Thursday, August 16, 2012

இரண்டு தமிழ் இளைஞர்களை கொன்ற சிறைச்சாலைகளை நெருப்பிடுவோம்.

இரண்டு தமிழ் இளைஞர்களை கொன்ற சிறைச்சாலைகளை நெருப்பிடுவோம்.
     இலங்கை தீவில் தமிழின அழிப்பை ஒரு இனவாத ப[ஓர் மூலம் பிராந்திய ஆதிக்கசக்திகளும், உலக ஆதிக்க சக்திகளும் கைகொடுக்க, சிங்கள பேரினவாத மகிந்தா கும்பல் பெரிய அளவில் செய்து முடித்தது.தமிழர் நிலங்களை சிங்களர் குடியமரவும், பன்னாட்டு மூலதனக் கம்பணிகள் ஆக்கிரமிக்கவும் சிங்கள-இந்திய-சீன ஆதிக்க சக்திகள் துணையோடு மகிந்தா அரசு செய்துவருகிறது.அதை மேற்பார்வை பார்க்க அமெரிக்கா சக்திகளுக்கு மஹிந்த ஆரசு இடம் தருகிறது. இத்தகைய நேரத்தில் சிறையில் வாடும் எமது இளம் உயிர்களை சிறைக்குள்ளே அவமதிக்கவும், அவமானப்படுத்தவும் செய்துவரும் சிங்கள காடையர் கூட்டத்தை "தட்டி" கேட்பவனே "மனமுள்ள" தமிழன் என அடையாளம் கண்ட சிங்கள சிறுநரிக் கூட்டம், சிறைக்குள்ளே அந்த இளைஞர்களை கொன்று குவிக்கிறது. இதுதான் இன்றைய உயர்ந்தபட்ச போர்குற்றம். 

                     இத்தகைய போர்க்குற்றத்தை தமிழ்நாட்டை விட, சரியாக உணர்ந்தவர்கள் ஈழத்தமிழர்களே என்பதை நிரூபிக்கும் வண்ணம் இப்போது, இதுவரை எழுந்து அரசியல் போப்ராட்டன்களை நடத்ஜ்த தயங்கிய தமிழினத்தை அந்த இறந்த இளைஞர்களின் உடல்கள் 'தட்டி" எழுப்பியுள்ளன. "டெல்டுக்சன்,நிமலரூபன்" இருவரது இறுதி பயணத்திலும் சரி, அதற்கு நியாயம் கேட்க "யாழ்ப்பாண" பேருந்து நிலையம் முன்னாள் ஆகஸ்டு 15 ஆம் நாள் நடைபெற்ற ஆர்ப்பட்டதிலும் சரி, மீண்டும் தமிழர்கள் யாழ்ப்பாணத்திலேயே அணிதிரள்கிறார்கள், அரசியல்ரீதியாக அணிசெர்கிரர்கள், ஆர்ப்பாட்டம் நடத்துகிறர்கள். இதுதான் "தமிழீழத்திற்க்கான" அரசியல் ஆர்ப்பாட்ட அணிதிரளல். ஆகவே அந்த இரண்டு தமிழ் இளைஞர்களின் "படுகொலைகளை" உலகறிய செய்ய உலகத் தமிழர்கள் "ஆண்க்கான்கே" அணிதிரளுங்கள். ஆர்ப்பரியுங்கள். சிறைக்குள்ளும் கொடுமையா? என கேள்வி எழுப்புங்கள். அது அய்.நா. மட்டுமின்றி, உயலகச் சமூகத்தின் "செவிப்பறைகளை" கிழிக்கட்டும். .  .