Monday, July 30, 2012

சென்னை ஆர்ப்பாட்டம் சிவந்தனின் கோரிக்கையை தாண்டி சென்றது.


      ஞாயிறு அன்று மாலை சென்னையில் "உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்" என்ற புதிய அமைப்பிலிருந்து இளைஞர்கள் வள்ளுவர் கோட்டத்தில் நடத்திய ஆர்ப்பாட்டம் புதிய செய்திகளை விவாதத்திற்கு கொண்டு வந்தது. அதில் அன்றைய நாள் அதாவது ஜூலை 29 என்ற நாளின் முக்கியத்துவம் பேசப்பட்டது. அன்றைய நாள் "இருபத்தைந்து ஆண்டுகளுக்கு" முன்பு  "துன்பத்தை" ஏற்றுமதி செய்த நாள் என்பதை நினைவு கூறினார்கள். அந்த துன்பத்தின் பெயர் "இந்திய ராணுவம்" என்று வர்ணிக்கப்பட்டது. 1987 ஆம் அண்டு இதே நாளில்தான்  "இந்திய அமைதி பாதுகாப்பு படை" என்ற பெயரில் ஒரு இந்திய மிதி கொல்லும் படை, ஈழத்திற்கு, வடக்கு மாகனத்திர்க்கும் அனுப்பிவைக்கப்பட்டது. அது ராஜீவ் காநதி என்ற ஒரு மாபெரும் "சிந்தனையாளரின்" செயல்பாடு. 

              அவர் கையெழுத்திட்ட ஒரு ஒப்பந்தத்தை செயல்படுத்த, ஈழத்தமிழர்கள் மத்தியில் உள்ள போராளிகளின் கைகளை "நிராயுத பாணியாகக" சிங்களத்தால் முடியாது என்பதை உணர்ந்து, அதற்காக "சீக்கிய, மராத்திய" படைகளை இந்திய ரானுவத்திளிருட்ன்ஹு "பொறுக்கி" எடுத்து, இலங்கை தீவிற்கு அவர் அனுப்பிவைத்த நாள். அந்த நாளை குறிப்பிட்டு எழுதும், இந்திய ராணுவ தளபதி ஹரிஹரன் ஜூலை 28  ஆம்நாள் "தி ஹிந்து" நாளேட்டில் ஒரு கட்டுரை வடித்துள்ளார். தமிழ் டேஹ்ரியாத இந்தியப்படைதான் "ஆக்கிரமிப்பை" அஞ்சாமல் "தமிழ் பகுதிகளில்" செய்யமுடியும் என்ற இந்திய "தன்ம்திரம்" பலித்தது. அந்த கட்டுரையில் ஹறிஹரன் குறிப்பிடும்போது  "ராணுவ தலையீடு" என்ற சொள்ளை பயன்படுத்துகிறார். அதாவது அவர் அமைதியை ஏற்படுத்த சென்ற படை என்று " சான்றிதழ்" கொடுக்கவில்லை. அதுமட்டுமின்றி, 1971  இல் இதே போன்று இந்திய ராணுவம் "கிழக்கு பாகிஸ்தான்" பகுதிக்குள் நுழைந்தது என்பதை அவர் ஒப்பிடுகிறார். அதில் கிழக்கு பாகிஸ்தானில், இந்தியப்படை பாகிஸ்தான் ராணுவத்தை எதிர்த்து நுழைந்தது என்கிறார். அதை இலங்கை சாகசத்திற்கு ஒப்பிடும்போது, இலங்கையின் "வடக்கு,கிழக்கு" மாகாணங்களில் இருந்த "ஈழப்போராளிகளை" இல்லாமல் செய்ய என்றும் குறிப்பிடுகிறார். அந்த "டேஹ்ளிவு" நமது அரசியல்வாதிகள் பலருக்கு இல்லாமல்போனதுதான் விசித்திரம்.

                    அப்படியானால் 1987 இன் இந்தியப்படையின் இலங்கை நுழைவு, ஒரு "ஆக்கிரமிப்பே" என்பது புரியும்.அதன் இருபத்தைந்து ஆன்டுகள் நிறைவுறும்போது, அந்த கொடுமைகளை நமக்கு நினைவு படுத்தும் விதத்தில் எழுதுகிறர ஹரிஹரன். யார் இந்த ஹரிஹரன்? அவர்தான் இந்திய அமைதி காக்கும் படையின், "ராணுவ உளவுத்துறை தலைவர்". அதனால் அந்த விவகாரத்தை அவர் எழுதும்போது, அதுவும், சென்னையின் ஆங்கில இதழில் எழுதும்போது, அதுவும், "ராணுவ தலையீடு" என்று எழுதும்போது, அந்த அகத்துறை முக்கியத்துவம் பெறுகிறது. ஏன் என்றால் அவரது "ஆலோசனையின்"பேரிலேயே சமீபத்தில், "விடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிக்கப்பட்டது". கிழக்கு பாகிஸ்தானை விடுதலை செய்ய இந்தியப்படை உதவியதை, அதன்மூலம் "வங்காள தேசம்" உருவாக்கியதை, அவர் இலங்கை தீவில் நுழைந்து, தமிழர் படையை நிராயுதபாணியாக்க முயன்றதை ஒப்பிடுகிறார். முன்னதில் வெற்றி என்றும், பின்னதில் "தோல்வி" என்றும் குறிப்பிடுகிறார். அதனால்தான் இன்றுவரை "புலிகளின் தடைக்கு" எழுகிறார் போலும்?
                    
                   அதன்மூலம் இந்தியப்படைதான் ஈழத்தமிழர் மீதான முதல் "இன அழிப்பு போரை"நடத்தியது என்பதை மரிமுகமாக ஒப்புக்கொள்கிறார். ஆகவே இந்திய அரசுதான் முதல் இன அழிப்பு போரை 1987 இலேயே "தொடங்கியது" என்பதையும், அதன்பிறகே ராஜபக்சே, "இன அழிப்பு போரை" நடத்தினான் என்பதையும் உலகத் தமிழர்கள் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும். அந்த நினைவை அவர்கள் கொண்டாடும்போது, நாம் நினைவு படுத்தி பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது. இதை இளைஞர்கள் நடத்திய  அந்த சென்னை ஆர்ப்பாட்டம் சுட்டி காட்டியது, உண்மையிலேயே "சிறப்பாக" இருந்தது. ஆகவே  லண்டனில் "சிவன்தான்" எப்படி தன் நாட்டு "அதிபர்" தங்கள் மக்களையே "இன அழிப்பு" செய்துவிட்டு லண்டன் வருகை செய்வதையும், இனவெறி இலங்கை ஒலிம்புயக் போட்டிகளில் விளையாட தகுதி அற்றது எனபதை சுட்டி காட்டுகிறாரோ, அதேபோல இந்த தமிழ் இளைஞர்கள், சென்னையில் இருந்து கொண்டு, அததகைய ஒரு இன அழைப்பு போரை தங்கள் இந்திய அரசு செய்ததை "நினைவு" படுத்தினார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. 

             அடுத்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மதிமுக மல்லை சத்தியா, இயக்குனர் புகழேந்தி தங்கராஜ், ஓவியர் வீர சந்தானம, நடிகரும், இயக்குனருமான களஞ்சியம், தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சியின் தலைவர் பேராசிரியர் தீரன், பெரியார் திராவிட கழக அன்பு தனசேகரன்,ஆகியோர் இங்கே இரண்டு வாரம் கழித்து நடத்த இருக்கும் "மாநாடு என்ற கூத்தை" பற்றியும் சுட்டாமல் இல்லை. அந்த டெசோ மாநாடு நடத்த கலைஞர் முன்வைத்துள்ள " தீம் பேப்பர்" என்ற கருத்து தாள்" , தெளிவாக "வச்டக்கு-கிழக்கு மாகாண அதிகபட்ச சுயாட்சி"பற்றி குறிப்பிடுகிறது என்பதையும் ஆர்ப்பாட்டத்தில் அம்பலப்படுத்தினார்கள். அந்த தீம் பேப்பரை "தயாரித்து" கொடுத்தது இந்திய வெளிவிவகார  துறையின், உளவு துறையான "ரா" என்பதையும் அங்கே தெளிவு படுத்தினார்கள். அந்த "ரா" மைப்பிர்க்கு தொடர்ந்து  முன்னாள் ராணுவ தளபதி ஹரிஹரனும், முன்னாள் சென்னை பலகலைகழக அரசியல் துறைத்  தலைவர் பேராசிரியர்  சூரியனாரயணனும், " திங்கு டான்க் " என்ற "சிந்தனை வங்கிகளாக" செயல்படுகிறார்கள் என்பதையும் எடுத்து சொன்னார்கள். அதனால் "டெசோ" என்பது ஒரு "ரா" அமைப்பின் வழிகாட்டலே எனபது தெளிவானது.அதனால் கலைஞர் "தமிழீழம்"கனவு வைத்திருக்கிறாரா? இல்லையா? என்பதோ, அதை தீர்மானத்தில் கொட்னுவருகிறாரா? இல்லையா? என்பதோ விவாதமே இல்லை என்றும், டெசொவின் தீம் பேப்பர் தெளிவாக "ராஜிவ்காந்தி-ஜெயவர்தனே ஒப்பந்தத்தை" ஒட்டிய  "அதிகபட்ச சுயாட்சிதான்" பேசுகிறது என்பது பற்றியும், நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

                   இந்த நேரத்தில் ஒரு முக்கிய  அறிக்கை ஈழத்து கல்வியாளர்கள் "நூறு பேர்" கையெழுத்திட்டு வெளிவந்துள்ளது. அதில் அவர்கள் "எப்படி ஒரு ஒற்றையாட்சி ரசில், பிராந்திய கவுன்சில்கள்" செயல்பட முடியும்? என்றும், ஆகவே அவடரின் டேஹ்ர்தல்களை புறக்கணிக்க வேண்டும் என்றும், "வடக்கு-கிழக்கை" தமிழர் தாய் நிலமாக அங்கீகரிக்கும் ஒரு அரசாட்சிதானே வேண்டும் என்றும், எழுதியிருக்கிறார்கள். இத்தகைய பிரச்சனைகளை "தான் டெசொவில்' விவாதிப்பேன் என்று கலிஞர் கூறுகிறாரா? அல்லது அங்குள்ள தமிழ் மக்களுக்கு உடனே உணவும், உறைவிடமும் தேவை என்பதால் அதைமட்டுமே விவாதிக்கும், "தொண்டு நிறுவனம்" போல நடத்துவேன் என்கிறாரா? ஹரிஹரன் கூட தனது கட்டுரையில் தமிழருக்கான "அதிகார பகிர்வு" பற்றி பேசுகிறார். அதற்கு காரணம் இப்போது இலங்கை விசயத்தில் இதுவரை டில்லியை கலந்துய் செய்துவந்த வாஷிங்க்டன் இப்போது, டில்லியை கை கழுவி விட்டுவிட்டு, கொழும்புடன் குலாவி வருகிறது என்ற டில்லியின் கோபமே ஹரிஹரன் கட்டுரை என்பதும் நமக்கு புரிய வேண்டும். 


            அதையும் தாண்டி, "வாக்கு கொடுத்த" மன்னார் மாவட்ட சம்பூர் அனல் மின் நிலையத்தை இந்தியாவிற்கு கொடுக்காமல், பாகிஸ்தானிற்கு கொடுக்க கொழும்பு எத்தனித்து விட்டது என்பதும் "ரா" அமைப்பை எரிச்சலூட்டி, அதுவே "டெசொக்களை" உருவாக்க வழி வகுத்திருக்கும். ஆனாலும் அய்.நா. சபையின், மனித உரிமை கவுன்சிலில், கொண்டுவரப்பட்ட  "இலங்கை தீர்மானம்" அடுத்த கட்டத்திற்கு, நவன்பர் கூட்டத்தில் வார இருக்கிறது. அப்போது இந்திய ரசுதான் அந்த கூட்டத்திற்கு "தலைமை" தாங்க இருக்கிறது. அதையே வாய்ப்பாக வைத்து இந்திய அரசு 'சிவசங்கர் மேனன் பயணம்" போன்ற ஒன்றாக "டெசோ" மாநாட்டையும் ராஜபக்சே அரசிடம் "பேரம்" பேச பயன்படுத்துகிறது என்பது மிகையல்ல. ஆகவே தமிழர்களே "டெசோ" எச்சரிக்கை மணியை உலகம் முழுக்க கொண்டு செல்லுங்கள். 

Saturday, July 28, 2012

உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் இன்று சென்னையில்

உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் இன்று சென்னையில் ஊடகவியலாளர்களின் கூட்டத்தை நடத்தியது. 


அதில் இயக்குனர் புகழேந்தி, உ.த.பா.இ.அமிபாளர்கள் சூரியா, ராஜா, ஸ்டாலின், அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்கத் தலைவர் எஸ்.ஏ.மகேஷ், வேல்முருகன் கட்சியை சேர்ந்த முன்னாள் ச.ம.உ. காவேரி,ஆகியோர் கலந்துகொண்டனர்.இன்று காலை நடந்த ஊடகவியலால்கள் கூட்டத்தில் நாளை ஞாயிறு  மாலை நாலு மணிக்கு சென்னை வள்ளுவர் கூட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த இந்த அமைப்பு அறிவித்தது. எதற்காக இந்த நாளை தேர்வு செய்தீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டபோது, 1987 ஆம் ஆண்டு இதே ஜூலை 29 ஆம் நாள்தான் "இந்திய அமைதிப்படை" என்ற பெயரில் இந்திய அரசின் ஆக்கிரமிப்பு போர் ஈழ மண்ணில் தொடங்கியது என்றும் அது நடந்து " இருபத்தைந்து" ஆண்டுகள் நிறைவு ஆகிவிட்டன என்றும், "முதல் இனப்படுகொலையை" ஈழத்தமிழர்கள் மீது அப்போது தொடங்கியது இந்தியப்படைதான் என்றும், அதற்கு பிறகே ராஜபக்சே அரசு இன அஹிப்பை செய்தது என்றும், அதனால் ராஜபக்சேவின் நாட்டு வீரர், வீராங்கனைகளை லண்டன் அனைத்து நாட்டு ஒலிம்பிக் போட்டியில் விளையாட அனுமதிக்க கூடாது என்ற கோரிக்கையை, வைத்து நடத்தும் ஆர்ப்பாட்டத்தை அந்த முதல் சோக நாளிலியே வைத்துள்ளோம் என்றும் அந்த மைப்பின் ஒரு ஒருங்கிணைப்பாளரான ராஜா ஸ்டாலின் கூறினார்.

சென்னையிலும் லண்டன் அனைத்து நாட்டு ஒலிம்பிக் ஆட்டத்திற்கு கோரிக்கை


          சென்னையில்  தமிழின இளைஞர்கள் ராஜா ஸ்டாலின் மற்றும் சூரியாவின் நண்பர்கள் இணைந்து ஒரு புதிய அமைப்பை ஏற்ப்படுத்தி உள்ளனர். அதற்கு " உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்" என்று பெயரிட்டுள்ளனர். இந்த இயக்கம் ஐநூறு இளைஞர்கள் அம்பத்தூரில் கூடியபோது உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அம்பத்தூரில் த்ஜோடன்கிய இந்த இளைஞர்களது இயக்கம், இன்று சென்னை மையப்பகுதிக்கு வந்துள்ளது. தனது சமூக, அரசியல், இன பயணத்தில், இந்த இயக்கம் நாளை சென்னை பத்க்திரிகையாளர் மன்றத்தில் சேப்பாக்கத்தில் ஒரு "ஊடகவியலாளர் கூட்டத்தை" நடத்த திட்டமிட்டுள்ளது. அந்த கூட்டத்தில் லண்டனில் நடக்கும் அனைத்து நாட்டு ஒலிம்பிக் ஆட்டத்திற்கு சில கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள். ஏற்கனவே லண்டனில் ஈழத் தமிழ் இளைஞர் சிவானந்தா அனைத்க்து நாட்டு ஒலிம்பிக் போட்டிக்கு, "போர்க் குற்றங்களில்" ஈடுபட்ட இலங்கை சிங்கள அரசின் பங்களிப்பை தடை செய்யவேண்டும் என்று கோரியும், காமன்வெல்த் நாட்டு வரிசையிலிருந்து இலங்கையை, இங்கிலாந்து அரசு நீக்க வேண்டும் என்று கோரியும், ஐந்து நாட்களாக பட்டினிப்போர் நடத்தி வருவது இந்த சென்னை இளைஞர்களை அதே கோரிக்கை மீது போராட தூண்டியுள்ளது. ஆகவே இவர்கள்  , ஞாயிறு அன்று சென்னை மையப்பகுதியில் உள்ள "வள்ளுவர் கோட்டத்தில்" ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளனர். அதற்கு முன்பு இந்த செய்தியின் நியாயத்தை பொதுமக்களுக்கு  எடுத்து சொல்ல சனிக்கிழமை காலை பதினோரு மணிக்கு ஊடகவியலாளர் சந்திப்ப 


                    இந்த இளைஞர்களது முன்முயர்ச்சியை புரிந்துகொண்ட, பல அரசியல், சமூக, பண்பாட்டு தலைவர்கள் அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, "ஏன் அனைத்து நாட்டு ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை சிங்கள அரசை தடை செய்யவேண்டும்?" என்பதுபற்றி விளக்க . அவர்களில் திரைப்பட இயக்குனர்கள்  மணிவண்ணன், புகழேந்தி தங்கராஜ், , மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் மலை சத்தியா, பெரியார் திராவிடக் கழக , தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சி { நிறுவனர்-வேல்முருகன் ] , தலித் தலைவர் ரேவதி நாகராஜ், ஆகிய இந்தியப் பாரம்பரிய மீனவர் சங்க தலைவர் எஸ்.ஏ.மகேஷ், , தமிழக முன்னேட்டிற கழகம் அதியமான்,மற்றும் உலக தமிழர் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த சூரியா, ராஜச்டலின் ஆகியோர் கலந்து கொள்க. இது தமிழக இளைஞர்கள் இடையே  ஒரு புதிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது..

Wednesday, July 25, 2012

மிரண்டாரா? மிரட்டுகிறாரா? கலைஞர் பற்றிய ஒரு ஆய்வு.


     நாம் கலைஞர்  சிதம்பரத்தின் டில்லிகார தர்பார் மிரட்டலுக்கு பயந்துதான் டெசோ மாநாட்டில் "தமிழீழம்" தீர்மானம் இருக்காது என்று கூறுவதும், தமிழர்களிடம் தனிமைப்படுவது கண்டு மிரண்டு, இல்லை, இல்லை நான் தமிழீழத்தை இன்னமும் கனவாக கொண்டுல்லீன் என்று மாற்றி, மாற்றி, கூறுவதும் செய்கிறார் என்றுதான் எண்ணிவந்தோம். ஆனால் அதை கலைஞரின் சீடராக குடும்ப ரீதியில் அன்றிலிருந்து, இன்றுவரை இருந்தவரான ஒரு வழக்கறிஞர் கடுமையாக மறுக்கிறார். தான் கலைஞரை அன்று முதளின்ருவரை கவனித்து வருவதாகவும், அவர் மிரளவில்லை, நம்மை மிரட்டுகிறார் என்றும் வர்ணிக்கிறார். எப்படி? என்று நாம் கேட்டால், ஒரு வரலாற்றையே அவர் நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறார். 

                  முதலில் கலைஞருக்கும், ப.சிதம்பரத்திற்கும், இன்று உள்ள உறவு ஒருவரை ஒருவர் "மிரட்டும்" நிலையிலில்லை என்கிறார் அப்படியானால் இதுபோல இருக்கிறது என்ருய் கேட்டால், அது கலந்து ஆலோசிக்கும் நிலையில் இருக்கிறது என்கிறார். அதாவது இரண்டு பேருமே தமிழீழத்தை போருத்தவரியிலும், விடுதலை புலிகளை பொருத்தவரையிலும், ஒரே கருத்து கொண்டவர்கள்  என்பது அவரது வாதம்.இது மறுக்க முடியாத ஒன்றுதான். . தமிழீழம் என்ற சொல் இப்போது யாரால் உரைக்கப்பட்டாலும்  நாம் அவர்களை உற்று பார்த்து உண்மையிளுரைக்கிரார்களா? அல்லது தமிழ்நாட்டு மக்களை கவர உரைக்கிரார்களா? என்று காணவேண்டிய நேரம்.ஏன் என்றால் அங்கே ஈழத்தில் கருவி ஏந்தி வெற்றிகரமாக போராடி, வன்னி பகுதியையே விடுதலை செய்து "தமிழீழ அரசாங்கத்தை ஏற்படுத்தி, புலிகள் தலைவர் உலக வரலாடறி படைத்த காலத்தில், கடல் தாண்டி இருந்து கொண்டு "தமிழீழம்" பேசினாலும் அவர்கள் அந்த மண்ணில் உண்மையாக நிலைத்திருக்கும் ஒரு தமிழீழத்தை ஆதரிக்கிறார்கள் என்றே பொருள்படும். அனால் இன்று உள்ள சோக நிலையில், அதுவும், கடல் தாண்டிய மண்ணில் இருந்துகொண்டு தம்ஜிஹீழம் பேசினால், அது வேற்று முழக்கத்திற்காகவும் பேச முடியும். ஆகவே பேசுபவர்கள் "யார்" என்ற கண்காணிப்பு அவசியம் தேவைப்படுகிறது.

                      அதிலும் நிதர்சனமாக் இருந்த நிலைத்து இருந்த தமிழீழ மண்ணில், சிங்க பேரினவாத ராணுவத்தை இறக்கிவிட்டு, தமிழீழ மண்ணை அந்நியனுக்கு காட்டிக்கொடுக்க கடல் கடந்த நாட்டில் இருந்துகொண்டே "சாதித்து" காட்டியவர்கள் தமிழீழம் பேசினால் சந்தேகப்படாமல் எப்படி இருக்க முடியும்? கிளிநொச்சியில் ஒரு சுதந்திர ராசாங்கம். அதில் தமிழீழ தேசியத் தலைவருக்கு தலைமை அலுவலகம். அருகே வயல்வெளிகளில், தமிழீழ விவசாயிகள் உழுது, பாடுபட்டு, நெல் வித்தைத்து, வழமையான விவசாய பூமியாக அதை ஆக்கி, தம்ஜிஹீழ மக்களுக்கு சோறு கொடுத்த சூழல். அந்த விளை நிலங்களுக்கு விவசாயம் செய்ய கடன் கடுக்கும் ஒரு தமிழீழ வங்கி. சிங்கள ராணுவத்தை தாண்டி, "தாண்டிக்குளம்" எல்லையில், ஒரு "கடவு சீட்டு" பெரும் அலுவலகம்.அங்கே துவக்கு ஏந்திய இளம்புலிப்படை. கிளிநொச்சிக்கும், முல்லை தீவிற்கும், யாழிலிருந்தும் மற்ற  மாவ்ட்டங்களிளிருந்தும், கிளம்பி சென்று தமிழீழ மாநாகர்களுக்கு கல்வி கற்று கொடுக்கும் ஆசிரியர்காளன ஆண்,பெண் "வாத்திகள்". அவர்களை வழிநடத்த ஒரு தமிழீழ கல்வித்துறை. சாலைகளை பராமரித்து, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், சட்டம் ஒழுங்கை சீர் செய்யவும், ஒரு தமிழீழ காவல்துறை. இப்படி ஒவ்வொரு துறையையும் கட்டி ஆண்ட ஒரு தமிழீழ அரசாங்கம். அப்படிப்பட்ட அரசாங்கத்தை "அழித்து விட்டு" இப்போது, எப்படியடா தமிழீழம் பேசத் துணிந்தாய்? இதுவல்லவோ தமிழனின் கேள்வி.


                         உலகமே அதிசயிக்கும் வண்ணம் தமிழீழ அரசாங்கத்தை கட்டிக் காத்த எங்கள்  த்மிழீழ தேசியத் தலைவரை அங்கீகரிக்காமல் எந்த "வாயால்" நீ தமிழீழ அரசாங்கம் பற்றி பேசுகிறாய்? என்று தமிழன் கேட்க மாட்டானா? ஆகவே அந்த கலைஞர் இன்று தமிழீழம் பற்றிய தீர்மானம் கொண்டுவராமல் இருக்கும் முடிவு, பயந்து அல்ல, நம்மை பயமுறுத்தவே என்கிறார் அந்த உடன்பிறப்பு. அதனால்தான் அவர் மிரள வில்லை, நம்மை மிரட்டப் பார்க்கிறார் என்று விவரிக்கிறார். சிதம்பரமும், கருணாநிதியும் இணைந்து அரைமணிநேரம் கலந்து பேசி, அதன்பிறகு, மறுநாள் "தமிழீசம் தீர்மானம் வராது"என்று ஊடகவியலாளர்களை அழைத்து நிதானமாக ஒரு தலைவன் சொல்கிறான் என்றால் அது இருவரும் திட்டமிட்டு தமிழ் மக்கள் மீது நடத்தும், "உளவியல் போர்" இல்லையா? என்பதே அவரது வாதம். . கலைஞரே டில்லியின் "புலிக்கு தடை" என்ற சட்டத்தை கண்டு மிரண்டுவிட்டார், அகவே உடன்பிறப்பே, நீயும் மிரண்டு விடு, என்றும், ஆகவே வைகோவிற்கும், சீமானுக்கும், எந்த நேரமுமந்த சட்டத்தின் கொடுவாள் பாயலாம் என்பதால், தமிழர்களே நீங்களும் இப்போதே பயந்து விடுங்கள் என்று உரைப்பதை புரிந்துகொள்ள வில்லையடா? என்று அந்த நண்பர் கேட்கிறார்.

                ஆகா.எதனை பெரிய விளக்கம். அந்த எம்மாற்றி வரும் தலைவனை சரியாக புரிந்து கொண்ட விளக்கம். இதுபோலத்தானே இதே தலைவர், எம்ஜி.ஆர். ஆட்சி காலத்தில், மதுரையில் ரேஸ் கோர்ஸில் நடத்திய டெசோ மாநட்டில், வாஜ்பாய், ஏன்.டி.ஆர். முன்னிலையில், முழக்கம் போட்டு காவலர்களுக்கு எதிராக கொந்தளித்த தந்து கட்சி தொண்டர்களை பார்த்து, மைக்கை பிடித்துகொண்டு, "உங்களை காவல்துறையிடம் சொல்லி அடிக்க சொல்லுவேன்" என்று பகிரங்கமாக மிரட்டினார். இப்போதும் டெசோ மான்மாடு என்று வந்தவுடன் அந்த "புத்தி" அதாவது உளவுத்துறை, காவல்துறை சார்ந்த புத்தி மீண்டும் வந்து விட்டதால், தமிழீழ தீர்மானத்தை திரும்ப பெறுவதாக பயம் காட்டி தொண்டர்களை மிரட்டுகிறாரே? அப்படி தமிழர்களை மிரட்டினால் யாரும் இங்கே"தமிழீழம்"பற்றி பேச மாட்டர்கலேன்ரும், அதனால் தமிழ் வாக்காளர்கள் மத்தியில் வருகிற நாடாளுமன்ற தேர்தல்  நேரத்தில்,:ஈழம்" ஒரு விவாதப்பொருளாக ஆக்கப்படாமல் இருக்குமெனவும் அந்த இரண்டு "மேதைகளும்" எண்ணித்தான் இப்படி ஒரு கரடியை அவிழ்த்துவிட்டுள்ளார்.  

Tuesday, July 24, 2012

யாருக்காக டெசோ மாநாடு?


    திமுக தலைவர் கருணாநிதி திடீரென டெசோ மாநாடு என்று அறிவித்து யாருக்காக? சட்டமன்ற போது தேர்தலில் தன்னை விட்டு எதிர்ப்புறம் சென்ற "வாக்குகளை" திரும்ப தன்னுடைய காங்கிரஸ் கூட்டணிக்கு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலாவது கொண்டு வருவதற்கு என்பதாக பொதுவாக பர்ர்க்கிரார்கள். அதிலும் உண்மை இருக்கிறது. ஏன் என்றால் சென்ற நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில், இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்ற நெடுமாறன் தலைமையிலான வைகோ முழங்கி வந்த இயக்கம் தங்கள் கூட்டணிக்கு "பாதிப்பை" ஏற்படுத்தும் என்று உணர்ந்த தலைவர் கருணாநிதி மருத்துவமனியில் இருந்தபடியே ஒரு யோசனை செய்தார். அதுதான் தன் தலைமையில் ஒரு இலங்கை தமிழர் பாதுகாப்பு அமைப்பு என்று கூறி, காங்கிரஸ் கட்சியையும் அதில் சேர்த்து  கொண்டார். அப்போது மருத்துவமையிலேயே சுப.வீரபாண்டியன் காங்கிரசை சேர்த்து அப்படி ஒயரு அமைப்பு உருவாக்குவதால் தான் கலந்துகொள்ள முடியாது என்று விலகி நின்றார். அந்த அமைப்பிற்காக மாவட்டம் தொரும்திமுக திரட்டிய கூட்டத்தை அன்று கலைஞர் டி.வி.யும், சன் டி.வி.யும் மக்கள் மத்தியில்கொண்டு சென்றனர்.மானாட மயிலாட, மற்றும் தொடர் நாடகங்கள் காணும் மக்களும் அந்த செய்திகளை தவறாமல் கண்டனர். 

                   அதனாலேயே செல்வி.ஜெயலலிதா தனது பரப்புரையில்னங்கள் ஆதரிக்கும் ஆட்சி மத்தியில் வந்தால், "தமிழீழம்" மலர பாடுபடுவோம் என்று கூறியதை கூட முழுமையாக ஏற்று மக்கள் கனகிராஸ் கூட்டணியை எதிர்த்து நிற்கவில்லை. மாறாக திமுக, அதிமுக இரண்டுமே ஈழத்தமிழர் பிரச்சனையில் அக்கறை கொண்டவர்கலேன்ர புரிதலை தமிழ்நாட்டு வாக்களர் பெருமக்கள் நம்பினார்கள். அதன்விளைவே "ஈழம்"தமிழ் வாக்காளர்களுக்கு வாக்களிக்க ஒரு நிபந்தனையாக அப்போது ஆகவில்லை. அதனால் திமுக உடன் சேர்ந்த கணக்ராஸ் சரியாக வெற்றி பெறவில்லை என்றாலும்,  அவர்கள் கூட்டணி பல இடங்களில் வென்றது. அந்த நிலை தமிழ் வாக்காளர்கள் மத்தியில் சட்டமன்ற போது தேர்தலில் இல்லை. ஏன் என்றால் உலகம் முழுவதும் அந்த நாடாளுமன்ற  தேர்தலுக்கு பின்னர்தான் ஈழத்தில் நடந்த கொடுமைகள் தீவிரமாக அம்பலமாகின. உலக சமூகம் விழித்து கொண்டது. அதையொட்டி உள்ளூர் தமிழ் வாக்காளர்களும் விழித்து கொண்டனர். அதன் விளைவே திமுக-காங்கிரஸ் கூட்டணி மண்ணை கவ்வியது. இப்போது மீண்டும் நாடாளுமன்ற தேர்தல் வார இருக்கிறது. கலைஞர் ஏதாவது "தந்திரம்" செய்ய வேண்டாமா?

                      அதனால்தான் அவர் டெசோ பேச்சை தொடங்குகிறார் என்பது உண்மைதான். ஆனாலும் அதற்கு மத்திய அரசின் "மறைமுக ஆதரவு" இருக்கிறதா? நிச்சயமாக தமிழ் வாக்குகளை பெறுவதற்கு அப்படி ஒரு "தந்திர முழக்கத்திர்கான ஆதரவு" இருக்கும். ஆனாலும் அதைவிட அந்த டெசோ முழக்கத்தால் "தென்னிலங்கையில்" சிங்களர் மத்தியில் என்ன நிலை என்று ஆய்வு செய்யும்போது, மகிந்தாவிற்கு  இருந்த "சிங்கள எதிர்ப்பை" மாற்றி "தமிழீழ எதிர்ப்பு" என்ற ஒரு முழக்கத்தில் மகிந்தாவின் சிங்கள எதிர்ப்பாளர்கள், தற்போதைக்கு மகிந்தாவை ஆதரிக்க தலைப்பட்டுள்ளனர் என்ற  செய்தி வருகிறது. அதற்காக தமிழ்நாட்டிலிருந்து நாம் ஈழ ஆதரவு முழக்கத்தை எழுப்பாமளிர்டுக்க முடியுமா? அது எழுப்பப்பட்டே ஆகவேண்டும். ஆனால் நாம் புரிந்து கொள்வதற்காக சிலசெய்திகளை பார்க்க வேண்டி உள்ளது. ஈழ மக்கள் மீது அடக்குமுறைகள் கூடும என்று கூறியோ, சிங்களர் ஒன்றுபட்டுவிடுவர் என்று கூறியோ,   நாம் ஈழ ஆதரவு முழக்கங்களை கைவிட முடியாது. போரில் இவையெல்லாம் இருக்கத்தான் செய்யும். ஆனாலும் எதிரிகள் இந்த போர் சூழலை எபப்டிஎல்லாம் கையாள பார்க்கிறார்கள் என்று நாம் டேஹ்ரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் காணும்போது சில செய்திகள் கிடைத்துள்ளன. 

                    லண்டன் செல்ல மகிந்தா சமீபத்தில் புறப்பட்டபோதே, அவருக்கு அங்கே எதிர்ப்பு கடுமையாக இருக்கும் என்ற செய்தி உண்டு. ஆனாலும் தென்னிலங்கையில் சமீபத்தில் தனக்கு எதிராக் கிளம்பியுள்ள எதிர்ப்பை, அதிருப்தியை குறைக்க, வேண்டும் என்றே லண்டன் சென்று ஈழத்தமிழர் எதிர்ப்பை உலகம் அறிய த்ஜாவது சிங்கள உலகம் அறிய செய்தார் என்ற ஒரு ஆய்வு இருக்கிறது. அதன்மூலம் தனக்கு உள்நாட்டில் எழுந்த எதிர்ப்பை அவரால் மட்டுப்படுத்த முடிந்திருக்கிறது. அமெரிக்காவின் வலியுறுத்தலால், பொன்சேகாவை விடுதலை செய்த மகிந்தா அந்த பொன்சேகா மூலம் தனக்கு எதிராக கிளம்பும் சக்திகள் ஒன்று சேரக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தார் என்கிறது அந்த ஆய்வு. அந்த நேரத்தில் கொழும்பை டில்லி மூலம் இதுவரை கையாண்டுவாத அமெரிக்கா, டில்லியை கைகழுவி விட்டு நேரடியாக கொழும்பை கையாள தொடங்கி விட்டது என்பதை உறுதி செய்த செயல்தான், ஹிலாரி வலியுறுத்தலில் மகிந்தா பொன்சேகாவை விடுதலை செய்தது. இந்த சூழல் டில்லிகாரர்களை கோபம் கொள்ள வைத்து மீண்டும் மகிந்தாவிற்கு எதிராக சில காய் நகர்த்தல்களை செய்ய வேண்டிய கட்டாயம் வந்தது. அப்போது எழுப்பட்ட டெசொவிற்கு டில்லி உளவு துறையின் ஆசீர்வாதம் இருந்தது என்கிறார்கள். 


               அய்.நா. சபையில் மனித உரிமை கவுன்சிலில் மீண்டும் அடுத்த மாதம் வரும் இலங்கை போர்குற்ற விசாரணை கூட்டம் இந்தியாவின் தலைமையில் நடக்க போகிறது. அதயு காரணம் காட்டி   டீல்லிகாரர்கள் சிவசங்கர மேனனை அனுப்பி மீண்டும்  மகிந்தாவிடம் பேரம் பேசினர்.  அப்போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் கூறத்தான் சிற்ற்ஹம்பரம் கருணாநிதியிடம் வந்து மிரட்டி, டெசொவில், தமிழீழ தீர்மானம் இருக்காது என்ற பதிலை பெற்றார் என்கிறது அந்த ஆய்வு. இப்போது டெசோ பேசும் கருணாநிதி ஏன் சிங்களர்களுக்கு பயிற்சி கொடுக்கும் மத்திய இசை தட்டி கேட்காமல், அதற்காக போராட்டம் நடத்தாமல், அய்.சீ.எப். ஆலையிலிருந்து ரயில் வண்டிகள் செல்வதை எதிர்க்காமல், எஸ்.ஆர்.எம். பலகலை கழகம் ஒன்று கொழும்பில் வணிக உறவுடன் தமழக ஊடகத்தார் கொண்ட உறவை எதிர்க்காமல், அங்குள்ள தம்ழிஹ் மக்களது வாழ்வை பாதுகாக்க மாநாடு என்று கூற முடியும்? ஒருபுறம் காங்கிரசின் தமிழின படுகொலையை எதிர்க்காமல், அவர்களுடன் கூட்டணி, இரத்த கறைகொண்ட பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு,இன்னொரு புறம் டெசோ என்றால் யாரை ஏமாற்ற? அதனால் அந்த மாநாடு தமிழர் வாக்குகளை ஏமாற்றி அல்ல மட்டுமல்ல, டில்லிக்கு பகடை காய்களாக மீண்டும் ஈழத்தமிழரை ஆக்குவதற்காக, என்பதையும் தாண்டி, மஹிந்தாவிர்கான சிங்கள எதிர்ப்பையும் நீர் ஊற்றி வடிய வைக்கும் என்பது தெரியவருகிறது. அதனால்தான் வீராங்கனை சுப்புலட்சுமி ஜெகதீசன் கூட டெசொவை புறக்கணித்தாரோ ?