Monday, February 20, 2012

பழம்பெரும் நடிகை மறைவு தரும் மறைக்கப்பட்ட வரலாறு.

எஸ்.என்.லட்சுமி நேற்று நள்ளிரவுக்கு மேல் மரணமடைந்தார். சென்னையில் சாலிகிராமத்தில் அவரது வீட்டில், தேவகி மருத்துவமனையிலிருந்து உடல் கொண்டுவரப்பட்டது. அவர் எங்கள் தோழர் பாவல் சங்கரின் "அத்தை" என்பதால் நாங்களும் அங்கே இன்று முழுவதும் நின்றோம். நடிகர்கள், இயக்குனர்கள் என திரையுலகினர் பலர் வந்து போய்கொண்டு இருந்தாலும், காவல்துறை முதல்வர் ஜெயலலிதா வருவதாக எண்ணி செய்த பரபரப்புதான் அதிகம். மூன்று மணி நேர பரபரப்புக்கு பிறகு முதல்வர் வரவில்லை என தெரிந்த பிறகுதான் அந்த காவல்துறை அடங்கி அவரவர் வேலையை பார்க்க வெளியே சென்றனர். அதுவரை அந்த வீட்டிற்குள் எதுவும் தெரியாவிட்டாலும் வெளியே சாலையில் அவர்கள் பரபரப்பு காணப்பட்டுள்ளது. எப்படி இருந்தாலும் எஸ்.என்.லட்சுமி ஒரு வரலாறு என்பதை அங்கே உணர்ந்தோம். அவர் விருதுநகர் அருகே உள்ள சென்னல்குடி என்ற கிராமத்து பெண். மறவர் சமூக பின்னணி கொண்டவர். அந்த கிராமத்தில் வரத்து சொந்த தோட்டத்தில் அடக்கம் செய்தான் அவரது உடலை இன்று இரவு அங்கே கொண்டு சென்று காலை முதல் மாலை வரை மக்கள் பார்வைக்கு வைத்திருந்து பிறகு அடக்கம் செய்யபோகிறார்கள்.


எஸ்.என்.லட்சுமி ஏற்கனவே கேரளாவிலுள்ள ஒரு சிவானந்தா ஆசிரமத்தில் "வித்தை" வாங்கி இருக்கிறாராம். . அதனால் அவர்கள் முறைப்படி அடக்கம் செய்யப்படும். அவர் தனது பதின்மூன்று வயதில் வீட்டில் சண்டை போட்டு கொண்டு, அதாவது பட்டினி வாழ்க்கையை எதிர்த்து சென்னை வந்தாராம். வந்தவர் நாடக சபாக்களில் நடித்துள்ளார். 1500 திரைப்படங்களில் நடித்ததையும், 5000 க்கு மேல்நாடகங்களில் நடித்ததையும் விட்டார் கூறுகிறார்கள். என்.எஸ்.கே. நாடக மன்றம், கே.பி.யின் அமைச்சூர் நாடக மன்றம், என பல நாட்க மன்றங்களில் நடித்த பெருமை அவருக்கு உண்டு. .ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பதாம் ஆண்டிலிருந்து ஐம்பதாம் ஆண்டிற்குள், சில ஆண்டுகள் அவர் நடத்தி வந்த "பெண்கள் மட்டுமே கொண்ட நாடக குழு" மிகப்பெரிய வரலாறு. இன்று பெண்கள் மட்டுமே கொண்ட நாடகங்கள் முயற்சி செய்யப்படுகின்றன. மங்கை இயக்க வ.கீதா எழுத, பேராசிரியர் சரஸ்வதி தொடங்கி, கவின்மலர், பூங்குழலி, தமிழச்சி, ஓவியா, என எல்லா பெண்ணியவாதிகளும் இணைந்து நடிக்கும் புதிய முயற்ச்சிகளை காண்கிறோம். ஆனால் அன்றே எஸ்.என்.லட்சுமி பெண்கள் மட்டுமே உள்ள நாடக குழுவை நடத்தி வந்தார் என்ற வரலாறு இனிக்கிறது. அன்றைய காலத்தில் ஆண்கள் மட்டுமே பங்கு கொள்ளும் நாடக சபாக்கள் உண்டு. அவற்றில்பேன் வேடத்தில் நடிக்க கலைஞர்களில்லா நிலை. அதனாலான்களே பெண் வேடமிட்டு நடிப்பார்கள். அதுபோல சிவாஜி கணேசன் கூட நடைத்துல்லத்தை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் பெண்கள் மட்டுமே உள்ள நடாக குழுவில், ஆண் வேடமிட்டு நடிக்க ப்ர்ந்களே முன்வந்து நடித்தது எஸ்.என்.லட்சுமி காலை மன்றத்தில்தான். அதுவும் எஸ்.என்.லட்சுமியே ஆண் வேடமிட்டு நடித்தார்.


எஸ்.என்.லட்சுமியின் அண்ணன் சக்திவேல்தேவர் விருதுநகரில் ஒரு நாடக குழு வைத்திருந்தார். அதில் வந்து எஸ்.என்.லட்சுமி ஆண் வேடமிட்டு நடித்தார். திருமணம் செய்து கொல்லாமல்தனது எண்பத்து ஆறு வயதில் இப்போத்சு தனது உயிரை விட்டிருக்கிறார். சகோதரர்கள் குடும்பதிற்காக வாழ்ந்திருக்கிறார். இடையில் கத்தோலிக்க சபையில் சேர்ந்து சகோதரியாக முயன்றதாகவும், அதிலும் உடன்படாமல் வெளியே வந்து விட்டார் என்றும் கூறுகிறார்கள். ஐந்து நாட்கள் முன்பு தனது சகோதரி மரணத்திற்கு அரியலூர் சென்றவர் விடுதியில் குளியலறையில் தடுக்கி விழுந்ததால் இடுப்பிளுடைய, ச்ஹெனை கொண்டுவந்து தேவகி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு குணமானது போல இருந்தது என்று அவரத்சு மருமகன் பாவல் சங்கர் கூறினார். நேற்று நள்ளிரவில் திடீரென நிலைமை மோசமானது என்றார். அவர் திரையுலகிற்கு மட்டுமின்றி, வாழ்க்கைக்கும், தனியாக வாழும் பெண்களுக்கும், சவாலை எதிர்கொல்லும்பேன் கலைஞர்களுக்கும், ஒரு முன்னாதாரணம் என்று கூற தோன்றுகிறது. வடிவுக்கரசி வரத்து உடல் அருகே நின்று கொண்டு அழுது கொண்டிருந்தார். எஸ்.என்.லட்சுமியின் தந்தையின் தாயார் ஒரு ஜமீனால்பஞ்சம் பிழைக்க வந்த போது, ஒரு குடும்பத்திற்கு கொடுக்கப்பட்டவர் என்றும் ஒரு வரலாறு இருக்கிறது. அதிகமாக ஆய்வு செய்து இவரது முழு வரலாற்றில்தமிழகத்தின் கிராமப்புற குடும்பங்களின் பொருளாதார் நிலைமையையும், அதிலிருந்து வெளிவரும் குழந்தைகளின் வாழ்நிலை போராட்டமும் அதில் அவர்கள் அடைந்த வெற்றியும் தொகுக்க பட வேண்டும்.