Monday, January 30, 2012

உள்துறை என்பது உள்குத்து அமைச்சகமா?

உள்துறை என்பது ஆளும் மத்திய அரசியல் கட்சிகளால மாநில கட்சிகளை எதிர்த்து, சட்ட-ஒழுங்கு பிரச்சனை தொடங்கி, எல்லா விவகாரங்களிலும் "தகராறு" செய்வதற்காக பயன்படுத்தப்பட்டு துறை என்பதே இந்திய அரசின் செயல்பாட்டில் நாம் காணும் உண்மை. அதிலும் சிதம்பரம் என்பவர் அந்த துறைக்கு அமைச்சராக வந்தபின் அதுபோன்ற வேளைகளில் மிகவும் விவேகமாக காய் நகர்த்துபவர் எனபதும் நாட்டிற்கு தெரிந்த உண்மை. அதுவும் இந்தியாவிலேயே தமிழக முதல்வர் மட்டும்தான் டில்லிக்கே சென்று அந்த சிர்தம்பரத்தின் முக மூடியை கிழித்து விட்டார் எனபதும், அதனால் அந்த சிதம்பரம் "பழி" வாங்கும் சிந்தனையில் மட்டுமே இருக்கிறார் என்பது கூட ஊருக்கு தெரிந்த செய்திதான்.

இப்போது அணு உலை எதிர்ப்பு தமிழுகத்தில் கூடுதலாக புறப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் அதை செயல்படுத்த போதிய விவரம் இல்ல நிலையில் தமிழகத்தில் அது இருபத்தைந்து ஆண்டு வரலாற்றுடன் செயல்படுகிறது. கூடங்குளம் பேசப்படும்போது, கல்பாக்கம் அணு உலை ஆதரவு சக்திகளுக்கு ஒரு சான்றாக கட்டப்படுவதால், கல்பாக்கத்திலும் கிளம்பும் அணு உலை எதிர்ப்பு போராட்டம் மத்திய உள்துறையால் தாங்கி கொள்ள முடியாத ஒன்றாக ஆகிவிட்டது. ஆகவே அந்த அமைச்சர் தனது ஆதரவாளரான லதா பிரேமகுமார் என்ற எஸ்.சீ. எஸ்.டி. ஆணையத்தின் அகில இந்திய தலைவர் மூலம் அடுத்த அம்பை எய்துள்ளார். அதாவது கல்பாக்கம் அணு மின் நிலையம் நிர்வாகம் அந்த இடத்தில் உள்ள காவல்துறையை தன்வசம் ஆதரவாக வைத்திருந்தது. அதனால் கல்பாக்கம் பகுதி அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு சாதாரன் பட்டிநிபோரட்டதிற்கு கூட அனுமதி தராமல் மறுத்து வந்தது. போராட்டகாரர்கள் நீதிமன்றம் சென்று உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் மூலமே அனுமதி பெற்று இன்று சனவரி முப்பத்தி ஒன்றாம் நாள் பட்டினி போராட்டம் வைத்திருந்தனர்.


திடீரென்று நேற்று ஒரு சவரிமுத்து தன்னை எஸ்.சீ.எஸ்.டி. கூட்டமைப்பபின் தலைவர் என்று கூறிக்கொண்டு உய்ரநீதிமன்ரத்தில் ஒரு புகாரை போட்டார். அதாவது அவர் ஒரு வாரம் முன்பே காவல்துறை அதிகாரிக்கு ஒரு மனு கொடுத்து அணு உலை எத்ரிப்புபட்டினி போருக்கு அனுமதி வழங்க கூடாதென கேட்டுக் கொண்டதாகவும் அதை மதிக்காமல் காவல்துறை அனுமதி கொடுத்ததாகவும் புகார் எழுப்பினார். அதை கவனித்த இரண்டாம் நிலை நீதியராசர் எலிபீ தர்மாராவ், கிருபாகரனுடன் சேர்ந்து அந்த பட்டினி ஒருக்கு "தடை" கொடுத்து விட்டார். இது ஏற்கனவே தலைமை நீதியரசர் கொடுத்த அனுமதிக்கு எதிரானது. இவாறு நீதிமன்றத்தை ஏமாற்றி சிதம்பரம் வகையறாக்கள் சனநாயக உரிமைகளை கூட தடை செய்கின்றனர்.

அதேபோல வன்முறையற்ற கூடங்குளம் அணு உலை எதிர்ப்ப்பு போராட்டத்தை நடத்தும் போராட்டக்காரர்கள் இன்று காலை நெல்லை மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்திற்கு சென்று மனு கொடுத்தனர். அப்போது சிதம்பரம் தூண்டி விட்ட காங்கிரஸ்காரர்களும், இந்தியாவை அவர்களுடன் சேர்ந்து கொள்ளையடிக்கும் பாஜக வினரும், இந்துமுன்னணியும் சேர்ந்த்து கொண்டு .இந்த வன்முறை வெறியாட்டத்தை நடத்தியுள்ளனர். இன்று உச்சநீதிமன்றத்தில் ஒரு மத்திய அமைச்சரின் எதிர்காலத்திற்கு நான்கு மாதம் கெடு வைக்கப்பட்டால் அந்த அமைச்சர் தனது உள்துறையை, உள்குத்து துறையாக நடத்தி வருவது இதன்மூலம் கண்கூடு.

தலித் பட்டியலில் கிருத்துவர்களையும் சேர்த்த அரசு

இந்திய துணை கண்டத்தில் இருக்கும் மக்களை நமது அரசியல் சட்டம் வேடிக்கையாக பிரிக்கிறது. நீங்கள் முஸ்லிம் அல்லாவிட்டால், நீங்கள் பார்சி அல்லாவிட்டால், நீங்கள் கிருத்துவர் அல்லாவிட்டால் நீங்கள் ஒரு இந்து. இது எப்படி இருக்கு? யோவ். நான் நாத்திகன் அய்யா. என்னை போய் இந்து என்கிறாயே? இப்படி யாரும் கேட்க இடம் கொடுக்கவில்லை இந்த அரசியல் சட்டம். அந்த இந்துகளில் அவர்கள் "தீண்டத்தகாதவர்" என்று முத்ஹ்டிரை குத்தி வைத்திருக்கும் தலித்துகளை கரை சேர்க்க அபப்டி ஒரு இட ஒதுக்கீடு கொடுத்துள்ளார்களாம். சரி. உங்கள் நாட்டின் பார்ப்பனீய பண்பாடு அந்த தலித்துகளை எந்த மதத்திற்கு மாறினாலும் நடைமுறையில் ஒரே மாதிரிதானே கையாளுகிறது? கிருத்துவர்களாக மாறிவிட்ட தலித்துகளை நீங்கள் விட்டு விடுகிறீர்களா?

பஞ்சமிநீல மீட்பு போராட்டத்தில் உங்கள் துப்பாக்கிகள் ஏழுமலையை மட்டுமா பதம் பார்த்தது? ஜான் தாமசையும் சேர்த்து தானே பலி வாங்கியது? கொடியங்குளத்தில் உங்கள் கரங்கள் இந்து தேவேந்திரா வீடுகளை மட்டுமா உடைத்து? கிருத்துவ தேவேன்றாவையும் சேர்த்து நொறுக்க வில்லையா? மான்ஜோளையிலே உங்கள் காவல்துறை இந்து தலித்துகளுடன், இருத்துவர்களையும் சேர்த்து கொள்ள வில்லையா? அதனால் கிருத்துவ தலித்துகளுக்கும் தலித் பட்டியலில் இடம் கொடு. இதுதான் ஈனைத்து கிருத்துவ தேவாலயங்களும் எழுப்பும் முழக்கம்? அதற்கு இந்த மத்திய அரசு இதுவரை செவி சாய்த்ததா? மத்திய அரசின் கொள்கை முடிவை எடுக்காமல் அந்த தலித் பட்டியலில் கிருத்துவ தலித்துகளை சேர்க்க முடியுமா? அதை இந்த்ஹ்டுதுவா ஏற்றுக்கொள்ளுமா? அத்தகைய கோரிக்கைகளை நாமும் இந்த முறை கிருஸ்துமஸ் கொண்டாடிய முதல்வரிடம் சந்தித்த இரண்டு தலித் பேராயர்களும் வைக்க வில்லையே என்று வருந்தினோம்..

அதற்கு உடனடியாக பதில் கிடைத்து. சென்ற மாதமே அதாவது சென்ற ஆண்டின் டிசம்பரிலேயே ஒரு விளம்பரம் வந்தது.அதில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடி, மற்றும் கிருத்துவ ஆதிதிராவிட மாணவ மாணவிகள் "ஊக்கத்தொகைக்கு" டிசம்பர் கடைசிக்குள் வின்னப்புயக்க்கவும் என்ற விளம்பரம் ஒன்று தமிழ்நாடு அரசு ஆதிதிராவிட நலத் துறையிலிருந்து கொடுக்கப்பட்டது. இப்போது தலித்துகளுக்கான "சிறப்பு சலுகைகளை" அறிவித்திருக்கும் தமிழக அரசு, சென்ற வாரம் அறிவிக்கும் போதே இதே போல "மதம் மாறிய ஆதிதிராவிடருக்கும்" என்று சேர்த்து வெளியிட்டுள்ளது. அதேபோளைன்றைய ஆளுநர் உரையிலும் அதையே குறிப்பிட்டுள்ளது. இதுதான் தலித் கிருத்துவர்களையும் தலித் பட்டியலில் சேர்த்த செயல்.

இந்துதுவா செல்வாக்கு கொண்ட இந்தியத் அரசில் மோதி பயன் இல்லை என்ற சூழலில், தமிழ்நாடு அரசு தனது அவ்ரம்பிற்குள் வருகின்ற "நிதி தரும்" இடங்களிலும், சிறப்பு திட்ட" இடங்களிலும் இப்படி ஒரு தெளிவான வரையறையை சேர்த்திருப்பது அமைதியான ஆனாலதேசமயம் மக்களுக்கு பயன்படும் வகையில் நீண்ட நாள் கோரிக்கைக்கு ஒரு விடையை கண்டுபிடித்ஹ்டுள்ளது என்றே படுகிறது.

விஞ்ஞானிகள் குப்பைக்கு சமமா?

நாம் அறிவியலாளர்களை மதிக்கிறோம். அவர்களை மரியாதை செய்கிறோம். அறிவியலாளர்கள் சொகுசு வாழ்கை வாழ்வதை "தேவை" என்று கருதுகிறோம். அவர்கள் குளிர் சாதன அறைகளில் இருப்பதையோ, குளிர் சாதன வீடுகளில் வசிப்பதையோ, குளிர் சாதன வாகனங்களில் செல்வதையோ, நாம் பெருமையாக கருதுகிறோம்.அது இந்த நாட்டின் அறிவியல் வளர்ச்சிக்கு உதவி புரியும் என்று மனதார நம்புகிறோம். அவர்களது உலகம் தனி உலகம் என்பதை கூட நம்புகிறோம். ஏற்றுக்கொள்கிறோம். அவர்கள் ஏதோ ஒரு வகையில் சாதாரண மக்களால் சாதிக்க முடியாததை சாதிக்கும்திரமைசாளிகள் என்று நாம் க்ருதுகிறோம்.அவர்கள் சோதனை சாலைகளில் நாம் சாதரணமாக சாதிக்க முடியாததை சாதித்து "நிரூபித்தவர்கள்" என்பதால் போற்றுகிறோம். அதில்தான் நமது அறிவியல் விருப்பம் ஈடேறுகிறது.

அப்படிப்பட்ட அறிவியலாளர்களில் அதாவது விஞ்ஞானிகளில் ஒருவகைதான் விண்வெளி ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகளும். ஆகவே அவர்களையும் நாம் கேள்விக்கே இடம் இல்லாமல் ஆடஹ்ரிக்கிறோம்.போற்றுகிறோம்.அவர்களுக்கு தனி சிறப்பு தகுதி இருப்பதனால், அவர்களை சிறப்பாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் விரும்புகிறோம். ஆனால் அவர்கள் நாம் கொடுக்கும் சிறப்பு தகுதிகளை "களவு" செய்வதற்கு பயன்படுத்தினால் என்ன செய்ய? இப்படித்தான் விண்வெளி ஆராய்ச்சி அறிவியலாளர் மாதவன் நாயர் வகையறாக்களின் செயலும் பார்க்கப்படுகிறது. அதனால்தான் அரசு அவர்களுக்கு இனி அரசு பதிவகள் தரவேண்டாம் என்றது.


ஆனால் இந்த அரசின் முடிவு, இந்திய தலைமை அமைச்சரின் அறிவியல் ஆலோசனை குழு தலைவராக இருக்கும் பெரிய அறிவியலாளர் சீ.என்.ஆர். ராவ் அகார்களுக்கு தவறாக படுகிறதே? அவர் இந்த முடிவை "ஜன்னல் வ்ழியே எறியப்படும் குப்பையை" போல எரிந்து விட்டார்களே என்று கூறியுள்ளார். பயோர்கு எப்படி எறிவார்கள்? நேநேகலரசின் நம்பிக்கையை உங்கள்மீது அரசு வைத்திருந்த நம்பிக்கையை உடைத்துவிட்டீர்களே? நீங்கள் இந்திய நாட்டு ரகசியங்களை "காசாக" முனைத்து விட்டீர்களே? நீங்கள் நாட்டு மக்களுக்கே தெரியாத ரகசிய விசயங்களை அந்நிய நாட்டிற்கு விற்க துணிந்து விட்டீர்களே? நீங்கள் நாட்டுக்கு துரோகம் இழைக்க துணிந்த பின் உங்களை என்ன செய்வார்கள்?

சீ.என்.ஆர் ராவை தொடர்ந்து அணு சக்தி விஞ்ஞானி பிரசாத் இதேபோலேரிந்து விழுந்துள்ளார். அணுசக்தி விஞ்ஞானி எம்.ஆர்.சினிவாசன் இதுபற்றி வாய் திறக்க முடியாது என்கிறார்.அதாவது அணுசக்தி விஞ்ஞானிகளும் இதேபோல அரசு கொடுத்துள்ள அனைத்து வசதிகள்தவிர, நாட்டு மக்களுக்கு தெரியாமல், நாட்டின் நாடாளுமன்றத்திற்கும் தெரியாமல் மத்திய மாயச்சரவைக்கும் தெரியாமல், பிரதமரின் கீழ் மட்டுமே அனைத்து திட்டங்களை தீட்டுவதும்,அனைத்து கணக்குகளையும் ரகசியமாக வைத்திருப்பதும் செய்பவர்கள். அதனால்தான் அந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்களை கேள்வி கேட்கும் பொது, அணு சக்தி விஞ்ஞானிகளுக்கு கோபம் வருகிறது. இதை எப்படி "நாட்டுப் பற்றுடன்" பார்ப்பது?