Thursday, November 8, 2012

ஸ்டாலினை மறித்த தமிழ்ப் பெண்கள்?


     லண்டன்  சென்றார் ஸ்டாலின். ஜெனிவா சென்று ஐ.நா பொறுப்பாளரை சந்தித்து "தனத்தை" தந்த மடலை கொடுத்துவிட்டு, ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் "நவீன் பிள்ளையையும்" சந்தித்து பேசிவிட்டு, லண்டன் ஸ்டாலின். அடேயப்பா, எவ்வளவு  கடின வேலைகள்? உடன் சென்ற டி .ஆர்பாலு அந்த பிரமுகர்களிடம் விவரமாக பேசியதையும் காட்சி ஊடகங்களில் கண்டோம். அதன் பிறகு லண்டன் சென்றார் ஸ்டாலின். உடன் சென்ற டி கே.எஸ்.இளங்கோவன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஆகியோர் என்ன செய்தார்களோ, யாருக்கும் தெரியாது, ஸ்டாலின் சென்றார், ஸ்டாலின் பெச்டினார், ஸ்டாலின் மனு கொடுத்தார், ஸ்டாலின் நேர்காணல் கொடுத்தார், ஸ்டாலின் ஸ்கார்ப் போட்டிருந்தார், ஸ்டாலின் கோட்டு ,சூட்டு போட்டிருந்தார். ஸ்டாலின் லண்டன் சென்றார். லண்டனில் "பிரிட்டிஷ் தமிழ் பேரவை" ஏற்பாடு செய்த மாநாட்டில் ஸ்டாலின் கலந்து கொண்டார். ஸ்டாலினுக்கு அந்த பேரவை காரர்களை ஏற்கனவே தெரி யுமா? ஸ்டாலின் தங்கச்சிக்கு அவர்களை தெரியும் ஸ்டாலின் தங்கை கனிமொழிக்கு தான் அந்த aழைப்பு, கழகத்திற்கான அழைப்பு வந்தது. தலைவர் அதை டி .ஆர்.பாலு, டிகே.எஸ்.இளங்கோவன் ஆகியோரை அழைத்து கொடுக்கப்போகும் செய்தியை அறிந்த ஸ்டாலின் தலைவரிடம் முந்திக் கொண்டார். தானே போவதாக அறிவித்தார்.

                       லண்டன் மாநாட்டில் ஸ்டாலின் பேசினார். ஈழச் சூழல் ப[ஆற்றி பேசினார். ஒன்றரை லட்சம் பேர் கொலை செய்யப்பட்டதை  பேசினார்.  தொண்ணூறு ஆயிரம் பேர் தமிழ் பெண்கள் விதவைகளாக இருப்பதை பேசினார். போர் குற்றங்கள் பற்றி பேசினார். இவையெல்லாம் ஸ்டாலினுக்கு ஏற்கனவே தெரியுமா? தெரிய வேண்டிய அவசியமில்லை. இப்போது பேசினார். பேசிவிட்டு மேடையிலிருந்து கீழே இறங்கினார். மூன்று தமிழ் பெண்கள் மறித்துக் கொண்டார்கள். நீக்க பேசியது எல்லாம் சரி. இவையெல்லாம் நாங்கள் போர் nஅடைக்கும்போதே கூறினோமே? நீங்கள்தானே ஆட்சியில் இருந்தீவ்ர்கள்? அப்போது உங்கள் தனத்தை முதல்வராக இருந்தாரே? நீங்கள் துணை முதல்வராக இருந்தீர்களே? அப்போது பேசி இருந்தால் பலன் கிடைத்திருக்குமே? போர் குற்றங்கள் நின்று போயிருக்குமே? அப்போது பேசாமல் இப்போது பேசி என்ன பயன்? இவ்வாறு  கேட்டார்கள்.பதில் சொல்ல முடியாமல் "எப்போ பேசறது? எப்ப பேசறது? " என்று திணறினார் ஸ்டாலின். டி .ஆர்.பாலுவும், கே.எஸ்.ராதாகிருஷ்ணனும், அந்த பெண்களுக்கு சமாதானம் கூறி அனுப்பி விட்டனர். அருகே இருந்த திருமாவளவன் ஒன்றும்  குறுக்கிட்டு பேசவில்லையே? என்று ஸ்டாலினுக்கு வருத்தமாம். அருகே கோ.க.மணியும் தான் இருந்தார். அவர்களுக்கு  அந்த பெண்கள் கேட்பது நியாயம்தான்  என்று தெரியுமே?  

புரட்சியை அழிக்கிறதே "சாதி"

புரட்சியை அழிக்கிறதே "சாதி"
     தென் மாவட்டங்களில் வழமையே இப்படி சாதி சண்டையை மூட்டி விடுவதுதான். ஆனால் வாடா மாவட்டங்களில் உள்ள சாதிகள் தங்களுக்குள் முரண்பட்டு இருந்தாலும் அவை டேஹ்ருவில் இறங்கி சண்டை போட்டுக் கொள்ள மாட்டார்கள் என்று கூறி வந்தார்கள் ஆனால் அதை இன்று பொய்யாக்கி விட்டது "தர்மபுரி" மாவட்டம்  தருமபுரி மாவட்டத்தில் உள்ள "நாயகன்கொட்டை" பிரபலமான் ஊர். எதற்கு?' நக்சல்பாரி கொள்கைகளில்   
முழு ஆதரவு கொடுத்து வந்த ஊர். அங்குதான் நக்சல்பாரி புரட்சியாளர் களான தோழர் அப்புவின் சிலையும், தோழர் பாலனின் சிலையும்  வைக்கப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு நகசல்பாரி கருத்துக்களை உள்வாங்கிய ஒரு இடம் அது. அங்கெ சாதிகளை தாண்டி தோழர்கள் வலம் வந்தனர் நாயக்கன்கொட்டை கிராம வன்னியர்கள் அருகே உள்ள தலித் கிராமங்களில் வாழும் மக்களுடன் "தோழமையாக" பழகி வாழ்ந்ததால், அந்த தலித் கிராமங்களான "நத்தம், அண்ணா நகர்" ஆகியவை நகசல்பாரி கருத்துகளுக்கு, தோழர்களுக்கு முழு ஆதரவு கொடுற்ற்ஹ்து வந்த வரலாறு உண்டு. இப்போது அங்கே நேற்று "சாதி மோதலா?" என்பதே இப்போது கேள்வி.

                                  நாயக்கன்கொட்டையை சேர்ந்த நாகராஜ் என்ற வன்னியர் தோழருக்கு ஒரு மகள். மகள் படித்து நர்சாக ஆனபின்பு, "சாதி தாண்டிய மானுடப்பார்வையை" பெறக்கூடாதா? அந்த பெண் ஒரு தலித் இளைஞரை "காதலித்து திருமணம் " செய்துகொண்டார் இதை "வன்னிய சாதிவெறி" ஒப்புக் கொள்ளவில்லை அந்த பெண்ணை நிர்ப்பந்தம் செய்தது. பெண் தைரியமாக "சாதி மறுக்கும் மனுஷியாக" தன்னை அறிவித்து கொண்டார் தான் காதலித்து திருமணம் செய்து கொண்டதை உறுதியாக அறிவித்தார். பொறுக்குமா சாதி வெறிக்கு? சாதி தாண்டி "காதலித்தால்" சாதி தாண்டி மனம் ஒற்றி மணம் முடித்தால்  "சாதியை" வைத்து எப்படி அரசியல் செய்வது என்று சிந்தித்தார்களா? ஆயிரம் பேருக்கு மேல் திரண்டு "நத்தம், அண்ணா நகர்" என்ற தலித் கிராமங்களுக்கு "தீ" வைத்தனர். வநீயராக இறாமல் "தோழராக" எப்படி நாகராஜன் இருக்கலாம் என்று அவரை மிரட்டினர். நாகராஜன் "நேற்று தற்கொலை" செய்துகொண்டார். சாதி வெறியர்கள் தெருவில் இறங்கினர் காவல்துறை நுழைந்தது. இன்று நாகராஜனின் "மச்சினி"யும் தற்கொலை செய்து கொண்டார் என்று செயுதிகள் வருகின்றன மீண்டும் சாதி வெறியர்கள் "ஆட்டம் போட" முயல்கின்றனர். அப்படியானால் சாதி தாண்டிய மண்ணையும், இந்த சாதி வெறியர்கள் நெற்றி கொண்டு விட்டார்களே? 

ஜாலியை கொலை செய்த சாதி

ஜாலியை கொலை செய்த சாதி 
    தேவர் ஜெயந்தி இந்த முறை வந்தபோது பல வன்முறைகள் நடந்த்தது முதலில் முதுகளுத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றவர்களும் வேன் வாகனத்தில் . சென்றவர்களும் "கற்களால்" தாக்கப்பட்டதும் அதில் மூவர் மரணம் அடைந்ததும் நம்மை "பதற" வைத்து. அதற்க்கு முன்பே மறுத்து பாண்டியர் பிறந்த நாளில் திருப்புவனம் அருகே 'நிராயுதபாணியான" துணை ஆய்வாளரை, ஆயுதம் தாங்கிய "கத்தி" இளைஞர்கள் கொலை செய்தது கண்டு நாடே அதிர்ச்சி அடைந்தது. அடுத்து விருதுநகர் மாவட்டத்தில் "திருச்ஹ்கிழி" வட்டாரத்தில் அந்த மாவட்டம் முழுக்க அதிகமாக இருக்கும் "சாதி" அந்த இடத்தில் மட்டும் சிறிய அளவே இருப்பதால் "இருவர்" கொலை செய்யப்பட்டது "பழிக்கு பழி" வாங்கும் " காட்டுமிராண்டி" தனத்தை காட்டியது. அதற்கும் "பழிக்கு பழி" வாங்க மதுரை அருகே சிந்தாமணி வட்டாரம் வந்த "சுமோ" வாகனத்தில் இருந்த "இருபது" பேர மீது "பெட்ரோல் குண்டு" எரிந்ததை பார்த்து "தாங்கமுடியாத" துயரம் நம்மை பற்றிக் கொண்டது. 

                    ஆனால் அந்த சுமோ வில் வந்த இளைஞர்களை இரவில் மருத்துவமனையில் 'சிகிச்சை" கொடுக்க முடியாத அளவில் "குடி" செல்வாக்கு செலுத்தியது  என தெரிய வரும்போது, "அய்யகோ" இது என்ன வேதனை என்று எண்ணத் தொடங்கினோம் ஆனால் அதில் பதிக்கப்பட்ட இளைஞர்கள் அனைவரும் "இருபது" வயதிற்குள் என்று தெரியும்போது "இளைய சமுதாயத்தை" பார்த்து அதிர்ச்சி வந்தது. அடுத்து "மறவர்" இளைஞர்களுடன் அந்த இருபது பேர் கும்பலில், இஅரண்டு பிள்ளைமார், ஒரு கோனார், ஒரு தேவேந்தரர் இளைஞர்களும் பாதிக்கப்பட்டனர் என்று தெரியம் பொது, "அவர்கள் தேவர் ஜெயந்திக்கு"  "சாதி" உணர்வுடன் செல்லவில்லை என்பதும், இன்றைய இ;ளைஞர்கள் "ஜாலி" உணர்வுடன் சென்றிருக்கிறார்கள் என்பதும் "ஆதாரபூர்வமாக" வெளிப்பட்டுவிட்டது. அப்படியானால் ஜாலி உணர்வுடன் சென்றவர்களை "சாதி" உணர்வுடன் தாக்கி கொலை செய்திருக்கிறார்களே? என்று வேதனைப்பட வேண்டி வருகிறது. இன்றைய இளைஞர்கள் சாதியை தாண்டி "ஜாலி"யை கையில் எடுத்தாலும் பழைய தலைவர்கள் "மதுக்கடை" மூடப்பட்ட நாளிலும் மது கொடுத்து கூட்டம் சேர்த்து, தனது "ஆள்பலம்" காட்ட செத்தான் விளைவு இதுவா? என்று எண்ணத் தோன்றுகிறது. அதற்காக சுமோவில் "தொங்கி" கொண்டு செல்வோரை "பெட்ரோல் குண்டு" எரியும் போக்கு "காட்டுமிராண்டி" தானம்தானே?