Monday, September 3, 2012

கலைஞர் கூற்றுப்படி நெடுமாறன்தான் ஈழப்போராளிகளின் சகோதர சண்டைக்கு காரணமா?


    இப்போது வன்னிப்போர் ஒரு தடங்களுடன் நின்றுள்ள நேரத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் "துவக்குகளை மவுனித்து" ஆயுதப்போரட்டத்திர்க்கு ஒரு தற்காலிக இடைவெளி கிடைத்துள்ள காலத்தில், தமிழீழ விடுதலைக்கான போர் உலகம் முழுவதும் ஒரு "கருத்துப் போராக" நடைபெற்றுவரும் சூழலில், அரசியல் களம் என்ற ஒரு விரிவான களம் ஈழப்போராட்டத்திற்கு உலக அரங்கில் கிடைத்துள்ள ஒரு வாய்ப்பில், போர்க்கால நடவடிக்கைகளில் நடந்த பல நிகழ்வுகள் பற்றி, போராளிகள் மத்தியில் ஒரு பரிசீலனை நடைபெறும் என்பது உண்மைதான். திமுக தலைவர் கலைஞர் அவர்கள், இந்த நேரத்தில் அனைத்து "பின்னடைவுகளுக்கும்" காரணம் புலிகள் மைப்புதான் என்ற தனது வாதத்தை "தவறாமல்" தொடர்ந்து முன்வைத்து வருகிறார். அதில்தான் அவரது "நெடுமாறன் மீதான வசுவுகளும்" வ்ருகின்றன.

             கடந்த களத்தில் நடந்தவற்றை நெடுமாறன் தமிழ் மக்கள் மத்தியில் வைக்கும் "அக்கறையால்" பலசெய்திகளை கட்டுரைகளாக எழுதுகிறார். அதில் கலைஞர் வழமையாக முத்திரை குத்தும் "சகோதர சண்டையும்" ஒன்று. அந்த சகோதர சண்டை என்ற "சொள்ளை" பயன்படுத்தும் கலைஞர்தான் அதுபோன்ற போராளிகள் மத்தியிலான "பகைமையை" தூண்டி விடுவதில் முக்கிய பங்கை ஆற்றினார் என்ற நெடுமாறனின் குற்றச்சாட்டு கலைஞரால் பொறுத்துக் கொள்ள கூடியது அல்ல என்பது உணமைதான். அதற்காக அப்படிப்பட்ட சகோதர சண்டைகளை தூண்டிவிட்டது நெடுமாறன்தான் என்ற குற்றச் சாட்டை வைக்கும் கலைஞர் இன்று தனது முரசொலி யில், உடன்பிறப்புக்கான கடிதத்தில், 
 1985 ஆம் அண்டு நடந்த சிலநிகழ்வுகளை வழக்கம் போல சுட்டிக் காட்டுகிறார்.   இதன்பிறகும் நாம் நமக்கு தெரிந்த சிலவரலாற்று உண்மைகளை கூறாமலிருக்க முடியாது.


                 அதாவது கலிஞர்--நெடுமாறன்--எம்.ஜி.ஆர்ட்.ஆகியோர் இடையே அந்த நேரத்தில் நடந்த சில நிகழ்வுகளை நாமும் வெளியே கூற விரும்புகிறோம். அவர்களுக்குள் நடந்த மாறுபட்ட கருத்துக்கள், முதலில் "குட்டிமணி-ஜெகன் " சம்பந்தப்பட்டது. அதாவது குட்டிமணியும், ஜெகனும், தமிழ்நாட்டில் பிடிபடுகிறார்கள். அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள், அவர்கள் இருவரையும் இலங்கை அரசின் கோரிக்கைப்படி, அந்த நாட்டிற்கு அனுப்பிவைக்கிறார். அந்த நேரத்திலும் இலங்கை-இந்திய அரசுகளுக்கு இடையே "கைதிகள் பரிமாடத்திர்க்கான" ஒப்பந்தம் எதுவுமே கையெழுத்து இடப்படவில்லை. அந்த நேரத்தில் இலங்கை அரசு கேட்டதற்காக அவர்களை அனுப்பி வைக்க வேண்டிய எந்த நிர்ப்பந்தமும் இல்லை. ஆனாலும் கலைஞர் தனது அதிகாரத்தில் அவ்ர்கள் இருவரையும் இலங்கைக்கு அனுப்பி வைக்கிறார். அவர்கள் இலங்கை சிறைக்குள் அடைக்கப்படுகிறார்கள்.1983 இல் இனக் கலவரம் வெடிக்கிறது. ஜூலை 23 ஆம் நாள் வெலிக்கடை சிறையில் அடைக்கப்ட்டிருந்த தமிழ் கைதிகளை சிங்கள காடையர்கள் சிங்கள ராணுவத்துடன் சேர்ந்து  சிறைக்குள்ளேயே அடித்து கோளை செய்கிறார்கள். குட்டிமணி, ஜெகன் இருவரும் கண்கள் பிடுங்கப்பட்டு "கொடூரமாக" ஓலை செய்யப்படுகிறார்கள். 

                        தமிழ்நாட்டில் பிடிபட்டவர்களை இலங்கைக்கு அனுப்பிய "துரோக செயலை" கலைஞர் செய்ததால்தானே, குட்டிமணியும்,ஜெகனும் கொடூரமாக கோளை செய்யப்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டு வருகிறது. தனது ஆட்சியில் தான் அவ்வாறு செய்ததை கலைஞர் மறுக்கிறார். நெடுமாறன் அந்த நேரத்தில் எம்.எல்.ஏ. வாக இருக்கிறார். சட்டமன்றத்தில் எழுப்பப்பட்ட அந்த கேள்விக்கு, கலைஞர் முன்னிலையிலேயே, முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். "கோப்புகளை " எடுத்து காட்டி குட்டிமணி, ஜெகனை" கலைஞர் ஆட்சிதான் இலங்கைக்கு அனுப்பி வைத்து என்று நிரூபிக்கிறார். சும்மா இருப்பார கலைஞர்? உடனடியாக் அன்றைய டெலோ இயக்க தலைவர்கா இருந்த ஸ்ரீ சபாரத்தனம் உதவியை நாடுகிறார். கலைஞர் இன்றுவரை மேற்கோள் காட்டும் "செல்வா மகன் சந்திரஹாசன்" அன்றே இந்திய வெளிவிவாகரதுறையின் உளவு துறையான "ரா" வுடன் நெருக்கத்தை கொண்டிருந்தவர். அவர் மூலம்தான் டெலோ மைப்பை உருவாக்க "ரா" அதிகாரிகள் முயற்சி எடுத்தனர். 

                 அதேசமயம் டெலோ தலிவராக இருந்த ஸ்ரீ சபாரத்தினம், குட்டிமணி ஜெகன், தங்கதுரை போலவே வல்வெட்டித்துறையை சேர்ந்தவர்தான். முதல் மூவரும் மீனவர் சமூக பின்னணி கொண்டவர்கள் என்றால், ஸ்ரீ சபா "வெள்ளாளர்" சமூக பின்னணி கொண்டவர். ஆனாலும், ஸ்ரீ அன்றைக்கு டால் ஸ்ரீ என்று அழைக்கப்பட்ட காலத்தில் அணித்து போராளி தலைவர்களுடனும் சேர்ந்து, ஈழ விடுதலைக்காக துணிந்து இஅர்ந்கியவர் என்பதை யாரும் மறக்கவில்லை. அனால் அந்த தலைவர்கள், இந்திய அரசியல் சூழ்ச்சிகளையும், தமிழக அரசியல்வாதிகளின் சூழ்ச்சிகளையும் அறிந்திருக்க வில்லை. அல்லது அவர்கள் தனகளத்து நலனிலிருந்து தொடங்கியே ஈழ விடுதலையைக் கூட நோக்குவார்கள் என்று அறிந்திருக்க வில்லை.  ரா மைப்பின் சூழ்ச்சிகளுக்கும், அரசியல்வாதிகளின் இந்திய சூழ்ச்சிகளுக்கும் விழுந்துவிடும் தன்மை அங்கே தெரிந்தது.

                  கலைஞரை எம்ஜிஆரின் அம்பலப்படுதலில் இருந்து காப்பாற்ற டெலோ தலைவர் ஸ்ரீ சபாரத்னமும், ராசுப்பிள்ளையும்  சேர்ந்து ஒரு அறிக்கை விடுகிறார்கள். அதில் குட்டிமணி, ஜெகன் தமிழ்நாட்டில் பிடிபடும்போது, அவர்களை "கடத்தல்காரர்கள்" என்றுதான் காவல்துறை கைது செய்கிறது. அவர்களும் தங்களை "விடுதலை போராளிகள்" என்று காட்டிக் கொள்ள வில்லை என்று அறிக்கை  விடுகிறர்கள். இது கலைஞர்  அவர்களால் ஏற்பாடு செய்து வெளியிடப்பட்டது என்பதை யாராவது மறுக்க முடியுமா? அதேபோல குட்டிமணி மனிவி  எழுதிய ஒரு கடிதமும் இதே போல க்ருத்துடன், "தேவி' வார இதழில் வெளியிடப்படுகிறது. இதுவும் கலைஞர்  ஏற்பாட்டின்  பேரில் எம்.ஜி.ஆர். தொடுக்கும்  அம்புகளை எதிர்கொள்ள எடுத்த  கேடயம் என்பதை யார் மறுக்க முடியும்?  1970 ஆம் ஆண்டிலேயே அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு  விழாவில், தன்னை எதிர்த்த "உதயகுமார்"என்ற மாணவனை காவல்துறையினர் அடித்து குளத்தில் போட்ட போது, உதயகுமாரின் தந்தையை வைத்தே தனது மகன் உடல் அல்ல என்று  கூற வைத்த "சித்தர்" அல்லவா கலைஞர் என்பதை அறிந்தவர்களுக்கு இந்த நிகழ்வும் புரியப்பட முடியும்.

            இத்தகைய சித்து விளையாட்டுகளால், தமிழக அரசியல்வாதி தன் "தோலை" காப்பாற்றிக் கொள்ள முயலலாம். ஆனால் இதுதானே போராளி இயக்கங்களைக் கொண்டே போராளி இயக்க தலைவர்களை  காட்டி கொடுத்ததை "நியாயப்படுத்தல்"செய்திருக்கிறார் என்பதை நாம் இன்றாவது புரிந்து கொள்ள மாட்டோமா? இப்படித்தானே சகோதர யுத்தத்தை அவரால் தூண்டி விட முடிந்தது? அதுமட்டுமல்ல கலைஞரே ஈழப்போராளிகளுக்குள்  சகோதர யுத்தத்ய்ஹ்தை தூண்டி விட்டது மத்திய ரசின் உளவு துறையான "ரா" தான் என்று கூறியிருப்பதை அவரே இப்போது ஏன் மறந்து விட்டார்? இப்படி பல விவகாரங்களையும் நாம் வரலாற்றில் லாசா வேண்டி வருமல்லவா?