Saturday, July 28, 2012

உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் இன்று சென்னையில்

உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் இன்று சென்னையில் ஊடகவியலாளர்களின் கூட்டத்தை நடத்தியது. 


அதில் இயக்குனர் புகழேந்தி, உ.த.பா.இ.அமிபாளர்கள் சூரியா, ராஜா, ஸ்டாலின், அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்கத் தலைவர் எஸ்.ஏ.மகேஷ், வேல்முருகன் கட்சியை சேர்ந்த முன்னாள் ச.ம.உ. காவேரி,ஆகியோர் கலந்துகொண்டனர்.இன்று காலை நடந்த ஊடகவியலால்கள் கூட்டத்தில் நாளை ஞாயிறு  மாலை நாலு மணிக்கு சென்னை வள்ளுவர் கூட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த இந்த அமைப்பு அறிவித்தது. எதற்காக இந்த நாளை தேர்வு செய்தீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டபோது, 1987 ஆம் ஆண்டு இதே ஜூலை 29 ஆம் நாள்தான் "இந்திய அமைதிப்படை" என்ற பெயரில் இந்திய அரசின் ஆக்கிரமிப்பு போர் ஈழ மண்ணில் தொடங்கியது என்றும் அது நடந்து " இருபத்தைந்து" ஆண்டுகள் நிறைவு ஆகிவிட்டன என்றும், "முதல் இனப்படுகொலையை" ஈழத்தமிழர்கள் மீது அப்போது தொடங்கியது இந்தியப்படைதான் என்றும், அதற்கு பிறகே ராஜபக்சே அரசு இன அஹிப்பை செய்தது என்றும், அதனால் ராஜபக்சேவின் நாட்டு வீரர், வீராங்கனைகளை லண்டன் அனைத்து நாட்டு ஒலிம்பிக் போட்டியில் விளையாட அனுமதிக்க கூடாது என்ற கோரிக்கையை, வைத்து நடத்தும் ஆர்ப்பாட்டத்தை அந்த முதல் சோக நாளிலியே வைத்துள்ளோம் என்றும் அந்த மைப்பின் ஒரு ஒருங்கிணைப்பாளரான ராஜா ஸ்டாலின் கூறினார்.

சென்னையிலும் லண்டன் அனைத்து நாட்டு ஒலிம்பிக் ஆட்டத்திற்கு கோரிக்கை


          சென்னையில்  தமிழின இளைஞர்கள் ராஜா ஸ்டாலின் மற்றும் சூரியாவின் நண்பர்கள் இணைந்து ஒரு புதிய அமைப்பை ஏற்ப்படுத்தி உள்ளனர். அதற்கு " உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்" என்று பெயரிட்டுள்ளனர். இந்த இயக்கம் ஐநூறு இளைஞர்கள் அம்பத்தூரில் கூடியபோது உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அம்பத்தூரில் த்ஜோடன்கிய இந்த இளைஞர்களது இயக்கம், இன்று சென்னை மையப்பகுதிக்கு வந்துள்ளது. தனது சமூக, அரசியல், இன பயணத்தில், இந்த இயக்கம் நாளை சென்னை பத்க்திரிகையாளர் மன்றத்தில் சேப்பாக்கத்தில் ஒரு "ஊடகவியலாளர் கூட்டத்தை" நடத்த திட்டமிட்டுள்ளது. அந்த கூட்டத்தில் லண்டனில் நடக்கும் அனைத்து நாட்டு ஒலிம்பிக் ஆட்டத்திற்கு சில கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள். ஏற்கனவே லண்டனில் ஈழத் தமிழ் இளைஞர் சிவானந்தா அனைத்க்து நாட்டு ஒலிம்பிக் போட்டிக்கு, "போர்க் குற்றங்களில்" ஈடுபட்ட இலங்கை சிங்கள அரசின் பங்களிப்பை தடை செய்யவேண்டும் என்று கோரியும், காமன்வெல்த் நாட்டு வரிசையிலிருந்து இலங்கையை, இங்கிலாந்து அரசு நீக்க வேண்டும் என்று கோரியும், ஐந்து நாட்களாக பட்டினிப்போர் நடத்தி வருவது இந்த சென்னை இளைஞர்களை அதே கோரிக்கை மீது போராட தூண்டியுள்ளது. ஆகவே இவர்கள்  , ஞாயிறு அன்று சென்னை மையப்பகுதியில் உள்ள "வள்ளுவர் கோட்டத்தில்" ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளனர். அதற்கு முன்பு இந்த செய்தியின் நியாயத்தை பொதுமக்களுக்கு  எடுத்து சொல்ல சனிக்கிழமை காலை பதினோரு மணிக்கு ஊடகவியலாளர் சந்திப்ப 


                    இந்த இளைஞர்களது முன்முயர்ச்சியை புரிந்துகொண்ட, பல அரசியல், சமூக, பண்பாட்டு தலைவர்கள் அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, "ஏன் அனைத்து நாட்டு ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை சிங்கள அரசை தடை செய்யவேண்டும்?" என்பதுபற்றி விளக்க . அவர்களில் திரைப்பட இயக்குனர்கள்  மணிவண்ணன், புகழேந்தி தங்கராஜ், , மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் மலை சத்தியா, பெரியார் திராவிடக் கழக , தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சி { நிறுவனர்-வேல்முருகன் ] , தலித் தலைவர் ரேவதி நாகராஜ், ஆகிய இந்தியப் பாரம்பரிய மீனவர் சங்க தலைவர் எஸ்.ஏ.மகேஷ், , தமிழக முன்னேட்டிற கழகம் அதியமான்,மற்றும் உலக தமிழர் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த சூரியா, ராஜச்டலின் ஆகியோர் கலந்து கொள்க. இது தமிழக இளைஞர்கள் இடையே  ஒரு புதிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது..