Friday, December 14, 2012

சென்னை வந்த பிரான்சிஸ் ஹாரிசன் சொன்னது சரியா?

சென்னை வந்த  பிரான்சிஸ்  ஹாரிசன் சொன்னது சரியா?
      இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பிரான்சிஸ் ஹாரிசன் ஓராண்டு முன்பு ஒரு ஆங்கில புத்தகத்தை வெளியிட்டார். அது " Still counting the  death " என்ற இலங்கையின் இன அழிப்பு போரில் உயிர் நீத்த தமிழர்களின் சடலங்களை  இன்னமும் எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள் என்ற ஆதாரங்களை முன்வைத்து எழுதப்பட்ட புத்தகம். அதன் தமிழாக்கத்தை "காலச்சுவடு" இதழ் நாளை சனிக் கிழமை சென்னை அண்ணா சாலையில் உள்ள "புக் பாயிண்ட்" அரங்கில் வெளியிடபோகிரார்கள் அதற்காக வந்த அந்த ஆங்கிலேய பெண்மணியின் "ஊடவியலாளர்" கூட்டம் இன்று காலை  நடைபெற்றது. அப்போது பிராந்சிஸ் ஹாரிசன் பேசினார். அதுநேரம் சமீபத்தில் கசிந்த "உலக வங்கியின்" மக்கள் தொகை கணக்கை வெளியிட்டார். அதில் " முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மன்னார்" மாவட்டங்களில் 2006, 2007 ஆண்டுகளில் தொடக்கி, 2010 வரையில் அங்கு வசித்துவரும் மக்கள் தொகையின் புள்ளி விவரங்கள் இருக்கின்றன. அதில் கன்னக்கு பார்த்தால் அந்த காலத்திற்குள் ஒரு லட்ச்சத்து ஆறாயிரத்து நூற்று முப்பத்தி நாலு பேர்களை "காணவில்லை" என்ற கணக்கு வருகிறது. இற்ற்ஹுவே கூடுதலான தகவல்களை இன அழிப்பு பற்றி நமக்கு கொடுக்கிறது.

                            அதேபோல வன்னி போரிலிருந்து தப்பி வெளிநாடு சென்றுவிட்ட பலரை அவர் நேர்காணல் எடுத்து, எப்படி போர் நேரத்தில் "பிணங்களை" கணக்கற்று புதைத்தார்கள் என்பதையும் எழுதியுள்ளார். ஆகவே அந்த புத்ஜ்தகம் "போர்குற்ற விசாரணைக்கு" சாட்சியாக மையும் என்பது அவரது எதிர்பார்ப்பு. இந்த புத்தகத்தை தமிழாக்கி தருவதும் நல்ல செய்திதான். ஆனால் அந்த எழுத்தாளர் சில கருத்துக்ககளை அப்போது வெளியிட்டார். தான எடுத்த நேர்காணல்கள் சிங்களை எடுக்காததால், அரசாங்கத்திடம் நேர்காணல் எடுக்காததால், "ஒரு சார்புதான்" என்றார். அந்த வார்த்தையை பிடித்துக் கொண்ட நமூர் ஊடகக்காரர்கள்  சிலர் "ஏன் ஒரு சார்பு எடுத்தீர்கள்?" என வினவ, நமக்கு வந்த கோபத்தில், அவர்களிடம் "நீங்கள் புலிகளுக்கு எதிராக இருந்த பழைய காலம் இருக்கட்டும். இப்போது போருக்கு பிறகு முக்கிய விசயமே  "போற்குடறம் புரிந்த அரசு சம்பந்தப்பட்டது" என்று கூறிய பிறகு அவர்கள் ஒப்புக் கொண்டனர். அதேபோல அந்த எழுத்தாளரிடம் "நேநேகள் செய்த நேர்காணல் போரிலிருந்து தப்பி வந்தவர்களிடம் எடுத்து. அது oரூ சார்பு கிடையாது. அது உண்மை சார்பு" என்று நாம் கூறிய பின்பு, அவரும் "ஆமாம்" என்றார் 

                              அற்றேஹ்போல அந்த எழுத்தாளர் "அரசாங்கம் பக்கமும் புலிகள் பக்கமும், போர் விதி மீறல் இருந்தது" என்று கூறினார். அந்த  நாம்  கேட்ட பொது ஊடக நண்பர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அதாவது போரை  அரசாங்கம்தான்  "போர்விதி மீறல் செய்யமுடியும்" தற்காப்பு போர் செய்த புலிகள், கிழக்கு மாவட்டத்திலிருந்து வடக்கு மாவட்டத்திற்கு  பின்வந்து, "தற்காப்பு போர்" செய்த புலிகள் எப்படி போர் விதி மீறல் செய்ய  என்று நாம  வினவிய பொது,ஊடகக்காரர்கள் ஏற்றுக்  அனால் அந்த எழுத்தாளர்  பிரான்சிஸ் ஹாரிசன் "அது உங்கள் அப்பிபிராயம்" என்றார். இதை ஏற்பாட்டலர்களும், நண்பர்களும் நாளை நடக்கும் "புத்தக வெளியீடு" விழாவில் தெளிவு  எடுத்து கூறுவது நல்லது  நாளை வெளியிடப்படும் அந்த "இப்போதும் [பிணங்களை எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள்" என்ற  கொண்ட அந்த புத்தகத்தின் பெயர்  " சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்" என்பதே