Sunday, September 30, 2012

திமுக, அதிமுக உள் கோஷ்டி சண்டைகளில் எது சிறந்தது?


      அதிமுக வில் பேரவை தலைவர் தனது பொறுப்பிலிருந்து விலகினார். இது செய்தி. அதற்கு இப்போது நக்கீரன் ஏடு  பெருமைப்பட்டுக் கொள்ளலாம் . அதுவும் உண்மைதான். நக்கீரன் எடுத்தான் அவரது பிறந்த நாளில் நாளை வரும் பெங்களூரு நீதிமன்ற தீர்ப்பை விரும்பி "நாக்கை சப்பிக்கொண்டு" தனது ஆதரவாளர்கள் "நாளைய முதல்வர்" பட்டம் சூடினார்கள் என்ற செய்தியை ஆழமாக, படம் பிடித்து, சுவரொட்டிகளின் ஆதரங்களுடன், பெயர் பட்டியலுடன் வெளியிட்டது. அது அதிமுக விலுள்ள அவருக்கு எதிரான கோஷ்டிகளின் "கைவண்ணமாகவும்" இருக்கலாம். ஆனாலும் அதை ஆராய்ந்த ஆட்சியாளர்கள், உளவு துறை மூலம் விவரம் கேட்டு, ஆங்காங்கே சிலரை முதலில் தூக்கி விட்டு கடைசியாக "அவரிடம்"  இடுதலை பத்திரம் பெற்றுள்ளார்கள். அது சரி.எதற்காக அந்த முடிவை பல மீனவர் சங்க நிர்வாகிகள், இனிப்பு கொடுத்து, பிரியாணி சாப்பிட்டு கொண்டாடினார்கள்?

                  ஏற்கனவே சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே திமுக வின் துணை முதல்வருடன் வநிகுரவு என்று சொல்லி தானே அமைச்சர் பொறுப்பை கொடுக்காமல் இருந்தார்கள்? இப்போது மீனவர் சங்கங்கள் போராடிய "சீ.பி.சீ.எல். குழாய் ஒப்பந்தத்தில்" மீனவர் குரலுக்கு எதிராக"அவர்" இருந்தார் என்று குறைப்பட்டார்களே? அதனாலா? தொடர்ந்து மீனவர் சங்கங்களின் போராட்டங்களை ஒடுக்க காவல் துறையினருக்கு "அவர்" நிர்ப்பந்தம் கொடுத்தாக குறைப்பட்டுக் கொண்டார்களே? அதற்காகவா? ராயபுரம் மீன்பிடி துறைமுக பிரச்சனையிலும் மத்திய ரசின் "துறைமுக நிர்வாகத்திற்கு" அவர் ஆதரவாக இருந்ததாக புலம்பினார்களே? அதற்காகவா? 


       இந்த கதை இப்படி இருந்தாள், திமுக கதை இன்னமும் பெரிசா இருக்கே" அதே நக்கீரன் ஏடு, ஐந்து இதழ்களுக்கு முன்பு "முக்கோண மோதல்" என்று ஸ்டாலின், அழகிரி, கனிமொழி  மோதலை" எழுதியது. அது கணிம்சாஹிக்கு எதிரான பல எழுத்துக்களுடன் இருந்தது.ஸ்டாலின் தரப்பிற்கு அப்போது மகிழ்ச்சி. கலைஞருக்கு வருத்தம். கனிமொழி உடைந்தே போனார். அடுத்து விழுப்புரம் முப்பெரும் விழா. அதுபற்றிய எழுத்தில் ஸ்டாலின் குழு செய்த "கனிமொழிக்கு எதிரான சதிகள்" அதே ஏட்டில் எழுதப்பட்டன. இப்போது ஸ்டாலின் குழுவிற்கு கோபம். இது என்ன "சமன் வேலையா?" என்று ஒரு கோபம். அடுத்து மதுரை பிரச்சனையில், அழகிற், ஸ்டாலின் குழுக்களின் மோதல் பற்றி விவரமாக வந்துள்ளது. மீண்டும் ஸ்டாலின் குழவிற்கு வருத்தம். சரி. அந்த எழுத்துக்களில் எதையாவது "இல்லை" என்று ஸ்டாலின் குழு மறுக்க முடிய்டுமா? எல்லாம் கலைஞருக்கே வெளிச்சம். அவர் சொல்லித் தானையா எல்லாம் இப்படி " வருது"> இது ஸ்டாலின் குழுவினரது ஆதங்கம். 


       இப்போ சொல்லுங்கள். எந்த மோதல் உயர்ந்தது? அதிமுய்க வை திமுக மிஞ்சி விட்டது என்று ஒப்புக் கொள்கிறீர்களா? எதை எடுத்தாலும் திமுக தானையா வெற்றி பெரும். கோஷ்டி மோதலிலும் திமுக அளவு  அதிமுக வால் முடியுமா? பாருங்க. கனகிராஸ் தனது இளைஞர் காங்கிரஸ் டதேர்தலை நடத்தி அறிவித்துள்ளது. தலைவராக வாசன் கோஷ்டி என்றால், துணை தலைவராக ச்டம்பரம் கோஷ்டி வந்துட்டாங்களே? எப்படி பிரிச்சி கொடுத்துட்டாங்க, பார்த்தீங்களா? அதைக் கூட திமுக வில் ஸ்டாலின் கோஷ்டி விடவில்லை என்றால், அது "இளைய அரசரின் ராஜா தந்திரம்தானே?" பாராட்டுன்கையா. கையா.. 

Tuesday, September 18, 2012

கலைஞரின் ஏவுகணைகள்,புஸ்வானம் ஆகிவிட்டன.


     சமீப நாட்களில், கலைஞருக்கு நெடுமாறனை தாக்கி எழுதுவது என்பது வெல்லம் சாப்பிடுவது போல இருக்கிறது. அவரது நிலைமை "முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு" பிறகு மிகவும் மோசமாக போய்விட்டது. உலகத் தமிழர்கள் யாருமே கலைஞரை இனி நம்ப மாட்டோம் என்ற நிலையை எடுத்துவிட்டனர். தன்னைத்தானே "தமிழினத் தலைவர்" என்று  அறிவித்துக் கொண்டு, அதற்கேற்ற "பக்கவாத்தியங்களையும்" உடன் இழுத்துக் கொண்டு செல்லும் ஒரு தலைவர், அதற்கான "தளம்" காலி ஆகிவிட்டது என்று உணரும்போது, அந்த நிலை "பரிதாபகரமானதுதானே?" அப்படி நிலையில் இன்று கலைஞர்  இருக்கிறார். அதனால் இந்திய மத்திய அரசுதான் அந்த படுகொலைகளுக்கு காரணம் என்பதையும், தனது பங்கும் அதில் உண்டு என்பதையும் "மறைக்க" முயல்வது என்ற "தற்காப்பு" மனோநிலையில் கலைஞர் இருக்கிறார் என்பது பழ.நெடுமாறனின் வாதம்.

                 ஆனால் அப்படி மட்டுமே நாம் கலைஞரை  நினைக்க முடியவில்லை. அவரது முக்கிய நோக்கமே "இந்தியப் பேரரசை " காப்பாற்றும் நோக்கம்தான் என்பதாக எண்ணத் தோன்றுகிறது. "ஏக இந்தியா" என்ற சொற்றொடரை  அவர் "நான்கு ஆண்டுகளாக" தெரிந்தே பயன்படுத்தி வருகிறார். அவருக்கு "தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை" மீது இருந்த நம்பிக்கைகள் உடைந்து பல ஆண்டுகள் ஆகின்றன. தேசிய இனங்களை அடக்கி ஆளும் இந்தியப் பேரரசை "நாடியே" சார்ந்து நின்றே "பிழைக்க" முடியும் என்ற சிந்தனைப் போக்கிற்கு கலைஞர் வ்ந்துவிட்டார் என்ற உண்மையை நாம் காண வேண்டும்.

                    அதனாலேயே அவர் ஈழத்தில் நடந்த "இன ஒடுக்கல்" "இன அழிப்பு" ஆகிய கொடும் செயல்களை இந்திய அரசு ஆதரிக்கிறது என்று தெரிந்திருந்தும்கூட, ஈழப் பிரச்சனையில் "இந்திய அரசின் கொள்கையே, தனது கொள்கை" என்று பகிரங்கமாக அறிவித்துக் கொண்டு செயல்படுகிறார். அப்படிப்பட்டவர் வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டிய கொடுமை இருக்கிறது என்பதுதான் அவரது " இரட்டை நாக்கிற்கு" காரணமாக அமைகிறது. அதனால் அவர் தங்களது   தற்காப்பிற்கு மட்டுமின்றி, "தமிழினத்தின் மீதான தாக்குதலுக்கும்" இன்றைக்கு "வரிந்து" கட்டிக் கொண்டு இறங்குகிறார். அதனால்தான் அவர் நெடுமாறன் கட்டுரைகளை எதிர்த்து "கடுமையாகவே" எழுதி வருகிறார். அவரது அனைத்து பதிகளும், ஒரே "கருத்தை" சுற்றியே வருவதை நாம் காணலாம். அதாவது ஈழத் தமிழரது  விடுதலைப் போராட்டம் வெற்றி பெறாததற்கு கரணம் "சகோதர யுத்தம்" என்பதே கலைஞரின் வாதம் அதன்மூலம் அவர் "தமிழீழ விடுதலைப் புலிகளையும், பிரபாகரனையும், எம்.ஜி.ஆரையும்,அதற்காக நெடுமாறனையும்" விமர்சித்து கடந்த சில நாட்களாக எழுதி வருகிறார். தாங்கள் தப்பித் துக்கொள்ள தற்காப்பிற்காக "சகோதர யுத்தத்தை" காரணமாக கூறுகிறார்  கலைஞர் என்பதே நெடுமாறன் அவர்களது வாதம். 

              அப்படி கலைஞர் கூறும் கூற்றுக்களை நாம் ஆராய்ந்து  ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும், "பதில்" காண  வேண்டிய நிலையில் உள்ளோம். உணமைகளை உண்மை என்று நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். உதாரணமாக "புலிகளுக்கும், டெலோ விற்கும்" மோதல் நடந்து  பலரும் அதில் கொலலப்பட்டதை நாம் மறந்துவிடவோ, மறுத்துவிடவோ முடியாது. ஆனால் அவை ஏன் நிகழ்ந்தன? என்றும், எதற்காக நடந்தன? என்றும், யாரால் நடத்தப்பட்டன? என்றும், துல்லியமாக ஆய்வு நடத்த வேண்டிய கட்டத்தில் இன்று இருக்கிறோம். ஆகவே அத்தகைய மோதல்கள் பற்றி மீண்டும் ஒரு "தமிழர் விரோத" சக்தி, தனது நோக்கத்தை நிறைவு செய்ய முயலுமானால், அதற்கு தக்க பதிலடி உண்மைகளை நாம் பகிரங்கப் படுத்த வேண்டும்.

              அந்த முயற்ச்சியில், நாம் கலைஞரின் கேள்விகளையும், குற்றச்சாட்டுகளையும், விரிவாகவே காணலாம். 1985 ஆம் ஆண்டு நடந்த டெலோ-புலிகள் மோதல் பற்றி கலைஞர் குறிப்பிடுகிறார். அன்றைய சூழலில், பல ஈழ விடுதலை போராளிகளின் அமைப்புகள் தமிழகத்தில் இருந்தன. அவற்றில் "டெலோ" கலைஞருக்கு நெருக்கமான அமைப்பாக இருந்தது. "புலிகள்" அமைப்பு எம்.ஜி.ஆர்.க்கு நெருக்கமாக இருந்தது. கொடூரமான இனக்கலவரம் நடந்து இரண்டே ஆண்டுகளில், பல ஈழ இளைஞர்கள் பல போராளி அமைப்புகள் மூலம் தமிழ்நாட்டிற்குள் கொண்டுவரப் பட்டார்கள். "பிளாட்","ஈரோஸ்", "ஈ.பி.ஆர்.எல்.எப்."ஆகிய அமைப்புகளும் அதே போல செயல்பட்டன. முதலில் "பிளாட்" அமைப்பும், அதன் தலைவர் முகுந்தன் என்ற உமா மகேஸ்வரனும் தான் எம்.ஜி.ஆர்.க்கு நெருக்கமாக இருந்தது. காலப்போக்கில் "புலிகளின்" செயல்பாடுகள் ஈழத்தில் "கொரில்லா  போராட்டத்தை" வெற்றிகரமாக நடத்தியதே பிரபாகரனை எம்ஜி.ஆர்.க்கு நெருக்கமாக ஆக்கியது. 

              அத்தகைய சூழலில், தந்தை செல்வா வின் தமையன், சந்திரஹாசன், இந்திய அரசின் வெளிவிவாகரத் துறையின் உளவுத் துறையான "ரா" அமைப்பிற்கு நெருக்கமாக இருந்தார். அவர் வழக்கறிஞராக இருந்ததால், டெலோ அமைப்பின் முத்த தலைவர்களான  குட்டிமணி , ஜெகன், தங்கதுரை ஆகியோருக்கு வழக்கரிஞராக் வாதாடினார். அவர்கள் மூவரும்  வல்வெட்டித்துறை மீனவ் கிராமத்திலிருந்து வந்தவர்களாக இருந்தனர். அதே கிராமத்திலிருந்து வந்ததால்தான் பிரபாகரனை அவர்கள் "தம்பி" என அழைத்தார்கள்.  டெலோ அமைப்பிற்கு   அடுத்து தலைமை ஏற்ற ஸ்ரீ சபாரத்னமும், வல்வெட்டித்துறை கிராமத்திலிருந்து வந்தவர்தான். அவரை முதலில் "டால் ஸ்ரீ " என்று அழைப்பார்கள். அந்த டால் ஸ்ரீ மூலம், சந்திரஹாசன் ஈழ இளைஞர்களை வரவழைத்து, சென்னை விமான நிலையம் அருகே "முகாம்" அமைத்து, ரா அமைப்பின் உதவியுடன் "பயிற்ச்சிகளை" கொடுத்து வந்தார். அந்த அமைப்பு அன்று கலைஞருக்கும் நெருக்கமாக் இருந்தது. இன்றுவரை எதற்கெடுத்தாலும், கலைஞர் அவர்கள் "சந்திரஹாசன் கூற்றையே" மேற்கோள் காட்டி தனக்கு சாதகமாக இலங்கை பிரச்சனையை பேசுவதை நாம் எல்லோரும் கண்டு வருகிறோம். இந்திய மத்திய அரசின் உளவுத் துறையான "ரா" அமைப்பிற்கு நெருக்கமான் போராளி அமைப்புடன் நெருக்கமாக இருப்பது என்பது எப்போதுமே கலைஞர் அவர்களுக்கு "சவுகரியமானதாக" இருந்திருக்கும். 

               அப்படி சூழலில், 1983 இல் ஜூலை 23  இல் இனப்படுகொலை இலங்கையில் உச்சகட்டத்தில் நடக்கிறது. அதில் வெலிக்கடை சிறையில் "குட்டிமணி, ஜெகன், தங்கதுரை" ஆகியோர் "கண்கள் பிடுங்கப்பட்டு" கொடூரமாக சிங்கள காடையர்களால்  கொலை செய்யபப்டுகின்றனர். அப்போது அவர்களை இந்தியாவில் பிடிபட்டபோது, இலங்கைக்கு அனுப்பிவைத்தது யார் ஆட்சியில் என்ற "சர்ச்சை" மீண்டும் வ்ருகிறது.கலைஞர் ஆட்சியில்தான் குட்டிமணி,ஜெகன்" தமிழ்நாட்டில் பிடிபட்டபோது, "கைதிகள் பரிமாற்ற  ஒப்பந்தம்" இல்லாமலேயே இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள் என்பது ஏற்கனவே அம்பலமாகி இருந்தது. அதை எம்.ஜி.ஆர். ஆட்சியில், நெடுமாறன் கேள்விக்கு, எம்.ஜி.ஆர். பதில் கொடுக்கும்போது, சட்டமன்றத்திலேயே கலைஞர் மறுக்க, எம்.ஜி.ஆர். "கோப்புகளை" காட்டி அம்பலப்படுத்தியிருக்கிறார்.  அதனால் வெலிக்கடை சிறை கொலைகள் கலைஞரை அன்றே "தற்காப்புக்கு" தள்ளிவிட்டது.

                     அன்றைய தற்காப்பை கலைஞர் யார் மூலம் எடுத்தார் தெரியுமா? அன்றைய டெலோ தலைவர் ஸ்ரீ மூலம்தான். எப்படி? டெலோ வின் அன்றைய தலைவர்களான ஸ்ரீ சபாரத்னமும், ராசுப் பிள்ளையும் ஏடுகளுக்கு கொடுத்த அறிக்கையில், "குட்டிமணியும், ஜெகனும், தமிழ்நாட்டில் பிடிபடும்போது, தங்களை விடுதலைப் போராளிகள் என்று அறிவிக்கவில்லை என்றும், கடத்தல்காரர்களாக காவல்துறை எண்ணியே இலங்கைக்கு அனுப்பி வைத்தார்கள்" என்றும் அதில் குறிப்பிட்டு இருந்தார்கள். இத்தகைய "தற்காப்பு" அன்று கலைஞருக்கு மட்டுமே தேவைப்பட்டது. அதேபோல குட்டிமணியின் மனிவி எழுதிய கடிதம் ஒன்றும் "தேவி" வார இதழில் வெளியிடப்பட்டது. இவ்வாறு தன்னை தற்காத்துக் கொள்ள உண்மைகளை மறைப்பவரா கலைஞர் என்று நான் வினவலாம்.  அணாவிற்கு பிறகு ஆட்சிக்கு வந்த கலைஞர், அண்ணாமலை பலகலை கழகத்தில் டாகடர் பட்டம் வாங்க போனபோய்சு, காங்கிரஸ் மாணவர்களால் கலக்கம் செய்யப்பட்டு, காவல்துறையில் தாக்குதலில், உயிர் இழந்த "உதயகுமார்" என்ற  மாணவனை, அவரது தனத்தை மூலமே "தன் மகன் அல்ல" என்று கூறவைத்த "வைரம்" போன்ற மனம் படைத்தவர் அல்லவா கலைஞர் என்று எண்ணிப் பார்க்க தோன்றுகிறது. அதனால் சகோதர யுத்தம் என்று 1985 ஆம் ஆண்டு நிகழ்வுகளை கூறி நெடுமாறனையும், எம்.ஜி.ஆர்.யும் வம்புக்கு இழுக்கும் கலைஞர் அவர்கள்,  அதற்கு இரண்டு ஆண்டுக முன்பே, ஒரு போராளி இயக்க தலைவர் பற்றியே, அதே இயக்கத்தின் அடுத்த தலைவர் மூலம் "அவதூறாக" கூற வைத்த பெருந்தகை என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.அதனால் அப்போதே சகோதர யுத்தத்தை தொடங்கி வைத்த "பெருமையை" அவர் பற்று விடுகிறார். ஒருமுறை இந்திய உளவு துறையான "ரா"தான் சகோதர யுத்தத்தை "தூண்டிவிட்டது" என்று கலைஞர் பேசியதையும் நாம் மறக்க முடியாது. அதனால் அவரது இன்றைய குற்றச்சாட்டுகள் தானாகவே முறிந்துவிடுகின்றன.

       அடுத்து  கலைஞரை நியாயப்படுத்தி, நெடுமாறனையும், எம்.ஜி.ஆர். அவர்களையும் குற்றம் சாட்டி, கலைஞரது கூடாரத்திலிருந்து, வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஒரு  கட்டுரையாக, "ராஜபக்சேக்கு தெரிந்தது நெடுமாறனுக்கு எப்படி தெரியாமல் போனது?" என்ற தலைப்பில் ,  "ஜூனியர் விகடன்" வார இருமுறை ஏட்டில் எழுதியுள்ளார். அதை எடுத்து இன்றைய முரசொலியில் மறு பதிப்பு செய்துள்ளார்கள். அதில் "எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில்தான் புலிகளிடமிருந்து ஒயர்லஸ், ஆயுதங்கள் பறிக்கப்பட்டன . அதற்கு எதிராக  பிரபாகரன் உண்ணாவிரதம் இருந்தது, கிட்டு வீட்டு காவலில் வைக்கப்பட்டது யார் ஆட்சியில்? " என்று நினைவாகவே கேட்டுள்ளார். அது நல்ல வாதம்தான். நாமும்  முழு விவரம் அறிய முன்னாள் போராளிகளை அணுகி நடந்த விவரங்களை சேகரித்தோம்.

                      எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் , பெங்களூருவில் "சார்க்" மாநாடு நடந்தது. அதற்கு பெங்களூரு வந்த ராஜிவ்காந்தி, உத்தரவின் பேரில் பிரபாகரன் பெங்களூருவிற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கே மத்திய அரசின் நிர்ப்பந்தத்திற்கு பிரபாகரன் பணியவில்லை என்பதால்,  மத்திய அரசின் "கட்டளைப்படி" அனைத்து போராளிகள் அமைப்புகளின் ஆயுதங்கள் பறிக்கப்பட்டும், தலைவர்கள் சிறை வைக்கப்பட்டும் ஒரு ஒடுக்கல் நடந்தது. மத்திய அரசின் கட்டளைப்படி அதை மாநில அரசின் காவல்துறை நிறைவேற்ற வேண்டி வந்தது.அப்போது "கிட்டுவை" திருவான்மியூரில் வீட்டு காவலில் வைத்தனர். ஆனால் எம்.ஜி.ஆர். கட்டளைப்படி "கெடுபிடி" செய்யப்படவில்லை.  நெடுமாறன், வீரமணி, வைகோ போன்றோரும் கிட்டுவை வீட்டிற்குள் சென்று பார்த்து, பேசிவர அனுமதிக்கப்பட்டார்கள். பீகாரின் பிரபல எம்.பி.யான  சகாபுதீன்கூட  நெடுமாறன் மூலம் வீட்டு காவலில் இருந்த கிட்டுவை போய் சந்தித்தார், என்ற செய்தியை இப்போது நெடுமாறன் அவர்கள் நம்முடன் பகிர்ந்து கொளகிறார்.


                அந்த நேரத்தில் முகுந்தன் என்ற உமா மகேஸ்வரன் டில்லி செல்கிறார். அதிமுக எம்பி.யாக இருந்த ஆலடி அருணா  வீட்டில் முகுந்தனின் "பிளாட்" அமைப்பு அலுவலகம் போல செயல்பட்டுவந்தது. அங்கே சென்ற எம்.ஜி.ஆர். மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் அங்கே முகுந்தனை பார்க்கிறார்கள். எம்.ஜி.ஆர்.உடன் வந்த பாதுகாப்பு அதிகாரி ரவி ஆறுமுகம் அய்.பி.எஸ். முகுந்தன் இருக்கும் தகவலை டில்லி அதிகார்வர்க்கத்திர்க்கு கொடுக்க,  டில்லி காவல்துறை அங்கேயே முகுந்தனுக்கு "வீட்டு காவல்" தாக்கீது கொடுக்கிறது. அப்போது அங்கே வந்த வைகோ அதை நேரடியாக பார்வையிடுகிறார். 

              மறுநாள் நாடாளுமன்றத்தில், அதிமுக எம்.பி. ஆலடி அருணாவும், திமுக எம்.பி.வைகோ வும், போராளிகளுக்கு கைதும், வீட்டு காவலும் ஏன்? என்று கேள்வி எழுப்புகிறார்கள். மத்திய அரசோ "தாங்கள் அதை செய்யவில்லை. மாநில அரசுதான் செய்துள்ளது" என அறிவிக்க,  வைகோ "டில்லி காவல்துறையின்" தாக்கீதை எடுத்து காட்டி அம்பலப்படுத்துகிறார். ஆடிப்போன மத்திய அரசு உடனடியாக போராளிகளை விடுதலை செய்ய சொல்கிறது.  இதில் எப்படி எம்.ஜி.ஆர். பற்றி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் குறை செல்ல முடியும்? அதை கலைஞரும் பயன்படுத்தி, முரசொலியில்,போட்டு நெடுமாறனுக்கு கேள்விகள் என குற்றம் சாட்ட முடியும்?


           எம்.ஜி.ஆர். மத்திய அரசின் கட்டளையை வீட்டு காவலில் வைக்க கூறியதை செயலப்டுத்தும் மாநில காவல்துறையிடம், "சுதந்திரமாக போராளிகளை" சந்திக்க செய்தவர். ஆனால் கலைஞர் தனது ஆட்சியில் என்ன செய்தார்? 1988 இல்  இந்திய அமைதிப்படை மூலம் ஈழத் தமிழர்கள் கடுமையாக தாக்குதல்களுக்கு உள்ளான நேரம். கை,கால்கள் இழந்த போராளிகள் பலரையும் "சிகிச்சைகாக" தமிழ்நாடு அனுப்ப, புலிப்படை தலைவர் பிரபாகரன் கலைஞருக்கு செய்தி சொல்லி விடுகிறார். "அனுப்புங்கள்" என்று பச்சை கோடி காட்டிய கலைஞர் அதன்படி, தமிழ்நாடு வந்த புலி பொடியன்களை "நூறு பேரை" சிகிச்சை நடக்கும்போதே பிடித்து,"தேசிய பாதுகாப்பு சட்டத்தின்" கீழ் உள்ளே தள்ளிவிட்டார். அதில் "ஹிட்லர்" என்ற பொடியன் இரண்டு கைகளிலும் முட்டு வரை இல்லாமலும், இரண்டு கால்களிலும் அதேபோல முட்டுவரை இல்லாமலும் மற்றவர் உதவியுடன்தான் உணவு ஊட்டப்படும் நிலையில் இருந்தவர். அவரையும் கலைஞர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அடைத்து விட்டார். இதுதான் எம்.ஜி.ஆர். செயலுக்கும், கலைஞர் செயலுக்கும் உள்ள வேறுபாடு என்கிறார் நெடுமாறன்.

            அடுத்து  கலைஞருக்கு இப்போது ஜெயலலிதா பற்றி "லாவணி கச்ச்சேரி" நடத்தவே நேரம் சரியாக இருக்கிறது. அதாவது முதல்வர் ஜெயலலிதா, சிங்கள விளையாட்டு வீரர்களை இலங்கைக்கு அனுப்பியது பெரும் தவறு என்று கூகரிக்கிறார் கலைஞர். விளையாட்டு வீரர்கள் இரு நாடுகளுக்கு இடையே  போய் வரவேண்டும் என்கிறர அவர். ஒலிம்பிக் ஆட்டத்தில்,  நிறவெறி பிடித்த "அபர்தைடு" நாடு என்று முத்திரை குத்தப்பட்ட "தென் ஆப்பிரிக்கா" வெள்ளையர்களின்  ஆதிக்கத்தில் இருந்தபோது, அதை ஒலிம்பிக் குழு, 1992 வரை "விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ள விடாமல் தடை" போட்டிருந்ததே, அதை கலைஞர் "தவறு" என்று கூறுகிறாரா? அல்லது "ராஜபக்சே அரசு இனவெறி அரசு அல்ல" என்று கூறுகிறாரா? அதனால் அந்த அரசின் விளையாட்டு வீரர்களுக்கு இந்தியாவில் விளையாட "தடை" போடக்கூடாது  என்கிறாரா? 

                  கலைஞர்  அதிமுக அரசு பற்றி "லாவணி" பாட ஏதாவது சொல்லி விட்டு போகட்டும். ஆனால் சிங்கள விளையாட்டு வீரர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பியது, ஜெயலலிதா செய்த தவறு என்று கூறும் கலைஞர் என்ன செய்தார்? தனது ஆட்சியில் தமிழ்நாட்டிற்குள் வந்த "சிவாஜிலிங்கத்தை" விமான நிலையதிலேயே திருப்பி அனுப்பினார். அப்பாவியாக வலம் வந்துகொண்டிருந்த "ஈழ வேந்தனை" ஆபத்தான சூழலிலும் இலங்கைக்கு திருப்பி அனுப்பினார். சிகிச்சைக்கு இந்தியாவின் "விசா" பெற்று வந்த பார்வதி அம்மாளை விமான நிலையத்திலேயே ஜாங்கிட் தலைமையில் ஆயுத காவலர்களை போட்டு தடுத்து திருப்பி அனுப்பினார். தமிழர்களை திருப்பி அனுப்பிய கலைஞர் ஆட்சியையும், சினக்ளர்களை திருப்பி அனுப்பிய ஜெயலலிதா ஆட்சியையும் இன்று நெடுமாறன் நம்மிடம்  " ஒப்பிடுகிறார்" என்றால் என்ன சொல்ல?

             அடுத்து கலைஞர் தஞ்சை மாத கோவிலுக்கு வந்த சிங்கள பக்தர்களை விரட்டி அடித்த மக்களின் கோபத்திற்கு காரணம், முதல்வர் ஜெயலலிதா சிங்கள விளையாட்டு வீரர்களை திருப்பி அனுப்பியதுதான என்று வியாக்யானம் செய்கிறார். அய்யா. கலைஞர் அவர்களே, நீங்கள் நான்கு முறை முதலமைச்சராக இருந்தவர். மக்களின் உணர்வுகளை  கணித்துக்கொண்டு அதன்படி ஆட்சி நடத்தவேண்டும் என்பது உங்களுக்கு நாங்கள் கூறவேண்டிய அவசியமில்லை. இங்கே தாம்பரம் சியோன் பள்ளி பேருந்தில் ஒரு குழந்தை ஓட்டை வழியே விழுந்து இறந்துவிட்டது என்றவுடன், மக்கள் அந்த "பேருந்தை நெருப்பிடவில்லையா?" சிவாகாசியில் பட்டாசு ஆலை வெடிவிபத்து என்றதும், அப்பாவி மக்கள் ஓடிப்போய் தனகளது உயிரையும் பார்க்காமல் 31 பேர் மடியவில்லையா?  இவ்வாறு மக்கள் "கோபாவேசம்" கொள்ளும் ஒரு சூழலில்,  சென்னை நேரு விளையாட்டு அரங்கில் விளையாட வந்த சிங்கள மாணவர்கள்,ஆனந்த கூத்து  ஆடினால், அங்கே கூடும் தமிழ்நாட்டு மக்கள் அவர்களை அடித்து "விபரீதம்" நிகழக் கூடாதே என்று ஒரு மாநில முதல்வர் அந்த சிங்கள விளையாட்டு வீரர்களை உடனடியாக அவர்களது நாட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறாரே? அது சமயோசித வேலை என்று நீங்கள் பாராட்டி அல்லவா  இருக்க வேண்டும்? அதில் என்ன உங்களுக்கு "அரசியல் விளையாட்டு?" 

              ஓஹோ, ஹிந்து ஏடும், தினமணி ஏடும் தலையங்கம் எழுதி, கொழும்பில் உள்ள மேட்டுக்குடி கல்வி நிறுவனமான "ராயல் கல்லூரி" மாணவர்களை ஆதரிப்பது போல சிங்கள மேட்டுக்குடி அறிவுஜீவிகளை "சொரிந்துவிடுவதால்" உங்களுக்கும் அதில் ஒரு "அரசியல் லாபம்" கிடைக்கும் என்று எண்ணிவிட்டீர்களா? எப்படியோ, நீங்கள் கடந்த சில நாட்களாக எறிந்துவரும் ஒவ்வொரு "ஏவுகணையும்" உடனடியாகவே "புஸ்வாணமாகி" வருவதை இப்போதாவது உணர்வீர்களா? 

Wednesday, September 5, 2012

பள்ளம் ராஜுவின் பொழிப்புரையை கருணாநிதி எழுதுகிறாரா?


      இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் இணை அமைச்சர் பள்ளம் ராசு. அவர் சிங்கள வீரர்களுக்கு  இந்தியாவில் பயிற்சி கொடுப்பது என்பது இரண்டு நாடுகளுக்கும் இடையே உள்ள நல்லுறவை வலுப்படுத்துவது என்று திருவாய் மலர்ந்தார். அதை கலைஞர் உட்பட அவரது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைவருமே, மற்ற கட்சிகளுடன் சேர்ந்து எதிர்த்தார்கள். சிங்கள வீரர்களுக்கு பயிற்சியா? அதை நாமும் அனுமதிப்பதா? இந்தியாவில் எங்கும் அப்படிப்பட்ட பயிற்ச்சியை கொடுக்க கூடாது. இன்று மட்டுமல்ல, எதிர்காலத்திலும் அப்படி சிங்கள வீரர்களுக்கு பயிற்சி கொடுக்கக் கூடாது. இவ்வாறு பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணியை சந்தித்து திமுக எம்.பி.கள் கூறினர்.இது ஊடகங்களிலும் வெளிவந்தது. ஆனால் இன்று கலஞட் அவர்கள் வேறொரு அறிககையை கொடுத்துள்ளார்கள். அதில்  சிங்கள விளையாட்டு வீரர்களை எப்படி சென்னையிலிருந்து திருப்பி அனுப்பலாம் என்று வினவியுள்ளார். 

                          அதற்கு ஈன்று காலை அவரது முரசொலியில் கேள்வி பதிலில், இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்கும், குறிப்பாக கிரிக்கட்டு விளையாட வீரர்கள் சென்று வரத்தான் செய்வார்கள் என்றும் குறிப்பிட்டார். இப்போது, கால்பந்து விளையாட்டு வீரர்களை திருப்பி அனுப்பியது, இரு நாட்டு உறவுகளை கெடுக்கும்  என்று கூறியுள்ளார். ஈழத்தமிழர்களை ஒன்றரை லட்சம் பேரை கொன்று குவித்து, இந்திய தமிழர்கள் உட்பட உலக தமிழர்கள் மத்தியில் பெரும் துன்பத்தை ஏற்படுததியது இரு நாட்டு உறவுகளை கெடுக்கும் என்று கலைஞர் கூறியதில்லை. ஆனால் இன்று பள்ளம் ராஜுவின் கருத்தை வலியிறுத்துகிறார். ஏன்?

                      
                            விளையாட்டு வீரர்களை இலங்கைக்கு முதல்வர்  திருப்பி அனுப்பியது, மாதா கோவிலுக்கு வந்த பக்தர்களை மக்கள் திருப்பி அனுப்புவதை தூண்டி விட்டது என்பது கலைஞரின் வாதம். இதுவே சிங்கள மேட்டுக்குடிகளின் குரலாகும். அப்படி குரலை கலைஞர் ஏன் எதிரொலிக்கிறார்?  விளையாட்டு வீரர்களை சென்னை நேரு விளையாட்டு அரங்கில் கால்பந்து விளையாட தமிழக முதல்வர் அனுமதித்திருந்தால், அதுவே மக்கள் மத்தியில் ஒரு கலகத்தை உருவாக்கி, அதன்மூலம் தமிழ்நாட்டு மக்கள் வந்துள்ள சிங்கள விளையாட்டு வீரர்களை அடித்து விரட்டி, அந்த விளையாட்டு வீரர்களின் உயிருக்கு "ஆபத்து" ஏற்பட்டிருந்தால், கலைஞர் அப்போது என்ன சொல்வார்? தமிழக முதல்வர், எதற்காக அந்த விளையாட்டு வீரர்களை சென்னைக்குள் விளையாட அனுமதித்தார்? என்று கேட்க மாட்டாரா?.

                    தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ள ஒரு முதல்வர், வந்திறங்கிய சிங்கள விளையாட்டு வீரர்களை எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாவண்ணம், பக்குவமாக திருப்பி அனுப்பி, சட்ட ஒழுங்கை பாதுகாத்துள்ளார் அது ஏன் நான்கு முறை முதல்வராக இருந்த கலைஞருக்கு புரியவில்லை? அதை ஏன் கலைஞர் எதிர்க்கிறார்? சட்ட ஒழுங்கு தமிழ்நாட்டில் கேட்டுப் போகட்டும் என்று கலைஞர் நினைக்கிறாரா? நினைப்பார். ஏன் என்றால் அத்தனைக்கு எதிரானவர்கள் ஆட்சியில் இருந்துவிட்டால், எப்போதுமே சட்ட ஒழுங்கு கெடட்டும் என்று கலைஞர் நினைப்பதில் ஒன்றும் ஆச்சர்யமில்லை. அதனால்தான் சிங்கள விளையாட்டு வீரர்களை, இலங்கைக்கு திருப்பி அனுப்பிய செயலை கலைஞர் ஒப்பவில்லை. . 
                    

                 இதேபோல ஆசிரியர் வீரமணியும் கோவிலுக்கு வரும் பக்தர்களை தாக்குதல் கூடாது என்று கூறியுள்ளார். இந்த "மாபெரும்" நடுநிலைவாதிகள், நீதிக்கும், அநீதிக்கும் மத்தியில் நடுநிலை எடுக்கிறார்கள். இவர்கள் உரிமை இழந்த தமிழினத்திற்கும், உரிமைகளை பறித்த சிங்களத்திற்கும் மத்தியில் நடுநிலை எடுக்கிறார்கள். இவர்கள் திடீரென "நடுநிலைவாதிகளாக" மாறி சிங்களத்தை  ஆதரிக்க காரணம் என்ன?  பவர்கள் ஆட்சியில் இருந்த பொது எப்படிப்பட்ட நடுநிலையை அமுல்படுத்தினார்கள் என்பதை நாம் திரும்பி [ஆர்த்தாலே நமக்கு புரிந்துவிடும்.

               
                      திமுக தலைவர் கலைஞர் ஆட்சியில் இருக்கும்போது, சென்னையில் அப்பாவித்தனமாக உலாவி வந்த "ஈழவேந்தனை" இலங்கைக்கு வெளியேற்றினார். இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த "சிவாஜிலிங்கத்தை" மருத்துவ சிகிச்சைகாக கூட தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்காமல், விமான நிலையத்திலேயே  இலங்கைக்கு திருப்பி அனுப்பினார். இந்திய அரசின் "விசாவில்" சென்னை விமான நிலையம் வந்திறங்கிய புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் "பார்வதி அம்மாளை" விமான நிலையத்திற்கு வெளியே கூட வரவிடாமல், ஜாங்கிட் தலைமையில் ஆயுத காவலர்களை பெரும் அளவில் அனுப்பி, அங்கிருந்தே திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்தார். அதாவது தமிழர்களை இன்னமும் சொல்லப்போனால் ஈழத்தமிழர்களை, அதிலும் சிங்கள நாட்டில்  உயிருக்கு ஆபத்து என்று இங்கே வந்த ஈழத்தமிழர்களை அதே சிங்கள கொடியவன் கையில் சிக்குமாறு திருப்பி அனுப்பினார். ஆனால் சிங்கள விளையாட்டு வீரர்களுக்கு, கோபம் கொண்ட தமிழர்களால் எந்த ஆபத்தும் ஏற்படாமல் பாதுகாப்பாக திருப்பி அனுப்பிய ஜெயலலிதாவின்  செயலை சுட்டி காட்டி, அது இரு நாடுகளின் நட்புறவை கெடுத்துவிடும் என்று கூறுகிறார்.  

                 இதன்மூலம் இந்திய பாதுகாப்பு இணை அமைச்சர் பள்ளம் ராஜுவின் சொற்களுக்கு, கருணாநிதி பொழிப்புரை எழுதியுள்ளாரா? ஏன் அந்த விளையாட்டு வீரர்கள் மீது கலைஞருக்கும், டில்லி அரசுக்கும் அத்தனை அக்கறை? அந்த கால்பந்தாட்ட விளையாட்டு வீரர்களான சிங்கள இளைஞர்கள்  கொழும்பில் உள்ள "ராயல் கல்லூரி" என்ற மேட்டு குடி கல்லூரின் மாணவர்கள். அந்த சிங்கள மேட்டுக்குடி கல்லூரிதான், அந்த நாட்டில் உள்ள சிங்கள தலைவர்கள் ஜெயவர்தனே உட்பட பலரும் படித்த "கவுரமான கல்லூரி" என்று சிங்கள கொடுமதி படைத்த, தமிழின விரோத மேட்டுக்குடிகாரர்களின் எண்ணம். அதனால் அவர்கள் கொந்தளிப்பாகி, தமிழக முதல்வருக்கு எதிராக குரலை எழுப்புகின்றனர். 

                இந்தியா எங்கும் ஏழு இடங்களில் சிங்களம் தனது "தூதரகங்களை" நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளது. அந்த தூதரகங்கள் மூலம் செல்வி.ஜெயலலிதாவிற்கு எதிராக ஒரு பெரும் பரப்புரையை கிளப்ப திட்டமிட்டுள்ளது. இந்தியா எங்கும் காங்கிரஸ்  மற்றும் பாஜக அல்லாத ஒரு ஆட்சி வருகிற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று விடக் கூடாது என்று ராஜபக்சே தலைமையிலான சிங்கள அரசு திட்டமிட்டு அதற்காக வேலை செய்ய இந்த சிங்கள அரசின் தூதரகங்களை பயன்படுத்தப் போவதாக செய்திகள் வந்துள்ளன. அதற்கான முன்னோட்டமே கலைஞர் இந்த விளையாட்டு வீரர்களின் வெளியேற்றத்தை  பற்றி ஏறுக்கு மாறான கருத்துக்களை வெளியிடுகிறார். 

         அதேபோன்ற  கருத்தை இந்தியாவிற்க்கான இலங்கை துணை தூதர் வெளியிட்டிருக்கிறார். அவரும் இரு நாட்டு நல்லுறவு கெட்டுவிடும் என்று கூறியுள்ளார். அப்படியானால் தமிழர் விரோத கருத்துக்களை வெளியிட்ட பள்ளம் ராஜுவின் கருத்துகளுக்கு, பொழிப்புரை எழுதுவதில் இன்று கலைஞர் அந்த இலங்கை துணை தூதருடன் போற்றி போடுகிறார் என்றுதானே பொருள்?

                 இலங்கை தீவில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்ட போதும், இலங்கை கடற்படையால் இருபத்தேழு ஆண்டுகளில், ஐந்நூறுக்கு மேற்பட்ட தமிழக மீனவர்கள் கோளை செய்யப்ப்பட்ட போதும், கெட்டுப் போகாத இரு நாட்டு உறவுகள், சிங்கள விளையாட்டு வீரர்களை ஆபத்து வரும் சூழலில், பாதுகாப்பாக தமிழக முதல்வர் வெளியேற்றியதனால்,  "கெட்டுவிடும்" என்று கூறுவாரானால், கலைஞர் "எந்தப் பக்கம்" எனபதை உலகத் தமிழர்கள் மீண்டும் புரிந்து கொள்ள வேண்டும்.               

Monday, September 3, 2012

கலைஞர் கூற்றுப்படி நெடுமாறன்தான் ஈழப்போராளிகளின் சகோதர சண்டைக்கு காரணமா?


    இப்போது வன்னிப்போர் ஒரு தடங்களுடன் நின்றுள்ள நேரத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் "துவக்குகளை மவுனித்து" ஆயுதப்போரட்டத்திர்க்கு ஒரு தற்காலிக இடைவெளி கிடைத்துள்ள காலத்தில், தமிழீழ விடுதலைக்கான போர் உலகம் முழுவதும் ஒரு "கருத்துப் போராக" நடைபெற்றுவரும் சூழலில், அரசியல் களம் என்ற ஒரு விரிவான களம் ஈழப்போராட்டத்திற்கு உலக அரங்கில் கிடைத்துள்ள ஒரு வாய்ப்பில், போர்க்கால நடவடிக்கைகளில் நடந்த பல நிகழ்வுகள் பற்றி, போராளிகள் மத்தியில் ஒரு பரிசீலனை நடைபெறும் என்பது உண்மைதான். திமுக தலைவர் கலைஞர் அவர்கள், இந்த நேரத்தில் அனைத்து "பின்னடைவுகளுக்கும்" காரணம் புலிகள் மைப்புதான் என்ற தனது வாதத்தை "தவறாமல்" தொடர்ந்து முன்வைத்து வருகிறார். அதில்தான் அவரது "நெடுமாறன் மீதான வசுவுகளும்" வ்ருகின்றன.

             கடந்த களத்தில் நடந்தவற்றை நெடுமாறன் தமிழ் மக்கள் மத்தியில் வைக்கும் "அக்கறையால்" பலசெய்திகளை கட்டுரைகளாக எழுதுகிறார். அதில் கலைஞர் வழமையாக முத்திரை குத்தும் "சகோதர சண்டையும்" ஒன்று. அந்த சகோதர சண்டை என்ற "சொள்ளை" பயன்படுத்தும் கலைஞர்தான் அதுபோன்ற போராளிகள் மத்தியிலான "பகைமையை" தூண்டி விடுவதில் முக்கிய பங்கை ஆற்றினார் என்ற நெடுமாறனின் குற்றச்சாட்டு கலைஞரால் பொறுத்துக் கொள்ள கூடியது அல்ல என்பது உணமைதான். அதற்காக அப்படிப்பட்ட சகோதர சண்டைகளை தூண்டிவிட்டது நெடுமாறன்தான் என்ற குற்றச் சாட்டை வைக்கும் கலைஞர் இன்று தனது முரசொலி யில், உடன்பிறப்புக்கான கடிதத்தில், 
 1985 ஆம் அண்டு நடந்த சிலநிகழ்வுகளை வழக்கம் போல சுட்டிக் காட்டுகிறார்.   இதன்பிறகும் நாம் நமக்கு தெரிந்த சிலவரலாற்று உண்மைகளை கூறாமலிருக்க முடியாது.


                 அதாவது கலிஞர்--நெடுமாறன்--எம்.ஜி.ஆர்ட்.ஆகியோர் இடையே அந்த நேரத்தில் நடந்த சில நிகழ்வுகளை நாமும் வெளியே கூற விரும்புகிறோம். அவர்களுக்குள் நடந்த மாறுபட்ட கருத்துக்கள், முதலில் "குட்டிமணி-ஜெகன் " சம்பந்தப்பட்டது. அதாவது குட்டிமணியும், ஜெகனும், தமிழ்நாட்டில் பிடிபடுகிறார்கள். அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள், அவர்கள் இருவரையும் இலங்கை அரசின் கோரிக்கைப்படி, அந்த நாட்டிற்கு அனுப்பிவைக்கிறார். அந்த நேரத்திலும் இலங்கை-இந்திய அரசுகளுக்கு இடையே "கைதிகள் பரிமாடத்திர்க்கான" ஒப்பந்தம் எதுவுமே கையெழுத்து இடப்படவில்லை. அந்த நேரத்தில் இலங்கை அரசு கேட்டதற்காக அவர்களை அனுப்பி வைக்க வேண்டிய எந்த நிர்ப்பந்தமும் இல்லை. ஆனாலும் கலைஞர் தனது அதிகாரத்தில் அவ்ர்கள் இருவரையும் இலங்கைக்கு அனுப்பி வைக்கிறார். அவர்கள் இலங்கை சிறைக்குள் அடைக்கப்படுகிறார்கள்.1983 இல் இனக் கலவரம் வெடிக்கிறது. ஜூலை 23 ஆம் நாள் வெலிக்கடை சிறையில் அடைக்கப்ட்டிருந்த தமிழ் கைதிகளை சிங்கள காடையர்கள் சிங்கள ராணுவத்துடன் சேர்ந்து  சிறைக்குள்ளேயே அடித்து கோளை செய்கிறார்கள். குட்டிமணி, ஜெகன் இருவரும் கண்கள் பிடுங்கப்பட்டு "கொடூரமாக" ஓலை செய்யப்படுகிறார்கள். 

                        தமிழ்நாட்டில் பிடிபட்டவர்களை இலங்கைக்கு அனுப்பிய "துரோக செயலை" கலைஞர் செய்ததால்தானே, குட்டிமணியும்,ஜெகனும் கொடூரமாக கோளை செய்யப்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டு வருகிறது. தனது ஆட்சியில் தான் அவ்வாறு செய்ததை கலைஞர் மறுக்கிறார். நெடுமாறன் அந்த நேரத்தில் எம்.எல்.ஏ. வாக இருக்கிறார். சட்டமன்றத்தில் எழுப்பப்பட்ட அந்த கேள்விக்கு, கலைஞர் முன்னிலையிலேயே, முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். "கோப்புகளை " எடுத்து காட்டி குட்டிமணி, ஜெகனை" கலைஞர் ஆட்சிதான் இலங்கைக்கு அனுப்பி வைத்து என்று நிரூபிக்கிறார். சும்மா இருப்பார கலைஞர்? உடனடியாக் அன்றைய டெலோ இயக்க தலைவர்கா இருந்த ஸ்ரீ சபாரத்தனம் உதவியை நாடுகிறார். கலைஞர் இன்றுவரை மேற்கோள் காட்டும் "செல்வா மகன் சந்திரஹாசன்" அன்றே இந்திய வெளிவிவாகரதுறையின் உளவு துறையான "ரா" வுடன் நெருக்கத்தை கொண்டிருந்தவர். அவர் மூலம்தான் டெலோ மைப்பை உருவாக்க "ரா" அதிகாரிகள் முயற்சி எடுத்தனர். 

                 அதேசமயம் டெலோ தலிவராக இருந்த ஸ்ரீ சபாரத்தினம், குட்டிமணி ஜெகன், தங்கதுரை போலவே வல்வெட்டித்துறையை சேர்ந்தவர்தான். முதல் மூவரும் மீனவர் சமூக பின்னணி கொண்டவர்கள் என்றால், ஸ்ரீ சபா "வெள்ளாளர்" சமூக பின்னணி கொண்டவர். ஆனாலும், ஸ்ரீ அன்றைக்கு டால் ஸ்ரீ என்று அழைக்கப்பட்ட காலத்தில் அணித்து போராளி தலைவர்களுடனும் சேர்ந்து, ஈழ விடுதலைக்காக துணிந்து இஅர்ந்கியவர் என்பதை யாரும் மறக்கவில்லை. அனால் அந்த தலைவர்கள், இந்திய அரசியல் சூழ்ச்சிகளையும், தமிழக அரசியல்வாதிகளின் சூழ்ச்சிகளையும் அறிந்திருக்க வில்லை. அல்லது அவர்கள் தனகளத்து நலனிலிருந்து தொடங்கியே ஈழ விடுதலையைக் கூட நோக்குவார்கள் என்று அறிந்திருக்க வில்லை.  ரா மைப்பின் சூழ்ச்சிகளுக்கும், அரசியல்வாதிகளின் இந்திய சூழ்ச்சிகளுக்கும் விழுந்துவிடும் தன்மை அங்கே தெரிந்தது.

                  கலைஞரை எம்ஜிஆரின் அம்பலப்படுதலில் இருந்து காப்பாற்ற டெலோ தலைவர் ஸ்ரீ சபாரத்னமும், ராசுப்பிள்ளையும்  சேர்ந்து ஒரு அறிக்கை விடுகிறார்கள். அதில் குட்டிமணி, ஜெகன் தமிழ்நாட்டில் பிடிபடும்போது, அவர்களை "கடத்தல்காரர்கள்" என்றுதான் காவல்துறை கைது செய்கிறது. அவர்களும் தங்களை "விடுதலை போராளிகள்" என்று காட்டிக் கொள்ள வில்லை என்று அறிக்கை  விடுகிறர்கள். இது கலைஞர்  அவர்களால் ஏற்பாடு செய்து வெளியிடப்பட்டது என்பதை யாராவது மறுக்க முடியுமா? அதேபோல குட்டிமணி மனிவி  எழுதிய ஒரு கடிதமும் இதே போல க்ருத்துடன், "தேவி' வார இதழில் வெளியிடப்படுகிறது. இதுவும் கலைஞர்  ஏற்பாட்டின்  பேரில் எம்.ஜி.ஆர். தொடுக்கும்  அம்புகளை எதிர்கொள்ள எடுத்த  கேடயம் என்பதை யார் மறுக்க முடியும்?  1970 ஆம் ஆண்டிலேயே அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு  விழாவில், தன்னை எதிர்த்த "உதயகுமார்"என்ற மாணவனை காவல்துறையினர் அடித்து குளத்தில் போட்ட போது, உதயகுமாரின் தந்தையை வைத்தே தனது மகன் உடல் அல்ல என்று  கூற வைத்த "சித்தர்" அல்லவா கலைஞர் என்பதை அறிந்தவர்களுக்கு இந்த நிகழ்வும் புரியப்பட முடியும்.

            இத்தகைய சித்து விளையாட்டுகளால், தமிழக அரசியல்வாதி தன் "தோலை" காப்பாற்றிக் கொள்ள முயலலாம். ஆனால் இதுதானே போராளி இயக்கங்களைக் கொண்டே போராளி இயக்க தலைவர்களை  காட்டி கொடுத்ததை "நியாயப்படுத்தல்"செய்திருக்கிறார் என்பதை நாம் இன்றாவது புரிந்து கொள்ள மாட்டோமா? இப்படித்தானே சகோதர யுத்தத்தை அவரால் தூண்டி விட முடிந்தது? அதுமட்டுமல்ல கலைஞரே ஈழப்போராளிகளுக்குள்  சகோதர யுத்தத்ய்ஹ்தை தூண்டி விட்டது மத்திய ரசின் உளவு துறையான "ரா" தான் என்று கூறியிருப்பதை அவரே இப்போது ஏன் மறந்து விட்டார்? இப்படி பல விவகாரங்களையும் நாம் வரலாற்றில் லாசா வேண்டி வருமல்லவா?