Monday, July 30, 2012

சென்னை ஆர்ப்பாட்டம் சிவந்தனின் கோரிக்கையை தாண்டி சென்றது.


      ஞாயிறு அன்று மாலை சென்னையில் "உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்" என்ற புதிய அமைப்பிலிருந்து இளைஞர்கள் வள்ளுவர் கோட்டத்தில் நடத்திய ஆர்ப்பாட்டம் புதிய செய்திகளை விவாதத்திற்கு கொண்டு வந்தது. அதில் அன்றைய நாள் அதாவது ஜூலை 29 என்ற நாளின் முக்கியத்துவம் பேசப்பட்டது. அன்றைய நாள் "இருபத்தைந்து ஆண்டுகளுக்கு" முன்பு  "துன்பத்தை" ஏற்றுமதி செய்த நாள் என்பதை நினைவு கூறினார்கள். அந்த துன்பத்தின் பெயர் "இந்திய ராணுவம்" என்று வர்ணிக்கப்பட்டது. 1987 ஆம் அண்டு இதே நாளில்தான்  "இந்திய அமைதி பாதுகாப்பு படை" என்ற பெயரில் ஒரு இந்திய மிதி கொல்லும் படை, ஈழத்திற்கு, வடக்கு மாகனத்திர்க்கும் அனுப்பிவைக்கப்பட்டது. அது ராஜீவ் காநதி என்ற ஒரு மாபெரும் "சிந்தனையாளரின்" செயல்பாடு. 

              அவர் கையெழுத்திட்ட ஒரு ஒப்பந்தத்தை செயல்படுத்த, ஈழத்தமிழர்கள் மத்தியில் உள்ள போராளிகளின் கைகளை "நிராயுத பாணியாகக" சிங்களத்தால் முடியாது என்பதை உணர்ந்து, அதற்காக "சீக்கிய, மராத்திய" படைகளை இந்திய ரானுவத்திளிருட்ன்ஹு "பொறுக்கி" எடுத்து, இலங்கை தீவிற்கு அவர் அனுப்பிவைத்த நாள். அந்த நாளை குறிப்பிட்டு எழுதும், இந்திய ராணுவ தளபதி ஹரிஹரன் ஜூலை 28  ஆம்நாள் "தி ஹிந்து" நாளேட்டில் ஒரு கட்டுரை வடித்துள்ளார். தமிழ் டேஹ்ரியாத இந்தியப்படைதான் "ஆக்கிரமிப்பை" அஞ்சாமல் "தமிழ் பகுதிகளில்" செய்யமுடியும் என்ற இந்திய "தன்ம்திரம்" பலித்தது. அந்த கட்டுரையில் ஹறிஹரன் குறிப்பிடும்போது  "ராணுவ தலையீடு" என்ற சொள்ளை பயன்படுத்துகிறார். அதாவது அவர் அமைதியை ஏற்படுத்த சென்ற படை என்று " சான்றிதழ்" கொடுக்கவில்லை. அதுமட்டுமின்றி, 1971  இல் இதே போன்று இந்திய ராணுவம் "கிழக்கு பாகிஸ்தான்" பகுதிக்குள் நுழைந்தது என்பதை அவர் ஒப்பிடுகிறார். அதில் கிழக்கு பாகிஸ்தானில், இந்தியப்படை பாகிஸ்தான் ராணுவத்தை எதிர்த்து நுழைந்தது என்கிறார். அதை இலங்கை சாகசத்திற்கு ஒப்பிடும்போது, இலங்கையின் "வடக்கு,கிழக்கு" மாகாணங்களில் இருந்த "ஈழப்போராளிகளை" இல்லாமல் செய்ய என்றும் குறிப்பிடுகிறார். அந்த "டேஹ்ளிவு" நமது அரசியல்வாதிகள் பலருக்கு இல்லாமல்போனதுதான் விசித்திரம்.

                    அப்படியானால் 1987 இன் இந்தியப்படையின் இலங்கை நுழைவு, ஒரு "ஆக்கிரமிப்பே" என்பது புரியும்.அதன் இருபத்தைந்து ஆன்டுகள் நிறைவுறும்போது, அந்த கொடுமைகளை நமக்கு நினைவு படுத்தும் விதத்தில் எழுதுகிறர ஹரிஹரன். யார் இந்த ஹரிஹரன்? அவர்தான் இந்திய அமைதி காக்கும் படையின், "ராணுவ உளவுத்துறை தலைவர்". அதனால் அந்த விவகாரத்தை அவர் எழுதும்போது, அதுவும், சென்னையின் ஆங்கில இதழில் எழுதும்போது, அதுவும், "ராணுவ தலையீடு" என்று எழுதும்போது, அந்த அகத்துறை முக்கியத்துவம் பெறுகிறது. ஏன் என்றால் அவரது "ஆலோசனையின்"பேரிலேயே சமீபத்தில், "விடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிக்கப்பட்டது". கிழக்கு பாகிஸ்தானை விடுதலை செய்ய இந்தியப்படை உதவியதை, அதன்மூலம் "வங்காள தேசம்" உருவாக்கியதை, அவர் இலங்கை தீவில் நுழைந்து, தமிழர் படையை நிராயுதபாணியாக்க முயன்றதை ஒப்பிடுகிறார். முன்னதில் வெற்றி என்றும், பின்னதில் "தோல்வி" என்றும் குறிப்பிடுகிறார். அதனால்தான் இன்றுவரை "புலிகளின் தடைக்கு" எழுகிறார் போலும்?
                    
                   அதன்மூலம் இந்தியப்படைதான் ஈழத்தமிழர் மீதான முதல் "இன அழிப்பு போரை"நடத்தியது என்பதை மரிமுகமாக ஒப்புக்கொள்கிறார். ஆகவே இந்திய அரசுதான் முதல் இன அழிப்பு போரை 1987 இலேயே "தொடங்கியது" என்பதையும், அதன்பிறகே ராஜபக்சே, "இன அழிப்பு போரை" நடத்தினான் என்பதையும் உலகத் தமிழர்கள் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும். அந்த நினைவை அவர்கள் கொண்டாடும்போது, நாம் நினைவு படுத்தி பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது. இதை இளைஞர்கள் நடத்திய  அந்த சென்னை ஆர்ப்பாட்டம் சுட்டி காட்டியது, உண்மையிலேயே "சிறப்பாக" இருந்தது. ஆகவே  லண்டனில் "சிவன்தான்" எப்படி தன் நாட்டு "அதிபர்" தங்கள் மக்களையே "இன அழிப்பு" செய்துவிட்டு லண்டன் வருகை செய்வதையும், இனவெறி இலங்கை ஒலிம்புயக் போட்டிகளில் விளையாட தகுதி அற்றது எனபதை சுட்டி காட்டுகிறாரோ, அதேபோல இந்த தமிழ் இளைஞர்கள், சென்னையில் இருந்து கொண்டு, அததகைய ஒரு இன அழைப்பு போரை தங்கள் இந்திய அரசு செய்ததை "நினைவு" படுத்தினார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. 

             அடுத்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மதிமுக மல்லை சத்தியா, இயக்குனர் புகழேந்தி தங்கராஜ், ஓவியர் வீர சந்தானம, நடிகரும், இயக்குனருமான களஞ்சியம், தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சியின் தலைவர் பேராசிரியர் தீரன், பெரியார் திராவிட கழக அன்பு தனசேகரன்,ஆகியோர் இங்கே இரண்டு வாரம் கழித்து நடத்த இருக்கும் "மாநாடு என்ற கூத்தை" பற்றியும் சுட்டாமல் இல்லை. அந்த டெசோ மாநாடு நடத்த கலைஞர் முன்வைத்துள்ள " தீம் பேப்பர்" என்ற கருத்து தாள்" , தெளிவாக "வச்டக்கு-கிழக்கு மாகாண அதிகபட்ச சுயாட்சி"பற்றி குறிப்பிடுகிறது என்பதையும் ஆர்ப்பாட்டத்தில் அம்பலப்படுத்தினார்கள். அந்த தீம் பேப்பரை "தயாரித்து" கொடுத்தது இந்திய வெளிவிவகார  துறையின், உளவு துறையான "ரா" என்பதையும் அங்கே தெளிவு படுத்தினார்கள். அந்த "ரா" மைப்பிர்க்கு தொடர்ந்து  முன்னாள் ராணுவ தளபதி ஹரிஹரனும், முன்னாள் சென்னை பலகலைகழக அரசியல் துறைத்  தலைவர் பேராசிரியர்  சூரியனாரயணனும், " திங்கு டான்க் " என்ற "சிந்தனை வங்கிகளாக" செயல்படுகிறார்கள் என்பதையும் எடுத்து சொன்னார்கள். அதனால் "டெசோ" என்பது ஒரு "ரா" அமைப்பின் வழிகாட்டலே எனபது தெளிவானது.அதனால் கலைஞர் "தமிழீழம்"கனவு வைத்திருக்கிறாரா? இல்லையா? என்பதோ, அதை தீர்மானத்தில் கொட்னுவருகிறாரா? இல்லையா? என்பதோ விவாதமே இல்லை என்றும், டெசொவின் தீம் பேப்பர் தெளிவாக "ராஜிவ்காந்தி-ஜெயவர்தனே ஒப்பந்தத்தை" ஒட்டிய  "அதிகபட்ச சுயாட்சிதான்" பேசுகிறது என்பது பற்றியும், நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

                   இந்த நேரத்தில் ஒரு முக்கிய  அறிக்கை ஈழத்து கல்வியாளர்கள் "நூறு பேர்" கையெழுத்திட்டு வெளிவந்துள்ளது. அதில் அவர்கள் "எப்படி ஒரு ஒற்றையாட்சி ரசில், பிராந்திய கவுன்சில்கள்" செயல்பட முடியும்? என்றும், ஆகவே அவடரின் டேஹ்ர்தல்களை புறக்கணிக்க வேண்டும் என்றும், "வடக்கு-கிழக்கை" தமிழர் தாய் நிலமாக அங்கீகரிக்கும் ஒரு அரசாட்சிதானே வேண்டும் என்றும், எழுதியிருக்கிறார்கள். இத்தகைய பிரச்சனைகளை "தான் டெசொவில்' விவாதிப்பேன் என்று கலிஞர் கூறுகிறாரா? அல்லது அங்குள்ள தமிழ் மக்களுக்கு உடனே உணவும், உறைவிடமும் தேவை என்பதால் அதைமட்டுமே விவாதிக்கும், "தொண்டு நிறுவனம்" போல நடத்துவேன் என்கிறாரா? ஹரிஹரன் கூட தனது கட்டுரையில் தமிழருக்கான "அதிகார பகிர்வு" பற்றி பேசுகிறார். அதற்கு காரணம் இப்போது இலங்கை விசயத்தில் இதுவரை டில்லியை கலந்துய் செய்துவந்த வாஷிங்க்டன் இப்போது, டில்லியை கை கழுவி விட்டுவிட்டு, கொழும்புடன் குலாவி வருகிறது என்ற டில்லியின் கோபமே ஹரிஹரன் கட்டுரை என்பதும் நமக்கு புரிய வேண்டும். 


            அதையும் தாண்டி, "வாக்கு கொடுத்த" மன்னார் மாவட்ட சம்பூர் அனல் மின் நிலையத்தை இந்தியாவிற்கு கொடுக்காமல், பாகிஸ்தானிற்கு கொடுக்க கொழும்பு எத்தனித்து விட்டது என்பதும் "ரா" அமைப்பை எரிச்சலூட்டி, அதுவே "டெசொக்களை" உருவாக்க வழி வகுத்திருக்கும். ஆனாலும் அய்.நா. சபையின், மனித உரிமை கவுன்சிலில், கொண்டுவரப்பட்ட  "இலங்கை தீர்மானம்" அடுத்த கட்டத்திற்கு, நவன்பர் கூட்டத்தில் வார இருக்கிறது. அப்போது இந்திய ரசுதான் அந்த கூட்டத்திற்கு "தலைமை" தாங்க இருக்கிறது. அதையே வாய்ப்பாக வைத்து இந்திய அரசு 'சிவசங்கர் மேனன் பயணம்" போன்ற ஒன்றாக "டெசோ" மாநாட்டையும் ராஜபக்சே அரசிடம் "பேரம்" பேச பயன்படுத்துகிறது என்பது மிகையல்ல. ஆகவே தமிழர்களே "டெசோ" எச்சரிக்கை மணியை உலகம் முழுக்க கொண்டு செல்லுங்கள்.