Friday, February 3, 2012

பேச்சும், தாக்கும், ப.சீ..போக்கு

நெல்லை மாவட்ட ஆட்சிதலைவர் அலுவலகத்திற்குள், காங்கிரஸ் ஏற்பாட்டில் இந்துமுன்னணியினர் திட்டமிட்ட தாக்குதலை நடத்துவார்கள். அதை ப.ஜ.க.தலைவர் போன்.ராதாகிருஷ்ணன் ஆதரித்து இந்துமுன்னநியினருக்கு பாதுகாப்பு இல்லை என்று போய் பேசுவார். அதையும் ஆங்கில ஏடுகள் வெளியிடுவர். இன்று மனித நேய மக்கள் கட்சி சட்டமன்ற தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அந்த கூடங்குளம் அணு உலையை மக்கள் எதிர்க்க காரணம் என்ன என்று விளக்கமாக பேசுவார். அப்போது தாக்கிய இந்துமுன்னநியினரை கண்டிப்பார். உடனேயே கனகிராஸ் எம்.எள்.எ. தாக்கிய இந்துமுன்னநியினரை ஆதரித்து பேசுவார். இந்த எல்லா நிகழ்வுகளும் உள்துறை அமைச்சர் சிதம்பரம் திட்டமிட்டு நடத்தியது என்பது எல்லோருக்குமே தெரியும். சிதம்பரம் திமுக தலைமையிடம் பேசிய பிறகு, இன்று திமுக பொது குழுவில் விரைவில் கூடங்குளத்திற்கு முடிவு சொல் என்று பொதுவானவர்கள் போல ஒரு தீர்மானம் வரும். ஒரு சார்பு நிலையை திமுக எடுத்து கனைராஸ், ப.ஜ.க. பக்கம் நிற்கும். அதையும் அரசியல் என்று நாம் பார்க்காமல் "கண்களை" மூடி கொள்ள வேண்டும்.


சீ.பி.எம். எம்.எள்.ஏ. பாலகிருஷ்ணன் கூடங்குளம் அணு உலையை உடனே திறக்க வலியிருத்துவார். யாரும் அவருக்கு ஜைதாபூர் அணு உலைக்கு எதிராக ஒரு நிபுணர் குழுவை சீ.பி.எம். மற்றும் சீ.பி.அய் சேர்ந்து போட்டிருப்பதை நினைவு படுத்த மாட்டார்கள்.சீ.பி.அய்.யின் தலைவர் த.பாண்டியன் கூடங்குளம் அணு உலை விசயத்தில் தமிழக அரசு நிலை என்ன? என்று கேள்வி கேட்டு வீரம் காட்டுவார். அவர்கள் இருவரும் ரஷியா கொண்டுவறுக் அணு உலை என்பதற்காக ஆதரிப்பது வெள்ளிடை மலை.அவர்கள் கட்சிக்குள் ரஷியாவில் நடந்த தேர்தலில் புதின் ஏமாற்று வேலை செய்து வெற்றி பெற்றுள்ளாரே என்று யாரும் கேட்க மாட்டார்கள். நேநேகள் அந்த மோசடி பேர்வழி புதினது வெற்றியை எதிர்க்கும் ஒரு லட்சம் மக்கள் பேரணி பக்கமா? புதின் பக்கமா என்று கேட்டுவிட மாட்டார்கள்.அங்குள்ள கம்யுனிஸ்ட் கட்சியும் புதினது தேர்தல் வெற்றியை எதிர்கிறதே என்று கேட்கவில்லை..ரஷிய கமுயநிஸ்ட் கட்சியை விட, ரஷிய அரசாங்கம்தான் அதிகமாக எங்களுக்கு உதவுகிறார்கள் என்று இங்குள்ள நாடாளுமன்ற இடதுகளும் பச்சையாக கூறவில்லை.இப்படி ஒரு நாடகம் கூடங்குளம் பற்றி நடக்கிறது.

இன்று பெரியார் திராவிடர் கழகம் ஒரு ஆர்ப்பாட்டத்தை கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதல் நடத்திய இந்துமுன்னநியினரை கண்டித்து நடத்தினார்கள்.அப்போது அதில் நாம் தமிழர் கட்சி சீமான், வேல்முருகன் கட்சியான வாழ்வுரிமை கட்சி, என பலரும் பேசினார்கள். பேராசிரியர் தீரன் இப்போது வேல்முருகன் கட்சியில் இருக்கிறார். அது சார்பாக பேசினார். அணு உண்டு தயாரிக்கத்தான் இந்த அணு உலைகளை கொண்டுவருகிறார்கள் என்று உண்மையை போட்டு உடைத்தார். வேல்முருகன் கிருத்துவ மிஷனரிகள் கல்விக்கு எதனை முக்கியத்துவம் கொடுத்து செயல்படுகின்றன என்று கூறி, அவதரி எதிர்க்கும் இந்துத்துவா மைப்பை சாடினார்.சீமான் அணு உலைகள எப்படி ஆபத்தானவை என்றும், அணு கழிவுகளை முப்பதாயிரம் ஆண்டு முதல் ஐம்பதாயிரம் ஆண்டு வரை பாதுக்கப்பது யார் என்ற கேள்வியை எழுப்பி அருமையாக பேசினார்.நிறைவாக குளத்தூர் மணி இந்துத்துவா மைப்பு மீது காவல்துறை நடவடிக்கை போதாது என்ற பொருளில் பேசினார். காங்கிரஸ் மற்றும் சிதம்பரத்தின் கை பின்னால் இருப்பதை சுட்டி காட்ட மறந்து விட்டனர்.

இப்படிதான் பேச அழைத்து சிதம்பரம் மாவோயிஸ்ட் ஆசாத்தை சுட்டு கொள்ள செய்தார். இப்படிதான் பேச அழைத்து மாவோயிஸ்ட் கிஷஞ்சியை சிதம்பரம் விஜயகுமார் மூலம் சித்தரவதை செய்து கொள்ள செய்தார். இப்போது கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்களுக்கும் அதே பாணியை பின்பற்றுகிறார். இதை நம்மவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.