Saturday, July 28, 2012

உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் இன்று சென்னையில்

உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் இன்று சென்னையில் ஊடகவியலாளர்களின் கூட்டத்தை நடத்தியது. 


அதில் இயக்குனர் புகழேந்தி, உ.த.பா.இ.அமிபாளர்கள் சூரியா, ராஜா, ஸ்டாலின், அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்கத் தலைவர் எஸ்.ஏ.மகேஷ், வேல்முருகன் கட்சியை சேர்ந்த முன்னாள் ச.ம.உ. காவேரி,ஆகியோர் கலந்துகொண்டனர்.இன்று காலை நடந்த ஊடகவியலால்கள் கூட்டத்தில் நாளை ஞாயிறு  மாலை நாலு மணிக்கு சென்னை வள்ளுவர் கூட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த இந்த அமைப்பு அறிவித்தது. எதற்காக இந்த நாளை தேர்வு செய்தீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டபோது, 1987 ஆம் ஆண்டு இதே ஜூலை 29 ஆம் நாள்தான் "இந்திய அமைதிப்படை" என்ற பெயரில் இந்திய அரசின் ஆக்கிரமிப்பு போர் ஈழ மண்ணில் தொடங்கியது என்றும் அது நடந்து " இருபத்தைந்து" ஆண்டுகள் நிறைவு ஆகிவிட்டன என்றும், "முதல் இனப்படுகொலையை" ஈழத்தமிழர்கள் மீது அப்போது தொடங்கியது இந்தியப்படைதான் என்றும், அதற்கு பிறகே ராஜபக்சே அரசு இன அஹிப்பை செய்தது என்றும், அதனால் ராஜபக்சேவின் நாட்டு வீரர், வீராங்கனைகளை லண்டன் அனைத்து நாட்டு ஒலிம்பிக் போட்டியில் விளையாட அனுமதிக்க கூடாது என்ற கோரிக்கையை, வைத்து நடத்தும் ஆர்ப்பாட்டத்தை அந்த முதல் சோக நாளிலியே வைத்துள்ளோம் என்றும் அந்த மைப்பின் ஒரு ஒருங்கிணைப்பாளரான ராஜா ஸ்டாலின் கூறினார்.

No comments:

Post a Comment