Saturday, February 11, 2012

சல்வா சுடும் தலைவரை மாவோவாதிகள் அழித்தார்கள்.

சட்டிஸ்கர் மாநிலத்தில் ஆதிவாசிகள் வாழும் காட்டு பகுதிகளிலும், மலை பகுதிகளிலும் மத்திய அரசின் சதிச்செயலான் "கனிம வளங்களை"களவு செய்யும் கார்போறேட்களை எதிர்த்து போராடும் மக்களுக்கு மாவோவாதிகள் தலைமை தாங்கும் நேரத்தில், அதை எதிர்கொள்ளசட்டிச்கர் காவல்துறை சல்வா சுடும் என்ற கூலி படையை ஆதிவாசிகள் மத்தியில் உள்ள பொறுக்கிகளை வைத்து அமைத்து அதையே ஆதிவாசிகளை எதிர்த்து போராட பயன்படுத்தி வந்தது. அந்த சல்வா சுடும் என்ற பொருக்கி கூலி படைக்கு அனைத்து ஆயுதங்களையும் கொடுத்து காவல்துறை பேணி வந்தது. அந்த கூலி படையும் அனைத்து விதமான் பாலியல் பலாத்காரங்களையும் பெண்கள் மீது கட்டவிழ்த்து விட்டது. பல அப்பாவி ஆதிவாசி மக்களை கொலைகள் செய்துவந்தது. இவை எல்லாமே உச்சநீதி மன்றத்தின் முன்னாள் வைக்கப்பட்டது. உடனேயே அதை நாக்கு அறிந்த உச்சநீதி மன்றம், சல்வா சுடும் கூலி படையை கலைக்க சொன்னது.அதை செய்யசட்டிச்கர் காவல்துறை தயாராக இல்லை.அதனால் அந்த கூலி படையின் ஆட்களையே வைத்து, ஒரு சிறப்பு காவல் அதிகாரிகள் படையென்று ஒன்றை துவங்கியது. இது முழுமையாக் இந்த நாட்டின் அரசியல் சட்டத்தையே மதிக்காமல் செய்யும் போக்கு.


அந்த சிறப்பு காவல் அதிகாரிகள் படைக்கு மீண்டும்தளிவராக அந்த சல்வா சுடும் படையிம்முக்கிய தளபதியான "கார்டோம் சூரியா" என்ற முரடனையே போட்டது. அந்த கார்டோம் சூரியா தனது தலைமையின் கீழ் நூறு சிறப்பு காவல் அதிகாரிகளை வைத்து கொண்டு தனி அராஜக ஆட்சியை அந்த காட்டு பகுதிகளில் நடத்தி வந்தான்.அவன் செய்த கொலைகளையும், பாலியல் வன்முறைகளையும் மக்கள் கணக்கு பார்த்து சொல்கிறார்கள். அந்த அளவுக்கு அரசின் காவல் படை என்ற பெயரில் ஒரு ஆராச கூலி படையை அந்த சட்டிஸ்கர் அரசு பராமரித்து வந்தது. கடைசியாக் அமாவோவாதிகளின் "தோட்டாக்களுக்கு" அந்த கொடியவன் அதாவது அந்த கூலி படை தலைவன் கார்டோம் சூரியா "பலியானான்"என்ற செய்தயு அந்த மக்களுக்கு ஒரு இனிப்பு செய்தியாக இருக்கிறது. நமது ர்டமழ்நாட்டில் இதேபோல பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து ஒரு கீழவென்மனியின் பண்ணையார் கோபாலகிருஷ்ணன் நாயுடு தனது நாற்பத்தி நாலு தேவேந்திர கூலி விவசாயிகளை கொலை செய்த செயலுக்காக பழி வாங்க பட்டதை மக்கள் வரவேற்றார்களோ,மாநிலமெங்கும் இனிப்பு கொடுத்தார்களோ, அதுபோல வரவேற்றிருப்பார்கள் என்று நமக்கு புரிகிறது.

ஐரோப்பிய யூனியனுடன் ஒரு கையும், ஈரானுடன் இன்னொரு கையும்?

மன்மோகன்சிங் ஒரு சிறந்த சர்கஸ் வித்தைகாரர்தான். ஒரு கையில் சாட்டையும் , இன்னொரு கையில் ஆட்டையும் சிங்கத்தின் வாய் அருகே காட்டும் ஒரு சர்கஸ் வீரன் போல நடந்து கொள்கிறாரே? ஐரோப்பிய யூனியனின் ஆணைய தலைவரும், கவுன்சில் தலைவரும் டில்லி வந்துள்ளபோது, நேற்று அவர்களுடன் கை குலுக்குகிறார். சமீபத்தில் அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் சேர்ந்து ஈரானுக்கு எதிராக "பொருளாதார புறக்கணிப்பை" அறிவித்த போது, அதை இந்தியா ஏற்கவில்லை. ஈரானுடன் தான் இந்தியா சமையல் எரிவாயு குழாய்களை அமைத்து செயல்படும் என்றபதில் இந்திய அரசு உறுதியாக உள்ளது. ஐரோப்பிய யூனியன் ராணுவ வழி தீர்வை விரும்பவில்லை என்றும், பொருளாதார தடை மூலம் ஈரானை அதனது அணு சக்தி கொள்கையிலிருந்து இரங்கி வர வைக்கவே விரும்புகிறோம் என்றும் வந்தவர்கள் கூறியும் கூட, மன்மோகன் இந்திய அரசின் கொள்கையாக அத்தகைய ஒரு பொருளாதார தடைக்கு தாங்கள் ஒப்புகொள்ள இயலாது என்றார்

. அதேசமயம் ஈரான் அணு சக்தி விசயத்தில் சிறிது சிக்கலான நிலையை எடுப்பதாகவும், ஆனாலும் இந்தியாவின் முக்கிய எரிசக்தி உதவியாளரும், நண்பனுமான ஈரான் என்றும் கூறினார். இந்தியர்கள் அறுபது லட்சம் பேர் வளைகுடா நாடுகளில் வேலை செய்கிறார்கள் என்பதையும் மன்மோகன் கூறி, ஆகவே சமாதனம்தான் இந்திய அரசு விரும்புவது என்றார்.அதாவது ஐரோப்பிய யூனியனுடன் இந்திய அரசு ஈரான் விசயதில் மாறுபட்டு நிற்பதை டில்லிகாரர்கள் மறுக்க முடியவில்லை. என்னதான் அமெரிக்க அடிவருடியாக இருப்பதையே மன்மோகன் விரும்பினாலும், ஈரான் மூலம் இந்தியாவிற்கு தேவையான எரிசக்தியை தொடர்ந்து பெற்று வருவதால் இந்த டில்லிகாரர்களால் ஈரானை விட்டு விலகி நிற்க முடியவில்லை. ஆனாலும்கூட, நாம் பழைய நிகழ்வுகளை மறக்கமுடியாது. அதாவது ஈரானுடன் எரிவாயு குழாய்களை போடா இந்திய அரசு முயன்ற போது அதை எதிர்த்த அமெரிக்கா அப்போது மன்மோகன் மூலம் எதிர்ப்பை பதிவு செய்தது. இது ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் கட்ட ஆட்சியில் நடந்தது. அப்போது நட்வர்சிங் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி எரிவாயு குழாய்களை போடா திட்டமிட்டதர்காக் அமெரிக்காவால் நிற்பந்தப்படுதபட்டு அமைச்சரவையிளிருந்தே தொக்கி எறியப்பட்டார்.அதேவேலையை அடுத்து எண்ணைவள அமைச்சராக வந்த மணிசங்கர் ஐயர் செய்தவுடன் அவரையும் அமேரிக்கா விருப்பத்திற்காக மன்மோகன் மைச்சர்வையிளிருந்தே நீக்கினார். இரண்டாவது ஐ.மு.கூ. ஆட்சியில் மன்மோகனின் இந்த அமெரிக்க சார்பு நிலைப்பாடு, உலக சூழலின் மாற்றத்தில் எடுபடாமல் போய்விட்டது.

அதேபோல சிரியா விஷயம் வந்தது. அதில் அமெரிக்காவின் நிலைபாட்டை இந்திய அரசு ஆதரிக்கிறது என்றார் மன்மோகன். அதாவது சிரியா மேல்றாணுவ தாக்குதலை கட்டவிழ்த்து விட ஆதரிக்கிறது என்று பொருள்.ஐநாவின் பாதுகாப்பு அவையிலேயே இந்தியா அமெரிக்காவின் நிலைபாட்டை ஆதரித்து சிரியா மீது ராணுவ தாகுதல் நடத்த ஆதரவு கொடுத்தாலும் சீனாவும், ரஷியாவும் அதற்கு தடையாக வீடோ அதிகாரத்தை பயன்படுத்தி விட்டனர். ஆனாலும் இந்திய அரசு ஐரோப்பிய தலைவர்களிடம் தாங்கள் சிரியாவிற்கு எதிராக இருப்பதை மறு உறுதயு செய்துவிட்டார்.இவ்வாறு இந்திய அரசு தனது தன்னலம் காரணமாக தான் சில நேரங்களில் அமெரிகைன் நிலைக்கு எதிர் நிலை எடுக்குமே தவிர எப்போதும் அமெரிக்கா பக்கம்தான் என்பதை மீண்டும் நிரூபித்து வருகிறது.