Tuesday, February 7, 2012

அரசனும், புருசனும் மன்மோகனுக்கு மாறுவார்களோ?

மன்மோகன்சிங் ஒழுங்காக அமெரிக்கா இட்ட கட்டளைகளுக்கு அடிபணிந்து வேலை செய்யும் ஒரு வரலாறு படைத்த்சவர் என்றுதானே இந்த உயர் பொறுப்பை கொடுதார்கள்? அதைஒழுன்காக் செய்தாரா? அய்யா. நீங்கள்தான் இந்திய மக்கலளால் நேரடியாக தேர்ந்தெடுக்கபடவில்லை. அதனால்நான் என் இந்திய மக்களின் நலனை கருத்தில்கொள்ள வேண்டுமென்று நீங்கள் கேட்கலாம். நியாயம்தான்.நாடாளுமன்ற ஜனநாயகத்தை மதித்து நடக்கும் நாங்கள்தான் முட்டாள்கள்.உங்களுக்கு நாடாளுமன்ற ஜனநாயகதில்னம்பிக்கை இல்லை எனபது எங்களுக்கு புரிகிறது. அதனாலதான் இந்திய வரலாற்றிலேயே இல்லாத முறையில் ஒரு பிரதமர் மீண்டும்,மீண்டும் மாநிலங்களவை மூலம் தேர்ந்தேடுக்கபடுகிறீர்கள்.சரி.நீங்கள் அமெரிக்காவின் ஆள் என்றுதானே புரிய வைத்தீர்கள்?

அமெரிக்க-இந்திய அணு உலைஒப்பந்தம் செய்தீர்கள். இந்திய மத்திய அமைச்கார்வையையோ, நாடளுமன்றதையோ கேட்காமலேயே அமெரிக்காவிற்கு தொண்டு செய்தீர்கள். அப்புறம் அவர்கள் கூறிய அனைத்து நாட்டு அணு சக்தி கழகம் உடன் பேசி அணுசக்தி விநியோக நாடுகளை கெஞ்சிநீர்கள். அவர்கள் கூறிய படி ஒரு "இழப்பீடு" சட்டம்கொண்டு வந்தீர்கள். அதில் இயக்கும் அணுஉலை நிறுவனம் இழப்பீட்டு தொகையில் பங்கெடுக்க வேண்டுமென்ற அம்சத்தை எதிர்க்கும் அமெரிக்க கார்பொரேட் நிறுவனங்களை சமாதனம் செய்ய முயன்றீர்கள் அதற்காக ஒரு விதிகள் என கூறினீர்கள். உங்கள் முயற்சியை அமெரிக்க முதலாளிகள் ஏற்கவில்லை. அதன்பின் திடீரென ரஷியா, ஆஸ்ட்ரேலியா, பிரான்ஸ் என்று அமெரிக்கா அல்லாத நாடுகளிடம் அணு உலை எரிசக்திக்கு பேசினீர்கள். அமெரிகாதானே இறங்கி வருமேன்று எதிர்பார்த்தீர்கள்.

நீங்கள் அரசனை நம்பி புருஷனை கை விடுகிறீர்களே என்று எண்ணினோம். பிறகு பிரான்ஸ் உடன் விமான ஒப்பந்தமேன்று இங்கிலாந்தை கோப படுத்தினீர்கள். சரி.நீங்கள் புருசனைகைவிடுவதால் மாட்டிகொள்வீர்களா ? என்று எண்ணினோம்..இப்போது உங்களுக்கு ஒரு வாய்ப்பு. அமெரிகாதன் ஆதரவு நாடுகளான இங்கிலாந்து,பிரான்ஸ் உடன் சேர்ந்து அய்.நா பாதுகாப்பு சபையில் "சிரியாவை" ரானுவம் கொண்டு தாக்க வழி மொழிந்தது. இந்தியா சார்பாக அதற்கு ஆதரவு கொடுத்து விட்டீர்கள்.ஆனால் உங்கள் அரசனோ.புருசனோ அப்படி இடைக்காலத்தில் இருந்த ரஷியா, சீனாவுடன் சேர்ந்து கொண்டு, அந்த தீர்மானத்தை "தள்ளுபடி" செய்து விட்டது.உங்கள் மூஞ்சியும் கரி பூசப்பட்டு விட்டது. இப்போது ரஷியா, சீனா பகலை, அமெரிக்கா நண்பனா? எதுவும் சாதாரனர்களான எங்களுக்கு புரியவில்லை.