Thursday, February 23, 2012

திருபாதியை துரத்தும் தனுஷ் பாடல்.

வேளச்சேரியில் ஐந்து வடநாட்டு பையன்களை சென்னை காவல்துறை ஆணையர் திருபாதி சுடச்சொன்னதும், சொன்னார், இப்போது அவரை தனுஷ் பாடல் துரத்திக் கொண்டு இருக்கிறது. ஊடகவியலாளர்களை கண்டாலே தன்னை துரத்தி கொண்டு வருவதாக அவர் அவதானிக்கிறார். அதுவும் ஒவ்வொரு ஊடகவியலாளரும் தன்னை பார்த்து "ஏன் இந்த கொலைவெறி, கொலைவெறி" என்று பாடிக் கொண்டு வருவது போல அவருக்கு தெரிகிறது. இன்று காலை ஆங்கில ஏடுகளில் அவர் நேற்றுய் கொடுத்த செய்திகளை வெளியிட்டிருந்தார்கள். அதில் ஒன்று மகாராஷ்டிரா காவல்துறையிடம் அனுபவங்களை பரிமாறிக் கொண்டு வருகிறோம். அவர்கள் இதே போல கொள்ளையர்களை வங்கிகளில் குறிப்பாக தேசியமயமாகப்பட்ட வங்கிகளில் கொள்ளையடித்தவர்களை பிடித்திருக்கிறார்கள். ஏன் என்றால் தேசியமயமாகப்பட்ட வங்கிகளில் அந்த படம் எடுக்கும் கேமராக்கள் கிடையாது. இப்படியெல்லாம் ஒரு செய்தி. அதில் மறைந்து இருப்பாக்கும் செய்தி இன்னொன்று. என்ன என்றால் மகாராஷ்ட்ராவில் மும்பையில் எந்த கொள்ளையனையும் அவர்கள் பிடித்ஹ்டு பிறகு, "போலி துப்பாக்கி சூட்டில்" போட்டு தள்ளிவிடுவார்கள். இதை ஊடகவியலாளர்கள் புரிந்து கொள்ள வில்லை போலும்.

அடுத்து ஆணையர் கொடுத்த தகவல் அனைத்து சி.சி.டி.வி.கேமராவிலும் ஒரு மனிதனின் படம் மட்டுமே அதிகமாக பதிவு ஆகியுள்ளது. அவன்தான் கொள்ளையர் தலைவன் என்கிறது ஆணையம். இந்த செய்தி எல்லா ஊடகங்களிலும் இன்று காலை வெளியிடப்பட்டு விட்டது. அதாவது அவரது காவல்துறை ஆணையம் புலனாய்வு செய்து குற்றவாளியை அடையாளம் கண்டுவிட்டிடார்கள் என்று பொருள். அதாவது அந்த செய்தியை பார்த்து நீங்கள் காவல் ஆணையத்தை பாராட்டவேண்டும். அந்த செய்தி வெளிவரும் நேரத்தில் அவர்கள் அந்த கொள்ளையர்களை கொலை செய்திருக்க வேண்டும். ஆனால் அந்த கொலை செய்யப்படும் செய்தியை அந்த ஏடுகள் குறிப்பாக அசச்சு ஊடகங்கள் அதிலும் குறிப்பாக ஆங்கில அச்சு ஊடகங்கள் வெளியிடாமல், தான் கொடுத்த குற்றவாளியை கண்டுபிடித்த செய்தியை மட்டுமே வெளியிட்டிருக்க வேண்டும். அதற்காகவே கொடுக்கப்பட்ட நேற்றைய நேர்காணல் அது. அதேசமயம் அவரது அடுத்த ஆபரேஷனான குற்றம் சாட்டப்பட்டவர்களை அல்லது சந்தேகப்பட்டவர்களை போட்டு தள்ளுவது என்ற திட்டத்தையும் நிறைவேற்ற வேண்டும். அதற்காக காவல் ஆணையம் நேரம் பார்த்தூ கொண்டு இருந்திருக்கிறது. அச்சு ஊடகங்கள் குறிப்பாக ஆங்கில அச்சு ஊடகங்கள் அச்சிடப்படும் கடைசி நேரமான இரவு ஒரு மணி வரிக்கும் தங்களது கொலை நடவடிககியை வெளியே விடக்கூடாது. என்னே சூப்பர் ஐடியா?


திட்டமிட்டபடி சம்பவ இடத்திற்கு அதாவது வேளச்சேரி அடுக்கு மாடி குடியிருப்பின் தளப்பகுதிக்கு காவல்துறையினர் இரவு பத்து மணி சுமாருக்கே சென்றதாக தெரிகிறது. பதினோரு மணி சுமாருக்கு அவர்கள் அந்த ஐந்து வாடா இந்தியர்களை போட்டு தள்ளியிருப்பார்கள் என்று தெரிகிறது.ஆனாலும் ஆங்கில அச்சு ஊடகங்களின் அச்சிடும் நேரமான ஒரு மணி வரை அந்த செய்தியை மாநகர காவல் ஆணையம் வெளியிடவில்லை. சூப்பர், திருபாதி அவர்களே என்று நம்மால் கூறாமல் இருக்க முடியவில்லை. அதன்பிறகு இந்த காட்சி ஊடகங்கள் தனகது போட்டிக்காக அனைத்தையும் வேர்லியே கொண்டுவந்து விட்டன. அற்ற்ஹனால் முழு மாநிலமும் இன்று காலையிலேயே அந்த போலி துப்பாக்கி சூடு என்று கருத வாய்ப்புள்ள செயலை வெளியே கொண்டுவந்துவிட்டன. கலையில் எல்லா ஊடகவியலாளர்களும் திருபாதியை மொய்க்க ஆரம்பித்தனர். அவரும் ஜகா வாங்கினார். முதலில் காலையில் ஊடகத்தரை சந்திப்பேன் என்று கூறியவர் பிறகு அதை மாலைக்கு தள்ளி போட்டார். அதற்குள் சிறிது தயார் செய்து கொள்ளலாம் என்பது அவரது அவா. ஆனால் மாலையிலும் அவரால் ஊடகங்களை எதிர்கொள்ள முடியவில்லை. அவசர, அவசரமாக ஊடகங்களுக்கு ஒரு செய்தி அறிவிப்பு போல கொடுத்து விட்டு கேள்விகளை அதிகம் எதிர்கொள்ளாமல் தப்பி ஓட முயன்றுள்ளார். இதுவே அவரை ஊடககார்கள் எல்லாம் தனுஷ் பாடலுடன் படிக் கொண்டே வருவது போன்ற தோற்றத்தை கொடுத்து விட்டது.

காலையில் அரிவாளால் வெட்டியதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்லது சந்தேகப்பட்டவர்கள் பற்றி கூறிய காவல்துறையினர் தலைவர் அதாவது ஆணையர் மாலையில் அவர்கள் சுட்டார்கள் ஆகையால் நாங்களும் சுட்டோம் என்று மாற்றி சொல்ல வேண்டி வந்து விட்டது. ஊடகத்தார்கள் ஒரு டி.சி. இடம் இறந்தவர்கள் வீடுகளுக்கு தெரிவித்து விட்டீர்களா? என்று கேட்டதற்கு தொலைபேசியை ஆப் செய்த நிகழ்ச்சியும் நடந்தது. அந்த அளவுக்கு அவர்களுக்கு தனுஷ் பாடல் அச்சத்தை ஏற்படுத்தி விட்டது. சுட்ட பிறகு தானே யாரை சுட்டோம் என்று ஆய்வு செய்கிறார்கள்? இது வரலாற்றிலேயே இல்லாத ஒரு போலி துப்பாக்கி சூடு. ஏன் என்றால் இதுவரை காவலர்களுக்கு யாரை பிடித்து சுடுகிறோம் என்று தெரியும். இந்த முறை யாரை சுடுகிறோம் என்று தெரியாமலேயே சுட்டு கொன்று விட்டார்கள். எது எப்படியோ நமக்கு யாரவது சாலையில் ஹிந்தியில் நாலு பேர் பேசிக் கொண்டு சென்றால் இன்றெல்லாம், அவர்கள் கைகளில் ஏதாவது ஆயுதம் இருக்கிறதா? என்று பார்க்க தோன்றுகிறது.