Tuesday, October 2, 2012

புதிய பரிமாணத்தில் இந்தி எதிர்ப்பு போர்.



    அந்திமழை மாத ஏடு இந்த இதழில் "இந்தி திணிப்பு எதிர்ப்பு போரின் எழுபத்தைந்து ஆண்டு " வரலாற்றை, எல்.கணேசனின் மாணவர் பருவ அனுபவங்கள், பா.ஜெயப்பிராகசின் சிறை அனுபவம் என கட்டுரைகளாக் கொண்டு வந்துள்ளது. சரியான நேரத்தில் சரியான் அத்தேவையை ஒட்டி தெரிந்தோ, தெரியாமலோ, அந்திமழை அத்தகைய முயற்ச்சியை எடுத்து விட்டது. இன்று சென்னையில் நடத்தப்பட்ட "திட்டமிடல் கூட்டம்" அந்த எழுபத்தைந்து ஆண்டுகளின் பரிமான் வளர்ச்சியை நமக்கு எடுத்து சொல்வதாக அமைந்தது. இந்த திட்டமிடல் கூட்டம் சென்ற மாதம் இருபத்தி மூன்றாம் நாள், கன்னிமரா நூல் நிலையத்தில் உள்ள "அண்ணா சிற்றரங்கில்" நடந்த ஆலோசனை கூட்டத்தின் தொடர்ச்சி. 

              அந்த ஆலோசனை கூட்டம் ஒரு "கையேட்டை" விநியோகித்து. அங்கே பேராசிரியர் ந.தெய்வசுந்தரம், ராம்கி, அரணமுறுவல், பூங்குன்றன் போன்றோர் முன்னெடுத்து பல விசயங்களை விவரித்தார்கள். இதுவரை இந்தி மொழி தமிழ் போன்ற பல இந்திய நிலப்பரப்பில் வழங்கப்படும் மொழிகளை அடக்கி, அவற்றின் மீது ஆதிக்கம் செலுத்தியபோதும், அவற்றின் மீது திணிக்கப்பட்ட போதும், எழுந்த எதிர்ப்பு போர்களை கண்டோம். ஆனால் இப்போது வேறு ஒரு பரிமாந்த்திலிந்த போர் நிகழ்த்தப்படுகிறது. அதாவது "கணினி மொழி" என்று ஒன்று அறிவியல் ரீதியாக வளர்ந்து விட்ட உலக நிலைமை இப்போது நம் கண்முன்னே நிற்கிறது. எல்லா மொழிகளும் கணினி தன்மையில்வலர்ந்தால் மட்டுமே வளர முடியும் என்ற புதிய நிலைமை. இது அறிவியல் வளர்ச்சியை ஒட்டியும், உயர் தொழில் நுட்ப வளர்ச்சியை ஒட்டியும் எழுந்துள்ளது. அதாவது ஒரு மொழியின் "கணினி" வளர்ச்சியை புரிந்து கொள்ளும் ஒருவர் மட்டுமே, "எழுத்தறிவுள்ளவர்" என்றும் மற்றவர் "எழுத்தறிவற்றவர்" என்றும் வழங்கப்படும் "காலம்" வந்து கொண்டிருக்கிறது.. இத்தகைய செய்தியை "இலக்குவனாரின் நினைவு நாள்" கூட்டத்தில் கூறினார்கள். நான் திகைத்துப் போனேன். ஏன் என்றால் இலக்குவனாரின் "குரல் நெறி" என்ற மாதமிருமுறை ஏட்டை,, நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது, வாங்கி படிக்க எங்கள் தமிழாசிரியர் சின்ன சிவஞானம் நெல்லை ம.தி.தா.இந்து கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் பணித்தார். தவறாமல் ஒவ்வொரு இதழையும் எனது எட்டாம் வகுப்பிலேயே ஒவ்வொரு மாதம் இருமுறையும் வாங்கி படித்தேன். அதுதான் இந்தி எதிர்ப்பு போரின் வீரர்களை, சின்னசாமி, அரங்கநாதன் போன்றோரை எனக்கு அறிமுகம் செய்தது. அந்த பாசத்தில் இலக்குவனார் நினவு கூட்டம் இப்போதும் எனக்கு புதிய கருத்தை தந்தது.

         அப்படிப்பட்ட கணினி மொழியை கள்ளத்தனமாக "பயன்படுத்த" ஒற்றையாட்சி நடுவணரசு திட்டமிட்டுள்ளது.ஏற்கனவே "ஆட்சி மொழி" என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்தி மொழியை, கணினி மட்டத்திற்கு உயர்த்த "பல மடங்கு நிதியை" கொட்டி வருகிறது. அதில் சேர்க்கப்பட்டுள்ள "பல்லாயிரம் இந்தி சொற்களை" அடிப்படை சொற்களாக பாவித்து அதற்கு ஈடான அல்ல்து  இணையான சொற்களை உங்கள் மொழியிலிருந்து கொண்டு வந்து சேருங்கள் என நடுவனரசு அழைப்பு விடுக்கிறது. அதற்கு என்ன பொருள்?   ஐநூறு ஆண்டுகளே கொண்ட செயற்கை மொழி இந்தியை, அடிப்படையாக கொண்டுதான் கணினி வழியில் தமிழ் உட்பட இரண்டாயிரம் ஆண்டிற்கு மேலே உள்ளமொழிகளும் இனி பயணிக்க வேண்டும் என்று பொருள். அந்த முறையில்தான் தங்களது இந்தி மொழியை "ஆட்சி மொழி" என்ற யாடத்தில் பலப்படுத்த முடியும் என்று அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி, ஒற்றையாட்சி அரசு தனது "நச்சு வலையை" விரித்துள்ளது. இந்த வலையில் நாம் சிக்க போகிறோமா? பிற இந்திய மொழிகளையும் சிக்க அனுமதிக்க போகிறோமா? கணித் தமிழ் வளர்ச்சியை அறிவியல் ரீதியாக எடுத்து செல்ல என்ன செய்யப்போகிறோம்?  இத்தகைய கேள்விகளுக்கு "விடை" காணத்தான், தமிழறிஞர்களும், மொழியறிஞர்களும், இந்த கூட்டங்கள் மூலம், வருகிற டிசம்பர் மாதம் பதினைந்தாம் நாள் சென்னையில் மாநாடு என்று திட்டமிட நம்மை அழைக்கிறார்கள். அழைத்தார்கள். நாமும் வியந்து போய் இந்த "போர்" ஒரு தேசிய இனத்தின் உரிமைப் போர் எனக் கண்டுகொள்கிறோம். 

காந்தியா? பிராந்தியா?


   இன்று காந்தி ஜெயந்தி என்றார்கள். அதாவது மோகன்தாஸ் கரம்சந்த் பிறந்த நாள். என்றும் இல்லாமல் இன்று கடற்கரை காந்தி சிலை அருகே முதல்வர் வரப்போகிறாராமே? என்று வெடிக்கி பார்க்க சென்றோம். எங்களுக்கு ஒரு தினாவெட்டு. முதல்வராவது அறிவித்த பத்து மணிக்கு வருவதாவது? என்று பதினைந்து நிமிடம் தாமதமாக சென்றோம். முதல்வர் விழா முடிந்து அதாவது அவர் மாலை அணிவிப்பது, ஆளுநர் மாலை அணிவிப்பது, சிலைக்குதான் முடிந்து போய் விட்டார்கள். நான்கள் செல்லும்போது, எதிரே அதிமுக கரை வேட்டிகள் வந்துகொண்டு இருந்தார்கள். ஆனால் எந்த ஆண்டும் இல்லாதவகையில் இந்த ஆண்டு நிறைய கூட்டம். வழமையாக வருபவர்கள் கூறினார்கள். ஒரு முப்பது குழந்தைகளுக்கு மோகன்தாஸ் போல வேடமிட்டு, அவர்களை துன்புறுத்தி ஒரு பள்ளி கூட்டி வந்திருந்தது. அப்போது ஒரு ஊடகத்தார் கூறினார். முன்னாள் பேரவை தலைவர் வந்து ஓரமாக நின்றாராம். வரை முதல்வர் கண்டுகொள்ளாமல்  போய்விட்டாராம்.

                 ஜி.கே.வாசன் வந்தார். வாசன் குழுவை சேர்ந்த ஞாதேசிகன், பீடர் அல்போன்ஸ், வேணுகோபால், முக்தா ஸ்ரீனிவாசன், கஜநாதன், இப்படி ஒரு படையே நிழலில் வாசனுடன் நின்றிருந்தது. அப்போது தகபாலு வந்தார். அண்ணே உங்களுக்காகத்ற்ற்ஹான் தலைவர் நிற்கிறார், என்று ஒரு குரல் பொய் சொன்னது.  அதற்கு பிறகு, அவர்கல்குழுவும் பொய் மாலை போட்டு முழக்கம் செய்தது. அடுத்து கோ.கா.மணி, ஏ.கே.மூர்த்தி, உட்பட பா.ம.க.கோஷ்டி. இப்படி பலருமின்று அதிக கூட்டம், வழக்கத்திற்கு மாறாக. அதுதான் டேஹ்ர்தல் காலம் என்று சொல்லிவிட்டோமே? பின்னாலிருந்து திடீரென ஒரு முழக்க குரல். இந்திய தௌஹித் ஜமாஅத் என்ற பச்சை கருப்பு கொடிக்காரர்கள் முழக்கம் போட, காவல்திரை அவர்களை மட்டும் உள்ளே வராமல் தடுக்க, என்னய்யா இது? எனப்பார்த்தால்,  "காந்தி தேசமா?பிராந்தி தேசமா?" என்று முழக்கங்களை பலகைகளிலும், முழக்கமாகவும் போட்டுக் கொண்டு ஒரு சிறு கூட்டம். மதுவில்ககை அமுல்படுத்தாத ஆட்சியாளர்களுக்கு, காந்திக்கு மாலை போட உரிமையில்லை என்று அவர்கள் முழங்கினர். ஓகோ, அவர்கள் முதல்வர் என்றும் இல்லாமல் மாலை போட வந்ததால் முழங்குகிரார்களோ?

திமுக செயற்குழு செயற்கரிய குழுவா?


     அக்டோபர் ஒன்றாம் நாள் திமுக தனது உயர்மட்ட செயற்குழுவை கூட்டியது. உள்ளே ஸ்டாலின் குழுவினர் எமார்.கே.பன்னீர்செல்வம், சுரேஷ்ராஜன், ஜெ.அன்பழகன் போன்ற மாவட்டங்கள் அதாவது மாவட்ட செயலாளர்கள் "காங்கிரஸ் உடன் உறவு வேண்டாம்" என ஒரு முகம் காட்டினர். காங்கிரஸ் மீது கடும் கோபம் உள்ள ஆ.ராஜாவ், அழகிரியோ, கனிமொழி குழுவினரோ அப்படி கிளப்ப வில்லை. ஏன்? சீ.பி.அய்.இடம் மாட்டிக் கொண்டுள்ள ராஜா, கனிமொழி போன்றோர் "நிரந்தரமாக " மட்டட்டுமே என்று ஸ்டாலின் குழு நினைக்கிறதா? அதில் ஜெ.அன்பழகன் என்ற தென் சென்னை மாவட்டம் " காவல்துறைக்கு பயந்து ஏன் பொன்முடியும்,நேருவும் ஓடவேண்டும்?" என்று சுயமரியாதை புராணம் பாடியது இன்னமும் வியப்பாக இருந்தது. திருச்சி சிவா "ராஜாவுடன், சிதம்பரமும் அலைக்கற்றை ஊழலில் விசாரிக்கப்பட வேண்டியவர்" ஆனால் சிதம்பரத்தை மட்டும் கிரீடம் கட்டி மகிழும் காங்கிரஸ் வேண்டாம் என்று கூறிய வார்த்தைகள், அவரது இயக்கப் படறி காட்டியது. 

              எது எப்படியோ, ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. அதில் முதல் தீர்மானம் "முத்தாய்ப்பானது".முன்னாள் நிதி அமைச்சக செயலாளரும், பதிமூன்றாவது நிதிக்குழு தலைவருமான, விஜய் கேல்கர் தலைமையில் நடுவணரசு ஒரு குழுவை மைத்து, உலக வங்கி நீண்ட நாட்களாக கூறிவரும் "மானியங்களை ரத்து செய்வது" சம்பந்தமாக ஆய்வு செய்ய கூறியிருந்தது. அந்த கேல்கர் குழு பரிந்துரை செபடம்பர் மூன்றாம் நாள் வெளிவந்தது.அதில் மக்களுக்கு, அதாவது ஏழைகளுக்கு, அதாவது நலிந்த பிரிவினருக்கு கொடுக்கும் "அனைத்து மானியங்களையும்" ரத்து செய்ய வேண்டும் என்று பரிந்துரை வழங்கி இருந்தது. அந்த கேல்கர் குழுவின் பரிந்துரை இந்திய மக்களுக்கு எதிரானது என்று தனது முதல்தீரமானத்திலேயே திமுக கொண்டுவந்து அதை ரத்து செய்யவேண்டும் என்று கோரியுள்ளது. இத்தகைய ஒரு தீர்ம்மனத்தை வேறு கட்சிகள் யாரும் பெரிதுபடுத்தாத பொது,  திமுக கொண்டுவந்தது ஒரு அதிசயம்தான். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு, மன்மோகன் கும்பல் செய்யும் உலகவங்கிக்கு ஆதரவான சேட்டைகளை  எதிர்த்து சோனியா கும்பல் மக்கல்வாக்குகளை பெற இப்படி ஒரு தீர்மானத்தை முன்மொழிய சொன்னார்களா? எவ்ன்பது நமக்கு தெரியவில்லை.   


    ஆனால் தான் போட்ட ஏழு தீர்மானங்களில், ஆறாவது தீர்மானம்தான் சிறப்பானது என்று திமுக அகமகிழவேண்டும். உச்சநீதிமன்றம  அலைக்கற்றை ஒதுக்கீடு தவிர வேறு  எந்த ஒதுக்கீட்டிலும், டெண்டர் முறையை புறம் தள்ளக் கூடாது என்று தீர்ப்பளித்ததை வழிகாட்டியாக கொண்டு, ஏற்கனவே அலைக்கற்றைகளை முதலில் வந்தவருக்கு முதலில் கொடுத்ததை உச்சநீதிமன்றமே ஏற்றுக் கொண்டு விட்டது. ஆகவே அப்போது கொடுத்த "அலைக்கற்றை உரிமங்களை" ரத்து செய்த உச்சநீதிமன்ற பழைய தீர்ப்பை எதிர்த்து  ஏற்கனவே நடுவணரசு நீதிமன்றத்தில் முன்வைத்த, "உரிம ரத்து" உத்தரவை திரும்ப பெற கொடுத்த மனுவை, திரும்ப பெற்றுள்ளது. அதை மீண்டும் மறுபரிசீலனை செய்து இப்போது, "ஏற்கனவே கொடுத்த உரிமங்களை ரத்து செய்ததை, மீண்டும் ஏற்றுக் கொள்ள" மனு செய்யவேண்டும் என்று ஒரு தீர்மானத்தை கலைஞர் போட்டுவிட்டார். அதற்கு பொருளென்ன? ஏற்கனவே நான்கள் ராஜா காலத்தில் "தயாநிதி ஆட்சியில் மறுக்கப்பட்ட டாடா விற்கு, ராஜா மூலம்  கொடுத்த உரிமங்களை மீண்டும் கொடுங்கள்" என்று கேட்பதை தவிர வேறு என்ன? டாடா விற்கு ஆதரவாக் தாத்தா பேசுவதுதானே இது? இதைத்தானே "கடைசியாக பையை விட்டு பூனை வெளியே வந்துவிட்டது" என்று கூறுவார்கள்?
இப்படியாக செயற்குழு செயற்கரிய குழு ஆனதே?