Wednesday, July 25, 2012

மிரண்டாரா? மிரட்டுகிறாரா? கலைஞர் பற்றிய ஒரு ஆய்வு.


     நாம் கலைஞர்  சிதம்பரத்தின் டில்லிகார தர்பார் மிரட்டலுக்கு பயந்துதான் டெசோ மாநாட்டில் "தமிழீழம்" தீர்மானம் இருக்காது என்று கூறுவதும், தமிழர்களிடம் தனிமைப்படுவது கண்டு மிரண்டு, இல்லை, இல்லை நான் தமிழீழத்தை இன்னமும் கனவாக கொண்டுல்லீன் என்று மாற்றி, மாற்றி, கூறுவதும் செய்கிறார் என்றுதான் எண்ணிவந்தோம். ஆனால் அதை கலைஞரின் சீடராக குடும்ப ரீதியில் அன்றிலிருந்து, இன்றுவரை இருந்தவரான ஒரு வழக்கறிஞர் கடுமையாக மறுக்கிறார். தான் கலைஞரை அன்று முதளின்ருவரை கவனித்து வருவதாகவும், அவர் மிரளவில்லை, நம்மை மிரட்டுகிறார் என்றும் வர்ணிக்கிறார். எப்படி? என்று நாம் கேட்டால், ஒரு வரலாற்றையே அவர் நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறார். 

                  முதலில் கலைஞருக்கும், ப.சிதம்பரத்திற்கும், இன்று உள்ள உறவு ஒருவரை ஒருவர் "மிரட்டும்" நிலையிலில்லை என்கிறார் அப்படியானால் இதுபோல இருக்கிறது என்ருய் கேட்டால், அது கலந்து ஆலோசிக்கும் நிலையில் இருக்கிறது என்கிறார். அதாவது இரண்டு பேருமே தமிழீழத்தை போருத்தவரியிலும், விடுதலை புலிகளை பொருத்தவரையிலும், ஒரே கருத்து கொண்டவர்கள்  என்பது அவரது வாதம்.இது மறுக்க முடியாத ஒன்றுதான். . தமிழீழம் என்ற சொல் இப்போது யாரால் உரைக்கப்பட்டாலும்  நாம் அவர்களை உற்று பார்த்து உண்மையிளுரைக்கிரார்களா? அல்லது தமிழ்நாட்டு மக்களை கவர உரைக்கிரார்களா? என்று காணவேண்டிய நேரம்.ஏன் என்றால் அங்கே ஈழத்தில் கருவி ஏந்தி வெற்றிகரமாக போராடி, வன்னி பகுதியையே விடுதலை செய்து "தமிழீழ அரசாங்கத்தை ஏற்படுத்தி, புலிகள் தலைவர் உலக வரலாடறி படைத்த காலத்தில், கடல் தாண்டி இருந்து கொண்டு "தமிழீழம்" பேசினாலும் அவர்கள் அந்த மண்ணில் உண்மையாக நிலைத்திருக்கும் ஒரு தமிழீழத்தை ஆதரிக்கிறார்கள் என்றே பொருள்படும். அனால் இன்று உள்ள சோக நிலையில், அதுவும், கடல் தாண்டிய மண்ணில் இருந்துகொண்டு தம்ஜிஹீழம் பேசினால், அது வேற்று முழக்கத்திற்காகவும் பேச முடியும். ஆகவே பேசுபவர்கள் "யார்" என்ற கண்காணிப்பு அவசியம் தேவைப்படுகிறது.

                      அதிலும் நிதர்சனமாக் இருந்த நிலைத்து இருந்த தமிழீழ மண்ணில், சிங்க பேரினவாத ராணுவத்தை இறக்கிவிட்டு, தமிழீழ மண்ணை அந்நியனுக்கு காட்டிக்கொடுக்க கடல் கடந்த நாட்டில் இருந்துகொண்டே "சாதித்து" காட்டியவர்கள் தமிழீழம் பேசினால் சந்தேகப்படாமல் எப்படி இருக்க முடியும்? கிளிநொச்சியில் ஒரு சுதந்திர ராசாங்கம். அதில் தமிழீழ தேசியத் தலைவருக்கு தலைமை அலுவலகம். அருகே வயல்வெளிகளில், தமிழீழ விவசாயிகள் உழுது, பாடுபட்டு, நெல் வித்தைத்து, வழமையான விவசாய பூமியாக அதை ஆக்கி, தம்ஜிஹீழ மக்களுக்கு சோறு கொடுத்த சூழல். அந்த விளை நிலங்களுக்கு விவசாயம் செய்ய கடன் கடுக்கும் ஒரு தமிழீழ வங்கி. சிங்கள ராணுவத்தை தாண்டி, "தாண்டிக்குளம்" எல்லையில், ஒரு "கடவு சீட்டு" பெரும் அலுவலகம்.அங்கே துவக்கு ஏந்திய இளம்புலிப்படை. கிளிநொச்சிக்கும், முல்லை தீவிற்கும், யாழிலிருந்தும் மற்ற  மாவ்ட்டங்களிளிருந்தும், கிளம்பி சென்று தமிழீழ மாநாகர்களுக்கு கல்வி கற்று கொடுக்கும் ஆசிரியர்காளன ஆண்,பெண் "வாத்திகள்". அவர்களை வழிநடத்த ஒரு தமிழீழ கல்வித்துறை. சாலைகளை பராமரித்து, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், சட்டம் ஒழுங்கை சீர் செய்யவும், ஒரு தமிழீழ காவல்துறை. இப்படி ஒவ்வொரு துறையையும் கட்டி ஆண்ட ஒரு தமிழீழ அரசாங்கம். அப்படிப்பட்ட அரசாங்கத்தை "அழித்து விட்டு" இப்போது, எப்படியடா தமிழீழம் பேசத் துணிந்தாய்? இதுவல்லவோ தமிழனின் கேள்வி.


                         உலகமே அதிசயிக்கும் வண்ணம் தமிழீழ அரசாங்கத்தை கட்டிக் காத்த எங்கள்  த்மிழீழ தேசியத் தலைவரை அங்கீகரிக்காமல் எந்த "வாயால்" நீ தமிழீழ அரசாங்கம் பற்றி பேசுகிறாய்? என்று தமிழன் கேட்க மாட்டானா? ஆகவே அந்த கலைஞர் இன்று தமிழீழம் பற்றிய தீர்மானம் கொண்டுவராமல் இருக்கும் முடிவு, பயந்து அல்ல, நம்மை பயமுறுத்தவே என்கிறார் அந்த உடன்பிறப்பு. அதனால்தான் அவர் மிரள வில்லை, நம்மை மிரட்டப் பார்க்கிறார் என்று விவரிக்கிறார். சிதம்பரமும், கருணாநிதியும் இணைந்து அரைமணிநேரம் கலந்து பேசி, அதன்பிறகு, மறுநாள் "தமிழீசம் தீர்மானம் வராது"என்று ஊடகவியலாளர்களை அழைத்து நிதானமாக ஒரு தலைவன் சொல்கிறான் என்றால் அது இருவரும் திட்டமிட்டு தமிழ் மக்கள் மீது நடத்தும், "உளவியல் போர்" இல்லையா? என்பதே அவரது வாதம். . கலைஞரே டில்லியின் "புலிக்கு தடை" என்ற சட்டத்தை கண்டு மிரண்டுவிட்டார், அகவே உடன்பிறப்பே, நீயும் மிரண்டு விடு, என்றும், ஆகவே வைகோவிற்கும், சீமானுக்கும், எந்த நேரமுமந்த சட்டத்தின் கொடுவாள் பாயலாம் என்பதால், தமிழர்களே நீங்களும் இப்போதே பயந்து விடுங்கள் என்று உரைப்பதை புரிந்துகொள்ள வில்லையடா? என்று அந்த நண்பர் கேட்கிறார்.

                ஆகா.எதனை பெரிய விளக்கம். அந்த எம்மாற்றி வரும் தலைவனை சரியாக புரிந்து கொண்ட விளக்கம். இதுபோலத்தானே இதே தலைவர், எம்ஜி.ஆர். ஆட்சி காலத்தில், மதுரையில் ரேஸ் கோர்ஸில் நடத்திய டெசோ மாநட்டில், வாஜ்பாய், ஏன்.டி.ஆர். முன்னிலையில், முழக்கம் போட்டு காவலர்களுக்கு எதிராக கொந்தளித்த தந்து கட்சி தொண்டர்களை பார்த்து, மைக்கை பிடித்துகொண்டு, "உங்களை காவல்துறையிடம் சொல்லி அடிக்க சொல்லுவேன்" என்று பகிரங்கமாக மிரட்டினார். இப்போதும் டெசோ மான்மாடு என்று வந்தவுடன் அந்த "புத்தி" அதாவது உளவுத்துறை, காவல்துறை சார்ந்த புத்தி மீண்டும் வந்து விட்டதால், தமிழீழ தீர்மானத்தை திரும்ப பெறுவதாக பயம் காட்டி தொண்டர்களை மிரட்டுகிறாரே? அப்படி தமிழர்களை மிரட்டினால் யாரும் இங்கே"தமிழீழம்"பற்றி பேச மாட்டர்கலேன்ரும், அதனால் தமிழ் வாக்காளர்கள் மத்தியில் வருகிற நாடாளுமன்ற தேர்தல்  நேரத்தில்,:ஈழம்" ஒரு விவாதப்பொருளாக ஆக்கப்படாமல் இருக்குமெனவும் அந்த இரண்டு "மேதைகளும்" எண்ணித்தான் இப்படி ஒரு கரடியை அவிழ்த்துவிட்டுள்ளார்.