Wednesday, January 18, 2012

எஸ்.எம். கிருஷ்ணா தமிழக மீனவர்களின் நிலைமையை புரிந்து கொண்டாரா?

கிருஷ்ணா கொழும்பு சென்றார். தமிழர்களுக்கு அதிகார பகிர்வு பற்றி பேசினார். அதிசயமாக ராஜபக்சே ஒப்புக் கொண்டார். பதின்மூன்றாம் சட்ட திருத்தம் பற்றி வாய் கிழிய பேசினார்கள். அது என்னடா? பதின்மூன்றாம் சட்ட திருத்தம்? ராஜீவ் காந்தியும், ஜெயவர்தனேயும் பேசி, தமிழர்கள் அல்லாத அந்தஇரண்டு மண்டைகளாலும் தமிழருக்கென்று ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டதே, அந்த ஒப்பந்தத்தில் உள்ள "வடக்கு-கிழக்கு" ஒன்றுபட்ட பிரதேசமாக இருக்க, அதை "தமிழர் தாயகம்" என்று அழைக்க கூட, சக்தியில்லாத பதின்மூன்றாம் சட்ட திருத்தம் என்ன தீர்வு? கேட்கிறவன் எல்லாம் கிறுக்கனா?

ராஜபக்சே நடத்தும் ராஜாங்கத்தில், ஒவ்வொரு பிராந்தியத்தின் கவுன்சில் அதிகாரத்தின் கீழும், "நிலமும், காவல்துறையும்" வராது என்ற சட்டம் எப்படி சுயாட்சி பற்றி பேசும்? வடக்கிலும், கிழக்கிலும் சிங்கள குடியேற்றம் திருப்ப பெறப்படும் என்று ராஜபக்சே கூறினாரா? அல்லது கிருஷ்ணா அதுபற்றி கேட்டாரா? அப்புறம் எப்படி தமிழருக்கான அதிகாரப்பகிர்வு பற்றி பேச முடியும்? சிங்கள ராணுவம் வடக்கு, கிழக்கிலிருந்து வெளியேற்றப்படும் என்று சிங்கள அரசத்தலைவர் கூறினாரா? அல்லது கிருஷ்ணா அதுபற்றி பேசினாரா? அப்புறம் எப்படி தமிழர்கள் பற்றி பேச முடியும்? இவர்கள் வேறு எதையோ மறைக்க இந்த அதிகாரபகிர்வு என்ற "போலி முகமூடியை" போட்டு கொள்கிறார்கள்.

அதாவது "நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்" ஒவ்வொரு நாட்டிலிருந்தும் அங்கீகாரம் பெற்று விடும் போல உலக சூழல் மாறி வருகிறது. அய்.நா. சபையின் அணித உரிமை கவுன்சிலில் அதன் பிரதிநிதிகள் அமர்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் நடந்த " காமன்வெல்த் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள்" மாநாட்டில் "நாடு கடந்த தமிழீழ அரசாங்க வெளிவிவகார அமைச்ச்சர்" அமர்கிறார். அதே மாநாட்டில் ராஜபக்சேவும் இலங்கை சார்பாக அமர்கிறார். அப்படியானால் சிறிது, சிறிதாக இரண்டு நாடுகளுக்கும் இலங்கைக்குள் பிரதிநிதித்துவம் கொடுக்க உலக சமூகம் தயார் ஆகிவிட்டது என்று பொருளா? . இத்தகைய செயல்பாடுகள்தான் இலங்கை சிங்களர்களை அசைத்ததோ இல்லையோ, டில்லியை அசைத்துள்ளதாக தெரிகிறது. அரசியல் போராட்டத்தில் புலிகளும், ஈழத்தமிஹ்ரகளும் வென்று வருகிறார்களே? அதை உடைக்க வேண்டுமே என்று டில்லிகருதி கிருஷ்ணாவை அனுப்பியுள்ளதா?


இந்த வல்லாதிக்க சக்திகளின் எந்த செயலும், உலக தமிழர்களை இனியும் சற்று கூட பின்வாங்க செய்யாது. தமிஹீழம் மட்டுமே ஒரே தீர்வு எனப்தை உரத்த குரலில் கூவி கொண்டே இருப்போம். அய்.நா. தலையீடு வந்துதமிழீழம் கிடைத்து விடக் கூடாது என்று டில்லி அக்கறையாக இருப்பது தெரிகிறது. அடுத்து "இந்து மகா சமுத்திரத்தில்" சரவதேச எல்லையை கடலில் தாண்ட கூடாது என்று பேசியிருக்கிறார்கள். கிருஷ்ணாவிற்கோ, டில்லிக்கோ, மீனவர்கள் என்றால் என்னென்று தெரியுமா? இந்திய- இலங்கை இடையே கடலில் எவ்வளவு தூரம் இருக்கிறது என்று தெரியுமா? அங்குள்ள நிலைமை தெரியுமா? அதில் விசைப்படுகுகள் எவ்வளவு தூரம் தாண்டி மட்டுமே மீன் பிடிக்க முடியும் என்பது தெரியுமா?கட்ச தீவு எவ்வளவு தூரத்தில் இந்திய எல்லையில் இருந்து இருக்கிறது என்று தெரியுமா? கட்ச தீவு ஒப்பந்தத்தில் உள்ள அம்சங்களை இலங்கை அரசு இப்போது மறுத்து பேசுகிறது என்று தெரியுமா? இதெல்லாம் தெரியாமல் இந்த ஆள் எப்படி மீனவர்களை பற்றி பேசலாம்?