Tuesday, February 21, 2012

கலைஞரை நேரு ஏமாற்றினாரா? கலைஞர் நம்மை ஏமாற்றினாரா?

முன்னாள் அமைச்சரும், திமுக வின் முக்கிய புள்ளியுமான கே.என்.நேரு தனது மகனின் திருமணத்தை திருச்சியில் நடத்தினார். அதில் கலைஞர் கருணாநிதி தலைமை தாங்கி நடத்தி வைத்தார். அப்போது கலைஞர் பேசிய உரை திமுக தொண்டர்களுக்கு ஒரு வரலாற்று பாடமாக அமைந்தது. பெரியார் வழி, அண்ணா வழி என்ற வழக்கமான பாடலுக்கு அங்கங்கே இசை அமைத்து அழகாகவே பாடினார். தமிழ்நாட்டில் கல்யாணம் என்ற சொல்லை இப்போதெல்லாம் திருமணம் என்று சொல்ல வைத்துள்ளது திமுக என்று அவர் கூறும்போது, மகிழ்ச்சியாகவே இருந்தது. ஆசீர்வாதம் என்ற சொல்லின் பழக்கத்தை மாற்றி தமிழில் வாழ்த்துக்கள் என்ற சொல்ல வைத்தது திமுக என கலைஞர் கூறும்போது புல்லரித்தது தமிழர்களின் வரலாறு, பண்பாடு என்பதை எப்படி மீட்டு எடுத்துள்ளோம் என்று அவர் வாயார புகழ்ந்து அதை பெருமைப்பட்டு கூறிய பொது நாமும் பெருமைப்பட்டோம். பெரியார், அன்னமா வழி என்று அவர் கூறும்போது மூடநம்பிக்கைகளை ஒழித்து பகுத்தறிவு வழி என நாம் பெருமைப்பட்டோம். சேர,சோழ, பாண்டிய என்று நமது மூதாதையரை கூறும்போது, தமிழர்களாக அனைவரும் நிற்கிறோம் என்று கலைஞர் கூறினார்.

அதேநேரம் கே.என். நேரு தனது சொந்தங்களுக்கும், வணிக உறவுகளுக்கும் அனுப்பிய திருமண அழைப்பிதழ் நமது கைகளில் தவழ்ந்தது. அதில் தனது மூதாதையரான காலம் சென்றவர்களை "வானிருந்து வாழ்த்தும்" என்று குறிப்பிட்டிருக்கிறார். இது மூட நம்பிக்கை இல்லையா? பெரியார் வழியில் யாராவது வானிருந்து வாழ்த்துவார்களா? அப்படி வாழ்த்துபவர்கள் என்று அச்வரால் அந்த மணவிழா அழைப்பிதழில் குறிக்கப்பட்டவர்கள் அவரது தாத்தாக்களும், கொள்ளு தாத்தாக்களும். அவர்களை நேரு எப்படி அழைக்கிறார் தெரியுமா? சர, சோழ, பாண்டிய வம்சங்களாக தமிழர் பாரம்பரியமாக அழைக்க வில்லை. மாறாக "நாராயணன் ரெட்டியார், லட்சுமணன் ரெட்டியார்" ஆகியோரின் பெயர்த்தான் என தனது மகனையும், லட்சுமண ரெட்டியாரின் பெயர்த்தி என்று அந்த மணப்பெண்ணையும் அந்த மணவிழா அழைப்பில் அச்சிட்டுள்ளார். இப்படி ஒரு அழைப்பிதழை தாங்கள் காணவில்லையே என்று கலைஞர் வீட்டார் கேட்டனர். நேரு அச்சடித்த ஒரு அழைப்பிதழில் "முத்தமிழ் அறிஞர் கலைஞர் முதல் தளபதி ஸ்டாலின் வழியாக கனிமொழி வரை" பெயர்களை அச்சிட்டுள்ளார். அது அந்த திமுக தலைமை குடும்பத்திற்கு காட்டும் விசுவாசம் எனலாம். அப்படியானால் ரெடியார் என விளித்து அச்சிடப்பட்டது யாருக்கு காட்டும் விசுவாசம். அவரது குழுவினரை அடிக்கடி சென்னையில் உள்ள ரெட்டியார் சங்க கூட்டங்களில் கண்டவர்கள் அதை "சாதி விசுவாசம்" என்கின்றனர்.

அப்படி ஒன்று திமுக வில் இருக்கிறதா? வானிருந்து வாழ்த்தும் என்ற நேருவின் நம்பிக்கை பெரியாரின் கருத்துகளுக்கு உள்ள விசவாசமா? மூடநம்பிக்கை கொண்ட சதிகாரர்களுக்கு மேல் உள்ள விசவாசமா? இந்த கேள்விகள் எல்லாமே எழாத வண்ணம் அவர் பெரும் பிளக்ச்களை திருச்சி எங்கும் வைத்த்சு விட்டார். அதில் கலைஞர், தளபதி, அவரது மனைவி சாந்தா, அவரது மகன் உதயநிதி, அவரது மனைவி, அவரது குழந்தை எல்லோரையும் படங்கள் போட்டு பதாகை வைத்து விசுவாசத்தை காட்டியுள்ளார். அதேபோல அழகிரி, அவரது மனைவி காந்தி அவர்களது பிள்ளைகள் என பதாகை. அதேபோல ராஜாத்தி, கனிமொழி என பதாகைகள். கலைஞர் வீட்டில் ஒரு நாய் பாசமாக கண்ணா என எல்லோராலும் அழைக்கப்படுமே அதை அவர் போடவில்லை என்று சில தொண்டர்கள் கூறினார். அவர் ஸ்டாலின் குழு என்பதால் கனிமொழியின் மகன் ஆதித்தனை படமாக போடவில்லை என்று இன்னொரு தொண்டர் சிலாகித்தார். எபப்டியோ, விச்வாசங்கள் திமுகவின் வாடிக்கை என்பதே தெரிகிறது. இந்த இரண்டு அழைப்பிதழ்களை தலிவரிடம் காட்டாமல் நேரு ஏமாற்றினாரா? அல்லது அதுவும் தெரிந்து கலைஞர் நம்மை ஏமாற்றினாரா?

No comments:

Post a Comment