Tuesday, January 17, 2012

சோ பேச்சும், நடராசன் பேச்சும் பெரும் நகைச்சுவைகள்?

சோ தனது துக்ளக் இதழின் அண்டு விழாவில் வழக்கம்போல பா.ஜ.க. துதி பாடலும், தனது திறமை என்று அவரும், அவரது ஆதரவாளர்களும் நம்பும் ஒரு "மாயையும்" சொல்லி தீர்த்தார்.இந்த முறை அவரது அவசரம் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் பாஜகவை அமர வைத்து விட வேண்டும் என்பதே. அதற்கு இந்திய ளவில் பாஜக எந்தளவு தயார் என்று நாம் கேட்டுவிட கூடாது. அவருக்கும் அது தெரியும். காங்கிரஸ் எத்ரிப்பு இந்திய மக்களிடம் பெரும் அளவில் இருக்கும்போது, பாஜக ஆதரவாக துவே இல்லை எனபது கண்கூடு. இது தமிழக முதல்வருக்கும் தெரியும். வருகிற தேர்தல்களில் இது சிலமாநிலங்களில் நிரூபிக்க ப்பட வாய்ப்பு இருக்கிறது.

இப்படி சூழலில் போயஸ் தோட்டத்தில் நடந்த ஒரு மாற்றத்தினால் தங்களுக்கு வாய்ப்பு கிட்டுமா என்று சோ வகையாறக்கள் எதிர்பார்ப்பதுமிருக்கிறது. வெளியேகூட அப்படித்தான் பலரும் பேசுகிறார்கள். ஆனால் அந்த சோ ராமசாமியின் கருத்துகளுக்கு எதிரான, தீர்மானங்களைத்தான் அதிமுக தலைமை சட்டமன்றத்திலும், தங்கள் கட்சியின் பொது குழுவிலும், நிறைவேற்றியிருக்கிரார்கள்.இற்ற்ஹை நாம் ராஜபக்சே போர்குற்றம் பற்றிய விசாரணை கோரிக்கையிலும், மூன்று தமிழர் தொக்கு தணடனையை குறைக்க கூறும் முயற்சியிலும், முல்லைபெரியார் விசயத்தில் தமிழக உரிமையில் நிற்பதிலும், கூடங்குளம் அணு உலையின் அச்சத்தை மக்கள் மத்தியில் போக்காமல் அமுல்படுத்தாதே என்ற தீர்மனாத்திலும் நன்றாக காணலாம்.

அதனால் சோ விற்கு செல்வாக்கு இருக்கிறது என்பது ஒரு பொய்மை கூற்று என்பது தெளிவாகும். அத்தகைய சூழலில்தான் அத்வானியையும், மோடியையும் கூட்டி வந்து அந்த பெரிய மனிதர்களை தமிழக முதல்வர் '' பெயரளவுக்காவது" சந்திப்பார் என்று எண்ணி அதன்மூலம் ஒரு பாஜக கூட்டணி மாயையை ஏற்படுத்த சோராமசாமி முயன்றார். ஆனால் அது பலிக்க வில்லை. முதல்வர் நேர்டம் ஒதுக்கியதாக பரப்பப்பட்டாலும், அது நடக்க வில்லை. அப்போதும் இந்த இந்துத்துவா கும்பல் விடவில்லை. பாஜக அதிமுக வுடன் கூட்டணிக்கு தயாராக இருக்கிறது என்று வந்திருந்த பெரும் தலவர்களை வைத்து பேச செய்துவிட்டார் சோ. அதற்கும் தமிழக முதல்வர் தயாராக இல்லை என்று கூறாமல் "மவுனம்" காத்து விட்டார் ஜெயலலிதா என்று டைம்ஸ் ஆப் இந்தியா எழுதி விட்டது.

அடுத்த கட்டமாக சோ அடுத்த தந்திரம் செய்தார். செல்வி.ஜெயலலிதா தங்கல்கட்சி பொது குழுவில் அறிவித்தபடி, நாடாளுமன்ற டேஹ்ர்தலில் அதிமுக முக்கிய பங்கை செலுத்தும் என்பதை பயன்படுத்த முயன்றார். அதுதான் பாஜக வேட்டிரி பெற்று பிரதமர் நாற்காலியை பிடிக்கா விட்டாலும், பஜகாவிற்கு வெளியே இருக்கும் ஒரே தகுதி உள்ள பிரதமர் செல்வி.ஜெயலலிதா தான் என்று சொபேசி அந்த பாஜக தலிவர்களிடமும் அங்கீகாரம் வாங்கி விட்டார். இதில் மோடியை முன்னால் கொடுவர சோ எடுத்தமுயற்சிகல்தான் இவை என்பதும், அத்வாநியையே வைத்து அவரது வாயாலேயே மோடியை அன்கீகற்றிக்க வைக்கும் சோ மற்றும் குருமூர்த்தியின் தந்திரம் பலித்துவிட்டது. ஆனாலும் அவர்களது இன்னொரு முயற்சியான ஜெயலலிதாவை ஒப்புக்கொள்ள வைப்பது என்பது நிறைவேற வில்லை. காரணம் தமிழ்நாட்டில் பாஜகாவின் வாக்குகள் ஜெயலலிதாவிடம் ஏற்கனவே வந்துவிட்டன. பாஜக அல்லாத கூட்டணியில்தான் இருபது லட்சம் முஸ்லிம் வாக்குகளையும், இடதுசாரிகள் வாக்குகளையும் வாங்க முடியும் எனபதும் ஜெயலலிதாவிற்கு தெரியும்.

அடுத்த பேச்சு நடராசன் உடையது.இவர் சசிகலா வகையறக்களை தோட்டத்திலிருந்து வெளியேற்றிய பிறகு, தஹ்னது முதல் பொது உரையில் தனது உண்மையான விசுவாசத்தை காட்டிவிட்டார். அதில் ஜெயின் சாதியினர் ஆலோசனையின் பேரில் தாங்கள் வெளியேற்ற பட்டதாக கூறுகிறார். அவருக்கு பார்ப்பனர் அல்லாத அதிகாரிகளின் பங்கு முக்கியமாக இருந்தது என்பது டேஹ்ரிந்தாலும், கருணாநிதியின் அரசியல் தந்திரத்தை அவிழ்ழ்துவிட எண்ணுகிறார். அதாவது ஒரு களத்தில் வெற்றி பெற்று இன்று தோல்வி காணும் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதோர் அரசியல் என்ற தந்திரம்தான் தனது மறு வாழ்விற்கு உதவும் என்று கலைஞர் எண்ணுகிறார். அதோயே நடராஜனும் பயன்படுத்துகயார். அதற்கு கலைஞர் ஐக்கிய முற்போக்கு அரசாங்கத்தை விட்டு வெளியே வந்தால் தான் பின்னால் செல்வேன் என்று கூறுவதன் மூலம் ஒரு எதிர்பார்ப்பை கூறுகிறார்.

அதாவது அழகிரி மூலம் இரண்டு முறை பேசி, மம்தாவிடமும், சரத் பவரிடமும், கலைஞரும் பேசி, அதன்மூலம் திமுக தலைமை அந்த இரு கட்சிகளுடன் சேர்ந்து கொண்டு மத்திய ஆட்சிக்கு கெடு வைக்க இருக்கிறது என்ற செய்தியை தெரிந்து கொண்டு நடராசன் அப்படி கூறியுள்ளார். அதேசமயம் அதிமுக தலைமை பற்றி சோ ராமசாமி, நடராசன் இருவர் கோரியதையும் பொய்யாக்கி வருகிறது ஜெயலலிதா தலைமை. ஒரு பெண் தலைமைக்கு யாராவது ஆலோசகர் தேவை என்ற தவறான புரிதலை அல்லது தவறான "ஆணாதிக்க, பார்ப்பனீய" பார்வையை பொய்யாக்கி வருகிறார் செல்வி.ஜெயலலிதா.