Sunday, April 8, 2012

சோ ராமசாமிக்கும அவரது அடியாட்களுக்கும் காவல்துறை முறைவாசல் செய்யலாமா?

சோ ராமசாமிக்கும அவரது அடியாட்களுக்கும் காவல்துறை முறைவாசல் செய்யலாமா?
ஏற்கனவே மயிலாப்பூர் குலத்திற்கு அருகே உள்ள அலைனன்ஸ் அய்யர் நடத்தும அட்டூழியம் பற்றி எழுதினோம். நேற்றைக்கு முந்திய நாளே வின் டி.வி.காரர்கள் அங்கே போய், பதிக்கப்படும் பட்டாணி கடைக்காரர்களிடம் சென்று அந்த கொடூரத்தை அம்பலப்படுத்தி இருந்தனர். அந்த காட்சி ஊடகத்தார் வரும்போது வேலைகளை நிறுத்திவிட்டு, பிறகு அந்த ஆக்கிரமித்துகட்டும் வேலைகளை அலைனப்ஸ் அய்யர் தொடர்ந்தார். இன்று பெண் வழக்கறிஞர் ஒருவர் பாதிக்கப்பட்டோருக்காக சென்று மயிலாப்பூர் காவல்துறை அதிகாரிகளிடம் சென்று கொடுத்த புகாரை பதிவு செய்ய சொல்லி, அதன்விளைவாக பதிவு செய்த புகாருக்கு, சீ.எஸ்.ஆர். என்ற ரசீதை ஆய்வாளர் கொடுத்துள்ளார். அதன்பிறகு அந்த காவல் ஆய்வாளர் மோகன்தாஸ் " கலவை தயார் செய்து விட்டார்கள். அதனால் அதை மட்டும் பயன்படுத்தி கட்டட்டும்" என்று கூறியுள்ளார். வழக்கறிஞர் கொடுத்த எதிர்ப்பிற்கு பதில் கூறாமல் இருந்து விட்டார்.

அதன்பிறகு அந்த பேரன் வழக்கறிஞர் கட்டிடம் கட்டும் இடத்திற்கே சென்று எப்படி எங்கள் கட்சிகாரர் கட்டிடம் மேல் நீங்கள் செங்கல் வைத்து கட்டலாம் என்று கூறி அதை நிறுத்தி விட்டார். அதன்பிறகும் சோ ராமசாமியின் ஒரு அடிவருடி வழக்கறிஞர் கொடுத்த தைரியத்தில் மீண்டும் கட்டிட வேலையை ஆக்கிரமிப்பு செய்து கட்டுகின்றனர். இதுதான் இந்த நாட்டில் நடக்கும் சட்ட-ஒழுங்கு லட்சணம். பெரியார் பிறந்த மண்ணில் பார்ப்பனர்கள் மட்டுமே சட்ட ஒழுங்கை மீறி ஆக்கிரமிப்பு செய்து, அடுத்தவர் இடங்களில் கட்டிடம் கட்டலாம் என்று அனுமதிக்கும் காவல்துறையை வைத்து ஆட்சி நடத்துபவர்கள், யாருக்காக ஆட்சி நடத்துகிறார்கள்? இவர்கள் பிறபடுத்தப்பட்ட, மற்றும் தாழ்த்தப்பட்ட வாக்களர்களின் வாக்குகளை வாங்கி கொண்டு அவர்களுக்கே துரோகம் செய்யும் "காட்டாட்சியை" எத்தனை நாட்கள் நடத்த முடியும்?