Monday, December 31, 2012

முஸ்லிம் தமிழர்களும் தமிழினமே.


      தமிழினப் படுகொலை  ஈழத்தில் நடத்தப்பட்டது. அதை அரங்கேற்றியவர்கள் சிங்கள பேராண்மை வாதிகள். அதற்கு  ஒத்துழைப்பு கொடுத்தவர்கள் இந்திய அரசு உட்பட இருபது பெரும் வல்லரசு நாடுகளின் அரசாங்கங்கள். போரில் தமிழர்களை தற்காலிகமாக அவர்கள் வென்று  இருக்கலாம்  போரில்  அவர்கள் ஆயுத பலத்தால் மட்டுமே வெற்றியை எட்டினார்களா? இல்லையே?  அவர்களது உளவுத்துறை  தம்ஜிஹர்கள் வாழும் சிறு பகுதிக்குள், நிலம் வழியாகவும், வான் வழியாகவும்  உளவு பார்த்ததே? அதற்க்கு இந்திய ராடார் கருவிகளும், இந்திய உளவு துறையும் முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்ததே? அவ்வாறு தம்ஜிஹர்களை உலக அரங்கில் தனிமைப்படுத்தியதால் தான் ஈந்த எதிரிகளால் வெற்றியை தற்காலிகமாக எட்ட முடிந்தது? அதற்காக அவர்கள் விடுதலைப் புலிகளை விட்டு வெளியேறிய வர்களையும், பயன்படுத்திக் கொண்டார்களா? இல்லையா? அதற்காக தம்ஜிஹர்கள் எல்லோரும் துரோகிகள் என்றோ கிழக்கு மாகான தமிழர்களா துரோகிகள் என்றோ கூறமாட்டோம் அல்லவா? அதில் சிலர் செய்த தவறுகளுக்காக, துர்கொகத்திர்காக ஒட்டுமொத்த மக்கள் கூட்டத்தை நாம் குறை சொல்ல மாட்டோமே? நமக்குதான் காரணம் புரிகிறதே?

                                   அதுபோலத்தான் போர் நேரத்தில் யாழ்ப்பாணத்தை விட்டு, முஸ்லிம் தமிழர்கள் வெளிஎடர்ப்பட்டதும் நடந்தது இல்லையா? நாம் சிலரை சந்தேகப்படுவது போர் நேரத்தில் தவிர்க்க முடியாதது. அந்த நெருக்கடி நேரத்தில் நம்மிடம் சில சரியாகவும், தவரகாவும் கட்டளைகள் வரலாம் அவற்றை சரியானது என்று கூருவதர்க்கான காரணங்களும் நிறைய இருக்கின்றன என்பது அண்மைக்கு தெரியும். ஆனாலும் புண்பட்ட உள்ளங்களை எப்படி ஆற்றுவது?  எப்படி மீண்டும் பிரிந்த உள்ளங்களை சேர்ப்பது? அது பெரிய கடினமான் அசெயல் இல்லையா? சிங்களம்  முஸ்லிம் தமிழர்களையும், முஸ்லிம் அல்லாத தமிழர்களையும் பிரித்து நிருற்ற்ஹ்துவதில் இதுவரை வென்று விட்டதே? இந்திய அரசும் அதன் உளவுத்துறையும் கூட அந்த அபன்னிகளை செவ்வனே செய்யும் திறமை உள்ளவர்கள்தானே ? அதை முறியடிக்க, முஸ்லிம் தமிழர்கள், இந்து தமிழர்கள், கிருத்துவ தமிழர்கள், மதமற்ற தமிழர்கள், நாத்திக தமிழர்கள் என்ற அனைவரும் தமிழர்களே என்ற முழக்கத்தை கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ்நாட்டின் வீதிகளில் நான்கள் கிளப்பி வருகிறோம். எங்களுடன்  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனித நேய மக்கள் கட்சி  இந்திய தவுஹித் ஜமாஅத் ஆகிய அமைப்புகளும் பேரணிகளில் கலந்துகொண்டு, கூட்டங்களில் கலந்துகொண்டு இடெஹ் முழக்கத்தை  எழுப்புகிறார்கள். அதவே இலங்கையில் உள்ள இந்திய தவுஹித் ஜமாத்தின் தொடர்பு அமைப்பு, இலங்கை தீவின் கிழக்கு, வடக்கு மாகனங்களில் பிற தமிழர்களுடன் யைந்து செயல்பட்டு வருகிறார்கள்  

                           நான்கள் சென்னையில் கத்தோலிக்க பேராயர் தலைமையில், அனைத்து கிருத்துவ அமைப்புகளின் தலைவர்களையும் அனைத்து முஸ்லிம் அமைப்புகளையும், பல இந்து அமைப்புகளையும் இணைத்து "அனைத்து மத தமிழ மக்கள்  என்ற பெயரில், ராஜபக்சே அரசுக்கு எதிராக அவர்கள் இந்து, கிருத்துவ, முஸ்லிம் வழிபாட்டு தளங்களை இடிக்கிரறாக்கள் என்று குரல் கொடுத்தோமே? அதில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், இந்திய தவுஹித் கமாத்  பாபுலர் ப்ரண்ட்  ஆப் இந்தியா  தேசிய லீக், ஆகியவற்றின் தலைவர்களும் தொண்டர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்களே? எங்களுடன்  அவர்கள் தமிழீழத்திற்கு ஆதரவு குரல் எழுப்பி வருகிரரகளே? இப்போது 28 ஆம் நாள் மலேசியாவில், கோலாலம்பூரில் நடந்த "இரண்டாவது  தமிழர் பாதுகாப்பு மாநாட்டிலும்" இந்திய தவுஹித் ஜமாஅத் தலைவர்  எசெம்.பாக்கர் கலந்துகொண்டு, முஸ்லிம்கள் மதத்தால் வேறுபட்டாலும் தமிழர்கள்தான் என்றும் தமிழீழம் அடைந்தே தீருவோம் என்றும் பேசினாரே? இந்த  நாம்   வேண்டாமா? இங்கே ஏற்கனவே அ.மார்க்ஸ் போன்றவர்கள் முஸ்லிம்களை  விடுற்ற்ஹளைப் புலிகள்தான என்று  செய்து சிங்களத்திற்கு உதவி வருகிறார்களே? நாமும் அத்தகைய வேளைகளில் "பலியாகக்" கூடாது அல்லவா? ஆகவே கடந்த காலத்தில் நடந்தவற்றை ஆராய்வது தவறு அல்ல. பல நியாயங்களை போர் நேர நீதிகளை, போர் இல்லா  சூழலில் பலருக்கும்  புரியவைப்பது கடினம்,. ஆகவே நாம்   எப்படி     அணுக வேண்டும்  என்பதில் கவனம் தேவை