Thursday, November 8, 2012

புரட்சியை அழிக்கிறதே "சாதி"

புரட்சியை அழிக்கிறதே "சாதி"
     தென் மாவட்டங்களில் வழமையே இப்படி சாதி சண்டையை மூட்டி விடுவதுதான். ஆனால் வாடா மாவட்டங்களில் உள்ள சாதிகள் தங்களுக்குள் முரண்பட்டு இருந்தாலும் அவை டேஹ்ருவில் இறங்கி சண்டை போட்டுக் கொள்ள மாட்டார்கள் என்று கூறி வந்தார்கள் ஆனால் அதை இன்று பொய்யாக்கி விட்டது "தர்மபுரி" மாவட்டம்  தருமபுரி மாவட்டத்தில் உள்ள "நாயகன்கொட்டை" பிரபலமான் ஊர். எதற்கு?' நக்சல்பாரி கொள்கைகளில்   
முழு ஆதரவு கொடுத்து வந்த ஊர். அங்குதான் நக்சல்பாரி புரட்சியாளர் களான தோழர் அப்புவின் சிலையும், தோழர் பாலனின் சிலையும்  வைக்கப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு நகசல்பாரி கருத்துக்களை உள்வாங்கிய ஒரு இடம் அது. அங்கெ சாதிகளை தாண்டி தோழர்கள் வலம் வந்தனர் நாயக்கன்கொட்டை கிராம வன்னியர்கள் அருகே உள்ள தலித் கிராமங்களில் வாழும் மக்களுடன் "தோழமையாக" பழகி வாழ்ந்ததால், அந்த தலித் கிராமங்களான "நத்தம், அண்ணா நகர்" ஆகியவை நகசல்பாரி கருத்துகளுக்கு, தோழர்களுக்கு முழு ஆதரவு கொடுற்ற்ஹ்து வந்த வரலாறு உண்டு. இப்போது அங்கே நேற்று "சாதி மோதலா?" என்பதே இப்போது கேள்வி.

                                  நாயக்கன்கொட்டையை சேர்ந்த நாகராஜ் என்ற வன்னியர் தோழருக்கு ஒரு மகள். மகள் படித்து நர்சாக ஆனபின்பு, "சாதி தாண்டிய மானுடப்பார்வையை" பெறக்கூடாதா? அந்த பெண் ஒரு தலித் இளைஞரை "காதலித்து திருமணம் " செய்துகொண்டார் இதை "வன்னிய சாதிவெறி" ஒப்புக் கொள்ளவில்லை அந்த பெண்ணை நிர்ப்பந்தம் செய்தது. பெண் தைரியமாக "சாதி மறுக்கும் மனுஷியாக" தன்னை அறிவித்து கொண்டார் தான் காதலித்து திருமணம் செய்து கொண்டதை உறுதியாக அறிவித்தார். பொறுக்குமா சாதி வெறிக்கு? சாதி தாண்டி "காதலித்தால்" சாதி தாண்டி மனம் ஒற்றி மணம் முடித்தால்  "சாதியை" வைத்து எப்படி அரசியல் செய்வது என்று சிந்தித்தார்களா? ஆயிரம் பேருக்கு மேல் திரண்டு "நத்தம், அண்ணா நகர்" என்ற தலித் கிராமங்களுக்கு "தீ" வைத்தனர். வநீயராக இறாமல் "தோழராக" எப்படி நாகராஜன் இருக்கலாம் என்று அவரை மிரட்டினர். நாகராஜன் "நேற்று தற்கொலை" செய்துகொண்டார். சாதி வெறியர்கள் தெருவில் இறங்கினர் காவல்துறை நுழைந்தது. இன்று நாகராஜனின் "மச்சினி"யும் தற்கொலை செய்து கொண்டார் என்று செயுதிகள் வருகின்றன மீண்டும் சாதி வெறியர்கள் "ஆட்டம் போட" முயல்கின்றனர். அப்படியானால் சாதி தாண்டிய மண்ணையும், இந்த சாதி வெறியர்கள் நெற்றி கொண்டு விட்டார்களே? 

No comments:

Post a Comment