Wednesday, February 22, 2012

திமுக தலைவர் என்ன செய்வார்?

சங்கரன்கோயில் இடைத்தேர்தல். அதிலாளும்கட்சிதான் வெற்றிபெறும் என்ற புரிதல் திமுக தலைமைக்கும் உண்டு. ஆனாலும்விட்டு விட முடியாது. போட்டி போட்டு "சூடு" கிளப்பினால் மட்டுமே கட்சி அரசியல் நடத்த முடியும். அதற்கு திமுக ஒரு நல்லவேட்பாலரை நிறுத்த வேண்டும். அதற்குள் அவர் எதிர்பாராமலேயே தேமுதிக தலைவருக்கும், தமிழக முதல்வருக்கும் சண்டை சட்டமன்றத்திலேயே தொடக்கி விட்டது. அந்த சண்டையை திமுக பயன்படுத்தி கொள்ள வேண்டும். அதற்காகவே விஜயகாந்த் வெளியேற்றத்தை எதிர்த்து கலைஞரும் பேசிவிட்டார். அதுவே கேப்டனுக்கு திருப்தி என்றார்கள் . அதையும்தாண்டி ஜனநாயக விரோதம் என்று கலைஞர் கூறிவிட்டார். அதுவே பிரச்சனை ஆனது. அதுவும் சட்டமனரத்தில் நடந்த ஒரு நிகழ்வை சட்டமன்ற உற்ப்பினராக உள்ள கலைஞர் வெளியே வந்து விமர்சித்தார். அதுவே சட்டமன்றத்தின் உரிமை மீறலேன்று கூற வாய்ப்பு உண்டு. அதிலும் சட்டமன்ற உரிமைக்குழு எடுத்து அறிவித்த ஒரு முடிவின் மீது சட்டமணர் உறுப்பினரான கலைஞர் ஜனநாயக விரோத செயலென்று வெளியே வந்து விமர்சித்திருப்பது சட்டமணர் "உரிமைக்குழு" முன்பே விசாரிக்க போதுமான தகுதி உள்ள ஒரு பிரச்சனை. இந்த வயதான காலத்தில் கலைஞரை சட்டமணர் உரிமை குழு முன்பு வரவழைத்து விசாரணை நடத்துவது தேவையா? என்று முதல்வர் எண்ணி பார்த்திருக்க வேண்டும். அதனால்தான் பேரவை தலைவர் ஜெயகுமார் ஒரு அறிக்கையை மட்டுமே கலைஞரை எதிர்த்து கொடுத்திருந்தார்.

அந்த அறிக்கை பற்றி செய்திகளும், நிஜங்களும் நிகழ்ச்சியில் பேசும்போது, நாம் அந்த உரிமை குழு முன்பு கொண்டு சென்று கலைஞரை நிறுத்தாமல் வெறும் அறிக்கையை பேரவை தலைவர் கொடுத்துள்ளாரே என்று கூறினோம். அதன்பிறகு மறுநாள் அந்த அறிக்கைக்கு கலைஞர் பதில் கொடுத்தார். பதிலில் தான் வெளியே அவ்ரும்போது சிலபத்திர்கையாளர்கள் நின்று கொண்டு விஜயகாந்த் வெளியேற்றம் பற்றி கேட்டார்கலேன்ரும், தான் பேரவை தலைவரை விமர்சித்து எந்த சொல்லும் கூறவில்லை என்ருமிறங்கி பேசி இருந்தார். அது நமது கருத்து வெளியீட்டால் இருக்கலாம் என்றுகூட நாம் நினைக்க வில்லை. கலைஞரே அந்த வில்லங்கத்தை உணர்ந்துதான் கூறி இருப்பார் என்று நினைத்தோம். இப்போது கலைஞர் ஆலோசனையையும் ஏற்று விஜயகாந்த் நீதிமன்றம் சென்றிருக்கிறார். இப்போது நீதிமன்றம் சட்டமன்றத்தில்னடந்த உரிமைகுழுவிற்குள் நடந்த னைத்து கோப்புகளையும் கேட்குமா? அதில் திமுக,இடது சாரிகள், தி.மு.தி.க. ஆகிய கட்சிகள் தங்கள்கருத்தாக ஒரு புறம் நடந்த சட்டமன்ற நிகழ்வு படங்களை மட்டுமேகாட்டுகிரீர்கள் என்றும் இருபுறம் படங்களைகட்டுங்கள் என்றும் கூறியதாகவும் அதை செய்யாமல் "விஜயகாந்த் இடைநீக்கம்" அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்து நீதிமன்ற நியாயம் கேட்பார்கள். அப்போது நீதிமன்றம் பெரியதா? சட்டமன்றம் பெரியதா? என்ற பிரச்சனை வரும். வானளவு அதிகாரம் படைத்தவர் சட்டமன்ற பேரவை தலைவர் என்ற பி.எச். பாண்டியனின் பழைய வசனம் மீண்டும் பேசப்பட வேண்டுமா?

இத்தனை சிக்கல்கள் மத்தியில் விஜயகாந்த் "நாக்கை" துருத்தி, முறைத்த பேச்சு நீதிமன்றத்தாலேபப்டி பார்க்கப்படும்? நீதியரசர்களின் கோபத்தை ஒரு எதிர்க்கட்சி தலிவர் வாங்கி கட்டிக் கொள்வாரா? கலைஞருக்கு கவலை இல்லை. விஜயகாந்த் அடிபட்டாலும், ஜெயலலிதா அரசு திட்டு வாங்கினாலும் அவருக்கு மகிழ்ச்சி தான். அவரும் எதிர்க்கட்சி தலிவர் காநிராஸ் கட்சியின் பாலகிருஷ்ணனை நெல்லைபாளயம்கோட்டை மாந்ஜொலைஓர்வலத்திந் போது, காவல்துறையிடம் அடித்து கைது செய்து போடும்படி கூறினார் என்ற உண்மை எத்தனை பேருக்கு தெரியும்? இத்தகைய சூழலில் திமுக வின் சங்கரன்கொவில்வேட்பாளர் வழக்கறிஞர் ஜவஹர் முன்னாள் மத்திய அமைச்சர் அருணாசலத்தின் அண்ணன் மகன் என்பதை மட்டுமே கலைஞர் பார்த்தார். ஆனால் அவர் மீது அருணாசலம் குடும்பம் நிலமொசடிக்கான ,உயில் மோசடி வழக்கு போட்டிருப்பது நிலுவையில் இருக்கிறது என்பது அவரை சிக்கலுக்கு உள்ல்லாக்கி உள்ளது. அதற்காகவாவது தி.மு.தி.க. வேட்பாளரை போது வேட்பாளராக என்று கலைஞர் ஆதரிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

1 comment:

D.Martin said...

நல்ல கேள்வி.

Post a Comment