Wednesday, January 25, 2012

ஊழல் நாயர் மாட்டிக்கிட்டாரா?

மாதவன் நாயர் என்ற பெயர் ஒரு பெத்த பேரு. அய்.எஸ்.ஆர்.ஒ. என்பது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்.அதுதான் அவ்வப்போது செயற்கைகோள்களை வானத்திற்கு அனுப்பும். நமது சிறி ஹரிகோட்டாவில் இருந்து அப்படி வானத்திற்கு செயற்கை கோள்களை அனுப்பும்போதெல்லாம் நாம் பூரித்து போவோம்.அதாவது இந்தியா வல்லரசாகி வருகிறது என்று நமக்கு அரசியல்வாதிகளும், ஊடகவியலாலகளும் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.நாமும் வயிறு பசித்தாலும் பராவாயில்லை, இந்தியா வல்லரசானால் போதும் என்று மகிழ்ச்சியாகவே இருந்து வருகிறோம்.அப்படி செயற்கை கொள் விடும்போதெல்லாம், அந்த வட்டாரத்தில் உள்ள மீனவர்கள் கடலுக்கு போக கூடாது என்று அதிகாரிகள் கட்டுப்பாடு விதிப்பார்கள். அதாவது கட்டாயமாக அந்த பத்து நாட்கள் அந்த வட்டார மீனவர்கள் பட்டினிதான். இப்படியாக நாம் வல்லரசாக ஆகிவரும் போது, அந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் பெறும் ஊழலில் சிக்கி கொண்டார்கள்.


இந்திய நாட்டின் முகத்தையே மாற்றி ஊழல் முகமாக ஆகிய கார்பொறேட்களை விட, இந்த அரசு அதிகார வர்க்க முதலாளிகள் செய்த ஊழல் அளவு கடந்து சென்று விட்டது. அதாவது இரண்டு தலைமுறை அலைவரிசை ஊழல் செய்த நட்டத்தை விட, ஆதர்ஷ் ஊழல் மஹாராஷ்ற்றாவில் செய்த நட்டத்தை விட, காமன்வெல்த் விளையாட்டு செய்த ஊழலை விட, இந்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் செய்த ஊழல் பெறும் ஊழலாக கணக்கு காட்டியது. அதாவது இந்த நிறுவனத்தின் முன்னாள் தலைமை அதிகாரிகள் ஒரு தனியார் நிறுவனத்தை நடத்தி வந்தனர்.தேவா என்று அதற்கு பெயர். அது பெங்களூருவில் இருக்கிறது. அதற்கு இந்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தனது "புதிய" கண்டுபிடிப்புகளை விற்று விட்டது. அதாவது இந்திய மக்களின் வரிப்பணத்தில் ஆராய்ச்சி செய்து உருவாக்கிய கண்டுபிடிப்பை, ஒரு தனியார் நிறுவனத்திற்கு "பகிரங்க ஏலம்" அறிவிக்காமல் விற்று விட்டது. அதுவும் நாட்டு பாதுகாப்பு சம்பந்தப்பட்ட இந்த நிறுவனத்தில் அப்படி ஒரு ஊழல் நடைபெற்றது.

ஆன்றிக்ஸ் என்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவன வணிக பிரிவுடன், இந்த ஒய்வு பெற்ற விஞ்ஞானிகளின் தனியார் நிறுவனமான தேவாஸ் என்ற கொள்ளை லாப அமைப்பு போட்டுக் கொண்ட ஒப்பந்தம்தான் ஆன்றிக்ஸ்- தேவா ஒப்பந்தம். விற்றவர்கள் அய்.எஸ்.ஆர்.ஒ. வின் மூத்த அதிகாரிகள். வாங்கியவர்கள் அதே அய்.எஸ்.ஆர்.ஒ.வின் பழைய மூத்த அதிகாரிகள். பழைய அய்.எஸ்.ஆர்.ஒ. அதிகாரிகள் எப்படி இப்படி ஒரு தனியார் நிறுவனத்தை தொடங்கலாம்? யாருக்கும் தெரியாத புதிய கண்டுபிடிப்பை அய்.எஸ்.ஆர்.ஒ. உருவாக்கியிருப்பதை பழைய ஒய்வு பெற்ற அதிகாரிகள் மட்டுமே எப்படி தெரிந்து கொள்ளலாம்? அது நாட்டின் ரஹசியம் இல்லையா? அதை பகிரங்க ஏலத்திற்கு விடாமல் எப்படி அந்த நிறுவன அதிகாரிகள் தங்கள் மூத்த அதிகர்ரிகளின் தனியார் நிறுவனத்திற்கு மட்டும் தெரியப்படுத்தலாம்? அதை வாங்கிய அந்த தனியார் நிறுவனமான தேவா நிறுவனம் எப்படி அதை பல்லாயிரம் கொடி ரூபாய்க்கு அந்நிய நாட்டு கார்பொறேட்களுக்கு விற்கலாம்? இந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இந்திய தலைமை அமைச்சரின் நேரடி பார்வையின் கீழ் இருப்பதால், எப்படி அந்த வியாபார ஒப்பந்தத்தை நமது பிரதமரும் அனுமதிக்கலாம்? இத்தனை கேள்விகள் வரும்போது, அந்த வணிக ஒப்பந்தத்தால் நாட்டிற்கு "இரண்டு லட்சம் கோடி" நட்டம் என்ற கணக்கை "பொது கணக்கு குழு" கொடுத்தது.


அதற்கு பிரதமர் மன்மோகன் தனக்கு இதுபற்றி தெரியவில்லை என்று எளிதாக கூறிவிட்டார். இப்போது அந்த ஒப்பந்தத்தின் கதாநாயகன் "மாதவன் நாயருக்கும், மூன்று அதிகாரிகளுக்கும்" எதிராக ஒரு ஓலை வந்துள்ளது. அதை எதிர்த்து அந்த விஞ்ஞானிகள் பெங்களூருவில் மாதவன் நாயர் வீட்டில் கூடி சதி ஆலோசனை நடத்தி உள்ளனர். எப்படி எங்களை அரசு பதவிகள் எதற்கும் எடுக்க கூடாது என்று முடிவை அறிவிக்கலாம்? என்பதே இப்போது அந்த நாயரின் கேள்வி. அவரை நட்டு துரோகம் என்று குற்றம் சாட்டி சிறையில் அடிக்காததால் இப்படி கேட்கிறாரா? இந்த மாதவன் நாயர்தான் தனது செயற்கை கோளை"காலஹஸ்தி" கோவிலில் மாதிரி என்று கொண்டு சென்று வைத்து பூசை செய்தவர். அதாவது அறிவியலில் நம்பிக்கை இல்லாமல் "கல் சாமியிடம் போய் கும்பிட்டு விழுந்தவர். அந்த குறிப்பிட்ட செயற்கை கோலும் தோல்வி அடைந்து விட்டது. இப்போது போய் அந்த சாமியிடம் கேட்க வேண்டியதுதானே?