Thursday, June 21, 2012

பிரணாப் யாருடைய வேட்பாளர்?

பிரணாப் யாருடைய வேட்பாளர்?
  பிரணாப் முகரஜி சோனியா கனதியால் நிறுத்தப்பட்ட வேட்பாளர் என்றுதான் எல்லோருக்கும் சொல்லப்பட்டது. அப்படியானால் எது சொல்லப்படாதது? பிரணாப் முகர்ஜி நிதி அமைச்சர். அதனால் இந்திய அரசியல்வாதிகளிடம் உள்ள கருப்பு பணம், சொத்து குவிப்பு வழக்கு எல்லாவற்றிற்கும் அடிபப்டையில் "தடம்" எடுத்து கொடுக்க வேண்டிய அமைச்சகத்தை "கையில்" வைத்து கொண்டுள்ளார். எபப்டியாவது குடியரசு தலைவராக ஆகிவிட வேண்டும் என்று துடிக்கிறார். அவர் துடிக்க காரணமே ராஜீவ் காந்தி மரணத்திற்கு பிறகாவது, இந்திராகாநதிக்கு பதிலாக தனக்கு வரவேண்டிய "பிரதமர்" நாற்காலி கிடைக்கும், என்ற தனது எதிர்பார்ப்பு ஏமாற்றமாக போய்விட்டதே என்ற கவலை அவருக்கு.அதனால் இப்போது கிடைக்கும் வாய்ப்பையாவது பயன்படுத்தி,எப்படியோ குடியரசு தலைவராக ஆகி விடவேண்டும் என்று துடிக்கிறார். ஐயோ பாவம். அது வயதின் கோளாறு. 

                                அதற்காக தனது அமைச்சகத்தை பயன்படுத்துவதுதான் போருக்க முடியவில்லை. நிதி திரட்டுவதில், சொத்து சேர்ப்பதில், ஊழல் செய்வதில் மாட்டிக்கொண்ட அந்த கட்சியின் கூட்டணி கட்சி தலைவர்களும், வெளியே இருந்து ஆதரவு தருகின்ற, ஆதரவு தராத தலைவர்களும், காங்கிரஸ் கட்சிக்கு சவாலாக அமைந்துள்ள தலைவர்களும், இது போன்ற வழக்குகளில் சிக்கிக்கொண்டுள்ளனர். அவர்கள் மீது ஏற்கனவே சீ.பி.அய். வழக்குகளை போட்டு சிலரை, சிறையிலும், சிலரை வெளியிலும், சிலரை சிறையில்  தள்ளி பிணையிலும், வைத்திருக்கிறது. அவர்களையும், அவர்களது கட்சியையும் இந்த வழக்குகை கூறியே "பியார்நாபிற்கு" ஆதரவு என்ற நிலையை எடுக்க வைக்கலாம் என்று பிரணாப் சிந்திக்கிறார். 


                    அதன்விளைவே 2007 ஆம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கில் மாட்டிக் கொண்ட  முலாயம் சிங் யாதவ், அவரது மகனும் இன்றைய உத்திர பிரதேச முதல்வருமான அகிலேஷ் யாதவ், ஆகியோரை மிரட்டியே பிரனாபிற்கு அடஹரவு என்று கூறவைத்து விட்டார்கள். அதேபோல அவர்களின் எதிரியான மாய்வதியும் "தாஜ்மஹால்" ஊழலில் சிக்கி சீ.பி.அய். விசாரணையில் இருக்கிறார். அதை வைத்து அவரது ஆதரவையும் வாங்கி விட்டார். அடுத்து சிறைக்குள் இருக்கும் ஆந்திராவின் ஜெகன் மோகன் ரெட்டி. அவரை வெளியே விடவேண்டுமானால் என்று கூறி மக்கள் செல்வாக்கை சமீபத்திய தேர்த்லின் மூலம் நிரூபித்த ஜகன்மோஹனையும் மிரட்டி, சீ.பி.அய். வழக்கி காட்டி அவரது ஆதரவையும் பிரணாப் பெற்று விட்டார்.  திமுக தலைவர் ":கூனியூருக்கு செல்வதர்காக் இங்கிருந்தே குனிந்து செல்பவர்".அதனால் அவர் இரண்டு ஜி வழக்கை எண்ணியே ஆதரவு பிரனாபிற்கு என்று கூறிவிட்டார். பா.ம.க.நிறுவனரோ, சிறிது அசையாமல் இருந்தார். ஒரு கொலை வழக்கில் அவரது சகோதரரை கைது செய்த சீ.பி.அய்.  அவரது  ரத்த உறவான டாக்டர் தனராஜ் என்ற முன்னாள் எம்.பி. யை கைது செய்த உடனே அவரும் பிரனாபிற்கு ஆதரவு என்று கூறிவிட்டார்.  சிவா சேனா எந்த அவ்ழக்கில் சீ.பி.அய்.இடம் சிக்கி கொண்டதோ தெரியவில்லை. அவர்களும் ஆதரவு பிரானாபிற்கு. . சந்திரபாபு நாயுடு ஏன் இதில் மாட்டினார் என்பது தெரியவில்லை. மம்தாவை எதிர்க்கவும், சீ.பி.அய். எம் இன் ஆதரவை பெறவும், "வங்காளி " என்ற அடையாளத்தை பயன்படுத்த பிரணாப் தயங்கவில்லை. மொத்தத்தில் "ஊழலையும், குற்ற வழக்குகளையும்," பயன்படுத்தியும்,  "இனவெறியை" பயன்படுத்தியும் ஒரு மனிதர் தனது குடியரசு தலைவர் தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளார். கேவலம். வெட்கம்.  

                     பிரனாப் முகர்ஜி சீ.பி.அய்.என்று சொல்லகூடிய "மத்திய புலனாய்வு துறையின் " வேட்பாளர் என்பது வெள்ளிடை மலையாக தெரிந்து விட்டது. அதையும் தாண்டி தமிழர்களுக்கு துரோகம் செய்யும் சிங்கள மூதாதையர் என்ற மனோபாவம் கொண்டவர் எனபதும, அதை வைத்தே "ஈழத்தமிழர் படுகொலையில்" சம்பந்தப்பட்டவர் என்பதும், அவருக்கு "கலைஞர் கொடுக்கும்" ஆதரவிற்கான கூடுதலான காரணம் எனபதும் புரிந்து விட்டது. கையில் ரத்த கரையுடன் அந்த மனிதர் வருகிறார். தமிழர்களே, எச்சரிக்கை. 

Tuesday, June 19, 2012

மியான்மரிலும் முஸ்லிம்களை தாக்கும் பவுத்தர்கள்?



        இன்று சென்னை பெசன்ட் நகரில், கடற்கரையில் பெரிய ளவில் காவலர்கள் நிற்க, திடீரென முஸ்லிம்கள் ஆங்கும், பெண்களுமாக நூற்றுக் கணக்கில் திரண்டு வந்துவிட்டார்கள். கடற்கரைக்கு காற்று வாங்க வந்த முதியவர்களும், பெண்களும், காதல் ஜோடிகளும் ஆச்சர்யமாக பார்க்க, ஒரு காவல் வலையய்த்திற்க்குள் அந்த முஸ்லிம் பெருமக்கள் கடற்கரையில் ஐந்து மணி சுமாருக்கு நீண்ட வரிசையில் நின்று "தொழுகை" நடத்திவிட்டு, ஒரு சிறிய பேரணி போல சாலையை கடந்து, உழைக்கம் இட்டுக் கொண்டே, காவலர்கள் வைத்திருந்த வளையத்திற்குள் வந்தார்கள். அது என்னமோ சத்தியத்திற்கு கட்டுப்பட்டது போல அவர்கள்  செயல்பட்டார்கள்.   அவர்கள் உயர்த்தி பிடித்த வண்ண பதாகையில் "நேற்று இலங்கை, இன்று மியான்மர் [பர்மா]" என்று எழுதி இருந்தது. பல வண்ண படங்களும் அதில் அச்சிடப்பட்டிருந்தன. அந்த படங்கள் முஸ்லிம் மக்களை மியன்மாரில் புத்த பிக்குகள் அடிப்பதும். உதைப்பது காட்சிகளாக இருந்தது.

      மியன்மாரில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்திய புத்த பிக்குகளை கண்டித்து, அந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. அதை "இந்திய தௌஹித் ஜமாஅத்" நடத்தினர். அவர்களது தேசிய தலைவர் எஸ்.எம்.பாக்கர் பெயர் அதில் போட்டிருந்தது. அவரும் அங்கே வந்திருந்தார். பாக்கரும், இக்பாலும், பிர்தொசும், சிலரும் அங்கே இரண்டாவது தெருவில் இருந்க்கும் "அய்.நா.அகதிகள் அலுவலகம்" சென்று மனு கொடுத்து விட்டு வந்தார்கள். அந்த அய்.நா. அலுஅலகத்தில் தங்கள் டில்லி அலுவலகத்திற்கு அனுப்பி நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள் என்று அவர்கள் எங்களிடம் தெரிவித்தார்கள். அதன் பிறகும் அவர்கள் முழக்கமிட்டு கொண்டே இருந்தார்கள். இலங்கையில் சிங்கள பவுத்த பிக்குகள் முஸ்லிம்களின் வழிபட்டுதலன்களை இடிக்கிறான். மியான்மரில் புத்த பிக்குகள் முஸ்லிம்களை எட்டுகிறார்கள், கொல்லுகிறார்கள், முஸ்லிம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்கிறார்கள்  என்று அவர்கள் முழக்கமிட்டார்கள். 

       பவுத்தம் பேசுவது சமாதானம். செயல்படுத்துவதோ வன்முறை. என்று அவர்கள் முழக்கமிட்டார்கள். மியன்மார் நாட்டில் உள்ள முஸ்லிம்கள் விரட்டப்பட்டு வன்கால தேசம் நோக்கி ஓடிவருகிறார்கள் என்று அவர்கள் கூறினார்கள். மத சுதந்திரத்தை சமாதனம் பேசும் பவுத்தம் ஏன் இலங்கையிலும் மதிக்கவில்லை, மியன்மாரிலும் மதிக்க வில்லை என்று அவர்கள் கேள்வி கேட்டார்கள். இந்திய தௌஹித் ஜமாஅத் முஸ்லிம்களுக்காக மட்டுமல்ல, எந்த மதம் பத்திக்கப்பட்டாலும் போராடும் என்று அவர்கள் கூறினார்கள். கடைசியில் காவல்துறை அந்த முஸ்லிம் ஆண்களையும், பெண்களையும் கைது செய்தது. எண்பத்து ஐந்து பெண்கள் உட்பட, இருநூற்று ஐம்பது பேர் கைது ஆனார்கள். ஆனாலும் எட்டு மணிக்கெல்லாம் விடுதலை செய்யப்பட்டார்கள். பவுத்தம் சமாதானத்திற்கே பெயர் பெடர்து ஆயிற்றே? ஏன் இப்படி இன்கையிலும், மியன்மாரிலும் வன்முறையை மாட்டார் மதங்களின் மீது கட்டவிழ்த்து விடுகிறது? என்ற கேள்வியுடன் நாமும் திரும்பினோம்.

Monday, June 18, 2012

மண்டபம் அகதிகள் முகாமில் ஈழப் பெண்களை கொடுமை படுத்தும் கயவர்கள்


மண்டபம் தாயகம் திரும்பியோர் முகாம் இராமேசுவரத்திலிருந்து 21 கிமீ தூரத்தில் கடலோரத்தில் அமைந்திருக்கும் அகதிகள் முகாம் ( பேச்சு வழக்கு )

31.01.2005 வரை இங்கே 52,332 தாயகம் திரும்பியோர் 14,031 குடும்பங்களுடன் 103 முகாம்களில் இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது . இன்று அதிகரித்திருக்க கூடும் . 

இம்முகாம்களில் வாழும் மக்களுக்கு மனிதர்கள் என்ற அடிப்படை மரியாதை கூட மறுக்கப்படுகிறது . பள்ளிக்கு செல்லும் பெண் குழந்தைகளின் முடியை பிடித்து இழுப்பதும் , நீ விடுதலைப்புலிதானே என திடீரென்று கொடுமைப்படுத்துவதும் சொல்லி மாளாது . HUMAN RIGHTS , HUMANITY என்று கூக்குரலிடும் இச்சமுதாயம் இந்த விடயங்களில் மட்டும் அடக்கி வாசிக்கிறது , ஊடகங்களுடன் .

இத்தகைய சிறப்பு வாய்ந்த மண்டபம் அகதிகள் முகாமில் காவல் துறையினரின் பாலியல் வன்முறையால் சில பெண்கள் பாதிக்கபட்டுள்ளதாக செய்தி நண்பர்களிடம் இருந்து வந்துள்ளது. வெளியே சொல்ல முடியாமல் , சொன்னால் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் ஆபத்து வரும் என்ற காரணத்தினால் அவர்கள் இதை சொல்ல தயங்குகின்றனர்... அதிலும் முன்னாள் போராளி குடும்பத்தினர் மிகவும் துன்புறுத்தப்படுகின்றனர். 

முகாமில் இருந்து ஒரு சகோதரி கூறியதில் இருந்து....

ஆனந்தபுரத்தில தீபன் அண்ணா, கடாபி அண்ணா, துர்க்கா அக்கா, விதுசா அக்கா ஆக்களோடு 700 போராளிகள் வீரச்சாவடைந்தது தெரியும்தானே?. அந்த ஆனந்தபுரத்தில அண்ணனும்தானே (தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன்) சிறீலங்கா இராணுவத்தின்ர பெட்டிக்குள்ள மாட்டினவர்? அப்போது அவரை எப்படியாவது காப்பாத்தவேணும் என்று போராடி வெளிய கொண்டுவந்த ஆக்கள்ல என்ர அவர் முக்கியமான ஆள். கடாபி அண்ணாவோடதான் இருந்தவர். ஆனந்தபுரத்தில படுகாயத்தோட கடாபி அண்ணனைக் கைவிடவேண்டிய துயரமான சூழலிலும் எப்படியோ அண்ணனக் காப்பாத்திட்டோம் என்று சந்தோசப்பட்டவர். கடாபி அண்ணன நினைச்சுத் தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக்கொண்டவர்.

முள்ளிவாய்க்கால்ல மே 09ஆம் நாள் அவரைக் கடைசியாப் பார்த்தது. நீங்க சனத்தோட போங்கோ என்று என்க்கும் பிள்ளையள் இருவருக்கும் சொல்லிற்று, நாங்கள் அண்ணன எப்படியாவது காப்பாத்தவேண்டும். இனி என்ன நடக்குமெண்டு சொல்லமுடியாது. பிள்ளையள வடிவாப் பார்த்துக்கொள்ளுங்கோ என்று சொல்லிவிட்டுப்போனவர்தான். அதற்குப் பிறகு பார்க்கவேயில்லை.

மே 18, 2009 நாங்களும் அந்த முள்ளிவாய்க்கால் மண்ணைவிட்டு வெளியேறினோம். அவருக்கு என்ன நடந்தது என்று இதுவரை தெரியாது. மூன்று வருசம் ஆச்சு. ஆமி பிடிச்சு வைச்சிருக்கும், எங்கெங்கையோ சிங்களப் பகுதியில எல்லாம் சிறைகளுக்குள்ள எங்கட ஆக்கள வைச்சிருக்கினமாமே? அங்க எங்கயாவது அவரும் இருப்பார் என்ட நம்பிக்கையோடதான் இதுவரை காத்திருக்கிறன்.

சிலவேளை சண்டையில செத்திருக்கலாம், அல்லது ஆமி பிடிச்சுச் சுட்டுக் கொன்றிருக்கலாம். ஆனால் நம்பிக்கைதானே வாழ்க்கை. என்ர அவர் எங்கயாவது உயிரோட இருப்பார் என்டே இதுவரை மனசத் தேத்திக்கிறன். ஆனாலும் ஒவ்வொரு நாளும் அவர் நிலைமை என்னவோ என்ட கண்ணீரோடும் காத்திருப்போடும்தான் வாழ்க்கை போகுது. முள்ளிவாய்க்காலால வெளியவந்து மூன்று கிழமையில, அதாவது 2009ஜூன்ல எனக்கு மகள் பிறந்தவர். அப்ப பிறந்த பச்சைப் பிள்ளையோடயும், இந்தப் பிள்ளையள் இருவரோடயும் தடுப்பு முகாமில இருந்து அத்தனை கஸ்டமும்பட்டு போன வருசம் வெளியவந்தேன்.

அதற்குப் பிறகும் வெள்ளைவான்காரர் வந்து என்னை வைச்சிருந்த வீட்டுக்காரருக்கு தொல்லை கொடுத்தார்கள். உன்ர புருசன் எங்க, அவருக்கு என்ன நடந்தது என்டெல்லாம் இனி எங்காவது விசாரிச்சா அல்லது மனித உரிமை அமைப்பு அது இதென்டு திரிஞ்சா உன்னைப் போட்டுடுவம் என்று மிரட்டல், பிள்ளையள்ற நிலைமையை நினைச்சு அழுதழுது நாட்டைவிட்டே வெளியேற முடிவெடுத்து தமிழ்நாட்டுக்கு நானும் பிள்ளையளும் வந்தோம்.

அதுதான் நான் செய்த பெரிய தவறென்று இப்போ நினைக்கிறன். ஊரிலயே பிள்ளையளுக்கும் நஞ்சக்கொடுத்திற்று நானும் செத்துத் தொலைஞ்சிருக்கலாம். போரில செத்ததுகள் கடவுள்கள். கொடுத்து வச்சதுகள். மண்ணுக்கு உரமாப் போயிற்றுதுகள்.

நாங்கள் எல்லாம் தினம்தினம் செத்தபடி இருக்கிறம். இங்க வந்ததும் ஒரு குழு அவுஸ்திரேலியாவுக்குக் கப்பல் போகுது. போறதென்டா முதற்கட்ட கட்டணமா 3 இலட்சம் பணம் தரச்சொன்னாங்கள். இந்த முகாமில நடக்கிற அடி உதைகள், பாலியல் வல்லுறவுகள், எதிர்த்துக் கேட்கிறதுக்கு யார் இருக்கிறார் என்கிற அவதூறுப் பேச்சுக்கள், இதிலெல்லாம் இருந்து தப்பி ஓடிரலாம் என்று இருந்த நகையெல்லாம் வித்து நானும், என்னைப்போல இன்னும் சிலரும் அவங்களுக்கு பணத்தைக் கொடுத்தோம்.

கொஞ்ச நாளுக்குப் பிறகு அவர்களிடம் போய் எப்ப அனுப்புறீங்க? என்று கேட்டா, புலி என்டு சொல்லி உள்ள போட்டுருவம்னு மிரட்டுறாங்கள். சொல்றவங்கள் இந்த ஊர் காரர். அவங்களுக்கு அரசியல் பலம், பின்னணி இருக்கு. எங்களுக்கு ஆரு இருக்கிறது கேட்கிறதுக்கு? யார் சாட்சி? மௌனியா வாய்பொத்திட்டு இனி இதுதான் எங்கட விதி என்டு இந்த முகாமுக்குள்ளயே எல்லாரும் வாழுறம்.

இங்க நிலைமை சொல்லி மாளாது. குடும்பமாக இருக்கிற ஆக்கள் கொஞ்சம் பரவாயில்லை. கஸ்டம் என்டாலும் பல்லக் கடிச்சுக்கொண்டு வாழப் பழகுதுகள். கணவர் இல்லாத பெண்கள், தனியே வந்த இளம்பெண்கள், இளைஞர்கள் படுகிற கஸ்டம் கொடுமையிலும் கொடுமை. படுகாயப்பட்டு வந்த ஆக்கள் அது பொதுமக்களாக இருந்தாலும் சரி, முன்னாள் போராளிகளாக இருந்தாலும், அதில வேறுபாடு இல்லாம எல்லாரும் புலிதான் என்பதுதான் இவங்கட கருத்து.

காயப்பட்ட ஆக்கள் எல்லாரையும் செங்கல்பட்டு சிறப்பு முகாமுக்கு அனுப்பி அங்க காயத்தோடயும் வலியோடயும் இருக்கிற அதுகளப்போட்டு செய்யிற சித்திரவதையில அவங்கள் எல்லாம் மனநிலை குழம்பியிருங்கள்.

இப்பிடித்தான் இங்க கொஞ்ச நாளுக்கு முதல் மூன்று பெண் போராளிகள், சரியான சின்னப்பிள்ளைகள் அதுகளக்கொண்டுபோய் எல்லாரும் கும்பல்கும்பலா பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி அதுகள் மனநிலை குழம்பிப்போய் நடைபிணங்களாயிட்டுதுகள். அதுகளச் சுற்றி என்ன நடக்குதெண்டே அதுகளுக்குத் தெரியாத நிலையில் இங்க கொண்டு வந்து போட்டுட்டுப் போயிற்றாங்கள் பாவியள்! சாப்பாடு வேணும் என்டு கூடக் கேட்காம பரக்கப் பரக்க முழித்தபடி இருக்குங்கள்.

நாங்கள் சிலர் பாவப்பட்டு குளுக்கோஸ் ஏதாவது கொண்டுபோய் இடையிடையே சாப்பிடக் கொடுக்கிறது. அதுகூடப் பயந்துகொண்டேதான் கொடுக்கிறது. அந்தப் பாவங்களுக்கு நாங்கள் உதவி செய்யப்போறதைப் பார்த்தா இங்க இருக்கிற அறுவான்கள் பார்த்தா 'உன்னோடயும் படுக்கிறதாடி?' என்று நாய்பேச்சுப் பேசி அடிப்பாங்கள். நினைக்கிற நேரம் எல்லாம் அந்தப் பிள்ளையளையும், வேறுசில தனியான பெண்களையும் போய் தங்கட விரும்பத்துக்கு ஏத்தமாதிரி நடத்திக்கொள்றது. தலைமயிரைப் பிடிச்சு இழுத்து சும்மா சும்மா அடிக்கிறது. இதெல்லாம் பார்க்க பொறுக்கவே முடியுதில்லை.

என்னை நம்பியிருக்கிற பிள்ளைகளை நினைச்சு நினைச்சு எங்களுக்குள்ளேயே பொருமுறது. உறக்கம் கெட்டு கழிவறைக்குள்ள போய் இருந்து அழுறது. ஒவ்வொரு நாளும் பிள்ளையள் பள்ளிக்கூடம் போற நேரம் வந்து 'என்னடி படுக்க வாறியா...? அல்லது புலி எண்டு சொல்லி உள்ள போடட்டா? உன்னை உள்ள போட்டுட்டா பிள்ளையள் யாரும் கேட்க நாதியற்று நடுரோட்ல நிக்கும் பரவாயில்லையா?' என்று வாய்கூசாமல் கேட்குதுகள். தனிய குழந்தைகளோட இருக்கிற பெண்களுக்கும், ஒற்றை ஆட்களாக இருக்கும் இளையவர்களுக்கும் ஒவ்வொரு நொடியும் இது நரகத்திலும் கேவலம்;. ஆண்போராளிகளும் சில பேர் இப்படித்தான். அதுகளப் போட்டுச்செய்த சித்திரவதையில மனநிலை பிசகி, உடுப்பில்லாம அம்மணமா எதுவும் விளங்காமத் திரியுதுகள்.

எனக்குத் தெரிஞ்சே மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெரியபோராளி... அவருக்குத், தான் ஆரெண்டே தெரியுதில்ல. எனக்கு அவர் மட்டக்களப்பு என்று மட்டும்தான் தெரியும். அவர வன்னியில பார்த்து இருக்கிறன். எந்த ஊர், அவர் யாரு...சொந்தங்கள் எங்க? ஒண்ணும் தெரியாது. யாருக்கும் தெரியுதில்லை. அவர் கீழே காற்சட்டை இல்லாம வானத்தைப் பார்த்து சிரிச்சபடி நிக்கிறார்.

இதையெல்லாம் பார்த்துப் பார்த்து கதறி அழத்தான் முடியுது. ஒரு அண்ணா ஒருத்தர் இருக்கிறார், அவருடைய மூன்று சகோதரர்கள் கரும்புலியாப் போயிட்டினம். அம்மா, அப்பா முள்ளிவாய்க்கால்ல செல்லடியில செத்துப் போயிட்டுதுகள். இவர் இங்க தனிய மாட்டிக்கொண்டதுதான் அவர் செய்த பாவம். அவரைக் கொண்டுபோய் நீ புலிதானே...புலிதானே என்டு அடிச்சு, சித்திரவதை செய்து உடம்பு முழுதும் முப்பது இடத்தில காயம். அவருக்கும் மனநிலை குழம்பிப்போயிட்டுது.

எத்தனை கஷ்டங்களையும், உயிர் இழப்புகளையும் தாண்டி இங்க வந்திருப்பம். எதுக்காக? இந்தப் பாழாப்போன உயிருக்காகத்தானே? அந்த உயிரை தமிழ் மண்ணிலேயே இப்படியெல்லாம் வதைக்கிறவங்கள் தமிழர்களா? மனிதர்களா? 8 மணிக்குப் பிறகு முகாமைவிட்டு வெளியே போகமுடியாது. வெளியிலிருந்து முகாமுக்கு யாரும் வந்து பார்க்கக் கூடாது. அப்படியே வருவதாயின் கலெக்டர் அனுமதி வேணும். அப்படி யாரும் அனுமதிபெற்று எம்மைப்பார்க்க வந்து போனால், யார் அவர்? என்ன கொண்டு வந்தவர்? என்ன இருக்கு எண்டு விசாரிச்சு எங்களிடம் இருக்கிற எல்லாத்தையும் பறிச்சுக்கொண்டு போயிருவாங்கள். இந்தப் பயத்தாலேயே ஆராவது சொந்தம், உறவு எண்டு ஆக்கள் வாறதெண்டு சொன்னாலும் வரவேணாம் எண்டு நாங்கள் எல்லாரும் சொல்லியிருவம்.

தலைவர் அண்ணா...எங்களை எப்படியெல்லாம் வளர்த்தவர்? 13 வயசிலயே நாடு, மக்கள், மண் என்டு அவரிட்ட போயிட்டம். அவர் எங்களப் பதினெட்டு வயசுவரைக்கும் படிக்க வைச்சு, கம்ப்யூட்டர், அரசியல் எல்லாம் படிக்க வைச்சு, தாயை விட வடிவா எல்லோ பார்த்தவர். போர், சண்டை, இழப்பு என்டு வலி இருந்ததுதான். மற்றபடி என்ன குறை இருந்தது எங்களுக்கு? அண்ணா என்ன குறை வைச்சவர்?

இன்னைக்கு நாங்க இப்படி இருக்கிற நிலையப் பார்த்தா அவராலேயே தாங்க முடியாது. அண்ணா... வரமாட்டாரா? என்டு தினம் தினம் அழுறம்.

முள்ளிவாய்க்கால்ல செத்ததுகள் எல்லாம் கொடுத்து வச்சதுகள். நாங்கள் என்ன செய்ய முடியும்? ஆரு இந்த அநீதியைத் தட்டிக்கேட்கிறது? எங்களுக்கெண்டு யார் இருக்கிறாங்க?' ஏன் இந்தத் தமிழினத்துக்கு இந்த இழி நிலை? சிறீலங்காவிலதான் எதிரியால எங்களுக்கு அந்த நிலையெண்டா இங்க தமிழ்பேசுற தமிழ்நாட்டு ஆக்களாலேயே அதைப்போலக் கொடூரமான நிலையெண்டா நாங்க எங்கதான் போறது...?

இது என்ன தமிழ்நாடு? ஈழத்தமிழனுக்கு யாரும் இல்லையா?. என்ர புருசன் உயிரோட இருக்கிறாரோ இல்லையோ தெரியவில்லை. இருக்கவேணும் என்டுதான் நம்பிக்கையோட காத்திருக்கிறன். ஆனால் தலைவர் அண்ணா வந்தா.. உயிர் வந்தமாதிரி. அவர் மட்டுமிருந்தா இந்தப் போராளிகளுக்கு எல்லாம் இந்த நிலை வந்திருக்காது. அந்த ஆளோடயே இருந்து செத்து மண்ணோடு மண்ணாப் போயிருந்தாக் கூட இந்த உயிர் பிறவிப்பயனை அடைஞ்சது எண்டு சந்தோசமா செத்திருக்கலாம். 

இப்படிப்பட்ட கொடூரங்களை தட்டிக் கேட்பார்களா தமிழக தலைவர்கள் ? கருணை காட்டுமா தமிழக அரசு.
படங்கள் : ஜெய்  









தென்னேரி இருளர்களை ஆதிக்க முதலியார் அடிக்கலாம்?



       காஞ்சி மாவட்டம், வாலாஜாபாத் அருகே எட்டாவது கிலோ மீட்டரில், தென்னேரி கிராமம் உள்ளது. அதில் பத்து இருளர் குடும்பங்கள் வீடு கட்டி "நத்தம் புறம்போக்கில்" வாழ்கிறார்கள். நத்தம் புறம்போக்கைத்தான் ,அரசாங்கம் ஏழை எளிய மக்களுக்கு மனைக்கான நிலமாக தருவதாக திட்டமிட்டுள்ளது. அந்த நத்தம் புறம்,போக்கில் வாழும் இருளர் மக்களுக்கு, சாதி சான்றிதழ், ரேஷன் அட்டை, மின்சார தொடர்பு ஆகியவற்றை வாட்டட்சியர் செய்து கொடுத்துள்ளார். அடுத்து அந்த மணிகளை "பட்டா" போட்டு தருகிறேன் என்றும் கூறியுள்ளார். 

                         அந்த செய்தியை அதே தென்னேரி கிராமத்தை சேர்ந்த "ஏகாம்பர முதலியாரால்" தாங்கி  கொள்ள முடியவில்லை. அவர் உடனே தனது ஆட்கள் ஐம்பது பேரை அனுப்பி, ஞாயிறு காலை ஆறு மணி முதல் பன்னிரண்டு மணிவரை, அந்த கிராம இருளர்களை வீடு புகுந்து அடிப்பதும், ஆண், பெண் வேறுபாடு இல்லாமல் உதைப்பதும், இரண்டு வீடுகளை உடைப்பதும் என "வன்கொடுமைகளை" செய்துள்ளனர். அதுபற்றி புகார் கொடுக்க சென்ற மக்களை மன்றத்தினரிடம், வாலாஜாபாத் காவல் நிலையத்தினர் "புகார் எடுக்க" மறுத்துள்ளார்கள். மக்கள் மன்றத்தினர் அந்த அடிபட்ட பதின்மூன்று இருளர்களையும், மருத்துவமணையில் சேர்த்துள்ளனர். 

                        ஆதிக்க சாதியின் இந்த வான் கொடுமையை, பழ்ஜன்குடி இருளர் மீது காட்டுவதும், அதை புகார் எடுக்க மறுப்பதும், பழ்ஜன்குடி பிரதிநிதியை குடியரசு தலைவருக்கே நிறுத்தும் ஒரு முதல்வர் ஆளும் மண்ணில் "அதிகாரிகளால்" தைரியமாக செய்யமுடிகிறது. 

                     

Sunday, June 17, 2012

பிரணாப் முகர்ஜி என்ற தமிழினக் கொலைகாரர் வருகிறாராமே?

பிரணாப் முகர்ஜி என்ற தமிழினக் கொலைகாரர் வருகிறாராமே?
      ஈழத்தமிழர்களை ஒன்றரை லட்சம் பேரை கொன்று குவித்தவர்களில், டில்லிக்கு முக்கிய பங்கு என்று உலகத்தமிழினம் கூறிவந்தாலும், அதில் சிலரை முக்கியமாக சொல்வார்கள். அவர்கள் எம்.கே.நாராயணன், சிவசங்கர மேனன், நிருபமா ராவ், மன்மோகன்சிங், ப.சிதம்பரம், என்று பட்டியலிடப்பட்டால் அதில் முக்கிய ஆளாக "பிரணாப் முகர்ஜி" இருப்பார். மற்றவர்களுக்கு இல்லாத அக்கறை இந்த பிரனாபிற்கு உண்டு. ஏன் என்றால் இவர் மஹிந்த ராஜபக்சேவிற்கு அண்ணன் முறை வேண்டும்.இவர்தான் கருணாநிதியை ஆவப்போது சந்தித்து , ஈழப்பிரச்சனை பற்றி பேசி, அதில் கருணாநிதியை "சமாதானம்" செய்யும் எல்லா வேலையும் "திறம்பட" செய்தவர். அதை அவ்வப்போது கருணாநிதியே கூற நாம் க்ட்டிருக்கிறோம். 

                     சிங்களவர்கள், வங்காளத்திலிருந்தும், அதன் எல்லையில் ஒரிசாவிலிருந்தும் சென்ற ஒரு இனத்தவர் என்று நம்புகிறார்கள். அதனால்தான் இந்த பிரணாப் மகிந்தாவின் அண்ணன் என்று நாம் குறிப்பட வேண்டியுள்ளது. அத்தகைய ஒரு தமிழர் ரத்தம் குடித்த கரங்களுக்கு சொந்தக்காரர் இந்திய குடியரசு தலைவர் தேர்தலில் நிறுத்தபடுவதே அவமானம்.  அவர் வாக்கு கேட்டு தமிழக தலைநகருக்கு வருவது அதைவிட அவமானம். நாம் என்ன செய்யப் போகிறோம்?

கோவிலில் கொள்ளை அடிக்கும் அதிகாரிகள்?

கோவிலில் கொள்ளை அடிக்கும் அதிகாரிகள்?
    ஆன்மிகம் அதிகமாக நமது முதல்வரது மனதில் திரண்டோடும். அதனால் அவர் ஆட்சிக்கு வந்ததும், ஆன்மீக உணர்வில், கோவில்களில் எல்லாம் "இலவச உணவு" போடுவார். இந்த முறை "கோவிலுக்கு வருபவர்கள் செருப்பு வைக்க இலவசம்" என்று அறிவித்தார். அது எல்லா கோவிலக்ளிலும் உடனடியாக அமுலுக்கு வந்தது. மயிலை கபாலீஸ்வரர் கோவிலிலும், அதேபோல செருப்பு வைக்க இலவசம் என்ற நடைமுறை பெரும் பெயரை அந்த முதல்வருக்கு பெற்று தந்தது. இப்போது நிலை என்ன? செருப்பு வைக்கும் இடத்திலும் "காசு" வாங்குகிறார்கள். அதற்கு யார் காரணம்? கபாலீஸ்வரர் கோவிலின் அரங்காவலர்தானே பொறுப்பு? யார் இந்த அறங்காவலர்? 

                       அப்போலோ மருத்துவமனையின் பண்கால்லி முதலாளி, விஜயகுமார் ரெட்டி தான் அந்த அறங்காவலர். ஒரு தலைமை அறங்காவலர் நியமிக்கப்பட்டால், நான்கு அறங்காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும். அதன்படி இன்னமும், நன்கு அறங்காவலர்களை நியமிக்க வில்லை. ஏன்? அறநிலையத்துறை தானே அவர்களை நியமிக்க வேண்டும் அறநிலையத்துறையை மிரட்டி, அப்போலோ முதலாளி, தன்னை தவிர யாரையும் நியமிக்க விடாமல் தடுக்கிறார் என்று செய்திகள் வருகின்றன. அபப்டியானால் அறநிலையத்துறை "பக்தர்களுக்கு" பட்டை நாமம் போடுகிறதா? அறநிலையத்துறையின் துணை ஆணையராக ஒருவர் பொறுப்புக்கு வந்து, ஆண்டுக்கு ஐம்பது லட்சம் லாபம் கிடைக்க வழி செய்தால், அவரை "இணை ஆணையர்" பொறுப்புக்கு உயர்த்துவது வழக்கமாம். காசு வரவை வைத்தே இங்கே ஆன்மிகம் தழைத்தோங்குகிறது. அதனால் பக்தர்களை "துன்புறுத்தி" துணை ஆணையர் வசூல் செய்கிறார்.

                  சிறப்பு வழிபாடு என்று ஒன்றை வைத்து அடஹ்ர்க்கு அதிக 'காசு வசூலிப்பதை" சென்ற திமுக அட்சி நடைமுறையில் வைத்திருந்தது. அப்போது சிறப்பு வழிபாட்டு கட்டணம் என "நூறு" ரூபாயை வாங்கி வந்த்ஜார்கலாம். ஜெயலலிதா ஆட்சியில் அது வெறும் "பத்து" ரூப்பஎன குறைக்க பட்டதாம். அதையும்கூட இப்போது அதிகாரிகள் கூட்டி விட்டார்கள் என்று பக்தர்கள் புலம்புகிறார்கள். இப்போது சிறப்பு வழிபாட்டிற்கு, இருபது ரூபாயும், நூறு ரூபாயும் வாங்குகிறார்கள் என்று பக்தர்களின் குரல் ஒழிக்க தொடங்கி உள்ளது. கோவில் ஓடியவர்களின் கூடாரமாக ஆக்க கூடாது என்று முன்னாள் முதல்வர் வசனம் எழுதினார்.இப்போது அதிகாரிகளே அந்த கொடியவர்களாக மாறுகிறார்களா? சிவன் கோவிலுக்கே "பட்டை நாமமா?". 

பள்ளி கல்வித்துறையில் அதிகாரிகளின் ஊழல்



     அமைச்சர் சீ.வி.சண்முகம் பள்ளி கல்வி துறைக்கு அமைச்சராக போடப்பட்டார். அவரது தம்பி கே.கே.நகரில் உட்கார்ந்துகொண்டு, ஒரு லட்சம், இரண்டு லட்சம் ஏன் ஆகாசு பெற்றுக்கொண்டு, ஆசிரியர்களின் "மாற்றல்  உத்தரவுகளை" பைசல் செய்தார். அதை நாம் ஊடக வாயிலாக பல முறை அம்பலப்படுத்தினோம். அதன்பிறகு அந்த இலாக்க மாற்றப்பட்டது. உண்மையில் அமைச்ஹ்ச்சர் சீ.வி.சண்முகத்திற்கு டேஹ்ரியாமல் அல்லது அவரது ஒப்புதல் இல்லாமல் அவரது அதம்பி இந்த ஊழல் வெளியாயி செய்துவந்தார் என்றும் அவர்தான் இவரை விழுப்புரத்தில் வெற்றிபெற வேலை செய்தார் என்பதால் அமைச்சரால் எதுவும் கேட்கமுடியாமல் போய்விட்டது என்றும் கூறுகிறார்கள். ஆனால் அதன்பிறகு அமைச்சர்கள் ஊழல் செய்வதை அரசு கவனிக்கிறது என்ற நிலையில், அதிகாரிகள் தங்கள் கைவரிசையை காட்ட தொடங்கிவிட்டார்கள்.

                 இந்த ஆண்டு ஜனவரி தொடங்கி மார்ச் மாதம் வரை "நிர்வாக" காரணங்களுக்காக என்ற பெயரில் "பலப்பல" மாற்றல் உத்தருவுகளை அதிகாரிகள் போட்டுள்ளனர். கல்வி இயக்கக ஆணையர் "சபீதா"விற்கு டேஹ்ரியாமலேயே இது நடக்கிறது. அதாவது "துணை ஆணையர்" தான் இத்தகைய வேளைகளில் அசகாய சூரராக இருக்கிறார். துணை ஆணையர் தொடங்கி, " தலைமை கல்வி அதிகாரி" வரை னைவரும் ஊழலில் பங்கு வாங்குகிறார்கள் என்கிறது நேரடி செய்தி. அவர்கள் ஒவ்வொரு ஆசிரியரின் மாற்றல் உத்தரவுக்கும்,குறைந்தது  "ஒரு  லட்சம்" அல்லது பெண் ஆசிரியர்களை தங்களது இச்சைக்கு அழைப்பது என்ற கேவலத்தை செய்து வருகிறார்கள்.திமுக ஆட்சியில்,  அமைச்சர் தங்கம் தென்னரசு கைகளுக்கு செல்லாமல், உதவியாளர்கள் காசு அடித்து "ஆசிரியர் பணி"யை விலைக்கு  விற்று வந்தார்கள். நாம் ஊடகத்தில் அமபல்ப்படுத்தி வந்தோம்.கருணாநிதி கூப்பிட்டு அமைச்சர் மூலம் ஒரு "ஏழாயிரம் " ஆசிரியர்களுக்கு மூப்பு அடிப்படையில் வேலை என்பதை "இலஞ்சக்காசு" வாங்காமல் நிறைவேற்றினார். 

             அப்போதும் இந்த ஊழல் அதிகாரிகள், வேண்டும் என்றே "எங்களுக்கு காசுதராமலே வேலை பெற்று விட்டீர்களா? உங்களை தள்ளி, தள்ளி பணியில் அமர்த்திவிடுகிறோம். மாற்றல் உத்தரவு வேண்டும் என்றால் ஒரு லட்சம் கொடுங்கள்" என்று கேட்க தொடங்கினார்கள். இப்போதும் அந்த வேலையைத்தான் அதிகாரிகள் பார்க்கிறார்கள். இப்போது "மாற்றல் உத்தரவுகளை" உயர்நிலை பள்ளி ஆசிரியர்கள், மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் ஆகியோருக்கு போட்டுவருகிறார்கள். இதுவரை பி.டி. ஆசிரியர்களுக்கு மாற்றல் உத்தரவுகளை போடவில்லை. இப்போது கபில்சிபல் போட்ட உத்தரவுபடி, "தகுதி தேர்வு" கட்டாயம் நடத்த வேண்டும் என்பதை, தமிழக கல்வித்துறை அதிகாரிகள் வசமாக பயன்படுத்தி கொள்கிறார்கள். தகுதி தேர்வுகளுக்கு வெற்றிபெற "மூன்று லட்சம்" என்பது அவர்களது கணக்கு. அதில்குளிர் காய்கிறார்கள்.அதில்தங்களுக்கு ஒரு லட்சம்தான் வரும் என்றும் மீதிப்பணம், "மேலே" போய்விடுகிறது என்றும் அவர்கள் பகிரங்கமாக ஆட்சியாளர்கள் மீதே பழியை போட்டுவருகிறார்கள். இதை உடனேயே ஆட்சியாளர்கள் கட்டுப்படுத்தினால் அவர்களுக்கு நல்ல பெயர். இல்லாவிட்டால், அவர்களது இஷ்டம்/ 

                       . 

நில அபகரிப்புக்கு எதிராக : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்


நில அபகரிப்புக்கு எதிரான தமிழீழத் தாயக மக்களின் சாத்வீகவழி போராட்டங்களுக்கு சமாந்திரமாக, தமிழர்கள் வாழும் தேசமெங்கும், கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.

இலங்கைத்தீவில், தமிழர் தாயகப் பிரதேசங்களை ஆக்கிரத்து நிற்கின்ற சிறிலங்கா இராணுவத்தினர், தமிழர்களின் பாரம்பரிய நிலங்களை திட்டமிட்ட வகையில் அபகரித்து வருகின்றமை, சமீபத்திய காலங்களில் தீவிரமடைந்துள்ளன.

தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள், இத்தகைய நில அபகரிப்புக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டங்கஙை நடாத்த இருப்பதாக அறிவித்துள்ளன.

இந்நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தமிழர் தாயகப் போராட்டங்களுக்கு வலுவூட்ட, தமிழர் வாழும் தேசமெங்கும் கவனயீர்ப்பு போராட்டங்களை, சமாந்திரமாக முன்னெடுக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

மன்னார் ஆயர் வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் மீதான, இனவாதிகளின் அழுத்தங்களையும் அச்சுறுத்தல்களையும் கண்டித்து, கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மன்னாரில் இடம்பெற்றிருந்த சாத்விகவழியிலான போராட்டத்திற்கு வலுவூட்ட தமிழர்கள் வாழும் தேசமெங்கும், தோழமையோடு சர்வத வழிபாட்டு விழிப்புணர்வு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

இதன் தொடர்சியாக தமிழர் தாயகத்தில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நில அபகரிப்பு எதிரான கவனயீர்ப்பு போராட்டங்களுக்கு சமாந்திரமாக, இப்போராட்டங்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்கின்றது.

தமிழர் வாழும் தேசம் யாவும், நமது புதிய போர்களம் என்ற அடிப்படையில், உலகந்தழுவியரீதியில், தாயக மக்களுக்கு எமது தோழமையுணர்வினைத் தெரிவிப்பதோடு, தாயகத் தமிழர்களின் போராட்டத்தின் நியாயப்பாடுகளை வெளியுலகிற்கு கொண்டு செல்ல, உலகத் தமிழர்களின் போராட்டங்கள் வழிகோலுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தலித் பணத்தை பிடுங்கி பார்ப்பனர்களுக்கு சேவையா?



    தமிழ்நாடு போககுவரத்து கழகம் பற்றி இப்படி ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அதிகமாக விவரம் தெரியும் என்று நினைக்கிறீர்களா? அதிகாரிகள் சொல்வதை கேட்கும் "ஆமாம்" சாமி என்கிறீர்களா?  சென்னை போககுவரத்து கழகத்தை உதாரணமாக பார்ப்போமா? "வெள்ளை" பெயர்ப் பலகை என்பது குறைந்த காசு பயணச்சீட்டு கொண்ட பேருந்து. "தாழ்த்தலாம்", "விரைவு பேருந்து" என்பவை அதிக காசை "அடித்து பிடுங்கும்" பேருந்துகள். அதிலும் "இருக்காய்" இருக்கும் லட்சணத்தில், மனிதன் அமர முடியாது. அதாவது நீண்ட கால் கொண்ட ஆறடி உள்ள எந்த மனிதனும் இந்த டீலக்ஸ் பேருந்துகளில் முறையாக முழுமையாக அமர முடியாது. திமுக ஆட்சியில் நேரு அமைச்சராக இருக்கும்போதே இந்த "கோளாறு" ஆரம்பமானது. அந்த நேருவே அந்த இருக்கைகளில் அமர முடியாது. அப்படிப்பட்ட இருக்கைகள். ஆயிரம் முறை சென்ற ஆட்சியில் கொரிப்பார்த்தும் எந்த நிவாரணமும் கிடைக்க வில்லை. இப்போதும் அப்படியே.

                        இப்போது ஒரு கண்டுபிடிப்பு எழுந்துள்ளது. கண்ணகிநகர். இந்த நகர் ஏழை, எளிய மக்களை சென்னைக்குள் இருந்து வீட்டு வேலைகள், சைக்கிள் ரிக்ஷா, ஆட்டோ ரிக்ஷா, ஒட்டி வந்தவர்களை, கூவம் நதி ஓரம் குடி இருக்கிறீர்கள் என்று சொல்லி, ரயில்வே பாதை வருகிறது என்ற பெயரிலும், மாநகரை சுத்தம் செய்கிறோம் என்ற பெயரிலும், "வேயே" தொக்கி எரிந்து, ஒக்கியம் துரைப்பாக்கம் கண்ணகி நகரில் வீடு தருகிறோம் என விரட்டி அடித்தார்கள். அந்த கண்ணகி நகருக்கு செல்லும் பேருந்துகளில், என் அதிகமாக "டீலக்ஸ் பேருந்துகளும், எக்ஸ்ப்ரெஸ் பேருந்துகளும்" அனுப்படுகின்றன? அந்த இருவகை பேருந்துகளும் "அதிக கட்டணம்" வசூலிக்கும் ப[இருந்துகள் என்பது செந்தில் பாலாஜிக்கு தெரியாதா? அல்லது கண்ணகி நகர் மக்கள் ஏழை எளிய மக்கள் என்பதும், அவர்கள் இன்னமும் அன்றாட கூலி வேலைக்கு, சென்னை நகருக்குள் வந்துபோக பேருந்துகளை பயபடுத்துகிரார்கள் என்பது செந்தில் பாலாஜிக்கு தெரியாதா? அவர்களுக்கு ஏன் அதிகமாக "வெள்ளை பெயர்பலகை" கொண்ட "சாதா கட்டண" பேருந்துகளை அதிகமாக அனுப்ப அவரால் முடியவில்லை? ஏழை மக்களை இப்படி "சோர்ந்டி வாழை" ஏன் அவர் நினைக்கிறார்? 


                  அதேசமயம் அதே பேருந்து கழகம், மைலாபூர், மந்தவெளி, பெசன்ட் நகர், தி நகர்,   மடிப்பாக்கம் போன்ற பகுதிகளுக்கு அதிகமாக "சாதா கட்டணம்" கொண்ட வெள்ளை நிற பெயர் பலகை கொண்ட பேருந்துகளை அனுப்பும் ரகசியம் என்ன? அந்த அபகுதிகளில் "பார்ப்பனர்கள்" அதிகம் வாழ்கிறார்கள் என்பதுதான் காரணமா? அபப்டியானால் பார்ப்பனர்களுக்கு "குறைந்த செலவில்" சேவை செய்ய, தலித்துகள் "தலையில்" கட்டண "சுமையை" ஏற்றுவதுதான் அமைச்சரின் பணியா? அமைச்சருக்கு தெரியாமல் "அதிகாரிகள்" அப்படி ஒரு திருட்டு வேலையை செய்கிறார்களா? எபப்டியோ தலித்துகளுக்கு கடினமும், பார்ப்பணர்களுக்கு சலுகையும் நடிமுரையில் "பேருந்து தடம்" வரை நீண்டுள்ளது என்பது கவனிக்கதக்கது.அதேசமயம் மந்தவெளி, தீநகர், மடிப்பாக்கம், பெசன்ட் நகர் என்று பார்ப்பனர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் உள்ள "வசதிபடைத்த பார்ப்பனர்களுக்காக" குளிர் சாதன பேருந்துகளும் கவனமாக விடப்படுகின்றன. அந்த பாதைகளில் தீலக்சுகளும், விரைவு வாகனங்களும் அடைத்து கொள்வதில்லை. இப்போது புரிகிறதா? அதிகாரிகளும் "பார்ப்பனீய" மனயொபாவத்துடன் பணியாற்றுகிறார்கள் என்பதை? 

Tuesday, June 12, 2012

கலைஞர் அவர்களே, உங்கள் "டெசோ"வை, தமிழர்கள் நம்புவார்களா?


      கலைஞர் அன்று டெசோ கண்டார். நெடுமாறன் உடன் இருந்தார். வாஜ்பாய் இருந்தார். ஏன்.தி.ஆர். அதனுடன் இருந்தார். அன்று டில்லிக்கு "தமிழ் போராளிகள்" தேவைப்பட்டனர். அதனால் எல்லோரும் உடன் இருந்தார்கள். டில்லி ஏற்பாடு செய்த "டெலோ" புலிகளை கொள்ள "பணிக்கப்பட்டது". முந்திக்கொண்ட புலிகள் தேலோவை அன்று பதம் பார்த்தனர். கலைஞர் கோபமானார். டெசோ வை கலைத்தார். அது டில்லிக்கு பிடித்திருந்தது. எம்.ஜி.ஆர். புலிகளுக்கு உதவினார். அதனால்தானோ என்னவோ, கலைஞர் கூடுதலாக புலிகளை எதிர்த்தார்.   தான் கொடுத்த பிறந்தநாள் காசை வாங்கி கொள்ளவில்லை என்றதும், மேலும் புலிகளை வெறுத்தார் கலைஞர்.

                  வன்னி போரின் இறுதி காலத்தில், கலைஞர் ஆட்சி தமிழர்களை பாதுகாக்க எதுவும் செய்யவில்லை என்று சாமானியர்கள் கூறினார்கள். விவரம் அறிந்த தமிழர்கள் வன்னி போர் குற்றங்களில் "விசாரிக்கப்பட வேண்டியவர்" கலைஞர் என்று குற்றம் சாட்டினர். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அதனாலேயே அவரை வெறுத்தனர். நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில், ஜெயலலிதா "தமிழீழம்" பேசியபோதும், கலைஞர் "ஈழ ஆதரவாளர்" என்ற பெயரை முழுமையாக ஐழந்துவிடவில்லை. போருக்கு பின்னும் டில்லியும், காங்கிரசும், கலைஞரும் இலங்கை ராஜபக்சவுடன் சேர்ந்து கொண்டு தமிழர்களை "தொடர் சித்திரவதை" செய்ததை தமிழ் கூறும் நல்லுலகம் ரசிக்கவில்லை. கனக்கியர்சுடன் சேர்ந்துகொண்டு கலைஞரும் "ஈழத்தமிழருக்கு" துரோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டு  உலகெங்கும் தமிழர்கள் மத்தியில் ஒழிக்க தொடங்கியது. அதுவே சட்டமன்ற தேர்தலிலும் தமிழ்நாட்டில் எதிரொலித்தது. ஜெயலலிதா உலக தமிழர்கள் மத்தியில் நன் மதிப்பை பெற்றார். அதற்கு அவரது சட்டமன்ற தீர்மானமான "போர்க்குற்றவாளி" பற்றியதும், பின்னால் அமெரிக்கா தீர்மனாத்தை அய்.நா.வில் ஆடஹ்ரிக்க கூறியதும், இலங்கை மீது பொருளாதார தடை கோரியதும், இலங்கை அமைச்சர்கள் வரும்போது தமிழ்நாட்டு அரசை கலந்துகொண்டே மத்திய அரசு முடிவு செய்யவேண்டும் என்றதும், விமான நிலையத்தில் சிங்களர்களுக்கு கண்காணிப்பு செய்ததும், ஈழ அகதிகளின் நல்வாழ்விற்கு புதிய சலுகைகளை அறிவித்ததும், கூடுதலான காரணங்களாக அமைந்துவிட்டது.

             இதை தாங்க முடியாத கலைஞர் இப்போது தானும் இழந்த தமிழர் ஆதரவை பெற புது முயற்சி எடுத்துள்ளார். அதுதான் "தமிழீழம்" "டெசோ" என்று அவர் முழங்கும் புதிய முழக்கங்கள். அவற்றில் விடுதலை சிறுத்தைகளை சேர்த்து கொள்ளாமல்தான் முதலில் இறந்தார். அது காங்கிரசை குளிர் விக்க இருக்கலாம். அனால் தனது ஈழ அதரவு எடுபடவில்லையோ என்று இப்போது திருமாவையும் சேர்த்து கொள்கிறேன் என்கிறார். அதுவும் சோலை நினைவேன்தலில் திருமா உரையாற்றி கலைஞரையும், ஸ்டாலினையும்  பாராட்டிய பிறகு, ஆ.ராஜா விடுதளையான் அபிறகு கூறுகிறார். ஆனாலும் கலைஞர் மீது படிந்த "கறிகள்" இந்த முழக்கங்களால் போய்விடுமா? உலக தமிழர்கள் ஏற்றுக் கொள்வார்களா?  பழைய போர்குற்றங்களை மறந்து விடுவார்களா? தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இடையே உள்ள போட்டியில் உலக தம்ஜிஹர்கள் சிக்கி கொள்ள மாட்டார்கள்.

Friday, June 8, 2012

நெஞ்சுக்கு நீதி சொல்ல முடியுமா தலைவரே?



    இந்திய கம்யுனிஸ்டு  கட்சி தா.பாண்டியன் கலைஞர் பற்றி ஈழ பிரச்சனையில் தமிழர்களை சவிளிருந்துகாப்பாற்ற எதுவும் செய்யவில்லை என்று திருவாரூர் சென்று கூறியதற்கு, அடுக்கடுக்காக கலைஞர் முரசொலியில் பதில் எழுதி உள்ளார். ஒவ்வொரெஉ நாளையும் குறிப்பெடுத்து, ஒவ்வொரு செயலையும் பட்டியல் போட்டு, கலைஞரும், திமுகவும் எப்படியெல்லாம் ஈழத்தமிழர் பிரச்சனையில் தீர்மானங்கள் போட்டும், ராசினாமாக்களை வாங்கியும், மழையிலும் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடத்தியும், மன்மோகன் சிங், சோனியா காந்தி, சிதம்பரம், பிரணாப் முகர்ஜி, ஆகியோரிடம் கலைஞர்  பேசினார் எனப்தை எல்லாம் எடுத்து கூறியிருக்கிறார்.  அந்த டில்லி தலைவர்கள், ராஜபக்சேவிடம் பேசியதையும், அந்த டில்லி தலைவர்கள் வாக்குறுதி கொடுத்ததையும் எடுத்து கூறியிருக்கிறார். அய்யா, தலைவர் கலைஞர்  அவர்களே, நீங்கள்  கூறியுள்ள ஒவ்வொரு நிகழ்ச்சியிலும், அந்த டில்லி தலைவர்கள் வாக்குறுதி கொடுத்த பின் என்ன நடந்தது என்பது உங்களுக்கு தெரியாதா தலைவரே?


            உலகத்தமிழர்கள் அனைவருக்கும் தெரிந்த உண்மை உங்களுக்கு மட்டும் எப்படி தலைவரே டேஹ்ரியாமல் போனது? டில்லிகாரர்கல்தான் இலங்கை அதிபரிடம் சொல்லி ஈழத்தமிழர்களை ஒட்டுமொத்தமாக பலி வாங்க சொன்னார்கள் என்பது உங்களுக்கு மட்டும் இன்னமும் புரியவில்லையா தலைவரே? மன்மோகன் ராஜபக்சேவிடம் பேசினார் எனக்க கூறும் கலைஞர், ராஜபக்சே அந்த பேச்சிற்கு பிறகு என்ன செய்தான் என்று என் கூறவில்லை? சிதம்பரம் கலைஞரிடம் வாக்குறுதி கொடுத்த பிறகு, ஈழத்தில் எந்த அளவுக்கு "இனப்படுகொலை" வெறி பிடித்து நடத்தப்பட்டது என்று கலைஞர் என் கூறவில்லை? 

          அனைத்து கட்சி தலைவர்களை டில்லிக்கு அழைத்து சென்று மன்மோகன் சிங்கிடம் பேசவைத்ததை கூறும் கலைஞர் அவர்களே, அந்த பேச்சுவார்த்தைக்கு கடைசி வரையில் செல்வாரா, மாட்டாரா என்று இருத்த தா.பாண்டியனும் கடைசி நேரத்தில் வெளிநாட்டிலிருந்து வந்து டில்லியில் உங்களுடன் கலந்து கொண்டாரே கலைஞர் அவர்களே? அப்போது என்ன நடந்தது? மன்மோகனை நம்பி நிறைய பேசிய தா.பாண்டியன் பேச்சிற்கு வெறும் தலையசைத்து கொண்டிருந்த மன்மோகன் பற்றி கலைஞர் அவர்களே நீங்கள் தா.பாண்டியனிடம் என்ன கூறினீர்கள்? தேவையில்லாமல் கடினப்பட்டு அந்த ஆளிடம் இன்ற்ஹா அளவுக்கு எடுத்து சொன்னீர்களே? எண் அபயன்? என்று நேநேகள் கேட்டதாக கூறப்படுகிறதே? உண்மையா? தலைவரே?  அதற்கு பிறகு கழக தலைவர்களிடம் "நான் மட்டும் எதிர்கட்சியாக இருந்தாள் இந்த பிரச்சனையை வைத்து பயங்கரமாக மத்திய இசை ஆட்டி படைததிருப்பேன் "என்று நீங்கள் கூரிநீர்கலாமே? உண்மையா தலைவரே? 


                    இப்படி நீங்கள் நாடகத்தை பெரும் ளவு நடத்தியதால்தானே அங்கே ஈழத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளானார்கள்? எப்படி அதை மறக்க முடியும்? அல்லது மறைக்க முடியும்? தா.பாண்டியன் கூரியிற்றுப்பது ஒரு பகுதிதானே? உங்களையும் சேர்த்து அங்கு நடந்த இனப்படுகொலை போரில் ஒரு "சாட்சியாக" அல்ல, போர்குற்றம் புரிந்தவர்களின்" பட்டியலில் போடவேண்டும் என்று உலக தமிழர்கள் பேசுவது காதில் விழுகிறதா, தலைவரே?