Friday, August 24, 2012

செந்தூரனின் அத்தை சாவுக்கு கியூ பிரிவு பொறுப்பேற்குமா?


     செந்தூரன் என்ற இளைஞர் பூந்தமல்லி சிறப்பு அகதிகள் முகாமில், அகஸ்ட் 6 ஆம் நாள் தொடங்கி, "சாகும்வரை பட்டினி போரை" நடத்தி, அனைத்து ஈழத்தமிழர்களையும், செங்கல்பட்டு, பூந்தமல்லி முகாம்களில் இருந்து விடுதலை செய்து, பொதுவான அகதிகள் முகாமில் கொண்டு விட வேண்டும் என்று கோரிக்கையை வைத்துள்ளார். அந்த கோரிக்கையை ஆதரித்து பூந்தமல்லிமுகாமில் உள்ள மீதம் ஏழு ஈழத்தமிழர்களும், கடந்த ஐந்து நாட்களாக  அவருடன் பட்டினி போர் நடத்தி வருகிறார்கள். கடந்த சில நாட்களாக "தண்ணீர்" குடிப்பதைக் கூட செந்தூரன் நிறுத்தி  விட்டார். செங்கல்பட்டு முகாமில் 38  ஈழத்தமிழர்களும்,  பூந்தமல்லி முகாமில் 8 ஈழத்தமிழர்களும் இதுபோல அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலருக்கு சிறிய வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால் அனைத்து வழக்குகளிலும் அவர்கள் அனைவருமே நீதிமன்ற "பிணை" வாங்கி உள்ளனர். இத்தகைய சூழலில், வைகோ அவர்களுக்காக போராடி சிறை சென்றார். சீமான் போராட்டம் அறிவித்துள்ளார். கலைஞர் செந்தூரனை பட்டினி போரை நிறுத்துமாறு அறைகூவல் விடுத்துள்ளார். அந்த ஈழத்தமிழர்களை விடுதலை செய்யுங்கள் என்று அவர் கூறவில்லையே? என்பதே அவர்களுக்கு வருத்தம். 


           இப்படி தொடர் போராட்டத்தை தனக்காக மட்டும் இன்றி அனைவருக்குமாக நடத்தி வரும் சென்தொஓனை காண கொழும்பிலிருந்து, அவரது சித்தப்பா அருள்ராஜ், மற்றும் அத்தை கமலாதேவி ஆகியோர் சென்னை வந்தனர். அவர்கள் செந்தூரனை காண பூந்தமல்லி சிறப்பு அகதிகள் முகாமிற்கு சென்றனர். சித்தப்ப்பாவை ஆதாவது அருள்ராஜை நமது கியூ பிரிவினர் மறைமுக மிரட்டலின் மூலம் அச்சுறுத்தி உள்ளனர். அத்தை கமலாதேவி, செந்தூரன் பற்றி பூந்தமல்லி முகாம் வாசல் சென்று விசாரித்திருக்கிறார். பட்டினி போரில் இருப்பதால் அவரைக் காண முடியாது என தெரிவித்துள்ளனர். தண்ணீர் கூட குடிக்காமல் செந்தூரன் இருக்கிறான் என்று கேள்விப் பட்டதும் அந்த 60 வயது அத்தை கமலாதேவி அதிர்ச்சி ஆகிவிட்டார். அதுவே அவருக்கு நெஞ்சுவலியை கொடுத்து விட்டது. அப்படியே அவர் மரணமடைந்து விட்டார். ராமச்சந்திரா மருத்துவமனைக்கு எடுத்து சென்று மானத்தை மடர்வர்கள் உறுதி செய்து உடலை பெற்று கொண்டனர். மீண்டும் அவரது உடலை கொழும்பிற்கு கொண்டு செல்லல காவல்துறை அனுமதி பெற வேண்டும் என்று கூறி, மாநகர காவல்துறை அனையர் அலுவலகத்திற்கு கமலாதேவியின் உடலை கொண்டுவந்து அனுமதி பெற்றுள்ளனர். 

          மல்லை சத்தியா உடன் இருந்து உதவிகள் செய்துள்ளார். அதற்கு உதவிய ஒரு ஈழத்தமிழரான யோகா மாஸ்டரை கியூ பிரிவினர் மிரட்டி, அவரது பாஸ்போர்ட்டை பிடிங்கி வைத்துள்ளனர். இத்தகைய கொடுமைகள் செய்யும் கியூ பிரிவினர் நேரடியாக மத்திய அரசின்  வெளிவிவகார துறையின் உளவு துறையான "ரா" அதிகாரிகளின் உத்தரவுப்படியே நடக்கின்றனர் என்பது நமக்கு தெரிந்த செய்தியே. சென்ற திமுக ஆட்சியின் போது, உளவு துறை தலைமை அதிகாரி  ஜாபர்சேட்  மூலம், கியூ பிரிவினர் மத்திய அரசின் "ரா" கட்டளைகளை  ஏற்று, இந்த ஈழத்தமிழர்களை சிறப்பு அகதிகள் முகாம்களில் அடைத்தனர் என்பது இன்னமும் தொடர்கிறது. தமிழக அரசிற்கு கட்டுப்படாமல் இந்த கியூ பிரிவினர் தன்னிச்சையாக மத்திய அரசின் "ரா" அதிகாரிகளுக்கு அடிபநிவதால் ஏற்படும் "விபரீதத்தை" தமிழக மக்கள் தாங்க மாட்டார்கள். அதன்மூலம் வரும் சட்ட ஒழுங்கு கெடுதலையும், பதட்டத்தையும் தமிழக அரசின் மீது, "பழி" போட திமுக வும், காங்கிரசும் தயாராகி வருகின்றன. கியூ பிரிவு அதிகாரிகள் கமலாதேவியின் சாவுக்கு பொறுப்பேற்பார்களா ? 

                செந்தூரன் சென்ற மாதம் செங்கல்பட்டு முகாமில் "இருப்பத்தொரு" நாட்கள் பட்டினி போரை நடத்தியதால், இப்போது உடல் மியாவும் தளர்ந்து உள்ளார். அவரது உஅடளுக்கு வரும் அனைத்து தீங்கும் த்ஜமிழ்நாட்டு அரசியலில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தப்போகிறது. அதற்கும் கியூ பிரிவு பொறுப்பேற்க வேண்டும்.

புத்தர் எலும்பை காட்டினாரா? மகிந்தா எலும்பை காப்பாற்றினாரா?


     கவுதம புத்தரின் எலும்பை டில்லியில் உள்ள "தேசிய அருங்காட்சியகத்தில்" வைத்திருந்ததை, பவுத்த மத நம்பிக்கை உள்ள நாட்டு மக்களுக்கு உலகம் முழுவதும் கொண்டுபோய் "காட்டுவது" என்று ஒரு பழக்கம் வைத்திருக்கிறார்கள். அதுபோல இலங்கையில் உள்ள பவுத்த மத நம்பிக்கை உள்ளவர்கள் மகிழவும், "முப்பது" ஆண்டுகளுக்கு முன்பு காட்டினார்களாம். அந்த பழக்கம் தொடரலாம். வழிபாட்டு நம்பிக்கைகளில் அப்படி ஒரு பழக்கம் இருக்குமாயின் அதை யாரும்புரிந்து கொண்டாக வேண்டும்.அதேமுறையில் மன்மோகன்சிங் என்ற ஒரு இந்திய தலைமை அமைச்சர் கூறினார் என்றவுடன், இந்திய அரசின் மத்திய பண்பாட்டுத்துறை அமைச்சர் குமாரி செல்ஜா, அந்த எலும்புகளை கொழும்பு கொண்டு செல்வதும், அதை  இலங்கை அரசத் தலைவர் மகிந்தா வரவேற்பதும், இரு அரசுகளுக்கும் இடையிலான் அவர்கள் கூறும் தூதரக நல்லுறவின் வெளிப்பாடாக, நடக்கும் என்பது நமக்கும் புரிகிறது. பிறகு ஏன் அதை நாம் இப்போது எதிர்க்க வேண்டும்?

                       இது சாதரான விஷயம் அல்ல. புத்த பெருமானின் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களின் உணர்வுகளை அங்கீகரித்து , புத்தரின் எலும்புகள் என்று இந்தியாவில் காக்கப்படும் எலும்புகளை அருங்காட்சி அகத்திலிருந்து, எடுத்து ஒரு முக்கிய அமைச்சர் மூலமாக அதை இலங்கைக்கு எடுத்து செல்வதும் அங்கேயுள்ள அர்சத்ததலைவர் அதை வரவேற்று உபசரிப்பதும், இந்த நேரத்தில் சாதாரண நிகழ்வு அல்ல. அங்கே அந்த விழாவிற்கு திரண்டிருந்த சிங்கள பவுத்த நம்பிக்கை உள்ள பெரும் அளவிலான மக்கள் கூட்டமே அது சாதாரண நிகழ்வு அல்ல என்பதை கட்டியம் கூறும். அதாவது ஆள்வோர்மீது  மக்கள் நம்பிக்கை இழந்து வரும் காலங்களில் எல்லாம், ஏதோ ஒரு "மக்களது நம்பிக்கையை" அடிப்படையாக கொண்டு தங்களை அந்த மக்கள் மீது அதாவது தன் மீது நம்பிக்கை இழந்த மக்கள் மீது, மீண்டும்  நிறுவிக்கொள்வது என்பது உலக வரலாற்றில் முதன்முறையாக நடக்கும் செயல் அல்ல.   மக்களது இன, மொழி, கடவுள் மத நம்பிக்களைகளை "ஆள்வோர்" எப்போதுமே தங்களுக்கு சாதகமாக திருப்ப முயற்சி மேற்கொள்வார்கள். அதுதான் இலங்கையிலும் நடந்துள்ளதா?

                           இலங்கை தீவில் மகிந்தாவின் ஆட்சி தமிழின அழிப்பு போரை  வெற்றிகரமாக நடத்தி முடித்ததாக காட்டி, பெரும்பான்மை சிங்கள மக்களிடம் முதலில் நற்பெயர் வாங்கியது. அப்போதும் "பயங்கரவாதத்திற்கு எதிரான் போர்" என்பதாகத்தான் அதை பறை சாற்றி நற்பெயர் பெற்றது. போரை நடத்தியது  யார் என்ற கேள்விக்கு, மகிந்தாவின் குடும்பமா? அல்லது சரத் பொன்சேகா வகையறாவா ? என்ற கேள்வியும் சிங்கள மக்கள் மத்தியில் இருந்தது. அதுவே அரசத் தலைவருக்கான  தேர்தலில், மகிந்தாவா? அல்லது பொன்சேகாவா? என்று சர்ச்சையானது. அதில் மகிந்தா வென்ற பின், பொன்சேகாவிற்கு வளர்ந்துவரும் செல்வாக்கை கண்டு பயந்துபோன ராஜபக்சே குடும்பம் பொன்சேகாவை சிறையில் தள்ளியது. இன்று அமெரிக்கா தலையிட்டு பொன்சேகாவை விடுதலை செய்ய சொன்னபிறகே, மகிந்தா அவரை விடுதலை செய்துள்ளார். இந்த நேரத்தில், அமெரிக்கா பொன்சேகாவை ஆதரிக்க முயல்வதால், அதுவும் இந்திய அரசை கலந்துகொள்ளாமல் செய்வதால், டில்லி தனது பங்கிற்கு மகிந்தாவை தூக்கி பிடித்து சில வேலைகளை செய்துவருகிறது. 

                         அத்தகைய டில்லியின் "காய் நகர்த்தல்களில்" முதலில் "டெசோ மாநாடு" வரும் என்றால், அடுத்து வருவதுதான் "புத்தரின் எலும்புகளை" கொழும்பு கொண்டுபோய் சிங்கள பவுத்த மக்களிடம் காட்டுவது. இது சிங்கள பவுத்த மக்களிடம் "செல்வாக்கு இழந்துவரும்"மகிந்தாவிற்கு மீண்டும் மறுவாழ்வு கொடுக்க, சிங்கள பவுத்த அப்பாவி மக்களை மகிந்தா பக்கம் திருப்ப, இந்திய அரசின் தலைமை அமைச்சர் மன்மோகன்சிங் எடுக்கும் ஒரு முயற்சி. ஏற்கனவே மகிந்தா தனக்கு எதிர்ப்பு இருப்பதை அறிந்தே வேண்டுமென்றே, தனது  கடைசி லண்டன் பயணத்தை மேற்கொண்டு, அதில் தமிழர்களின் கடும் எதிர்ப்பை உலகறியச் செய்து, அதை "விடுதலைப்புலிகள் மீண்டும் உருவாகிறார்கள்" என்று கூறி சிங்கள அப்பாவி மக்களை ஏமாற்றி, அவர்கள் மத்தியில் ஒரு பயத்தை தோற்றுவித்து, அதன்மூலம், இழந்துபோன தனது செல்வாக்கை மீண்டும்  தக்க வைத்துக் கொள்ள முயன்றான் என்பது சமீபத்திய கதை. அதையே மீண்டும் இந்திய அரசின் நலன்களுக்காக மகிந்தவை " ஸ்டிக் அண்ட் கேரட் " என்ற குச்சியும், கேரட்டும் எனும் தத்துவத்தை பயன்படுத்த இந்திய அரசு ஒருபுறம் டெசோ மாநாடு, இன்னொரு புறம் புத்தர் எலும்புகளை காட்டுதல் என்று நடவடிக்கை எடுக்கிறது.
    
     ஸ்டிக் அண்ட் கேரட் என்றால், அதாவது குச்சியும், கேரட்டும் என்றால் என்ன? குதிரை வண்டிக்காரர் தான் புதியதாக வாங்கிய குதிரையை "வண்டியில் பூட்டி பழக்க" ஒரு தந்திரம் செய்வார். அதாவது குதிரையை பூட்டும்போது, அதற்கு முன்பு "தொங்கும் நிலையில்" ஒரு கேரட்டை கட்டிவிடுவார். அந்த கேரட்டை "கவ்வும்" நோக்கத்தில், குதிரை வண்டியை இழுத்துக் கொண்டு முன் செல்லும். அதை "துரிதப் படுத்த" ஒரு குச்சியை கையில் வைத்ஹ்டுக் கொண்டு, குதிரையை அடிப்பார். குதிரை வண்டியை இழுத்துக் கொண்டு வேகமாக ஓடும். இதைத்தான் ஆங்கிலேயர்கள் "குச்சியும், கேரட்டும்" என்ற பொருளில், "ஸ்டிக் அண்ட் கேரட்" என்று கூறுவார்கள். அந்த தந்திரத்தை இந்திய அரசு, இலங்கை அரசின் மீதும், பதிலுக்கு அதே ஆங்கிலேயர்களிடம் "பயின்ற" இலங்கை அரசு இந்திய அரசிடமும் காட்டுகிறது என்பதுதான் இதில் அடங்கியிருக்கும் தத்துவம்.

                        அதாவது அய்.நா.சபையின் மனித உரிமை கவுன்சிலில் அக்டோபர் மாதம் இறுதியில், இலங்கை பற்றிய மனித உரிமை பட்டியல் விவாதிக்கப்படும்போது, மூன்றில் ஒரு அமைப்பாளராக இந்திய அரசு அமரப்போவதை பயன்படுத்தி, பேரம் பேசுவது எனபது டில்லியின் தந்திரம். அதேசமயம் "விட்டேனா பார்" என்று மகிந்தாவும், இந்திய அரசின் பண்பாட்டு துறைக்கு தருவதாக கூறிய நூறு கோடி பெறுமான இடத்தை, சீனாவின் விமான நிறுவனத்திற்கு கொடுத்து, இந்திய அரசுக்கு எதிராக ஒரு காய் நகர்த்தலில், "ஸ்டிக்" எடுத்தும், இந்திய வணிக அமைச்சர் ஆனந்த சர்மா சென்றபோது, நூற்றெட்டு இந்திய முதலாளிகளுக்கு சிவப்பு கம்பளம் விரித்து,தனது "கேரட்" கொள்கையையும் காட்டிவிட்டது. அதுபோல மகிந்தாவிற்கு எழுந்துள்ள சிங்கள மக்களின் எதிர்ப்பை, "டெசோ எதிர்ப்பு" என்பதன்மூலம் மகிந்தாவிற்கு  ஆதரவாக ஒருபுறம் திருப்புவதிலும் இரண்டு கும்பலும் வெற்றி பெற்றுள்ளன. இப்போது பகிரங்கமாகவே, புத்தரின் எலும்புகளை காட்டி சிங்கள பவுத்த  மக்களை ஏமாற்ற, மன்மோகன்-மகிந்தா தந்திரம் பயன்படுத்த ப்டுகிறது என்பதை நாம் எப்போது உணரப்போகிறோ

Saturday, August 18, 2012

புத்தரின் மீதமிருக்கும் எலும்புகளையும் ராஜபக்சேவிற்கு கொடுக்காதே.


      கவுதம புத்தர் இந்தியாவில் இன்றைய பீகார் மாநிலத்தில் உள்ள கயா பகுதியில் பிறந்தார். அவரது போதனைகள் அமைதியை, சமாதானத்தை, ஆசையை ஒழிப்பதை மனிதகுல முன்னேற்றத்தை வலியுறுத்தின.அவரது போதனைகள் சீன,ஜப்பான், இலங்கை என்று உலகெங்கும் பரவின. ஆனாலும் புத்தரது உடல் அடக்கம் செய்யப்ப்பட்ட இந்திய மண்ணில் அவரது மீதம் எலும்புகளில் சில இருக்கின்றன. அவற்றை இந்தியாவின் பாரம்பரிய,பண்பாட்டு அடையாளமாக காப்பாற்ற  வேண்டியது அரசின் கடமை. இன்று தமிழர்களை இன அழிப்பு செய்துவரும் இலங்கை அரசத்தலைவர் மஹிந்த ராஜபக்சே, புத்தரது பெயரை சொல்லி, படுகொலைகளை செய்கிறார்.ரத்தத்தில் கைகளை நனைக்கும் ராஜபக்சே கும்பலுக்கு, "புத்தரின்" பெயரைச் சொல்லவே உரிமை கிடையாது.

        அப்படிப்பட்ட கொலைகாரன் ராஜபக்சே, இந்தியாவை ஆளும் மன்மோகன்சிங் இடம் இந்தியாவில் இருக்கும் புத்தபெருமானின் உடல் எலும்புகளை தங்களுக்கு தரும்படி கேட்டானாம். ராஜபக்சேவுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்ள, மன்மோகன்சிங், அந்த எலும்புகளை இலங்கை அதிபருக்கு கொடுக்க சம்மதித்து விட்டாராம். அது நல்லெண்ணத்தின் அடிப்படையில் என்பது தலைமை அமைச்சகத்தின் விளக்கம். அந்த எலும்புகளை அமைச்சர் குமாரி செல்ஜா நேரடியாகவே இலங்கைக்கு எடுத்ஹ்டு சென்று ராஜபக்சே வசம் ஒப்படைக்க போகிறார்களாம். இந்த கொடுமையை, தஹ்டுக்க, எதிர்க்க, இந்த மண்ணில் யாருமே இல்லையா? புத்த மத்ததை நம்பி, இந்தியாவில் அமிதிகாகவும், சமாதானத்திற்க்காகவும், உழைக்கும் மக்கள் அனைவரும் இந்த கொடுங்கோலன் கைகளில்  புத்த பெருமானின் எலும்புகள் சென்று சேர்வதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். 

                 தமிழர்களின் "கச்ச தீவை" தாரை வார்த்த இந்திய அரசே, புத்த பெருமானின் எலும்புகளையும் அந்த தமிழர் இன அழிப்பு செய்யும் ராஜபக்சே வசம் ஒப்படைக்காதே, என்று குறள்களை எழுப்பி, அதை உடனடியாக நிறுத்த  வேண்டும்.. 

Friday, August 17, 2012

டெசோ வந்தவரை இழிவுபடுத்துகிறதா திமுக?


   இன்று குமுதம் ரிபோர்ட்டர் ஏட்டில் இலங்கையின் நவ சம சமாஜ கட்சி தலைவர் விக்ரமபாஹு கொடுத்த நேர்காணல் வந்துள்ளது. அதில் தெளிவாக தமிழினப் படுகொலைக்கு இந்திய அரசு முழுமையாக காரணம் என்றும், அமெரிக்கா-இந்திய ராணுவ தந்திரமும், இலங்கை -அமெரிக்கா ராணுவ ஒப்பந்தங்களும், சேர்ந்து இன்கை தீவை அட்டுப்படுத்ஹ்டுகின்றன என்றும் கூறியுள்ளார். அவரை இந்திய அரசை எத்ரிர்த்து பேசவிடாமல் டெசோ மாநாட்டில் தடுத்து விட்டார்கள் என்றும் எழுதியுள்ளார்கள். அப்போது திமுக பற்றி அந்த சிங்கள இடதுசாரி தலைவரிடம் கேட்டதற்கு, "திமுக ஒரு முதலாளித்துவ கட்சி" என்று கூறியதை "தலைப்பாக" போட்டிருந்தார்கள். அது அவரைப் போன்ற இடதுசாரி கட்சிகளின் வழமையான "உச்சரிப்பு". தொழிலாளர் வர்க்க கட்சிகளாக உலகில் பவனிவரும் அணித்து கட்சிகளுமே பிற கட்சிகளை முதலாளித்துவ கட்சிகள் என்றுதான் கூறுவார்கள். 

                       இத் அடிப்படைகூட தெரியாமல்,டெசோ உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக வின் பாரம்பரிய தலைவர்களில் ஒருவருமான சுப்புலச்சுமி ஜெகதீசன் ஒரு "மோசமான" குற்றச்சாட்டை அதே இதழில் கூறியுள்ளார். அதாவது திமுக வை முதலாலைத்துஅ கட்சி என்று கூறும் விக்ரமபாஹு உடலில் "சிங்கள ரத்தம்" ஓடுகிறது என்பதை காட்டிவிட்டார் என்பதே அந்த விமர்சனம். அப்படியானால் வன்னி போரில் ஒரு லட்சம் பேரை கோளை செய்யம்போது, அதற்கு அமைதியான் அங்கீகாரம் கொடுத்த கலைஞர் உடலில் என்ன ரத்தம் ஓடுகிறது என்று கேட்க மாட்டார்களா? டெசோ மாநாட்டிற்காக அகஸ்ட் ஒன்பதாம் நாள் "ஈழம்" என்ற பெயர் வரக்கூடாது என்ற வெளிவிவகாரத் துறையின் அமைச்சகம் உடலில் எந்த ரத்தம் ஓடுகிறது? அததகைய மத்திய அமைச்சகத்தில் அங்கம் வகிக்கும் திமுக கட்சியின் உடலில் என்ன ரத்தம் ஓடுகிறது?

                 தங்களது மாநாட்டிற்கு  ஒருவரை அழைதது வந்துவிட்டு, அவரது கருத்துக்களை சரியாக ஊட புரிந்து கொள்ள "அறிவு"இல்ல்லாமல் அவரை "தூற்றி" குறை கூறும் திமுக பிரமுகர் தனது கட்சியிடம் ஓடும் ரத்தத்தை முதலில் பரிசோதனை செய்ய வேண்டாமா? சுப்புலச்சுமியை திமுக கட்சி தலைமை எந்த அளவில்  மதிக்கிறது என்பதை நாடு அறியும். அப்படி இருக்கையில் "வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ" என்று விமர்சிக்கும் "துணிவு" எங்கிருந்து வந்தது. தங்கள் விருந்தினரையே இழிவாக பேசும் "ப்பாடு" திமுக விற்கு மட்டும்தானே உள்ளது? அது நாகரீகமான அணுகுமுறையா?

Thursday, August 16, 2012

இரண்டு தமிழ் இளைஞர்களை கொன்ற சிறைச்சாலைகளை நெருப்பிடுவோம்.

இரண்டு தமிழ் இளைஞர்களை கொன்ற சிறைச்சாலைகளை நெருப்பிடுவோம்.
     இலங்கை தீவில் தமிழின அழிப்பை ஒரு இனவாத ப[ஓர் மூலம் பிராந்திய ஆதிக்கசக்திகளும், உலக ஆதிக்க சக்திகளும் கைகொடுக்க, சிங்கள பேரினவாத மகிந்தா கும்பல் பெரிய அளவில் செய்து முடித்தது.தமிழர் நிலங்களை சிங்களர் குடியமரவும், பன்னாட்டு மூலதனக் கம்பணிகள் ஆக்கிரமிக்கவும் சிங்கள-இந்திய-சீன ஆதிக்க சக்திகள் துணையோடு மகிந்தா அரசு செய்துவருகிறது.அதை மேற்பார்வை பார்க்க அமெரிக்கா சக்திகளுக்கு மஹிந்த ஆரசு இடம் தருகிறது. இத்தகைய நேரத்தில் சிறையில் வாடும் எமது இளம் உயிர்களை சிறைக்குள்ளே அவமதிக்கவும், அவமானப்படுத்தவும் செய்துவரும் சிங்கள காடையர் கூட்டத்தை "தட்டி" கேட்பவனே "மனமுள்ள" தமிழன் என அடையாளம் கண்ட சிங்கள சிறுநரிக் கூட்டம், சிறைக்குள்ளே அந்த இளைஞர்களை கொன்று குவிக்கிறது. இதுதான் இன்றைய உயர்ந்தபட்ச போர்குற்றம். 

                     இத்தகைய போர்க்குற்றத்தை தமிழ்நாட்டை விட, சரியாக உணர்ந்தவர்கள் ஈழத்தமிழர்களே என்பதை நிரூபிக்கும் வண்ணம் இப்போது, இதுவரை எழுந்து அரசியல் போப்ராட்டன்களை நடத்ஜ்த தயங்கிய தமிழினத்தை அந்த இறந்த இளைஞர்களின் உடல்கள் 'தட்டி" எழுப்பியுள்ளன. "டெல்டுக்சன்,நிமலரூபன்" இருவரது இறுதி பயணத்திலும் சரி, அதற்கு நியாயம் கேட்க "யாழ்ப்பாண" பேருந்து நிலையம் முன்னாள் ஆகஸ்டு 15 ஆம் நாள் நடைபெற்ற ஆர்ப்பட்டதிலும் சரி, மீண்டும் தமிழர்கள் யாழ்ப்பாணத்திலேயே அணிதிரள்கிறார்கள், அரசியல்ரீதியாக அணிசெர்கிரர்கள், ஆர்ப்பாட்டம் நடத்துகிறர்கள். இதுதான் "தமிழீழத்திற்க்கான" அரசியல் ஆர்ப்பாட்ட அணிதிரளல். ஆகவே அந்த இரண்டு தமிழ் இளைஞர்களின் "படுகொலைகளை" உலகறிய செய்ய உலகத் தமிழர்கள் "ஆண்க்கான்கே" அணிதிரளுங்கள். ஆர்ப்பரியுங்கள். சிறைக்குள்ளும் கொடுமையா? என கேள்வி எழுப்புங்கள். அது அய்.நா. மட்டுமின்றி, உயலகச் சமூகத்தின் "செவிப்பறைகளை" கிழிக்கட்டும். .  .     

Friday, August 3, 2012

டெசோ மாநாட்டு மைய கருத்து விளக்க "கையேடு" பின்னால் இருக்கும் "கை"கள் எவை?


     ஆகஸ்ட் 2 ஆம் நாள் "முரசொலி" ஏட்டில்,திமுக தலைவர் கலைஞர் எழுதிய
கடிதத்தில், பத்து நாட்கள் கழித்து நடைபெறவுள்ள "டெசோ" மாநாட்டின் "மையக்
கருத்தை விளக்கும் கையேடு" என்று "தீம் பேப்பரை" குறிப்பிடுகிறார். அதே
கடிதத்தில் 29 -07 -2012 தேதியிட்ட "தினமலர்" ஏட்டை மேற்கோள் காட்டி, இலங்கை
தீவை "சீனா" பங்கு போடுகிறது என்றும், "அம்பாத்தோட்டம்" துறைமுகத்தை
செல்வாக்கு செலுத்துகிறது என்றும், அதனால் "தனுஷ்கோடி" அருகே இலங்கை கடல் படை
முகாம் அமைக்க இருக்கிறது என்றும், ஆகவே ராமேஸ்வரம்  மீனவர்களுக்கு
"ஆபத்து"எனவும், அதுபற்றி "டெசோ" மாநாடு ஆய்வு செய்யும் என்றும்
எழுதியுள்ளார். சீனா இலங்கை தீவை தனக்கு "சந்தையாக்கி" கொள்வதை எந்த நேரத்தில்
எழுதியுள்ளார்?  இந்தியாவிலிருந்து அதன் மத்திய அமைச்சரவையில்  இருந்து அதன்
வணிக அமைச்சர் "ஆனந்த சர்மா"  இருபத்தைந்து அதிகாரிகளுடன் கொழும்பு சென்றுள
நேரத்தில் இதை குறிப்பிடுகிறார். அதுவும் "இந்திய வணிக கண்காட்சியை"
கொழும்பில் ஆகஸ்ட் 3 முதல் மூன்று நாட்களுக்கு நடத்த அந்த அமைச்சர்
சென்றுள்ளார் என்பது அறிந்து இதை எழுதுகிறார்.

                அந்த கண்காட்சியில் 108 இந்திய முதலாளிகளின் பெரும்
நிறுவனங்கள் பங்கெடுக்கின்றன என்பது தெரிந்த் பிற்பாடு இதை
எழுதுகிறார்.அதுவும் அமைச்சர் ஆனந்த சர்மா,இலங்கை அரசத் தலைவர் ராஜபகசேவை
சந்திக்க இருக்கிறார என்று தெரிந்த பிறகு இதை எழுதுகிறார். அப்படியானால் இந்த
நேரத்தில் இப்படி ஒரு கடிதத்தை உடன்பிறப்புகளுக்கு திமுக தலைவர் எழுதக் காரணம்
என்ன?  இலங்கை தீவை சந்தையாக்க  துடிக்கும் சீனாவை எதிர்த்து அதை இந்திய
முதலாளிகளின் "சந்தையாக்க" எண்ணியே அவர் எழுதியுள்ளார் என்பதைத் தவிர வேறு
என்ன  இருக்க முடியும்? சரி.கருணாநிதி காங்கிரசுடன் சேர்ந்து மத்திய அரசில்
"ஐக்கிய முற்போக்கு கூட்டணியில்" இருக்கிறார். அதனால் அப்படித்தான் சிந்திக்க
முடியும். அதற்காகத்தான் எழுத முடியும். அதை ஏன் "டெசோ" மாநாடு பற்றிய தனது
கடிதத்தில் எழுதினார்? அவருக்கு தமிழக மீனவர்கள் மீது அப்படி ஒரு "அக்கறை".
அதனால்தான் எழுதினார் என்றே வைத்து பார்த்தாலும் அதுவும் எடுபடவில்லை. ஏன்
என்றால் அவர் குறிப்பிடும் "தனுஷ்கோடி" பகுதியில் "இந்திய கடல்படை முகாம்"
ஒன்று அமைக்க வேண்டும் என்று, மீனவர்களை காப்பாற்றும் பெயரில் அவர்கள்  அந்த
"டெசோ மாநாட்டு மையக் கருத்து கையேட்டில்" "பரிசீலனக்கான பரிந்துரைகள்" என்ற
தலைப்பில், "பத்தாவது" கோரிக்கையாக எழுதியுள்ளார்கள்.. அதாவது அந்த 'கையேடு"
ஆங்கிலத்திலும், தமிழிலும்,அவரே இன்றைய கடிதத்தில் சொல்வது போல, ஜூலை 16 ஆம்
நாளே :ஊடகங்களுக்கு" கொடுக்கப்பட்டு விட்டது. அதாவது அந்த கையேடும், அதிலுள்ள
"தனுஷ்கோடி கடல்படை முகாமும்" முன்பே திட்டமிடப்பட்ட டில்லியின் திட்டங்கள்.
அதிலேயே அந்த "கை ஏட்டிலேயே"அவர்கள் "தனுஷ்கோடி கடல்படை முகாம்"பற்றி எழுதி
வெளியிட்டு விட்டு, ஏதோ தங்களுக்கு சம்பந்தம் இல்லாத தினமலர் ஏட்டில், ஜூலை 29
ஆம் நாள் வெளியிடப்பட்ட செய்தியை வைத்து பேசுவது போல ஏன் பேசவேண்டும்? தங்களது
திட்டம் ஒன்று, உடன்பிறப்புகளுக்கும் , பொதுமக்களுக்கும், யதார்த்தத்தில்
ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டதாக தெரியவேண்டும் என்பதைத் தவிர வேறு எப்படி
இருக்க முடியும்?

                      அதுவும் ஏன் அவர் "தினமலர்" ஏட்டை மேற்கோளுக்கு எடுக்க
வேண்டும்? இதேபோல மூன்று வாரங்களுக்கு முன்பே கலைஞர் அவர்கள், இதே முரசொலி
ஏட்டில், தனது  கடிதத்தில்,"தினமணி" ஏட்டை மேற்கோள் காட்டி இதே சீனாவின்
செல்வாக்கு சிங்களத் தீவில் வளர்வதை சுட்டிக் காட்டியிருந்தார். வழக்கமாக
"தினமணி , தினமலர்" ஏடுகளை "அவாள்" ஏடுகள் எனச்சாடும் கலைஞர் அவர்கள், அந்த
ஏடுகளை "அதிமுக சார்பு" ஏடுகள் என வசைபாடும் கலைஞர் இப்போது, இந்திய அரசின்
"மறைமுக" திட்டங்களை அமுல்படுத்த அந்த ஏடுகளிடம், "அடைக்கலம்" தேடி செல்வது
ஏன்?  அப்போதுதான் தங்களது திட்டம் எதிர்தரப்பாலும் சுட்டிக் காட்டப்டுகின்றன
என்பதை அவர "நிரூபிக்க" முடியும். ஆனால் அந்த குறிப்பிட்ட ஏடுகள் தங்களது
"டில்லி விசுவாசத்தை"என்றைக்குமே  மாற்றிக் கொண்டவர்கள் அல்ல. செல்வி.ஜெயலலிதா
தனது சட்டமன்ற தீர்மானத்தில், இலங்கை அரசு மீது, "பொருளாதாரத் தடைகளை"
அறிவிக்க டில்லிக்காரர்களை கேட்டுக் கொண்டதும், அதையே திரும்ப, திரும்ப
சொல்லிவருவதும், நடக்கும் வேளையிலே, ராஜபக்சே அரசுடன் "வணிக உறவுக்கு"
அழுத்தம் தரும் ஒரு இந்திய அரசில் அங்கம் வகிக்கும் கலைஞர், கொழும்பில்
கண்காட்சி நடக்கும் நேரத்தில், "இந்திய முதலாளிகளின் சந்தைப் போட்டி எதிரியான
சீனாவை" பற்றி குறிப்பிடுவதும், அதற்கு மேற்கண்ட ஏடுகளையே மேற்கோள்
காட்டுவதும், ஒரு திட்டமிட்ட "பொருளாதார லாபம்" தேடும் முயற்சிதானே தவிர ,
அதில் "ஈழத் தமிழர் நலனோ, தமிழக மீனவர் நலனோ" சிறிது கூட இல்லை.

                              அதுமட்டுமின்றி, தமிழக மீனவர்கள் தங்களுக்கு
தொல்லை தரும் சிங்கள கடல்படைக்கு, சற்றும் குறையாமல் "இந்திய கடல் படையும்,
கடலோர காவல் படையும்" செயல்படுவதை பல முறை எடுத்து கூறிவிட்டனர். அவர்களது
"தொல்லைகள்" அடையாள அட்டை விநியோகத்தில் தொடங்கி, சுதந்திர நடமாட்டத்தை
தடுத்தல், மற்றும் மீனவ பெண்களின் சுதந்திரத்தில் தலையிடல் வரை நீண்டு வருவதை
நன்கு உணர்ந்தவர்களாக மீனவர்கள்  இருக்கிறார்கள். அந்த மீனவர்கள் கலைஞரையோ,
அவர் அங்கம்வகிக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசையோ, இந்திய கடல் படையையோ,
நம்புவதாக இல்லை. ஆனாலும் அந்த மீனவர்களது பெயரைச் சொல்லி, தனுஷ்கோடி கடல்படை
முகாமில் தொடங்கி, அந்த கடல்பகுதியை "ராணுவ பயன்பாட்டிற்கு" ஒப்படைக்க எண்ணும்
"தெற்காசிய ராணுவ வியூகம்" அதில் அடங்கி இருக்கிறது. அப்படிப்பட்ட தெற்காசிய
ராணுவ வியூகத்தை இந்தியாவுடன் இணைந்து செயல்படுத்த "அமெரிக்கா" முற்படுவதையும்
நாம் இங்கே கணக்கில் எடுத்து பார்க்க வேண்டும். ஆகவே "டெசோ"மாநாடு இந்திய
அரசின் இலங்கை சந்தைக்கு மட்டுமின்றி,  அமெரிக்கா--இந்திய கூட்டு ராணுவ
வியூகத்தை "இந்தியப் பெருங்கடலில்" ஏற்படுத்துவதற்கும், ஒரு களம் அமைத்து
தரும் என்பதே அவர்களது நோக்கம்.


                     இந்த டெசோ மாநாட்டு கையேடு "அரசியலற்றதாக" இருக்கிறது.
அதாவது, "தமிழீழம்" ப்ற்றி இந்த மாநாடு பேசாது என்பதுதான் வெளிப்படையாக
வெளிவந்தது. ஆனால் இந்திய அரசு வழக்கமாக பேசிவரும் "1987 இன்
ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம்" பற்றியோ, டில்லி பேசும் 13 வது அரசியல் சட்டத்
திருத்தம் பற்றியோ, வடக்கு-கிழக்கு பகுதிகளை ஒன்றுபடுத்துவது பற்றியோ" இந்த
டெசோ கையேடு பேசவில்லை. சிங்கள காலனியாக்கம் வடக்கே நடப்பதை, மனித உரிமை
பாணியில், வடக்கே சிங்களர்களது குடியேற்றம் பற்றி எடுத்து சொல்லும் இந்த டெசோ
கையேடு, "வடக்கு-கிழக்கு பகுதிகளிலிருந்து சிங்கள ராணுவத்தை வெளியேற்றுவது"
என்ற தமிழ்தேசிய கூட்டமைப்பின் கூற்றைகூட கூறவில்லை. ஆனால் ஒரு மணிநேரம் மாவே
சேனாதிராசாவுடன் பேசிய கலைஞர் "உங்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பின் வழியைத்தான்
டெசோ மாநாடு பின்பற்றும்" என்று கூறியாதாக சுமந்த்ரன் எம்.பி. நியு இந்தியன்
எக்ஸ்ப்ரஸ் ஏட்டிற்கு நேர்காணல்  கொடுத்துள்ளார். டி.ஏன்.ஏ. நாடாளுமன்ற
உறுப்பினர்களுக்கு அவர்கள் சார்ந்துள்ள டில்லி அதிகாரிகளது "பச்சைக்கொடி"
மாநாட்டில் கலந்து கொள்ள கிடைத்த்து தெரிகிறது.


                  இதற்கிடையே "நூறு" கல்வியாளர்களது கையெழுத்துடன், மன்னார்
பேராயர் ராயப்பு சோசப்பு முதல் கையெழுத்திட, ஒரு மனு,  டி.ஏன்.ஏ. நாடாளுமன்ற
உறுப்பினர்களுக்கு அனுப்பபட்டுள்ளது.அதில் " ஒற்றையாட்சி இலங்கையில்
இருக்கும்போது, எப்படி பிராந்திய கவுன்சில்" தேதல்களில் கலந்து கொள்ள
முடியும்?என்ற கேள்வி எழுப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு கேள்விகள்
எழுந்துள்ளபோது, எதையுமே எடுத்து சொல்லாத "அரசியலற்ற" கையேடு யாரால், எதற்காக
இந்த டெசோ மாநாட்டிற்கு தயார் செய்யப்பட்டது? தெளிவாக இந்திய வெளிவிவகாரத்
துறையின் உளவுத துறையான "ரா" என்ற அமைப்பின் கைவரிசைதான் எனப் புரிந்தாலும்,
எதற்காக அவர்கள் இந்த நேரத்தில் இப்படி ஒரு மாநாட்டை கூட்ட சொல்லவேண்டும்?
 ஒருபுறம் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ்-திமுக கூட்டணியை
வெற்றிபெற வைக்க "ஈழத் தமிழர் ஆதரவு" வாக்குகள் தேவை என்பது, சென்ற
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தரும் படிப்பினை அப்படி ஒரு நெருக்கடி
திமுகவிர்க்கோ, கான்கிரசிர்க்கோ, இருக்கலாம். அனால் "ரா" என்ற உளவுத் துறைக்கு
என்ன நிர்ப்பந்தம்?


                  நீண்டகாலமாக இலங்கை பிரச்சனையில், அமெரிக்கா, இந்தியாவையே
சார்ந்து நின்று, இலங்கையை கையாண்டு வந்தது. அல்லது கண்காணித்து வந்தது.
அது வன்னிப்போர் துவக்குகளை மவுனித்த பிறகு, அமேரிக்க அரசு பிரமுகர்களால்
பகிரங்கமாக கூறப்பட்டது.ஆனால் சமீபத்தில் அமேரிக்க தலைவர்கள், அதாவது
அய்.நா.மனித உரிமை கவுன்சில் தீர்மானத்திற்கு பிறகு, நேரடியாக இந்திய உதவியை
பெறாமலேயே ராஜபக்சே அரசை கையாள தொடங்கி விட்டனர். அது ஹிலாரி கிளிண்டன்
நேரடியாக ராஜபக்சேவை தொடர்பு கொண்டு, "பொன்சேகாவை" விடுதலை செய்ய சொன்னதும்,
அதை ராஜபக்சே உடனே நிறைவேற்றியதையும் கவனித்தால் புரிய முடியும்.கொழும்பில்
உள்ள ஆட்சியாளர்களுக்கும், நேரடியாக வாஷிங்க்டனுடன்  தொடர்பு என்பது
இனிக்கிறது என்று டில்லி கண்டு கொண்டது. ஏற்கனவே கோத்தபாயே, பசில், பொன்சேகா
ஆகியோர் அமேரிக்க குடியுரிமை பெற்றவர்கள் என்பதை நாம் நினைவில் நிறுத்திக்
கொள்ள வேண்டும்.


                       இந்த சூழலில் கொழும்பு, மன்னார் மாவட்ட சம்பூர் அனல்
மின் நிலையத்தை இந்தியாவிற்கு தர ஒப்புக்கொண்டு, பிறகு இலங்கை மாறுகிறது என்ற
பேச்சு வந்துவிட்டது. இந்தியாவிடம் ஒப்புக் கொண்ட ஐம்பதாயிரம் வீடுகள் கட்டும்
திட்டமும் அப்படியே நிற்கிறது. இதற்கெல்லாம் இந்திய அரசு இலங்கை அரசை
"நெருக்கடி" கொடுத்தே வழிக்கு கொண்டுவரவேண்டும் என நினைப்பது, ஒரு " பெரிய
சகோதர மனோபாவம்தான்". அது இந்திய அரசுக்கு உண்டு என்பதில் இரண்டு கருத்து
இருக்க முடியாது. அதற்காகத்தான் "ரா"அமைப்பு, ஒரு டெசோ வேண்டும் என்று
நினைக்கிறது.அதேநேரம் வருகிற நவம்பரில் அய்.நா.மனித உரிமை கவுன்சிலில்,
ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எந் அளவுக்கு இலங்கை அமுல்படுத்தியது
என்று கேள்வி கேட்கும் கூட்டம் நடக்க இருக்கிறது அதற்கு இந்தமுறை
கூட்டத்தளைமையாக அமரப்போவது இந்திய அரசு.அதனால் அதை கூறி இலங்கையை
நிர்ப்பந்திக்கலாம். அதற்காகவே இந்திய "தேசிய புலனாய்வு கழக" ஆலோசகரான
சிவசங்கர் மேனன் ஜூன் இறுதியில் கொழும்பு சென்று வந்தார்.

                          அதேசமயம் அந்த டெசோ மாநாட்டை ஏன் ராஜபக்சே பெரிதாக
"அலட்டிக் கொள்ளவில்லை?" இந்த டெசோ மாநாடு ராஜபக்செவிர்க்கும், ஒரு விதத்தில்
"நன்மை" பாவிக்கிறது. எப்படி? சமீபத்தில் ராஜபக்சே லண்டன் சென்று தமிழர்களின்
எதிர்ப்பை பெற்று திரும்பியது ஏன்? எதிர்ப்பு இருக்கும் எனத் தெரியும்போது ஏன்
சென்றார்? ஏற்கனவே லண்டனில் பல்கலை கழக  உரை நிகழ்த்த முடியாமல் திரும்ப
ஓடிவந்ததை ஏன் மறந்தார்? அவர் மறக்கவில்லை.இந்த முறையும் எத்ரிப்பு இருக்கும
என்பது அவருக்கு தெரியும். பிறகு ஏன் போய் திரும்பினார்?


                     தென்னிலங்கையில் இப்போது அல்லது சமீபத்தில் ராஜபக்செமீது
சிங்களர்களின்  கோபம் கூடி வருகிறது.அதுவும் அமேரிக்க நிர்ப்பந்தத்தில்
பொன்சேகாவை விடுதலை செய்தபிறகு, அந்த "ராஜபக்சே எதிர்ப்பு சிங்களர்கள்"
பொன்சேகா  பின்னால் "திரள"தொடங்கி விட்டார்கள். அதை எப்படி உடைப்பது? அமேரிக்க
"தேர்வான" பொன்சேகாவை எப்படி ஓரங்கட்டுவது ? அதற்காகவே தமிழர்களின் எதிர்ப்பை
நேரில் சந்தித்து, தென்னிலங்கை சிங்களர் மத்தியில் தனக்கு இருந்த
எதிர்ப்பையே "ஆதரவாக"மாற்றி விட்டார் ராஜபக்சே. அதேபோல இந்தியாவில்
காங்கிரசின் கூட்டணியான திமுக "டெசோ"நடத்தி காங்கிரசிற்கு உதவும்போது, அந்த
டெசோவிற்கு, "எதிர்ப்பு" தெரிவித்து இலங்கையில் ராஜபக்சே வின் கூட்டணி
கட்சியான "ஜாதிக உறுமைய", அதன்மூலம் ராஜபக்சேவிற்கு உதவுகிறது. இதன்ப்மூலம்
சிங்களர்கள் மத்தியில் ராஜபக்சே வின் "ஆதரவு" கூடும் என்பதே அவர்களது
எதிர்பார்ப்பு. இவ்வாறு ஒவ்வொரு "அசைவும்" அரசியலாக நடக்கும்போது, "அரசியலற்ற"
ஒரு "கையேடு" வைக்கும் "கை" கள், "கை" சின்னத்தார் தவிர வேறு யார்?

               இந்த நேரத்தில் ஒன்றை நாமும் நினைவு படுத்தி கொள்ள வேண்டும்.
அதை நமக்கு "இந்திய அமைதி காக்கும் படையின்" ராணுவ உளவுத்துறை தலைவராக இருந்த
கேப்டன் ஹரிஹரன் நினைவு படுத்தி உள்ளார். அதாவது கடந்த ஜூலை 29 ஆம் நாள்
எனபது,  இந்திய ராணுவம் ஈழத் தமிழர்  பகுதிக்குள் நடத்திய "ராணுவ தலையீட்டின்"
இருபத்தைந்தாம் ஆண்டு நினைவு நாள்.அதை அவர் "தி ஹிந்து" ஆங்கில நாளேட்டில்
கட்டுரையாக எழுதியுள்ளார். "இந்திய ராணுவ தலையீடு" என்ற சொல்லை பயன்படுத்தி
உள்ளார்.  அதமூலம் நமக்கு அந்த "கொடுமை நாட்களை" நினைவு படுத்தி விட்டார்.
ஆகவே  முதலில் ஈழத் தமிழர்கள் மீது "இன அழிப்பு போரை" நடத்தியது இந்திய அரசே
என்பதை நாம் நினைவு படுத்த அதுவே நல்லதொரு சான்று.

சீ.பி.அய். அறிககையை கேள்வி கேட்கும் தடவியல் நிபுணர்.


    இன்று வழக்கறிஞர் சங்கரசுப்பு வின் மகன் சதிஷ்குமார் மரணத்தை பற்றிய உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கில், இத்தனை நாள் கழித்து நீதிமன்றம் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக தனகளது ஏழு அறிக்கைகளை சீ.பி.அய். முன்வைத்து. அதில் ஆறு அறிக்கைளில் "கோளை" என்பதற்கான சான்றுகள் இருப்பதாக கூறிய சீ.பி.அய். இப்போது "தற்கொலை"என்று அந்த மரணத்தை வர்ணித்துள்ளது.இதற்க்கான காரண, காரியங்கள் மிகவும் வேடிக்கையாக சீ.பி.அய்.யால் வைக்கப்பட்டுள்ளன. அந்த அறிக்கையின் மீதான கேள்விகளை இன்றைய ஊடகவியலாளர்கள் கூட்டத்தில் வழகக்ரிஞர்களுடன், "தடவியல் நிபுணர்" பிரபல சந்திரசேகர் கேட்டது அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது.

                 மரணம் பற்றிய "போஸ்ட் மார்டம் அறிக்கை"  என்ன கூறுகிறது என்று அவர்கள் முன்வைத்தார்கள். அதாவது சதிஷ்குமாரின் கழுத்தில் ஆழமான நான்கு வெட்டுகள் ஒரு கூர்மையான் ஆயுதத்தால் அறுக்கப்பட்ட அடையாளம் உள்ளது. அதை சீ.பி.அய். தற்கொலை என்று கூறுவதற்காக, "தானே ஒரு பாதி பிளேடால்" அவர் அறுத்து கொண்டார் என முடிக்கிறார்கள். ஒரு அரை பிளேடால் ஆழமான இரண்டு செண்டிமீட்டார் ஆழம் கொண்ட  வெட்டை ஏற்படுத்தமுடியுமா? என தடவியல் நிபுணர் கேட்டார். அதுவும் அதுபோல "நான்கு" இரண்டு செண்டிமீட்டார் ஆழமுள்ள வெட்டுகளை எப்படி "தானே" அறுத்து கொள்ள முடியும் என்றும் கேட்டார். அரை பிளேடு என்பது ஒரு செண்டிமீட்டார் அகலம் கொண்டதுதான் என்றார். நீளமான கத்தி இல்லாமல், அதற்கும் ஒரு பிடி இல்லாமல் கழுத்தை அறுக்க முடியாது என்றார். அதனால் வெளி சக்திகள்தான் அதை செய்திருக்க வேண்டும்  எனும்போது, எப்படி அது ஒரு "தற்கொலையாக " இருக்கும்? 

             அதேபோல மரணம் தண்ணீரில் "மூழ்கியதால்" ஏற்படவில்லை என்று "போஸ்ட் மார்டம்" அறிக்கை கூறிவிட்டது. ஆகவே தண்ணீரை அந்த உடல் குடிக்கவில்லை. டயடம் சோதனை மூலம் அது நிரூபிக்கப் பட்டுள்ளது. அப்படியானால் "மக்கார்ஸ்" என்ற   புழுக்கள்  தோன்றியுள்ளன என்று கூறுவது எப்படி? அந்த புழுக்கள் தண்ணீரில் இல்லாத உடலில் "புண்" இருக்கும் இடத்தில் தோன்றக் கூடியவை. அவை முட்டை போட்டு, லார்வா பருவம் அடைந்து, அதன்பிறகு, புழுவாக நெளிய ஐந்து நாட்களுக்கு மேல் ஆகும். ஆனால் அண்ட் சதிஷ்குமார் காணமல் போன பிறகு, "ஆறாவது நாளில்தான்" அவரது உடல் அண்ட் ஏரியில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. எப்படி மிதந்த பிணத்தின் முதுகில் கூட, புண் மீது நெளியும் புழுக்கள் அந்த இஅரண்டு நாட்களுக்குள் உருவாகும்? தஹ்ரையில் கொன்று போட்டு வைத்திருக்கும் பிணத்தில் மட்டும்தான் அது உருவாக்க முடியும். அபப்டியானால் அது எப்படி தற்கொலை? 

              தானே தன்னை வெட்டிக் கொண்டு, சதிஷ்குமார் தண்ணீருக்குள் தானே விழுந்து விட்டான் என்றும், ஒரு விலங்கு தண்ணீருக்குள் இழுத்து சென்றது என்றும் சீ.பி.அய். தரப்பு கூறுகிறது. அபப்டியானால் முதலை மட்டும்தான் தண்ணீரில் உள்ள விலங்கு. அது அய்.சீ.எப். ஏரியில் கிடையாதே? இவ்வாறு பல கேள்விகள் இருப்பதால் தற்கொலை என்ற வாதத்தை ஏற்கமுடியாது. ஆகவே ஒரு "மருத்துவ,சட்ட ஆலோசனை குழு"வை அமைத்து நீதிமன்றம் இதை ஆய்வு செய்யவேண்டுமே ன்றார் தடவியல் நிபுணர் சந்திரசேகர். அதேபோல வெளிநாட்டு தஹ்டவியல் நிபுணர்களை அந்த குழுவில் சேர்த்து விசாரணை செய்யவேண்டும் என்றார்.
                                

Wednesday, August 1, 2012

டெசோ மாநாடு "தீம் பேப்பர்" அரசியலற்று இருப்பது ஏன்?

டெசோ மாநாடு  "தீம் பேப்பர்"  அரசியலற்று இருப்பது ஏன்?
      இலங்கை அரசை இந்திய ரசின் மூலமாகத்தான் அமெரிக்கா கவனித்தும் வந்தது, கையாண்டும் வந்தது. சமீப மாதங்களில் அதில் ஒரு மாற்றம். அமெரிக்கா நேரடியாக இலங்கை அரசை கையாள ஒரு வாய்ப்பு அதற்கு கிடைத்து விட்டது. அய்.நா.மனித உரிமை கவுன்சிலில் இலங்கையை கையாளும் "தீர்மானம்" வெற்றி பெற்ற பிறகு, இலங்கை அமெரிக்காவிற்கு "நேரடியாகவே" அடிமை சாசனம் எழுதிக் கொடுக்கலாமே என்று எண்ணத்தான் செய்யும். அமெரிக்காவும் ஏன் நாம் நேரடியாக ஐலன்கையை கையாலாகக் கூடாது என்று எண்ணத்தான் செய்யும். அப்படி இரண்டு அரசுகளுமே எண்ணி விட்டன. அதற்கு நம் நாட்டிலிருந்து வாஷின்க்டனுக்கு அனுப்பப்பட்ட "நிருபமா ராவ்" ஒரு "கிரியா ஊக்கி" யாக செயல்பட்டதாக தெரிகிறது.  அதாவது இந்த நிருபமா ராவ் இந்தியாவின் வெளிவிவகார துறையின் செயலாளராக செயல்பட்டு வ்நதபோதுதான்,அவர் இலங்கை விசயத்தில் "தேர்ச்சி" பெற்றார். அதை பயன்படுத்தி மஹிந்த ராஜபக்சேவிடம்  நலன் காக்கும் பிரதிநிதி ஆனார். இவர் அமெரிக்காவிற்கு இந்தியாவின் "தூதராக" நியமிக்கப்பட்டவுடன், அங்கே சென்று "ஹிலாரி கிளிண்டனின்" நேரடி தொடர்புக்கு சென்றார்.  இவர் அமெரிக்காவிற்கு கிளம்பும்போது, டில்லி இவருக்கு "பிரிவு உபசாரம்" நடத்தவில்லை. மாறாக கொழும்பிற்கு இவரை வரவழைத்து, மஹிந்த ராஜபக்சே ஒரு "பிரிவு உபசார விழா" நடத்தினார். பிறகு இந்த நிருபமா ராவ் யாருக்கு விசவாசமாக இருப்பார்? 


                           ஆகவே நிருபமா ராவ் மஹிந்த பற்றி கூறிய நல்ல கருத்துகளை ஏற்றுக் கொண்ட "ஹிலாரி கிளிண்டன்" நேரடியாக மஹிந்தாவிடமே பேசினார். பொன்சேகாவை விடுதலை செய்யச்சொன்னார். இலங்கையின் சட்டப்படி, நீதிமன்றம் "தண்டித்த" ஒருவரை, அந்த நாட்டின் "அதிபர்" அதாவது "அரசத் தலைவர்" விடுதலை செய்யலாம். அதன்படியே பொன்சேகா விடுதலை செய்யப்பட்டார். பொன்சேகா ஒரு அமெரிக்கா குடிமகன். மகிந்தவின் சகோதரர்களான "கோத்தப்பாயேவும், பசில் ராஜபக்சேயும்" அமெரிக்காவின் குடியுரிமை பெற்றவர்கள். ஆகவே அமெரிக்காவுடன் சமரசம் செய்துகொள்வதில் இலங்கை அரசுக்கு பெரியதொரு தடங்கல் கிடையாது.  அதனால் இந்திய அரசை "அவமதிக்கும்" செயல்களை "தாராளமாக" செய்யத் தொடங்கியது. அதன் ஒரு அம்சமே மன்னார் மாவட்டத்தில் ஒப்புக்கொண்ட அனல் மின் நிலையத்தை இந்தியா தொடங்க அனுமதி தராமல் இழுத்து வந்த செயல்.  அதுபோலவே   நூற்றுக்கு மேற்பட்ட இந்திய பொருள்களை தடை செய்ததாக வந்த அறிவிப்பும். அதனால் வெகுண்டெழுந்த இந்தியா ஒருபுறம் 'சிவசங்கர மேனனை" அனுப்பி பேசுவதும், இன்னொருபுறம் கருணாநிதியிடம் கூறி "டெசோ" மாநாடு நடத்த சொல்வதும். இதற்க்கு பெயர் " கேரட்டும், தடியும்" என்ற கொள்கை என்று இந்தியாவின் "ராஜதந்திரம்" கூறுகிறது. 


                   இந்தியைய அரசிற்கு வேறொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அய்.நா.மனித உரிமை கவுன்சிலில் வந்த தீர்மானத்தின், செயல்பாடு, வருகிற நவம்பர் மாதம் கூடும், மனித உரிமை கவுன்சிலில் விவாதத்திற்கு வருகிறது. அந்த கூட்டத்திற்கு இந்திய அரசே தலைமை தாங்க இருக்கிறது. அதனால் அதை வைத்து சிவசங்கர மேனன் ராஜபக்சேவிடம் "பேரம்" பேசியிருக்கிறார். அதையொட்டி இந்திய வணிக அமைச்சர் ஆனந்த சர்மா "நூற்றி எட்டு" இந்திய கம்பெனிகளை அழைத்துக் கொண்டு, இலங்கை சென்று வணிகம் பேச செல்கிறார். அதேபோல ராஜபக்சேயும், "கற்ற பாடங்கள், மற்றும் நல்லிணக்க ஆணையம்" கூறியுள்ள "பரிந்துரைகளை" அமுல்புத்த இருப்பதாக அறிவித்துள்ளது. இவ்வாறு இரண்டு நாட்டு அரசுகளும், தங்களுக்குள் சமரசம் செய்துகொள்ள "ஈழத்தமிழர்" விவகாரம் ஒரு கருவியாக பய்டன்படுத்தப் படுகிறது. அதேபோல இந்திய வெளிவிவகார துறையின் உளவு துறையான "ரா" அமைப்பு, கலைஞரின் "டெசோ" மாநாட்டிற்கு, ஒரு "தீம் பபேர்" தயரா செய்து கொடுத்துள்ளது. அந்த தீம் பேப்பரில் எந்த ஒரு தீர்வும் தமிழர் பிரச்சனைக்கு இல்லாதது அதிர்ச்சியை அளிக்கிறது. 

                    வழக்கமாக 1987 இன் , ராஜீவ் காந்தி---ஜெயவர்தனே ஒப்பந்தம் கூறும், வடக்கு--கிழக்கு ஒன்றுபடுதல்; பற்றியும் அந்த தீம் பேப்பரில் இல்லை. அதை ஒட்டி இந்திய அரசு கூறிவரும் "பதின்மூன்றாவது சட்ட திருத்தம்" பற்றியும் அந்த தீம் பேப்பரில் இல்லை. "அதிகார பகிர்வு" என்று நமது  வெளிவிவகார துறை கூறிவரும் சொற்களும் அந்த தீம் பேப்பரில் இல்லை. அய்யா, "தமிழம்" தான் இருக்காது. அதற்காக எந்த ஒரு அரசியல் தீர்வுக்கான முயர்ச்சியுமா இருக்காது? அந்த அளவுக்கு "அரசியலற்ற" ஒரு அறிக்கையாக அது இருக்கிறது. அதாவது கருணாநிதிக்கு இதுபோதும  என்று அந்த "ரா" அதிகாரிகள் எண்ணிவிட்டார்கள் போலும். அல்லது எந்த விதத்திலும் இந்த தீம் பேப்பர் இரு நாட்டு  அரசுகளுக்கும் மனக் கஷ்டத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்ற எண்ணத்தில் எழுதப்பட்டதோ தெரியவில்லை. இப்படியாக ஈழத் தமிழர் வாழ்நிலை என்பது மீண்டும் ஒருமுறை வருகிற பன்னிரெண்டாம் தினம் "கேலிக்குரியதாக" ஆக்கப்பட இருக்கிறது. 

                       இங்கே காங்கிரசின் கூட்டணி மூலம் டெசோ நடத்துவதும், அங்கே உள்ள ராஜபக்சேவின் கூட்டணியான புத்த பிக்குகளின் கட்சி மூலம் அந்த டெசோ விற்கு தடை கோருவதும், இரண்டு அரசுகளுக்குள் உள்ள "ப்னிப்போர்". ஆகவே தமிழர்கள் இந்த இந்திய தந்திரத்தை புரிந்து கொள்ளப் போகிறார்களா? இல்லையா"