Thursday, February 2, 2012

பிரான்சிட்ட வாங்கினா, இங்கிலாந்து கோபப்படுத்து?

மன்மோகன்சிங் சமீப காலமாக நடத்தும் அரசாங்கத்தை பல அந்நிய நாடுகளின் கார்பொரேட் சந்தைதளமாக காணவேண்டும். அவர் அணு உலைகளை வாங்கவும், அதற்கான எரிபொருளான யுரேனியத்தை வாங்கவும் அமெரிக்காவுடன் முதலில் ஒப்பந்தம் போட்டார்.அதற்கு முன்பே இந்திய அரசு அமெரிக்காவிடம் அந்த காலத்திலேயே தாராபூர் அணு உலை உற்பத்திக்கு யுரேனியம் வாங்கி வந்தது. இந்திரா-வாஜ்பாய் கைங்கரியத்தினால் "அணு குண்டு" சோதனை நடத்தி போக்ரான்களை உருவாக்கி அமெரிக்காவிடமும், மற்ற ஐரோப்பிய நாடுகளிடமும் கேட்ட பெயர் வாங்கினார்கள்.அதனாலேயே அய்.அ.எ.ஏ. என்ற அணைத்து நாட்டு அணு சக்தி கழகத்தின் மூலம் உலக அளவில் அணு குண்டு தயாரிக்கும் இந்தியாவிற்கு, அணு குண்டு சோதனையை தடை செய்யும் உலக ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத இந்தியாவிற்கு, நான் ப்ராளிபெரசன் ஒப்பந்தம், சீ.டி.பி.டி. ஒப்பந்தம் ஆகியவற்றை கையெழுத்திட மறுக்கும் இந்தியாவிற்கு அணு உலைக்கான எரிசக்தி கிடையாது என்று தடை செய்து வந்தன. அது வெள்ளை ஜார்ஜ் புஷ் வசம் பேசி, அமெரிக்காவுடன் ஒரு அணு சக்தி ஒப்பந்தம் போட்டார் மண்ணு மோகன்.அமெரிக்காவை துணைக்கு அழைத்துக்கொண்டு, அய்.ஏ.இ.ஏ.என்ற அந்த அகழகத்தின் நற்பெயரை பெற்று அவர்கள் மூலம் உலகம் முழுதும் உள்ள குறிப்பாக ஐரோப்பாவில் உள்ள அந்த அணு சக்தி விநியோக நாடுகளிடம் யுரேனியம் பெற ஒப்பந்தம் போட்டார்.

அதன்பிறகு அவர்கள் சொன்னபடி,அணு உலை விபத்து இழப்பீடு சட்டம் கொண்டு வந்தார். இங்குள்ள ஊடக அமபலப்படுதளால், அந்த சட்டத்தில் சில வரிகளை சேர்த்து அமெரிக்க கார்போரேட்களின் பங்கை மறைக்க முயன்றும் முடியவில்லை. அதை ஈடுகட்ட ஒரு "விதிகளை" கொண்டுவந்து இந்தோனேசியா சென்று பாலியில் கருப்பு புஷ் ஒபமாவை சந்தித்து அமெரிக்க கார்போறேட்களை சமாதனப்படுத்த முயன்றார்.அதுவும் முடியவில்லை. இந்தியா திரும்பிய பின், அந்த விதிகளை இணைப்பதை இங்கு உள்ள வரத்து அமைச்சரவையே ஒப்புக்கொள்ளவில்லை. இது மன்மோகனுக்கும், சோனியாவிற்கும் உள்ள முரண்பாடு. இந்திய அணு விஞ்ஞானிகளும் மன்மோகனை எதிர்த்து அமெரிக்க சார்பை மறுக்கிறார்கள்.அதனால் வு வழியில்லாமல் "அணு குண்டு" தயாரிக்கும் ஒரே நோக்கத்தில், அடுத்து நான் ப்ராளிபரேசன் ஒப்பந்தத்தை வற்புறுத்தாத "ஆஸ்ட்ரேலியா,ரசியா" போன்ற நாடுகளுடன் அணு ஒப்பந்தம் செய்து எபப்டியாவது யுரேனியம் பெற்று தொடங்கி விட்டால் அமெரிக்கா தானாக வரும் என்ற எதிர்பார்ப்பில் செயல்படுகிறார். அதில்தான் அவருக்கு கூடங்குளம் முக்கியத்துவமாகிறது. என் என்றால் அது ரஷியா சார்பு.அடுத்து பிரான்ஸ் நாட்டையும் இதேபோல சார்கிறார் மன்மோகன். அவர்களிடம் "ஜைதாபூர்" அணு உலைகளை வாங்க ஒப்பந்தம் செய்கிறார்.

அந்த பிரான்ஸ் அப்படியானால் "விமானபடைக்கும்" எங்கள் விமானங்களை வாங்கு என்கிறது. சரி என்றார் மன்மோகன். அதுதான் பிரான்ஸ் நாட்டின் "டசால்ட் ரபேல் "என்ற ரக விமானங்களை வாங்கி குவிக்க முடிவு செய்தது. அதை பிரான்ஸ் அதிபர் சர்கொசிஸ் வரவேற்கிறார். ஆனால் இப்போது இங்கிலாந்து அதிபர் அதாவது பிரதமர் டேவிட் கேமேரான் பயங்கரமாக எதிர்கிறார். இங்கிலாந்து நாடு உங்கள் இந்தியாவிற்கு "பல லட்சம் பவுண்டுகளை" நிதி உதவியாக கொடுத்தோமே? என்று அவர் வினவுகிறார். இங்கிலாந்து நாட்டு "டைபூன்" என்ற ரக விமானத்தை வாங்கு என்று அவர் கூறுகிறார். அதை அவர் அவர்கள் நாட்டு :"ஹவுஸ் ஆப் காமன்ஸ்" சபையிலேயே சொல்லிவிட்டார். அவரது "கண்செவடிவ்" கட்சி இந்தியாவை கடிக்கிறது. "தொழிலாளர் கட்சியும்" அதுபற்றி பேசுகிறது. பிரான்ஸ் நாடு இங்கிலாந்து அளவுக்கு உதவி நிதி கொடுத்தார்களா? என்று அவர்கள் வினவுகிறார்கள். இன்னமும் பிரான்ஸ் நாட்டு "டசால்ட் ரபேல்" உடன் ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்று இங்கிலாந்தில் சமாதனம் பேசுகிறார்கள். அதேசமயம் தங்கள் இங்கிலாந்து நாட்டு "டைபூன்" ரக விமானத்தையும் இன்னமும் மறுக்கவில்லை எனவும் கூறுகிறார்கள். இப்படியாக உலக சந்தையில் "சந்தை மன்னன்" மன்மோகன் மாட்டிக் கொண்டு முழிக்கிறார். ஆகவே நேநேகள் யாரும் வார ஏதோ இந்தியாவின் நன்மைக்காக பல வெளிநாடுகளுடன் வணிக ஒப்பந்தம் பெசுகயார் என தவறாக அவரது "பொருளாதார் திட்டங்களை" மதிப்பீடு செய்யவேண்டாம். அவர் உலக சந்தையில் எந்த வல்லரசுக்கு அடிமையாக இந்தியாவை ஆக்கலாம் எனு கணக்கு போடுவதில் ஒரு சிறிய "பிணக்கு". அவ்வளவுதான்.

இரண்டு அலைவரிசை உரிமம் ரத்து போதுமா?

உச்சநீதிமன்றம் கடைசியாக ஒரு முடிவுக்கு வந்துள்ளது. நமது ஆ.ராஜா உள்ளே போய் ஒரு வருடம் ஆன பிறகு அனைத்து இரண்டு அலைவரிசை உரிமங்களையும் அதாவது நூற்று இருபத்து இரண்டு உரிமங்களையும் ரத்து செய்யவும், டாடா, ஸ்வான், போறோருக்கு ஐந்து கொடு அபராதமும் மற்றவர்களுக்கு ஐம்பது லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கொடுத்துள்ளது. இதில் ராஜா கால டாடா குழு வகையாறக்கள் சிக்கி கொண்டனர். தயாநிதி காலத்தில் உரிமம் வழங்கப்பட்ட ரிலையன்ஸ் குழ்மங்கள் தப்பிததுகொள்ளுமா? என்று கேட்டால் நம்மிடம் பதில் இல்லை. சரி. அந்த ரிலையன்ஸ் கும்பலுக்கு எந்த அபராதமும் கிடையாதா? என்று கேட்டாலும் நம்மிடம் பதில் இல்லை. நீதியரசர்கள் அனைத்தும் அறிந்தவர்கள், ஆகவே அவர்களை எதிர்த்து கேள்வி கேட்ககூடாது என்று வேண்டுமானால் நாம் கூறலாம்.


அடுத்து அதே நீதியரசர்கள் இன்னொரு முடிவை அறிவித்துள்ளனர். அதாவது இந்த இரண்டாம் தலைமுறை அலைவரிசை உரிமங்கள் இனி "ஏலம்" மூலம் கொடுக்க பாட வேண்டும் என்று கூறியுள்ளது. அப்படி ஏல முறையில் உரிமங்களை கொடுக்கும்போது, ஏற்கனவே நடந்த பாணியை மீண்டும் பின்பற்றாமல் இருக்க எந்த ஒரு தஹ்டுப்பும் கூறப்படவில்லை. ஆதாவது வெளிநாட்டு கார்பொறேட்களுக்கு உரிமம் கொடுக்க கூடாது என்று கூறப்படவில்லை. உரிமம் பெற்றவர்கள் அந்நியாய வில்லிக்கு வெளிநாட்டு கார்போறேட்களுக்கு விற்பதை "தணிக்கை" செய்யவோ, தடுக்கவோ, வடிகட்டவோ எந்த ஒரு உபாயத்தையும் இந்த நீதிமன்றம் கோரவில்லை. அதுபற்றி கூறவும் இல்லை.

அப்படியானால் அண்டை நாடுகளை சேர்ந்த "முன்னாள் மாக்கள் விடுதலை படையின் தலைவரின் தனியார் நிறுவனமோ", அந்நிய நாட்டின் உளவு நிறுவன தலைவர்களின் தனியார் நிறுவனமோ" இந்த உரிமத்தை ஏலம் எடுத்த சக்திகளிடமிருந்து பெறுவது தவிர்க்க பாட வேண்டும் என்று அவர்கள் கூறவில்லை. அதாவது இந்த அலைவரிசை ஊழலை பயன்படுத்தி எந்த அந்நிய நாடும் இந்தியாவின் ரகசியங்கள் மீது :உளவு: வேலை பார்க்க்க வாய்ப்பு கொடுக்கப்படுவதை தடுக்க கூட அந்த நீதியரசர்களின் சிந்தனை செல்ல வில்லை. எபப்டியோ சிதம்பரம் கதைக்கு இரண்டு வாரத்திற்குள் முடிவு செய்து சீ.பி.அய். நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கலாம் என்று கோரியுள்ளது. அதனால் "மானம்" பெரிது என்று நினைத்து சிதம்பரம் பதவியை ராஜினாமா செய்வார் என்று நாம் எதிர்பார்க்க வில்லை. அவர் நான்காம் நாள் நெல்லையில் நடக்க உள்ள அணு உலை ஆதரவு பொதுக்கூட்டத்திற்கு எப்படிதொண்டர்களை ஊக்குவித்து வன்முறை மூலம் ஜெயலலிதா ஆட்சிக்கு தொல்லை கொடுக்கலாம் என்று சிந்தித்து கொண்டிருப்பார்.