கள்  அதை பற்றிய "ஆவணங்கள்" குவைத்தில் உள்ள இந்திய ஹைகமிசனுக்கு  அனுப்ப[[அட்டும் கூட அவர்கள் அதை குப்பையில் போட்டு விட்டார்கள் என்றும் கூறினார்  இப்போது இருவருக்கும் "தூக்கு" உறுதியான பிறகு, கடைசி நேரத்தில், இந்திய தஹ்வுஹித் ஜமாத்  அமைபபினர், "பிர்தொஸ், இலங்கையில் உள்ள  ஷெராபுதின்" ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை தேடி பிடித்து, அவர்களை கூட்டிவந்து, கொழும்பில் உள்ள  "குவைத்" தூதரகத்தில், பேசவைத்து, முதலில், மரண தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். குவைத்தில் உள்ள இந்திய தவுஹித் ஜமாதின்  பைசல் இந்திய தூதரகத்திற்கு படையெடுத்து, பழைய ஆவணங்களை  தூசு தட்ட வைத்து, கொழும்பில் இருந்த ஷெராபுதின்  இலங்கை அரசத் துறைகளிடம் சண்டை போட்டு, ஆவணங்கள் ட்டிஹயார் செய்து, அவசர, அவசரமாக அனுப்பிவைத்து, மரண தணடனையை இருவருக்கும் "ரத்து" செய்ய வைத்துள்ளனர். இதில் இந்திய தூதரம்தான் "அக்கறையற்று " இந்த இரண்டு உயிர்களையும் "காப்பாற்றாமல்" இருந்தது என்பதே அவர்களது குற்றச்சாட்டு.

              அதை கூறும்போது, பாக்கர் "மூன்று தமிழர் உயிர்கள்" ராஜீவ் கொலையில், தவிப்பதை எடுத்து கூரினார்ட். நளினிக்கு "தூக்கி, ஆயுளாக" குறைப்பதற்கு, பாதிக்கப்பட்ட குடும்பத்தின் சோனியா காந்தி, எழுதிய மன்னிப்பு கடிதத்தில், கொடுத்துள்ள மன்னிப்பை ஏற்று,ஏன் "மூன்று தமிழர் உயிரை" காப்பாற்றாமல் 'கருணை மனுவை" குடியரசு தலைவர்கள் பரிசீளிக்கிரார்கள்? என்று கேட்டார். இச்லமைஒய சட்டத்தில் உள்ள  மனிதாபமணம் கூட, இந்திய அரசிடம் இல்லையே? என்றார். நாகப்பட்டினம் எம்.பி. ஏ.எஸ்.கே.விஜயன்  முயர்ச்சியும் இந்த வழக்கில் தொடர்ந்து இருந்தது என்றும் ஆனாலும் கடைசி நேரத்தில், அந்த "தஹ்னபாப்பணம்" பெற்று, மனிப்பு கொடுத்த சான்றுகளே,   இரண்டு உயிர்களையும் காப்பாற்றியது என்று, சுரேஷின் மனைவி, அனுசுயாவும் அழுதுகொண்டே இன்று கூறினார்.  இதுதான் "முஸ்லிம் தமிழர்களும் முஸ்லிம் அல்லாத தமிழர்களும்" இலங்கையிலும் இந்தியாவிலும் இணைந்து பணியாற்றும் பொது கிடைக்கும் உயிர் பாதுகாப்பு . அதுவே "தமழின" பாதுகாப்பு. இந்த இரண்டு தமிழினமும் இணையவே  முடியாது என்று "மேடை தோறும்" கூறிவரும் "அறிவாளிகளுக்கு" இது ஒரு சாட்டையடி.  , "சிங்களத்திற்கு" மரண அடி 

Sunday, June 16, 2013

தோழர் மணிவண்ணன் மரணம் கூறும் பாடங்கள்


       இயக்குனர், திரைக்கலைஞர் மணிவண்ணன் அவர்களது மரணம் நண்பர்கள் பலர் இடையே தொடர்ந்து இரண்டு நாளாக விவாதத்தை கிளப்பியுள்ளது. நேற்று தோழரது மரணம் கேள்விப்பட்டவுடன், பி.யு.சி.எல். கூட்டத்தில் இருந்த நாங்கள் உடனே ஒரு இரங்கலை அங்கேயே பதிவு செய்து விட்டு, மாலையும், கையுமாய், தோழரைக் காண, அவர் வீடு சென்றோம். நேற்று மாலை நல்ல கூட்டம் அங்கே அலைமோதிய நேரம். பேராசிரியர் சரஸ்வதி,[பி.யு.சி.எல். மாநில தலைவர்], மாவட்ட பொருளாளர் பாரதி விஜயன், நான், முகேஷ், எம்.ஜி.ஆர்.டி.வி.ஹமித், கவிஞர் சுமித்ரா[ நாம் தமிழர்] அனைவரும் சென்று மாலை வைத்தோம். இன்று இறுதி ஊர்வலம் சென்று, இடுகாட்டில் தோழரை எரியூட்டும் வரை நின்று, மீனவர் சங்கம் மகேஷ், வழக்கறிஞர் அருள், நான் ஆகியோர் திரும்பினோம். ஆனால் தோழரது நினைவுகள் மீண்டும் மீண்டும் "பகிர்ந்து கொள்ள" வேண்டியது என்று உணர்ந்தோம். அவரது இழப்பு "பொதுவாழ்க்கைக்கு" பெரும் இழப்பு, வேறு ஒருவர் அவரது இடத்தை நிரப்ப முடியாது என்றும், பேசிக் கொண்டோம். எனக்கு தனிப்பட்ட முறையில் பெரும் இழப்பாக உணர்ந்தேன். "தோழர்,தோழர்" என்றுதான் என்னை அழைப்பார்.
           1976 இல் முதன்முறையாக, கோவை சி.ஐ.டீ. பொறியியல் கல்லூர்ரி விடுதியில் சந்தித்தேன். நான் அப்போது, சாருமசும்தார் வழி, நக்சல்பாரி கட்சியின் தலைமறைவு தோழர். அவர் "சாரு எதிர்ப்பு" நக்சல்பாரி கட்சியின் முழு நேர ஊழியர். அதன்பிறகு, 1989இல்  மதுரை வங்கி கொள்ளைக்காக சில தோழர்களை குறிப்பாக பெங்களூரு ஆசிரியர் வீரமணியை, காவல்துறை "சித்திரவதை" செய்வதற்கு எதிரான "உண்மை அறியும் குழு" அனுப்ப, உதவி பெற சென்றோம். அபபோ து அவர் பிரபல இயக்குனர். பழைய கதைகளை பகிர்ந்து கொண்டோம். நீண்டபயணம் சுந்தரம், சுப வீரபாண்டியன்,இன்று மாவோயிச  தலைவர் என்ற குற்றச்சாட்டில் சிறையில் இருக்கும் விவேக், ஆகியோருடன் நான் சென்ற நேரம். பழைய கோவை சந்திப்புகளை பகிர்ந்து கொண்டோம். 
                  இப்போது 2009, மீண்டும் எங்கள் சந்திப்புகளை அதிகப்படுத்தியது. "ஈழம்" அதற்கு காரணமாக இருக்கிறது. நிறைய பகிர்ந்து கொள்ள வாய்ப்பு கிட்டியது. அவரது பணிகளுக்கு எனது உதவியையும் எனகளது முயற்சிகளுக்கு அவரது உதவிகளையும் பகிர்ந்து கொண்ட காலம்  "புலிகளை" ஆதரிக்கும் இந்த காலத்தில், "நீங்கள் முன்பு மறுத்த சாருமசும்தார் வழியான "அழித்தொழிப்பை"  இப்போது ஏற்றுக் கொள்கிறீர்களா?" என்று நான் வினவினேன். முழுமையாக் "ஆம்" என்றார். " இனவிடுதலை போரை" உள் வாங்கிய  ஒரு தோழர், "வர்க்கபோரின்" உயர் கட்டங்களையும் புரிந்து கொண்டு டுதானே ஆகவேண்டும். எனக்கு "தோழர் மறைவு" தனிப்பட்ட இழப்பும் கூட. ---தெ.சி.சு.மணி.