Friday, August 24, 2012

செந்தூரனின் அத்தை சாவுக்கு கியூ பிரிவு பொறுப்பேற்குமா?


     செந்தூரன் என்ற இளைஞர் பூந்தமல்லி சிறப்பு அகதிகள் முகாமில், அகஸ்ட் 6 ஆம் நாள் தொடங்கி, "சாகும்வரை பட்டினி போரை" நடத்தி, அனைத்து ஈழத்தமிழர்களையும், செங்கல்பட்டு, பூந்தமல்லி முகாம்களில் இருந்து விடுதலை செய்து, பொதுவான அகதிகள் முகாமில் கொண்டு விட வேண்டும் என்று கோரிக்கையை வைத்துள்ளார். அந்த கோரிக்கையை ஆதரித்து பூந்தமல்லிமுகாமில் உள்ள மீதம் ஏழு ஈழத்தமிழர்களும், கடந்த ஐந்து நாட்களாக  அவருடன் பட்டினி போர் நடத்தி வருகிறார்கள். கடந்த சில நாட்களாக "தண்ணீர்" குடிப்பதைக் கூட செந்தூரன் நிறுத்தி  விட்டார். செங்கல்பட்டு முகாமில் 38  ஈழத்தமிழர்களும்,  பூந்தமல்லி முகாமில் 8 ஈழத்தமிழர்களும் இதுபோல அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலருக்கு சிறிய வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால் அனைத்து வழக்குகளிலும் அவர்கள் அனைவருமே நீதிமன்ற "பிணை" வாங்கி உள்ளனர். இத்தகைய சூழலில், வைகோ அவர்களுக்காக போராடி சிறை சென்றார். சீமான் போராட்டம் அறிவித்துள்ளார். கலைஞர் செந்தூரனை பட்டினி போரை நிறுத்துமாறு அறைகூவல் விடுத்துள்ளார். அந்த ஈழத்தமிழர்களை விடுதலை செய்யுங்கள் என்று அவர் கூறவில்லையே? என்பதே அவர்களுக்கு வருத்தம். 


           இப்படி தொடர் போராட்டத்தை தனக்காக மட்டும் இன்றி அனைவருக்குமாக நடத்தி வரும் சென்தொஓனை காண கொழும்பிலிருந்து, அவரது சித்தப்பா அருள்ராஜ், மற்றும் அத்தை கமலாதேவி ஆகியோர் சென்னை வந்தனர். அவர்கள் செந்தூரனை காண பூந்தமல்லி சிறப்பு அகதிகள் முகாமிற்கு சென்றனர். சித்தப்ப்பாவை ஆதாவது அருள்ராஜை நமது கியூ பிரிவினர் மறைமுக மிரட்டலின் மூலம் அச்சுறுத்தி உள்ளனர். அத்தை கமலாதேவி, செந்தூரன் பற்றி பூந்தமல்லி முகாம் வாசல் சென்று விசாரித்திருக்கிறார். பட்டினி போரில் இருப்பதால் அவரைக் காண முடியாது என தெரிவித்துள்ளனர். தண்ணீர் கூட குடிக்காமல் செந்தூரன் இருக்கிறான் என்று கேள்விப் பட்டதும் அந்த 60 வயது அத்தை கமலாதேவி அதிர்ச்சி ஆகிவிட்டார். அதுவே அவருக்கு நெஞ்சுவலியை கொடுத்து விட்டது. அப்படியே அவர் மரணமடைந்து விட்டார். ராமச்சந்திரா மருத்துவமனைக்கு எடுத்து சென்று மானத்தை மடர்வர்கள் உறுதி செய்து உடலை பெற்று கொண்டனர். மீண்டும் அவரது உடலை கொழும்பிற்கு கொண்டு செல்லல காவல்துறை அனுமதி பெற வேண்டும் என்று கூறி, மாநகர காவல்துறை அனையர் அலுவலகத்திற்கு கமலாதேவியின் உடலை கொண்டுவந்து அனுமதி பெற்றுள்ளனர். 

          மல்லை சத்தியா உடன் இருந்து உதவிகள் செய்துள்ளார். அதற்கு உதவிய ஒரு ஈழத்தமிழரான யோகா மாஸ்டரை கியூ பிரிவினர் மிரட்டி, அவரது பாஸ்போர்ட்டை பிடிங்கி வைத்துள்ளனர். இத்தகைய கொடுமைகள் செய்யும் கியூ பிரிவினர் நேரடியாக மத்திய அரசின்  வெளிவிவகார துறையின் உளவு துறையான "ரா" அதிகாரிகளின் உத்தரவுப்படியே நடக்கின்றனர் என்பது நமக்கு தெரிந்த செய்தியே. சென்ற திமுக ஆட்சியின் போது, உளவு துறை தலைமை அதிகாரி  ஜாபர்சேட்  மூலம், கியூ பிரிவினர் மத்திய அரசின் "ரா" கட்டளைகளை  ஏற்று, இந்த ஈழத்தமிழர்களை சிறப்பு அகதிகள் முகாம்களில் அடைத்தனர் என்பது இன்னமும் தொடர்கிறது. தமிழக அரசிற்கு கட்டுப்படாமல் இந்த கியூ பிரிவினர் தன்னிச்சையாக மத்திய அரசின் "ரா" அதிகாரிகளுக்கு அடிபநிவதால் ஏற்படும் "விபரீதத்தை" தமிழக மக்கள் தாங்க மாட்டார்கள். அதன்மூலம் வரும் சட்ட ஒழுங்கு கெடுதலையும், பதட்டத்தையும் தமிழக அரசின் மீது, "பழி" போட திமுக வும், காங்கிரசும் தயாராகி வருகின்றன. கியூ பிரிவு அதிகாரிகள் கமலாதேவியின் சாவுக்கு பொறுப்பேற்பார்களா ? 

                செந்தூரன் சென்ற மாதம் செங்கல்பட்டு முகாமில் "இருப்பத்தொரு" நாட்கள் பட்டினி போரை நடத்தியதால், இப்போது உடல் மியாவும் தளர்ந்து உள்ளார். அவரது உஅடளுக்கு வரும் அனைத்து தீங்கும் த்ஜமிழ்நாட்டு அரசியலில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தப்போகிறது. அதற்கும் கியூ பிரிவு பொறுப்பேற்க வேண்டும்.

புத்தர் எலும்பை காட்டினாரா? மகிந்தா எலும்பை காப்பாற்றினாரா?


     கவுதம புத்தரின் எலும்பை டில்லியில் உள்ள "தேசிய அருங்காட்சியகத்தில்" வைத்திருந்ததை, பவுத்த மத நம்பிக்கை உள்ள நாட்டு மக்களுக்கு உலகம் முழுவதும் கொண்டுபோய் "காட்டுவது" என்று ஒரு பழக்கம் வைத்திருக்கிறார்கள். அதுபோல இலங்கையில் உள்ள பவுத்த மத நம்பிக்கை உள்ளவர்கள் மகிழவும், "முப்பது" ஆண்டுகளுக்கு முன்பு காட்டினார்களாம். அந்த பழக்கம் தொடரலாம். வழிபாட்டு நம்பிக்கைகளில் அப்படி ஒரு பழக்கம் இருக்குமாயின் அதை யாரும்புரிந்து கொண்டாக வேண்டும்.அதேமுறையில் மன்மோகன்சிங் என்ற ஒரு இந்திய தலைமை அமைச்சர் கூறினார் என்றவுடன், இந்திய அரசின் மத்திய பண்பாட்டுத்துறை அமைச்சர் குமாரி செல்ஜா, அந்த எலும்புகளை கொழும்பு கொண்டு செல்வதும், அதை  இலங்கை அரசத் தலைவர் மகிந்தா வரவேற்பதும், இரு அரசுகளுக்கும் இடையிலான் அவர்கள் கூறும் தூதரக நல்லுறவின் வெளிப்பாடாக, நடக்கும் என்பது நமக்கும் புரிகிறது. பிறகு ஏன் அதை நாம் இப்போது எதிர்க்க வேண்டும்?

                       இது சாதரான விஷயம் அல்ல. புத்த பெருமானின் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களின் உணர்வுகளை அங்கீகரித்து , புத்தரின் எலும்புகள் என்று இந்தியாவில் காக்கப்படும் எலும்புகளை அருங்காட்சி அகத்திலிருந்து, எடுத்து ஒரு முக்கிய அமைச்சர் மூலமாக அதை இலங்கைக்கு எடுத்து செல்வதும் அங்கேயுள்ள அர்சத்ததலைவர் அதை வரவேற்று உபசரிப்பதும், இந்த நேரத்தில் சாதாரண நிகழ்வு அல்ல. அங்கே அந்த விழாவிற்கு திரண்டிருந்த சிங்கள பவுத்த நம்பிக்கை உள்ள பெரும் அளவிலான மக்கள் கூட்டமே அது சாதாரண நிகழ்வு அல்ல என்பதை கட்டியம் கூறும். அதாவது ஆள்வோர்மீது  மக்கள் நம்பிக்கை இழந்து வரும் காலங்களில் எல்லாம், ஏதோ ஒரு "மக்களது நம்பிக்கையை" அடிப்படையாக கொண்டு தங்களை அந்த மக்கள் மீது அதாவது தன் மீது நம்பிக்கை இழந்த மக்கள் மீது, மீண்டும்  நிறுவிக்கொள்வது என்பது உலக வரலாற்றில் முதன்முறையாக நடக்கும் செயல் அல்ல.   மக்களது இன, மொழி, கடவுள் மத நம்பிக்களைகளை "ஆள்வோர்" எப்போதுமே தங்களுக்கு சாதகமாக திருப்ப முயற்சி மேற்கொள்வார்கள். அதுதான் இலங்கையிலும் நடந்துள்ளதா?

                           இலங்கை தீவில் மகிந்தாவின் ஆட்சி தமிழின அழிப்பு போரை  வெற்றிகரமாக நடத்தி முடித்ததாக காட்டி, பெரும்பான்மை சிங்கள மக்களிடம் முதலில் நற்பெயர் வாங்கியது. அப்போதும் "பயங்கரவாதத்திற்கு எதிரான் போர்" என்பதாகத்தான் அதை பறை சாற்றி நற்பெயர் பெற்றது. போரை நடத்தியது  யார் என்ற கேள்விக்கு, மகிந்தாவின் குடும்பமா? அல்லது சரத் பொன்சேகா வகையறாவா ? என்ற கேள்வியும் சிங்கள மக்கள் மத்தியில் இருந்தது. அதுவே அரசத் தலைவருக்கான  தேர்தலில், மகிந்தாவா? அல்லது பொன்சேகாவா? என்று சர்ச்சையானது. அதில் மகிந்தா வென்ற பின், பொன்சேகாவிற்கு வளர்ந்துவரும் செல்வாக்கை கண்டு பயந்துபோன ராஜபக்சே குடும்பம் பொன்சேகாவை சிறையில் தள்ளியது. இன்று அமெரிக்கா தலையிட்டு பொன்சேகாவை விடுதலை செய்ய சொன்னபிறகே, மகிந்தா அவரை விடுதலை செய்துள்ளார். இந்த நேரத்தில், அமெரிக்கா பொன்சேகாவை ஆதரிக்க முயல்வதால், அதுவும் இந்திய அரசை கலந்துகொள்ளாமல் செய்வதால், டில்லி தனது பங்கிற்கு மகிந்தாவை தூக்கி பிடித்து சில வேலைகளை செய்துவருகிறது. 

                         அத்தகைய டில்லியின் "காய் நகர்த்தல்களில்" முதலில் "டெசோ மாநாடு" வரும் என்றால், அடுத்து வருவதுதான் "புத்தரின் எலும்புகளை" கொழும்பு கொண்டுபோய் சிங்கள பவுத்த மக்களிடம் காட்டுவது. இது சிங்கள பவுத்த மக்களிடம் "செல்வாக்கு இழந்துவரும்"மகிந்தாவிற்கு மீண்டும் மறுவாழ்வு கொடுக்க, சிங்கள பவுத்த அப்பாவி மக்களை மகிந்தா பக்கம் திருப்ப, இந்திய அரசின் தலைமை அமைச்சர் மன்மோகன்சிங் எடுக்கும் ஒரு முயற்சி. ஏற்கனவே மகிந்தா தனக்கு எதிர்ப்பு இருப்பதை அறிந்தே வேண்டுமென்றே, தனது  கடைசி லண்டன் பயணத்தை மேற்கொண்டு, அதில் தமிழர்களின் கடும் எதிர்ப்பை உலகறியச் செய்து, அதை "விடுதலைப்புலிகள் மீண்டும் உருவாகிறார்கள்" என்று கூறி சிங்கள அப்பாவி மக்களை ஏமாற்றி, அவர்கள் மத்தியில் ஒரு பயத்தை தோற்றுவித்து, அதன்மூலம், இழந்துபோன தனது செல்வாக்கை மீண்டும்  தக்க வைத்துக் கொள்ள முயன்றான் என்பது சமீபத்திய கதை. அதையே மீண்டும் இந்திய அரசின் நலன்களுக்காக மகிந்தவை " ஸ்டிக் அண்ட் கேரட் " என்ற குச்சியும், கேரட்டும் எனும் தத்துவத்தை பயன்படுத்த இந்திய அரசு ஒருபுறம் டெசோ மாநாடு, இன்னொரு புறம் புத்தர் எலும்புகளை காட்டுதல் என்று நடவடிக்கை எடுக்கிறது.
    
     ஸ்டிக் அண்ட் கேரட் என்றால், அதாவது குச்சியும், கேரட்டும் என்றால் என்ன? குதிரை வண்டிக்காரர் தான் புதியதாக வாங்கிய குதிரையை "வண்டியில் பூட்டி பழக்க" ஒரு தந்திரம் செய்வார். அதாவது குதிரையை பூட்டும்போது, அதற்கு முன்பு "தொங்கும் நிலையில்" ஒரு கேரட்டை கட்டிவிடுவார். அந்த கேரட்டை "கவ்வும்" நோக்கத்தில், குதிரை வண்டியை இழுத்துக் கொண்டு முன் செல்லும். அதை "துரிதப் படுத்த" ஒரு குச்சியை கையில் வைத்ஹ்டுக் கொண்டு, குதிரையை அடிப்பார். குதிரை வண்டியை இழுத்துக் கொண்டு வேகமாக ஓடும். இதைத்தான் ஆங்கிலேயர்கள் "குச்சியும், கேரட்டும்" என்ற பொருளில், "ஸ்டிக் அண்ட் கேரட்" என்று கூறுவார்கள். அந்த தந்திரத்தை இந்திய அரசு, இலங்கை அரசின் மீதும், பதிலுக்கு அதே ஆங்கிலேயர்களிடம் "பயின்ற" இலங்கை அரசு இந்திய அரசிடமும் காட்டுகிறது என்பதுதான் இதில் அடங்கியிருக்கும் தத்துவம்.

                        அதாவது அய்.நா.சபையின் மனித உரிமை கவுன்சிலில் அக்டோபர் மாதம் இறுதியில், இலங்கை பற்றிய மனித உரிமை பட்டியல் விவாதிக்கப்படும்போது, மூன்றில் ஒரு அமைப்பாளராக இந்திய அரசு அமரப்போவதை பயன்படுத்தி, பேரம் பேசுவது எனபது டில்லியின் தந்திரம். அதேசமயம் "விட்டேனா பார்" என்று மகிந்தாவும், இந்திய அரசின் பண்பாட்டு துறைக்கு தருவதாக கூறிய நூறு கோடி பெறுமான இடத்தை, சீனாவின் விமான நிறுவனத்திற்கு கொடுத்து, இந்திய அரசுக்கு எதிராக ஒரு காய் நகர்த்தலில், "ஸ்டிக்" எடுத்தும், இந்திய வணிக அமைச்சர் ஆனந்த சர்மா சென்றபோது, நூற்றெட்டு இந்திய முதலாளிகளுக்கு சிவப்பு கம்பளம் விரித்து,தனது "கேரட்" கொள்கையையும் காட்டிவிட்டது. அதுபோல மகிந்தாவிற்கு எழுந்துள்ள சிங்கள மக்களின் எதிர்ப்பை, "டெசோ எதிர்ப்பு" என்பதன்மூலம் மகிந்தாவிற்கு  ஆதரவாக ஒருபுறம் திருப்புவதிலும் இரண்டு கும்பலும் வெற்றி பெற்றுள்ளன. இப்போது பகிரங்கமாகவே, புத்தரின் எலும்புகளை காட்டி சிங்கள பவுத்த  மக்களை ஏமாற்ற, மன்மோகன்-மகிந்தா தந்திரம் பயன்படுத்த ப்டுகிறது என்பதை நாம் எப்போது உணரப்போகிறோ